Jump to content

`28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர்

காளியண்ணன் கவுண்டர்

காளியண்ணன் கவுண்டர் ( நா.ராஜமுருகன் )

இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார். 'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார்.

28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை எனப்படும் திருச்செங்கோடு முதல் பாராளுமன்ற உறுப்பினர், 1,000 பள்ளிகளை திறந்த கல்வியாளர், 36 முறை தேர்தலைச் சந்தித்தவர், ஜமீன்தார் என்றாலும், தனது சொத்துகளை மக்களுக்காக செலவிட்டவர் செய்தவர் என்று பல்வேறு சிறப்புகளை பெற்ற டி.எம்.காளியண்ணன் கவுண்டர், தனது 101 வயதில் கொரோனா தொற்றால் காலமானார். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
 
அரசு மரியாதையுடன் நல்லடக்கம் நா.ராஜமுருகன்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்தவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர். கஸ்தூரிப்பட்டி ஜமீன் பரம்பரையில் வந்தவர். இவரது தந்தை முத்துநல்லிக் கவுண்டர், தாய் பாப்பாயம்மாள். இவர், 1921 ஆம் ஆண்டு, ஜனவரி 10 - ஆம் தேதி பிறந்தார். அப்போதே, இவர் பி.காம், எம்.ஏ பொருளாதாரம் உள்ளிட்டப் படிப்புகளை படித்தார். இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள். இவர், கஸ்தூரிப்பட்டி ஜமீன் வம்சமாக இருந்தாலும், ஏகபோகமாக நிலபுலன்கள் இருந்தாலும், கடந்த 1956 - ஆம் ஆண்டு, டாக்டர் சுப்பராயன் கொண்டு வந்த ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்துக்கு முழு ஆதரவளித்து, தனது நிலங்களை வழங்கினார்.

ஆறுதல் சொல்லும் மதிவேந்தன்
 
ஆறுதல் சொல்லும் மதிவேந்தன் நா.ராஜமுருகன்

கடந்த, 1948 - ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபைக்கு சென்ற இளம் உறுப்பினர் இவர்தான். அப்போது, காளியண்ணன் கவுண்டருக்கு வயது 28. டாக்டர் சுப்பராயன் இந்தியாவின் தூதுவராக இந்தோனேசியா சென்றதால், அரசியல் நிர்ணய சபையில் ஒரு இடம் காலியானது. அதை நிரப்ப, டி.எம் காளியண்ணன் பெயரை, சுப்பராயன் பரிந்துரைத்தார். அதோடு, காளியண்ணன் கவுண்டரை காமராஜரும் பரிந்துரை செய்தார். அதனால், அவர் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வானார்.

அப்போது, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் அம்பேத்கார், நேரு, ராஜாஜி, ராஜேந்திரபிரசாத், முன்ஷி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத், சிவசுப்ரமணியம், வெங்கட்ராமன் மற்றும் தேசிய தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, எம்.எல்.ஏ, எம்.பி, எம்.எல்.சி ஆக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும், பொருளாளராகவும், மேலவை துணைத்தலைவராகவும் பொறுப்புகள் வகித்திருக்கிறார். இப்படி, பல்வேறு பொறுப்புக்களுக்காக 36 முறை தேர்தலில் நின்ற பழுத்த அனுபவம் கொண்டவர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேலம் பகுதியில் பெரிய பதவியான ஜில்லா போர்டு தலைவர் பதவியை வகித்தவர். அந்தப் பதவி அமைச்சர் பதவியைவிட அதிகாரமிக்கது. இந்தப் பதவியை வைத்து ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் ஆயிரம் பள்ளிகளை இவர் திறந்தார்.

இறுதி அஞ்சலி
 
இறுதி அஞ்சலி நா.ராஜமுருகன்

'இங்குள்ள பிள்ளைகள் நாலெழுத்து படிக்கோணும். அதுக்காகதான் ஆயிரம் பள்ளிகள். கடைக்கோடி பிள்ளைக்கும் கல்வி கிடைக்கணும்னா, இன்னும் அதிகம் பள்ளிகளை திறப்பேன்' என்று தெரிவித்தார். ஜமீன்தார், பல பதவிகளை வகித்தவர் என்றபோதிலும், எளிமையான, ஆடம்பரம் இல்லாத அரசியல்வாதியாக திகழ்ந்தார். ஏழை மக்கள் என்ன உதவி கேட்டாலும், உடனே அதை செய்து கொடுப்பார். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தகுதியான பலருக்கும் சிபாரிசு செய்து அரசு பணிகளை வாங்கி கொடுத்திருக்கிறார். தேர்தல் செலவுக்காகவும், மக்களுக்கு உதவுவதற்காகவும் யாரிடமும் நிதி பெறாமல், தனது சொத்துகள் அனைத்தையும் விற்று செலவு செய்தவர்.

தொடர்ந்து, சேலம் மாவட்ட நூலக தலைவர், இந்தியன் வங்கி இயக்குநர் ஆகிய பதவிகளையும் வகித்தார். திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அர்ததநாரீஸ்வரருக்கு கோடி அர்ச்சனை செய்வித்தார். அதோடு, சிலப்பதிகாரத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்ட காளியண்ணன் கவுண்டர், தொடர்ந்து கண்ணகி விழாவை 66 ஆண்டுகளாக நடத்தி வந்தார். 'மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் வெட்டி உபரி நீரை திருமணி முத்தாற்றில் விட்டால், 70 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என்று 1952 - ஆம் ஆண்டிலிருந்தே பாடுபட்டவர். திருச்செங்கோடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தை நிறுவியவர். பள்ளிபாளையம் காவிரி பாலம், சேசசாயி காகித ஆலை ஆகியவை இவர் கொண்டு வந்தது. இவரது, ஒரே ஆசை கண்ணகிக்கு கோட்டம் கட்ட வேண்டும் என்பது. அது இன்று வரை கனவாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், பழுத்த ஆன்மிகவாதியும்கூட. சிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கினார். ஆனால், அரசியலை வைத்து சொத்து சேர்க்காதவர்.

இறுதி அஞ்சலி
 
இறுதி அஞ்சலி நா.ராஜமுருகன்

இப்படிப்பட்ட சிறப்புமிக்க காளியண்ணன் கவுண்டருக்கு வயது 101. வீட்டிலேயே முடங்கியிருந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது உறவினர்கள், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்று மறைந்தார். இதை அறிந்த தமிழக அரசு, காளியண்ணன் கவுண்டரின் உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி சின்ராஜ், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் காளியண்ணன் கவுண்டரின் உடல், செங்கோடன்பாளையம் மின்மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்க்கை வாழ்ந்த காளியண்ணன் கவுண்டர் புகழ், நூற்றாண்டுகள் கடந்தாலும் மறையாது என்பதே திண்ணம்.

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/kaliyannan-koundar-died-in-corona-virus

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.