Jump to content

உடான்ஸ் சாமியார் அருளுரைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூரி

உங்களுக்கு தெரியுமா?

பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு.

நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள்.

“பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது.

பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது.

ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார்.

அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என்றாகியது.

இதனால்தான் 87 இல் பேச்சுவார்த்தைக்கு கூட யாழ்பாணத்தில் இருந்து உடான்ஸ் சிங் அழைத்துப்போன சுத்த தமிழர் வம்சாவழியான பூரி என்ற அதிகாரியை இந்தியா அனுப்பியது.

ஆனால் இப்போது வட இந்தியர்கள் பூரியை தமது உணவு என உரிமை கொண்டாடுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது.

இது. தமிழ்சிரியண்ணையின்  சொந்த இடம். அவரைப்பிடித்து  சோதித்து பார்த்தலதான் உண்மை.  பொய்  தெரியும்  😜😜..அது  சரி  இப்பவும் உந்த விழா  நடைபெறுகிறதா?😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இது. தமிழ்சிரியண்ணையின்  சொந்த இடம். அவரைப்பிடித்து  சோதித்து பார்த்தலதான் உண்மை.  பொய்  தெரியும்  😜😜..அது  சரி  இப்பவும் உந்த விழா  நடைபெறுகிறதா?😂😂

தமிழ் சிறி அண்ண கந்தரோடையே? இல்லை புங்குடுதீவு எண்டு நினைக்கிறன்.

இந்த சடங்கு யாழில் ஒவ்வொரு இடங்களில் கொஞ்சம் மாறுபடும் என அறிகிறேன்.

உதாரணத்துக்கு வலிகாமம், தென்மராட்சி, தீவு பகுதிகளில் பூரிக்கட்டையை பாவிப்பது போல வடமராட்சியில் உலக்கையை பயன்படுத்துவார்களாம்🤣.

இந்த விழா இப்போதும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

எனது வீட்டுக்காரம்மா கொஞ்சம் பாரம்பரிய பிடிப்பு மிக்கவர் - அதனால் வருடாந்தம் என்றல்லாமல் வாரமொருமுறை வெகு விமரிசையாக கொண்டாடுவோம்😂.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

பூரி

உங்களுக்கு தெரியுமா?

பூரி எங்கட

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல்,

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான முன் உதாரணமாகி விட்டார்கள்.  

பூரி செய்யும் முறையை பற்றி,
சென்ற கிழமைதான், நிகே.. ஒரு பதிவு போட்டிருந்தார்.

நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள்.

“பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது.

பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது.

ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார்.

அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என்றாகியது.

இதனால்தான் 87 இல் பேச்சுவார்த்தைக்கு கூட யாழ்பாணத்தில் இருந்து உடான்ஸ் சிங் அழைத்துப்போன சுத்த தமிழர் வம்சாவழியான பூரி என்ற அதிகாரியை இந்தியா அனுப்பியது.

ஆனால் இப்போது வட இந்தியர்கள் பூரியை தமது உணவு என உரிமை கொண்டாடுகிறார்கள். 

Home Cooked Idiyappam | PM Idiyappam Suppliers, Medavakkam, Chennai

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல், 😂

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான, முன் உதாரணமாகி விட்டார்கள்.  🤣

பூரி செய்யும் முறையை பற்றி,
சென்ற கிழமைதான், நிகே.. ஒரு பதிவு போட்டிருந்தார்.:)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

Home Cooked Idiyappam | PM Idiyappam Suppliers, Medavakkam, Chennai

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல், 😂

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான, முன் உதாரணமாகி விட்டார்கள்.  🤣

பூரி செய்யும் முறையை பற்றி,
சென்ற கிழமைதான், நிகே.. ஒரு பதிவு போட்டிருந்தார்.:)

 

 

அண்ணை இதபற்றி அடுத்த அருளுரையை தயார்படுத்த யுடியூப் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறன் - நீங்கள் இப்படி பதில் போடுறியள். 

விரைவில் எதிர்பாருங்கள் இத்தாலி போன தமிழ் தாலி🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2. நூடுல்ஸ்

உங்களுக்கு தெரியுமா?

நூடுல்ஸ் என்பது எங்கட யாழ்பாணத்து உணவு என்பது. 

மார்கோ போலோ தனது பயணக்குறிப்பில், பின்வருமாறு கூறுகின்றார்.

