Jump to content

காதலுக்கு எல்லை உண்டு(?)நட்புக்கில்லையாம்..


Recommended Posts

இது நான் வெண்ணிலாவின் " தோழனே" என்ற நட்பின் ஆழத்தை எடுத்துச்சொல்லும் ஒரு கவியின் கீழ் பதிந்த கருத்து. கருத்தென்று சொல்ல முடியாது..என்னோட கேள்வியும் கூட...

ஆனால் அங்கு தலைப்பு வேற மாதிரி போகின்றது..தனியாக தலைப்பென்றால் பலரும் அவரவர் கருத்துக்களை கூறலாம் என்றுதனியா பதிகின்றேன்.... உங்கள் கவனத்திற்காக..

அந்த அழகான கவிதையை படிக்காவிட்டால்..படிக்க..

http://www.yarl.com/forum3/index.php?showt...=25593&st=0

............

" தோழனே" கவியின் கீழ இடம்பெற்ற கருத்துக்களை கவனித்தேன். வெண்ணிலாவின் கருத்துக்களின் போது அவர் குறிப்பிட்ட சில கவிதைகள் வாசித்தேன். நன்றாக இருந்தது.

பின்னால் நெடுக்ஸ் அண்ணாவின் அழகான கருத்துக்கள் சூப்பர்! விளங்காத வைக்கும் சட்டென்று விளங்க வைத்து விடும்... (சில சமயங்களில் விளங்கியவர்களையும் அவர் கருத்துக்கள் குழப்பும் அது வேறு விடயம் :P )

...........

இப்ப எனக்கு விளங்காத ஒரு விடயம் என்னவென்றால்..

வாழ்க்கையில் எல்லோருக்கும் நட்பும் இருக்கு...காதலும் இருக்கு! இரண்டும் முக்கியமானவை கூட.

இப்போ நட்பு, காதல் என்று இரண்டை பற்றி அடிக்கடி வாதங்கள் நடைபெறுவது சரி.

ஆனால் நட்பு என்று..நட்பை பற்றி கதைக்கும் போது நான் கூட கவனித்தது என்னவென்றால்.

காதலை கொச்சைப்படுத்துவது போல(அப்படியென்றால் மிகையாக்கி சொல்கிறேனா தெரியவில்லை) சரி காதலை குறைவாக..அதாவது நட்பை விட குறைவாக சொல்லியே சொல்லப்படுகின்றது.

அப்படி எந்த வகையில் காதல் நட்பை விட குறைந்து விட்டது என்று தான் புரியவில்லை. ஆனால் எங்கேயாவது காதலை பற்றி சொல்லும் போது நட்பை குறைவாக சொல்லப்பட்டிருக்கா? இல்லை..ஆனால் நட்பு என்ற போது மட்டும் காதலை கொச்சைப்படுத்துவது தப்பு! நட்பு உன்னதமானது. காதலும் உன்னதமானது. அப்படி இருக்க ஏன் ஒன்றை மிகையாக்க மற்றொன்றை கொச்சைப்படுத்துகிறார்கள். அதுவும் கூட உடல் உணர்ச்சிகளை காதலோடு இணைத்தே கொச்சைப்படுத்துகிறார்கள். சிலது இயற்கை. எல்லாரும் எழும்பி நின்று இல்லை என்று வாதிட்டாலும் எல்லோரும் மனிதர்..எல்லோருக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கு. இது நான் தப்பா கதைக்க வரவில்லை.

ஆனால் கூட காதலை இப்படி உணர்ச்சிகளோடு சேர்த்து கொச்சை படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை.

நட்பை காதலோடு கொச்சைப்படுத்துவது பிழை என்றால்..காதலை வேறு உணர்ச்சிகளோடு கொச்சைப்படுத்துவது மிகப்பெரிய பிழை!!

காதல் தனது ஆட்சியை

பள்ளியறையில்

முடித்துக்கொண்டு

மூச்சடங்கிப்போகிறது.

நட்பு அப்படியல்ல

இதயத்தின் இதயத்துள்

உணர்வின் உணர்வுள்

புதுப்புது அர்த்தங்களை

வாழ்வின் எல்லை வரை

தருவதாய்.

இதில் முதல் வரிகள்..எந்த உண்மையான காதலர்,கணவன்,மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இதில் முற்றாக நட்பை உயர்வாக்க எண்ணி வாழ்வில் முக்கியமான அதே உயர்வான காதலை கொச்சைப்படுத்தப்படுகின்றது.

