Jump to content

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து


Recommended Posts

 

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

 

 

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார்.


மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.

அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.

202105291601510253_1_Vai._L_styvpf.jpg

வைரமுத்து

ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். 
தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.

இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/05/29134119/2685895/Tamil-cinema-vairamuthu-announced-onv-award-ll-return.vpf?fbclid=IwAR1DO1N4WML_t7wjBiRK2ET8NwH26Sak-McXCp5TMH3KJCqJHcbMaXFsQis

 

Link to comment
Share on other sites

  • Replies 180
  • Created
  • Last Reply

இன்னும் விருது கொடுக்கவே இல்லை அதுக்குள் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும்.🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயிரமுத்துவை யாரும் உரசிப்பார்க்கத் தேவையில்லை பத்தரை மாற்றுத் தங்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் பாலியல் கொடுமைகளை மறைக்க பழையதையெல்லாம் தூசு தட்டி மறைக்க பார்கின்றார்கள். வைரமுத்து செய்தது/ செய்யாதது...சரி/பிழை தெரியாது.ஆனால் தற்போது நடந்திருப்பது பாடசாலை மாணவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பதை கவனத்தில் எடுங்கள்.

Bild

தமிழன் யாரென்று தமிழனைத் தவிர மற்ற எல்லோருக்கும் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோசல் மீடியா வந்தபின் உலகம் நன்கு மாறிவிட்டது. 

தனிநபர்கள் ஆளையாள் பிளக் மெயில் செய்வதற்கும், பழிவாங்குவதற்கும் சோசல் மீடியா நல்ல வசதியாகிவிட்டது. ஒன்லைனில் விரோதங்களை வெளிப்படுத்துவது, பல்வேறு ஒன்லைன் மோசடிகள் நாளாந்த வாழ்வின் பகுதியாகிவிட்டன. சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது ஒரு வகை. திட்டமிட்டு சோசல்மீடியாவில் சாணி அடிப்பது  இன்னோர் வகை. 

எமக்கு வைரமுத்து என்கின்ற பாடல் ஆசிரியர், கவிஞர் அவர் பாடல்கள், கவிதைகள் வாயிலாக பரீட்சயம். ஆனால், வைரமுத்து என்கின்ற தனிமனிதனின் குணாம்சங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, நடத்தை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. 

திருக்குறள் உலகப்பொதுமறை என போற்றப்படுகின்றது. இதை இயற்றியவர் திருவள்ளுவர் என சொல்லப்படுகின்றது.

திருவள்ளுவர் காலத்தில் சோசல்மீடியா பாவனை காணப்பட்டால்.... அவருக்கும் சாணி அடி???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே இந்த நிகழ்வை பற்றி நாம் எழுந்தமானமாக கருத்து சொல்வது தவறு என இன்னொரு திரியில் சொல்லி இருந்தாலும்.

நாம் ஈழத்தமிழர் இதில் ஏன் சும்மா மண்டையை போட்டு உடைக்கிறோம்?

முள்ளிவாய்கால் நேரம் ஸ்டாலின், கனிமொழி, காஸ்பர் எல்லாரையும் விட தினமும் காலையில் கருணாநிதி போன் போட்டு கதைக்கும் நிலையில் அவரின் நடைபயண நண்பனாக இருந்தவர் வை.மு.

நியாயமாக பார்த்தால் சுபவி போன்றோர் முயன்றளவு கூட முள்ளிவாய்க்காலை நிறுத்த இவர் முயலவில்லை.

அதை விட கொடுமையாக எல்லாம் முடிந்த பின் வந்து “முள்ளிவாய்க்கால் போய் வந்தேன்” என ஒப்பாரி வேறு வைத்தார்.