நான் மொங்கோலிய பேரரசன் குப்பிளேகான் அரண்மனையில் வசித்த போது நூடுல்ஸ் எனும் உணவை உண்டேன். இதன் வரலாறு அலாதியானது.

உண்மையில் குப்பிளேகான் ஒரு மொங்கோலியன் அல்ல. அவர் மொங்கோலியரை விட காலத்தால் முந்திய, கல் மண் தோன்றமுதல் தோன்றிய யாழ் தமிழர் மரபில் வந்தவர். 

அவரது குடும்ப பெயர் பிள்ளை என்பதாகும். அவரது மூதாதை ஒருவருக்கு முதுகு கோணலாக ஒரு பிள்ளை பிறந்ததால். கூன்-பிள்ளை-காரன் என அழைக்கப்பட்டு ஈற்றில் மொங்கோலிய உதடுகளில் அது குப்பிளேகான் என ஆகி விட்டது.

அவர்கள் யாழ்பாணத்தில் இருந்து கொண்டு வந்த அரிசி உணவே நூல்-உள். தமிழ் மொழியில் நூல் என்பது பட்டு வார்களை குறிக்கும். அரிசியில் வார் வாராக செய்யப்படுவதால் நூல்-உள். 

இதையே தட்டையா செய்து அதை இடியப்பம் என்றும் அழைப்பார்களாம்.

இந்த நூல்-உள் சீன/மொங்கோலிய உச்சரிப்பில் நூடுல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

பார்தீர்களா எங்கட யாழ்பாண உணவு நூடில்ஸ். இதை தான் 4000 வருசமா சாப்பிடுறாதா கதை விடுறான் சப்பயன். நாம் 400000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்பதை அறியாமல்.

நாங்களும் அவங்கட ரெஸ்டூரண்ட் போய் சாப்பிடுறம். காலகொடுமை🤦‍♂️.

அனைவருக்கும் இதை வாட்சப், யுடியூப் போன்ற அதி நம்பகமான ஆராய்சி அமைப்புகள் மூலம் பரப்புங்கள்.

அப்படி செய்தால் 3 நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.

அஜாக்கிரதையாக செய்தியை பகிராமல் விட்ட ஒருவருக்கு அவர் நூடுல்சில் இருந்த கறுப்பு பூஞ்சை வயிற்று போக்கை கொடுத்து உயிரை பறித்து விட்டது.

 

Link to comment
Share on other sites

18 hours ago, goshan_che said:

2. நூடுல்ஸ்

உங்களுக்கு தெரியுமா?

நூடுல்ஸ் என்பது எங்கட யாழ்பாணத்து உணவு என்பது. 

மார்கோ போலோ தனது பயணக்குறிப்பில், பின்வருமாறு கூறுகின்றார்.

நான் மொங்கோலிய பேரரசன் குப்பிளேகான் அரண்மனையில் வசித்த போது நூடுல்ஸ் எனும் உணவை உண்டேன். இதன் வரலாறு அலாதியானது.

உண்மையில் குப்பிளேகான் ஒரு மொங்கோலியன் அல்ல. அவர் மொங்கோலியரை விட காலத்தால் முந்திய, கல் மண் தோன்றமுதல் தோன்றிய யாழ் தமிழர் மரபில் வந்தவர். 

அவரது குடும்ப பெயர் பிள்ளை என்பதாகும். அவரது மூதாதை ஒருவருக்கு முதுகு கோணலாக ஒரு பிள்ளை பிறந்ததால். கூன்-பிள்ளை-காரன் என அழைக்கப்பட்டு ஈற்றில் மொங்கோலிய உதடுகளில் அது குப்பிளேகான் என ஆகி விட்டது.

அவர்கள் யாழ்பாணத்தில் இருந்து கொண்டு வந்த அரிசி உணவே நூல்-உள். தமிழ் மொழியில் நூல் என்பது பட்டு வார்களை குறிக்கும். அரிசியில் வார் வாராக செய்யப்படுவதால் நூல்-உள். 

இதையே தட்டையா செய்து அதை இடியப்பம் என்றும் அழைப்பார்களாம்.

இந்த நூல்-உள் சீன/மொங்கோலிய உச்சரிப்பில் நூடுல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

பார்தீர்களா எங்கட யாழ்பாண உணவு நூடில்ஸ். இதை தான் 4000 வருசமா சாப்பிடுறாதா கதை விடுறான் சப்பயன். நாம் 400000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்பதை அறியாமல்.

