Jump to content

ஒரே ஒரு வாட்ஸ்அப் வீடியோ மூலம் 12 டன் முலாம் பழம் விற்ற பெண்மணி... எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு வாட்ஸ்அப் வீடியோ மூலம் 12 டன் முலாம் பழம் விற்ற பெண்மணி... எப்படி?

நித்யா

 

`சமூக வலைதளங்களை சரியாகவும் சாமர்த்தியமாகவும் பயன்படுத்தினால் இப்படியும் பலன் அடையலாம்’ என நிரூபித்துக் காட்டி அசத்தியிருக்கின்றனர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் - நித்யா தம்பதியினர். பி.எஸ்ஸி அக்ரி படித்த கமலக்கண்ணன் சொந்தமாக பிசினஸ் செய்துவர, நித்யாவோ குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். குழந்தைகள், குடும்பம் என்றிருந்தாலும் நித்யாவுக்கு விவசாயத்தின் மீது பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. `சொந்தமாக இருக்கும் 2 ஏக்கர் நிலத்தில் ஏதாவது விவசாயம் செய்யலாமே!’ எனக் கணவரிடம் கேட்க, அவரும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

கோடைக்காலத்தை மனதில் வைத்து 2 ஏக்கரில் முலாம்பழத்தைப் பயிரிட்டிருக்கின்றனர். அறுவடை நெருங்கும் சமயத்தில் முழு ஊரடங்கு போடப்பட, விளைவித்த முலாம்பழத்தை விற்க வியாபாரிகள் பலரிடமும் பேசியிருக்கின்றனர். ஊரடங்கால் பழத்தை வாங்கி விற்க முடியவில்லை எனவும், முதலுக்கே கட்டுப்படியாகாத விலைக்கும் வியாபாரிகள் கேட்டிருக்கின்றனர். இதில் நொந்துபோன நித்யா வருத்தத்துடன் நிலைமையைச் சொல்லி, `ஒருகிலோ முலாம்பழத்தை ரூ.10-க்கு கொடுக்கிறேன். பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்’ என வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருக்கிறார். சோஷியல் மீடியாக்களில் அது சுழன்றடித்து வைரலாக, நான்கே நாள்களில் 12 டன் முலாம்பழத்தை விற்றுத் தீர்த்திருக்கின்றனர்.

நித்யாவுக்குச் சொந்தமான தோட்டம்
 
நித்யாவுக்குச் சொந்தமான தோட்டம்

எப்படி இது சாத்தியமானது என நித்யாவிடம் பேசினோம். ``நான் டீச்சர் ட்ரெயினிங் படிச்சிருந்தாலும், விவசாயம் மீது எனக்கு பெரிய ஆர்வம் இருக்கு. எங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்துல மாமனார் - மாமியார் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு வயசானதால கடந்த 2 வருஷமா நிலத்துல எந்த விவசாயமும் செய்யாம சும்மாவே போட்டு வச்சிருந்தோம். இந்த கொரோனா சமயத்துல சும்மா இருக்காம, வருமானத்துக்கு ஏதாவது வழி பண்ணுவோம்னு விவசாயம் செய்ய நினைச்சேன். என் வீட்டுக்காரர்கிட்ட விஷயத்தைச் சொன்னதும், `வெயில் காலம் வேற வரப்போகுது. முதல்ல குறுகிய காலப் பயிரான முலாம்பழத்தைப் போட்டுப் பாரு. போன வருஷமே கிலோ ரூ.20-க்கு மேல போனது’ன்னு அவருக்குத் தெரிஞ்ச ஐடியாக்களைக் கொடுத்தாரு. மல்ச்சிங் ஷீட், சொட்டு நீர்ப் பாசனம்னு போட்டு 2 ஏக்கர்ல முலாம்பழத்தைப் பயிரிட்டோம். அருமையா விளைஞ்சது. அறுவடைக்கு முன்னாடியே முழு ஊரடங்கு போட்டுட்டாங்க.

விளைஞ்ச பழத்தை எப்படியாவது வித்துடணும்னு வியாபாரிகள் பலரிடமும் பேசினோம். `போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்கு’, `பழத்தை வாங்கி விக்க முடியலை’, கிலோ ரூ.2-3 க்கு எடுத்துக்குறேன்’ என ஆளாளுக்கு ஒவ்வொன்னு சொன்னாங்க. பழம் நல்லா விளைஞ்சும் போட்ட அசலைக்கூட எடுக்க முடியாம போயிடுமோன்னு எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சி. அப்பதான் அந்த வீடியோ ஐடியா தோணுச்சு” என்றார்.

தொடர்ந்தவர், ``விநாயகா நகர்ங்கிற எங்களோட ஏரியாவுல உள்ள 50 குடும்ப ஆட்களும் வாட்ஸ் அப்ல ஒரு குரூப்பா இருக்கோம். அந்த குரூப்ல நம்மளோட நிலைமையைச் சொல்லி ஒரு வீடியோ எடுத்து போடுவோம். நம்ம ஏரியா ஆட்களும், அவங்களுக்குத் தெரிஞ்சவங்க வாங்குனாலும் இருக்கிற பழத்தை ஓரளவு வித்துடலாம்னு நினைச்சேன். கடைசியா எங்க ஏரியா குரூப்ல போட்ட அந்த வீடியோ, சோஷியல் மீடியாவுல பரவலா போய்ச் சேர்ந்து வைரலாகியிருக்கு. மே 13-ம் தேதி வீடியோ போட்டோம்.

