Jump to content

ஆறுதலாக பிறகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவுக்கு வந்த பின்புதான் சொந்தமாக தொலைபேசி வைத்திருக்க கூடிய நிலை வந்தது.அந்த கால கட்டத்தில் பட்டன் அழுத்தி  இலக்கங்களை தெறிவு செய்யும் தொழில் நுட்பம் கொண்ட தொலை பேசிதான் பிரபலம் .வீட்டின் வரவேற்பறையில் ஒரு தொலைபேசியை தொலைபேசி நிறுவன ஊழியர்கள் இணைத்து விட்டு சென்றார்கள்.அத்துடன் இரண்டு மகாபாரத புத்தகத்தையும் இலவசமாக தந்துவிட்டு சென்றார்கள்.ஆர்வக் கோளாறு காரணமாக புத்தகத்தை உடனடியாக திறந்து பார்த்தேன் ,ஒரு புத்தகம் தொலைபேசி பாவனையாளர்களின்  பெயர்களும் இலக்கங்களும் ,மற்றது வியாபார ஸ்தாபனங்களின் இலக்கங்களும் பெயர்களுமாக இருந்தது.தொலைபேசி வைக்கும் மேசையாக அந்த புத்தகத்தை பாவிக்கலாம் என்ற யோசனை இந்த புத்திஜீவிக்கு வரவே அதை அமுல் படுத்திவிட்டு மனைவியின் பாராட்டுக்காக காத்திருந்தேன் .

"எப்படி என்ட ஐடியா" தொலை பேசி இருந்த இடத்தை கண்ணால் காட்டினேன்

"....நேற்று சப்பட்டையின்ட கடையில் வாங்கின டெலிபோன் மேசையை பூட்டி போட்டு இதில வையுங்கோவன்"

 "இதில வைச்சாலும் வடிவாக தானே இருக்கு?,அதை ரிட்டேன் பண்ணி போட்டு காசை எடுப்போம்"

"ஐயோ இன்னும் ஊங்களுக்கு சீப் புத்தி விட்டு போகுதில்லை,10 டொலர் தானே"

" நாட்டு காசுக்கு 500 ரூபா?எவ்வளவு செய்யலாம் "

"நம்ம நாட்டு கணக்கு பார்த்து கொண்டிருந்தியளோ இந்த நாட்டில வாழ முடியாது....விசர் கதையைவிட்டிட்டு அலுவலை பாருங்கோ"

இப்படி மனிசி 25 வருசத்துக்கு முதல் திட்டினது இப்பவும் நினைவிலிருக்கு அதற்கு பிறகு இன்றுவரை நான் நாட்டுகணக்கு பார்க்கிறதில்லை ....

வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சில சமயம் தொலைபேசி அலரும் செய்த வேலையை அரைகுறையில் விட்டிட்டு ஓடி வந்து எடுக்கும் பொழுது மறுமுனையில் தொடர்பை எடுத்தவர்கள் துண்டித்து கொண்டது தெரியவரும் . சில சமயங்களில் நேரம் கெட்ட நேரங்களில் அதாவது நடு நிசியில் வெளிநாடுகளிலிருந்து அழைப்புக்கள் வரும் கட்டிலால் எழும்பி போய் எடுக்க சோம்பலாக இருக்கும் அதனால் இருவரும் தூக்கம் போல நடித்து அந்த தொலைபேசி தொல்லையை தட்டிகழித்த சம்பவங்களும் உண்டு. இரண்டாம் தடவை ,மூன்றாம் தடவையும் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் போய் எடுப்பேன்

நானும் கொட்டாவி விட்ட படியே பேசுவேன் "‍ஹலோ ஹ ‍ஹ லொ லொ"

மறு முனையில் பேசுபவர்கள் "பதட்டத்துடனே என்ன நித்திரையே இப்ப எத்தனை மணி உங்க" என்பார்கள்

"இரவு 1 மணி,உங்க எத்தனை ம ம ணி"

"எங்களுக்கு பகல் ஒரு மணி சரியா 12 மணித்தியாலம் வித்தியாசம் , சரி சரி நீங்கள் படுங்கோ சனிக்கிழமை எடுக்கிறன்"

போனை வைத்துவிட்டு போய் படுக்கும் பொழுது

"யாரப்பா போன் எடுத்தது இந்த நேரத்தில"

"வேற யார் உம்மட மாமி தான் ,அவவுக்கு பொழுது போகுதில்லை போல எங்கன்ட நித்திரையை குழப்பி கொண்டு"

புறு புறுத்த படியே உறங்கிவி டுவேன்.

