Jump to content

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதே படையணி  சிங்கள  பகுதிகளிலும் இருக்கா??

பவனி வருகுதா???

கோத்தபாய தமிழ்பகுதிகளில்  கொரோனாவைக் கட்டுப்படுத்த விரும்பி  தமிழர்கள்  முகக்கவசம் அணிவதையும்...சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் சரியான முறையில்  நடைமுறைப்படுத்துகிறார்...சிங்களப்பகுதிகள் பற்றி அவருக்கு  கவலையில்லை. 😜😜😜

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுல நல்ல சுத்த  யாழ்ப்பாண தமிழ் கதைக்கிற பிள்ளையும் இருக்கு வீடியோ நேற்று பார்த்தன் இங்க கன பேர் குத்தி முறியுற வேஸ்ட் ஆகுது

இவர்கள் இங்கே குத்தி முறிவது இலங்கையில் வாழ்கின்ற தமிழிச்சிகளை இராணுவ உடையில் கண்டால் இவர்களுக்கு அலர்ஜி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர்கள் இங்கே குத்தி முறிவது இலங்கையில் வாழ்கின்ற தமிழிச்சிகளை இராணுவ உடையில் கண்டால் இவர்களுக்கு அலர்ஜி.

இதே தமிழிச்சிகளை சிங்கள காடை இராணுவத்தின் புணர்ச்சி தேவைக்கு என்று மொழிந்தவர் தான் கோத்தபாய.. நந்தசேன.. என்ற கொடி மிருகம். அந்த மிருகத்தின் இராணுவத்திடம் சீருடை வாங்குவதிலும்..  கேவலம் எதுவுமில்லை. 

மக்களை அடக்கி ஒடுக்க அல்ல.. இராணுவம். நாட்டை பிற ஆக்கிரமிப்பில் இருந்து காக்கவே இராணுவம். 

உலகில் கொரோனாவை கட்டுப்படுத்த.. இராணுவக் காவல் சாவடி போட்டு துப்பாக்கி ஏந்தி கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையில் சொறீலங்கா தான் முதன்மையா இருக்குது.

இதே ஐரோப்பாவில் பெரும் கொரோனா நெருக்கடியை சந்தித்த பிரிட்டனில் கூட இராணுவம்.. ஆயுதத்துடன் மக்களை நோக்கி திருப்பட்டதில்லை.

எதுக்கும்.. சிங்களவன் செய்யும் அநியாயங்களை நியாயப்படுத்துவது.. சில தமிழர்களின் இயலாப் புத்தி என்று தான் சொல்லனும். வேறு எதுவும் அதனை விளக்கச் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

இதே தமிழிச்சிகளை சிங்கள காடை இராணுவத்தின் புணர்ச்சி தேவைக்கு என்று மொழிந்தவர் தான் கோத்தபாய.. நந்தசேன.. என்ற கொடி மிருகம். அந்த மிருகத்தின் இராணுவத்திடம் சீருடை வாங்குவதிலும்..  கேவலம் எதுவுமில்லை. 

சிங்கள காடை இராணுவத்தின் புணர்ச்சி தேவைக்கு தமிழிச்சிகள் என்று கோத்தபாயவும் நந்தசேனவும் எப்போது அறிவித்தார்கள் இது எப்போது நடந்தது? அப்படியானால் கோத்தபாயவின் அரசு ஆட்சிக்கு வந்த பின்பு அரச பதவியில் உள்ள எல்லா தமிழிச்சிகளும் தங்களது வேலைகளை இராஜினாமா செய்திருக்க வேண்டுமே. வசதி குறைந்த நாடுகளில் வாழ்வோரின் வாழ்வாதார துன்பங்களை கவனத்தில் கொள்வது தேவையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nedukkalapoovan said:

  

இதே தமிழிச்சிகளை சிங்கள காடை இராணுவத்தின் புணர்ச்சி தேவைக்கு என்று மொழிந்தவர் தான் கோத்தபாய.. நந்தசேன.. என்ற கொடி மிருகம். அந்த மிருகத்தின் இராணுவத்திடம் சீருடை வாங்குவதிலும்..  கேவலம் எதுவுமில்லை. 

மக்களை அடக்கி ஒடுக்க அல்ல.. இராணுவம். நாட்டை பிற ஆக்கிரமிப்பில் இருந்து காக்கவே இராணுவம். 

உலகில் கொரோனாவை கட்டுப்படுத்த.. இராணுவக் காவல் சாவடி போட்டு துப்பாக்கி ஏந்தி கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையில் சொறீலங்கா தான் முதன்மையா இருக்குது.

இதே ஐரோப்பாவில் பெரும் கொரோனா நெருக்கடியை சந்தித்த பிரிட்டனில் கூட இராணுவம்.. ஆயுதத்துடன் மக்களை நோக்கி திருப்பட்டதில்லை.

எதுக்கும்.. சிங்களவன் செய்யும் அநியாயங்களை நியாயப்படுத்துவது.. சில தமிழர்களின் இயலாப் புத்தி என்று தான் சொல்லனும். வேறு எதுவும் அதனை விளக்கச் செய்ய முடியாது. 

 

கோத்தபாய, மகிந்தர் குடும்பம் ஆட்சியை கைப்பற்ற முன்னரும் இராணுவத்தில் தமிழர்கள் பணியாற்றினார்களே. 

இலங்கை நாட்டு இராணுவத்தின் பணியாற்றுவதற்கு  தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? நாட்டில் அனைத்து அரசு பணிகளிலும் பணியாற்றும் தமிழர்கள் இராணுவத்தில் இணையாமல் விலகிச்செல்வது இனவாதத்துக்கு இன்னும் வசதியாகிச்செல்லும். 

இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டும் போர் நிறைவடைந்தும் 12 வருடங்கள் ஆகிவிட்டன. இனி நடக்கப்போகின்றவை பற்றி பார்க்கலாமே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிங்கள காடை இராணுவத்தின் புணர்ச்சி தேவைக்கு தமிழிச்சிகள் என்று கோத்தபாயவும் நந்தசேனவும் எப்போது அறிவித்தார்கள் இது எப்போது நடந்தது? அப்படியானால் கோத்தபாயவின் அரசு ஆட்சிக்கு வந்த பின்பு அரச பதவியில் உள்ள எல்லா தமிழிச்சிகளும் தங்களது வேலைகளை இராஜினாமா செய்திருக்க வேண்டுமே. வசதி குறைந்த நாடுகளில் வாழ்வோரின் வாழ்வாதார துன்பங்களை கவனத்தில் கொள்வது தேவையானது.

12 வருடத்துக்குள் சொந்த இனத்திற்கு நடந்ததை மறந்துவிட்டு என்னத்தை விளங்கி..??! இதே கோத்தாபாய என்ற கொடிய இனப்படுகொலையாளி.. போர்க்குற்றவாளி.. தமிழ் பெண்கள் எமது இராணுவத்தின் இச்சைக்கு.. தமிழ் ஆண்கள் இந்துமா சமுத்திரத்திற்கு.. என்று இறுதி யுத்த காலத்தில் முழங்கியது மறந்துவிட்டது என்றால்.. உங்களால்.. இந்த உலகில் எதனையும் அவ்வளவு இலகுவாக விளங்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கோத்தபாய, மகிந்தர் குடும்பம் ஆட்சியை கைப்பற்ற முன்னரும் இராணுவத்தில் தமிழர்கள் பணியாற்றினார்களே. 

இலங்கை நாட்டு இராணுவத்தின் பணியாற்றுவதற்கு  தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? நாட்டில் அனைத்து அரசு பணிகளிலும் பணியாற்றும் தமிழர்கள் இராணுவத்தில் இணையாமல் விலகிச்செல்வது இனவாதத்துக்கு இன்னும் வசதியாகிச்செல்லும். 

இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டும் போர் நிறைவடைந்தும் 12 வருடங்கள் ஆகிவிட்டன. இனி நடக்கப்போகின்றவை பற்றி பார்க்கலாமே. 

17 சதவீதமாக ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்த போது எத்தனை சதவீதம் தமிழர்கள் சிங்கள இராணுவத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டார்கள்..???! அதேபோல்.. மலையகத் தமிழர்கள் எத்தனை சதவீதம் உள்ளீர்க்கப்பட்டார்கள்...???

சரணடைந்த ஆண் போராளிகள் பெருமளவில் காணாமல் போக.. பெண் போராளிகளுக்கு என்ன நிகழ்ந்தது.. சிங்கள இராணுவ பாலியல் கொத்தடிமைகளாக்கப்பட்டதை எப்படி மறந்து என்ன நியாயத்தை கதைக்கப் போகிறீர்கள்.

சரி.. சொந்த இனத்தை அழித்த பெரும்பான்மை சிங்கள பேரினவாத இனத்தால்.. 95 சதவீதம் கட்டமைக்கப்பட்ட இராணுவத்தில் இணைந்து தான் தமிழர்கள் இலங்கைத் தீவில் வாழனும் என்ற தேவை இருக்கா..??! 

படித்த பண்பட்ட சிங்களவர்களே தங்கள் பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை சிங்கள இராணுவத்தின் இணைய தூண்டாத போது.. சரி அதை விடுவோம்.. சிங்கள இராணுவத்திற்கு காட்டிக்கொடுப்பு சேவகம் செய்த தமிழ் ஒட்டுக்குழு கூலிகளே... தங்கள் பிள்ளைகளை இராணுவத்தில் சேர்க்க நினைக்காத போது.. அப்பாவி ஏழைத் தமிழ் பெண் பிள்ளைகள் சிங்கள இராணுவத்தில் இணைவித்து.. எதற்கு சிங்கள இராணுவ பாலியல் இச்சைக்கு தீனியாக்கனும்..??! 

இல்லை அப்படி எதுவுமே நடக்காது என்றால்.. இதே கோத்தபாயவினால்.. இதே இராணுவத்தின் தேவைக்கு அனுதாரபுரத்திலும் தியத்தலாவையிலும் நடத்தப்படும்... பாலியல் விடுதிகளில் ஏன் தமிழ் பெண்களையும்.. சிங்களப் பெண்களையும் ஈடுபடுத்தனும்..???!

சிங்கள இராணுவத்தின் சிங்களப் பெண்கள் இணைந்து செயற்படுவதே பாதுகாப்பற்ற நிலை இருக்கும் போது.. தமிழ் பெண்களை அதில் இணையும் படி தூண்டும் உங்களை போன்றவர்களிடம் உள்ள நியாயம் என்பது அப்பட்டமான அநியாயம் தானே...?!

ஒன்றில்.. ஊர் உலகில் நடப்பது எது என்று அறியாமல் நியாயம் என்று எதையோ கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.. அல்லது ஒட்டுமொத்தமாக சிங்கள இராணுவத்துக்கு வெள்ளையடிக்கும்.. கூட்டத்திற்காக கூவுகிறீர்களா..??!

ஒரு பலஸ்தீனன் கூட.. இஸ்ரேல் இராணுவத்தில் தன் பெண்களை இணை என்று சொல்லமாட்டான்.. ஆனால்.. எவ்வளவு தான் அடிச்சுக் கொன்றாலும் அடிமைப்படுத்தினாலும்.. ஈழத்தமிழர்கள் சில கோடரிக்காம்புகள் சொல்லத் தயாராக உள்ளனர்.