இவருக்கு என்ன ஆனால் எமக்கென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
     
  •  
     
 
 
 
 
 
 
1
 
 
 
 

 
 
 
 
வைரமுத்து பாலுறவுக்கு அழைத்தாரா இல்லையா என்று தெரியாது.அதை நிரூபிப்பதும் மிகவும் கடினம் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
நடைமுறை ஒழுக்கம் சார்ந்த பார்வையை ஒரு புறம் வைத்துவிட்டுப்பார்த்தால்,
வைரமுத்து அழைத்தார் என்றால் சம்பந்தப்பட்ட நபரின் ஏற்பு அல்லது மறுப்புடன் முடிந்துவிடக்கூடிய இரு நபர்களுக்கு இடையிலான விவகாரம்.
மறுத்த பின்னரும் வைரமுத்து தனது செல்வாக்கை வைத்து மிரட்டினார்,வாய்ப்புகளைத் தடுத்தார் என்றால் அது நிரூபிக்கக் கடினமானதல்ல.
வாய்ப்புகளை பாடகிக்குத் தடுப்பதென்றால் வைரமுத்துவால் அதை நேரடியாகச் செய்யமுடியாது, இசையமைப்பாளரிடமோ,இயக்குநரிடமோ,தயாரிப்பாளரிடமோ கூறித்தான் செய்திருக்கமுடியும்.
அப்படி எவரும் இன்னாருக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்று வைரமுத்து தங்களிடம் கேட்டதாக இதுவரைக் கூறவில்லை.
வைரமுத்து பாலியல் உறவுக்கு அழைத்தார் என்பதைத் தாண்டி அவர் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அழுத்தம் கொடுத்தாரா என்று உறுதியாகக் கூறமுடியாது.
இன்றைய நவீன பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அழைத்தார் என்பதை ஒரு குற்றமாக வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. அழைத்தார் என்றால் மறுத்துவிடலாம் அல்லது திட்டி அவமானப்படுத்திவிடலாம்.அதைத் தாண்டி அழுத்தம் கொடுத்தார் என்றால் அதைக் குற்றமாகக் கருதலாம்.
அழைத்தார் என்பதையே எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றமாகக் கருதினால் அது அழைக்காத ஆண்களைக்கூட பழிவாங்கப் பயன்படும் ஆயுதமாக மாறும் வாய்ப்பு அதிகம்.
வைரமுத்து அழைத்திருந்தால்கூட அதற்கு அதிகமாகவே தண்டனையைப் பெற்றுவிட்டார்.இன்று அவர் தனது வாழ்நாள் சேமிப்பான நற்பெயர் புகழ் அனைத்தையும் இழந்து அவமானத்தைச் சுமந்து நிற்கிறார்.
அவரின் நிலையில் நம்மை ஒரு கணம் நிறுத்திப் பார்த்தால் அவர் எத்தனை தூரத்துக்கு அந்த அவமானத்தை அனுபவிக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
இதற்கும் மேலாக இன்னுமொரு மாநிலத்தில் எல்லாம் வைரமுத்துவை அவமானப்படுத்துவது சாடிஸம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

ஏலவே இந்த நிகழ்வை பற்றி நாம் எழுந்தமானமாக கருத்து சொல்வது தவறு என இன்னொரு திரியில் சொல்லி இருந்தாலும்.

நாம் ஈழத்தமிழர் இதில் ஏன் சும்மா மண்டையை போட்டு உடைக்கிறோம்?

முள்ளிவாய்கால் நேரம் ஸ்டாலின், கனிமொழி, காஸ்பர் எல்லாரையும் விட தினமும் காலையில் கருணாநிதி போன் போட்டு கதைக்கும் நிலையில் அவரின் நடைபயண நண்பனாக இருந்தவர் வை.மு.

நியாயமாக பார்த்தால் சுபவி போன்றோர் முயன்றளவு கூட முள்ளிவாய்க்காலை நிறுத்த இவர் முயலவில்லை.

அதை விட கொடுமையாக எல்லாம் முடிந்த பின் வந்து “முள்ளிவாய்க்கால் போய் வந்தேன்” என ஒப்பாரி வேறு வைத்தார்.

இவருக்கு என்ன ஆனால் எமக்கென்ன?

ம்..ம்ம்ம்.... 

தமிழ்..... பயன் பெறும்....

அதுதான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ம்..ம்ம்ம்.... 

தமிழ்..... பயன் பெறும்....

அதுதான் காரணம்.

ம்ம்ம்…இவர் பெரிய கம்பன்…

திரை வெளிச்சம் மட்டும் இல்லாவிட்டால் இவர் ஜஸ்ட் இன்னொரு கவிஞர்.