அடுத்த நாள் எழும்பியவுடன் மனிசியிட்ட சொன்னேன் கட்டிலுக்கு பக்கத்தில இருக்கிற சைட் டெபிலில் ஒரு போனை  வைப்போம் அப்ப அழைப்பு  வந்த‌வுடனே எடுக்க முடியும் என்றேன்.

மனிசியும் சம்மதம் தெரிவிக்க பழைய போன் ஒன்றையும், கெபிலும் ,அடப்பட்டர் எல்லாம் வாங்கி நம்மட தொழில் நுட்ப திறனை பாவித்து பாவனைக்கு உகந்ததாக மாற்றி விட்டேன் .

தொலை பேசி வேலை செய்கின்றதா பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு வெள்ளைக்கு போன் அடிச்சு என்ட வீட்டுக்கு அழைப்பு எடு என்றேன் அவனும் எடுத்தான்  இரண்டு தொலைபேசியும் வீர் என்று அலர தொடங்கிவிட்டது.

வெள்ளைக்கு நன்றி தெரிவித்து போனை வைத்தபின்பு வொலுயுமை குறைக்கும் வழியை கண்டுபிடித்து குறைத்து விட்டேன்

. தொல்லை கொடுப்பவை வசதியாக அருகில் இருந்தமையால் நாங்களும் நேரம் காலம் தெரியாமல் அவர்களுக்கு எடுக்க அவர்களும் எங்களுக்கு எடுக்க தொலைபேசி இல‌க்கம் சொந்தம் பந்தம் மட்டுமன்றி ,நண்பர்கள்   ,ஊரில் தெரிந்தவர்கள் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் என போய் சேர்ந்துவிட்டது .

இரண்டும் மாதம் அமர்களமாக மச்சான்,மாமன்,ஒன்றவிட்ட மாமா  மச்சான் என ஒரே பாசப்பிணைப்பில் இருந்தோம்.ஒரு கட்டத்தில் எல்லாம் கதைத்து முடிந்து கதைப்பதற்கு வேறு விடயங்களின்றி  என்ன சாப்பாடு சாப்பிட்டிங்கள் இன்று என கேட்கும் அளவுக்கு போயிருந்தது .

இரண்டுமாதத்தின் பின்பு தபால் பெட்டியில் மிகவும் மொத்தமான ஓர் கடிதவுறை இருந்தது. உடைத்து பார்த்தேன் 858 டொலர் சொச்சத்துக்கு தொலைபேசி கொம்பேனி பில் அனுப்பியிருந்தான் .திகைத்து விட்டேன் குறிப்பிட்ட காலத்தினுள் பணத்தை செலுத்தாவிடின் தண்டப்பணம் கட்ட வேண்டும் என வேறு குறிப்பிட்டிருந்தது. 

 பில்லை வைத்து ஆராச்சி செய்ய தொடங்கினேன் ..யார் யாருக்கு எடுத்திருக்கிறோம் என்னுடைய சொந்தங்கள் எத்தனை ,மனைவியின் சொந்தங்கள் எத்தனை யார் அதிக நேரம் கதைத்தது இப்படி ஆராச்சி செய்து மெல்லமாக மனிசியின் மேல் குற்றசாட்டை போட்டேன்

"உம்மட ஆட்களுடன் நீர் கதைச்ச நேரம் அதிகம்"

"என்ன ? நீங்கள் தானே சிநேகிதப்பெடியங்களுடன் அலட்டி கொண்டிருக்கிறனீங்கள் "

"பார் இந்த நம்பர் உன்ட மாமியின்ட, அரை மணித்தியாலம் கதைத்திருக்கிறீர் 150 டொலர் வந்திருக்கு"

"800 லொலருக்கு ஊரில எவ்வளவு செய்திருக்கலாம்"

"சும்மா புறுடா விடாதையுங்கோ எச்சில் கையால காகம் விரட்ட மாட்டியள் அதுக்குள்ள வந்திட்டியள் ஊருக்கு பண்ணுவன் படுப்பன் என்று"

"சரி சரி இதுக்கு போய் சண்டயை பிடிக்காமல் காசு கட்டுகின்ற விடயத்தை பார்ப்போம்... இனிமேல் தேவையில்லாமல் எடுக்காமல் இருப்போம்"   

தொலைபேசி கொம்பனியிடம் பேசி தவனை முறையில் பணம் கட்டுவதாக சொல்ல அவர்களும் சம்மதிச்சு  மாதம் எவ்வளவு கட்டமுடியும் என கேட்டார்கள்,மாதம் 100 டொலர் என்று கூறவே அவர்கள் சம்மதித்தார்கள்.