மாஸ்க் போடாத என்றதைச் சொல்ல... இராணுவச் சீருடை அவசியமில்லை. பாடசாலை சாரணச் சீருடையே போது. நாங்களும் இதே சமூகத்தில் கொலரா பரவல்.. எயிட்ஸ் பரவல்.. உட்பட பல நோய் பரவல்களை தடுக்க உதவித்தான் வந்திருக்கிறோம்.. அதற்கு சிங்கள இராணுவச் சீருடை அணியவில்லை.. மாறாக.. பாடசாலை சீருடை தான்..!

தமிழ் பிள்ளைகளுக்கு எத்தனையோ வழிமுறைகளில் தொழில்துறைகளை விருத்தி செய்து வேலை வாய்ப்பை அளிக்க முடியும்.. அதைவிடுத்து சிங்கள இராணுவத்தில் சிங்கள இராணுவத்தின் கொடிய தேவைகளுக்காக தமிழ் பிள்ளைகளை எனியும் பலியிட அனுமதிப்பது மிகப்பெரிய இனத்துரோகம் மட்டுமல்ல.. சிங்களவனின் இன அழிப்புக்கு கூட இருந்து உதவுவது போன்றதாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு இனவழிப்பு நடைபெறும் பொழுது "சிங்கள இராணுவம்" செய்தது என்ற குற்றச்சாட்டு வராமல் இருக்க இந்த தமிழ் பேசும் இராணுவத்தினர் உள்வாங்கப்படுகிறார்கள்...இனவழிப்பு நடை பெறவில்லை மூவினத்தினரும் இராணுவத்தில் இருக்கின்றனர் என சொல்வதற்கே இந்த முயற்சி ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2021 at 22:11, விளங்க நினைப்பவன் said:

சிங்கள காடை இராணுவத்தின் புணர்ச்சி தேவைக்கு தமிழிச்சிகள் என்று கோத்தபாயவும் நந்தசேனவும் எப்போது அறிவித்தார்கள் இது எப்போது நடந்தது?

சிங்களக் காட்டுமிராண்டிகளின் தமிழின அழிப்பிற்கு வெள்ளையடிக்கும் பிறவிகளால்த்தான் இப்படியான ஒரு கேள்வியைக் கேட்க முடியும்.

இன்று இந்த ****** வணங்குகின்ற மேன்மை தங்கிய இலங்கையின உத்தம , உதாரண புருஷர் கோத்தாபயதான் முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றியவுடன்ம் முல்லைக் கடல் தமிழ் ஆண்களின் ரத்தத்தால் சிவப்பாகவேண்டும் என்றும், தமிழ்ப்பெண்கள் ராணுவத்தின் இச்சைகளுக்குப் பயன்படவேண்டும் என்றும் கூறியவன். அதனை அவ்வளவு இலகுவில் மறக்க முடியாது.

இந்த ***** இன்னும் சில காலம் போனால் தமிழர் மீது யுத்தமா? அது எப்போது நடந்தது என்று கேட்டலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரஞ்சித் said:

சிங்களக் காட்டுமிராண்டிகளின் தமிழின அழிப்பிற்கு வெள்ளையடிக்கும் பிறவிகளால்த்தான் இப்படியான ஒரு கேள்வியைக் கேட்க முடியும்.

இன்று இந்த **** வணங்குகின்ற மேன்மை தங்கிய இலங்கையின உத்தம , உதாரண புருஷர் கோத்தாபயதான் முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றியவுடன்ம் முல்லைக் கடல் தமிழ் ஆண்களின் ரத்தத்தால் சிவப்பாகவேண்டும் என்றும், தமிழ்ப்பெண்கள் ராணுவத்தின் இச்சைகளுக்குப் பயன்படவேண்டும் என்றும் கூறியவன். அதனை அவ்வளவு இலகுவில் மறக்க முடியாது.

இந்த **** இன்னும் சில காலம் போனால் தமிழர் மீது யுத்தமா? அது எப்போது நடந்தது என்று கேட்டலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 

*****

விளங்கநினைப்பவன் இந்த கேள்வி கேட்டதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். தனக்குத் தெரியாது அது தான் கேட்டனான் என்று மழுப்ப இயலாது. இது வேண்டுமென்றே கேட்ட மாதிரி தான் இருக்கு. இங்கே இலங்கை அரசாங்கத்துக்கு சார்பாக கதைப்பவர்கள் கூட கோத்தபாய அப்பிடி சொன்னது என்பதை ஏற்றுக்கொள்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2021 at 22:45, நியாயத்தை கதைப்போம் said:

கோத்தபாய, மகிந்தர் குடும்பம் ஆட்சியை கைப்பற்ற முன்னரும் இராணுவத்தில் தமிழர்கள் பணியாற்றினார்களே. 

இலங்கை நாட்டு இராணுவத்தின் பணியாற்றுவதற்கு  தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? நாட்டில் அனைத்து அரசு பணிகளிலும் பணியாற்றும் தமிழர்கள் இராணுவத்தில் இணையாமல் விலகிச்செல்வது இனவாதத்துக்கு இன்னும் வசதியாகிச்செல்லும். 

இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டும் போர் நிறைவடைந்தும் 12 வருடங்கள் ஆகிவிட்டன. இனி நடக்கப்போகின்றவை பற்றி பார்க்கலாமே. 

 

இலங்கை ராணுவத்தின் அதிமுக்கிய இலட்சியமே தமிழினத்தின் மீதான ஆக்கிரமிப்பும் அழிப்பும்தான்.

