Jump to content

மாணவர்கள் ஏற்றிய சுடரை காலால் தட்டிவிட்ட காவலாளி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் ஏற்றிய சுடரை காலால் தட்டிவிட்ட காவலாளி!

May 18, 2021

1-1.jpeg

யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி காலினால் தட்டி அகற்றியுள்ளார். 

இச் செயலை பல்கலைக்கழக மாணவர்கள் வன்மையாக கண்டித்து உள்ளத்துடன் , தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி உயிரிழந்த எம் உறவுகளுக்கு நாங்கள் உணர்வு பூர்வமாக ஏற்றிய சுடரினை காவலாளி காலினால் தட்டி அப்புறப்படுத்திய செயலானது எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும். என கவலையுடன் மாணவர்கள் தெரிவித்தனர். 

பல்கலைக்கழக வளாகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவிடாது தடுக்கும் நோக்குடன் நேற்றைய தினம் முதல் , பல்கலை கழக சூழலில் இராணுவம் மற்றும் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, புலனாய்வாளர்களின்  கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இன்றைய தினம் மதியம் மாணவர்கள் தடைகளை தாண்டி வளாகத்தினுள் உள்ள நினைவு சின்னம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தி இருந்தனர். 

அந்நிலையில் அதனை அவதானித்த பல்கலைக்கழக காவலாளி நினைவிடத்திற்கு வந்து மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளார். 
 

https://globaltamilnews.net/2021/161118/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் தமிழரின் சாபக்கேடு 

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

இவ்வினம் எப்படி விடுதலை பெற தகுதி பெறும்???

இப்பொழுது புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா?

அப்படியானால் இவ்வினம் எப்படி ஜனநாயக ரீதியில் இலக்கை அடையும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் சிங்களத்தின் காவலாளிகள் எமது இனத்துக்குள் இருந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். 😁🤢

ஆழ்ந்த அனுதாபங்கள். 🤢😆

33 minutes ago, குமாரசாமி said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது தான் தமிழரின் சாபக்கேடு 

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

இவ்வினம் எப்படி விடுதலை பெற தகுதி பெறும்???

இப்பொழுது புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா?

அப்படியானால் இவ்வினம் எப்படி ஜனநாயக ரீதியில் இலக்கை அடையும்??

யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள காவலாளிகள் Security  offices ல் பெரும்பான்மையானோரில் EPDPயினரால் நிரப்பப்பட்டவர்களே . இது மட்டுமல்ல,  பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பாலான ஆளணிகள் இவர்களால்தான் நிரப்பப்படுகிறது..

இவ்வாறானவர்களிடம் இதனைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள், பணியாற்றும்  ஊழியர்கள் (விரிவுரையாளர்கள் உட்பட..) சதவீதம் வெகுவாக குறைதுவிட்டது என அறிந்தேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

 

இவனைப் பார்த்தால் தமிழனைப்போல் தெரியவில்லையே..... ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றிய சுடர், தமிழன் ஒருவனால்....  காலால் தட்டி விட்ட செயலை நினைக்க, 
மிகுந்த ஆத்திரமும், மனவேதனையும் ஏற்படுகின்றது. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

புலிகள் அழிந்து போனாலும் 
அவர்கள் வால்கள் இந்த துரோகி பட்டம் கட்டுவதை விட போவதில்லை 

கல்விமான்கள் கவரி மான்கள் என்று இது தொடர்ந்துகொண்டே இருக்கும் 
இன்று பல்கலைக்கழகத்தை பாதுக்காக்கும் ஒரு காவலாளி.
நாளை யாரோ? 

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள காவலாளிகள் Security  offices ல் பெரும்பான்மையானோரில் EPDPயினரால் நிரப்பப்பட்டவர்களே . இது மட்டுமல்ல,  பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பாலான ஆளணிகள் இவர்களால்தான் நிரப்பப்படுகிறது..