தொலைபேசி இணைப்பை துண்டித்து கொள்ளலாமா என இருவரும் பேசி கொண்டிருக்கும் பொழுது எனது அம்மா கொழும்பில் இருக்கின்ற படியால் அவருடன் உரையாட தேவை என்ற காரணத்தால் அந்த முடிவை மாற்றி  கிழமையில் ஒரு நாள் மட்டும் வெளிநாட்டுக்கு எடுப்பதாக இருவரும் தொலைபேசிக்கு மேல் அடித்து உறுதி  மொழி எடுத்துகொண்டோம்.

வெளிநாட்டு அழைப்புக்கள் தொடர்ந்து வந்தன ஆனால் நாங்கள் தொடர்ந்து எடுக்கவில்லை .

" நாங்கள் தான் உங்களை தேடி அழைக்க வேணும் நீங்கள் எடுக்கமாட்டியள் என்ன"

என குற்றசாட்டுக்கள் வர தொடங்கின .வேலைப் பளு காரணமாக எடுக்க முடியவில்லை,குழந்தைகளை பார்க்க வேணும் அது இது என சாட்டுக்களை சொல்ல அவர்களும் தொடர்ந்து அழைப்பதை நிறுத்தி விட்டார்கள்

நண்பனிடம் நடந்த விசயத்தை சொல்ல 

"உனக்கு விசரா என்ன மண்டை கழன்று போச்சே, நான் 50 சத குற்றியோட இரண்டு மணித்தியால்ம் கனடா ,இங்கிலாந்து எல்லாம் கதைக்கிறனான்  நாளைக்கு என்னோட வா கூட்டிக்கொண்டு போறன்"

" ஏங்கேயடா இருக்கு அந்த கொமினிக்கேசன் சென்றர் "

"உன்ட வீட்டுக்கு பக்கத்தில தான்"

"என்ட வீட்டுக்கு பக்கத்திலயா?இவ்வளவு நாளும் என்ட கண்னில படவில்லையே"

"நாளை இரவு பத்து மணிக்கு ரெடியா இரு நான் வந்து கூட்டிக்கொண்டு போறன்"

"இரவு 10 மணிக்கே ?,அடுத்த நாள் வேலையடா"

"வேலையா ? 50 சத கொல் முக்கியாமா?'

" சரி , நாளைக்கு வா"

அடுத்த நாள் சொன்னபடியே நேரத்திற்கு வந்தான்.

"ரெடியா போக "

"இரு வாரன் கார் திறப்பை எடுத்துகொண்டு"

"உதுல இருக்கிற சென்ரருக்கு உனக்கு கார்,காரோட பிறந்து வளர்ந்தவர் தானே....வா"

"சரி சரி வாரன்"

வெளியே வந்தவுடன் வீட்டுக்கு அருகிலிருந்த டெலிபோன் பூத்துக்குள்ள போனான்

"டேய் இது சென்ரரே பூத் அல்லோ"

"சும்மா சத்தம் போடாத சனம் வரமுதல் உள்ள வா"

உள்ளே சென்றவுடன் அதன் உரிமையாளன் போன்று பொக்கற்றிலிருந்த 50 குற்றியை எடுத்தான் ரஜனிஸ்டைலில் ரிசிவரை எடுத்து காதில் வைத்தான்

நான் கண்னால் சைகை காட்டியவுடன் நம்பரை அடி என்றான்.டெலிபோனில் திருகுதாளங்கள் செய்து கொண்டிருந்தான்

கிளிக் என்ற சத்தம் வந்தவுடன்  அவசரம் அவசரமாக கண்ணைகாட்டினான் நானும் நம்பர்களை  சூழட்டினேன்.

மறு முனையில் நண்பன்

"ஹலோ யார்"

"நான்டா அவுஸ்ரேலியாவிலிருந்து..."