இதேகேள்வியை ஹிட்லரின் படைகளில் ஏன் ஜேர்மனிய யூதர்கள் இணைந்துகொள்ளக் கூடாதென்று கேட்கலாமே? இஸ்ரேல் ராணுவத்தில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிற பாலஸ்த்தீனர்கள் ஏன் இணைந்துகொள்ளக் கூடாதென்று கேட்கலாமே? சிறுபான்மை முஸ்லீம்களை இனவழிப்புச் செய்யும் பர்மிய ராணுவத்தில், அந்த ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கு ரொகிங்கிய முஸ்லீம்கள் ஏன் சேரக்கூடாதென்று கேட்கலாமே? சீனாவினால் ஒரு இனக்குழுமமாக திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ஊகர் இன முஸ்லீம்கள் ஏன் அவர்களை ஆக்கிரமிக்கும் ராணுவத்தில் இணையக்கூடாது என்று கேட்கலாமே? இவர்கள் எவருமே தம்மை ஆக்கிரமித்து, இனவழிப்புச் செய்யக் காத்திருக்கும் ராணுவத்தில் இணையக் கூடாதென்றால், என்ன ....த் தமிழர்கள் தங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இனவழிப்பு ராணுவத்தில் இணையவேண்டும் என்று கேட்கிறீர்கள்?  என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறீர்களா? இப்படியெல்லாம் எப்படித்தான் உங்களால் யோசிக்க முடிகிறதோ? 

தமிழர்கள் என்பதனாலேயே எல்லாவிதத்திலும் அடக்கியொடுக்கப்படும் எம்மை , ஏன் அதே ராணுவத்தில் இணையவில்லையென்று கேட்பது அப்பாவித்தனமாகத் தோன்றினாலும், போர்க்குற்றவாளிகளுக்கு வெள்ளையடிக்கும் வேலையில் இந்தக் கருத்தாளர் இருப்பதால், அவரின் முயற்சி வெளித்தெரிந்துவிடுகிறது.

******

தன்னை அதிமேதாவியாகவும் ,நடுநிலைமைவாதியாகவும் காட்டிக்கொண்டு புலியெதிர்ப்பை அனைத்துக் கருத்துக்களிலும் கக்கிவரும் ஒருவர் இப்போது இனக்கொலையாளிகளுக்கு வெள்ளையடிக்கும் கைங்கரியத்திலும் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.


கோத்தாபய, சவீந்திர சில்வா, கமால் குண்ரட்ண, ஜகத் டயஸ், பெரேரா, வசந்த கரன்னகொட, சரத் வீரசேகர என்று இனக்கொலையாளிகள் தளபதியாக இருக்கின்ற ஒரு இனவழிப்புக் காட்டுமிராண்டி ராணுவத்தில் இணையலாமே என்று அப்பாவித்தனமாகக் கேட்கும் இனக்கொலையாளிகளின் அடிவருடிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, putthan said:

இன்னுமொரு இனவழிப்பு நடைபெறும் பொழுது "சிங்கள இராணுவம்" செய்தது என்ற குற்றச்சாட்டு வராமல் இருக்க இந்த தமிழ் பேசும் இராணுவத்தினர் உள்வாங்கப்படுகிறார்கள்...இனவழிப்பு நடை பெறவில்லை மூவினத்தினரும் இராணுவத்தில் இருக்கின்றனர் என சொல்வதற்கே இந்த முயற்சி ....

இதுதான் உண்மை அண்ணை. இன்றுவரை டக்கிளஸ், கருணா, பிள்ளையான், சங்கரி , கதிர்காமர்  போன்ற கோடரிக்காம்புகளை அருகில் வைத்துக்கொண்டு, "பார்த்தீர்களா, தமிழர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை, தமிழர்களுக்கெதிராக இனவழிப்பே நடக்கவில்லை" என்று அவன் கூவுகிறான், இனிமேலும் அதைத்தான் செய்யப்போகிறான்.

இன்று மிகவும் திட்டமிட்ட முறையில் எமது மொழியும், கலாசாரமும், தாயகமும் சிங்கள இனவாதிகளால் விழுங்கப்பட்டு வருகிறது. ஆனால் விளங்க நினைப்பவனுக்கோ, நியாயம் பேசுபவனுக்கோ, துல்ப்பெனுக்கோ இவை தெரிந்தாலும், தமது ***** இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. "ஏன் , தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தால் என்ன தவறு, இது அவர்களினதும் நாடுதானே?" என்று அப்பாவித்தனமான கேள்வியொன்றை வைத்துவிட்டு, இடைவெளியில் மும்முரமாகச் சிங்கள இனக்கொலையாளிகளுக்கு வெள்ளையடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரஞ்சித் said:

இதுதான் உண்மை அண்ணை. இன்றுவரை டக்கிளஸ், கருணா, பிள்ளையான், சங்கரி , கதிர்காமர்  போன்ற கோடரிக்காம்புகளை அருகில் வைத்துக்கொண்டு, "பார்த்தீர்களா, தமிழர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை, தமிழர்களுக்கெதிராக இனவழிப்பே நடக்கவில்லை" என்று அவன் கூவுகிறான், இனிமேலும் அதைத்தான் செய்யப்போகிறான்.

இன்று மிகவும் திட்டமிட்ட முறையில் எமது மொழியும், கலாசாரமும், தாயகமும் சிங்கள இனவாதிகளால் விழுங்கப்பட்டு வருகிறது. ஆனால் விளங்க நினைப்பவனுக்கோ, நியாயம் பேசுபவனுக்கோ, துல்ப்பெனுக்கோ இவை தெரிந்தாலும், தமது ***** இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. "ஏன் , தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தால் என்ன தவறு, இது அவர்களினதும் நாடுதானே?" என்று அப்பாவித்தனமான கேள்வியொன்றை வைத்துவிட்டு, இடைவெளியில் மும்முரமாகச் சிங்கள இனக்கொலையாளிகளுக்கு வெள்ளையடிப்பார்கள்.

