Jump to content

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

.வைரமுத்தரை பத்தி கதைத்தால், கருணாநிதியை கொண்டு வந்து இழுப்பது ஏன் என்று புரியவில்லை. நானும் எஸ்கேப்....

இது உங்களுக்கு ஏன் விளங்கவில்லை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

1. நாங்கள் அல்லும் பகலும் வீதி வீதியாக அலைந்து எம் உறவுகளை காப்பாற்ற துடித்த போது - கருணாநிதி ஒவ்வொரு நாளும் காலையில் முதலாவதாக தொலைபேசியில் கதைக்கும் ஆளாக இருந்தவர் வைரமுத்து.

ஒரு தமிழனாக இன்றைக்கு அவருக்கு நாம் குரல் கொடுக்க, ஒரு தமிழனாக அவர் அன்று என்ன செய்தார்? கருணாநிதியை ஒரு உண்மையான யுத்த நிறுத்ததுக்கு தூண்டி இருக்கலாம். 

அவர் மறுத்தால் - நட்பை பகிரங்கமாக துண்டித்து - யுத்தத்தை கருணாநிதி நிறுத்த வேண்டும் என அறிக்கை விட்டிருக்கலாம்.

ஆனால் செய்யவில்லை? ஏன்?

கருணாநிதியுடனான நட்பை அதில் உள்ள அனுகூலத்தை இழக்க விரும்பவில்லை.

2. அது மட்டும் அல்ல இன்றைக்கும் 2009 இல் கருணாநிதி செய்தது சரி என்கிறார். வெள்ளை அடிக்கிறார்.

வைரமுத்துக்கு எம்மிடம் ஆதரவு திரட்டும் முன், அவரை கருணாநிதி செய்தது பச்சை துரோகம் என அறிக்கை விட சொல்லுங்கள்.

நாம் மிக தெளிவாக வைரமுத்து போன்றோரின் துரோகத்தை புரிந்துள்ளோம்.

ஆகவே அவரை தூக்கி கொண்டு எம்முன்னே வந்தால், ஒரு கட்டத்துக்கு மேல் எஸ்கேப் ஆவதை தவிர வேறு வழியில்லை.

 

Link to comment
Share on other sites

  • Replies 180
  • Created
  • Last Reply
16 hours ago, கிருபன் said:

இந்த மூன்றையும் படிக்கவும் இல்லை. படிக்கவும் போவதில்லை! ஆனால் தமிழை நேசிக்கத்தான் செய்கின்றோம். உண்மையில் மகாபாராதத்தை நவீன காவியமாக மீண்டும் தந்த ஜெயமோகனின் வெண்முரசு (26 நாவல்கள்) படித்தால் தமிழின் செழுமை புரியும்.

வைரமுத்து நல்ல பாடலாசிரியர். அவரது திரைப்பாடல்கள் பிடிக்கும். ஆனால் அவர் நல்ல கவிஞர் இல்லை.

 

வெண்முரசு நாவல் இதுவரையில் எவராலும் எழுதப்படாத காவியம். இது எனது கருத்து. 

அதுசரி கிருபன் நல்ல கவிஞர் என்றால் கவிதை எப்படி இருக்கும்? 

8 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல காலம் என்ரை விசையம் ஒருத்தருக்கும் தெரிந்திருக்க  வில்லை.😄

நல்ல காலம் இன்னும் இந்தக் கருத்தை ஒருவரும் கவனிக்கேல்ல. 😀கவனிச்சினம் சுவைப்பிரியன் பூராயம் தொடங்கீடும். சத்தம் போடாமல் இருங்கோ🤭😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

 

நல்ல காலம் இன்னும் இந்தக் கருத்தை ஒருவரும் கவனிக்கேல்ல. 😀கவனிச்சினம் சுவைப்பிரியன் பூராயம் தொடங்கீடும். சத்தம் போடாமல் இருங்கோ🤭😀

கவனிக்க வைத்தமைக்கு நன்றி அக்கா🤣.

@சுவைப்பிரியன்என்ன மாரி வசதியள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

கிருபன் நல்ல கவிஞர் என்றால் கவிதை எப்படி இருக்கும்? 