"டேய் என்னடா இந்த நடுச்சாமத்தில எடுக்கிறாய் வைச்சுப்போட்டு நாளைக்கு விடிய எடுடா"என்றான்

"சரி மச்சான் வைக்கிறேன்"ரிசிவரை வைக்க பக்கத்தில நின்ற நம்ம நண்பன் ரிசர்வர் புடுங்கி எடுத்தான்

"டேய் எவ்வளவு கஸ்டப்பட்டு எடுத்தனான் நீ என்னடா என்றால் கட் பண்ணுகிறா"

"அவன் நித்திரையடா,வைக்கசொல்லுறான்"

"இந்த நம்பரை சுழட்டு நான் லண்டனுக்கு கதைச்சு பார்க்கிறேன்"

நானும் அவன் சொல்படி செய்தேன் .அவன்

ஹலோ என்று சிரித்தபடியே ரிசர்வை காதினுள் வைத்தான்.

நான் வெளியே எட்டிப்பார்த்தேன் கையில் ஐம்பது சத குற்றியுடன் ஐந்தாறு வந்தேறுகுடிகள் வரிசையாக நின்றார்கள்.

"மச்சான் வெளியில் ஆட்கள் நிற்கினம் போவோமா"

"நீ போடா வீட்டை நான் இன்னும் ஒரு அரை ம்ணித்தியாலம் கதைச்சு போட்டு வாரன்"

என்று ரிசைவரின் பேசும்பகுதியை கையால் பொத்தியபடியே சொன்னான்..

"என்னப்பா நேற்று டெலிபோனில் கணநேரம் கதைச்சனீங்கள் போல இருக்கு எவ்வளவு காசு வந்தது"

"நான் ஒருசதமும் செலவளிக்கவில்லை ,அவன் நித்திரையில் இருந்தான் ஒன்றும் கதைக்கவில்லை...ஆனால் என்னோட வந்தவன் 50 சத குற்றியை போட்டு அரைமணித்தியாலத்துக்கு மேல் லண்டனுக்கு கதைச்சவன்"

"அப்ப என்னையும் நாளைக்கு கூட்டிக்கொண்டு போங்கோ நாளைக்கு மாமியோடா கனடாக்கு கதைக்க"

"உந்த கள்ள வேலை செய்து கதைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ,உமக்கு தேவை என்றால் அவனை கூட்டிக்கொண்டு போய் மாமியோட எடுத்து கதையும்"

"அவனோடா நான் எப்படி போறது விசர் கதை கதைக்கிறீயள்"

"பின்ன பேசாமல் இரும்"

இரண்டு வருடங்கள் கழித்து கையடக்க தொலைபேசி அறிமுகமானது மெல்ல மெல்ல எல்லொரும் வாங்க தொடங்கிச்சினம் அதை பார்க்க எனக்கும்ஆசை வந்துவிட்டது.

வீட்டுக்கு ஒர் கையடக்க தொலைபேசி வாங்க கூடியதாக இருந்தது. இன்று போல் வீட்டில் வாழும் ஒருத்தருக்கு ஒன்று என்ற காலம் அல்ல அது..

நில தொலைபேசி,கையடக்க தொலைபேசி இரண்டையும் பராமரிப்பதற்கு செலவு அதிமாக இருந்தது.

கொஞ்ச காலம் மற்றைய நாடுகளில் வாழும் உறவுகள் ,நண்பர்களின் தொடர்பு குறைந்து விட்டது.தூரத்து உறவுகள் நண்பர்களின் பாசமா அல்லது பணமா என்ற கேள்வி எழுந்தது.பதிலை மனம் சொன்னது பணம் தான்டா இதில் எண்ண சந்தேகம் விசரா ?....

சில தொலைபேசி நிறுவனங்கள் விளம்பர படுத்தினார்கள் மலிவு விலையில் சில நாடுகளுக்கு தொடர்பு கொள்ளமுடியுமென்று ஆனால் நாங்கள் இணைந்து கொள்ளவில்லை..ஒரு தடவை  பட்ட அனுபவம் எம்மை பயப்படுத்தியது.

அரிசி வாங்க சிறிலங்கா ஸ்பைஸ் கடைக்கு போனேன் .அங்கு விளம்பரப்படுத்தியிருந்தார்கள் பத்து டொலருக்கு 2 மணித்தியாலம் பேசலாம் கனடா,அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளுக்கு ...