அப்பாவித்தனமான கேள்வி அல்ல அது. அபத்தமான கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் என்பவர்  இலங்கையில் வாழ்கின்ற தமிழிச்சிகளை இராணுவ உடையில் கண்டால் அதிகம் அலர்ஜி பாதிப்புக்கு உள்ளாகுபவர். இவர் தான் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு முடிவு செய்வார் இலங்கையில் உள்ள பெண்கள் என்ன வேலைக்கு போக வேண்டும் என்ன வேலைக்கு போக கூடாது என்பதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

சரணடைந்த ஆண் போராளிகள் பெருமளவில் காணாமல் போக.. பெண் போராளிகளுக்கு என்ன நிகழ்ந்தது.. சிங்கள இராணுவ பாலியல் கொத்தடிமைகளாக்கப்பட்டதை எப்படி மறந்து என்ன நியாயத்தை கதைக்கப் போகிறீர்கள்.

எல்லாம் மறக்கப்படவேண்டும் என்பதுதான் சிங்கள அரசுகளின், ராஜபக்‌ஷேக்களின்  சிங்கள வெற்றிவாத அரசாகட்டும், ரணில்/மைத்திரியின் நல்லாட்சி அரசாகட்டும், நோக்கமாக இருந்தது.

வடக்கில் அங்கயனுக்கும், கிழக்கில் புள்ளையானுக்கும் அதிக வாக்குகள் போட்டு மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. பாதுகாப்பு  படையில் இலங்கை இராணுவத்தை இணைத்து கொள்வதிலும் சிக்கல். இராணுவ அதிகாரிகள் அவர்கள் குடும்பத்தினருக்கும் சில நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுளைய தடை விதித்துள்ளன. இலங்கை இராவணுவம் என்று குறிப்பிடும் போது அது சிங்கள இராணுவமாகவே நோக்கப்படுகிறது. அதை மறைத்து தமிழரையும் அந்த அபத்தம் சேர நினைத்து சிங்கள சமுதாயத்தை மட்டும் குறிப்பிடுவதை தவிர்ப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கலாம். அதே நேரம் தமிழரும் இராணுவத்தில் உள்ளனர் என்கிற தோற்றப்பாட்டை ஏற்படுத்தலாம். இராணுவத்திற்கெதிரான நடவடிக்கையை தடுக்கலாம் அதாவது இராணுவத்திற்கெதிராக குற்றச் சாட்டு வைக்கும்போது அது தமிழ் இராணுவத்தின் பெயருக்கும் அவப்பெயர் என தமிழர் நடவடிக்கை எடுக்காமல் தடுக்கும் தந்திரமாகவும் இருக்கலாம். ஆனால் பெயரளவில் மட்டுமே தமிழர் இராணுவமாக இருக்கலாமேயொழிய பதவியில், ஆயுத பாவனையில் ஏதிலிகளே. அநியாயத்தை தட்டிக்கேட்கவும் முடியாது, ஏற்று செயற்படவும் முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெற்ற அவலங்கள், சம்பவங்கள் உலக அரசுகளிற்கு மிக நன்றாகவே தெரியும். இலங்கை அரசு உலக அரசியலில் நடுநிலமையையும், இராஜதந்திரமான போக்கினையும், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலினையும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கடைப்பிடித்து வருகின்றது. பாலஸ்தீனியர்கள், மற்றும் வேறு சில இனத்தினர், அண்மையில் சுதந்திரம் பெற்ற புதிய உலக நாடுகள் இலங்கை தமிழர்கள் போன்று அதே ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் அவர்கள் ஏன் தமிழர்களுக்கு ஆதரவு தராமல் இலங்கை அரசுக்கு ஆதரவாய் நின்றார்கள், நிற்கின்றார்கள் என்பதற்கான ஒரு காரணம் இது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை நாட்டு இராணுவத்தின் பணியாற்றுவதற்கு  தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? நாட்டில் அனைத்து அரசு பணிகளிலும் பணியாற்றும் தமிழர்கள் இராணுவத்தில் இணையாமல் விலகிச்செல்வது இனவாதத்துக்கு இன்னும் வசதியாகிச்செல்லும்.

லட்சங்களில் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும், இலங்கைதீவில் 

முழுக்க முழுக்க ஆயுதமேந்திய தமிழ் ராணுவத்தினர் மட்டும் உள்ள ஒரு பாதுகாப்பு படைபிரிவின் பாதுகாப்பு வளையத்துள்    இலங்கையின் ஜனாதிபதி,பிரதமர் உட்பட்ட அமைச்சர்கள் நடமாடும் நிலை ஒருபோதும் வராது.

அதேபோல் வட கிழக்கில் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவத்தின் தமிழர்களை மட்டுமே கொண்ட படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருக்க  எந்த காலமும் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட மாட்டாது. 

ஆயிரமாயிரம் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும் அவர்களை இலங்கையின் ஒரு போரிடும் படையணியாக பொறுப்பு தந்து உயரத்தில் வைக்கமாட்டார்கள், இயற்கை பேரிடருக்கும் சிரமதான பணிகளுக்கும் அவர்களை அமர்த்திவிட்டு சிங்கள உயரதிகாரிகள் சிகரெட் பிடித்தபடி அவர்களை ஏவல் செய்வார்கள்.

இலங்கை ராணுவம் என்பது முழுக்க முழுக்க சிங்கள அரச  படைதான், அப்படியிருந்தும் தமிழர்களை மட்டுமே கொண்ட பெரும் படையணி உருவாகும் நிலை வந்தால் தன்னோட ராணுவத்தையே சிங்களவன் நம்பமாட்டான்,

அங்கேதான் நிற்கிறது இனவாதம்.

 தமிழர்கள் ராணுவத்தில் சேர்வதன்மூலம் இனவாதம் என்பது தணியாது.