நாங்களும் அவங்கட ரெஸ்டூரண்ட் போய் சாப்பிடுறம். காலகொடுமை🤦‍♂️.

அனைவருக்கும் இதை வாட்சப், யுடியூப் போன்ற அதி நம்பகமான ஆராய்சி அமைப்புகள் மூலம் பரப்புங்கள்.

அப்படி செய்தால் 3 நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.

அஜாக்கிரதையாக செய்தியை பகிராமல் விட்ட ஒருவருக்கு அவர் நூடுல்சில் இருந்த கறுப்பு பூஞ்சை வயிற்று போக்கை கொடுத்து உயிரை பறித்து விட்டது.

 

 

தல 
நீங்கள் பாரிசாலன், தமிழ் பொக்கிஷம் விக்கி, ஹீலர் பாஸ்கர்  ஆகியோருக்கு சமாந்திரமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அவர்களை விட அதிக வாசகர்களையும், அதிக வருவாயையும் பெறலாம். அவ்வளவு திறமை உங்களிடம் உள்ளது. 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

தல 
நீங்கள் பாரிசாலன், தமிழ் பொக்கிஷம் விக்கி, ஹீலர் பாஸ்கர்  ஆகியோருக்கு சமாந்திரமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அவர்களை விட அதிக வாசகர்களையும், அதிக வருவாயையும் பெறலாம். அவ்வளவு திறமை உங்களிடம் உள்ளது. 😜

 

எமது மக்களும் வாட்சப்பும் யுடியூப்பும் இருக்கும் வரை - குறைவில்லா லைக்சும் வருமானமும் வரும் எண்டுறியள்?🤣.

என்னுடை மானசீக குரு எங்கள் சிவப்பு தொப்பி அப்துல் மஜீத் மெளவிதான்.

Link to comment
Share on other sites

21 hours ago, goshan_che said:

தமிழ் சிறி அண்ண கந்தரோடையே? இல்லை புங்குடுதீவு எண்டு நினைக்கிறன்.

😂.  

கந்தர்மடம் என்பதை கந்தரோடையாக மாற்றிய goshan_che அவர்களை தமிழ் சிறி நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும் 🤭😂

19 hours ago, தமிழ் சிறி said:

Home Cooked Idiyappam | PM Idiyappam Suppliers, Medavakkam, Chennai

எங்களது பாரம்பரிய உணவான பூரியை... 
எமது அம்மா, ஆச்சிமார் தினமும் செய்யாமல், 😂

இத்தாலிய உணவான இடியப்பத்தை.... பிழிந்து தந்து, 
எமக்கு தவறான, முன் உதாரணமாகி விட்டார்கள்.  🤣.

 

இடியப்பம் இத்தாலி உணவா? உதெப்பத்தைய கண்டு பிடிப்பு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, shanthy said:

கந்தர்மடம் என்பதை கந்தரோடையாக மாற்றிய goshan_che அவர்களை தமிழ் சிறி நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும் 🤭😂

 

தவறான புரிதல் அக்கா.

கந்தரோடையில் இருக்கும் ஈமத்தாளிகளில்தான் மண்டை ஓட்டில் பூரி தளும்புகள் அவதானிக்க பட்டுள்ளன.

நீங்கள் சொல்லும் கந்தர்மட ஈமத்தாளிகளில் பெரும்பாலனவற்றில் மண்டையோடு இல்லை 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, shanthy said:

 

இடியப்பம் இத்தாலி உணவா? உதெப்பத்தைய கண்டு பிடிப்பு🤣

இது தமிழ் சிறி அண்ணாவின் தவறான புரிதல்.

3. இத்தாலி போன தமிழ் தாலி

நான் மேலே சொன்ன வரலாற்றின் பிரகாரம் - கூன் பிள்ளை காரனின் அரண்மனையை விட்டு நீங்கிய மார்கோபோலோ பலவருட பயணத்தின் பின் கொன்ஸ்டாண்டி நோபிள் வழியாக தனது சொந்த ஊரான இத்தாலியின் வெனிசை அடைகிறார்.

அங்கே அவர் இத்தாலியர்களுக்கு நூல்-உள் ஐயும் இடியப்பத்தையும் அறிமுகம் செய்கிறார்.

