Jump to content

மாணவர்கள் ஏற்றிய சுடரை காலால் தட்டிவிட்ட காவலாளி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் ஏற்றிய சுடரை காலால் தட்டிவிட்ட காவலாளி!

May 18, 2021

1-1.jpeg

யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி காலினால் தட்டி அகற்றியுள்ளார். 

இச் செயலை பல்கலைக்கழக மாணவர்கள் வன்மையாக கண்டித்து உள்ளத்துடன் , தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி உயிரிழந்த எம் உறவுகளுக்கு நாங்கள் உணர்வு பூர்வமாக ஏற்றிய சுடரினை காவலாளி காலினால் தட்டி அப்புறப்படுத்திய செயலானது எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும். என கவலையுடன் மாணவர்கள் தெரிவித்தனர். 

பல்கலைக்கழக வளாகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவிடாது தடுக்கும் நோக்குடன் நேற்றைய தினம் முதல் , பல்கலை கழக சூழலில் இராணுவம் மற்றும் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, புலனாய்வாளர்களின்  கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இன்றைய தினம் மதியம் மாணவர்கள் தடைகளை தாண்டி வளாகத்தினுள் உள்ள நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தி இருந்தனர். 

அந்நிலையில் அதனை அவதானித்த பல்கலைக்கழக காவலாளி நினைவிடத்திற்கு வந்து மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளார். 
 

https://globaltamilnews.net/2021/161118/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் தமிழரின் சாபக்கேடு 

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

இவ்வினம் எப்படி விடுதலை பெற தகுதி பெறும்???

இப்பொழுது புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா?

அப்படியானால் இவ்வினம் எப்படி ஜனநாயக ரீதியில் இலக்கை அடையும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் சிங்களத்தின் காவலாளிகள் எமது இனத்துக்குள் இருந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 😁🤢

ஆழ்ந்த அனுதாபங்கள். 🤢😆

33 minutes ago, குமாரசாமி said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது தான் தமிழரின் சாபக்கேடு 

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

இவ்வினம் எப்படி விடுதலை பெற தகுதி பெறும்???

இப்பொழுது புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா?

அப்படியானால் இவ்வினம் எப்படி ஜனநாயக ரீதியில் இலக்கை அடையும்??

யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள காவலாளிகள் Security  offices ல் பெரும்பான்மையானோரில் EPDPயினரால் நிரப்பப்பட்டவர்களே . இது மட்டுமல்ல,  பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பாலான ஆளணிகள் இவர்களால்தான் நிரப்பப்படுகிறது..

இவ்வாறானவர்களிடம் இதனைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள், பணியாற்றும்  ஊழியர்கள் (விரிவுரையாளர்கள் உட்பட..) சதவீதம் வெகுவாக குறைதுவிட்டது என அறிந்தேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

 

இவனைப் பார்த்தால் தமிழனைப்போல் தெரியவில்லையே..... ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றிய சுடர், தமிழன் ஒருவனால்....  காலால் தட்டி விட்ட செயலை நினைக்க, 
மிகுந்த ஆத்திரமும், மனவேதனையும் ஏற்படுகின்றது. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

புலிகள் அழிந்து போனாலும் 
அவர்கள் வால்கள் இந்த துரோகி பட்டம் கட்டுவதை விட போவதில்லை 

கல்விமான்கள் கவரி மான்கள் என்று இது தொடர்ந்துகொண்டே இருக்கும் 
இன்று பல்கலைக்கழகத்தை பாதுக்காக்கும் ஒரு காவலாளி.
நாளை யாரோ? 

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள காவலாளிகள் Security  offices ல் பெரும்பான்மையானோரில் EPDPயினரால் நிரப்பப்பட்டவர்களே . இது மட்டுமல்ல,  பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பாலான ஆளணிகள் இவர்களால்தான் நிரப்பப்படுகிறது..

