Jump to content

இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் எதனால்? யாருக்காக?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல வித தகவல்களை.... திரட்டித் தந்த காணொளிக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குணா, ஆனால் சில கருத்துக்களில் உடன்பாடில்லை. ஈரான் எப்போதுமே ஹமாசையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் ஆதரித்து உதவி செய்வது வெளிப்படை, ஆனால் இஸ்ரேலின் ஏவுகணைப்பாதுகாப்பை உடைத்து விட்டார்கள் என்பது சரியான தகவலா? மூவாயிரம் ஏவுகணைகளில் 300 தான்  தப்பி உள்ளே விழுந்திருக்கிறது எனப்பார்க்கும் போது, இது ஏவுகணைப்பாதுகாப்பை நாசம் செய்தது போலத் தெரியவில்லை. 

ஆனால், ஹமாஸ் ஈரானின் வலையில் விழுந்து தமக்கும் பலஸ்தீன விடிவுக்கும் நீண்ட கால ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார்கள் என்பது உண்மை. பதவியிழக்க இருந்த நெரன்யாஹுவை இப்போது ஒரு வலது சாரிக் கட்சி ஆதரித்துப் பதிவியில் வைத்திருக்க முனைகிறது. அவர் பதவியில் இருக்கும் வரை கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்பு, யூதக்குடியேற்ற நிறுத்தம், பேச்சு வார்த்தை என்று எதுவும் இல்லை!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் ஒன்றிணந்து ஒருபோது போராட மாட்டர்கள். ஈரான் சியா முஸ்லீம்கள், மற்ற அரபு நாடுகள் சன்னி முஸ்லீம்கள் இவர்கள் தம்க்குள் பிரிபட்டு அடிபட்டு சாவர்கள். மேலும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கால் வைத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நன்றி குணா, ஆனால் சில கருத்துக்களில் உடன்பாடில்லை. ஈரான் எப்போதுமே ஹமாசையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் ஆதரித்து உதவி செய்வது வெளிப்படை, ஆனால் இஸ்ரேலின் ஏவுகணைப்பாதுகாப்பை உடைத்து விட்டார்கள் என்பது சரியான தகவலா? மூவாயிரம் ஏவுகணைகளில் 300 தான்  தப்பி உள்ளே விழுந்திருக்கிறது எனப்பார்க்கும் போது, இது ஏவுகணைப்பாதுகாப்பை நாசம் செய்தது போலத் தெரியவில்லை. 

ஆனால், ஹமாஸ் ஈரானின் வலையில் விழுந்து தமக்கும் பலஸ்தீன விடிவுக்கும் நீண்ட கால ஆப்பு வைத்துக் கொண்டு விட்டார்கள் என்பது உண்மை. பதவியிழக்க இருந்த நெரன்யாஹுவை இப்போது ஒரு வலது சாரிக் கட்சி ஆதரித்துப் பதிவியில் வைத்திருக்க முனைகிறது. அவர் பதவியில் இருக்கும் வரை கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்பு, யூதக்குடியேற்ற நிறுத்தம், பேச்சு வார்த்தை என்று எதுவும் இல்லை!  

அதாவது 10% மான ஏவுகணைகள் இசுரவேலின் ஏவுகணைத் தடுப்பு வலையத்தைத் தாண்டிச் செல்வதென்பது உண்மையில் மிகப் பெரும் சாதனைதான். 

இதனை ஹமாசின் ஏவுகணைகளுடன் மட்டும் பார்க்காது, லெபலானின் கிஸ்புல்லா, ஈரான் என்பவற்றின் ஆயுத பலத்தினோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

இஸ்ரவேலுடன் ஒப்பிடுகையில் 'கொசு'  ஹமாசின் தாக்குதலையே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாத இசுரேல் எப்படி ஈரானுடனோ அல்லது லெபனானின் ஹிஸ்புல்லாவுடனோ தாக்குப்பிடிக்க முடியும் ? 