அந்த காலத்தில் வெனிசில் ஒரு பிராந்திய வழக்கு இத்தாலிய மொழியே பேசப்பட்டது.

அந்த மொழியில் இ உச்சரிப்பும், டி உச்சரிப்பும் இல்லை. இந்த உச்சரிப்புக்கு பதிலாக பி உச்சரிப்பை மாற்றீடு செய்தனர்.

ஆகவே அவர்கள் இடியப்பத்தை பிசியப்பம் என்று அழைத்தனர்.

தவிரவும் வெனிசில் பனை மட்டை தட்டுபாடு நிலவியதால் அவர்களால் எம்மை போல் இடியப்பத்தை நீராவியில் பூப்போல அவிக்க முடியவில்லை.

ஆகவே அதை இன்னும் தட்டையாக வெதுப்பியில் அவிக்க தொடங்கினார்கள். கூடவே கோதுமையையும் சேர்த்து அவித்தார்கள் (இப்போ நான் அவிப்பதை போல).

காலப்போகில் பிசியப்பம் மருவி பிசப்பம் ஆகி பின் இத்தாலிய மொழி சீர்திருத்தத்தின் போது பீசா என மாற்றப்பட்டது. 

பின்னர் இந்த பீசா என்கிற பிசியப்பம் இத்தாலிய குடியேறிகளுடன் அமெரிக்கா போய் - இப்போ நாங்கள் இதை ஏதோ அந்நிய உணவு போல் பெரும் பணம் கொடுத்து பீட்சா ஹட்டில் போய் உண்கிறோம்.

உண்மையில் பீசா என்பது எங்கட சுத்த யாழ்பாணத்து உணவு.

நீங்கள் வந்தேறி ஜீன் துளியும் கலக்காத ஒரிஜினல் தமிழர் என்றால் உதை உடனே பகிருங்கள்.

இல்லை எண்டால் கரும்பூஞ்சை….தெரியும்தானே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஊத்தப்பம் சொன்ன என்ன வா..?

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

தவறான புரிதல் அக்கா.

கந்தரோடையில் இருக்கும் ஈமத்தாளிகளில்தான் மண்டை ஓட்டில் பூரி தளும்புகள் அவதானிக்க பட்டுள்ளன.

நீங்கள் சொல்லும் கந்தர்மட ஈமத்தாளிகளில் பெரும்பாலனவற்றில் மண்டையோடு இல்லை 🤣.

கந்தரோடையே  ஈமத்தாளிகள் சரி. தமிழ் சிறி கந்தரோடை இல்லை. கந்தர்மடத்து தமிழ்க்குடி மகன் அதைத்தான் சொன்னேன் goshan_che 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

கந்தரோடையே  ஈமத்தாளிகள் சரி. தமிழ் சிறி கந்தரோடை இல்லை. கந்தர்மடத்து தமிழ்க்குடி மகன் அதைத்தான் சொன்னேன் goshan_che 🤣

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே.

Link to comment
Share on other sites

8 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே.

பாத்தியளோ ஒரு வரலாற்று நாயகன் ஊரை சொல்ல பஞ்சிப்பட்டிட்டியள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, சுவைப்பிரியன் said:
1 hour ago, shanthy said:

கந்தரோடையே  ஈமத்தாளிகள் சரி. தமிழ் சிறி கந்தரோடை இல்லை. கந்தர்மடத்து தமிழ்க்குடி மகன் அதைத்தான் சொன்னேன் goshan_che 🤣

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே

நானும் தான்.(நேரமும் குறைவு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

அப்ப ஊத்தப்பம் சொன்ன என்ன வா..?

அதை ஊத்தப்பம் என அழைப்பது தெலுங்கு வந்தேறிகளின் திராவிட ஷதி.

அதன் உண்மையான பெயர் ஊர் அப்பம். 

இப்போதான் யூடியூப் என்று ஒரு ஆராய்சி தளத்தில் இதை பற்றி பி எச் டி ரேஞ்சில் படிக்கிறேன். 

விரைவில் எதிர்பாருங்கள் ஊர் அப்பம். பறிக்கப் பட்ட தமிழனின் அப்பம்.

33 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை நானும் கவனித்தேன். பஞ்சியில் விட்டுவிட்னே.