"அண்ணே என்ன இது புது டிலா இருக்கு நீங்களே இணைப்பு கொடுக்கிறினீங்கள்,"

"இல்லைடா தம்பி இப்ப புதுசா இவங்கள் கார்ட் கண்டுபிடிச்சிருக்கிறாங்கள் ...இதை  சுரண்டிபோட்டு நம்பரை

அடிச்சு போட்டு விரும்பின நாட்டு நம்பரை அடி ,இந்தா கொண்டு போய் அடிச்சு பார்"

அரிசியையும் கார்ட்டையும் வாங்கி கொண்டு வீட்டை போனேன்.

"இஞ்சாரும் இப்ப எந்த நாட்டுக்கு டெலிபோன் எடுக்கலாம் "

"ஏன்னப்பா தேவையில்லாம் அடிச்சு காசை வீணாக்கிறீயள் ஒரு நிமிசத்துக்கு 35 சதம் எடுக்கிறாங்கள் கதைக்க தொடங்கினால் நீங்கள் கதைச்சு கொண்டேயிருப்பியள்"

 

"சிவத்தாரின்ட கடையில் ஒரு கார்ட் புதுசா வந்திருக்கு இரண்டு மணித்தியாலம் கனடா,ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு கதைக்கலாமாம், இந்த நேரத்தில் எந்த நாட்டுக்கு கதைக்க முடியுமென்று பாரும்"

"கனடாவுக்கு சரியா இருக்கும் மாமியோட கதைப்போம் கொண்டாங்கோ கார்ட்டை"

கார்டை கொடுத்தேன் டெலிபோனுக்கு அருகிலிருந்து  10 சத குற்றியால் சுரண்டி

அதிலிருந்த அறிவுத்தலுக்கு ஏற்ப பதிவுசெய்து ,மாமியாருக்கு எடுத்தாள்

"‍ஹலோ மாமியா "

"ஒம் நீங்கள் "

" மாமி நான் சுதா அவுஸ்ரேலியாவிலிருந்து என்னை மறந்து போனீங்களே"

" என்னடி இன்று அதிசயமா எடுத்திருக்கிறாய் ,மழை வரப்போகுது"

"இல்லை மாமி தெரியும்தானே வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ,வேலைக்கு போகவேணும், வீட்டு வேலை ,சமையல் பிள்ளைகளை படிபிக்க வேண்டும் அதுதான் நேரம் கிடைக்கிறதில்லை ...இன்றைக்கு கொஞ்சநேரம் கிடைச்சது அது உங்களுக்கு எடுத்தனான்"

" ஏன்டி உன்ட மனுசன் உதவி செய்யிறதில்லையே வீட்டு வேலைகளுக்கு"

" ம்ம்ம்ம் .சரியான யாழ்ப்பாணத்தான் அவர் அசைய மாட்டார்"

"என்ட மனுசனும் யாழ்ப்பாணத்தான் தான் ஆனால் நான் அவரை சொல்லி அரைவாசி வேலை செய்து போடுவேன் "

பொல்லை கொடுத்து அடிவாங்கி கொண்டிருக்கிரேன் என நினைத்தபடி குளியலறைக்கு சென்றேன்.

சுடுதண்ணி பைப்பை திறந்துவிட்டு அதில் சுடுதண்ணி வரும் வரை வெளியே பேசுவதை ஒட்டு கேட்க முயற்சி செய்தேன் ஒன்றும் கேட்கவில்லை .

குளித்து முடித்து வெளியே வந்தேன்

"ஒம் மாமி ,சரி மாமி நான் ஆறுதலாக பிறகு எடுக்கிறன் வைக்கடே பாய்ய்ய்"

"இவ்வளவு நேரமும் அவசரப்பட்டே கதச்சனீர்"

"கி கி கி "

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெலிபோன் ஒரு தொல்லை.உழைப்பையே திண்டுடம்.

அமெரிக்காவில் பெரிய கம்பனிகளுக்கு 1000-5000-10000 டெலர் பெறுமதியான காட்டுகள் கொடுத்து வைத்திருப்பார்கள்.
கம்பனியில் இருந்தே நம்பர் கசிந்துவிடும்.1-2 டெலர் கொடுத்து அந்த நம்பரை வாங்கி நாங்க கதைப்போம்.
அதைக் கடடை அடிக்கப் போகிறோம் என்று சொல்லுவோம்.