காசி ஆனந்தன், புதுவை, அறிவுமதி, மேத்தா, அப்துல் ரஹ்மான்…

தமிழ் இஸ் குவைட் ஆல் ரைட், டோண்ட் வொறி.

புதுவை ஐயா எங்கே எண்டு கூட தெரியவில்லை - அவருக்கு பொங்குவார் யாருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ம்..ம்ம்ம்.... 

தமிழ்..... பயன் பெறும்....

அதுதான் காரணம்.

எண்ட குருவாயூரப்பா! 

அப்ப தமிழ் பயன்பெறும் என்ற நோக்கத்திற்காக தெலுங்கு வழி வந்த கருணாநிதியிடம் இந்த "மென் அணுகுமுறையை" நீங்கள் ஏன் பின்பற்றவில்லை?  

(ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு "பட்ஜ்" , இப்ப தமிழ் பட்ஜில் வந்து நிக்குது!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கால நக்கீரனில் இருந்து.. இந்தக் கால வைரமுத்து வரை கவிஞர்களுக்கு சோதனை வருவது இயல்பு.

ஒரு சில பேரின் காழ்புணர்ச்சிக்கு.. விருதைப் பரிசீலிக்கும் பலவீனமான இடத்தில் இருந்து விருதை வாக்குவதை விட அதை நிராகரிப்பது.. தமிழுக்கும்.. தமிழ் கவிஞனின் திறமைக்கும் சிறப்பு எனலாம்.

வாழ்க வைரமுத்து ஐயா. கொரோனா காலத்தில்.. இந்த விருது விழாக்களுக்கு போவதும் ஆபத்து. நிராகரிப்பதே நல்லது.

பழுத்த மரத்தின் மீது கல்லெறியும் கூட்டமும் உண்டு... கவுண்டு கிடக்கும் வெளவ்வால்களும் உண்டு. அதையும் தாண்டி.. பழங்கள்.. சுவைக்க மறுப்பதில்லை. மரங்கள் கனி தர மறப்பதில்லை. 

காழ்புணர்ச்சிகளை.. உறுதியோடு கடந்து சென்று விடுங்கள்.. தகாததை நிராகரித்து வென்று விடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வைரமுத்து செய்தது/ செய்யாதது...சரி/பிழை தெரியாது.ஆனால் தற்போது நடந்திருப்பது பாடசாலை மாணவர் பாலியல் துஷ்பிரயோகம் என்பதை கவனத்தில் எடுங்கள்.

30க்கும் அதிகமான மாணவிகள் தங்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி நடந்தது என்று பொலிசில் முறைபாடு செய்ததையிட்டு ஆசிரியர் கைது செய்யபடுகிறார்.சின்மயி பொலிசில் முறைபாடே செய்யவில்லையே. பாடசாலை மாணவர் பாலியல் துஷ்பிரயோகத்திலும் அபிலாஷ் போன்றவர்கள் கேட்கலாம் ஒரு பெண்ணிடம் பாலியல் முயற்சி செய்யாத ஆண்கள்  இங்கு உண்டா என்று.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:
  •  
     
     
  •  
     
 
 
 
 
 
 
1
 
 
 
 

 
 
 
 
