Jump to content

Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?Mucormycosis Testing

Mucormycosis Testing ( AP Photo / Mahesh Kumar A )

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

Covid question: ௭ன் உறவினருக்கு டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) உள்ளது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ௭டுத்துக்கொள்ளலாமா?

- வீரா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்
 

பதில் சொல்கிறார் நாகர்கோயிலைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.

``நீரிழிவு என்பது நம் உடலின் ரத்தக் குழாய்களையும் நரம்பு நுனிகளையும் தாக்கக்கூடிய ஒரு நோய். நரம்பு நுனிகளைத் தாக்கும் நிலையைத்தான் டயாபடிக் நியூரோபதி என்கிறார்கள். இதன் அறிகுறிகளாக நரம்பு நுனிகளில், முக்கியமாக கால்களிலும், சிலருக்கு கைகளிலும் வலியோ, மதமதப்போ, உணர்ச்சியின்மையோ, சரும வறட்சியோ வரலாம். கட்டுப்பாடில்லாத ரத்தச் சர்க்கரை அளவுதான் டயாபடிக் நியூரோபதிக்கான முக்கிய காரணம். அதாவது நீரிழிவின் வீரியத்துக்கேற்ப முறையான மருத்துவம் செய்யாமலிருப்பது அல்லது ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்காத அளவுக்கு உணவு உண்பது என இந்த இரண்டு காரணங்களால்தான் நியூரோபதி பாதிப்பு அதிகரிக்கிறது.

இந்நிலையில் டயாபடிக் நியூரோபதி உள்ளவர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்றால் நிச்சயம் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். HbA1c எனப்படும் மூன்றுமாத கால சர்க்கரை அளவை 7-க்குள் கொண்டுவர வேண்டும். கூடவே டயாபடிக் நியூரோபதி பாதிப்பையும் கட்டுப்படுத்த சிகிச்சைகள் மேற்கொண்டு, பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்".

கறுப்பு பூஞ்சைத் தொற்று வராமலிருக்க ௭ன்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை?

- வீரா (விகடன் இணையத்திலிருந்து)

``கறுப்பு பூஞ்சையைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் மிக மிக முக்கியம். முதல் விஷயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது. அதற்கு நம் உணவில் புரதம் அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால் உணவில் அதிகபட்ச அக்கறை அவசியம். ஊட்டச்சத்து குறைவான நபர்களுக்கு கொரோனா தொற்று தாக்கவும் வாய்ப்புகள் அதிகம். அடுத்தது நீரிழிவு உள்ளவர்களுக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். இவர்களுக்கு பிற தொற்றுகள் பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, கதவுகளைத் திறந்துவைத்தது போல கறுப்பு பூஞ்சையும் மிக எளிதாக உடலுக்குள் நுழைந்துவிடும். எனவே நீரிழிவு உள்ளவர்கள் உணவில் பரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் குறையாமலும், ரத்தச் சர்க்கரை அதிகரிக்காமலும் கவனமாக இருக்க வேண்டும்.

Indian doctor performs extended functional endoscopic sinus surgery on a person suffering from mucormycosis
 
Indian doctor performs extended functional endoscopic sinus surgery on a person suffering from mucormycosis AP Photo/Amit Sharma

அடுத்து கொரோனா தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஆக்சிஜன் செலுத்தும் நிலையில் அந்தக் குழாய்கள், நீர் நிரப்பும் குவளைகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கின் வழியே இந்தத் தொற்று பரவுவதால் இந்த விஷயங்களை மருத்துவரிடம் கேட்டும் உறுதிபடுத்திக்கொள்ளலாம்"

 

https://www.vikatan.com/news/healthy/how-can-we-prevent-black-fungus-mucormycosis-infection

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களை தாக்கும் பல்லுறுப்பு வீக்க நோய்!

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களை தாக்கும் பல்லுறுப்பு வீக்க நோய்!

கொரோனா தொற்றில் இருந்து மீளும் சிறுவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறார் நல மருத்துவர், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட சிறுவர்களின் உடலில் நோய் எதிர்பொருளான ஆன்டிஜென் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதன்காரணமாக அவர்களுக்கு பல்லுறுப்பு வீக்க நோய் ஏற்படுகிறது.
இந்த நோய் ஏற்பட்டால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் வீக்கம் ஏற்படும். பல்லுறுப்பு வீக்க நோய் உயிர் பறிக்கும் நோய் அல்ல.