இவ்வாறானவர்களிடம் இதனைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்

☹️

இவர்களைப் பாதுகாக்க தேசியரீதியில் தமிழர்களும் அடங்கிய 61.464 பேர் உள்ளனர். அதாவது வாக்களித்தவர்கள் உள்ளனர். ஏன் யாழ்களத்திலும் சிலர் வெளிப்படலாம்.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவுக்கு ஒருமுறை டக்ளஸ்,சித்தார்த்தன், அப்புறம் திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பெயர் துரைரட்ணமோ ஏதோனு நினைக்கிறேன் , மூவரும்  ஒரு வானொலிக்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்,

அப்போது நேயர் ஒருவர் டக்ளசை கேட்டார்,

எத்தனையோ ஆயிரம் போராளிகள் பொதுமக்கள் இனவிடுதலைக்காக வெடித்து சிதறி தற்கொடை புரிகின்றார்களே இறந்து போகின்றார்களே அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று,

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று. தியாகம் என்று பார்க்கப்படவேண்டியதும் இல்லை என்று எகத்தாளமாக சொன்னான்.

அப்போது ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.

அந்தநேரமே சிங்கள அடிப்பொடிகளாக எக்காளமிட்டு திரிந்த இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களும், இப்போது முழுக்க முழுக்க அவர்களின் நேசத்துக்குரிய சிங்களவனின் ஆட்சியின் கீழ் வாழும்போது எம்மவர்களின் தியாகத்தை பொருட்படுத்துவார்களா?

அவன் கையால் தட்டுறானோ,

காலால் தட்டிவிடுறானோ தட்டிவிட்டுபோகட்டும்,

ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தின் முன் ஏற்றும் நினைவேந்தல் சுடர் ஒவ்வொரு வருடமும்  ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அப்போதும் வந்து தட்டினால் தட்டிவிட்டு போகட்டும்.அவர்கள் அவர்களது தொழிலை செய்கிறார்கள்  .மாணவர்கள் தமது  கடமையை செய்யட்டும்.

தட்டிவிடுகிறார்கள் என்று எப்போது சுடர் ஏற்றப்படாமல் விடுகிறதோ அன்றுதான் தமது இலக்கை அடைந்துவிட்டோம்  என்ற மகிழ்வில் அவர்களுக்கு வெற்றி, இப்போது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, valavan said:

ஐரோப்பாவுக்கு ஒருமுறை டக்ளஸ்,சித்தார்த்தன், அப்புறம் திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பெயர் துரைரட்ணமோ ஏதோனு நினைக்கிறேன் , மூவரும்  ஒரு வானொலிக்கு நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்,

அப்போது நேயர் ஒருவர் டக்ளசை கேட்டார்,

எத்தனையோ ஆயிரம் போராளிகள் பொதுமக்கள் இனவிடுதலைக்காக வெடித்து சிதறி தற்கொடை புரிகின்றார்களே இறந்து போகின்றார்களே அவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன என்று,

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று. தியாகம் என்று பார்க்கப்படவேண்டியதும் இல்லை என்று எகத்தாளமாக சொன்னான்.

அப்போது ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன்.

அந்தநேரமே சிங்கள அடிப்பொடிகளாக எக்காளமிட்டு திரிந்த இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களும், இப்போது முழுக்க முழுக்க அவர்களின் நேசத்துக்குரிய சிங்களவனின் ஆட்சியின் கீழ் வாழும்போது எம்மவர்களின் தியாகத்தை பொருட்படுத்துவார்களா?

அவன் கையால் தட்டுறானோ,

காலால் தட்டிவிடுறானோ தட்டிவிட்டுபோகட்டும்,

ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தின் முன் ஏற்றும் நினைவேந்தல் சுடர் ஒவ்வொரு வருடமும்  ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

அப்போதும் வந்து தட்டினால் தட்டிவிட்டு போகட்டும்.அவர்கள் அவர்களது தொழிலை செய்கிறார்கள்  .மாணவர்கள் தமது  கடமையை செய்யட்டும்.

தட்டிவிடுகிறார்கள் என்று எப்போது சுடர் ஏற்றப்படாமல் விடுகிறதோ அன்றுதான் தமது இலக்கை அடைந்துவிட்டோம்  என்ற மகிழ்வில் அவர்களுக்கு வெற்றி, இப்போது அல்ல.