வைரமுத்து பாலுறவுக்கு அழைத்தாரா இல்லையா என்று தெரியாது.அதை நிரூபிப்பதும் மிகவும் கடினம் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
நடைமுறை ஒழுக்கம் சார்ந்த பார்வையை ஒரு புறம் வைத்துவிட்டுப்பார்த்தால்,
வைரமுத்து அழைத்தார் என்றால் சம்பந்தப்பட்ட நபரின் ஏற்பு அல்லது மறுப்புடன் முடிந்துவிடக்கூடிய இரு நபர்களுக்கு இடையிலான விவகாரம்.
மறுத்த பின்னரும் வைரமுத்து தனது செல்வாக்கை வைத்து மிரட்டினார்,வாய்ப்புகளைத் தடுத்தார் என்றால் அது நிரூபிக்கக் கடினமானதல்ல.
வாய்ப்புகளை பாடகிக்குத் தடுப்பதென்றால் வைரமுத்துவால் அதை நேரடியாகச் செய்யமுடியாது, இசையமைப்பாளரிடமோ,இயக்குநரிடமோ,தயாரிப்பாளரிடமோ கூறித்தான் செய்திருக்கமுடியும்.
அப்படி எவரும் இன்னாருக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என்று வைரமுத்து தங்களிடம் கேட்டதாக இதுவரைக் கூறவில்லை.
வைரமுத்து பாலியல் உறவுக்கு அழைத்தார் என்பதைத் தாண்டி அவர் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அழுத்தம் கொடுத்தாரா என்று உறுதியாகக் கூறமுடியாது.
இன்றைய நவீன பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அழைத்தார் என்பதை ஒரு குற்றமாக வைக்கமுடியுமா என்று தெரியவில்லை. அழைத்தார் என்றால் மறுத்துவிடலாம் அல்லது திட்டி அவமானப்படுத்திவிடலாம்.அதைத் தாண்டி அழுத்தம் கொடுத்தார் என்றால் அதைக் குற்றமாகக் கருதலாம்.
அழைத்தார் என்பதையே எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றமாகக் கருதினால் அது அழைக்காத ஆண்களைக்கூட பழிவாங்கப் பயன்படும் ஆயுதமாக மாறும் வாய்ப்பு அதிகம்.
வைரமுத்து அழைத்திருந்தால்கூட அதற்கு அதிகமாகவே தண்டனையைப் பெற்றுவிட்டார்.இன்று அவர் தனது வாழ்நாள் சேமிப்பான நற்பெயர் புகழ் அனைத்தையும் இழந்து அவமானத்தைச் சுமந்து நிற்கிறார்.
அவரின் நிலையில் நம்மை ஒரு கணம் நிறுத்திப் பார்த்தால் அவர் எத்தனை தூரத்துக்கு அந்த அவமானத்தை அனுபவிக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
இதற்கும் மேலாக இன்னுமொரு மாநிலத்தில் எல்லாம் வைரமுத்துவை அவமானப்படுத்துவது சாடிஸம்.

நன்றி சகோ

மிகச்சரியான கருத்து

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கும் என்பார்கள்

வைரமுத்து செய்தது சரியா என்பதைபோல இவர்களும் வளரும் வரை வாயை எதை வைத்து ஒட்டிக்கொண்டு இருந்தார்கள் என்பதும் ஆராயப்படணும் ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ம்ம்ம்…இவர் பெரிய கம்பன்…

திரை வெளிச்சம் மட்டும் இல்லாவிட்டால் இவர் ஜஸ்ட் இன்னொரு கவிஞர்.

காசி ஆனந்தன், புதுவை, அறிவுமதி, மேத்தா, அப்துல் ரஹ்மான்…

தமிழ் இஸ் குவைட் ஆல் ரைட், டோண்ட் வொறி.

புதுவை ஐயா எங்கே எண்டு கூட தெரியவில்லை - அவருக்கு பொங்குவார் யாருமில்லை.

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக யுத்தம் போன்ற ஆக்கங்களை வாசித்தால், அவரையும் அவரது தமிழையும் நேசிப்பீர்கள்.

****

2018 ஜனவரியில் தொடர்ந்து மூன்று வாரங்கள் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் இங்கிலாந்தில், நீதிமன்றத்தால் தூக்கி வீசப்பட்டன.

சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனைத்துமே, குறித்த பெண்களின் கதைகளின் உண்மைத்தன்மையினை பகுத்தறியாது வழக்கு தொடுத்தமைக்கும், போலீசாரையும், முடிக்குரிய வழக்கு தொடரகத்தினை கண்டித்தன. ஒரு வழக்கில், பெண் அனுப்பிய, ஆணை அன்று இரவு ஆணுறை  உடன் வருமாறு கூறிய sms தகவலை நீதிமன்றில் சொல்லாமல் மறைத்தமை தொடர்பில் விசாரணை அதிகாரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதாவது அந்த பெண்ணே அவரை அழைத்து இருக்கிறார், பின்னர் பாலியல் வல்லுறவு என்று முறைப்பாடு ஒன்றினை (வேறு வாக்குவாதம் ஒன்று அடுத்த நாள் நடந்ததால்) கொடுத்து சிக்க வைக்க முயன்று இருக்கிறார்.