இந்தப் பதினொரு நாள் சண்டையில் இஸ்ரவேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை எள்ளளவும் இஸ்ரேலால் தடுக்கமுடியவில்லை. பதிலாக இஸ்ரேல் காசாவிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடங்களை எல்லாம் தரைமட்டமாக்குகிறது. 

எங்கள் மீது கைவைத்தால் உங்களைக் கற்காலத்துக்கு அனுப்பிவிடுவேன் என்றா இஸ்ரவேல் கூறுகிறது ? 

""ISIS ஐ உருவாக்கி மத்திய கிழக்கை துண்டு துண்டாக மீண்டுமொருமுறை உடைக்க முனைந்த இஸ்ரவேல் + அமெரிக்க திட்டம் இறுதியில் இஸ்ரவேல் அமெரிக்கா இரண்டிற்கும் பாதகமாகவே  முடிந்திருக்கிறது""

 

 

3 hours ago, colomban said:

இஸ்லாமியர்கள் ஒன்றிணந்து ஒருபோது போராட மாட்டர்கள். ஈரான் சியா முஸ்லீம்கள், மற்ற அரபு நாடுகள் சன்னி முஸ்லீம்கள் இவர்கள் தம்க்குள் பிரிபட்டு அடிபட்டு சாவர்கள். மேலும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கால் வைத்து விட்டது.

இந்தப் பதினொரு நாள் யுத்தம் உண்மையில் இஸ்ரவெலின் பலவீனத்தைப் புடம்போட்டுக் காட்டிவிட்டது. 

இஸ்ரவேல் தன்னைச் சூழவும் தன்னுள்ளேயும் எதிரிகளை (ஈரான், சிரியா, லெபனானின் கிஸ்புல்லா மற்றும் இஸ்ரவேலினுள் உள்ள அரபிக்கள்) வைத்துக் கொண்டு எப்படி அமைதியாக வாழ முடியும் ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொக்கட் விட்டு இஸ்ரேலிடம் அடிவாங்கியது பலஸ்தீனியர்கள்.  ceasefire  அறிவித்தல் வந்ததும் வெற்றி விழா கொண்டாட்டம் கொண்டாடுகிறார்கள் 😂   ரொக்கட் விடாமலே இருந்திருக்கலாம்.

14 hours ago, colomban said:

சியா முஸ்லீம்கள், மற்ற அரபு நாடுகள் சன்னி முஸ்லீம்கள்

ஈழதமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்  சியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலை அவ்வளவு எளிதாக எடை போட முடியாது.

அடுத்து ஏதாவது நடந்தால், அவர்களின் நகர்வுகள் இன்னும் மூர்க்கமாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஈழதமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்  சியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிம்கள்

வேலியிலை.... போற ஓணானை, வேட்டிக்குள்ளை விட்ட மாதிரி ஆயிடும். 😁

நமக்கு.. இரண்டும் வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அதாவது 10% மான ஏவுகணைகள் இசுரவேலின் ஏவுகணைத் தடுப்பு வலையத்தைத் தாண்டிச் செல்வதென்பது உண்மையில் மிகப் பெரும் சாதனைதான். 

இதனை ஹமாசின் ஏவுகணைகளுடன் மட்டும் பார்க்காது, லெபலானின் கிஸ்புல்லா, ஈரான் என்பவற்றின் ஆயுத பலத்தினோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

இஸ்ரவேலுடன் ஒப்பிடுகையில் 'கொசு'  ஹமாசின் தாக்குதலையே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாத இசுரேல் எப்படி ஈரானுடனோ அல்லது லெபனானின் ஹிஸ்புல்லாவுடனோ தாக்குப்பிடிக்க முடியும் ? 

இந்தப் பதினொரு நாள் சண்டையில் இஸ்ரவேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை எள்ளளவும் இஸ்ரேலால் தடுக்கமுடியவில்லை. பதிலாக இஸ்ரேல் காசாவிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடங்களை எல்லாம் தரைமட்டமாக்குகிறது. 

