Jump to content

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு | இந்தியா அமெரிக்கா இலங்கை உள்ளே....

 

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

எல்லோரும் இந்த You tube பக்கத்தை subscribe செய்து அதை லைக் செய்து  அதன் views ஐ அதிகரிக்குமிடத்து  விரைவில் தமிழ் ஈழம் அமையும் வாய்ப்பு உள்ளது.  

வாய்பபை தவற விடாதீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இப்ப சினிமாவுக்கு அடுத்து தமிழ் நாட்டில் அதிக வருமானம் தரும் தொழில் ஈழ அரசியல் வீடியோக்களை யூடியூப்பில் வெளி இடுவதாகத்தான் இருக்கும் 🤣.

தமிழ் ஈழம், சீனா இலங்கையில் புதிய நாட்டை உருவாக்கியது, நீல கடவுச்சீட்டில் தமிழை நீக்கியது இப்படி தலையங்கம் வைத்தால் ஒரு flat வாங்க deposit போடும் அளவுக்கு லைக்ஸ் சப்ஸ்கிரிப்சன் எகிறும்.

பல தமிழ் நாட்டு இளைஞர்கள் நல்லா இருக்கிறார்கள் அந்த மட்டில் சந்தோசம்.

எனக்கு இந்த வீடியோவில் பிடித்த விடயம் அவரின் பெயர் -மைக் மோகன்.

ஒரு உலக அரசியல் மேதைக்கு, ஆய்வாளருக்கு என்றே செதுக்கிய பெயர்🤣.

Link to comment
Share on other sites

33 minutes ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் இப்ப சினிமாவுக்கு அடுத்து தமிழ் நாட்டில் அதிக வருமானம் தரும் தொழில் ஈழ அரசியல் வீடியோக்களை யூடியூப்பில் வெளி இடுவதாகத்தான் இருக்கும் 🤣.

தமிழ் ஈழம், சீனா இலங்கையில் புதிய நாட்டை உருவாக்கியது, நீல கடவுச்சீட்டில் தமிழை நீக்கியது இப்படி தலையங்கம் வைத்தால் ஒரு flat வாங்க deposit போடும் அளவுக்கு லைக்ஸ் சப்ஸ்கிரிப்சன் எகிறும்.

பல தமிழ் நாட்டு இளைஞர்கள் நல்லா இருக்கிறார்கள் அந்த மட்டில் சந்தோசம்.

எனக்கு இந்த வீடியோவில் பிடித்த விடயம் அவரின் பெயர் -மைக் மோகன்.

ஒரு உலக அரசியல் மேதைக்கு, ஆய்வாளருக்கு என்றே செதுக்கிய பெயர்🤣.

யாழ்பாண தமிழர் தெலுங்கர் என்பதையும் சேர்த்து கொள்ளலாம்.😃🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர பெயர சரியாத்தானே பொடி போட்டிருக்கு.. மைக் மோகணெண்டு.

பிறகென்னத்துக்கு பெடியக் கோவிக்கிறது... 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எல்லோரும் இந்த You tube பக்கத்தை subscribe செய்து அதை லைக் செய்து  அதன் views ஐ அதிகரிக்குமிடத்து  விரைவில் தமிழ் ஈழம் அமையும் வாய்ப்பு உள்ளது.  

வாய்பபை தவற விடாதீர்கள் 

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

யாழ்பாண தமிழர் தெலுங்கர் என்பதையும் சேர்த்து கொள்ளலாம்.😃🙃

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

Link to comment
Share on other sites

5 minutes ago, goshan_che said:

அத்தோட Malabar inhabitants என்பதையும் சேர்த்து கொள்ள வேண்டுகிறேன்🤣.

அண்மையில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். எம்மை பற்றி பல ஆச்சரியமான விடயங்களை சொல்கிறார் ஆசிரியர்.

https://noolaham.org/wiki/index.php/காலனித்துவ_திருகோணமலை 

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

🤣 guinea pigs 🤣.