 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் தான்.(நேரமும் குறைவு)

 

23 minutes ago, shanthy said:

பாத்தியளோ ஒரு வரலாற்று நாயகன் ஊரை சொல்ல பஞ்சிப்பட்டிட்டியள். 🤣

நான் வேற நேற்று அண்ணை புங்குடுதீவு எண்டு ஒரு பெரிய உருட்டை போட்டுட்டன். 

கந்தமடத்து இளவரசன்  வந்து பதில் சொல்லட்டும்😀.

Link to comment
Share on other sites

வணக்கம் கோஷான்,

மீள் வருகைக்கு நன்றி.

நீங்கள் இந்த திரியை நகைச்சுவைப் பகுதியில் இணைத்து இருப்பினும், இது வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே திறக்கப்பட்ட திரியாக தெரியவில்லை. கள உறவு ஒருவரை அவரது கருத்துகளை நையாண்டி பண்ணுவதற்காக திறக்கப்பட்ட திரியோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஊர் பெயரை / நபர்களின் பெயரை / உணவின் பெயரை ஒரு ஆவணமாக கருதி அதனூடாக தகுந்த ஆதாரங்கள் ஆய்வுகள் எதுவும் இன்றி வரலாற்றை எழுத / அறிய முற்படும் தவறான போக்கை நீங்கள் நையாண்டி செய்ய முனைந்தாலும் இன்னொரு வளத்தில் அது தனிப்பட ஒருவரை தாக்குவது போன்றும் தோன்றுகின்றது. இத் திரி அவ்வாறுதான் எனில் ஆரோக்கியமான கருத்தாடல்களை இது உருவாக்காமல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் ஆபத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன. 

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்களின் பின்னர் நிர்வாகத்தினருக்கு புரிந்துள்ளது.🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

வணக்கம் கோஷான்,

மீள் வருகைக்கு நன்றி.

நீங்கள் இந்த திரியை நகைச்சுவைப் பகுதியில் இணைத்து இருப்பினும், இது வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே திறக்கப்பட்ட திரியாக தெரியவில்லை. கள உறவு ஒருவரை அவரது கருத்துகளை நையாண்டி பண்ணுவதற்காக திறக்கப்பட்ட திரியோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஊர் பெயரை / நபர்களின் பெயரை / உணவின் பெயரை ஒரு ஆவணமாக கருதி அதனூடாக தகுந்த ஆதாரங்கள் ஆய்வுகள் எதுவும் இன்றி வரலாற்றை எழுத / அறிய முற்படும் தவறான போக்கை நீங்கள் நையாண்டி செய்ய முனைந்தாலும் இன்னொரு வளத்தில் அது தனிப்பட ஒருவரை தாக்குவது போன்றும் தோன்றுகின்றது. இத் திரி அவ்வாறுதான் எனில் ஆரோக்கியமான கருத்தாடல்களை இது உருவாக்காமல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் ஆபத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன. 

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி
 

நிழலி,

நிச்சயம் உங்கள் கரிசனையை கவனத்தில் எடுக்கிறேன்.

எனது அணுகுமுறை பற்றி யாழில் உங்களை விட அதிகம் தெரிந்தவர் இருக்க முடியாது. ஒரு விடயத்தை முகத்துக்கு நேரே சொல்லிவிடும் தன்மை என்னுடையது.

நக்கலை கூட உங்களை நக்கல் அடிக்கிறேன் என சொல்லிவிட்டு செய்வதுதான் வழக்கம். 

முன்னொரு முறை செல்வநாயகம் தெலுங்கர் என ஒரு திரி திறந்தது நினைவிருக்கலாம். அதை நான் சிரிப்பு பகுதியில் திறக்கவில்லை (அதில் இதை விட பல நகைசுவைகள் நடந்தது வேறு). ஆனால் அந்த திரியிலும் அதற்கு சமாந்தரமான திரியிலும்  அதை என்ன காரணமாக திறந்தேன், யாரால் முன்வைக்க பட்ட எந்த தியரியை குறிவைக்கிறேன் என விபரமாக எழுதியே திறந்தேன்.

காரணம் அந்த தியரி எனது இனத்துக்கு படுபாதகத்தை விழைவிப்பதை உணர்ந்திருந்தேன்.

இந்த திரி அப்படியல்ல.