(இதுக்கு லிங்க் கேட்க்காதீங்கோ, தேட நேரமில்லை)😁

டாக்ஸி பணம் கொடுக்கும் பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிய, வெள்ளை பெண், பங்களாதேஷ் டாக்ஸி டிரைவர் தன்னை காரினுள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சொல்லி போலீசார் அந்த டிரைவரை கைது செய்தனர். நல்ல காலமாக, வாக்குவாதம் ஆரம்பித்த போதே, தெய்வாதீனமாக சாம்சுங் தொலைபேசியில் பதிவு செய்ததால் தப்பினார். பெண் 9 மாதம் சிறை சென்றார்.

இதனால் இப்போது, மிக கவனமாக இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆகவே இந்த பெண்கள் குறித்த பாலியல் விவகாரங்களை கவனமாக அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டுமே அன்றி சும்மா எழுந்தமானமாக முடிவு எடுக்க முடியாது.

யாருக்கு தெரியும், நமக்கும் அந்த நிலைமை வரலாம், ஆகவே, பெண்களுடன் தனியே பேசுவதாக இருந்தால், போனை ஓன் பண்ணி வைக்க வேண்டும்.😜

தவிர, நான் நேற்று ஒரு சின்மயி சுஜ வீடியோ பகிர்ந்தேன். சின்மயின் தனி மனி(சி)த   ஒழுக்கம் குறித்த சந்தேகங்கள் எனக்கு உண்டு. ஒரு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், அதுவும் சக பாடகி, சுசி மீது லாகவமாக மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தான் தப்பிக்க முனைவது, தான் சம்பந்தமான விடயம் எதையோ மறைப்பதாக  அப்பட்டமாக தெரிகிறது.

உண்மையில் சுசி மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை. பாலியல் தாக்குதலால் மன அழுத்தத்தில் இருந்தார். தான் தனுசினால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்று அவரே ட்வீட் செய்து இருந்தார். அந்த மன அழுத்தத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தப்பிக் கொண்டார்கள் அயோக்கியர்கள்.

உண்மையில் நான் தனுசின் எந்த படத்தினையும் பார்ப்பதில்லை. ஒழுக்கம் இன்மை முறைகேடு. பாலியல் பலாத்காரம் கிரிமினல் வேலை.

பாலியல் பலாத்காரம் செய்து, கணவருக்கு பெரும் பணம் கொடுத்து, பெண்ணை மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி, தப்பித்தது எப்படிப்பட்ட கிரிமினல் வேலை என்று யோசித்தால், இந்த சின்மயி குறித்த தகவல்களை வெளியிட்ட அதே பெண்ணை, அதே சின்மயி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி எப்படி, தான் தப்பிக்க முனைகிறார் என்று புரியும்.

***

சுஜியின் டிவீட்டர் கணக்கினை ஹேக் பண்ணியவர்களுக்கு, மார்பிங்க் செய்ய வேண்டிய தேவை என்ன என்று யாரும் கேட்கவில்லை. அந்த பெண் போலீசுக்கு போகாததன் காரணம், அவரின் முன்னைய ஒழுக்கமின்மையாக, அது படம் பிடிக்கபட்டிருக்கலாம் என்ற கவலையாக இருந்திருக்கலாம். யாருக்கு தெரியும்.

3 hours ago, Justin said:

எண்ட குருவாயூரப்பா! 

அப்ப தமிழ் பயன்பெறும் என்ற நோக்கத்திற்காக தெலுங்கு வழி வந்த கருணாநிதியிடம் இந்த "மென் அணுகுமுறையை" நீங்கள் ஏன் பின்பற்றவில்லை?  

(ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு "பட்ஜ்" , இப்ப தமிழ் பட்ஜில் வந்து நிக்குது!)

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக யுத்தம் போன்ற ஆக்கங்களை வாசித்தால், அவரையும் அவரது தமிழையும் நேசிப்பீர்கள்.

