Jump to content

விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

covid-5.jpg?w=800&ssl=1

 

கொரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், மதுரை – தூத்துக்குடி விமானத்தில் நடந்த திருமணம் தற்போது பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மலை உச்சியில், கடலுக்கு அடியில், பாராசூட்டில் பறந்தபடி என விதவிதமான திருமணங்களை செய்திகளில் பார்த்திருப்போம். அண்மையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நடந்த திருமணம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் – மதுரை தொழிலதிபரின் மகள் தீக்சனா திருமணம் தான் இப்படி விமரிசையாக விமானத்தில் நடந்தேறியது. விமானத்தில் பறந்தபடி திருமணத்தை கண்டுகளித்த உறவினர்களும் மகிழ்ச்சியில் துள்ளினர்.

ஆனால் இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறது. கொரோனா 2வது அலை கொடூரமாக வீசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தனி மனித இடைவெளியின்றி, முககவசம் இன்றி இந்த திருமணம் நடந்திருப்பதுதான் அதற்கு காரணம். இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திருமணம் நடந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அனைவருக்கும் தற்காலிக பணி வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.

 

mar.jpg?resize=800%2C450&ssl=1


மதுரை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் சிவில் விமான போக்குவரத்துத் துறை முழு அறிக்கை கோரியுள்ளது. விமானத்தில் திருமணம் நடக்க இருப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கம் ஏற்கப்படுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் விமானத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பயணித்த மணமக்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய சிவில் விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2வது அலையில் கொத்து கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் சமூக பொறுப்பின்றி, தனி மனித இடைவெளியின்றி நடந்த இந்த திருமணம் பற்றி சமூக ஆர்வலர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

 

நியூஸ்7

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

முகச்சவரம் செய்யாமல் இருப்பதுதான் இக்கால நாகரீகம் என்பது மதுரை சிங்கத்திற்கு தெரியாமல் இருப்பதன் மர்மம் என்னவோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோய்க்கு எதிரான ஒத்துழைப்பு கொடுக் வேண்டும் என்ற நோக்கம்,தங்கள் பாதுகாப்பு  இவர்களிடம் சிறிதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனா நோய்க்கு எதிரான ஒத்துழைப்பு கொடுக் வேண்டும் என்ற நோக்கம்,தங்கள் பாதுகாப்பு  இவர்களிடம் சிறிதும் இல்லை.

ஐரோப்பிய நாடுகள் பல கொரோனா முதல் அலையிலும் இனியில்லை என்ற கட்டுப்பாடுகளுடைனையே இருந்தன. அப்படியிருந்தும் மூன்றாவது கொரோனா அலையும் வீசி விட்டது.

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

இல்லை.தயக்கம் எதுவும் இல்லை மருத்துவரிடம் சொல்லி இருக்கு அழைப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

முகச்சவரம் செய்யாமல் இருப்பதுதான் இக்கால நாகரீகம் என்பது மதுரை சிங்கத்திற்கு தெரியாமல் இருப்பதன் மர்மம் என்னவோ? 😎

சீக்காளி, பிச்சைக்காரன் மாதிரி இருப்பதுதான் இக்கால ஃபேசன் என புரிந்துகொண்டேன்.
ஏனெனில் ஒரு காலத்தில் (45 வருசத்துக்கு முன்) கல்லூரியில் படிக்கும்போது நான் ஸ்டெப் கட் வைத்திருந்தேன்.  😎

அதுபோல முகத்தை சவரம் செய்யாமல் இருப்பது இப்பொழுது ஃபேசன் ஆகிவிட்டது போலும்.

தகவலுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

சீக்காளி, பிச்சைக்காரன் மாதிரி இருப்பதுதான் இக்கால ஃபேசன் என புரிந்துகொண்டேன்.
ஏனெனில் ஒரு காலத்தில் (45 வருசத்துக்கு முன்) கல்லூரியில் படிக்கும்போது நான் ஸ்டெப் கட் வைத்திருந்தேன்.  😎

அதுபோல முகத்தை சவரம் செய்யாமல் இருப்பது இப்பொழுது ஃபேசன் ஆகிவிட்டது போலும்.

தகவலுக்கு நன்றி..

வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀

ரொம்ப வசதியா போச்சு.. எனக்கும் தலையில் முடி கொட்டி வருகிறது..

ஃபேசன் என ஆறுதல் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

பாவம், இவ்வளவு பெரிய கோடீஸ்வரைன் மகனுக்கு, திருமணத்தன்று முகத்தை சவரம் செய்யக்கூட நேரமில்லை.. நாவிதனும் கிட்டவில்லை. 🤔

இப்போது இதுதான் நாகரீகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2021 at 00:57, குமாரசாமி said:

அது சரி தாங்கள் ஊசி போட்டாச்சோ? 😁

தடுப்பூசி நேற்று போட்டவர்கள் பைசர். நான் கேட்டதால் 3 நாளைக்கு sport செய்ய வேண்டாம் என்றவர்.இது வரை ஒன்றும் மாற்றம் இல்லை ✌️
ஊசி போட்டதும் கடையில் கோப்பி குடித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தடுப்பூசி நேற்று போட்டவர்கள் பைசர். நான் கேட்டதால் 3 நாளைக்கு sport செய்ய வேண்டாம் என்றவர்.இது வரை ஒன்றும் மாற்றம் இல்லை ✌️
ஊசி போட்டதும் கடையில் கோப்பி குடித்தேன்.

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

அண்ணை நாலாந்தேதி எனக்கு ஊசி... பயப்பிடுத்தாம சொல்லுங்கோப்பா என்ன வித்தியாசம் இருக்கு? போடலாமா ஊசி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின்  எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.

சாமிகளே, என்ன மாதிரி பக்க விளைவுகளை, மாற்றங்களை உணர்கிறீர்கள்..? விவரிக்க இயலுமா..?

நான் தடுப்பூசி போட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன.

இதுவரை எந்த மாற்றத்தையும் உணரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை நாலாந்தேதி எனக்கு ஊசி... பயப்பிடுத்தாம சொல்லுங்கோப்பா என்ன வித்தியாசம் இருக்கு? போடலாமா ஊசி?

நான் அஸ்ராஸெனிக்கா இரண்டும் போட்டுவிட்டேன். முதலாவதற்கு அடுத்த நாள் சில மணிநேரம் குளிர் காய்ச்சல் மாதிரி இருந்தது. தோள்மூட்டில் இரண்டு மூன்றுநாள் நோ இருந்தது.

இரண்டாவதற்கு நோவைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

ஊசி போடாவிட்டால் சிலவேளை இந்திய கொரோனா அம்மன் ஆட்கொண்டு சுத்தியாட்டினாலும் ஆட்டுவார்!

  • Like 1
Link to comment
Share on other sites

நான் மூன்று வாரங்களுக்கு முன்னர் பைசர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பை போட்டேன். கையை தூக்கும் போது மட்டும் லேசான வலி ஒன்று இருப்பது போல் இருந்ததை தவிர வேறு எந்த பின் விளைவுகளும் இருக்கவில்லை. மனைவிக்கு இரண்டு நாட்கள் கை வலி இருந்து மூன்றாம் நாள் படிப்படியாக குறைந்து இல்லாமல் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கையில் போட்ட இடத்தில் லேசான நோ நேற்று இருந்தது. இப்போ லேசாக கூடியது போல் இருக்கிறது
பாலபத்ர ஓணாண்டி, திகதி உங்களுக்கு கிடைத்ததே அதிஷ்டம் பயப்பிடாம போடுங்கோ. எனக்கு 22 திகதி இரண்டாவதுவது தடுப்பூசி.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.