கவிதை நுண்ணுணர்வின் அவசத்தை (நிலை கொள்ளாத மனத்தை) காட்டுவதாக இருக்கவேண்டுமாம்.  பிரசுரிக்கவேண்டும் என்றும் கவிதை எழுதினாலே அது மனதில் சலனத்தை உருவாக்கிவிடுமாம்!

இப்போதெல்லாம் யாழ் களத்தில் எழுதும் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கவிதையாகவும் சில வரிகள் எழுதலாம். நல்ல வரிகளுக்கு!

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

கவனிக்க வைத்தமைக்கு நன்றி அக்கா🤣.

@சுவைப்பிரியன்என்ன மாரி வசதியள்🤣

காத்திருந்து கம்போடை காவல் நிக்கிறியள். 😊

சேதாரங்களுக்கு goshan_che தான் பொறுப்பு சுவைப்பிரியரே.😊

44 minutes ago, கிருபன் said:

கவிதை நுண்ணுணர்வின் அவசத்தை (நிலை கொள்ளாத மனத்தை) காட்டுவதாக இருக்கவேண்டுமாம்.  பிரசுரிக்கவேண்டும் என்றும் கவிதை எழுதினாலே அது மனதில் சலனத்தை உருவாக்கிவிடுமாம்!

இப்போதெல்லாம் யாழ் களத்தில் எழுதும் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கவிதையாகவும் சில வரிகள் எழுதலாம். நல்ல வரிகளுக்கு!

 

 

😕🙆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கவிதை நுண்ணுணர்வின் அவசத்தை (நிலை கொள்ளாத மனத்தை) காட்டுவதாக இருக்கவேண்டுமாம்.  பிரசுரிக்கவேண்டும் என்றும் கவிதை எழுதினாலே அது மனதில் சலனத்தை உருவாக்கிவிடுமாம்!

இப்போதெல்லாம் யாழ் களத்தில் எழுதும் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கவிதையாகவும் சில வரிகள் எழுதலாம். நல்ல வரிகளுக்கு!

 

 

இப்ப யாழில் சில கருத்தாளர் இணைப்பது, எழுதுவது எல்லாம் கவிதைதானே?

#கவிதைக்கு பொய்யழகு 🤣

30 minutes ago, shanthy said:

காத்திருந்து கம்போடை காவல் நிக்கிறியள். 😊

சேதாரங்களுக்கு goshan_che தான் பொறுப்பு சுவைப்பிரியரே.😊

😕🙆

🤣 சுவையண்ணா அச்சா பிள்ளை எண்டு எல்லாருக்கும் தெரியும் ( எண்டு அவர் நினைக்கிறார்🤣). 

Link to comment
Share on other sites

43 minutes ago, goshan_che said:

இப்ப யாழில் சில கருத்தாளர் இணைப்பது, எழுதுவது எல்லாம் கவிதைதானே?

#கவிதைக்கு பொய்யழகு 

 

கவிதை என்றால் என்ன goshan_che 🤭

"கவிதைக்கு பொய்யழகு "  கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரியொன்று? இது கவிதை இல்லையோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, shanthy said:

 

கவிதை என்றால் என்ன goshan_che 🤭

"கவிதைக்கு பொய்யழகு "  கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரியொன்று? இது கவிதை இல்லையோ 😀

அக்கா,

அவரை கவிஞர் இல்லை பாடலாசிரியர் என நான் கூறவில்லை. அது கிருபன் ஜி சொன்னது.

இது அவரின் வார்த்தை என்றறிந்தே எழுதினேன்.

தமிழ் வாழணும் என்பதற்காக ஆதரிக்கும்  அளவுக்கு வைரமுத்து ஒன்றும் பெரிய கவிஞர் இல்லை என்றே சொன்னேன்.

அவரை நாம் எதிர்க்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.

அவருக்குக்காக நாம் வரிந்து கட்ட தேவையில்லை என்று மட்டுமே சொன்னேன்.  

குறைந்த பட்சம் கருணாநிதியின் துரோகத்தை அவரை இன்னும் புகழும் அதே வார்த்தைகளில் பதிவு செய்யட்டும். 