எங்கள் மீது கைவைத்தால் உங்களைக் கற்காலத்துக்கு அனுப்பிவிடுவேன் என்றா இஸ்ரவேல் கூறுகிறது ? 

""ISIS ஐ உருவாக்கி மத்திய கிழக்கை துண்டு துண்டாக மீண்டுமொருமுறை உடைக்க முனைந்த இஸ்ரவேல் + அமெரிக்க திட்டம் இறுதியில் இஸ்ரவேல் அமெரிக்கா இரண்டிற்கும் பாதகமாகவே  முடிந்திருக்கிறது""

 

 

இந்தப் பதினொரு நாள் யுத்தம் உண்மையில் இஸ்ரவெலின் பலவீனத்தைப் புடம்போட்டுக் காட்டிவிட்டது. 

இஸ்ரவேல் தன்னைச் சூழவும் தன்னுள்ளேயும் எதிரிகளை (ஈரான், சிரியா, லெபனானின் கிஸ்புல்லா மற்றும் இஸ்ரவேலினுள் உள்ள அரபிக்கள்) வைத்துக் கொண்டு எப்படி அமைதியாக வாழ முடியும் ? 

 

பல கருத்துகளுடன் உடன்படுகிறேன். இஸ்ரேலின் அணுஆயுதம், அதைத் தாங்கிச் செல்ல அவர்களிடம் இருக்கும் ஜெரிக்கோ ஏவுகணைகள் என்பன எதிரிகள் எல்லை மீறாமல் வைத்திருக்கிறது.

ஆனால், இஸ்ரேல் இந்த முறை செய்தது படு முட்டாள்தனமானது: வெறுமனே ஏவுகணைப் பாதுகாப்பை பலப்படுத்தி விட்டு இருந்திருக்கலாம். இவ்வளவு குழந்தைகளைக் கொன்று விட்டார்கள். தப்பியவர்கள் இனி இரண்டு தலைமுறைக்கு இஸ்ரேலை மன்னிக்கப் போவதில்லை. ஹமாசை அரவணைப்போரின் வீதம் அதிகரிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பல கருத்துகளுடன் உடன்படுகிறேன். இஸ்ரேலின் அணுஆயுதம், அதைத் தாங்கிச் செல்ல அவர்களிடம் இருக்கும் ஜெரிக்கோ ஏவுகணைகள் என்பன எதிரிகள் எல்லை மீறாமல் வைத்திருக்கிறது.

ஆனால், இஸ்ரேல் இந்த முறை செய்தது படு முட்டாள்தனமானது: வெறுமனே ஏவுகணைப் பாதுகாப்பை பலப்படுத்தி விட்டு இருந்திருக்கலாம். இவ்வளவு குழந்தைகளைக் கொன்று விட்டார்கள். தப்பியவர்கள் இனி இரண்டு தலைமுறைக்கு இஸ்ரேலை மன்னிக்கப் போவதில்லை. ஹமாசை அரவணைப்போரின் வீதம் அதிகரிக்கும். 

இஸ்ரவேலின் மிகப் பெரிய பலவீனம் சனத்தொகைப் பெருக்கம்/வளர்ச்சி வீகிதம் (ஒப்பீட்டு அளவில் முசிலிம்களுடன்) மிகக் குறைவானது.

NATO நாடுகளும் இதே பிரச்சனையை எதிர் கொள்கிறன. அதன் எதிரொலியாகத்தான் NATO சனத்தொகைப் பெருக்கம் கூடிய நாடுகளை உடைத்து சிறு சிறு துண்டுகளாக்க முனைகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டேன் மாட்டேன் என்ற இஸ்ரேல் அமைதி காக்க வந்திருக்கிறது. களநிலை சாதகமாக இல்லை என்பதையே சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வேலியிலை.... போற ஓணானை, வேட்டிக்குள்ளை விட்ட மாதிரி ஆயிடும். 😁

நமக்கு.. இரண்டும் வேண்டாம். 

இதை ஒரு நல்ல அறிவுரையாக எடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.