வெளிபடையாகவே எழுதுகிறேன். நீங்கள் நாதமுனியை சொல்வதாக இருந்தால் இது அவர் உட்பட யாரையும் குறி வைக்கும் திரி அல்ல. அவர் நானறிய “கறி” தமிழர் உணவு என்றார். நானும் ஓம் கறி எமது சொல்தான் அதை யாரும் பறிக்கவில்லை. பதற வேண்டியதில்லை என்றேன். 

அதே போல் இப்போ இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் பட்டீசை ஐரோப்பியர் தந்தார்கள் என்றார். நான் அதை மறுக்கவில்லை. நான் அதை தேடிபார்க்கவில்லை ஆனால் அப்படி இருக்க அதிகம் வாய்பிருக்கிறது ஆகவே அதை ஏற்று கொண்டே, பகிடியாக அப்போ இந்தோனேசியாவில் தண்ணீரை அரபிகள் அறிமுக படுத்தினரா? என்று ஒரு ரொம்ப “புளிச்ச” ஒரு ஜோக்கை அடித்து விட்டு நகர்ந்தேன்.

இவை தவிர நாதம் கடல் ஆமை நகர்வு, குமரி கண்டம் என பல கற்பனை வரலாற்று புனைவுகளை காவி வரும் போதெல்லாம் நேரம் மினெகெட்டு அந்த திரிகளிலேயே அவற்றை தர்க ரீதியாக மறுத்து எழுதியுள்ளேன். தனியே திரி திறக்கவில்லை.

இது அவரோடு மட்டும் அல்ல மருதர், கடஞ்சா, குசா அண்ணை இன்னும் பலரோடும் அடிகடி நடக்கும் விசயம்தான்.

இதே போல் நாதத்தின் சீமான் பற்றிய அணுகுமுறை மீதும் அது ஒரு hidden agenda வோடு நடக்கிறது என்ற சந்தேகம் கிட்டதட்ட என் மனதில் இப்போ உறுதியாகவே ஆகி விட்டது

இதையும் பலதடவை அவரிடம் நேரிலே கூறியுள்ளேன். 

இவைதான் நானும் நாதமும் முரண்படும் இடங்கள்.

ஆனால் இவை தவிர நாதம் உணவின் பெயர்களை வைத்து “ஆராய்சி” ஏதும் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை.

இந்த திரி வாட்சப், யூடியூப் எங்கினும் நிறைந்து கிடக்கும் click bait ஆய்வாளர்களை மனதில் வைத்தே எழுந்தது.

அப்படியான வீடியோக்களை யாழுக்கு காவி வருவபர்களில் ஒருவர் என்பதை தவிர நாதத்துக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

அவர் மட்டும் அல்ல பலரும் இப்படியான வீடியோக்களை இணைப்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் எல்லாரும் தம்மை குறிவைத்தே கோஷான் எழுதுகிறார் என எண்ணுகிறார்களோ தெரியாது.

இந்த பதிவுகளில் எதிலும் நாதம் தாக்கபட்டதாக ஒரு வரி கூட இல்லை.

தான் தாக்கபட்டதாக அவரோ அல்லது வேறு யாருமோ உணர்ந்தால் பிழை அவர்கள் பார்வையில் அன்றி என் எழுத்தில் இல்லை.

உதாரணமாக மேலே ஊத்தப்பத்தை தெலுங்கர்கள் திருடியது திராவிட ஷதி என எழுதினே. அது நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்தியை மனதில் வைத்து எழுதியது. ஏன்றால் அவர்தான் எதையும் திராவிட ஷதி என எழுந்தமான கூறுபவர்.

ஆனால் இதை வாசிக்கும் யாழின் நாம்தமிழர் ஆதரவாளர் அனைவரும் கோஷான் என்னைதான் குத்துறார் என்று நினைத்தால், நான் என்ன செய்ய முடியும்?

இவ்வளவற்றையும் எழுதிய பின்,

நான் நகைசுவையாக எழுதுவது வாசிப்பவர்கள் வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்பதனால் மட்டுமே.

தவறான புரிதலினாலே ஆயினும், ஒருவரை சங்கடபடுத்தி நானும் மற்றையவரும் சிரிப்பது மனித இயல்பாக எனக்கு படவில்லை.

