Jump to content

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு | இந்தியா அமெரிக்கா இலங்கை உள்ளே....

 

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

எல்லோரும் இந்த You tube பக்கத்தை subscribe செய்து அதை லைக் செய்து  அதன் views ஐ அதிகரிக்குமிடத்து  விரைவில் தமிழ் ஈழம் அமையும் வாய்ப்பு உள்ளது.  

வாய்பபை தவற விடாதீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இப்ப சினிமாவுக்கு அடுத்து தமிழ் நாட்டில் அதிக வருமானம் தரும் தொழில் ஈழ அரசியல் வீடியோக்களை யூடியூப்பில் வெளி இடுவதாகத்தான் இருக்கும் 🤣.

தமிழ் ஈழம், சீனா இலங்கையில் புதிய நாட்டை உருவாக்கியது, நீல கடவுச்சீட்டில் தமிழை நீக்கியது இப்படி தலையங்கம் வைத்தால் ஒரு flat வாங்க deposit போடும் அளவுக்கு லைக்ஸ் சப்ஸ்கிரிப்சன் எகிறும்.

பல தமிழ் நாட்டு இளைஞர்கள் நல்லா இருக்கிறார்கள் அந்த மட்டில் சந்தோசம்.

எனக்கு இந்த வீடியோவில் பிடித்த விடயம் அவரின் பெயர் -மைக் மோகன்.

ஒரு உலக அரசியல் மேதைக்கு, ஆய்வாளருக்கு என்றே செதுக்கிய பெயர்🤣.

Link to comment
Share on other sites

33 minutes ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் இப்ப சினிமாவுக்கு அடுத்து தமிழ் நாட்டில் அதிக வருமானம் தரும் தொழில் ஈழ அரசியல் வீடியோக்களை யூடியூப்பில் வெளி இடுவதாகத்தான் இருக்கும் 🤣.

தமிழ் ஈழம், சீனா இலங்கையில் புதிய நாட்டை உருவாக்கியது, நீல கடவுச்சீட்டில் தமிழை நீக்கியது இப்படி தலையங்கம் வைத்தால் ஒரு flat வாங்க deposit போடும் அளவுக்கு லைக்ஸ் சப்ஸ்கிரிப்சன் எகிறும்.

பல தமிழ் நாட்டு இளைஞர்கள் நல்லா இருக்கிறார்கள் அந்த மட்டில் சந்தோசம்.

எனக்கு இந்த வீடியோவில் பிடித்த விடயம் அவரின் பெயர் -மைக் மோகன்.

ஒரு உலக அரசியல் மேதைக்கு, ஆய்வாளருக்கு என்றே செதுக்கிய பெயர்🤣.

யாழ்பாண தமிழர் தெலுங்கர் என்பதையும் சேர்த்து கொள்ளலாம்.😃🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர பெயர சரியாத்தானே பொடி போட்டிருக்கு.. மைக் மோகணெண்டு.

பிறகென்னத்துக்கு பெடியக் கோவிக்கிறது... 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எல்லோரும் இந்த You tube பக்கத்தை subscribe செய்து அதை லைக் செய்து  அதன் views ஐ அதிகரிக்குமிடத்து  விரைவில் தமிழ் ஈழம் அமையும் வாய்ப்பு உள்ளது.  

வாய்பபை தவற விடாதீர்கள் 

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

யாழ்பாண தமிழர் தெலுங்கர் என்பதையும் சேர்த்து கொள்ளலாம்.😃🙃

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

🤣 guinea pigs 🤣.

ஆனால் இந்த ஆராய்சியாளர் ஐரோபாவில் வாழும் தமிழர். மிக நேர்தியாக பழைய அசல் ஆவணங்களை மேற்கோள் காட்டி ஆனால் மிக சுவாரசியமாக எழுதியுள்ளார். @கிருபன் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

"யானை இளைச்சால், எலி கூட குடும்பம் நடத்த கூப்பிடுமாம்.." என்ற சொலவடை ஞாபகத்துக்கு வருதப்பு.. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

எம் கடும் துயர காலத்தில் மேற்கை நோக்கி பறக்கும் வசதியற்ற ஆயிரம் ஆயிரம் ஏழை ஈழத்தமிழர்களை தாங்கி பிடித்த, இன்னும் பிடிக்கின்ற மண்/மக்கள்,

எம் போராளிகளின் பின்தளமான மண்,

எம் சகோதர சகோதரிகளின் விழுபுண்ணாற்றிய மண்/மக்கள்.