ஏனென்றால் நாம் பிறக்குமுன்னே  இனவாதத்தை உருவாக்கி அதை இன்று வரை காவி திரிந்து நாளை நாம் இறந்த பின்னரும் காவி திரியபோவது தமிழர்களல்ல.

என்றைக்கு சிங்களவர்கள் தமிழர்களையும் சந்தேகத்திற்கு இடமின்றி  சக மனிதர்களாக , தமிழர்கள் தாம் வாழும்பிரதேசத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் உரித்துடையவர்களாக  நாட்டின்மீது  பார்க்கும்போது மட்டுமே இனவாதம் மெல்ல மெல்ல மறையும், ஆனால் அது எந்த காலத்தில் சாத்தியபடும்?

தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களே வாழாத பகுதிகளில் சிங்கள ஆதிக்க சக்திகள் நினத்தை இடத்தில் எங்கு வேண்டுமானாலும் ஒரு விகாரையை எழுப்ப முடியும் /எழுப்பியிருக்கிறார்கள்/இனியும் பல நூறு கட்டி எழுப்புவார்கள்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர்கள் அனுமதியின்றி இரவோடு இரவாக ஒரு கோவிலை தமிழர்கள் கட்டி எழுப்பினால் அடுத்தநாள் காலையில் கலவரம் வரும், இல்லையென்றால் சுக்குநூறாக உடைத்தெறியப்படும்.

அதன் பெயர்தான் இனவாதம் அந்த இனவாதத்தை காவி திரிவது தமிழர்களல்ல, ராணுவத்தில் தமிழர்கள் சேர்வதால் அதனை போக்கிவிட முடியாது.

ஆன்மீகத்திலேயே இனவாதம் பார்க்கும் சிங்களவன் ஆட்சியில் பார்க்கமாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.

தமிழர்கள் இலங்கையில் பிற தொழில்களில் பணியாற்றுவதால் அவர்கள் உரிமையை பெற்று வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல, அவர்கள் வகிக்கும் தொழில்களிலிருந்து ஒரே இரவில் அவர்களை அடித்து விரட்டி துரத்திவிட முடியும்.

அதுதான் 1958/1977/1983 வரை நடந்தது, அதன் பெயர்தான் இனவாதம் .

கலவரங்கள் நின்று போய்விட்டதென்று அர்த்தம் கொள்ளவேண்டாம்,தமிழர்களை அடித்து தூக்கவேண்டுமென்ற  அவர்கள் மனநிலை இன்றும் அப்படியேதானிருக்கிறது.

அப்போதும் இனவாதம் எங்கள் பக்கமிருக்காது.

Link to comment
Share on other sites

27 minutes ago, valavan said:

லட்சங்களில் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும், இலங்கைதீவில் 

முழுக்க முழுக்க ஆயுதமேந்திய தமிழ் ராணுவத்தினர் மட்டும் உள்ள ஒரு பாதுகாப்பு படைபிரிவின் பாதுகாப்பு வளையத்துள்    இலங்கையின் ஜனாதிபதி,பிரதமர் உட்பட்ட அமைச்சர்கள் நடமாடும் நிலை ஒருபோதும் வராது.

அதேபோல் வட கிழக்கில் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவத்தின் தமிழர்களை மட்டுமே கொண்ட படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருக்க  எந்த காலமும் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட மாட்டாது. 

ஆயிரமாயிரம் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும் அவர்களை இலங்கையின் ஒரு போரிடும் படையணியாக பொறுப்பு தந்து உயரத்தில் வைக்கமாட்டார்கள், இயற்கை பேரிடருக்கும் சிரமதான பணிகளுக்கும் அவர்களை அமர்த்திவிட்டு சிங்கள உயரதிகாரிகள் சிகரெட் பிடித்தபடி அவர்களை ஏவல் செய்வார்கள்.

இலங்கை ராணுவம் என்பது முழுக்க முழுக்க சிங்கள அரச  படைதான், அப்படியிருந்தும் தமிழர்களை மட்டுமே கொண்ட பெரும் படையணி உருவாகும் நிலை வந்தால் தன்னோட ராணுவத்தையே சிங்களவன் நம்பமாட்டான்,

அங்கேதான் நிற்கிறது இனவாதம்.

 தமிழர்கள் ராணுவத்தில் சேர்வதன்மூலம் இனவாதம் என்பது தணியாது.

ஏனென்றால் நாம் பிறக்குமுன்னே  இனவாதத்தை உருவாக்கி அதை இன்று வரை காவி திரிந்து நாளை நாம் இறந்த பின்னரும் காவி திரியபோவது தமிழர்களல்ல.

என்றைக்கு சிங்களவர்கள் தமிழர்களையும் சந்தேகத்திற்கு இடமின்றி  சக மனிதர்களாக , தமிழர்கள் தாம் வாழும்பிரதேசத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் உரித்துடையவர்களாக  நாட்டின்மீது  பார்க்கும்போது மட்டுமே இனவாதம் மெல்ல மெல்ல மறையும், ஆனால் அது எந்த காலத்தில் சாத்தியபடும்?

தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களே வாழாத பகுதிகளில் சிங்கள ஆதிக்க சக்திகள் நினத்தை இடத்தில் எங்கு வேண்டுமானாலும் ஒரு விகாரையை எழுப்ப முடியும் /எழுப்பியிருக்கிறார்கள்/இனியும் பல நூறு கட்டி எழுப்புவார்கள்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர்கள் அனுமதியின்றி இரவோடு இரவாக ஒரு கோவிலை தமிழர்கள் கட்டி எழுப்பினால் அடுத்தநாள் காலையில் கலவரம் வரும், இல்லையென்றால் சுக்குநூறாக உடைத்தெறியப்படும்.

