Jump to content

துறைமுக நகர் சட்டமூலம் மீதான விவாதத்தில் ஒலித்த தமிழர் தரப்பு குரல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்- திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துறைமுக நகர் சட்டமூலம் மீதான விவாதத்தில் ஒலித்த தமிழர் தரப்பு குரல் -
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்-
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்மக்களிற்கு சிறிதளவேனும் தன்னாட்சி வழங்குவதற்கான இடைக்கால ஏற்பாட்டைக்கூட குறுகியஇனவாத நோக்கில் எதிர்த்தவர்கள்தான் இன்று நாட்டின் இறைமையை சமரசத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.

தமிழ் மக்கள் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு எம்மை அழிக்கக்கூடத் துணிந்தீர்கள் .

அதற்கு எம்மினத்தின் மீது இனவழிப்புச் செய்வதனையே உங்கள் தெரிவாக எடுத்தீர்கள் . 

இவ்வாறு நாடாளுமன்றத்தில் துறைமுகநகர சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டுஉரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.  

அவரது முழுமையான உரையின் தமிழாக்கம் :

இங்கே இருக்கின்ற 
பெரும்பாலான எதிர்கட்சி உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை அணுகியதை போலன்றி, நாம் பிறிதொரு  கோணத்திலேயே  இதனை பார்க்க விரும்புகின்றோம்.

 ஒரு சிறியநாடாகவுள்ள இலங்கை சர்வதேச அளவிலான பொருண்மியப் போட்டிகளை வினைத்திறனுடன் எதிர்கொள்ள வேண்டுமேயானால் புதிய செயற்திறனுள்ள வழிமுறைகளைக் கண்டறிவதுபற்றிச்  சிந்திக்க வேண்டிள்ளது என்பது புரிந்துகொள்ளக்கூடியது.

குறிப்பாக, கொரோணா பெருந்தொற்று காரணமாக உலகளவில் பொருண்மிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறநிலையில், பொருளாதார்த்தை வினைத்திறனுடன் தக்கவைத்துகொள்வதற்கு  இலங்கை அதிகளவில் செயற்படவேண்டியுள்ளது என்பதும்  புரிந்து கொள்ளக்கூடியதே.

அந்தவகையில் பார்க்கிறபோது,
உண்மையில் நியாயமான நோக்கங்களுக்காக சிறப்பு பொருண்மிய வலயங்களை அல்லது வேறெந்த  பெயரில் அழைக்கப்பட்டாலும் அத்தகைய  முயற்சிகளை மேற்கொள்வதுபற்றிச் சிந்திப்பது தவறானது அல்ல .
அல்லது இத்தகைய புதிய அணுகுமுறைகளை கையாள்வதற்கும், அதற்கான செயற்படு வெளியினை உருவாக்குவதற்கும், அரசியலமைப்பில் கூட மாற்றங்களைக் கொண்டு வருவதனையோ அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டிய சட்ட மூலங்களைக் கொண்டுவருவதனையோ,  ஏன், ஒப்பங்கோடல் முறையிலான பொது வாக்கெடுப்புக்குச் செல்வதனையோ  நாம் தவறெனக் கூறமுடியாது.

ஏனெனில், உண்மையில் இந்த தீவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பானது எழுபத்திமூன்று வருடங்கள் பழமையானது. அதில்கூட இதுவரை நீங்கள் 20 தடவைகள் திருத்தத்தை செய்திருக்கிறீர்கள். அரசியலமைப்பில் நீங்கள் இருபது முறை திருத்தங்களைச் செய்துள்ளீர்கள்.  ஆனால், நடைமுறையில் இன்னமும் பிரச்சனை அதிகரித்துத்தான் செல்கிறது. நாட்டிற்குள் பிளவுகள் அதிகரித்தவண்ணம்தான்  இருக்கின்றன. இனங்களுக்கிடையில் பிளவுகள் அதிகரித்து எதிரெதிர் துருவ நிலைக்கு செல்கின்றன.
உண்மையில் இந்த அரசியலமைப்பானது, செயற்பாட்டுக்கு உதவாத, ஒரு செயலலிழந்த அரசிலமைப்பாக மாறிவிட்டது.   வெறுமனே உணர்ச்சிகளின் அடிப்படையிலே அல்லது இனவாதத்தின் அடிப்படையிலேயே இந்த அரசியலமைப்பை நீங்கள் இன்னமும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர, உண்மையில் இது ஒரு செயலிழந்த பயனற்ற அரசியலமைப்பாகும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.

இப்படியான ஒரு உணர்ச்சிமைய அரசியலமைப்பு மூலம் அதிகாரத்தை
மத்தியில் குவித்து வைப்பதில் எதுவித அர்த்தமுமில்லை. 