நன்றி தராசின் முள் எப்போதும் உங்கள் பக்கம் சாய்ந்தே இருக்கும்.

எம்மால் சில மைக் மோகன்களாவது செழிப்புறட்டும் 🙏🏾.

இதை சீரியசாக எடுக்காமல் சிரித்து விட்டு போகும் வரை ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எம் கடும் துயர காலத்தில் மேற்கை நோக்கி பறக்கும் வசதியற்ற ஆயிரம் ஆயிரம் ஏழை ஈழத்தமிழர்களை தாங்கி பிடித்த, இன்னும் பிடிக்கின்ற மண்/மக்கள்,

எம் போராளிகளின் பின்தளமான மண்,

எம் சகோதர சகோதரிகளின் விழுபுண்ணாற்றிய மண்/மக்கள்.

நன்றி தராசின் முள் எப்போதும் உங்கள் பக்கம் சாய்ந்தே இருக்கும்.

எம்மால் சில மைக் மோகன்களாவது செழிப்புறட்டும் 🙏🏾.

இதை சீரியசாக எடுக்காமல் சிரித்து விட்டு போகும் வரை ஓகே.

உண்மை கோசான். அருமையான கருத்து. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

அப்பிடி ஒரு நிலை வந்தாலும் எங்கடை புத்திமான் பலவான்கள்   மாற்றுக்கருத்து வைச்சு எதிர்ப்பினம்........இஞ்சை பாக்கேல்லையே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ  நோக்கம் எதுவோ தெரியாது.

ஆனாலும், US congress இன்  தீர்மானம் சிங்களம் செய்யமுடியாதை வலியுறுத்தி இருக்கிறது. 

US congress இன் தீர்மானம் என்பது நிர்வாகங்களை கடந்து நிரந்தரமானது. 

சிங்களம் செய்யமுடியாதற்கான hedge (against the West) ஏ சீனாவை சிங்களம் உள் இருத்தியது அம்பாந்தோட்டையிலும், பொங் சிங் (port city) இலும்.   

இலக்கை தீவை பொறுத்தவரை, US அறுதி முடிவு எடுத்துள்ளதாகவே இதன் சமிக்ஞை போலவே தெரிகிறது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

வீடியோ  நோக்கம் எதுவோ தெரியாது.

ஆனாலும், US congress இன்  தீர்மானம் சிங்களம் செய்யமுடியாதை வலியுறுத்தி இருக்கிறது. 

US congress இன் தீர்மானம் என்பது நிர்வாகங்களை கடந்து நிரந்தரமானது. 

சிங்களம் செய்யமுடியாதற்கான hedge (against the West) ஏ சீனாவை சிங்களம் உள் இருத்தியது அம்பாந்தோட்டையிலும், பொங் சிங் (port city) இலும்.   

இலக்கை தீவை பொறுத்தவரை, US அறுதி முடிவு எடுத்துள்ளதாகவே இதன் சமிக்ஞை போலவே தெரிகிறது.

 

 

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

நல்ல சமிக்ஞையும் கூட.

எனக்கு யு எஸ் நடைமுறைகள் பற்றி அதிகம் தெரியாது.

அடுத்து இந்த resolution ஐ காங்கிரஸ், காங்கிரசின் வெளிவிவகார குழுவுக்கு அனுப்புமாம்.

அதன் பின் என்ன நடக்கும்?

இப்போ உள்ள நிலையில் இருந்து US State Department இன் இலங்கை சம்பந்தமான கொள்கை முடிவுகளை மாற்றும் வரைக்குமான படிமுறைகள் என்ன?

தெரிந்தால் கூறுங்கள்.

ஏனென்றால் இது இப்படியே காங்கிரசில் ஒரு தீர்மானமாக முடங்கி விட்டால் அதிக பலன் இல்லை.