இவ்வாறானவர்களிடம் இதனைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்

☹️

இவர்களைப் பாதுகாக்க தேசியரீதியில் தமிழர்களும் அடங்கிய 61.464 பேர் உள்ளனர். அதாவது வாக்களித்தவர்கள் உள்ளனர். ஏன் யாழ்களத்திலும் சிலர் வெளிப்படலாம்.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவுக்கு ஒருமுறை டக்ளஸ்,சித்தார்த்தன், அப்புறம் திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பெயர் துரைரட்ணமோ ஏதோனு நினைக்கிறேன் , மூவரும்  ஒரு வானொலிக்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்,

அப்போது நேயர் ஒருவர் டக்ளசை கேட்டார்,

எத்தனையோ ஆயிரம் போராளிகள் பொதுமக்கள் இனவிடுதலைக்காக வெடித்து சிதறி தற்கொடை புரிகின்றார்களே இறந்து போகின்றார்களே அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று,

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று. தியாகம் என்று பார்க்கப்படவேண்டியதும் இல்லை என்று எகத்தாளமாக சொன்னான்.

அப்போது ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.

அந்தநேரமே சிங்கள அடிப்பொடிகளாக எக்காளமிட்டு திரிந்த இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களும், இப்போது முழுக்க முழுக்க அவர்களின் நேசத்துக்குரிய சிங்களவனின் ஆட்சியின் கீழ் வாழும்போது எம்மவர்களின் தியாகத்தை பொருட்படுத்துவார்களா?

அவன் கையால் தட்டுறானோ,

காலால் தட்டிவிடுறானோ தட்டிவிட்டுபோகட்டும்,

ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தின் முன் ஏற்றும் நினைவேந்தல் சுடர் ஒவ்வொரு வருடமும்  ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அப்போதும் வந்து தட்டினால் தட்டிவிட்டு போகட்டும்.அவர்கள் அவர்களது தொழிலை செய்கிறார்கள்  .மாணவர்கள் தமது  கடமையை செய்யட்டும்.

தட்டிவிடுகிறார்கள் என்று எப்போது சுடர் ஏற்றப்படாமல் விடுகிறதோ அன்றுதான் தமது இலக்கை அடைந்துவிட்டோம்  என்ற மகிழ்வில் அவர்களுக்கு வெற்றி, இப்போது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, valavan said:

ஐரோப்பாவுக்கு ஒருமுறை டக்ளஸ்,சித்தார்த்தன், அப்புறம் திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பெயர் துரைரட்ணமோ ஏதோனு நினைக்கிறேன் , மூவரும்  ஒரு வானொலிக்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்,

அப்போது நேயர் ஒருவர் டக்ளசை கேட்டார்,

எத்தனையோ ஆயிரம் போராளிகள் பொதுமக்கள் இனவிடுதலைக்காக வெடித்து சிதறி தற்கொடை புரிகின்றார்களே இறந்து போகின்றார்களே அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று,

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று. தியாகம் என்று பார்க்கப்படவேண்டியதும் இல்லை என்று எகத்தாளமாக சொன்னான்.

அப்போது ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.

அந்தநேரமே சிங்கள அடிப்பொடிகளாக எக்காளமிட்டு திரிந்த இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களும், இப்போது முழுக்க முழுக்க அவர்களின் நேசத்துக்குரிய சிங்களவனின் ஆட்சியின் கீழ் வாழும்போது எம்மவர்களின் தியாகத்தை பொருட்படுத்துவார்களா?

அவன் கையால் தட்டுறானோ,

காலால் தட்டிவிடுறானோ தட்டிவிட்டுபோகட்டும்,

ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தின் முன் ஏற்றும் நினைவேந்தல் சுடர் ஒவ்வொரு வருடமும்  ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அப்போதும் வந்து தட்டினால் தட்டிவிட்டு போகட்டும்.அவர்கள் அவர்களது தொழிலை செய்கிறார்கள்  .மாணவர்கள் தமது  கடமையை செய்யட்டும்.

