Jump to content

வாழ்க்கை பூப்பூக்கின்றது...: நிழலி


Recommended Posts

சில அடிகளை கடக்க
பல நதிகளை தாண்ட வேண்டி இருக்கு
பல நதிகளை கடக்க
சில அடிகளே போதுமாகவும்
இருக்கின்றது
 
சில நதிகளைக் கடக்க
பல கடல்களை தாண்ட வேண்டி இருக்கு
பல கடல்களைக் கடக்க
ஒரு நதியே போதுமாகவும்
இருக்கின்றது
 
சில தருணங்களை கடக்க
ஒரு வாழ்வே தேவையாக இருக்கு
சில தருணங்களே
பல வாழ்க்கை வாழ்ந்த
நிறைவை தருகின்றது
 
ஒரு விரல் தொடுகைக்காக
பல உறவுகளை இழக்க நேரிடுகிறது
பல உறவுகளை தக்க வைக்க
சில விரல்களை நிராகரிக்க சொல்லுது
 
வாழ்வு வாய்க்கும் என நினைக்கும்
போது வரள்கின்றது
வரண்டு சுடுகாடாகும் எனும் போது
பூப்பூக்கின்றது!
------
 
என் வாழ்வின் இப்ப கடந்து போகும் நிகழ்வுகளை வைத்து சும்மா கிறுக்கியது. Situation கவிதை😁
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:
சில நதிகளைக் கடக்க
பல கடல்களை தாண்ட வேண்டி இருக்கு
பல கடல்களைக் கடக்க
ஒரு நதியே போதுமாகவும்
இருக்கின்றது

Beautifull!!!! ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வை இலகுவானது

ரொம்ப  ரொம்ப இனிமையானது

ருசியானது

அதை அவ்வாறே வாழணும்

முகம்  கொடுக்க துணிவிருந்தால்

வாழ்வு  எல்லாவற்றையும் கற்றுத்தரும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்களாக குத்தும் துன்பகளிடையே காயத்தை ஆற்றுவது அதில் மலரும் பூக்களே........மணம்வீசும் நல்ல கவிதை.....!  🌹

இப்பவும் வீட்டில் இருந்தா வேலை செய்கிறீர்கள்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Contradictions ஐ வைத்து அருமையாக எழுதியுள்ளீர்கள்👏🏾👏🏾👏🏾.

2 hours ago, நிழலி said:
வரண்டு சுடுகாடாகும் எனும் போது
பூப்பூக்கின்றது!

👆🏼இந்த விசயம் வீட்ல தெரியுமோ🤣

பிகு: அது என்ன பூ என்றாலும் - மென்மேலும் பூத்து குலுங்க வாழ்த்து.

Link to comment
Share on other sites

21 hours ago, suvy said:

 

இப்பவும் வீட்டில் இருந்தா வேலை செய்கிறீர்கள்.....!  

ஓமோம்...  அதுவும் வண்ணாத்துப் பூச்சிகள் அழகழகாக தங்கள் நிறங்களை காட்டிப் பறக்கும் கோடை காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டி இருக்கு - இரண்டாவது வருடமாக. சோ சாட்..

21 hours ago, goshan_che said:

 

👆🏼இந்த விசயம் வீட்ல தெரியுமோ🤣

பிகு: அது என்ன பூ என்றாலும் - மென்மேலும் பூத்து குலுங்க வாழ்த்து.

வீட்டுக்கு தெரிந்தால் பூங்கொத்து என்ன பூமரமே காலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை....நிழலி!

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் சில வரிகள் நினைவில் ஊண்டு!

இறக்கும் திகதி முன்னே தெரிந்தால்...மனிதன் இறைவனை மதிப்பானா? என்பது தான் அது!

வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்தாக இருப்பதால் தான் அது திரில்லாக இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன்!

என்னைப் பொறுத்த வரையில், வாழ்க்கை ஒரு நதியைப் போன்றது!

மலையுச்சியில் உற்பத்தியாகி..ஆரம்பத்தில் சிற்றாறாகச் சிறு குழந்தை போலத் தவழ்ந்து, பின்னர் பல சிற்றாறுகள் சேர்ந்து,நீர்வீழ்ச்சியாக வேகத்துடன் பாய்ந்து...பின்னர் சமனிலத்தில் ஓடுகையில்,நீரின் அளவு அதிகமெனினும் அழகாகச் சமதரையில் ஓடிப் பின்னர் தனது மூலமான கடலுடன் கலக்கின்றது! பின்னர் மீண்டும், ஆவியாகி....மழையாகி, மலையுச்சியில் வீழ்ந்து அருவியாகித் தனது பயணத்தைத் தொடர்கின்றது!

எல்லாமே ஒரு வட்டம் தான்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை நிழலி.
எப்படித் தான் அடுக்கடுக்காக வந்ததோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.