ஆகவே வாசர்களோடு இன்னும் அதிக தூரம் பயணிக்கலாம் என நான் எண்ணி அழைத்து வந்த உடான்ஸ் சிங்கையும், கூன் பிள்ளை காரனையும், மார்கோபோலோவையும், பூரித்துவையும், நூல்-உள் ஐயும், பிசியப்பத்தையும் பரணில் ஏற கட்டி வைக்கும் முடிவை எடுக்கிறேன்.

ஏனென்றால் எழுதுவது என்றால் சுந்திரமாக எழுத வேண்டும். அவர் நோவாரோ, இவர் அழுவாரோ என்று பார்த்து பார்த்து எழுத முடியாது.

தமிழனின் ஊர் அப்பம் பறிபோன வரலாற்றை எழுதாமல் போவது கொஞ்சம் கவலைதான் 🤣. பரவாயில்லை.

🙏🏾

பிகு: வரவேற்பிற்கு நன்றி

 

32 minutes ago, MEERA said:

இரண்டு நாட்களின் பின்னர் நிர்வாகத்தினருக்கு புரிந்துள்ளது.🤪

தவறான புரிதல் மீரா. மேலே பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வணக்கம் கோஷான்,

மீள் வருகைக்கு நன்றி.

நீங்கள் இந்த திரியை நகைச்சுவைப் பகுதியில் இணைத்து இருப்பினும், இது வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே திறக்கப்பட்ட திரியாக தெரியவில்லை. கள உறவு ஒருவரை அவரது கருத்துகளை நையாண்டி பண்ணுவதற்காக திறக்கப்பட்ட திரியோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

ஊர் பெயரை / நபர்களின் பெயரை / உணவின் பெயரை ஒரு ஆவணமாக கருதி அதனூடாக தகுந்த ஆதாரங்கள் ஆய்வுகள் எதுவும் இன்றி வரலாற்றை எழுத / அறிய முற்படும் தவறான போக்கை நீங்கள் நையாண்டி செய்ய முனைந்தாலும் இன்னொரு வளத்தில் அது தனிப்பட ஒருவரை தாக்குவது போன்றும் தோன்றுகின்றது. இத் திரி அவ்வாறுதான் எனில் ஆரோக்கியமான கருத்தாடல்களை இது உருவாக்காமல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் ஆபத்தும் சந்தர்ப்பங்களும் உள்ளன. 

புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி
 

நன்றி நிழலி.

எனது பெயரை நேரடியாக குறிப்பிடுகிறார். 

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒருமுறை பாராளுமன்றத்தில் பேசினார். ஆசிரியராக இருந்த 
அவர், மாணவரிடம், மாட்டினை பற்றி எழுது என்றால், மாட்டினை கொண்டுபோய் மரத்தில் கட்டி விட்டு, மரத்தினை பற்றி எழுதின கதையாக இருக்குது, கவுரவ உறுப்பினர் கதை என்று.

நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்கள். அவரோ.... சீமான் அது, இது என்று உளறுகிறார்.

பத்து வருட காலம் இங்கே களமாடுகிறேன். ஒரே போதுமே எல்லை மீறுவதில்லை. இந்த மனிதருடன் விவாதித்த போது, எச்சரிக்கை புள்ளி பெற வேண்டிய நிலை வந்தது.

தனதுகையொப்பத்தின் கிழே, நையாண்டியை பெருமிதப்படுத்தும் மாண்பு கொண்ட களஉறவு. அதனால் அதனை விட முடியாமல் தவிக்கிறார். 

ஒருவர் கருத்துக்கு மறு கருத்து ஆதரத்துடனே வைக்கப்பட வேண்டுமே அன்றி, நையாண்டி கருத்து அல்ல. என்னை குறித்து எதுவும் எழுதட்டும், கவலை இல்லை.

அந்த நையாண்டிக்காக, தனி திரி திறந்து, தமிழர் உணவு கலாச்சாரத்தினை கேவலப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது என்பதே கவலை.

நீண்ட நாட்களுக்கு பின்னர் வருகிறார் என்றால், பழைய கறலுடன் வருவதை என்ன சொல்வது.

குறை ஒன்றும் இல்லை. இவர்களுடன் இனியும் குதியம் போட எனக்கு நேரம் தான் இல்லை. ஆகவே, கடந்து போகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நன்றி நிழலி.

எனது பெயரை நேரடியாக குறிப்பிடுகிறார். 