முலாம்பழம்
 
முலாம்பழம்

அன்னைக்கு சாயங்காலத்துல இருந்தே பலரும் போன் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த காவலர் கோபால்தான் எங்களுக்கு முதல் கஸ்டமர். `நானும் ஒரு விவசாய குடும்பத்துல இருந்துதான் வந்துருக்கேன். விவசாயிங்களோட கஷ்டம் எனக்குத் தெரியும். ஒரு பெண்ணா இருந்து நீங்க இதைச் செஞ்சதுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி’ன்னு சொல்லி அவர் 200 கிலோ முலாம்பழத்தை வாங்கி தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்தாரு. ஆஸ்திரேலியாவுல இருந்து அருண்ங்கிறவரு, `பழமா வாங்கி உங்களுக்கு நான் உதவ முடியலை. உங்க அக்கவுண்டுக்கு ரூ.10,000 அனுப்பி வைக்கிறேன். அதுக்குண்டான பழத்தை உணவில்லாதவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் கொடுங்க’ன்னு சொன்னாரு. அந்தவகையில், சாலைகளில் இருந்த ஆதரவற்றோர், காவலர்கள் போன்றோருக்கு ஒரு டன் முலாம்பழத்தை கொடுத்தோம்.

தினமும் 500 கிலோ பழத்தை தோட்டத்துக்கே வந்து மக்கள் வாங்கிட்டுப் போனாங்க. கடந்த 5 நாள்ல மட்டும் 12 டன் பழத்தை வித்துட்டோம். இன்னும் 3 டன் பழம் நிலத்துல இருக்கு. அதையும் வித்துடுவோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.

நித்யாவின் கணவர் கமலக்கண்ணனோ, ``நானா இருந்தா கூட இப்படியொரு முயற்சியை எடுத்திருக்க மாட்டேன். பழத்தை விக்க முடியலைன்னு `இனி விவசாயமே செய்ய மாட்டேன்’னு என்னோட மனைவி உடைஞ்சு போயிட்டாங்க. அவங்க தோத்துடக் கூடாதுன்னு நான் பக்கபலமா இருந்தேன். ஏதோ எங்க ஏரியாவுல உள்ள ஆட்கள், சுற்றுவட்டாரத்துல இருந்து ஒருசிலர் வாங்குவாங்கன்னு வீடியோ போட்டோம்.

முலாம்பழம்
 
முலாம்பழம்

ஆனா, அந்த வீடியோ இந்தளவுக்கு ரீச் ஆகும்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலை. மக்களுடைய நேரடி ஆதரவு இருந்தா விவசாயிங்க எந்தக் கவலையுமில்லாம விவசாயம் செய்யலாம் என இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்துனுச்சு. தமிழக அரசாங்கம் இதுமாதிரி விவசாயிகளுக்கென ஒரு கால்செண்டர் வச்சு வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இணைப்புப் பாலமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு என்றைக்குமே நஷ்டம் ஏற்படாது. எங்களுடைய முதல் போக கூடுதலாகக் கிடைக்கும் பணத்தை கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

 

 

https://www.vikatan.com/news/agriculture/erode-woman-sold-12-tons-of-musk-melon-through-whatsapp-video-request

Link to comment
Share on other sites

வாழநினைத்தால் வாழலாம்,வழியா இல்லை பூமியில்.என்ன தலையை கொஞ்சம் பயன்படுத்த வேண்டும்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எண்ணம் அதனால் மிக நல்ல விற்பனை........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய விசயமே, யூடியூப் வாட்சப்ப வச்சு யாழில எவ்வளவு விற்பனை நடக்குது 🤣

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இதென்ன பெரிய விசயமே, யூடியூப் வாட்சப்ப வச்சு யாழில எவ்வளவு விற்பனை நடக்குது 🤣

 

goshan_che அண்ணை, please, அந்ந வியாபாரிகளை வரிசைபடுத்தினால் நாங்களும் தெரிந்துகொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Knowthyself said:

 

goshan_che அண்ணை, please, அந்ந வியாபாரிகளை வரிசைபடுத்தினால் நாங்களும் தெரிந்துகொள்ளலாம்

இன்னும் பின்னங்காலை எடுத்து உள்ள வைக்கேல்ல அதுகுள்ளயா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதென்ன பெரிய விசயமே, யூடியூப் வாட்சப்ப வச்சு யாழில எவ்வளவு விற்பனை நடக்குது 🤣

யாரோ சொன்னதை/ செய்ததை வைத்து தானே ஒவ்வொருத்தர் வியாபாரமும் ஓடுது.
ரொய்லட் பேப்பர் மற்றவன் கண்டுபிடித்தான் என்பதற்காக நாம் தவிர்ப்பது தகுமா? நியாயமா? 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.