2வது வரிகள்..ஏன் இதயத்தின் உணர்வுகளை காதல் தராதா? புது புது அர்த்தங்கள்?? அப்படி என்ன புது புது அர்த்தங்கள்? காதலில் அது இல்லையா?

ஒரு பெண்ணை, அல்லது ஆணை தாய்,தகப்பன் என்னும் மகத்தான உயர்வுக்கு இட்டு செல்வது காதல் தான். அது திருமணத்தால் இணைக்கப்பட்ட காதல் தான். நட்பால் முடியவே முடியாது. இப்படி புது புது உறவுகளை தந்து ஒருவரின் வாழ்வில் புது அர்த்தங்களை கொடுப்பது காதல் தானே...

(இது நான் இரண்டையும் குழப்பவில்லை, ஆனால் நட்பை விட காதல் குறைவில்லை என்று சொல்கிறேன்!)

அத்தோடு பல பாடல்கள் கவிகளிலும் இப்படியே.

காதலுக்கு எல்லை உண்டு..

நட்புக்கு இல்லை!

சரி நட்புக்கு இல்லை. ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் காதலுக்கு இருக்கா? எங்க என்று யாராவது காட்டினார்களா?

இன்னும் சொல்லப்போனால்

நட்புக்குள் காதல் இருக்காது! இருக்கவும் கூடாது!ஆனால்

காதலுக்குள் நட்பு இருக்கலாம்!

இப்படி பார்க்க போனால் நட்பு காதலுக்குள் அடக்கம்!

அப்போ எந்த வகையில் காதலை குறைவாக பேசலாம்???

..........

இதில் ஒன்று சொல்ல வேண்டும்...நான் சொல்வது உண்மையான நட்பு & காதலை பற்றி மட்டுமே!

இரண்டையும் கலந்து பால்ல தண்ணி கலந்தது போல எதென்றே புரியாமல் இருக்கும் அந்த அதை சொல்லவில்லை.

அங்கே நெடுக்ஸ் அண்ணா சொல்லி இருந்தார்..எல்லாவற்றையும் தாண்டிய காதல் உண்டு என்று.

உண்டு தானே உண்மை தானே..இங்கு யாரும் குழந்தை பெற்ற பின் கணவனோடு ஆயுள் வரை வாழவில்லையா?

அப்படி என்றால் ஏன் எல்லோரும் காதல் செய்பவர்கள்..

காதலி,காதலனோடு வாழ்பவர்கள்.. இல்லை கணவன்,மனைவியாக வாழ்பவர்கள்..

நட்பு என்று வந்ததும் காதலை குறைத்து கதைக்கிறார்கள்.அப்படி காதலில் என்ன குறையை கண்டார்கள் என்பது தான் விளங்கவில்லை.. :D:D :angry:

உங்களில் யாருக்கும் விளங்குதா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கல்யாணம் வரை சென்றாலும், அதற்கப்பாலும் தொடரும். அதன் பின்னர் காதல் முறிவடைந்து கல்யாணம் தொடரலாம்; அல்லது முறிவடையாமலேயே தொடரலாம். எனவே எல்லையை எங்கு வகுப்பது காதல் கொண்டோரில்தான் தங்கியுள்ளது.

பல அழியாக் காதல்கள் (உ.ம். ரோமியோ & ஜுலியட்) எல்லாம் மரணத்தில் முடிவடைந்ததால் மரணத்தைக் காதலின் எல்லையாகக் கொண்டிருக்கலாம்.

அப்புறம் ஏன் அழியாக் காதல் என்கிறார்களாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் ஏன் அழியாக் காதல் என்கிறார்களாம்?

உங்களை இன்று வரை அதைப் பற்றிக் கதைக்க வைக்கின்றதே, அது தான் அழியாக் காதல்!

Link to comment
Share on other sites

கிருபன்ஸ் அண்ணா, தெளிவா குழப்புறீங்க.......

