Jump to content

சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்... கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்... கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்

சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்... கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.

இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், 'இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.
 

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/05/22185436/2664343/Tamil-cinema-gv-prakash-searching-music-person.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ந்த நாதஸ்வரம் பூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ்

கவர்ந்த நாதஸ்வரம் பூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ்

 

பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வீடுகள் முன்னால் நின்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
பதிவு: மே 29,  2021 00:31 AM
பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு வீடுகள் முன்னால் நின்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அவர் நாதஸ்வரம் வாசித்தது தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக பலரும் பதிவுகள் வெளியிட்டனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாசும் அந்த வீடியோவை பார்த்தார். உடனடியாக டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் திறமையானவர். துல்லியமாக நாதஸ்வரம் வாசிக்கிறார். இவரை தேடி கண்டுபிடித்தால் எனது பாடல் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்வேன்'' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவரது பெயர் நாராயணன் என்றும், ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், இதுதான் அவரது தொலைபேசி எண் என்றும் ஜி.வி.பிரகாசுக்கு தகவல் அனுப்பி வைத்தனர். உடனடியாக நாராயணனை தொடர்பு கொண்ட ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்து நெகிழ வைத்துள்ளார். ஏழ்மை நிலையில் இருக்கும் பூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பு கொடுத்த ஜி.வி.பிரகாசுக்கு வலைத்தளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/05/29003126/GV-Prakash-who-gave-the-opportunity-to-the-impressed.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.