எமது சாவை வேடிக்கை பார்த்தமைக்கு பிராயச்சித்தமாக.

அதன் பின் அவருக்குக்காக நாம் வரிந்து கட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

குறைந்த பட்சம் கருணாநிதியின் துரோகத்தை அவரை இன்னும் புகழும் அதே வார்த்தைகளில் பதிவு செய்யட்டும். 

என்னது கருணாநிதி துரோகம் செய்தாரா?
யாருக்கு?
எப்போது?

இதை சொல்வது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வைரமுத்துக்கு கொடி பிடிப்பவர்கள் இதையும் ஒரு தரம் படியுங்கள்.

8 minutes ago, குமாரசாமி said:

என்னது கருணாநிதி துரோகம் செய்தாரா?
யாருக்கு?
எப்போது?

இதை சொல்வது யார்?

வேறு யார் சொல்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் - கோசான் யாழில் எழுதியகாலம் தொட்டு இதை சொல்லி வருகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

வேறு யார் சொல்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை ஆனால் - கோசான் யாழில் எழுதியகாலம் தொட்டு இதை சொல்லி வருகிறார்.

அதாவது   ஈழத்தமிழர் பிரச்சனையில் கலைஞர் கருணாநிதியையும்  எதிர்க்கின்றீர்கள்?  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அதாவது   ஈழத்தமிழர் பிரச்சனையில் கலைஞர் கருணாநிதியையும்  எதிர்க்கின்றீர்கள்?  😁

என்ன புதிசு போல ஷாக் ஆகிறியள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

என்ன புதிசு போல ஷாக் ஆகிறியள்🤣

இல்லை....எனக்கு தெரியும் நீங்கள் நல்லவரெண்டு. எதுக்கும் உங்கடை வாயாலை கேட்டு தெரிஞ்சு வைச்சிருப்பம் எண்டுதான்.....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இல்லை....எனக்கு தெரியும் நீங்கள் நல்லவரெண்டு. எதுக்கும் உங்கடை வாயாலை கேட்டு தெரிஞ்சு வைச்சிருப்பம் எண்டுதான்.....😂

உத நீங்கள் கேட்க நான் சொல்ல…🤣.

இது 6 மணி செய்தி மாரி வழமையான விடயம்தானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உத நீங்கள் கேட்க நான் சொல்ல…🤣.

இது 6 மணி செய்தி மாரி வழமையான விடயம்தானே🤣

எல்லாம் கிடக்கட்டும்...அது சரி உங்கடை Popular  பொயின்ற் எகிறிக்கொண்டு போகுது. உங்களுக்கை நீங்களே குத்து கூத்து நடக்குதோ? 😂
ஏனெண்டால் நீங்கள் தான் முந்தியொருக்கால் இஞ்சத்தையான் பச்சை புள்ளி அது இதெல்லாம் தங்களுக்கை தாங்களே மாறி மாறி குத்திக்கொள்ளுவினம் எண்டு புறுபுறுத்தனியள்.🤣
அதோடை நல்ல கருத்தாளர்களுக்கு இஞ்சை பச்சை குறைவு எண்டும் சொன்னனியள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் கிடக்கட்டும்...அது சரி உங்கடை Popular  பொயின்ற் எகிறிக்கொண்டு போகுது. உங்களுக்கை நீங்களே குத்து கூத்து நடக்குதோ? 😂
ஏனெண்டால் நீங்கள் தான் முந்தியொருக்கால் இஞ்சத்தையான் பச்சை புள்ளி அது இதெல்லாம் தங்களுக்கை தாங்களே மாறி மாறி குத்திக்கொள்ளுவினம் எண்டு புறுபுறுத்தனியள்.🤣
அதோடை நல்ல கருத்தாளர்களுக்கு இஞ்சை பச்சை குறைவு எண்டும் சொன்னனியள். 😎

1. பொயிண்ட் எகிறுதோ? பாக்க அப்படித்தெரியேல்ல?

2. அண்ணை இன்னும் 2500 தாண்டாத நாங்களே மாறி மாறி குத்துறம் என்டால், 10,000 தாண்டினவை எப்படி🤣

3. உந்த புறுபுறுப்பில மாற்றம் இல்லை.

