Jump to content

இலங்கை முள்ளிவாய்க்காலில் அரசு கட்டுப்பாடு: உள்நாட்டுப்போர் முடிந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முள்ளிவாய்க்காலில் அரசு கட்டுப்பாடு: உள்நாட்டுப்போர் முடிந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு

18 மே 2021, 06:38 GMT
முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டது சமீபத்தில் சர்ச்சையை உண்டாக்கியது
 
படக்குறிப்பு, முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டது சமீபத்தில் சர்ச்சையை உண்டாக்கியது

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் முந்தைய ஆண்டுகளில் யுத்தத்தினால் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து வந்த தமிழர்களுக்கு இம்முறை அந்த பகுதியில் உயிர் நீத்த மக்களை நினைவுகூர்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, முள்ளியாவளை, புதுகுடியிருப்பு ஆகிய பகுதிகள் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கொரோனாவை காரணமாகக் கூறி, முல்லைத்தீவு பகுதியை முடக்கி, எந்த விதத்திலும் முள்ளிவாய்க்காலை மக்கள் அணுக முடியாதவாறு அரசு தடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அரசாங்கம் திட்டமிட்டு அழித்ததாகவும், மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அதனை மீள அமைக்க அனுமதி வழங்கியதாகவும் மாணவர் ஒன்றியம் அதில் குறிப்பிட்டுள்ளது. 

அதேபோன்று, ஆண்டுதோறும் மக்களை பொங்கும் உணர்வுகளோடு நினைவு கூரும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தூபி மிலேச்சத்தனமாக அழிக்கப்பட்டதாகவும் யாழ். மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. 

மேலும், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்தாபிக்கப்படவிருந்த நினைவுக்கல்லை வஞ்சகமாக கவர்ந்து சென்று, அரசாங்கம் அராஜகம் புரிந்துள்ளதாகவும் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையிலேயே, முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் செல்ல தற்போது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமது வீட்டு முற்றங்களில் நினைவு சுடரை ஏற்றுமாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நினைவிடத்தை அழிக்கலாம், நினைவுகளை அழிக்க முடியாது என்பதை இந்த செயற்பாட்டின் ஊடாக உரத்துச் சொல்லுவோம் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

தமிழ அரசியல் தலைவர்கள் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் 12ஆம் ஆண்டுநினைவேந்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இலங்கை உள்நாட்டுப்போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமது அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.

வைகோ

பட மூலாதாரம், MDMK

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன், "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ஆவது ஆண்டாக நினவுகூரப்படும் இந்நாளில், ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவைத் திரட்டி, ஈழவிடுதலையை வென்றெடுக்கவும், உலகத் தமிழர்களுக்கிடையிலான முரண்களைக் கூர்மைப்படுத்தாமல் ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்தவும் உறதியேற்போம்," என்று கூறியுள்ளார்.

Twitter பதிவின் முடிவு, 1

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வீழ்வதெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்கே என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 8 மணியளவில் காணொளி வாயிலாக முள்ளிவாய்க்கால் நிநைவேந்தல் பற்றி பேசும் நிகழ்ச்சிக்கும் அவரது கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

Twitter பதிவின் முடிவு, 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, "சமீபத்தில் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த நினைவிடம், முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சமத்துவமோ, அடிப்படை உரிமைகளோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்சனையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் மிக முக்கியமானது. அது இனியும் தொடரும். உண்மை நிச்சயம் வெல்லும்," என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-57153081

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

இந்த நிலையை முதலில் மாற்றணும்

அதுவே இன்றைய தேவை

Link to comment
Share on other sites

42 minutes ago, nedukkalapoovan said:

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

இப்ப எல்லோரும்  கத்தியை தீட்டி கொண்டு வர போயினம். உங்களுக்கு இன்று ஒரே அர்ச்சனை தான் போங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய இந்தியத்தின் துணையோடு தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு! துணை நின்றது திராவிடம்! மறக்க மாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

தி மு க.. காங்கிரஸ்.. எப்போதும் போல் கள்ள மெளனம்.

அதிமுக பாஜக.. எப்போதும் போல் கண்டே கொள்வதில்லை.

இவர்கள் தமிழகத்தில் தமிழரை ஆள்கின்றனராம். உய்விக்கப் போகினமாம். தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போடுவது தான் இனக்கேவலமாக உள்ளது. 

ஆரியர் திராவிடர் எல்லோரும் சேர்ந்து நின்றுதான் எல்லாமே நடைபெற்றது
இருந்தாலும் ஒரு கேள்வி..... அன்று இலங்கையில் இருந்த வட கிழக்கைச்  சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்ன செய்து   கொண்டிருந்தார்கள்?
பதில் இதே திராவிடர்களிடமும் ஆரியர்களிடமும் சரணடைந்திருந்தார்கள்
அடுத்தவனைப் பற்றிப் பேச முதல் நாங்கள் எங்களைப்பற்றி ஒரு சுய விமர்சனம் வைத்தால் நன்றாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

அடுத்தவனைப் பற்றிப் பேச முதல் நாங்கள் எங்களைப்பற்றி ஒரு சுய விமர்சனம் வைத்தால் நன்றாக இருக்கும்