ஆனால் இதே டக்ளஸ் தேவானந்தா, ஜெயசுக்குறு முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட, காயப்பட்ட இராணுவத்தினரை கொழும்பைச் சூழவுள்ள வைத்தியசாலைகளில் பார்த்துவிட்டு(தற்செயலாக பார்க்க வேண்டி ஏற்பட்டது) வந்து, தனிப்பட்ட ரீதியில்  "புலிகள் நல்ல அடிதான் குடுத்திருக்கிறாங்கள்" என்று கூறிப் புளகாங்கிதமடைந்தது எனக்கு மிக நன்றாகவே தெரியும். 

புலிகளின் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பும் மரியாதையும் தங்களுக்கில்லையே என்கின்ற கோபம்தான் புலிகளின் மீதான வெறுப்பிற்கு பிரதான காரணம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

இவனைப் பார்த்தால் தமிழனைப்போல் தெரியவில்லையே..... ??

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

ஒரேயொரு வித்தியாசம் தான்

அவன் எழும்பி நிற்பான் 

இவன் குனிந்து நிற்பான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழில் உலகத் தமிழாராய்ச்சி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட போது சிவாஜியின் கையை பிடித்து த இழுத்து தள்ளிய ஸ்ரீலங்கா இராணுவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

வித்தியாசம் ஒன்றுமில்லை
ஆனால் இவர்களுக்கிடையில் இருக்கும்  ஒற்றுமை
என்றால் சிங்கள மக்களில் 10  வீத   மக்கள் இனத்துவேசம் கொண்டவர்களாக இருப்பார்கள்
அதே வேளையில் தமிழ் மக்களிலும் 10  வீதம் இனத்துரோகிகள் இருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

யாழில் உலகத் தமிழாராய்ச்சி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட போது சிவாஜியின் கையை பிடித்து த இழுத்து தள்ளிய ஸ்ரீலங்கா இராணுவம்.

 

இது எப்போது நடைபெற்ற சம்பவம்? 

கண்டிக்கப்பட வேண்டிய இழி செயல் இது. சட்டவிரோதமாக ஏதும் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். அக வணக்கம் செய்வதை, ஈகை சுடர் ஏற்றுவதை தடுப்பது வெறித்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

அதற்கு டக்ளஸ் சொன்னான் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை, அது ஒன்றும் இரக்கத்திற்குரிய ஒன்றும்மில்லை என்று.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சிங்களம் செய்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் இருந்த இளைஞர்களை குறிவைத்து இந்தப்பேயும் செய்துகொண்டிருந்தது என்பது எத்தனை பேர் அறிவர்.

 

7 hours ago, தமிழ் சிறி said:

காலால் தட்டி விட்ட செயலை நினைக்க, 
மிகுந்த ஆத்திரமும், மனவேதனையும் ஏற்படுகின்றது

அதை விடுங்கள்! இன்னும் ஐந்து ஆண்டுகளில் (ஒருவரின் கூற்றுப்படி)கணிசமான எண்ணிக்கையில் தமிழ் போலீஸ், ஆமி, கடற்படை, விமானப்படை என்று நிறைந்து இதைத்தான் செய்யபோகினம். அப்போ இந்த ஒட்டுக்குழுக்களின் துரோகம் மறைந்து எம் இளைய சந்ததி பலியாகிவிடும், எனும் பேராசையில் கைதட்டி வரவேற்கினம்.  அவர்களும் அதே பொறியில் உள்ளனர் என்பது புரியாமல்.

3 hours ago, குமாரசாமி said:

EPDP க்கும் சிங்கள இனவெறியருக்கும் என்ன வித்தியாசம்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

யாழ் பல்கலைக்கழக காவலாளிக்கே அஞ்சலியின் மகிமை புரியாத நிலை.

சாதாரணமாக எரிந்து துயர் களையும் சுடரை கொழுந்து விட்டெரிய தூண்டுபவர்கள் இவர்கள் தாம். இவர்களும் நமது வீரத்தை விரிந்து  பரப்ப  வித்திட்டவர்களே. தங்களை அறியாமல் தூண்டிகளாக  உதவிக்கொண்டிருக்கிறார்கள் எங்களுக்கு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.