Jump to content

தொடரும் தவிப்பு பழ.நெடுமாறன் அவர்களின் புதல்வி பூங்குழலி எழுதிய உண்மைக்கதை.


Recommended Posts

தொடரும் தவிப்பு.

(உண்மைக்கதையின் வதைசொல்லும் பார்வையிது)

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல...

நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி சிறைக்கம்பிகளும் சித்திரவதைகளுமாக துயரை அப்பிவிட்ட 'தொடரும் தவிப்பு" பேரறிவாளனின் அம்மா போல என்னுள்ளும். 19வயதில் சிறை சென்ற மகன் இன்று வருவான் நாளை வருவான் தங்களது இறுதிக்காலங்களை மகனோடு கழிக்கலாம் என்ற கனவோடிருக்கும் அறிவு அம்மாவின் அழுகையும் அறிவு அப்பாவின் துயரமும் மட்டுமல்ல மரண தண்டனை விதிக்கப்பட்ட 26பேரும் அனுபவித்த கொடுமைகள் யாவும் பதிவாகியிருக்கிறது இந்நூலில். இதுவொரு கதையில்லை ஒரு கொடுமைகளின் ஆவணம்.

உலகத்தில் மனிதவுரிமை பேசியபடி மனிதர்களை வதைக்கும் பட்டியலில் இலங்கையும் இந்தியாவும் அதிகம். சிறைக்கைதிகள் என்றால் அவர்கள் மானிட உலகுக்கே பயனற்றவர்கள் என்ற கணிப்பு இலங்கை இந்தியச் சிறைகளிலும் அங்கு பணியாற்றும் பணியாளர்களின் எண்ணமாகிறது. அந்த வகைக்குள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26பேரும் மனிதப்பிறவிகள் என்ற நினைப்பையே மறந்து வதைத்த அந்த வதைகாரரின் கதை கண்ணுக்குள் ஒரு மாரிகாலத்தை இறக்கிவிட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளின் நிறைவில் மகனும் மற்றவர்களும் சிறைமுடிந்து வெளிவருகிறார்கள் என போன அறிவு அம்மாவிற்கு அவன் தூக்குத்தண்டனை மேடையிலிருந்து வரமாட்டானென்ற முடிவுடன் ஆரம்பமாகும் கதை....பேரறிவாளனைத்தேடி சோலையார்பேட்டைக்குள் நுளைந்த பொலிஸ் வாகனம் பேரறிவாளின் வீட்டு வாசலில் 10.06.1991இல் நின்றதும் அதன் பின்னான அற்புதம் அம்மாவின் அலைக்கழிவு என நீழும் கதையில் யுகங்களையும் தாண்டிய துயர் நெஞ்சை அறுக்கிறது.

விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளை. நடுநிசி 12மணிக்கு விசாரணையென்று வந்த பொலிசார். 'நளினி எங்கே ? " சொன்னால் அறிவு வருவான் என்ற போலீசின் வார்த்தையில் ஆவிகலங்கிய அறிவின் அப்பா குயில்தாசனும் அற்புதம் அம்மாவும் அந்தரித்த அந்தரிப்பு ஒரு பிள்ளையின் மீதான கொடுமையான தீர்ப்பை ஏற்க மறுக்காத ஒவ்வொரு பெற்றோரையும் நினைவில் கொண்டுவரும் மனிதர்களாகின்றனர்.

19வயதில் சிறை சென்ற அறிவு இதுவரையும் தூக்குமேடைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படாமல் முருகன் , சாந்தன் ஆகியோருடன் கருணை அடிப்படையில் ஆயுள்தண்டனை பெற்ற நளினியின் நிலை தொடரும் தவிப்பில் கண்களில் இருந்து கண்ணீரையில்லை இரத்தம் வடிய வைக்கும்படியான துயர். கற்பிணியாக சிறை சென்ற நளினியை உலகில் எந்தவொரு சிறைக்கூடமும் செய்திராத வதைகள் அந்தச் சிறையில் செய்யப்பட்டுள்ளன. அந்த வதையாவும் அற்புதம் அம்மாவின் மொழியாகி உயிரை உலுப்பும் உதிரத்தை உறைய வைக்கும் கொடுமைகள் அவை. அந்தப்பக்கங்களை படிக்கப் படிக்க பாரத தேசத்தின் மனிதாபினம் எத்தகையது என்பதை விளக்குகிறது.

சிறையில் சித்திரவதைகள் அனுபவித்து பெற்ற மகளை கடல்கடந்து அனுப்பிவிட்டு அந்தத்தாய் துடிக்கும் துடிப்பு அதுவும் ஒரு இந்திய மகளின் மகளுக்கு இந்தியா செல்லவே இழுபறி ஏற்பட்டதை எங்கே போய் சொல்லியழ ? அகிம்சையும் மனிதமும் போதிக்கப்பட்ட மண்ணில் ஒரு இந்தியப்பிரஜையின் மகளான அரித்திரா இப்போ 15வயதுப்பிள்ளையாகிவிட்ட பின்னும் பெற்றோரின் அரவணைப்போ அன்போ அறியாமல் அரித்திராவின் முகம் நெஞ்சுக்குள்ளும் கண்ணுக்குள்ளும் கனக்கிறது.

