Jump to content

மிகப்பெரிய முட்டாள் யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

Muddaal.jpg

இரண்டாவதும், நாலாவதும்.... முட்டாள்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான்  இருந்த கொப்பை வெட்டுபவன்  தான் மிகப்பெரிய முட்டாள்.  

2 minutes ago, Kandiah57 said:

தான்  இருந்த கொப்பை வெட்டுபவன்  தான் மிகப்பெரிய முட்டாள்.  

நான் சொல்லமாட்டேன் நீங்களே கண்டுபிடியுங்கள் படத்தைப் பார்த்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

Muddaal.jpg

இந்தியா ......பஞ்ச்யண்ணை. சரியான. பதிலுக்கு. எதாயினும்  பரிசு. கொடுக்கலாம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

இந்தியா ......பஞ்ச்யண்ணை. சரியான. பதிலுக்கு. எதாயினும்  பரிசு. கொடுக்கலாம். 😜

உங்களுக்கு போட்பாஸ் ஒன்று வழங்கப்படுகிறது.

குடும்பத்துக்கும் தா என்று அடம் பிடிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு போட்பாஸ் ஒன்று வழங்கப்படுகிறது.

குடும்பத்துக்கும் தா என்று அடம் பிடிக்கக் கூடாது.

அண்ணை  பதில் சரியா?...USA இருந்து  எனக்கு பரிசா?  ஆ..ஆ நம்பவே முடியவில்லை. உந்தப் பரிசு எப்ப என் கையை வந்து சேரும்.  ?என்னெறால்  லீவு போட்டுவிட்டு. நிற்பதற்க்கு.  உந்தத் தபால்காரன். பரிசை வெளியில் வைத்துட்டு போய்விடுவன்.  வாறவன்...போறவன். எல்லாம்  எடுத்துப்போய்விடுவார்கள்  ஓம்...ஓம்.  இப்ப அடம் பிடிக்கவில்லை.  அடுத்த போட்டியில்  குடும்பததுக்கு கேட்கிறேன் ...😜😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரிய முட்டாள் தமிழ்தான் ......மற்றவர்கள் சொந்த நாடுகளின் பெயரோடு இருக்கிறார்கள்..... அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் மட்டுமல்ல தனக்கும்  குழி பறிப்பதையும் பார்த்துக்கொண்டு கையறு நிலையில் இருக்கிறார்.....சீனாவுக்கு ஆபத்தில்லை........!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில இருக்கிற மிகப் பெரிய பிழை இந்தியா கொப்பை/கிழையை வெட்டுவதாகக் காட்டியிருக்கு. இந்தியா தன்ர ரெண்டு கால்களுக்கும்/கவட்டுக்குள் வெட்டுவதாக போட்டிருக்க வேண்டும்.

ஆதலால் படம் கீறியவர் மீதுதான் பிழை.

😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Muddaal.jpg

 

படம் வரைந்தவர் புத்திசாலித்தனமாக கேட்டுள்ளார்..! 🤔

"ஏன்டாப்பா.. இவ்வளவு அனுபம்பெற்று வயசாகிப் போச்சே, இன்னமுமா பொடியனிடம் நம்பி உட்கார்ந்திருக்கே..? சுதாரித்திருக்க வேண்டாமா? அறுத்துவிடுறான், அனுபவி..!" 😜

 

Link to comment
Share on other sites

10 hours ago, Kandiah57 said:

தான்  இருந்த கொப்பை வெட்டுபவன்  தான் மிகப்பெரிய முட்டாள்.  

 

2 hours ago, Kandiah57 said:

அண்ணை  பதில் சரியா?...USA இருந்து  எனக்கு பரிசா?  ஆ..ஆ நம்பவே முடியவில்லை. உந்தப் பரிசு எப்ப என் கையை வந்து சேரும்.  ?

இந்தப் படத்தை எனக்கு அனுப்பியவருக்கு நானும் உங்கள் பதிலையே அனுப்பினேன் சரி என்றார். ஆகவேதான் உங்களுக்கு நான் இருமுறை பச்சைகள் இட்டுப் பரிசாகத் தந்தேன். 

'கந்தையா 57' என்று அந்த 7ஐ நீங்கள் ஆதாரமாகக் கொண்டதால்தான் உங்கள் அறிவு சூரியனைப்போல் பிரகாசிக்கிறது. அதற்கான ஆதாரம்.....

சூரியனிலிருந்து வெளிவருவது அதன் கதிர்கள் தான். அந்த கதிர்கள் ஏழு நிறங்களைக் கொண்டது. வானவில் உருவாகும் போது அதை நம்மால் பிரித்துக் காண முடியும். இந்த ஏழு என்னும் எண் எல்லா இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏழு மலை தாண்டி, தொடங்கி வாரத்திற்கு ஏழு நாள், ஏழு கண்டங்கள் என எல்லா இடத்திலும் ஏழு காணப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

Muddaal.jpg

பூகோள அரசியலை யதார்தத்தை விட்டு படத்தை மட்டும் பார்த்தால்.

தமிழன் வேண்டுவது என்ன - இலங்கையில் இருந்து வெட்டி கொண்டு போவது. ஆகவே அது தானே நடக்கும் போது அதை அவன் வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும். அவன் முட்டாள் இல்லை.

இந்தியா விரும்புவது - தன்னை சுற்றி சீனாவின் பிரசன்னம் இல்லாதிருப்பது. ஆகவே அவனும் முட்டாள் இல்லை.