அப்பிடி எண்டா நண்பர்களுக்குள் முறிவு வாறதில்லையா?அது எல்லை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P தொடங்கிட்டினம்............ காதல் எண்டா புனிதம்........... நட்பு எண்டா புனிதம்............. எண்டுகொண்டு. எல்லாத்துக்கும் புனிதப்பட்டம் கட்டி மனுசன இயல்பா இருக்கா விடாமல் செய்யுங்கோ................ காதலுக்கு ஒரு போலியான புனித பிம்பத்தை உருவாக்கிட்டு அந்த உணர்வ இயல்பா அனுபவிக்க முடியாமல்..... செயற்கையா காதலெண்டால் இதானெண்டு உணர்ந்துகொண்டு இருக்கினம் நிறையபேர். ஆளாளுக்கு ஒரு காதலுக்கு ஒரு அர்த்தத்த கொடுங்க வெளிக்கிட்டினம்.................... காதலெண்டிறது ஒரு சாதாரண மனுச உணர்வு...... அது புனிதம் ............ அதுக்கு எல்லையில்ல.............. அது கடவுள் மாதிரி............... எண்டுகொண்டு சினிமா டயலக்குகள் விட்டுக்கொண்டு........... உங்கட இயற்கையான உணர்வுகள அடக்கி........... இயல்பா இருக்காமல்.................. மன அழுத்துங்களுக்கு உள்ளாகம இருங்கோ...................... :angry: :angry:

Link to comment
Share on other sites

இங்கு ஏதோ தீவிரமா ஒரு பிரச்சனை நடக்கிது என்று விளங்கிது. ஆனா என்ன பிரச்சனை என்று விளங்கவில்லை...

பூனைக்குட்டி சொல்வது ஏதோ எனக்கு சரியாகப் படுகிறது...

பிறந்தோமா, வளர்ந்தோமா, மகிழ்ந்தோமா, செத்தோமா என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும். இடைவழியில் நின்று நட்புக்கும் காதலிற்கும் இடையிலான வித்தியாசங்கள் எவை? காதலிற்கும் கலியாணத்திற்கும் உள்ள தொடர்புகள் எவை? இப்படி தத்துவ ஆராய்ச்சிகள் செய்யவெளிக்கிட்டால் கடைசியில் வாழ்க்கையே வேஸ்ட் ஆகப் போய்விடும். அவரவர் வாழ்வில் நடப்பதை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். நியூட்டனின் இயக்கவியல் விதிகள் போல் பொதுவான விதி என்று இங்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்வியல் அனுபவமும் வித்தியாசமானது.

காதலுக்கு எல்லை உண்டு(?)நட்புக்கில்லையாம்..

தலைப்பில் இப்படி சொல்லப்படுகிறது... :D

நான் இந்த ஆராய்ச்சிக்கு வரவில்லை... நமக்கு ஏற்கனவே மேல்வீடு கொஞ்சம் கழன்றுவிட்டது. இதற்கு மேற்பட்ட சுமையை 1500 கிராம் பாரமான நம்மட சிறிய மூளை தாக்குப்பிடிக்காது... :D

புசுக்குட்டி சொன்ன கருத்துக்கு என்னோட சேர்ந்து எல்லாரும் ஒரு ஓ போடுங்கோ பார்க்கலாம்...

எங்க..

ஓஓஓஓஓஓஓஓ...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று தெரியுமா பிள்ளைகள்.

காதலிட்ட போய் எல்லா உண்மையையும் சொல்ல இயலாது. ஆனா நட்பிட்ட போய்ச் சொல்லாம். ஏன் அம்மா, அப்பாட்ட சொல்ல முடியாததைக் கூட நட்பிட்ட சொல்லாம்.

சரி. என்னத்தைப் பற்றிக் கதைக்கின்றியள்?

Link to comment
Share on other sites

காதலிட்ட போய் எல்லா உண்மையையும் சொல்ல இயலாது. ஆனா நட்பிட்ட போய்ச் சொல்லாம். ஏன் அம்மா, அப்பாட்ட சொல்ல முடியாததைக் கூட நட்பிட்ட சொல்லாம்.

உண்மையைச் சொல்லி இருக்கின்றீங்க. :P :P :P நட்பு நட்பு தான். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல், நட்பு என்பவை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்பது சினிமாப் படங்களால் உருவாக்கப்பட்டது. இரண்டுக்கும் புரிந்துணர்வு அவசியம்.. புரிந்துணர்வு இல்லாவிடில், இடையிடையே பிரச்சினைகள் வரும், பிரச்சினைகளைச் சீர் செய்யாமுடியாவிடில் இரண்டுமே முறிந்துவிடும்.. எனவே பூனைக்குட்டி சொன்ன மாதிரி இலக்கணங்களை வகுக்காமல் காதல் செய்வதும், நட்புக் கொண்டாடுவதும் நல்லது!