Link to comment
Share on other sites

50 சத குத்தி போட்டு நானும் கதைச்சிருக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தொலைபேசி வரலாறை சொல்லப்போனால் பொழுது விடிஞ்சிடும்......!

நல்ல நகைச்சுவையாக இருக்கின்றது கதை......நன்றி புத்ஸ் .....!  👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

"டேய் இது சென்ரரே பூத் அல்லோ"

"சும்மா சத்தம் போடாத சனம் வரமுதல் உள்ள வா"

உள்ளே சென்றவுடன் அதன் உரிமையாளன் போன்று பொக்கற்றிலிருந்த 50 குற்றியை எடுத்தான் ரஜனிஸ்டைலில் ரிசிவரை எடுத்து காதில் வைத்தான்

நான் கண்னால் சைகை காட்டியவுடன் நம்பரை அடி என்றான்.டெலிபோனில் திருகுதாளங்கள் செய்து கொண்டிருந்தான்

கிளிக் என்ற சத்தம் வந்தவுடன்  அவசரம் அவசரமாக கண்ணைகாட்டினான் நானும் நம்பர்களை  சூழட்டினேன்.

மறு முனையில் நண்பன்

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

இதில மகேசேன் பூத்தில் குடும்பமே நடத்தியவன்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கிங்ஸ்பேரி ரோட்டில ஒரு சமர் நாள் - அண்ணை ஒருவர் சாரத்தோட போன் பூத்துக்குள்ள கதிரை போட்டு இருந்து பேசியதை அம்மாவான என்ர கண்ணால கண்டனான்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

அந்தக் காலத்திலை  சிகரெட் மிசினுக்கை அஞ்சு மார்க் குத்தியை நூல் கட்டி இறக்கி....ஒட்டு மொத்த மிசினையே காலியாக்கினவங்கள் எல்லாம் இப்ப மற்றவன்  சிகரெட்டை இன்பமாய் இழுத்து விட மூக்கை பொத்துறாங்கள். 🤣

தன்னிவினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2021 at 14:43, ஈழப்பிரியன் said:

ரெலிபோன் ஒரு தொல்லை.உழைப்பையே திண்டுடம்.

அமெரிக்காவில் பெரிய கம்பனிகளுக்கு 1000-5000-10000 டெலர் பெறுமதியான காட்டுகள் கொடுத்து வைத்திருப்பார்கள்.
கம்பனியில் இருந்தே நம்பர் கசிந்துவிடும்.1-2 டெலர் கொடுத்து அந்த நம்பரை வாங்கி நாங்க கதைப்போம்.
அதைக் கடடை அடிக்கப் போகிறோம் என்று சொல்லுவோம்.

நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...டெலிபோன் பில்லுக்கு செலவளித்த காசுக்கு ஒர் கார் வாங்கியிருக்கலாம்...

22 hours ago, sathiri said:

50 சத குத்தி போட்டு நானும் கதைச்சிருக்கிறேன் 

 

இது ஒர் சர்வதேச பிரச்சனை..நீண்ட நாட்களின் எனது பகிர்வுக்கு கருத்து இட்டமைக்கு நன்றி சாத்திரியார்

21 hours ago, suvy said:

உந்த தொலைபேசி வரலாறை சொல்லப்போனால் பொழுது விடிஞ்சிடும்......!

நல்ல நகைச்சுவையாக இருக்கின்றது கதை......நன்றி புத்ஸ் .....!  👌

நன்றி சுவி ...இதை வைச்சு இன்னும் இரண்டு கிறுக்கல் கிறுக்கலாம் என்று இருக்கிறேன்

20 hours ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் ஒரு D மார்க் குத்தியை  நூலில் கட்டி  ஒட்டியபடி 80  களிலேயே சொந்த பிசினஸ் செய்தவர்கள் பலர்😀

நன்றி வாத்தியார் தகவலுக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

இதில மகேசேன் பூத்தில் குடும்பமே நடத்தியவன்.😄

நன்றி சுவைப்பிரியன் வாசிப்புக்கும் கருத்துக்கும்

11 hours ago, goshan_che said:

லண்டன் கிங்ஸ்பேரி ரோட்டில ஒரு சமர் நாள் - அண்ணை ஒருவர் சாரத்தோட போன் பூத்துக்குள்ள கதிரை போட்டு இருந்து பேசியதை அம்மாவான என்ர கண்ணால கண்டனான்🤣