4. உந்த கருத்துலயும் மாற்றம் இல்லை. அப்பவே சொன்னான் அந்த லிஸ்டில என்ர பெயர் வந்தது ஒரு கெட்ட சகுனம் எண்டு. 

நான் நினைக்கிறன் உது சதி எண்டு. நான் அப்படி சொன்னபடியால் எனக்கு குத்தி ஏத்துற சதி எண்டு🤣.

ஆனால் இந்த சதியில உங்களுக்கு பங்கில்லை. என்ர அண்ணை மறந்தும் எனக்கு குத்தாது எண்டு எனக்குத்தெரியிம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

 வைரமுத்து நல்ல சினிமா பாடலாசிரியர். ஆனால் சிறந்த கவிஞரோ எழுத்தாளரோ அல்ல.

ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்..

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின்முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.”

 

மிகுதியை அறிய..

 

மொத்த தமிழ் பேசும் சனத்தொகையில் இலக்கியம் அறிந்த வாசகர்கள், பொதுவாசகர்கள் பரம்பல் பற்றி முதலில் கூறுங்கள். அதன் சதவிகிதம் என்ன?

எழுந்தமானமாக தமிழ் பேசும் நூறு பேரை அண்மித்து அவர்களிடம் நீங்கள் குறிப்பிடும் நபர் பெயரையும், வைரமுத்து பெயரையும் குறிப்பிட்டு இருவரையும் யார் என கூறுமாறு கேட்டால்.. பெரும்பாலானோர் எவரை அடையாளம் காட்டுவார்கள்?

வைரமுத்துவின் வரிகள் தமிழ் அதிகம் எழுத, வாசிக்க தெரியாத புதிய தலைமுறை குழந்தைகளுக்குகூட பரீட்சயமானவை. நீங்கள் குறிப்பிடும் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்கள் எத்தனைபேருக்கு பரீட்சயம்?

சாதாரண பொது சனத்தை சேரமுடியாத படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மாத்திரம் நுகர்பவை.

நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் சினிமா ஊடகத்தின் பங்கு அளப்பரியது. சினிமா படைப்பிலக்கியத்தில் வைரமுத்து ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுவிட்டார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணாவிலிருந்து  கருணாநிதி எம்ஜிஆர் கண்ணதாசன் வாலி என தமிழகத்தின் உச்சத்திலிருந்த நடிகர்கள் கவிஞர்கள் அரசியல்வாதிகள் என பெரும்பாலானோர்  பல பெண்களுடன் கூடி குலாவியவர்கள்தான்.

அவர்களுக்கும் வைரமுத்துவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு, அவர்கள் தமது சல்லாபங்களை மறைத்ததில்லை, மறுத்ததில்லை . ஆனால் வைரமுத்து மறுக்கிறார் மறைக்கிறார் என்பதே சர்ச்சைகளுக்கு மூல காரணம்.

வைரமுத்துவின் பண்ணைவீட்டுக்கு நடிகைகள் அடிக்கடி விசிட் செய்வது பல ஆண்டுகளுக்கு முன்னரே பத்திரிகைகளில் அரசல் புரசலாக வந்ததுண்டு அதில் முக்கியமான ராய்’ல் முடியும் ஒரு நடிகையின் பெயர் நீண்டகாலமாகவே அடிபட்டது.

இந்த சர்ச்சைகளுக்கு முன்னர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படங்களில்  கச்சேரியில் தொடர்ந்து சின்மயி  வாய்ப்புபெற வைரமுத்துவே காரணம் என்று அழுத்தமாக சொல்கிறார் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், அவர் சொல்வதில் பொய் இருந்தால் டிவிட்டரில் முகம் தெரியாதவர்களின் கருத்துக்கெல்லாம் மறுப்பு கருத்துக்கள் சொல்லும் சின்மயி ஏன் அதை மறுக்கவில்லை?

