Jump to content

யாழ். நூலக எரிப்பு ஞாபகார்த்தமாக மெய்நிகர் நூலகம் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நூலக எரிப்பு ஞாபகார்த்தமாக மெய்நிகர் நூலகம் ஆரம்பம்

 
unnamed-6.jpg
 71 Views

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவாக மெய்நிகர் நூலகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகள், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து தொழில்சார் வல்லுநர்களாக இருக்கும் பிள்ளைகள் , புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார்கள்.

மே 30, 2021இல் திறக்கப்படவுள்ள இந்த மெய்நிகர் நூலகத்தை இணையவழியாக உலகத் தமிழர்கள் பார்ப்பதுடன், இளையோரின் இந்த முயற்சியை மேம்படுத்த, அடுத்த சந்ததிக்கு இதை எடுத்துச் செல்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர்.

இந்த மெய்நிகர் நூலகத்தில் ஆவணங்கள், தகவல்கள், புத்தகங்கள் யாவும் வரலாற்றின் உண்மைகளை வெளிக் கொண்டு வருபவையாக உள்ளன. இந் நூலகத்தில் தகவல், அறிவு, ஆராய்ச்சி போன்ற பல வகையான தகவல்களை அறிய முடியும். அத்துடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்த மெய்நிகர் நூலகம் அமைந்துள்ளது. இரு மொழிகளிலும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆவணங்களை திரட்டி வருகின்றனர்.

யாழ். நூலகத்தை பேணிக் காக்கும் விதமாக இந்த நூலகம் அமையவுள்ளதாக  அறியப்படுகின்றது. எமது அரசியல், வரலாறு, முன்னோர் போன்ற தகவல்களை இந்நூலகம் மூலம் எடுத்துச் சொல்வோம் என நூலக ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளும் முனைவர் விஜய் அசோகன் அவர்கள் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=50489

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2021 at 16:34, உடையார் said:

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவாக மெய்நிகர் நூலகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகள், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து தொழில்சார் வல்லுநர்களாக இருக்கும் பிள்ளைகள் , புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார்கள்.

காலாகாலத்துக்கும் தேவையானது.
 இதற்கு முயற்சி செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இணைப்புக்கு நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.