அந்த வாதத்தின் அடிப்படையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை நேரடியாக ஊக்குவிக்கும் வகையில்,  புதிய தனி அலகாக துறை முக நகரத்தை உருவாக்குவது,  தொழில் வாய்ப்புகள்- தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பொருண்மிய மேம்பாட்டினை ஏற்படுத்துவதற்கு அதனை பரிசீலிப்பது போன்றவை, தவறான அணுகுமுறை எனக் கூறமுடியாது. இவ்விடயங்களில் நாட்டின் ஏனைய பகுதிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் அதன் அவசியத்தை உணரக்கூடியதாக இருக்கிறது. 

ஆனால், நாங்கள் இத்துறைமுக சட்டமூலத்தை எதிர்க்கிறோம்.

பொருண்மிய மேம்பாட்டை ஏற்படுத்துவதுதான் இங்கு முதன்மையான நோக்கமாக  இருப்பின், அக்குறிக்கோளில் எதுவித தவறும் இல்லை. உண்மையில் அப்படி இருப்பின் அதை நாம் எதிர்க்கவும் தேவையில்லை.

ஆனால், நாம் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதற்கான காரணம் வேறு.

இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையானது, செயலிழந்து போன - குறிப்பாக, இந்த நவீன காலத்தில் காலாவதியான ஒரு கோட்பாடு என்பதை எமது அரசியல் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது .

நாட்டின் 'இறைமை 'என அரசாங்கமும், ஏன் - எதிர்க்கட்சியும் வரையறுக்கின்ற விடயத்தையும் நாம் ஏற்கவில்லை.

துரதிர்ஷ்டவசமாக பிரதான எதிர்கட்சி கூட ' இறைமை' என நீங்கள் வரையறுக்கின்ற விடயத்தில் அரசாங்கத்தையே விஞ்சுகிறபடி பேசிவருகிறது. 
இறைமை எனும் பெயரில் நீங்கள் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பது உண்மையில் காலாவதியாகிவிட்ட ஒரு கருதுகோள்.

உலகபொருளாதார விடயத்தில் ஒரு தரப்பாக இருக்க விரும்பும் நீஙகள், உள்நாட்டில் இவ்வாறு நடந்துகொள்ளமுடியாது. இவ்விடயம் தொடர்பாக புதிதாகச் சிந்திக்க வேண்டும்.  இவ்வரசியல் யாப்பு தொடர்பாக புதிதாகச்சிந்திக்க வேண்டும்.

இந்த நவீன யுகத்திற்கு ஏற்றவிதத்தில் அரசியலமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த எத்தனிப்பதனை நாங்கள் வரவேற்போம்.
இச்சட்டமூலம் கொண்டுவருவது தொடர்பாக அரசாங்கம் வெளியிலே உத்தியோகபூர்வமான முறையில் குறிப்பிடுகின்ற விடயங்களுக்காக நாங்கள் இச்சட்டமூலத்தை எதிர்க்கவில்லை என்பதனை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
நாம் இதனை எதிர்ப்பது வேறு ஒரு கோணத்திலேயே.

உண்மை என்னவென்றால், இன்றைய உலகில்,  எவரும் எதனையும் தமக்கு இலாபமின்றி செய்வது கிடையாது . இது தான் யதார்த்தம் .

முன்னைய மகிந்த இராஜபக்சவின் அரசாங்கத்தினைப்போலவே இந்த அரசாங்கமும்,  நீண்டகாலமாக இங்கே நிலவிவரும் புவிசார் அரசியல் சமநிலையை சவாலுக்குட்படுத்தி குழப்புவதை தமது தெரிவாக கொண்டிருக்கும் முக்கிய  தரப்பாக இங்கே  இருந்துவருகிறது. 
மகிந்த இராஜபக்ச அரசாங்கம் போலவே இன்றைய கோத்தாபாய இராஜபக்ச அரசாங்கமும் மிக வெளிபடையாகவே சீனாவின் பக்கம் சாய்ந்ததாகவே செயற்பட்டுவருகிறது. 

உண்மையில் இந்த நாட்டின் பொருண்மியத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நியாயமான நல்ல திட்டங்களை கூட,
இப்படியாக சீனாவின் தேவைகளுக்காகவும் சீனாவை திருதிப்படுத்துவதற்காவும் வழங்கி,
இந்த நாட்டின் அமைவிடம் காரணமாக கிடைத்த புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை கூட விட்டுக்கொடுக்கின்ற அளவுக்கு, இந்த அரசு மிக வெளிப்படையான சீன சார்பு நிலையை எடுத்து இருக்கிறது .

