Jump to content

கொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா?

கொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா?

 

கொரோனாவால் இதயம், நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

கேள்வி-பதில்

 
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேள்வி-பதில் வடிவில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடல் மோசம் அடைவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதா?

பதில்:- மற்றவர்களை விட இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இல்லை. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட 80 சதவீத பேருக்கு சுவாச பாதிப்பு (காய்ச்சல், தொண்டை வறட்சி, இருமல்) போன்ற மிதமான அறிகுறிகள் ஏற்பட்டு முழுவதும் குணமடைகின்றனர்.

ஆனால் நீரிழிவு, இதய பலவீனம் உள்பட இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகையால், இதுபோன்ற நோயாளிகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவை.

மிதமான அறிகுறிகள் ஏற்பட்டாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்கிறீர்களா? என்பதை உறுதி செய்யுங்கள். மருத்துவர் அறிவுரையின்றி, எந்த மருந்தையும் நிறுத்த வேண்டாம்.

ஒருவேளை, மருத்துவரை சந்திக்க முடியவில்லை என்றால், உங்களின் ரத்தஅழுத்த, நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளை தொடருங்கள். கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளும் தொடர வேண்டும்.

கேள்வி:- ரத்த அழுத்த மருந்துகள், தொற்றை அதிகப்படுத்துவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையா?

பதில்:- கிடைக்கும் தகவல்களை ஆய்வு செய்தபின், விஞ்ஞானிகள் மற்றும் இதய நிபுணர்களின் ஒருமித்த கருத்து இது தான். இரண்டு விதமான மருந்துகள் ஏ.சி.இ. மருந்துகள் (உதாரணத்துக்கு ரமிபிரில், எனலாபிரில் போன்றவை) மற்றும் ஏஆர்பி மருந்துகள் (லோசர்டன், டெல்மிசர்டன் போன்றவை) கொரோனா தொற்றை கடுமையாக அதிகரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இதய செயல் இழப்புக்கு இந்த மருந்துகள் பயனுள்ளவை மற்றும் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இவற்றை நீங்கள் நிறுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்கள் இதயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கும்.

கேள்வி:- வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம்?

பதில்:- ‘இபுபுரொபன்' போன்ற வலி நிவாரணிகள் கொரோனா பாதிப்பை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற மருந்துகள் இதய செயல் இழப்பு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீரக பாதிப்பையும் அதிகரிக்கலாம். எனவே இதுபோன்ற மருந்துகளை தவிர்த்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் சாப்பிடுங்கள். தேவைப்பட்டால், பாதுகாப்பான வலி நிவாரணியான ‘பாரசிட்டாமலை’ மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

https://www.maalaimalar.com/health/generalmedicine/2021/05/19125940/2653514/corona-infection-affect-heart-and-diabetes.vpf

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

கேள்வி:- வலி நிவாரணி அல்லது காய்ச்சல் மாத்திரை இவற்றில் எதை எடுத்துக் கொள்ளலாம்?

பதில்:- ‘இபுபுரொபன்' போன்ற வலி நிவாரணிகள் கொரோனா பாதிப்பை மோசமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது..

 எனக்கு 12 நாள்வரை தொடர்ந்து காச்சல் சளி இருமல் எல்லாத் தொல்லைகளும் இருந்தது.  இபுபரோபின் தான் நாளுக்கு 4 எடுத்தேன். ஆரம்பத்தில் ஆஸ்பிரின் தான் மருத்துவர்கள் தந்தார்கள் ஆனால் ஆஸ்பிரின் போட்டு வலி எதுவும் குறையவில்லை.  உந்த ஆய்வுகள் இன்னும் சரியான தரவுகளை கண்டுபிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

எனக்கு 12 நாள்வரை தொடர்ந்து காச்சல் சளி இருமல் எல்லாத் தொல்லைகளும் இருந்தது.  இபுபரோபின் தான் நாளுக்கு 4 எடுத்தேன். ஆரம்பத்தில் ஆஸ்பிரின் தான் மருத்துவர்கள் தந்தார்கள் ஆனால் ஆஸ்பிரின் போட்டு வலி எதுவும் குறையவில்லை.  உந்த ஆய்வுகள் இன்னும் சரியான தரவுகளை கண்டுபிடிக்கவில்லை.

உங்களுக்கும் கொரோனா வந்ததா ☹️

நோய் மாறியது மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்களுக்கும் கொரோனா வந்ததா ☹️

நோய் மாறியது மகிழ்ச்சி.

ஓம் 2மாதமாகீட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2021 at 10:29, shanthy said:

 எனக்கு 12 நாள்வரை தொடர்ந்து காச்சல் சளி இருமல் எல்லாத் தொல்லைகளும் இருந்தது.  இபுபரோபின் தான் நாளுக்கு 4 எடுத்தேன். ஆரம்பத்தில் ஆஸ்பிரின் தான் மருத்துவர்கள் தந்தார்கள் ஆனால் ஆஸ்பிரின் போட்டு வலி எதுவும் குறையவில்லை.  உந்த ஆய்வுகள் இன்னும் சரியான தரவுகளை கண்டுபிடிக்கவில்லை.

சாந்தி, கொரனா ஆரம்பகாலத்தில் ibuprofen பாவனை பற்றிய எச்சரிக்கை இருந்தது உண்மை. இப்போதும், கொரனா வந்தால் இதைப் பாவிப்பதில் அவதானம் தேவை. ஏனெனில் ibuprofen இரத்தம் உறைவதைத் தடுக்கக் கூடியது, கொரனா வைரஸ் இரத்தம் கட்டியாவதை அதிகரிக்கும். இந்தச் சிக்கலான தொடர்பினால் தான் ibuprofen குறித்த எச்சரிக்கை அவசியம்! 

Link to comment
Share on other sites

On 20/5/2021 at 21:17, Justin said:

சாந்தி, கொரனா ஆரம்பகாலத்தில் ibuprofen பாவனை பற்றிய எச்சரிக்கை இருந்தது உண்மை. இப்போதும், கொரனா வந்தால் இதைப் பாவிப்பதில் அவதானம் தேவை. ஏனெனில் ibuprofen இரத்தம் உறைவதைத் தடுக்கக் கூடியது, கொரனா வைரஸ் இரத்தம் கட்டியாவதை அதிகரிக்கும். இந்தச் சிக்கலான தொடர்பினால் தான் ibuprofen குறித்த எச்சரிக்கை அவசியம்! 

Justin, 

உங்கள் கருத்துக்கு நன்றி. 

இங்கு பலருக்கு வைத்தியர்கள் ibuprofen கொரோனாவுக்கு சிபாரிசு செய்துள்ளார்கள். 

நான் காச்சல் உடல் வலி தாங்க முடியாமல் அஸ்பிறினை தவிர்த்து ibuprofen குளிசையை பாவித்தேன். இதுவரை பரிசோதனைகளில் எந்த பிரச்சினையும் இல்லை. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.