எனினும் அந்த நோயால் சிறார்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
கொரோனா தொற்றில் இருந்து சிறுவர்கள் மீண்ட 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு பல்லுறுப்பு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1218002

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

கறுப்பு பூஞ்சையைக் கட்டுப்படுத்த சில விஷயங்கள் மிக மிக முக்கியம். முதல் விஷயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வது. அதற்கு நம் உணவில் புரதம் அதிகமிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கறுப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிக முக்கியமான காரணம் என்பதால் உணவில் அதிகபட்ச அக்கறை அவசியம்.

அங்கெல்லாம் ஒரு மாஸ்க் போட்டால் ஒரு கிழமைக்கு மாத்துவது இல்லையாமே ?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 24/5/2021 at 20:20, பெருமாள் said:

அங்கெல்லாம் ஒரு மாஸ்க் போட்டால் ஒரு கிழமைக்கு மாத்துவது இல்லையாமே ?

எங்க? 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, shanthy said:

எங்க? 🙄

இது எங்கத்தையான் நியூஸ்சோ அங்கை :cool:

Link to comment
Share on other sites

16 minutes ago, குமாரசாமி said:

இது எங்கத்தையான் நியூஸ்சோ அங்கை :cool:

நான் நினைச்சேன் பெருமாள் யேர்மனி குடிமக்களை சொல்றாரோ 😀

அண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள். அப்படி ஏதாவது செய்தியை பெருமாள் அறிஞ்சிட்டாரோ என்று நினைச்சுப்போட்டன். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

எங்க? 🙄

எனக்கு ஏழரை நடுக்கூறு குட்டு  வாங்கியே தலை புண்ணாகுது 🤣

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

எனக்கு ஏழரை நடுக்கூறு குட்டு  வாங்கியே தலை புண்ணாகுது 🤣

சரி சரி யாவும் சுபம். கூல் பெருமாள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, shanthy said:

அண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள். அப்படி ஏதாவது செய்தியை பெருமாள் அறிஞ்சிட்டாரோ என்று நினைச்சுப்போட்டன். 😀

டொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற நாடுகளில் கொரோனா உள்ளது ஆனால் கறுப்பு பூஞ்சை இல்லை ஏன் இந்தியாவில் மட்டும் பெருமாள் சொன்ன காரணமும் + அசுத்தமாக இருக்கலாம்.

14 hours ago, shanthy said:

அண்மையில் தமிழ்க்கடை ஒன்றுக்கு போயிருந்தேன். Kasse வில் இருந்த ஆளினதும் சில பணியாளர்கள் மாஸ்க்கும் ஊத்தையாக இருந்தது. அதுவும் மறுபக்கம் திருப்பி போட்டிருந்தார்கள்.

நான் நினைத்தேன் அங்கே எல்லாம் காலை ஒன்று மாலை இன்னொன்று மாஸ்க் பாவிப்பார்கள் என்று 😷

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

டொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே? 🤣

அட அதை மறந்து போனேன். 😀அடுத்தமுறை கிழிக்கத்தான் வேண்டும். 😀

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மற்ற நாடுகளில் கொரோனா உள்ளது ஆனால் கறுப்பு பூஞ்சை இல்லை ஏன் இந்தியாவில் மட்டும் பெருமாள் சொன்ன காரணமும் + அசுத்தமாக இருக்கலாம்.

நான் நினைத்தேன் அங்கே எல்லாம் காலை ஒன்று மாலை இன்னொன்று மாஸ்க் பாவிப்பார்கள் என்று 😷

வேலை இடங்களில் மணிக்கு ஒருதடவை மாஸ்க் மாத்த வேணும். அதுவும் உணவுப் பொருட்களுடன் வேலை செய்வோருக்கு அதிக கட்டுப்பாடு. தமிழ்க்கடை களில் ஏனோ கவனமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

டொச்சிலை நாலு கிழி கிழிச்சிருக்கலாமே? 🤣

 

37 minutes ago, shanthy said:

அட அதை மறந்து போனேன். 😀அடுத்தமுறை கிழிக்கத்தான் வேண்டும். 😀

Masks GIFs | Tenor

கையோடை... அந்த மாஸ்க்கையும், பறித்து... கிழித்து விடுங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, shanthy said:

வேலை இடங்களில் மணிக்கு ஒருதடவை மாஸ்க் மாத்த வேணும். அதுவும் உணவுப் பொருட்களுடன் வேலை செய்வோருக்கு அதிக கட்டுப்பாடு. தமிழ்க்கடை களில் ஏனோ கவனமில்லை. 

அது சர்வதேச தமிழ் கடைகளின் நிலை அக்கா ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.