Jump to content

முள்ளங்கியில் பக்கோடா செய்யலாம் வாங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி......செய்ததும் சூட்டுடன் சாப்பிட நல்லா இருக்கும்.....மற்ற சாதாரண பகோடா போல ஒரு வாரத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது என நினைக்கிறேன். இளவாளித்து விடும் இல்லையா.....!  👍

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சகோதரி......செய்ததும் சூட்டுடன் சாப்பிட நல்லா இருக்கும்.....மற்ற சாதாரண பகோடா போல ஒரு வாரத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது என நினைக்கிறேன். இளவாளித்து விடும் இல்லையா.....!  👍

உண்மைதான் உடனே சாப்பிட்டால் மொறு மொறு என்று இருக்கும். பின் மென்மையாக இருக்கும். ஆனாலும் சுவை அட்டகாசமாய் இருக்கும்...நன்றி சுவி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

இதுதான் முதல்முறை முள்ளங்கியில் பகோடா செய்வதைப் பார்க்கிறேன்.
உடம்புக்கு ஆரோக்கியம் என்று வீட்டில் பால்கறி செய்வார்கள்.மிகவும் மணமாக இருக்கும்.மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டு முடிக்க வேண்டியது தான்.

இதை ஒருக்கா செய்து பார்க்க வேண்டும் போல உள்ளது.ஆனாலும் எண்ணெயில் போட்டு எடுப்பதால் தவிர்க்க வேண்டி உள்ளது.

எதைச் செய்தாலும் அதற்கான நேரத்தையும் போடுங்கள்.
இல்லாட்டி ஒராள் தொடங்கி போட்டு உங்களைத் தான் பேசிக் கொண்டிருப்பார்.

Link to comment
Share on other sites

13 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள்.

இதுதான் முதல்முறை முள்ளங்கியில் பகோடா செய்வதைப் பார்க்கிறேன்.
உடம்புக்கு ஆரோக்கியம் என்று வீட்டில் பால்கறி செய்வார்கள்.மிகவும் மணமாக இருக்கும்.மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டு முடிக்க வேண்டியது தான்.

இதை ஒருக்கா செய்து பார்க்க வேண்டும் போல உள்ளது.ஆனாலும் எண்ணெயில் போட்டு எடுப்பதால் தவிர்க்க வேண்டி உள்ளது.

எதைச் செய்தாலும் அதற்கான நேரத்தையும் போடுங்கள்.
இல்லாட்டி ஒராள் தொடங்கி போட்டு உங்களைத் தான் பேசிக் கொண்டிருப்பார்.

நான் ஒவ்வொரு முறையும் நேரத்தை போட நினைப்பேன். ஆனால் தமிழ்சிறியின் அனுபவத்தை நினைத்ததும் பயத்தில் விட்டுவிடுவேன்.இதை செய்ய அரைமணி நேரமே அதுகம்தான்.எண்ணை அதிகம் குடிக்காது.உறைப்பு கூடுதலாய் தேவை என்றால் அதிகமாய் சேர்க்கலாம். மிக மிக சுவையாக இருக்கும்.முள்ளங்கியில் சட்ணி செய்தாலும் சுவையாய் இருக்கும். பகோடாவில் முள்ளங்கியின் மணம் இருக்காது. நன்றி ஈழப்பிரியன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2021 at 21:07, nige said:

நிகே.... நீங்கள், இதுவரை செய்த  சமையல் குறிப்புகள் எல்லாம் நிறமானது. 👍
ஆனால்...  முள்ளங்கியில் பகோடா என்பதை, 
"புலி பசித்தாலும், புல்லை தின்ன மாட்டுது" என்பது போல்..
அந்தப் பகோடாவை, செய்து பார்க்கிற, ஐடியா இல்லை. :)

பிற் குறிப்பு: சென்ற கிழமை... இரண்டு கிலோ கடலைப் பருப்பில்,
உறைப்பான, மொறு மொறுப்பான... பகோடா செய்து,  வைத்திருக்கின்றோம்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக வந்திருக்கிறது . இன்று தான் கேள்விபட்டேன்/ முல்லங்கி  அதிகம் தவிர்க்கும் மரக்கறி ..இப்படி செய்தால்  உண்ணலாம். 

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

நிகே.... நீங்கள், இதுவரை செய்த  சமையல் குறிப்புகள் எல்லாம் நிறமானது. 👍
ஆனால்...  முள்ளங்கியில் பகோடா என்பதை, 
"புலி பசித்தாலும், புல்லை தின்ன மாட்டுது" என்பது போல்..
அந்தப் பகோடாவை, செய்து பார்க்கிற, ஐடியா இல்லை. :)

பிற் குறிப்பு: சென்ற கிழமை... இரண்டு கிலோ கடலைப் பருப்பில்,
உறைப்பான, மொறு மொறுப்பான... பகோடா செய்து,  வைத்திருக்கின்றோம்.   :grin:

சந்தோசம்.அதை செய்ய எவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்கும் என எண்ணும்போது பயமாய் இருக்கிறது.இந்த பகோடா அந்த பகோடா மாதிரி மொறுமொறுப்பு அதிக நேரம் இருக்காது.ஆனால் சுவை அதைவிட சூப்பராக இருக்கும்.நன்றி தமிழ் சிறி..உங்கள் கருத்தை நேரம் கிடைத்தால் எப்பவாவது என் channel இலும் எழுதிவிடுங்கோ. நன்றி

Link to comment
Share on other sites

18 hours ago, நிலாமதி said:

நன்றாக வந்திருக்கிறது . இன்று தான் கேள்விபட்டேன்/ முல்லங்கி  அதிகம் தவிர்க்கும் மரக்கறி ..இப்படி செய்தால்  உண்ணலாம். 

மிக சுவையாக இருக்கும். முயன்று பாருங்கள்.நன்றி அக்கா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.