சரியாய்ச் சொன்னியள்! எங்களில தான் பிழை எல்லாம். தமிழரசுக்கட்சி என்று பெயர் வைத்தது எங்கள் பிழை, நாடுவிட்டு புலம்பெயர்ந்தது எங்கள் பிழை, நாடுகடந்த அரசு அமைத்தது எங்கள் பிழை, நாட்டுக்கு உழைக்காதது எங்கள் பிழை, ஆயுதம் ஏந்தி போராடியது எங்கள் பிழை, தனிநாடு கேட்டது எங்கள் பிழை, சமஷ்டி கேட்டது எங்கள் பிழை, இப்படி எத்தனையோ எங்கள் பிழைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதெல்லாம் ஏன் வந்தது? என்று கேட்டால் பதிலில்லை. தமிழர்  புலம் பெயர்ந்ததால்த்தான் இன்று அரசாங்கம் இழைத்த கோடூரங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது. இவர்கள் எல்லாம் இங்கே போராடி இறந்திருந்தால், அரசாங்கம் இலகுவாக சிங்கள பவுத்த அரசு அமைத்திருக்கும். அதற்கு தடையாகி விட்டதே என்பதுதான் இப்போ நம்பக்கம் உள்ள பெரிய கவலை. அதுவும் இன்னும் சில வருடங்களில் புலம்பெயர்ந்த இளையோரை மூளைச் சலவை செய்து சாதித்து விடுவோமில்ல. அதுக்குதான் தொழில்நுட்ப வசதியிருக்கிறது. எங்களை கண்டால் நாங்கள் இருந்த இடத்தை விட்டு எழும்பாமலே சிங்களம் எங்களுக்கு எல்லாம் செய்து தரும். ஆனால் ......  நாங்கள் எங்களுக்கு உரியதை மட்டுமே செய்வோம். அதாவது அப்போதைக்கு நாங்கள் கதா நாயகர்களாக நடிக்க (எங்களை கதாநாயகர்களாக காட்ட) வேண்டியதை மட்டும் கேட்டுப் பெறுவோம். ஆனால் சிங்களம் றால் போட்டு சுறா பிடிக்குது என்பது மக்களுக்கு மட்டுந்தான் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய விமர்சனம் வைக்க வேண்டிய இடத்தில வச்சி குடுக்க வேண்டிய இடத்தில குடுத்தாச்சி ... இப்ப அதுவா பிரச்சினை 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

இருந்தாலும் ஒரு கேள்வி..... அன்று இலங்கையில் இருந்த வட கிழக்கைச்  சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்ன செய்து   கொண்டிருந்தார்கள்?

புலிகள் எப்ப துடைத்தெறியப்படுவார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில், கொழும்பில் ஒரு எதிர்ப்பைக் கூட தெரிவிக்க சாத்வீகமான முறையில் போராடமுடியாமல் இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

 

On 18/5/2021 at 15:29, satan said:

சரியாய்ச் சொன்னியள்! எங்களில தான் பிழை எல்லாம். தமிழரசுக்கட்சி என்று பெயர் வைத்தது எங்கள் பிழை, நாடுவிட்டு புலம்பெயர்ந்தது எங்கள் பிழை, நாடுகடந்த அரசு அமைத்தது எங்கள் பிழை, நாட்டுக்கு உழைக்காதது எங்கள் பிழை, ஆயுதம் ஏந்தி போராடியது எங்கள் பிழை, தனிநாடு கேட்டது எங்கள் பிழை, சமஷ்டி கேட்டது எங்கள் பிழை, இப்படி எத்தனையோ எங்கள் பிழைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

உண்மைதானே? இவை நடந்திருக்காவிட்டால் இப்படி எல்லாம் அழிந்திருக்காது.

On 18/5/2021 at 15:29, satan said:

இதெல்லாம் ஏன் வந்தது? என்று கேட்டால் பதிலில்லை.

எத்தனைமுறை பதில் சொல்லியாயிற்று? மீண்டும் தாராளமாக சொல்லலாம், சர்வதேச புவிசார் அரசியல் தெரியாதவர்கள் தலைமை வகித்ததால் வந்தத வினை இது. இந்தியாவை கட்டிப்பிடித்து கொண்டு அரசியல் செய்த முட்டாள்தனத்தின் விளைவு இது.

On 18/5/2021 at 15:29, satan said:

தமிழர்  புலம் பெயர்ந்ததால்த்தான் இன்று அரசாங்கம் இழைத்த கோடூரங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது. இவர்கள் எல்லாம் இங்கே போராடி இறந்திருந்தால், அரசாங்கம் இலகுவாக சிங்கள பவுத்த அரசு அமைத்திருக்கும்.

புலம்பெயராமல் எல்லோரும் ஒன்றாக போராடியிருந்தால் முழு இலங்கையும் இன்று தமிழீழ ஆட்சியில் இன்னுமொரு சிங்கப்பூர் ஆகியிருக்கும். உங்கள் சுயநலத்துக்கு போராளிகளின் தியாகத்தை விலைபேசி அகதி அந்தஸ்து எடுத்ததை நியாயப்படுத்த எப்படியெல்லாம் எழுதுவீர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

On 18/5/2021 at 15:29, satan said:

  நாங்கள் எங்களுக்கு உரியதை மட்டுமே செய்வோம். அதாவது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.