நன்றி சே..வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....ஒரு வருடம் தான் அந்த் பூத் இருந்தது பிறகு கொம்பனி அதை மாற்றிவிட்டது

9 hours ago, குமாரசாமி said:

அந்தக் காலத்திலை  சிகரெட் மிசினுக்கை அஞ்சு மார்க் குத்தியை நூல் கட்டி இறக்கி....ஒட்டு மொத்த மிசினையே காலியாக்கினவங்கள் எல்லாம் இப்ப மற்றவன்  சிகரெட்டை இன்பமாய் இழுத்து விட மூக்கை பொத்துறாங்கள். 🤣

தன்னிவினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். :cool:

நன்றி கு.சாமி ..வருகைக்கும் வாசிப்புக்கும்....கொம்னிகள் கண்டு பிடித்துவிடுவார்கள்... ஒருவருடம் தான் இப்படி சுத்துமாத்து செய்ய முடியும் பிறகு அவர்கள் வேறு தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க தொடங்கிவிடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில பிரிட்டிஷ் ரெலிகொம்மின் ஃபோன் பூத்துக்குள் (வேற அர்த்தமாக விளங்கினால் நான் பொறுப்பில்லை🙃) பத்து பென்ஸ் நூல்விட்டது, கோட் நம்பர் பாவிச்சு இன்ரநாசல் கோல் எடுத்தது என்று ஃபோன் கதைக்கிறதில் பல விஞ்ஞானங்கள் இருந்தன.

நாங்கள் சமறிக்காசு கட்டி நண்பர்களோடு இருந்த வீட்டில் ரெலிபோன் யுனிற்றை கணக்கிடும் மெசின் இருந்தது. பக்கத்தில கொப்பியும் இருந்தது! ரெலிபோன் கதைப்பவர்கள் ஆரம்பம், முடிவு, எத்தனை யுனிற் பாவித்து என்பதையெல்லாம் எழுதவேண்டும்! அந்த மெசின் geiger counter மாதிரி டக் டக்கெண்டு சத்தம்போட்டுத்தான் எண்ணும். ரேடியோஅக்ரிவை கண்டமாதிரி வேகமாக ஓடினால் யாரோ இலங்கை உறவினர்களிடம் அல்லது சிங்கப்பூர், தாய்லாந்து, அல்லது ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வெளிநாடு வர இடையில் நிற்பவர்களிடம் கதைக்கின்றார்கள் என்று புரியும்.😁

இப்பவும் பழைய நினைவுகளுக்காக இரண்டு கொப்பி வைச்சிருக்கிறன்😁

புத்தர் மாதிரி பெருந்தொகை பில்லை நாங்கள் கட்டவில்லை. ஆனால் நான் இலண்டன் வர முதல் வருஷம் ஒருத்தர் கனடாவுக்கு ஃபோன் எடுத்து வெறியில் ஒழுங்காக கட் பண்ணாமல் விட்டு 800 பவுண்ட்ஸுக்கு மேல் பில் கட்டியிருந்தார்!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடலடி Fiber Cables கேபிள் வயர் வந்திருக்கா விட்டால் இன்னும் மேல் உள்ள கதைகள் தொடர்கதையாக இருக்கும் . சட்டிலைட் மூலம் அப்போது தகவல்கள் கடத்தப்பட இங்கும் வான் உயர தொலைபேசி விலைகள் ஆனாலும் சாட்டிலைட் சூடாகி  வெடித்துப்போகும் அளவுக்கு நம்ம ஆட்களின் கண்டுபிடிப்புக்கள் இருக்கும் .

போனில் டைவேற் பண்ணும் வசதியில் கொழும்பு லாட்ஜ் நம்பரை போட்டு விட்டு வேறு ஒரு நம்பரில் இருந்து அழைப்பை மேற்கொள்ள லோக்கல் காசில் மீற்றர்  ஓடும் அங்கு கனெக்சன் கிடைத்தவுடன் அந்த டைவேட்ஸ் வசதியை கான்சல் பண்ணி விடுவார்கள் அதன்பின் பில் வராது ஆனால் அதேநேரம் முன்பு செய்தது போல் பலருக்கு கொழுவி விடுவார்கள் பின்பு என்ன அந்த பத்து பேரும்  போன் சூடாகி  காதை  சுடுமட்டும்  கதைத்து  கொண்டு எதோ ஒரு படத்தில் விடிய விடிய நாயகனும் நாயகியும் போன் கதைக்கும் பாட்டு போல் கதைகள் நிறைய இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளை... மீட்ட  வைத்த, புத்தனுக்கு நன்றி.   :)