ஆனால் இந்த ஆராய்சியாளர் ஐரோபாவில் வாழும் தமிழர். மிக நேர்தியாக பழைய அசல் ஆவணங்களை மேற்கோள் காட்டி ஆனால் மிக சுவாரசியமாக எழுதியுள்ளார். @கிருபன் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 ஆளாளுக்கு ஆராட்சி செய்ய கிடைத்த இனம் நாங்கள் தான்.😛

"யானை இளைச்சால், எலி கூட குடும்பம் நடத்த கூப்பிடுமாம்.." என்ற சொலவடை ஞாபகத்துக்கு வருதப்பு.. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

எம் கடும் துயர காலத்தில் மேற்கை நோக்கி பறக்கும் வசதியற்ற ஆயிரம் ஆயிரம் ஏழை ஈழத்தமிழர்களை தாங்கி பிடித்த, இன்னும் பிடிக்கின்ற மண்/மக்கள்,

எம் போராளிகளின் பின்தளமான மண்,

எம் சகோதர சகோதரிகளின் விழுபுண்ணாற்றிய மண்/மக்கள்.

நன்றி தராசின் முள் எப்போதும் உங்கள் பக்கம் சாய்ந்தே இருக்கும்.

எம்மால் சில மைக் மோகன்களாவது செழிப்புறட்டும் 🙏🏾.

இதை சீரியசாக எடுக்காமல் சிரித்து விட்டு போகும் வரை ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எம் கடும் துயர காலத்தில் மேற்கை நோக்கி பறக்கும் வசதியற்ற ஆயிரம் ஆயிரம் ஏழை ஈழத்தமிழர்களை தாங்கி பிடித்த, இன்னும் பிடிக்கின்ற மண்/மக்கள்,

எம் போராளிகளின் பின்தளமான மண்,

எம் சகோதர சகோதரிகளின் விழுபுண்ணாற்றிய மண்/மக்கள்.

நன்றி தராசின் முள் எப்போதும் உங்கள் பக்கம் சாய்ந்தே இருக்கும்.

எம்மால் சில மைக் மோகன்களாவது செழிப்புறட்டும் 🙏🏾.

இதை சீரியசாக எடுக்காமல் சிரித்து விட்டு போகும் வரை ஓகே.

உண்மை கோசான். அருமையான கருத்து. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

அப்பிடி ஒரு நிலை வந்தாலும் எங்கடை புத்திமான் பலவான்கள்   மாற்றுக்கருத்து வைச்சு எதிர்ப்பினம்........இஞ்சை பாக்கேல்லையே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ  நோக்கம் எதுவோ தெரியாது.

ஆனாலும், US congress இன்  தீர்மானம் சிங்களம் செய்யமுடியாதை வலியுறுத்தி இருக்கிறது. 

US congress இன் தீர்மானம் என்பது நிர்வாகங்களை கடந்து நிரந்தரமானது. 

சிங்களம் செய்யமுடியாதற்கான hedge (against the West) ஏ சீனாவை சிங்களம் உள் இருத்தியது அம்பாந்தோட்டையிலும், பொங் சிங் (port city) இலும்.   

இலக்கை தீவை பொறுத்தவரை, US அறுதி முடிவு எடுத்துள்ளதாகவே இதன் சமிக்ஞை போலவே தெரிகிறது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

வீடியோ  நோக்கம் எதுவோ தெரியாது.

ஆனாலும், US congress இன்  தீர்மானம் சிங்களம் செய்யமுடியாதை வலியுறுத்தி இருக்கிறது. 

US congress இன் தீர்மானம் என்பது நிர்வாகங்களை கடந்து நிரந்தரமானது. 

சிங்களம் செய்யமுடியாதற்கான hedge (against the West) ஏ சீனாவை சிங்களம் உள் இருத்தியது அம்பாந்தோட்டையிலும், பொங் சிங் (port city) இலும்.   