ஆனால் இதன் வழியே அரசின் கொள்கை மாறும் என்றால் - நீண்ட காலத்தின் பின் எமக்காக ஒரு நல்ல செய்தியாக கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்பு சில விடயங்களை சொல்கிறது.

  https://www.colombotelegraph.com/index.php/dismal-foreign-policy-failure-of-rajapaksa-regime-war-crimes-resolution-in-u-s-congress/

 

5 hours ago, தமிழ் சிறி said:

உண்மை கோசான். அருமையான கருத்து. 👍

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

மாஸ்டர் கூப்பிட்டு ரெண்டு குட்டு குட்டி, நான் சொல்லுறேன் உங்களுக்கு தமிழ் ஈழம் தான் தீர்வு, விருப்பமில்லாவிடில் வாய் பேசாமல் பொத்திக் கொண்டு இருங்கோ என்றால்...... சிலவேளை ஈழ எதிர் கருத்தாளர்கள் மௌனமாக இருக்கலாம் அல்லது புலிகள் இருந்த போது இருந்த உறங்கு நிலைக்கு போகலாம். நேற்று ஒருவரை கிரிக்கெட் கிளப்பில் சந்தித்தேன், எமது பிரச்சனைக்கு காரணம் இஸ்ரேல் என்று சொன்னார். ஏனப்பா பெரிய வட்டத்தில் நின்று ரவுண்டு அடிக்கிறீங்கள், முதல் உங்களை திருத்தி கொள்ளுங்கள், இயற்கை  உங்கள் வ(லி)ழிக்கு பாதை காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Ahasthiyan said:

 ஏனப்பா பெரிய வட்டத்தில் நின்று ரவுண்டு அடிக்கிறீங்கள், முதல் உங்களை திருத்தி கொள்ளுங்கள், இயற்கை  உங்கள் வ(லி)ழிக்கு பாதை காட்டும்.

வணக்கம் அகஸ்தியன்,

நீங்கள் சொன்ன கருத்தில் மாற்று இல்லை. 

நாம் எம்மை திருத்தி கொள்ளும் செயல்திட்டத்தில் ஒரு படி “நாம் மட்டும்தான் எமது மக்களுக்கு விடிவை வேண்டுகிறோம், நம்மை விட கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் எமது மக்களுக்கு விடிவை வேண்டவில்லை” என்ற மனநிலையை கைவிடுவது என்பதையும் நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

அமெரிக்கா தங்க தாம்பாளத்தில் தனிநாடு எடுத்து தந்தால் அதை வேண்டாம் என மறுக்க போகும் ஈழத்தமிழர்கள் மிக சிலரே.

இந்த திரியையே எடுத்து கொள்ளுங்கள் - வீடியோ போட்டவர் ஒரு அமெரிக்கா காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து நேரடியாக தனிநாட்டுக்கு தாவுகிறார்.

இது எவ்வளவு அபத்தமானது? இதை அப்படியே ஏற்று சந்தோசமடைவதுதான் அறிவுடமையா?

இதை சுட்டிகாட்டினால் - புத்திமானுக்கு எமது மக்கள் விடுதலை அடைவது பிடிக்காது. நீங்கள் விரும்பாவிட்டாலும் அமெரிக்கா நினைத்தால் தரும் என்று எழுதுவதுதான் எம்மை நாமே திருத்தி கொள்ளும் வழியா?

இங்கே எவனுக்கோ அடிமை சேவகம் செய்வதை விட்டு, எமது மண்ணில், எமது மக்களோடு, ஒரு பூரண சுயாட்சி உள்ள நாட்டில் எனது மொழியை முதன்மையாக கொண்டு வாழ யாருக்குத்தான் கசக்கும்?

ஆனால் இது நடைமுறை சாத்தியமா இல்லையா என பார்க்காமல் யாரோ மைக் மோகன் சொல்வதை கேட்டு கை தட்டுவதா எம் இன விடுதலைக்கான வழி? நாம் திருந்தும் வழி?

இங்கே மைக்மோகன் சொன்னபடி நடக்க போகிறது எல்லாரும் புது பாஸ்போர்ட் எடுக்க ரெடியா இருங்கோ என இரெட்டை வரி கருத்தை பதிந்து என்னாலும் 10 லைக்சை அள்ள முடியும். ஆனால் அதனால் மைக் மோகனை தவிர வேறு யாருக்கு என்ன பலன்?

பிகு: கிரிகெட் இனிதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். 

3 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

இந்தியாவுக்கு மானம் இருந்தால்தானே🤣.

பூட்டான், இமாச்சல் பகுதிகளை தக்கவைதாலே போதும் என்ற நிலைதான் இப்போ இந்தியாவுக்கு. 

அமெரிக்காவுக்கு மான, கேந்திர பல பிரச்சனை இருக்கிறது. 

இந்திய முகவரோடு அமெரிக்கா இறங்கி ஆடக்கூடும். ஆடினால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இந்திய முகவரோடு அமெரிக்கா இறங்கி ஆடக்கூடும். ஆடினால் சந்தோசம்.