காதலிட்ட போய் எல்லா உண்மையையும் சொல்ல இயலாது. ஆனா நட்பிட்ட போய்ச் சொல்லாம். ஏன் அம்மா, அப்பாட்ட சொல்ல முடியாததைக் கூட நட்பிட்ட சொல்லாம்.
ரொம்பச் சரி.. முன்னாள் காதலகர்களைப் பற்றியும், முன்னர் செய்த சேட்டைகள், சுடுதாக்களைப் பற்றியும் சொல்லமுடியுமா, என்ன! :D :P
Link to comment
Share on other sites

ரொம்பச் சரி.. முன்னாள் காதலகர்களைப் பற்றியும், முன்னர் செய்த சேட்டைகள், சுடுதாக்களைப் பற்றியும் சொல்லமுடியுமா, என்ன! :D :P

ஏன் முடியாது உண்மையா காதல் செய்தால் சொல்ல முடியும் B)

Link to comment
Share on other sites

கவிதை அந்தாதியில் இருந்து

ஒரு மாலை வேளையில்

நடந்தேன் தெருச்சாலையில்

கண்டேன் ஓர் காளையை

விழுந்தேன் காதல் வலையில்

இணைந்தேன் திருமண சோலையில்

ஆண்டுகள் ஆறின் பின்.

பின் இரண்டு பிள்ளை

பெற்றெடுத்த பின்பு

கண் நிறைந்த காதல்

கந்தலாகி போக

காசு காசு என்று

இரண்டு பேரும் ஓட

தேசம் விட்டு தேசம் வந்து

வேசம் ரொம்ப போட்டோம்

இதுக்குப் பெயர் தான் காதலா?

Link to comment
Share on other sites

தொடங்கிட்டினம்............ காதல் எண்டா புனிதம்........... நட்பு எண்டா புனிதம்............. எண்டுகொண்டு. எல்லாத்துக்கும் புனிதப்பட்டம் கட்டி மனுசன இயல்பா இருக்கா விடாமல் செய்யுங்கோ................ காதலுக்கு ஒரு போலியான புனித பிம்பத்தை உருவாக்கிட்டு அந்த உணர்வ இயல்பா அனுபவிக்க முடியாமல்..... செயற்கையா காதலெண்டால் இதானெண்டு உணர்ந்துகொண்டு இருக்கினம் நிறையபேர். ஆளாளுக்கு ஒரு காதலுக்கு ஒரு அர்த்தத்த கொடுங்க வெளிக்கிட்டினம்.................... காதலெண்டிறது ஒரு சாதாரண மனுச உணர்வு...... அது புனிதம் ............ அதுக்கு எல்லையில்ல.............. அது கடவுள் மாதிரி............... எண்டுகொண்டு சினிமா டயலக்குகள் விட்டுக்கொண்டு........... உங்கட இயற்கையான உணர்வுகள அடக்கி........... இயல்பா இருக்காமல்.................. மன அழுத்துங்களுக்கு உள்ளாகம இருங்கோ......................

பூஜுக்குட்டி நலமா? :D

முந்தி அடிக்கடி வருவீர்கள்..தற்போது காண கிடைப்பதே இல்லை..

சரி இப்ப ஏன் டென்சன் ஆகுறீங்கள்..நான் வசனங்கள் பேசல..நமக்கு அது துண்டற வரவும் வராது.

இப்போ ஒரு செய்தியை எடுத்துப் போட்டு அதை பற்றி நாங்கள் கருத்துக்கள் சொல்வதில்லையா.. ( உலக நடப்பு பாருங்கோ) அது போல தான் இதுவும்..கவிதைகளில் எழுதுவதையும், நடைமுறையில் சொல்லப்படுவதையும் சொன்னேன். அம்புட்டுத்தான்..

கண் நிறைந்த காதல்

கந்தலாகி போக

இது ஒரு காதல் தானே அன்றி

எல்லா காதலும் இப்படியல்லவே..

எல்லா நட்பும் சந்தோசம் தான் தருமென்றில்லையே..இதுக்கு என்னோட நட்பே நல்ல உதாரணம்..நான் கூட ஒரு நண்பியோடு பழகினேன். நல்ல நட்பு. இடையில் அவர் வேறு எவரோ சொன்ன சில வதந்திகளை நம்பி என்னை விட்டு விலகி விட்டார். உண்மையை முழுதாக அறியாமல் விலகி விட்டார். விளக்க நான் முனைந்த போது அவர் தனக்கு கோவம் என்றால் கதைக்க மாட்டார் என்ற கொள்கையின் அடிப்படையில் இருந்தார். இருக்கிறார்!

இதுவும் என்னோட நிஜமான நட்பு எனக்கு கொடுத்த பரிசே...

அவள்..

ஆயிரம் தடவை

அரவணைப்பாய் பேசியவள்...