வெட்டுகளால் இந்திய பகுதியில் சீனாவின் பிரசன்னம் குறையும், இலங்கையும் கைவிட்டு போகும் ஆகவே சீனா ஓரளவு முட்டாள்.

2000 வருடமாக கட்டிகாத்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி தமிழன் எடுத்து கொண்டு போய்விட சீனாவும் இந்தியாவும் தள்ளி போய்விட தனியே நிற்கப்போவவந்தான் அடி முட்டாள்.

படத்தை வைத்து மட்டும். கள யதர்ர்த்தம் அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Muddaal.jpg

தமிழனுக்கு பக்கத்திலை இன்னுமொரு கூட்டம் வாளாலை  அறுத்துக்கொண்டிருக்கிறதை காணேல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2021 at 18:25, suvy said:

மிகப்பெரிய முட்டாள் தமிழ்தான் ......மற்றவர்கள் சொந்த நாடுகளின் பெயரோடு இருக்கிறார்கள்..... அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் மட்டுமல்ல தனக்கும்  குழி பறிப்பதையும் பார்த்துக்கொண்டு கையறு நிலையில் இருக்கிறார்.....சீனாவுக்கு ஆபத்தில்லை........!  😎

இதற்கு காரணம்  முட்டாள்தனமா??

என்ன  நடந்தாலும் நமக்கென்ன என்ற வெறுப்பா?

அல்லது விதிப்படி  நடக்கட்டும் என்ற வெறுமையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2v.png

மே 18ல் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அறுத்து வீழ்த்தப்பட்டார்கள்.

மே 19 அன்றிலிருந்தே சிங்களவனும் இந்தியாவும் குந்தியிருந்த கொப்பு சீனாவால் அறுக்கப்பட தொடங்கிவிட்டது.

தமிழர்களின் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட அன்றே இந்தியாவும் இலங்கையில் தலையிடும் உரிமையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது.

ஒரு ராஜீவுக்காக ஒட்டுமொத்த இந்திய பிராந்திய பாதுகாப்பையும் சீனாவிடம் பறி கொடுத்தது சிங்கு ஆட்சி.

வடக்கையும் கிழக்கையும் தமிழனுக்கு தரமாட்டேன் என்று போர் செய்த சிங்களவன், வடக்கு கிழக்கோடு மேற்கையும் தெற்கையும் சேர்த்து சீனாக்காரனுக்கு கொடுத்தான்.

அடிமுட்டாள் சிங்களவன்

அதி சிறந்த கூமுட்டை இந்தியா 

அதி சிறந்த புத்திசாலி சீனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2021 at 09:29, Paanch said:

Muddaal.jpg

மிகப்பெரிய முட்டாள் யார் ?என்ற கேள்வியை  ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு  இந்தப் படத்தை கூர்ந்து பார்த்தால். பல செய்திகளைச்சொல்கிறது  அதாவது.  படத்தின் நடுமரமானது. கொழும்புக்கடலைக்குறிக்கிறது ...இங்கே சீனா வந்து நிலையாக...உறுதியாக...இருத்துவிட்டான்...செய்தி அறிந்ததும். இந்தியா மிகுந்தகவலையுடன். இலங்கையுடனான அனைத்து உறவுகளையும்  துண்டித்துவிட்டது..இது சீனாவுக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது...அதே நேரம் சீனா சிந்தித்தது ..இந்த இடத்தில் நிம்மதியாக...உறுதியாக....பாதுகாப்பாக..கலவரையற்று ..இருப்பதற்க்கு ..இந்த தமிழ் இனம் போராடுவது. இடைஞ்சலாகயிருந்தது ..எனவே  கோத்தபாயவை ...கூப்பிட்டுச் சொன்னார்கள் ...மலேசியா. சிங்கப்பூரை. பிரித்துவிட்டமாதிரி. .இந்ததமிழரை எவ்வளவு  சுறண்ட முடியுமோ  அவ்வளவு சுறண்டிவிட்டு  பிரித்துவிடுயென்று. ..உன்னுடைய தேவைகளையெல்லாம் நாங்கள் பார்த்துகொள்கிறோம்..எங்களையும்  ..ஒரு சின்ன சீனாவாக இயங்கவிடு...இதனை எற்பதைத்தவிர  கோத்தவுக்கு வேறுவழி தெரியவில்லை...எனவே தமிழரைப்பிரித்துவிட்டார்கள் ...இதனையறித்து  தமிழ்க்கிழவன் ..மகிழ்ச்சியடைத்தது...மட்டுமல்ல. இருத்த காணி பூமிகளை விற்று இளைஞர்களை. வெளிநாடு  அனுப்பியது குறித்து கவலையுமடைத்தது...புலிகளிருத்துயிருத்தால்..புலிகளின்  விமானத்தில்ப்போய் இந்த இளசுகளை அள்ளிக்கொண்டு  வத்திருக்கலாம் என்று கவலையும்பட்டது..

 

On 24/5/2021 at 18:44, Kapithan said:

படத்தில இருக்கிற மிகப் பெரிய பிழை இந்தியா கொப்பை/கிழையை வெட்டுவதாகக் காட்டியிருக்கு. இந்தியா தன்ர ரெண்டு கால்களுக்கும்/கவட்டுக்குள் வெட்டுவதாக போட்டிருக்க வேண்டும்.

ஆதலால் படம் கீறியவர் மீதுதான் பிழை.

😂

 

கபிதன் படம் நல்லபடம் கேள்வி சரியாகப்படவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.