இலக்கை தீவை பொறுத்தவரை, US அறுதி முடிவு எடுத்துள்ளதாகவே இதன் சமிக்ஞை போலவே தெரிகிறது.

 

 

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

நல்ல சமிக்ஞையும் கூட.

எனக்கு யு எஸ் நடைமுறைகள் பற்றி அதிகம் தெரியாது.

அடுத்து இந்த resolution ஐ காங்கிரஸ், காங்கிரசின் வெளிவிவகார குழுவுக்கு அனுப்புமாம்.

அதன் பின் என்ன நடக்கும்?

இப்போ உள்ள நிலையில் இருந்து US State Department இன் இலங்கை சம்பந்தமான கொள்கை முடிவுகளை மாற்றும் வரைக்குமான படிமுறைகள் என்ன?

தெரிந்தால் கூறுங்கள்.

ஏனென்றால் இது இப்படியே காங்கிரசில் ஒரு தீர்மானமாக முடங்கி விட்டால் அதிக பலன் இல்லை.

ஆனால் இதன் வழியே அரசின் கொள்கை மாறும் என்றால் - நீண்ட காலத்தின் பின் எமக்காக ஒரு நல்ல செய்தியாக கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்பு சில விடயங்களை சொல்கிறது.

  https://www.colombotelegraph.com/index.php/dismal-foreign-policy-failure-of-rajapaksa-regime-war-crimes-resolution-in-u-s-congress/

 

5 hours ago, தமிழ் சிறி said:

உண்மை கோசான். அருமையான கருத்து. 👍

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழருக்கு தமிழீழம் வேண்டாம் என்றாலும் 

அமெரிக்காவுக்கோ இந்தியாவுக்கோ தேவை ஏற்பட்டால் தமிழீழம் பிறக்கும்.

மாஸ்டர் கூப்பிட்டு ரெண்டு குட்டு குட்டி, நான் சொல்லுறேன் உங்களுக்கு தமிழ் ஈழம் தான் தீர்வு, விருப்பமில்லாவிடில் வாய் பேசாமல் பொத்திக் கொண்டு இருங்கோ என்றால்...... சிலவேளை ஈழ எதிர் கருத்தாளர்கள் மௌனமாக இருக்கலாம் அல்லது புலிகள் இருந்த போது இருந்த உறங்கு நிலைக்கு போகலாம். நேற்று ஒருவரை கிரிக்கெட் கிளப்பில் சந்தித்தேன், எமது பிரச்சனைக்கு காரணம் இஸ்ரேல் என்று சொன்னார். ஏனப்பா பெரிய வட்டத்தில் நின்று ரவுண்டு அடிக்கிறீங்கள், முதல் உங்களை திருத்தி கொள்ளுங்கள், இயற்கை  உங்கள் வ(லி)ழிக்கு பாதை காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Ahasthiyan said:

 ஏனப்பா பெரிய வட்டத்தில் நின்று ரவுண்டு அடிக்கிறீங்கள், முதல் உங்களை திருத்தி கொள்ளுங்கள், இயற்கை  உங்கள் வ(லி)ழிக்கு பாதை காட்டும்.

வணக்கம் அகஸ்தியன்,

நீங்கள் சொன்ன கருத்தில் மாற்று இல்லை. 

நாம் எம்மை திருத்தி கொள்ளும் செயல்திட்டத்தில் ஒரு படி “நாம் மட்டும்தான் எமது மக்களுக்கு விடிவை வேண்டுகிறோம், நம்மை விட கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பவர்கள் எமது மக்களுக்கு விடிவை வேண்டவில்லை” என்ற மனநிலையை கைவிடுவது என்பதையும் நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

அமெரிக்கா தங்க தாம்பாளத்தில் தனிநாடு எடுத்து தந்தால் அதை வேண்டாம் என மறுக்க போகும் ஈழத்தமிழர்கள் மிக சிலரே.

