Jump to content

பிராண வாயுவை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எளிய யோக - வர்மப் பயிற்சிகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிராண வாயுவை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எளிய யோக - வர்மப் பயிற்சிகள்!

யோகா

யோகா

பூரக, ரேசக, கும்பக, தம்பன எனும் நால்வகை சுவாசப் படி நிலைகளில் கால நிர்ணயத்தோடு செய்யப்படும் சுவாசப் பயிற்சியால் பிராண சக்தி பெருகும். இதனால் நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும்.

உடலுக்கு உயிர் ஆதாரம் என்றால், உயிருக்குப் பிராணனே ஆதாரம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்று அடிப்படை உடல் காரணிகளில் வாதமே ஆன்மாவையும் இயக்கக் கூடியது. நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பங்கு கொண்ட ஆக்சிஜன் நாசியில் தொடங்கி உள்ளே சென்று நலம் பயக்கிறது. பிறகு வெளியேறும் ஆக்சிஜன் நாபியில் எழுந்து நுரையீரல் கடந்து விஷ்ணு பாதம் எனும் வெட்டவெளியில் கலக்கிறது. உடலின் இயக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான இந்த சுவாசம் இடையூறு இன்றி நலமோடு நடைபெற வேண்டும். சுவாசத்தில் சிக்கல் என்றால் இயக்கத்தின் ஆதாரமே சிதைந்து விடும்.

யோகா
 
யோகா

கொடுமையான இந்த நோய்த் தொற்று காலத்தில் பிராண வாயுவை அதிகரித்துக் கொள்ளவும், சீரான சுவாசச் செயலைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும். அதற்கு பிராண வாயுவை அதிகரிக்கும் யோக நிலைகள், மூச்சுப் பயிற்சிகள், வர்மப் புள்ளிகளை இயக்கும் முறைகள் பல உண்டு. அதோடு நுரையீரலை சுத்தப்படுத்தும் முறைகள், நோய்த் தொற்றை தடுக்கும் மூலிகைகளின் பயன்கள், வாய்க் கொப்பளிக்கும் விதங்கள், பாதுகாப்பான உணவு, பான வகைகள் என பல்வேறு ஆரோக்கிய வழிமுறைகளை இந்த பயிற்சி வகுப்பில் கற்றுக் கொள்ளவிருக்கிறோம்.

 

பூரக, ரேசக, கும்பக, தம்பன எனும் நால்வகை சுவாசப் படி நிலைகளில் கால நிர்ணயத்தோடு செய்யப்படும் சுவாசப் பயிற்சியால் பிராண சக்தி பெருகும். இதனால் நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும். மேலும் நுரையீரலே சுவாசத்தை உண்டாக்குகிறது என்றால், சுவாசமே நுரையீரலை பாதுகாக்கவும் செய்கிறது. சுவாசமே உடலெங்கும் பிராண சக்தியைப் பரவச் செய்து நோயற்ற நிலையை உருவாக்குகிறது.

எனவே சுவாசம் சரியானால் வாழ்வில் அனைத்துமே சரியாகும் என்பது சித்தர்களின் வாக்கு. பிராணனை கட்டுப்படுத்தினால் உடலின் சக்தியைக் கட்டுப்படுத்தலாம். முறையான சுவாச தவத்தால் மனிதன் ஈசத்துவம் என்னும் நிலையையே எட்ட முடியும் என்றால், ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பெற முடியாதா என்ன! உடலையும் உயிரையும் சீராக இயங்க வைக்கும் பிராண சக்தியின் அடிப்படை கூறாக இருப்பவை தச வாயுக்கள். இந்த தச வாயுக்களும் நம் உடலில் சரிவர இயங்கினால்தான் நம் உடல் ஆரோக்கியமாகச் செயல்படும்.

வர்மப் புள்ளிகள்
 
வர்மப் புள்ளிகள்

தொற்றால் உருவாகும் நோய்களை தடுக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும் எளிய முறையிலான இந்த யோகப் பயிற்சிகள், வர்ம முறைகள் போன்றவை உங்களுக்கு உதவும். இந்தப் பயிற்சியினை நமக்கு வழங்க இருக்கிறார் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் தலைவர் மு. அரி. இவர், வர்மக்கலை மற்றும் தொல்லியல் துறையில் DMR பட்டமும் சுவடி ஆய்வு மற்றும் கல்வெட்டு இயலில் இளங்கலை பட்டம் பயின்றவர். களரி, வர்மம், வர்ம வைத்திய முறைகள், யோகம் முதலானவற்றைப் பயிற்றுவித்தலில் 10 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தமிழ்க் கலைகள் குறித்த ஆய்வுகளில் 5 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். அனுபவம் மிக்க இந்த ஆசான் வழங்கும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!

 

இந்தப் பயிற்சியின் பலன்கள்:

முறையான சுவாசப் பயிற்சியால் நுரையீரல் தூய்மையாகி, உள்ளே செல்லும் பிராண வாயுவின் அளவு அதிகரிக்கும்.

பிராண வாயு அதிகரிப்பதால் உடல் ஆற்றல் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி தாமாகவே உருவாகும்.

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை உருவாக்கும் வர்ம, யோகப் பயிற்சிகளால் உங்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் உருவாகி உங்களை வெற்றியாளர் என்ற நிலைக்கு உயர்த்தும்.

யோகா வர்மப் பயிற்சிகள்
 
யோகா வர்மப் பயிற்சிகள்

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு:

இங்கு அளிக்கப்படும் ஆலோசனைகள், மூலிகைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

பயிற்சியின்போது உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 6.6.2021

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.