இந்த சந்தேகம் எனக்கு இருக்கு. 
நல்லதோ கெட்டதோ எம்மவருக்கு அழிவில்லாமல் இருந்தால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

நல்ல சமிக்ஞையும் கூட.

எனக்கு யு எஸ் நடைமுறைகள் பற்றி அதிகம் தெரியாது.

அடுத்து இந்த resolution ஐ காங்கிரஸ், காங்கிரசின் வெளிவிவகார குழுவுக்கு அனுப்புமாம்.

அதன் பின் என்ன நடக்கும்?

இப்போ உள்ள நிலையில் இருந்து US State Department இன் இலங்கை சம்பந்தமான கொள்கை முடிவுகளை மாற்றும் வரைக்குமான படிமுறைகள் என்ன?

தெரிந்தால் கூறுங்கள்.

ஏனென்றால் இது இப்படியே காங்கிரசில் ஒரு தீர்மானமாக முடங்கி விட்டால் அதிக பலன் இல்லை.

ஆனால் இதன் வழியே அரசின் கொள்கை மாறும் என்றால் - நீண்ட காலத்தின் பின் எமக்காக ஒரு நல்ல செய்தியாக கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்பு சில விடயங்களை சொல்கிறது.

  https://www.colombotelegraph.com/index.php/dismal-foreign-policy-failure-of-rajapaksa-regime-war-crimes-resolution-in-u-s-congress/

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.


இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.


இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

போராடிய இனமே வெட்டிக் கதை பேசும்போது பிறர் பேசுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. 

34 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

அமெரிக்கனை கூறினீர்கள் சரிதான். இந்தியாவை ஏன் இதற்குள் கொண்டு வருகிறீர்கள். மானத்துக்கும் இந்தொயாவுக்கும் என்ன சம்பந்தம் 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.


இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.


இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

 

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இப்போதைய நிலையில் இப்படியான (தனி ஈழம், நாடு அல்லது அரசு அமைப்பது) போன்ற தலையங்களை தவிர்கபட வேண்டும்  (youtube அல்லது எந்தவொரு social media யிலும்).

உழைப்பு வேண்டுமாயின், வேறு பல topics இருக்கிறது.  இலங்கைத்த் தீவில் இருக்கும் தமிழராய் வைத்தோ அல்லது குளிர் காய்வதை கைவிடுங்கள்.


இப்பொது கூட ஏற்கனவே இலங்கைத் தீவில் இருக்கும் State system இற்கு உள்ளே., தமிழருக்கு ஓர் இடம் (accommodation) ஏற்படுத்தி கொடுப்பதே மேற்காலும் (the West), கிந்தியாவாலும்   வெளிப்படையாக காட்டப்படுகிறது.

அதை கூட இந்த பொறுப்பற்ற வீடியோ கள், தமது உழைப்பிற்காக, குழம்பினாலும் தாம் உழைத்தால் போதும் என்ற சுயநல எண்ணத்தில் வெளியிடுகிறார்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.


இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.


இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

 

நீண்ட ஆழமான பதிலுக்கு நன்றி.

Private Members Bill க்கும் ஆளும் அரசு கொண்டுவரும் விடயங்களுக்கும் இங்கே பல கனதி வித்தியாசங்கள் உண்டு. அங்கும் அப்படித்தான் போலிருக்கிறது.

நானும் இவை coincidence இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அடுத்து யூகேயில், ஈயுவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

அமெரிக்காவில் ஒன்று நிகழ்ந்தால் இங்கே அதற்கான கோரஸ் எழும். அப்படி நடந்தால் இவை ஒரு சீர் அமைக்கபட்ட நடவடிக்கைகள் என்பது இன்னும் உறுதியாகும்.

இந்த கட்டுரையாளர் அரசை விமர்சிப்பவர், தரவுகள் சரியாக இருப்பினும் அவரின் வியாக்கியானங்களில் அந்த bias இருக்கும் என்பதையும் கருத வேண்டும்.

 

35 minutes ago, Kadancha said:

ரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

இதைதான் சொல்கிறேன். இது தரவு அடிப்படையில் அன்றி கட்டுரையாளர் சேர்த்த உப்பு, புளி போல எனக்கு படுகிறது.

39 minutes ago, Kadancha said:

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.

👌 நுட்பமான பார்வை. திகதி தேர்வு நிச்சயமாக தற்செயல் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.