இந்த மூன்றையும் படிக்கவும் இல்லை. படிக்கவும் போவதில்லை! ஆனால் தமிழை நேசிக்கத்தான் செய்கின்றோம். உண்மையில் மகாபாராதத்தை நவீன காவியமாக மீண்டும் தந்த ஜெயமோகனின் வெண்முரசு (26 நாவல்கள்) படித்தால் தமிழின் செழுமை புரியும்.

வைரமுத்து நல்ல பாடலாசிரியர். அவரது திரைப்பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவர் நல்ல கவிஞர் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இந்த மூன்றையும் படிக்கவும் இல்லை. படிக்கவும் போவதில்லை! ஆனால் தமிழை நேசிக்கத்தான் செய்கின்றோம். உண்மையில் மகாபாராதத்தை நவீன காவியமாக மீண்டும் தந்த ஜெயமோகனின் வெண்முரசு (26 நாவல்கள்) படித்தால் தமிழின் செழுமை புரியும்.

வைரமுத்து நல்ல பாடலாசிரியர். அவரது திரைப்பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவர் நல்ல கவிஞர் இல்லை.

 

மேலே நான் எழுதியதை மீண்டும் வாசித்து, (கடைசி நான்கு பத்திகள்) சின்மயி நம்பிக்கை கொள்ள கூடிய ஒருவரா என்று சொல்லுவீர்களா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.

 👋🏽அது....👍🏽 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

மேலே நான் எழுதியதை மீண்டும் வாசித்து, (கடைசி நான்கு பத்திகள்) சின்மயி நம்பிக்கை கொள்ள கூடிய ஒருவரா என்று சொல்லுவீர்களா? 🤔

சாரி.  நான் நாலாந்தர கொசிப்புக்களை படிப்பது குறைவு. படித்தாலும் நீதி சொல்லும் அளவிற்கு கனவான் இல்லை.😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சாரி.  நான் நாலாந்தர கொசிப்புக்களை படிப்பது குறைவு. படித்தாலும் நீதி சொல்லும் அளவிற்கு கனவான் இல்லை.😏

அப்படியானால், வைரமுத்துவின் மீது குற்றம் சொல்வதே ஒரு அடிப்படை இல்லாத கொசிப் தானே கிருபன் அய்யா.

நான் வாசித்ததால் சொல்கிறேன், கண்ணால் காண்பதுவும் பொய், காதல் கேட்பதுவும் பொய், தீர விசாரிப்பதே உண்மை. அதுக்கு சின்மயி போலீசுக்கு போகவேண்டும். அதனை தடுப்பது, தனுஷ் விவகாரம். அது கிளறப்படும் என்பதால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அப்படியானால், வைரமுத்துவின் மீது குற்றம் சொல்வதே ஒரு அடிப்படை இல்லாத கொசிப் தானே கிருபன் அய்யா.

 

சமூக வலைத்தளங்களில் நீதி கொடுக்கின்றோம் என்று தனிநபர்களின் தனிப்பட்ட விடயங்களில் அத்துமீறுவது கொசிப்புக்கு தீனி போடும் செயல்.

இந்த விடயங்கள் நீதிமன்று போய் சரியாக விசாரிக்கப்பட்டால் எவர் உண்மை சொல்கின்றார் என்பது புரியும். அப்படிப் போகமுடியவில்லை என்றால் நீதி கிடைக்காது என்று புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அடுத்த பரபரப்பு நியூஸ் தொடங்க எல்லோரும் இதனை மறந்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலக யுத்தம் போன்ற ஆக்கங்களை வாசித்தால், அவரையும் அவரது தமிழையும் நேசிப்பீர்கள்.

****

2018 ஜனவரியில் தொடர்ந்து மூன்று வாரங்கள் 4 பாலியல் பலாத்கார வழக்குகள் இங்கிலாந்தில், நீதிமன்றத்தால் தூக்கி வீசப்பட்டன.

சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனைத்துமே, குறித்த பெண்களின் கதைகளின் உண்மைத்தன்மையினை பகுத்தறியாது வழக்கு தொடுத்தமைக்கும், போலீசாரையும், முடிக்குரிய வழக்கு தொடரகத்தினை கண்டித்தன. ஒரு வழக்கில், பெண் அனுப்பிய, ஆணை அன்று இரவு ஆணுறை  உடன் வருமாறு கூறிய sms தகவலை நீதிமன்றில் சொல்லாமல் மறைத்தமை தொடர்பில் விசாரணை அதிகாரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதாவது அந்த பெண்ணே அவரை அழைத்து இருக்கிறார், பின்னர் பாலியல் வல்லுறவு என்று முறைப்பாடு ஒன்றினை (வேறு வாக்குவாதம் ஒன்று அடுத்த நாள் நடந்ததால்) கொடுத்து சிக்க வைக்க முயன்று இருக்கிறார்.

(இதுக்கு லிங்க் கேட்க்காதீங்கோ, தேட நேரமில்லை)😁

டாக்ஸி பணம் கொடுக்கும் பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிய, வெள்ளை பெண், பங்களாதேஷ் டாக்ஸி டிரைவர் தன்னை காரினுள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று சொல்லி போலீசார் அந்த டிரைவரை கைது செய்தனர். நல்ல காலமாக, வாக்குவாதம் ஆரம்பித்த போதே, தெய்வாதீனமாக சாம்சுங் தொலைபேசியில் பதிவு செய்ததால் தப்பினார். பெண் 9 மாதம் சிறை சென்றார்.

இதனால் இப்போது, மிக கவனமாக இந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆகவே இந்த பெண்கள் குறித்த பாலியல் விவகாரங்களை கவனமாக அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டுமே அன்றி சும்மா எழுந்தமானமாக முடிவு எடுக்க முடியாது.

யாருக்கு தெரியும், நமக்கும் அந்த நிலைமை வரலாம், ஆகவே, பெண்களுடன் தனியே பேசுவதாக இருந்தால், போனை ஓன் பண்ணி வைக்க வேண்டும்.😜

தவிர, நான் நேற்று ஒரு சின்மயி சுஜ வீடியோ பகிர்ந்தேன். சின்மயின் தனி மனி(சி)த   ஒழுக்கம் குறித்த சந்தேகங்கள் எனக்கு உண்டு. ஒரு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண், அதுவும் சக பாடகி, சுசி மீது லாகவமாக மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தான் தப்பிக்க முனைவது, தான் சம்பந்தமான விடயம் எதையோ மறைப்பதாக  அப்பட்டமாக தெரிகிறது.

உண்மையில் சுசி மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை. பாலியல் தாக்குதலால் மன அழுத்தத்தில் இருந்தார். தான் தனுசினால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்று அவரே ட்வீட் செய்து இருந்தார். அந்த மன அழுத்தத்தினை, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி தப்பிக் கொண்டார்கள் அயோக்கியர்கள்.

உண்மையில் நான் தனுசின் எந்த படத்தினையும் பார்ப்பதில்லை. ஒழுக்கம் இன்மை முறைகேடு. பாலியல் பலாத்காரம் கிரிமினல் வேலை.

பாலியல் பலாத்காரம் செய்து, கணவருக்கு பெரும் பணம் கொடுத்து, பெண்ணை மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி, தப்பித்தது எப்படிப்பட்ட கிரிமினல் வேலை என்று யோசித்தால், இந்த சின்மயி குறித்த தகவல்களை வெளியிட்ட அதே பெண்ணை, அதே சின்மயி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி எப்படி, தான் தப்பிக்க முனைகிறார் என்று புரியும்.

***

சுஜியின் டிவீட்டர் கணக்கினை ஹேக் பண்ணியவர்களுக்கு, மார்பிங்க் செய்ய வேண்டிய தேவை என்ன என்று யாரும் கேட்கவில்லை. அந்த பெண் போலீசுக்கு போகாததன் காரணம், அவரின் முன்னைய ஒழுக்கமின்மையாக, அது படம் பிடிக்கபட்டிருக்கலாம் என்ற கவலையாக இருந்திருக்கலாம். யாருக்கு தெரியும்.

கருணாநிதியை வெறுப்பது அவர் செய்த அரசியலுக்காகவே அன்றி தமிழுக்கு ஆக அல்லவே.
 