அதைத்தான் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விளைகிறோம்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக்காலத்திலும் ஒரு புவிசார் அரசியல் ( அமெரிக்க எதிர் சோவியத் ) போட்டியொன்று நிலவியிருந்தது . அதன்போது, ஜே ஆர் ஜெயவர்த்ன அமெரிக்க சார்பு நிலைப்பாடு எடுத்திருந்தார் . அந்த நேரத்தில் நிலவிய பூகோள அரசியல் போட்டியில், சிறிலங்கா மென்மேலும் அமெரிக்க சார்பு நிலைக்கு செல்லாது தடுப்பதற்கான ஒரு உத்தியாக, எமது அண்டை சக்தியான ( சோவியத் சார்பு ) இந்தியா,  தமக்கான பிடிமானமாக, தமிழர்களது ஆயுத போராட்டதையும் ஆதரித்திருந்தது . அது தான் உண்மையில் அப்போதைய யதார்த்தம் .

அப்போதைய பனிப்போர் காலத்தில், இலங்கையானது அமெரிக்க சார்பாக சென்றுவிடாமல் தடுப்பதற்கு இந்த பிராந்திய வல்லரசானது வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தது. அதனால் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை இந்தியா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியது. அதுவே உண்மை நிலவரம்.

ஆனால், இன்று இப்பிராந்தியத்தில் காணப்படும் வலுச்சமநிலையை சவாலுக்குட்படுத்தி தன்பக்கத்திற்கு திருப்ப முயலும் ஒரு தரப்பை, இந்த பிராந்திய வல்லரசின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தும் ஒருதரப்பை இந்த நாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறீர்கள்.
அதை தான் நாம் எதிர்க்கிறோம்.
உண்மையில்
புவிசார் அரசியலை மையப்படுத்தி நீங்கள் ஆடிவருகின்ற நடவடிக்கைகளால் இந்த தீவில் வேறு எவரையும் விட,
தமிழர் தேசமே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
எமது தேசம் மீண்டும் மீண்டும் இப்படியான ஒரு பாதிப்பை எதிர்கொள்வதை நாம் விரும்பவில்லை. அதனால் தான் எமது அரசியல் கட்சி இந்த சட்டமூலத்தை எதிர்க்கிறது.

இன்னுமொரு முக்கி யமான துரதிஷ்டவசமான ஒரு விடயத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .
அது தான் இனவாதம்.
அது தான் வகுப்புவாதம்.
அது தான் ஒரு துரதிர்ஷ்டவசமாக, இந்த அவையிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் இதனையே விரும்புகிறார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தை உச்சநிலையில் இருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நிலப்பரப்பை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது, மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடரும் வகையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பற்றிய யோசனை முன்வகைக்கப்பட்டது. 
அப்போதைய அரசாங்கம் சமஷ்டி முறையைக் கொண்டுவருவது பற்றிச்  சிந்திப்பதாக உத்தியோகபூர்வமான முறையில் அறிவித்திருந்தது.
இத்தகைய புறச்சூழலிற்தான் விடுதலைப்புலிகள் இவ்வாலோசனையினை முன்வைத்திருந்தனர்.

ஆனால், அதனை நீங்கள் நிராகரித்திருந்தீர்கள். 
அதை ஒரு இடைக்கால ஏற்பாடாக கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராற்று அதை நிராகரித்திருந்தீர்கள்.

தமிழ் மக்கள் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிதளவேனும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு எம்மை அழிக்கக்கூடத் துணிந்தீர்கள் .

அதற்கு எம்மினத்தின் மீது இனவழிப்புச் செய்வதனை உங்கள் தெரிவாக எடுத்தீர்கள் . 
ஆனால், 
இன்றைக்கு வேறு தேவைகளுக்காக அதுபோன்ற ஒரு அலகினை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் எதுவித வெட்கமோ தயக்கமோ காணப்படவில்லை.

புவிசார் அரசியலில் போட்டித்தரப்புகளில் ஒரு தரப்பினர் மேலாதிக்கம் பெறுவதற்கு வழிவகை செய்யும்வகையில் இதனை மேற்கொள்கிறீர்கள். 
(அன்று தமிழர்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக எதிர்த்த நீங்கள், இன்று வேறு நபர்களின் தேவைகளுக்காக இதை ஆதரிக்கிறீர்கள். )

இதுதான் இந்த அவையின் இனவாதம். இதன்காரணமாகவே நாங்கள்இந்தச் 
சட்டமூலத்தை எதிர்க்கிறோம். இன்று இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த முரண்நிலையை இந்த அவலமான நிலமையை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்வார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தழுவல், நழுவல் இல்லாமல் யதார்த்தத்தை கூறியுள்ளார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.