ஏதோ ஒரு விவாதத்தில்

அன்பை அறுத்து விட்டவள்..

என் உள்ளத்து நட்பை

கொஞ்சமும் சிந்திக்காதவள்..

பிறர் சொன்ன வார்த்தைக்கு

கட்டுப்பட்டவள்..

என் பக்க விவாதத்தை

கேட்க மறுப்பவள்..

தன் கோவமொன்றே

பெரிதென்று வாழ்பவள்..

என் நெஞ்சத்து குமுறலை

அணைத்து ஆற்றாதவள்..

உருண்டு விழும் கண்ணீரை

தட்டி விட வராதவள்..

நான்..

அவள் மற்றோருடன் பேச

உள்ளுக்குள் அழுபவள்..!

பேசிடும் சந்தர்ப்பங்களை

தேடி தேடி அலைபவள்..!

அவள் வெறுக்க வெறுக்க

உள்ளுக்குள் கொதிப்பவள்..!

மொத்தத்தில்

முட்டாள் தனமாக

அவள் ஒரு பக்கம் பார்த்தே

பழகியவள்..!

மறுபக்கம் என்றொன்று

இருப்பதை மறந்தவள்..!

இப்படியும் நட்பு இருக்கின்றது! ஓம் என்றதற்கு என் நட்பே ஒரு உதாரணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பதை மனசுக்கு பிடிச்சது போல வடிவமைத்து வாழும் மனிதனும் இருக்கிறான்..! பிறந்தம் என்றதுக்காக எப்படியயோ வாழ்ந்திட்டுப் போவம் என்று வாழுற மனிதனும் இருக்கிறான்..!

முன்னையவன் ரசிக்கத் தெரிந்தவன். பின்னையவன் ருசிக்கத் தெரிந்தவன்..!

ரசிக்கத் தெரிந்தவனுக்கு தன்னை எல்லையிடத் தெரியும்..! ருசிக்கத் தெரிந்தவனுக்கு அனுபவம் தான் வழிகாட்டி..! கெட்டு குட்டிச்சுவராகித்தான் தெளியனும் என்றால் அதுக்கு என்ன செய்ய முடியும்..!

காதல்.. நட்பு.. காமம்.. இதெல்லாம் ஆட்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப மாறுபடும்..!

சிலருக்கு காதல்.. ஒரு கலை..! - காதலை காதலிப்பவரை எட்ட வைத்தே ரசிப்பவர்கள்.

சிலருக்கு காதல்.. ஒரு கண்ணாடி..! - காதலில் புனிதத்தை பிரதிபலிக்க என்பவர்கள். ஒரே காதல் ஒன்றே உறவு என்று காப்பவர்கள்.

சிலருக்கு காதல் படுக்கை..! - காதலை ருசிக்கத் தெரிந்தவர். படுத்தமா நித்திரை கொண்டமா போனமா என்று எண்ணும் கூட்டம். காதலிப்பவரையும் அடிக்கடி மாற்றிக் கொள்பவர்கள்.

சிலருக்கு காதல் நோய்..! - இவர்கள் பாவங்கள். காதல் ஒரு தடவைதான் உண்மையாப் பூக்கும் என்று காத்திருந்து பூத்த பொழுதே.. அடுத்த கணம் வாடி உதிரப் போகிறது என்று அறியாமல்.. பற்று வைத்து பறிகொடுத்து காதலுக்காய் தம்மையே அழித்துக் கொள்பவர்கள்..! ( இலகுவாக ஏமாற்றப்படக் கூடியவர்கள்)

சிலருக்கு காதல் தீனி...! - காதலே கதியென்று கட்டுண்டு கிடப்பவர்கள். காதலே வாழ்க்கை என்று வாழ்பவர்கள்.. காதலையே முதலீடாக்கி வாழ்ப்பவர்கள்.

இப்படி காதலில் பிரதானமான பஞ்ச ( 5) முகம் உள்ளவர்களை சாதாரண உலகில காணக் கூடியதா இருக்குது. அவரவருக்கு அது அது அப்படித்தான் தெரியும்..!