வைரமுத்து தன்னை பாலியல்ரீதியில் அணுகினார் என்று சொன்ன காலபகுதிக்கு சிலவருசங்களுக்கு பிறகும் தனது திருமணத்திற்கு அழைத்து வாயெல்லாம் பல்லாக மீண்டும் மீண்டும் அவர் பாதத்தை தொட்டு வணங்குவதை பார்க்கும் எவரும்  சின்மயின் கற்புக்கு களங்கம் விளைவிக்க பார்த்த ஒருவரருக்கு எதுக்கு இவ்வளவு கெளரவம் கொடுத்தார் என்று கேட்க மாட்டார்களா?

இந்த வீடியோவில் 2:15 லிருந்து 2:19 வரை பார்க்கும் எவரும் சின்மயி உண்மை பேசகூடிய ஒருவர் என்பதை ஏற்பார்களா?

 

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மொத்ததில் துறைரீதியில் ரகசிய நெருக்கங்களை பேணியவர்கள் வெளியே சொல்லப்பட முடியாத ஒரு விசயத்தில் முரண்பாடு வந்ததும் வேறு காரணங்களை கூறி பழசை எல்லாம் கிண்டியெடுத்து யோக்கியர்களாக பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழர் மண்மீட்புபற்றியெல்லாம் அடிக்கடி கவிதை வடிக்கும் வைரமுத்து அவுஸ்திரேலியாவிற்கு ஒருமுறை  போனது வானொலி செவ்வியில் தமிழ்நேயர் ஒருவர் இறுதி யுத்ததின்போது கருணாநிதி நடத்திய நாடகம்பற்றி கேட்டபோது எல்லாவற்றிகும் தமிழால் வித்தக பதில் சொல்லி விளையாடும் பழக்கமுள்ள வைரமுத்து , அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியாமல் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

ஆக சூழ்நிலைக்கேற்றவாறு பெண்ணையும் ,மண்ணையும் தொட்டுவிளையாடும் இவர் போன்றவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை பார்க்காமலே தவிர்த்துவிட்டு ,

ஒரு படைப்பாளியாக பாடலாசிரியராக கவிஞராக பார்த்தால் வைரமுத்துவும் தன் பங்கிற்கு தமிழுக்கு அழகூட்டியிருக்கிறார் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

இது அவர் பெற்ற விருதுகளை வைத்து கூறும் ஒன்றல்ல , ஏனெனில் காசு கொடுத்தும் அரசியல் செல்வாக்காலும் விருதுகள் பெறுகிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு.

ஆனால் தன்னோட மொழியை தன் இனம் ரசிக்க ரசிக்க வைரமுத்து கையாளாமல்   போயிருந்தால் நான்கு தசாப்தத்துக்கும் மேலாக ஒரு கவிஞன்/படைப்பாளி  தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கவே முடியாது.

சாதனைகளை பணம் செல்வாக்கால் வாங்க வாய்ப்புண்டு ஆனால் சந்ததியின் ரசனையை திறமை என்ற ஒன்றை தவிர வேறு எதனாலும் வாங்க வாய்ப்பேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

தமிழர் மண்மீட்புபற்றியெல்லாம் அடிக்கடி கவிதை வடிக்கும் வைரமுத்து அவுஸ்திரேலியாவிற்கு ஒருமுறை  போனது வானொலி செவ்வியில் தமிழ்நேயர் ஒருவர் இறுதி யுத்ததின்போது கருணாநிதி நடத்திய நாடகம்பற்றி கேட்டபோது எல்லாவற்றிகும் தமிழால் வித்தக பதில் சொல்லி விளையாடும் பழக்கமுள்ள வைரமுத்து , அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியாமல் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

இன்றுவரை பதில் இல்லை, கருநாநிதியை தொடர்ந்தும் தமிழின தலைவர் என்கிறார். தனது 2009 கள்ள மெளனத்திற்கு மன்னிப்பு கூட இல்லை.

ஆனால் இன்னும் இரெண்டு கவிதையை “முள்ளிவாய்க்கால் போனேன்” “ தமிழ் ஈழக்காற்றே”  என உருட்டி விட்டால் - ஈழத்தமிழர் தன்னை மீளவும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறார்.

எமது இளிச்சவாய்தனத்தின் மீது பலருக்கு அத்தனை நம்பிக்கை😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

இந்த வீடியோவில் 2:15 லிருந்து 2:19 வரை பார்க்கும் எவரும் சின்மயி உண்மை பேசகூடிய ஒருவர் என்பதை ஏற்பார்களா?