அதன் பெயர்தான் இனவாதம் அந்த இனவாதத்தை காவி திரிவது தமிழர்களல்ல, ராணுவத்தில் தமிழர்கள் சேர்வதால் அதனை போக்கிவிட முடியாது.

ஆன்மீகத்திலேயே இனவாதம் பார்க்கும் சிங்களவன் ஆட்சியில் பார்க்கமாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.

தமிழர்கள் இலங்கையில் பிற தொழில்களில் பணியாற்றுவதால் அவர்கள் உரிமையை பெற்று வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல, அவர்கள் வகிக்கும் தொழில்களிலிருந்து ஒரே இரவில் அவர்களை அடித்து விரட்டி துரத்திவிட முடியும்.

அதுதான் 1958/1977/1983 வரை நடந்தது, அதன் பெயர்தான் இனவாதம் .

கலவரங்கள் நின்று போய்விட்டதென்று அர்த்தம் கொள்ளவேண்டாம்,தமிழர்களை அடித்து தூக்கவேண்டுமென்ற  அவர்கள் மனநிலை இன்றும் அப்படியேதானிருக்கிறது.

அப்போதும் இனவாதம் எங்கள் பக்கமிருக்காது.

cricket-ball-and-wickets.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் நடைபெற்ற அவலங்கள், சம்பவங்கள் உலக அரசுகளிற்கு மிக நன்றாகவே தெரியும். இலங்கை அரசு உலக அரசியலில் நடுநிலமையையும், இராஜதந்திரமான போக்கினையும், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலினையும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கடைப்பிடித்து வருகின்றது. பாலஸ்தீனியர்கள், மற்றும் வேறு சில இனத்தினர், அண்மையில் சுதந்திரம் பெற்ற புதிய உலக நாடுகள் இலங்கை தமிழர்கள் போன்று அதே ஒடுக்குமுறையை எதிர்கொண்டாலும் அவர்கள் ஏன் தமிழர்களுக்கு ஆதரவு தராமல் இலங்கை அரசுக்கு ஆதரவாய் நின்றார்கள், நிற்கின்றார்கள் என்பதற்கான ஒரு காரணம் இது. 

 

பலஸ்டீனியர்களுக்கு இன்னும் சுதந்திரம் முழுமையாக வழங்கப்படவில்லை....லெபனான்,பலஸ்தீன் போன்ற நாடுகளின் நிலைக்கு சிறிலங்காவை இந்த ஆட்சியாளர்கள் எடுத்து செல்வதை மேற்குலகு விரும்புகின்றது.....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் ஆடாத சோழியன் குடுமி இப்பமட்டும் ஏன் ஆடுது? அது  சும்மா ஆடாதே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

இந்த வீடியோவில் அந்த உறவுகளின் கோபமும் ஆற்றாமையும்.. ஆனாலும் கைதாகி உள்ள அந்த முன்னால் போராளியின் நிலமையை இந்த வீடியோ இன்னும் சிக்கலாமக்கி விடுமோ என்று பயமாக இருக்கிறது.. இலங்கையில் தமிழர் வாழ்க்கை என்பது கேட்க நாதியற்ற வாழ்வு.. இப்படியான நேரங்களில் நிலமையை இன்னும் சிக்கலாக்கமல் சாதுரியமாக செயல்பட்டு தப்பித்துக்கொள்வதுதான் நமக்கு தற்போது உள்ள ஒரே தீர்வு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் வேற, இந்த இரண்டு பரதேசிகளும் ஒரு ஈனப்பிறப்புகளென்று கவனிக்காமல் விட்டுவிடுவதே நல்லது!
இரண்டுக்கும் வேற IDக்களும் இருக்கு?

ஒன்றைப்பற்றிய பட்டறிவு, அனுபவம் இல்லாதவர்களுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விளங்காது. பட்டவனுக்குத்தான்தெரியும் வலியும், வேதனையும். அவர்கள் மற்றவரின் இழப்பு, அழிவு, வலி, வேதனையை வைத்து பிழைப்பு நடத்தவே செய்வார்கள்.  அது அவர்கள் பிழையல்ல விதி செய்த சதி. சிலருக்கு அடிமேல் அடி, பலருக்கு அது வேடிக்கை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

லட்சங்களில் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும், இலங்கைதீவில் 

முழுக்க முழுக்க ஆயுதமேந்திய தமிழ் ராணுவத்தினர் மட்டும் உள்ள ஒரு பாதுகாப்பு படைபிரிவின் பாதுகாப்பு வளையத்துள்    இலங்கையின் ஜனாதிபதி,பிரதமர் உட்பட்ட அமைச்சர்கள் நடமாடும் நிலை ஒருபோதும் வராது.

அதேபோல் வட கிழக்கில் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவத்தின் தமிழர்களை மட்டுமே கொண்ட படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருக்க  எந்த காலமும் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட மாட்டாது. 

ஆயிரமாயிரம் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும் அவர்களை இலங்கையின் ஒரு போரிடும் படையணியாக பொறுப்பு தந்து உயரத்தில் வைக்கமாட்டார்கள், இயற்கை பேரிடருக்கும் சிரமதான பணிகளுக்கும் அவர்களை அமர்த்திவிட்டு சிங்கள உயரதிகாரிகள் சிகரெட் பிடித்தபடி அவர்களை ஏவல் செய்வார்கள்.

இலங்கை ராணுவம் என்பது முழுக்க முழுக்க சிங்கள அரச  படைதான், அப்படியிருந்தும் தமிழர்களை மட்டுமே கொண்ட பெரும் படையணி உருவாகும் நிலை வந்தால் தன்னோட ராணுவத்தையே சிங்களவன் நம்பமாட்டான்,

அங்கேதான் நிற்கிறது இனவாதம்.

 தமிழர்கள் ராணுவத்தில் சேர்வதன்மூலம் இனவாதம் என்பது தணியாது.