நமக்கு காதல்.. ஒரு கண்ணாடின்னா.. சிலருக்கு அது படுக்கை.. சிலருக்கு அது நோய்.. சிலருக்கு... அதுவே தீனி..! மனித மனங்களும் சிந்தனைகளும் ஒருமிக்காத நிலையில் மனிதனின் திருப்திப்படும் அளவு மாறுபடும் நிலையில் காதல்.. நட்பு.. காமம் இவற்றிற்கு இதுதான் விதி என்று வரையறுக்க முடியாது. அவரவர் தமது திருப்திக் கேற்ப இவற்றை கண்டு உணர்ந்து வாழ்வதே சிறப்பு..தேவை..! :)

Link to comment
Share on other sites

நமக்கு காதல்.. ஒரு கண்ணாடின்னா.. சிலருக்கு அது படுக்கை.. சிலருக்கு அது நோய்.. சிலருக்கு... அதுவே தீனி..! மனித மனங்களும் சிந்தனைகளும் ஒருமிக்காத நிலையில் மனிதனின் திருப்திப்படும் அளவு மாறுபடும் நிலையில் காதல்.. நட்பு.. காமம் இவற்றிற்கு இதுதான் விதி என்று வரையறுக்க முடியாது. அவரவர் தமது திருப்திக் கேற்ப இவற்றை கண்டு உணர்ந்து வாழ்வதே சிறப்பு..தேவை..! :D

நெடுக்ஸ் அண்ணா அழகான விளக்கம். :D

நட்புக்கும் இப்படி பல முகங்கள் இருக்கு.

ஏற்று வாழும் நட்பும் இருக்கு!

ஏமாற்றி வாட வைக்கும் நட்பும் இருக்கு!

அதனால் தான் நான் சொன்னேன்..காதலை விட நட்பு எந்த விதத்திலும் பெட்டர் இல்லை, நட்பை உயர்த்தி கதைப்பதில் பிரியோசனம் இல்லை என்று. வேறில்லை :D

ஏனுங்க சகி உங்களுக்கு நட்பைப்பார்த்தால் கிண்டலா இருக்கா?

:rolleyes: என்ன நக்கலா வானவில்?

சொன்னதை வடிவாய் வாசித்தீர்களா? :)

Link to comment
Share on other sites

அவள்..

ஆயிரம் தடவை

அரவணைப்பாய் பேசியவள்...

ஏதோ ஒரு விவாதத்தில்

அன்பை அறுத்து விட்டவள்..

என் உள்ளத்து நட்பை

கொஞ்சமும் சிந்திக்காதவள்..

பிறர் சொன்ன வார்த்தைக்கு

கட்டுப்பட்டவள்..

என் பக்க விவாதத்தை

கேட்க மறுப்பவள்..

தன் கோவமொன்றே

பெரிதென்று வாழ்பவள்..

என் நெஞ்சத்து குமுறலை

அணைத்து ஆற்றாதவள்..

உருண்டு விழும் கண்ணீரை

தட்டி விட வராதவள்..

நான்..

அவள் மற்றோருடன் பேச

உள்ளுக்குள் அழுபவள்..!

பேசிடும் சந்தர்ப்பங்களை

தேடி தேடி அலைபவள்..!

அவள் வெறுக்க வெறுக்க

உள்ளுக்குள் கொதிப்பவள்..!

மொத்தத்தில்

முட்டாள் தனமாக

அவள் ஒரு பக்கம் பார்த்தே

பழகியவள்..!

மறுபக்கம் என்றொன்று

இருப்பதை மறந்தவள்..!

இப்படியும் நட்பு இருக்கின்றது! ஓம் என்றதற்கு என் நட்பே ஒரு உதாரணம்!

ம்ம் எனக்கும் உப்படி நடந்திருக்கப்பா............ :rolleyes: நீங்கள் எழுதின வரிகள் எல்லாமே உண்மை!

எல்லாத்துக்க்கும் காரணம் இந்தக் கோவம் ! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சகி நட்பையும் காதலையும் போட்டு நல்லா குழப்புறீங்க :):rolleyes:

Link to comment
Share on other sites

சகி அக்கா பிடிகல பிடிகல பிடிகல (*எங்கையோ கேட்டிருப்பீங்க கண்டுகாதையுங்கோ)........... :P

காதலை பற்றி நான் சின்ன பிள்ளை கதைக்கவில்லை பிறகு அக்காவிட்ட அடி விழும் ஆகவே நான் சொல்ல வந்த விசயத்தை ஒரு பாட்டில சொல்லிட்டு போயிடுறன் கவனமா அந்த பாட்டை கேளுங்கோ முக்கியமாக சகிஅக்காவும்.நிலா அக்காவும் அதற்கு பிறகு வந்து உங்க கருத்துகளை சொல்லுங்கோ..................................

பாடல் பாண்டவர்பூமியில இருந்து

தோழா தோழா

http://www.raaga.com/channels/tamil/movie/T0000376.html

அப்ப நான் வரட்டா..................... :P

Link to comment
Share on other sites

நட்புக்கும் இப்படி பல முகங்கள் இருக்கு.