இல்லை

தனக்கு பாலியல்ரீதியில் துன்பம் கொடுத்தவரை திருமணத்திற்கே மற்றவர்கள் அழைக்க மாட்டார்கள் சின்மயி அழைத்து வாயெல்லாம் பல்லாக காலை  தொட்டு வணங்குவது என்பது 🤦‍♂️

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

இன்றுவரை பதில் இல்லை, கருநாநிதியை தொடர்ந்தும் தமிழின தலைவர் என்கிறார். தனது 2009 கள்ள மெளனத்திற்கு மன்னிப்பு கூட இல்லை.

ஆனால் இன்னும் இரெண்டு கவிதையை “முள்ளிவாய்க்கால் போனேன்” “ தமிழ் ஈழக்காற்றே”  என உருட்டி விட்டால் - ஈழத்தமிழர் தன்னை மீளவும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறார்.

எமது இளிச்சவாய்தனத்தின் மீது பலருக்கு அத்தனை நம்பிக்கை😡

தமிழ் ஈழக்காற்றே பாடல் தான் தமிழினத்தின் ஒட்டுமொத்த துயரையும் சொல்லுதாம் என வைரமுத்துவுக்கு பலரும் குடை பிடிக்கினம். 

ஆனால் எங்கள் கலைஞர்கள் எங்கள் துயரை எத்தனையோ வடிவில் பாடி எழுதிய எதையும் ஈழக்காற்றே பாடலுக்கு பிடில் வாசிப்போர் திரும்பியும் பார்ப்பதில்லை. 

வைரமுத்துவுக்கு சண் குழுமம் கொடுக்கும் விளம்பரம் தான் பலரையும் கவர்கிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எழுந்தமானமாக தமிழ் பேசும் நூறு பேரை அண்மித்து அவர்களிடம் நீங்கள் குறிப்பிடும் நபர் பெயரையும், வைரமுத்து பெயரையும் குறிப்பிட்டு இருவரையும் யார் என கூறுமாறு கேட்டால்.. பெரும்பாலானோர் எவரை அடையாளம் காட்டுவார்கள்?

இதை வேறு இடத்தில் விவாதிக்கலாம். ஜனரஞ்சமாக வணிக நோக்கத்திற்காக எழுதுவதையும், நவீன இலக்கியத்தையும் ஒன்றாக குழப்பிக்கொள்கின்றீர்கள். இது தங்க நகையையும் கில்ட் நகையையும் ஒன்று என்று சொல்வது போலத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

தமிழ் ஈழக்காற்றே பாடல் தான் தமிழினத்தின் ஒட்டுமொத்த துயரையும் சொல்லுதாம் என வைரமுத்துவுக்கு பலரும் குடை பிடிக்கினம். 

ஆனால் எங்கள் கலைஞர்கள் எங்கள் துயரை எத்தனையோ வடிவில் பாடி எழுதிய எதையும் ஈழக்காற்றே பாடலுக்கு பிடில் வாசிப்போர் திரும்பியும் பார்ப்பதில்லை. 

வைரமுத்துவுக்கு சண் குழுமம் கொடுக்கும் விளம்பரம் தான் பலரையும் கவர்கிறது. 

 

வணக்கம் சாந்தி அக்கா!
இதை நீங்கள் பார்ப்பனியத்திற்கும்- திராவிடத்திற்குமான பிரச்சனையாக ஏன் பார்க்கக்கூடாது?

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் சாந்தி அக்கா!
இதை நீங்கள் பார்ப்பனியத்திற்கும்- திராவிடத்திற்குமான பிரச்சனையாக ஏன் பார்க்கக்கூடாது?

என்ன பிரச்சினையாகவும் இருந்திட்டு போகட்டும். ஆனால் வைரமுத்து வந்து எழுதித்தான் ஈழத்தின் துயர் கலை(ரை) யும் என்பது தான் சகிக்க முடியவில்லை. 

சின்மயி ஓர் பிராமணப்பெண் என்பது தான் இப்போது பலருக்கு பிரச்சனையே தவிர வேறு இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.