ஏனென்றால் நாம் பிறக்குமுன்னே  இனவாதத்தை உருவாக்கி அதை இன்று வரை காவி திரிந்து நாளை நாம் இறந்த பின்னரும் காவி திரியபோவது தமிழர்களல்ல.

என்றைக்கு சிங்களவர்கள் தமிழர்களையும் சந்தேகத்திற்கு இடமின்றி  சக மனிதர்களாக , தமிழர்கள் தாம் வாழும்பிரதேசத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் உரித்துடையவர்களாக  நாட்டின்மீது  பார்க்கும்போது மட்டுமே இனவாதம் மெல்ல மெல்ல மறையும், ஆனால் அது எந்த காலத்தில் சாத்தியபடும்?

தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களே வாழாத பகுதிகளில் சிங்கள ஆதிக்க சக்திகள் நினத்தை இடத்தில் எங்கு வேண்டுமானாலும் ஒரு விகாரையை எழுப்ப முடியும் /எழுப்பியிருக்கிறார்கள்/இனியும் பல நூறு கட்டி எழுப்புவார்கள்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர்கள் அனுமதியின்றி இரவோடு இரவாக ஒரு கோவிலை தமிழர்கள் கட்டி எழுப்பினால் அடுத்தநாள் காலையில் கலவரம் வரும், இல்லையென்றால் சுக்குநூறாக உடைத்தெறியப்படும்.

அதன் பெயர்தான் இனவாதம் அந்த இனவாதத்தை காவி திரிவது தமிழர்களல்ல, ராணுவத்தில் தமிழர்கள் சேர்வதால் அதனை போக்கிவிட முடியாது.

ஆன்மீகத்திலேயே இனவாதம் பார்க்கும் சிங்களவன் ஆட்சியில் பார்க்கமாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.

தமிழர்கள் இலங்கையில் பிற தொழில்களில் பணியாற்றுவதால் அவர்கள் உரிமையை பெற்று வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல, அவர்கள் வகிக்கும் தொழில்களிலிருந்து ஒரே இரவில் அவர்களை அடித்து விரட்டி துரத்திவிட முடியும்.

அதுதான் 1958/1977/1983 வரை நடந்தது, அதன் பெயர்தான் இனவாதம் .

கலவரங்கள் நின்று போய்விட்டதென்று அர்த்தம் கொள்ளவேண்டாம்,தமிழர்களை அடித்து தூக்கவேண்டுமென்ற  அவர்கள் மனநிலை இன்றும் அப்படியேதானிருக்கிறது.

அப்போதும் இனவாதம் எங்கள் பக்கமிருக்காது.

நீங்கள் கூறுபவை அனைத்துமே உண்மையென்று இங்கே கருத்தெழுதும் நியாயத்தைப் பேசுவோம், விளங்கநினைப்பவன் ******, துல்பேனுக்கும் தெரியாதது அல்ல. அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால், அதனை அவர்கள் வேண்டுமென்றே மறுத்து எழுதுகிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை சிங்கள அரசாங்கங்களை நியாயப்படுத்துவதும், அவர்கள் செய்த, செய்துவருகிற இனவழிப்பை சிறிது சிறிதாக மறைப்பதும், இறுதியாக அதனை இல்லையென்று நிறுவுவதுமே  நோக்கம். இல்லாவிட்டால், ராணுவத்தில் தமிழர்கள் இணைவது நாட்டில் சுமூகத்தன்மையினை உருவாக்கும் என்று அவர்களால் இலகுவாக சொல்லிவிட்டுச் செல்லமுடியாது.

இவர்களை விட இன்னும் இருவர் இருக்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் தமிழர்கள் ராணுவத்தில் இணைவதை எப்படியாது நியாயப்படுத்திவிடவேண்டும் என்கிற தேவை இருக்கிறது. சாதாரண தமிழர்களும் ராணுவத்தில் இணையும்போது தாம் இன்று புதிதாக ஏற்றுக்கொண்ட தலைவர்கள் தமிழினத்திற்கு எதிராகச் செய்த துரோகம் மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். "எமது புதிய தலைவர்கள் மட்டுமா ராணுவத்துடன் இணைந்தார்கள்? இன்று சாதாரண தமிழர்களும் தானே இணைகிறார்கள்? ஆகவே எமது தலைவர்கள் செய்ததை எப்படி துரோகம் என்று சொல்வீர்கள்?" என்பதுதான் அவர்களது வாதம். ஆகவே, சாதாரண  தமிழர்களில் சிலர் ராணுவத்தில் இணைவதை பெரிய விடயமாகக் காட்டி, அல்லது தமது புதிய தலைவர்களின் துரோகக் கோட்டிற்கு அருகில் சாதாரண தமிழர்களின் இணைவை இன்னும் பெரிய கோடாகக் கீறிக் காட்டுவதன்மூலம், "பார்தீர்களா? எமது தலைவர்கள் செய்தது துரோகமே இல்லையென்று இப்போதாவது தெரிகிறதா?" என்பது அவர்களின் கூப்பாடு.  அபிவிருத்தி, வேலைவாய்ப்பென்று அவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் இந்தத் துரோகத்தை மறைக்க அவர்கள் பாவிக்கும் வேஷங்கள், அவ்வளவுதான். 

இந்த இரு குழுக்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இனவழிப்புச் செய்த சிங்கள அரசையும், அதற்கு இணையாக நின்று துரோகமிழைத்து, தம்மினனத்தையே நேரடியாகவும், சிங்களத்துடன் கூடிநின்றும் கருவறுத்த இனத்துரோகிகளையும் காப்பாற்றுவது, அவர்களை நியாயப்படுத்துவது. இதனை அவர்கள் கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பாவித்துச் செவ்வணே செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.