யாரால்தான் முடியும் ? தான் பெற்ற பிள்ளையைப் பார்க்கவே வீசா மறுப்பையும் அகிம்சை போதித்த மண்ணில் ஒரு அன்னையின் உணர்வுகள் புரியப்படாமல் போகின்றமையும் ? இதுதான் இந்திய தேசத்தின் இயங்கியல் வளமையோ ?

ராஜீவ் காந்தி என்ற பெரிய மனிதரின் ஆணையில் ஈழம் என்ற சிறிய தேசத்து மனிதர்கள் கொன்றும் கொடுமைப்படுத்தப்பட்டும் டாங்கிகளில் நெரிக்கப்பட்டும் சிதைக்கப்பட்ட கொடுமையை மறந்துவிட முடியவில்லை. ஒரு பிரதமரின் உயிருக்கு இத்தனை பெறுமதியா ?

ஒவ்வொரு கைதியும் அந்தச் இசறைக்கம்பிகளுக்குள் பட்ட வேதனைகள்,பொய்ச்சாட்டுதல்களு

Link to comment
Share on other sites

இந்த இணைப்புக்கு சாந்தி அவர்களுக்கு நன்றி. இதைப்படிக்கவே மிகவும் வேதனையாக உள்ளது. தொடரும் தவிப்பு என்ற நூல் எப்படி இருக்கும் என்று உணர்கின்றேன். இந்நூலை இணைய வாயிலாக வாங்குவதற்கு வழி உண்டானால் தெரியப்படுத்தவும்.

ராஜீவ் என்ற ஒரு மனிதனின் உயிரும் ஏனைய மனிதர்களின் உயிரும் வித்தியாசமானதில்லை ஆனால் ராஜீவின் உயிர்தான் உயிர் மற்றதெல்லாம் மயிர் என்ற அரசியல் சாக்கடைத்தனம் அகிம்சைவழியை போதித்த பாரத தேசத்தில் பறைசாற்றி நிற்கின்றது.

இந்த ராஜீவ்காந்தி என்றவரின் கொடுங்கோலுக்கு எத்தனை ஈழத்து உயிர்கள் பரிதவித்து மடிந்தது என்பதை அரசியல் வாதிகள் அறியாதவர்கள் இல்லை. பாரத தேசம் போதித்த அகிம்சையை கையிலெடுத்து பாரத தேசத்திடமே நீதி கேட்டு பரிதவித்து தியாகி திலீபனும் பூபதித்தாயும் உயிர் விடும் வரை உதாசீனம் செய்த ராஜீவ்காந்தியின் கொடுங்கோல் என்பது பாரத தேசத்தையும் களங்கப்படுத்தியது. அடக்கு முறைக்கு எதிரான வன்முறை அற்ற அகிம்சை புரட்சியால் உலகின் நன்மதிப்புக்குள்ளான பாரத தேசத்தின் புனிதத்தின் மீது ஈழத்தமிழரின் குருதியால் கறையை பூசியவர் ராஜீவ்காந்தி. ஆனால் அவரின் உயிருக்கு ஆழும் வர்க்கம் கொடுக்கும் மரியாதையை மற்ற உயிர்களுக்கு கொடுக்க மறுக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்திற்கு பின் நல்லதொரு ஆவணத்துடன் களத்தில் கண்டு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

இந்தபுத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் ஆனால் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களிற்கு வாழ்த்துக்கள் தெடர்ந்து அந்த உண்மைகளை மற்றவர்களினுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

இந்தபுத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் ஆனால் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட உங்களிற்கு வாழ்த்துக்கள் தெடர்ந்து அந்த உண்மைகளை மற்றவர்களினுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

அந்த புத்தகத்தை எங்கே எடுத்தீர்கள். ஜரோப்பாவில் பெற்றுக்கொள்ளலாமா?

Link to comment
Share on other sites

அந்த புத்தகத்தை எங்கே எடுத்தீர்கள். ஜரோப்பாவில் பெற்றுக்கொள்ளலாமா?

நேசன் நான் அந்த புத்தகத்தை பாரிசில் தமிழாலயம் புத்தக கடையில் வாங்கியிருந்தேன் நீங்கள் ஈழம் ஸ்ரோரில் பாருங்கள் சில நெரம் கிடைக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி சகோதரி!

நானும் இப் புத்தகத்தை தேடி வாங்கி படிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி

மரணதண்டனை வேண்டாம்

கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி

அ.ஞா. பேரறிவாளன்

மரண தண்டனைச் சிறைவாசி

த.சி.எண். 13906

நடுவண் சிறை, வேலூர் - 2

http://perarivalan.blogspot.com/

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூல் ஒரு கிழமைக்கு முன் அதிஸ்வசமாக எனக்கு கிடைத்தது.இன்னும் வாசிக்கவில்லை.வாசித்த பின் நூலை பற்றி எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.