ஏற்று வாழும் நட்பும் இருக்கு!

ஏமாற்றி வாட வைக்கும் நட்பும் இருக்கு!

இந்த விசயம் உண்மை தானங்க.

"நட்புக்கு விட்டுக்கொடுத்தலும், புரிந்துணர்வும் இரண்டு கண்கள்" இது என்னுடைய கருத்தங்க. :)

Link to comment
Share on other sites

சகி உங்க நட்பு இப்படி போயிட்டுதே என்றால் நட்பே கூடாது நட்பு தாழ்ந்தது என்று சொல்லுவீங்களா? ஏன் பொதுவாக நோக்கிப் பாருங்கோ எல்லாம் சரியெனத் தென்படும்.

இன்றைய காதல்

real_love.med.jpg

Link to comment
Share on other sites

சகி அக்கா பிடிகல பிடிகல பிடிகல (*எங்கையோ கேட்டிருப்பீங்க கண்டுகாதையுங்கோ)........... :P

காதலை பற்றி நான் சின்ன பிள்ளை கதைக்கவில்லை பிறகு அக்காவிட்ட அடி விழும் ஆகவே நான் சொல்ல வந்த விசயத்தை ஒரு பாட்டில சொல்லிட்டு போயிடுறன் கவனமா அந்த பாட்டை கேளுங்கோ முக்கியமாக சகிஅக்காவும்.நிலா அக்காவும் அதற்கு பிறகு வந்து உங்க கருத்துகளை சொல்லுங்கோ..

ஜம்மு தங்கா நெடுக்ஸ் அண்ணா அண்ட் பூனைக்குட்டி சொன்னது நிஜம்!

எனக்கும் தெரியும் ஒரு நட்பால எல்லா நட்பும் நல்லதென்று சொல்ல ஏலாது!

ஒரு காதலால எல்லா காதலையும் குறை சொல்லவும் கூடாது என்று!

நான் யதார்த்தத்தையே நேசிக்கிறேன்! அதில தான் வாழ்கிறேன்!

பலர் யதார்த்தத்தை மீறி வசனங்களை அள்ளி வீசுவார்கள்!

சிலர் நடந்தே காட்டுவர்!

சரி அதெல்லாம் நமக்கெதுக்கு..

இத் தலைப்பு என்னோடு கதைக்காத என் நண்பி என்னை புரிய கடைசியா நான் எடுத்த முயற்சி! இதை பார்த்து விட்டு நட்பை நேசித்த நான் எப்படி நட்பை இப்படி சொல்கிறேன் ..அப்படி என்றால் என் மனதில் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று அறிந்து..ஒரு தடவையாவது என்னோட வந்து கதைக்கலாம் என்ற நப்பாசையிலேயே! ஆசை எல்லாம் நிறைவேறுமென்றில்லையே..அதுவும

?? நப்பாசை.. ஊஹூம்.. :rolleyes:

ஆனாலும் போங்க ஜம்மு..இப்படி ஜோக் எல்லாம் அடிக்க கூடாது :D

அதுதான் நீங்கள் தந்த பாட்டை சொல்றேன்..சிரிப்பா வந்திச்சு கேட்க..

கவலையை மறந்து சிரிக்க வைத்ததுக்கு நன்றி தங்கா. அதுக்காக ஒரு அல்வா பாசல் வந்துக்கிட்டே இருக்கு ஓகேயா :P

இன்றைய காதல்

real_love.med.jpg

இதை காதல் என்று எப்படி சொல்லுறீங்க வெண்ணிலா? :D

தோளில் சாய்ந்திருந்தால் காதலென்றில்லையே?

தோளில் சாய்ந்தவர் நண்பனாகவும்..பின்னால் கை கொடுப்பவர் காதலனாகவும் இல்லை இன்னொரு நண்பனாகவும் இருக்கலாம் தானே.. :)

Link to comment
Share on other sites

அட உண்மையான நட்பெனில் முன்னால் கையைப் பிடிச்சிருக்கலாமே. என்னமோ ஒழிச்சு கையைப் பிடிச்சிருக்கிற போலல்லவா இருக்கு. இல்லை வானவில் தான் இப்படத்தைப் படம் போடும் போட்டிக்குள் நம்பிக்கைக் காதலுக்கு போடிருந்தார்.. அதைத்தான் நான் கொணர்ந்தேன். வானவில் சகி கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்கோ.