அப்ப கருணநிதி. ..தமிழன் தானே? தமிழ் வளர்த்த ஒருவனை  ஏன்? தெலுங்கனென்று அழைக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நடப்பது குழுவாதமே அன்றி வேறொன்றுமில்லை அங்கு நடப்பது வேறு இங்கு கதைப்பது வேறு நமக்கு இங்கு வேலையில்லை இன்னும் ஐந்தாறு பக்கத்துக்கு பத்த  வைப்பினம் போல் உள்ளது எஸ்கேப் 🏃‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

அப்ப கருணநிதி. ..தமிழன் தானே? தமிழ் வளர்த்த ஒருவனை  ஏன்? தெலுங்கனென்று அழைக்கிறீர்கள் 

தமிழ் வளர்த்த பல ஆங்கிலேயர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தமிழன் என்றா அழைக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

சமூக வலைத்தளங்களில் நீதி கொடுக்கின்றோம் என்று தனிநபர்களின் தனிப்பட்ட விடயங்களில் அத்துமீறுவது கொசிப்புக்கு தீனி போடும் செயல்.

இந்த விடயங்கள் நீதிமன்று போய் சரியாக விசாரிக்கப்பட்டால் எவர் உண்மை சொல்கின்றார் என்பது புரியும். அப்படிப் போகமுடியவில்லை என்றால் நீதி கிடைக்காது என்று புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். அடுத்த பரபரப்பு நியூஸ் தொடங்க எல்லோரும் இதனை மறந்துவிடுவார்கள்.

அதனால் தான் சொல்கிறேன். சின்மயி, ஸ்ரீ ரெட்டி, விஜயலட்சுமி எல்லோருமே குற்றம் சுமத்தியதின் பின்னணி காரணம் வேறு.

மூவரும் சினிமா உலகம். அது எப்படி பட்டது என்று எமக்கு புரியும்.

மேலும், புலவர் இணைப்பில் உள்ளது மிக சரியானது. சாதாரண வாழ்க்கையிலேயே, கணவன், 'என்னப்பா, என்ன மாதிரி' என்று தொடங்குவார்.... சும்மா படுங்கோ.... எனக்கு சரியான வேலை, ரெஸ்ட் வேணும் எண்டோன்ன கணவர் ஆப் ஆகிவிடுவார்.  அதன் பெயர் பாலியல் சீண்டுதல் இல்லை.

வைரமுத்து, கேட்டிருந்தால் தப்பிலேயே. இல்லை என்று போக வேண்டியதுதானே. சினிமா துறையில் சான்ஸ் வாங்கி கொடுக்க, யாரும் அவரை அணுகி இருக்கலாம், அவரும் கேட்டிருக்கலாம், சிலர் சம்மதித்து இருக்கலாம், சிலர் இல்லை என்று போயிருக்கலாம். அது தவறு இல்லை.

மேலும், ஒரு பாடல் பதிவுக்கு வீணை இசைக்கு, வீணை காயத்திரியை, இளையராஜா அழைத்து இருந்தார். அவரது அழகில் இளையராஜா கிரங்கிப் போய், அழைத்து, அழைத்து உருகினார். தன்னை (இரண்டாம்) கலியாணம் செய்தால் ராணி மாதிரி வைத்திருப்பேன் என்று சொல்லி இருக்கிறார். பெண், வெளிநாட்டில் இருந்த கணவருடன் போய் சேர்ந்து அங்கேயே இருந்து தப்பிக் கொண்டார். அது மோகம் அது பாலியல் சீண்டல் இல்லை.

தனுஷ் செய்ததாக சுசி சொன்னது, கிரிமினல் பாலியல் பலாத்காரம்.
 

13 minutes ago, பெருமாள் said:

இந்த திரியில் நடப்பது குழுவாதமே அன்றி வேறொன்றுமில்லை அங்கு நடப்பது வேறு இங்கு கதைப்பது வேறு நமக்கு இங்கு வேலையில்லை இன்னும் ஐந்தாறு பக்கத்துக்கு பத்த  வைப்பினம் போல் உள்ளது எஸ்கேப் 🏃‍♂️

வைரமுத்தரை பத்தி கதைத்தால், கருணாநிதியை கொண்டு வந்து இழுப்பது ஏன் என்று புரியவில்லை. நானும் எஸ்கேப்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.