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஒருமுறை பாராளுமன்றத்தில் பேசினார். ஆசிரியராக இருந்த 
அவர், மாணவரிடம், மாட்டினை பற்றி எழுது என்றால், மாட்டினை கொண்டுபோய் மரத்தில் கட்டி விட்டு, மரத்தினை பற்றி எழுதின கதையாக இருக்குது, கவுரவ உறுப்பினர் கதை என்று.

நீங்கள் என்னவோ சொல்லுகிறீர்கள். அவரோ.... சீமான் அது, இது என்று உளறுகிறார்.

பத்து வருட காலம் இங்கே களமாடுகிறேன். ஒரே போதுமே எல்லை மீறுவதில்லை. இந்த மனிதருடன் விவாதித்த போது, எச்சரிக்கை புள்ளி பெற வேண்டிய நிலை வந்தது.

தனதுகையொப்பத்தின் கிழே, நையாண்டியை பெருமிதப்படுத்தும் மாண்பு கொண்ட களஉறவு. அதனால் அதனை விட முடியாமல் தவிக்கிறார். 

ஒருவர் கருத்துக்கு மறு கருத்து ஆதரத்துடனே வைக்கப்பட வேண்டுமே அன்றி, நையாண்டி கருத்து அல்ல. என்னை குறித்து எதுவும் எழுதட்டும், கவலை இல்லை.

அந்த நையாண்டிக்காக, தனி திரி திறந்து, தமிழர் உணவு கலாச்சாரத்தினை கேவலப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது என்பதே கவலை.

நீண்ட நாட்களுக்கு பின்னர் வருகிறார் என்றால், பழைய கறலுடன் வருவதை என்ன சொல்வது.

குறை ஒன்றும் இல்லை. இவர்களுடன் இனியும் குதியம் போட எனக்கு நேரம் தான் இல்லை. ஆகவே, கடந்து போகிறேன்.

வணக்கம் நாதம்,

நீங்கள் கடந்து போனாலும் குதித்து போனாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை.

ஊரில் உள்ளவன் செய்யும் நையாண்டி எல்லாம் என்னைதான் என்று மனபிரமையில் உழல்பவர்களுக்கா நான் பதில் எழுதவில்லை.

நிழலி கேட்டு கொண்டதற்கான பதிலே மேலே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர் ஆவியாதை பார்த்து நீராவி எந்திரத்தை கண்டுபிடித்தான் ஜரோப்பியன்.. நாங்க அதே ஆவியில புட்டு இடிஆப்பம் அவிக்கிரதை கண்டுபிடித்தோம்... மாவை குழைச்சு பிறகு அதை புட்டு புட்டு வைக்கிரதாலை புட்டு எண்டு பேர் வந்திருக்கும் போல.. ஆனால் இடியப்பம் தா புரியல.. நல்ல இடி இடிக்கிற நேரம் மனிசி மண்டைய உடைக்க யாராவதுமாவை அப்பி வச்சிருந்திருப்பாங்கள் போல.. அதை கண்டு புடிச்ச மனிசிக்காரி மாக்கட்டிய எடுத்து கோபத்தில நார் நாரா புழிஞ்சிருப்பாங்க போல.. அதான் பின்னாளில் இடிஅப்பம் ஆகி இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீர் ஆவியாதை பார்த்து நீராவி எந்திரத்தை கண்டுபிடித்தான் ஜரோப்பியன்.. நாங்க அதே ஆவியில புட்டு இடிஆப்பம் அவிக்கிரதை கண்டுபிடித்தோம்... மாவை குழைச்சு பிறகு அதை புட்டு புட்டு வைக்கிரதாலை புட்டு எண்டு பேர் வந்திருக்கும் போல.. ஆனால் இடியப்பம் தா புரியல.. நல்ல இடி இடிக்கிற நேரம் மனிசி மண்டைய உடைக்க யாராவதுமாவை அப்பி வச்சிருந்திருப்பாங்கள் போல.. அதை கண்டு புடிச்ச மனிசிக்காரி மாக்கட்டிய எடுத்து கோபத்தில நார் நாரா புழிஞ்சிருப்பாங்க போல.. அதான் பின்னாளில் இடிஅப்பம் ஆகி இருக்கும்..

இவர் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார் என்பதால்.....
அண்ணலுக்கு மேலைத்தேயவர்களின் உணவு முறைகள் தெரியவில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.