இல்லை சகி இப்ப எல்லாம் காதலர்கள் என ஒரு குடையின் கீழ் இருந்துகொண்டே இன்னொருத்தியைப் பார்த்து நாக்கு நீட்டுறவன் கண்ணடிக்கிறவன் எல்லாம் இப்ப இருக்கிறாங்க பா. காதலிப்பது தப்பே இல்லை. நட்பைவிட குறைச்சலும் இல்லை. ஆனால் பார்த்து காதலியுங்கோ.

Link to comment
Share on other sites

வந்துட்டோமல....................

சகி அக்கா நான் கஷ்டபட்டு போட்ட பாட்லை காமெடி என்று சொல்லிவிட்டீங்கள் எனக்கு அழுகை அழுகையா வருது பாருங்கோ................அது சரி அல்வா அனுப்புறது என்று சொல்லி இருக்கிறீங்க அப்ப அடுத்த வீட் உகட்ட நான் தயார் பாருங்கோ................... :angry:

பூஸ் குட்டி சொன்னார் என்றா அதில ஆழ்ந்த கருத்து இருக்கும்............ஆனாலும் அவரின்ட கருத்தை என்னால எடுக்க முடியாது அது வேற விசயம்..........சரி இப்ப பொயிண்டுக்கு வாரேன் காதலுக்கு எல்ல உண்டு நட்பிற்கில்லை............உண்மை தான் சகி அக்கா காதலில் எல்லை உண்டு............ :P

இப்ப நான் உதாரணதிற்கு வான்வில்லை எடுகிறேன் அவர் காதலிகிறார் ஒருவாவை என்று வைத்து கொண்டா கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும் தானே(சிலர் பேர் செய்யிறதில்லை அது வேற கதை) இத்துடன் காதலுக்கு எல்லை முடிகிறது என்றே சொல்லுவன்............நீங்கள் சொல்லால் திருமணத்தின் பின் காதல் என்று எல்லாம் அதை பற்றி நமக்கு தெறியாது...............ஆனால் நட்பை எடுத்து கொண்டால் அதற்கு திருமணம் அபப்டி என்று ஒன்றும் வாறதில்லையே தொடர்ந்து நட்பாக மதிக்கபடுகிறது............அதற்காக சிட்னி கேள்சே நான் காதல் பிழை என்று சொல்ல வரவில்லை..........(நம்மளை காப்பாற்றியாச்சு)................. :P

இப்ப உதாரணதிற்கு நீங்க உங்கள் நண்பியை தேடும் இறுதி முயற்ச்சி என்று சொல்லி இருக்கிறீங்க ஆமாம் உங்களின் நண்பி மிகவும் கொடுத்து வைத்தவா............கோபம் வந்தாலும் நட்பை தேடும் நீங்களே நட்புக்க்கு எல்லை என்று சொல்லி விட்டீங்கள்...............இதையே உதாரணதிற்கு புத்து வந்து திருமணம் ஆகின பின் தன் பழைய காதலியை தேடினா எப்படி இருக்கும்..........அவ்வளவு நல்லா இருக்காது தானே............நீங்கள் சொல்லாம் ஏன் தேட கூடாது என்று(அக்கா ஜாதர்த்ததுடன் வாழ வேண்டும் பாருங்கோ)................

;)

நான் தெளிவா எல்லாரையும் குழப்பி விட்டேன் என்பது மட்டும் எனக்கு விளங்குது.................ஆனால் காதல் பிழை என்று சொல்லவில்லை அதை பற்றி பிழை என்று கதைக்கவும் இல்லை வெண்ணிலா அக்காவே சொல்லி போட்டா காதல் சரி என்று இது எனக்கு காணும் நாளைக்கு போய் யாரையும் தேட.........................

ஆனாலும் யார் என்ன சொன்னாலும் நட்புக்கு எல்லை இல்லை மற்றஎல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதே என் கருத்து...............

சகி அக்கா ஓவரா கதைத்து போட்டனோ.................கொஞ்சம் உணர்ச்சி வசபட்டிட்டன் போல அப்ப வரட்டா................. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகி உங்க நட்பு இப்படி போயிட்டுதே என்றால் நட்பே கூடாது நட்பு தாழ்ந்தது என்று சொல்லுவீங்களா? ஏன் பொதுவாக நோக்கிப் பாருங்கோ எல்லாம் சரியெனத் தென்படும்.

இன்றைய காதல்

real_love.med.jpg

நட்பை உயர்த்தணும் என்றதுக்காக காதலை இப்படி கொச்சை படுத்திறீங்களே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.