தட்டிவிடுகிறார்கள் என்று எப்போது சுடர் ஏற்றப்படாமல் விடுகிறதோ அன்றுதான் தமது இலக்கை அடைந்துவிட்டோம்  என்ற மகிழ்வில் அவர்களுக்கு வெற்றி, இப்போது அல்ல.

ஆனால் இதே டக்ளஸ் தேவானந்தா, ஜெயசுக்குறு முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட, காயப்பட்ட இராணுவத்தினரை கொழும்பைச் சூழவுள்ள வைத்தியசாலைகளில் பார்த்துவிட்டு(தற்செயலாக பார்க்க வேண்டி ஏற்பட்டது) வந்து, தனிப்பட்ட ரீதியில்  "புலிகள் நல்ல அடிதான் குடுத்திருக்கிறாங்கள்" என்று கூறிப் புளகாங்கிதமடைந்தது எனக்கு மிக நன்றாகவே தெரியும். 

புலிகளின் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பும் மரியாதையும் தங்களுக்கில்லையே என்கின்ற கோபம்தான் புலிகளின் மீதான வெறுப்பிற்கு பிரதான காரணம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

இவனைப் பார்த்தால் தமிழனைப்போல் தெரியவில்லையே..... ??

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

ஒரேயொரு வித்தியாசம் தான்

அவன் எழும்பி நிற்பான் 

இவன் குனிந்து நிற்பான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழில் உலகத் தமிழாராய்ச்சி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட போது சிவாஜியின் கையை பிடித்து த இழுத்து தள்ளிய ஸ்ரீலங்கா இராணுவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

வித்தியாசம் ஒன்றுமில்லை
ஆனால் இவர்களுக்கிடையில் இருக்கும்  ஒற்றுமை
என்றால் சிங்கள மக்களில் 10  வீத   மக்கள் இனத்துவேசம் கொண்டவர்களாக இருப்பார்கள்
அதே வேளையில் தமிழ் மக்களிலும் 10  வீதம் இனத்துரோகிகள் இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

யாழில் உலகத் தமிழாராய்ச்சி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட போது சிவாஜியின் கையை பிடித்து த இழுத்து தள்ளிய ஸ்ரீலங்கா இராணுவம்.

 

இது எப்போது நடைபெற்ற சம்பவம்? 

கண்டிக்கப்பட வேண்டிய இழி செயல் இது. சட்டவிரோதமாக ஏதும் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். அக வணக்கம் செய்வதை, ஈகை சுடர் ஏற்றுவதை தடுப்பது வெறித்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சிங்களம் செய்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் இருந்த இளைஞர்களை குறிவைத்து இந்தப்பேயும் செய்துகொண்டிருந்தது என்பது எத்தனை பேர் அறிவர்.

 

7 hours ago, தமிழ் சிறி said:

காலால் தட்டி விட்ட செயலை நினைக்க, 
மிகுந்த ஆத்திரமும், மனவேதனையும் ஏற்படுகின்றது

அதை விடுங்கள்! இன்னும் ஐந்து ஆண்டுகளில் (ஒருவரின் கூற்றுப்படி)கணிசமான எண்ணிக்கையில் தமிழ் போலீஸ், ஆமி, கடற்படை, விமானப்படை என்று நிறைந்து இதைத்தான் செய்யபோகினம். அப்போ இந்த ஒட்டுக்குழுக்களின் துரோகம் மறைந்து எம் இளைய சந்ததி பலியாகிவிடும், எனும் பேராசையில் கைதட்டி வரவேற்கினம்.  அவர்களும் அதே பொறியில் உள்ளனர் என்பது புரியாமல்.

3 hours ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

சாதாரணமாக எரிந்து துயர் களையும் சுடரை கொழுந்து விட்டெரிய தூண்டுபவர்கள் இவர்கள் தாம். இவர்களும் நமது வீரத்தை விரிந்து  பரப்ப  வித்திட்டவர்களே. தங்களை அறியாமல் தூண்டிகளாக  உதவிக்கொண்டிருக்கிறார்கள் எங்களுக்கு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.