இந்த திரியையே எடுத்து கொள்ளுங்கள் - வீடியோ போட்டவர் ஒரு அமெரிக்கா காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து நேரடியாக தனிநாட்டுக்கு தாவுகிறார்.

இது எவ்வளவு அபத்தமானது? இதை அப்படியே ஏற்று சந்தோசமடைவதுதான் அறிவுடமையா?

இதை சுட்டிகாட்டினால் - புத்திமானுக்கு எமது மக்கள் விடுதலை அடைவது பிடிக்காது. நீங்கள் விரும்பாவிட்டாலும் அமெரிக்கா நினைத்தால் தரும் என்று எழுதுவதுதான் எம்மை நாமே திருத்தி கொள்ளும் வழியா?

இங்கே எவனுக்கோ அடிமை சேவகம் செய்வதை விட்டு, எமது மண்ணில், எமது மக்களோடு, ஒரு பூரண சுயாட்சி உள்ள நாட்டில் எனது மொழியை முதன்மையாக கொண்டு வாழ யாருக்குத்தான் கசக்கும்?

ஆனால் இது நடைமுறை சாத்தியமா இல்லையா என பார்க்காமல் யாரோ மைக் மோகன் சொல்வதை கேட்டு கை தட்டுவதா எம் இன விடுதலைக்கான வழி? நாம் திருந்தும் வழி?

இங்கே மைக்மோகன் சொன்னபடி நடக்க போகிறது எல்லாரும் புது பாஸ்போர்ட் எடுக்க ரெடியா இருங்கோ என இரெட்டை வரி கருத்தை பதிந்து என்னாலும் 10 லைக்சை அள்ள முடியும். ஆனால் அதனால் மைக் மோகனை தவிர வேறு யாருக்கு என்ன பலன்?

பிகு: கிரிகெட் இனிதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். 

3 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

இந்தியாவுக்கு மானம் இருந்தால்தானே🤣.

பூட்டான், இமாச்சல் பகுதிகளை தக்கவைதாலே போதும் என்ற நிலைதான் இப்போ இந்தியாவுக்கு. 

அமெரிக்காவுக்கு மான, கேந்திர பல பிரச்சனை இருக்கிறது. 

இந்திய முகவரோடு அமெரிக்கா இறங்கி ஆடக்கூடும். ஆடினால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இந்திய முகவரோடு அமெரிக்கா இறங்கி ஆடக்கூடும். ஆடினால் சந்தோசம்.

இந்த சந்தேகம் எனக்கு இருக்கு. 
நல்லதோ கெட்டதோ எம்மவருக்கு அழிவில்லாமல் இருந்தால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இது யோசிக்க வேண்டிய விடயம்தான் கடஞ்சா.

நல்ல சமிக்ஞையும் கூட.

எனக்கு யு எஸ் நடைமுறைகள் பற்றி அதிகம் தெரியாது.

அடுத்து இந்த resolution ஐ காங்கிரஸ், காங்கிரசின் வெளிவிவகார குழுவுக்கு அனுப்புமாம்.

அதன் பின் என்ன நடக்கும்?

இப்போ உள்ள நிலையில் இருந்து US State Department இன் இலங்கை சம்பந்தமான கொள்கை முடிவுகளை மாற்றும் வரைக்குமான படிமுறைகள் என்ன?

தெரிந்தால் கூறுங்கள்.

ஏனென்றால் இது இப்படியே காங்கிரசில் ஒரு தீர்மானமாக முடங்கி விட்டால் அதிக பலன் இல்லை.

ஆனால் இதன் வழியே அரசின் கொள்கை மாறும் என்றால் - நீண்ட காலத்தின் பின் எமக்காக ஒரு நல்ல செய்தியாக கொள்ளலாம்.

கீழே உள்ள இணைப்பு சில விடயங்களை சொல்கிறது.

  https://www.colombotelegraph.com/index.php/dismal-foreign-policy-failure-of-rajapaksa-regime-war-crimes-resolution-in-u-s-congress/

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.


இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.


இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

Untitled.jpg

மைக் மோகனின் பொழிப்புரை நல்ல நகைச்சுவையா இருந்தது.
அதே நேரம் 'ஈழத்தவர்களின் துயரமும், போராட்டமும் இப்படி வெட்டிக்கதை பேசுபவர்களின் பொருளாக மாறுமளவிற்கு இறங்கிவிட்டதே!' என்ற வருத்தமும் வந்தது.

போராடிய இனமே வெட்டிக் கதை பேசும்போது பிறர் பேசுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. 

34 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் சீனா முற்று முழுதாக கால் பதிப்பது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மானப்பிரச்சனையாக இருக்காதா?

அமெரிக்கனை கூறினீர்கள் சரிதான். இந்தியாவை ஏன் இதற்குள் கொண்டு வருகிறீர்கள். மானத்துக்கும் இந்தொயாவுக்கும் என்ன சம்பந்தம் 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.


இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.


இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

 

இந்தியா சிதற வேண்டும் என பகிரங்கமாகக் நான் கூறுவதற்கான பிரதான காரணம், தமிழரின் கோபத்தையும் மனமாற்றத்தையும் பிற அறிய வேண்டும் என்பதற்காகவே.

இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிர்காலத்தில் பல அசெளகரியங்கள் கூட ஏற்படலாம். ஆனால் எங்களின் கோபம், மாற்றம் வெளிப்படுத்தப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இப்போதைய நிலையில் இப்படியான (தனி ஈழம், நாடு அல்லது அரசு அமைப்பது) போன்ற தலையங்களை தவிர்கபட வேண்டும்  (youtube அல்லது எந்தவொரு social media யிலும்).

உழைப்பு வேண்டுமாயின், வேறு பல topics இருக்கிறது.  இலங்கைத்த் தீவில் இருக்கும் தமிழராய் வைத்தோ அல்லது குளிர் காய்வதை கைவிடுங்கள்.


இப்பொது கூட ஏற்கனவே இலங்கைத் தீவில் இருக்கும் State system இற்கு உள்ளே., தமிழருக்கு ஓர் இடம் (accommodation) ஏற்படுத்தி கொடுப்பதே மேற்காலும் (the West), கிந்தியாவாலும்   வெளிப்படையாக காட்டப்படுகிறது.

அதை கூட இந்த பொறுப்பற்ற வீடியோ கள், தமது உழைப்பிற்காக, குழம்பினாலும் தாம் உழைத்தால் போதும் என்ற சுயநல எண்ணத்தில் வெளியிடுகிறார்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

நீங்கள் இணைத்த ஆய்வு கட்டுரையில் பல விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

US congress இல் வரும் தீர்மானங்கள் எழுந்தமான அல்லது உணர்வு பூர்வ அடிப்படையில் வருபவை அல்ல.

மற்றும் தீர்மானித்தாய் முன்னின்று முன்மொழிந்து, கொண்டுவந்தது எந்த அரசியல்வாதி (தனிப்பட்டவரா), குழு (Foreign Relations Committee போன்றவை ) அல்லது எந்த caucus என்பதில் தீர்மானத்தின் கனதியும், எவ்வளவு கனதியாக US எடுக்கிறது, தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதற்கான US  இன் உத்வேகம் போன்றவை தங்கி இருக்கின்றன.  

கட்டுரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

பூகோள அரசியலில் காரணம் இன்றி காரியம் நடைபெறுவதில்லை என்ற எழுதபடாத நம்பிக்கை இருக்கிறது. 

கட்டுரையில் சொல்லப்பட Biden சொன்னது. ஆனால்  கட்டுரையில் சொல்லப்பட்ட காரணம், ஆத்திரத்தால் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.  