1985´ம்  ஆண்டளவில்... 
இங்கு ஒருவருக்கு, ஊரில் இருந்து திருமணம் பேசி...
படங்கள், சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பின்,
இரு பக்க பெற்றோரும், அவருக்கு  வர இருக்கும்... 
எதிர்கால மனைவியுடன், கதைக்கலாம் என்று..
ஒரு, தொலை பேசி இலக்கத்தைத் கொடுத்து விட்டார்கள்.

இந்தப் பெடியன்... தனது வீட்டு தொலை பேசியில்,
அந்தப்  பெண்ணிடம்,  வாய் உழையாமல்....
என்ன, கதைத்தானோ.. தெரியாது?
அந்த மாத, தொலைபேசி கட்டணம்.. 8000 மார்க் வந்து விட்டது.
(அது... இப்போதைய, 8000  ஐரோவிற்கும் அதிகமான பெறுமதி)

இந்த விடயத்தை... அப்போதைய, உள்ளூர்  ஜேர்மன் பத்திரிகையில்...
ஒரு தொழிற்சாலை,  பாவிக்கும் அளவிற்கு... 
ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒருவர், 
தொலை பேசியை... வீட்டில் இருந்து பாவித்துள்ளார் என்று செய்தி வந்தது.

ரோசக்காரப் பெடியன், சேர்த்து வைத்த காசை... உடனே கட்டி விட்டாலும்,

இது, அநியாய காசு.. என்றே, எனக்கு தோன்றுகின்றது.  🤔      

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 02:59, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை தோழர்..👍

நன்றி புரட்சி

 

On 27/5/2021 at 05:52, கிருபன் said:

ஒருத்தர் கனடாவுக்கு ஃபோன் எடுத்து வெறியில் ஒழுங்காக கட் பண்ணாமல் விட்டு 800 பவுண்ட்ஸுக்கு மேல் பில் கட்டியிருந்தார்!!

 

அவருக்கு தேவை... வெறியில் இப்படியான செயல்களை செய்து தண்டப்பணம் கட்டுவதை வெறிகாரார் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது

நன்றி கிருபன்

On 27/5/2021 at 15:20, பெருமாள் said:

  கொண்டு எதோ ஒரு படத்தில் விடிய விடிய நாயகனும் நாயகியும் போன் கதைக்கும் பாட்டு போல் கதைகள் நிறைய இருக்கு .

நன்றி பெருமாள் ....அந்த விடிய விடிய உரையாடலில் "பிறகு என்ன" "வேற"போன்ற சொற்கள் அதிகமாக வந்திருக்கும்

 

On 29/5/2021 at 08:08, தமிழ் சிறி said:

பழைய நினைவுகளை... மீட்ட  வைத்த, புத்தனுக்கு நன்றி.   :)

1985´ம்  ஆண்டளவில்... 
இங்கு ஒருவருக்கு, ஊரில் இருந்து திருமணம் பேசி...
படங்கள், சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பின்,
இரு பக்க பெற்றோரும், அவருக்கு  வர இருக்கும்... 
எதிர்கால மனைவியுடன், கதைக்கலாம் என்று..
ஒரு, தொலை பேசி இலக்கத்தைத் கொடுத்து விட்டார்கள்.

இந்தப் பெடியன்... தனது வீட்டு தொலை பேசியில்,
அந்தப்  பெண்ணிடம்,  வாய் உழையாமல்....
என்ன, கதைத்தானோ.. தெரியாது?
அந்த மாத, தொலைபேசி கட்டணம்.. 8000 மார்க் வந்து விட்டது.
(அது... இப்போதைய, 8000  ஐரோவிற்கும் அதிகமான பெறுமதி)

 

நன்றி தமிழ்சிறி ...அந்த கால கட்டத்தில் தொலைபேசி கட்டணம் மிகவும் அதிகம் ஒரு நிமிடத்திற்கு ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, putthan said:

நன்றி பெருமாள் ....அந்த விடிய விடிய உரையாடலில் "பிறகு என்ன" "வேற"போன்ற சொற்கள் அதிகமாக வந்திருக்கும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.