கிந்தியா UNHRC இல் சொன்ன இரு தூண்கள் , ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு ஆதரவு தர முடியாது என்பது (ஆயினும் அதை கிந்தியா ஆத்ம பூர்வகமாகவே சொன்னதா என்ற சந்தேகமும் இருக்கிறது). அதில் நிலபுல ஒருமைப்பாட்டையே கிந்தியா ஓர் தூணாக குறிப்பிட்டு இருந்தது.    

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.


இதில் கிந்தியாவுக்கும் ஓர் சமிக்ஞை இருப்பதாகவே எனக்கு படுகிறது. அதாவது இலங்கைத் தீவின் பூகோள  கடிவாளத்தை மீளவும் us கையில் எடுத்துள்ளது.


இந்திய உடைவு பற்றி நாம் எவருமே மூச்சு கூட காட்ட கூடாது (விருப்பம் ஆயினும்) என்பதற்கு இப்போதைய நிலையில் இதுவும் ஓர் காரணம். ஏனெனில், சிங்களதுக்கும் ஏன் கிந்தியாவுக்கும்  வசதியாக போய் விடும். மற்றது US இந்திய அரசை அதனது system த்தின் (democratic capitalist) பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கிறது, பூகோள நலன்களுக்கு அப்பால்.     

இப்படியாக பல கோடிகள்  சொறி சிங்களத்துக்கு காட்டப்படுகிறது. சிங்களம் சீனாவை உள்ளே இழுத்து இருதுகிறது.   
 
இப்படடியாக பல காரியங்கள் அடுக்காக நடைபெறுவது ஒன்றும் சாதாரண coincidence அல்ல என்றே நான் நினைக்கிறன்.

 

நீண்ட ஆழமான பதிலுக்கு நன்றி.

Private Members Bill க்கும் ஆளும் அரசு கொண்டுவரும் விடயங்களுக்கும் இங்கே பல கனதி வித்தியாசங்கள் உண்டு. அங்கும் அப்படித்தான் போலிருக்கிறது.

நானும் இவை coincidence இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

அடுத்து யூகேயில், ஈயுவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

அமெரிக்காவில் ஒன்று நிகழ்ந்தால் இங்கே அதற்கான கோரஸ் எழும். அப்படி நடந்தால் இவை ஒரு சீர் அமைக்கபட்ட நடவடிக்கைகள் என்பது இன்னும் உறுதியாகும்.

இந்த கட்டுரையாளர் அரசை விமர்சிப்பவர், தரவுகள் சரியாக இருப்பினும் அவரின் வியாக்கியானங்களில் அந்த bias இருக்கும் என்பதையும் கருத வேண்டும்.

 

35 minutes ago, Kadancha said:

ரையில் சொல்லப்பட்டது  உண்மையானால், அதாவது இது ஏற்கனவே கொள்கை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம், US அரசியல் மற்றும் நிர்வாக சம்பிரதாயத்தின் ஊடக வருகிறது.

இதைதான் சொல்கிறேன். இது தரவு அடிப்படையில் அன்றி கட்டுரையாளர் சேர்த்த உப்பு, புளி போல எனக்கு படுகிறது.

39 minutes ago, Kadancha said:

எனது தனிப்பட்ட முறையில், US congress இல் தீர்மானம்  கொண்டுவரப்பட்ட திகதி (may 18) மிகவும் முக்கியமானதும், அப்பட்டமானதும் (explicit) கூட. 

ஏதோ முக்கிய நோக்கத்தை (intention) மற்றும் தகவலை (message) குறித்தே இந்த திகதியில்  (may 18) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றே நான் எண்ணுகிறேன். 

மற்றது, கனடா ஒண்டாரியோ மாகாண தமிழ் இனப்படுகொலை கற்றல் வாரம் சட்ட மூல அங்கீகாரத்தின்  சூட்டுடன் US congress தீர்மானம் வந்தது.

👌 நுட்பமான பார்வை. திகதி தேர்வு நிச்சயமாக தற்செயல் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.