Jump to content

சூம் (Zoom) கிளாஸ்


Recommended Posts

சேர் ,
உங்கள் zoom அழைப்பு கிடைத்தது
ஆனால் passcode தான் கிடைக்கவில்லை.
பணம் கட்டினால் தான்
அது கிடைக்குமாமே,
 
பகலுணவுக்கு வழியில்லை
பாதை வியாபாரம் செய்யும்
அப்பா
பாதுகாவலனுக்கும்
பயந்து பயந்து
மறைந்து மறைந்து
செய்யும் வியாபாரம்
ஒரு வேளை உணவுக்கே
போதாதாம் சேர்.
 
ஆயிரம் ரூபா தேட
பாதையில் பல
பாயிரம் ஓத வேண்டுமாம்.
ஒரு நாளில் அதை
உங்களுக்கு வைப்பிலிட
ஒரு கிழமை எமது
அடுப்புக்கு ஓய்வு
கொடுக்க வேண்டுமே சேர்.
 
நான்கு சகோதரர்கள் நாம்
டேட்டா போடுவதற்கே எமது
அப்பாவின் பல
பாட்டாக்கள் தேய
வேண்டுமே சேர்.
 
சம்பாளுடன் தான் நாம்
சாப்பிடுகிறோம் என்பதை
சம்பளம் வீட்டுக்கு வரும்
உங்களால் புரிந்து கொள்ள
முடியாமல் தானிருக்கும் சேர்.
 
அறிவு தர்மம் செய்ய
ஆண்டவன் அளித்த
வாய்ப்பை எமக்காக கொஞ்சம்
வழங்குங்கள் சேர்.
 
நீங்கள் உழைப்பதற்காக
ஏழைகள் எங்களை உறிஞ்சி
குடிப்பது
ஞாயமில்லை சேர்.
 
எம்மிடம் இதுவரை
எத்தனை ரூபாய்களை
எண்ணி எடுத்து இருக்கிறீர்கள்.
மூச்சுக் காற்றையும்
பேச்சுக் கூற்றையும்
நீங்கள் வியாபாரம் செய்வது
வியப்பாயுள்ளது சேர்.
 
ஆசிரியர் சேவை
என்று தான் நாமறிகிறோம்.
ஆசாரம் இல்லாத
உங்களால்
அர்ப்பணிப்புடன் உள்ளோரும்
படும் அவதியும்
அவலமும் நீங்களறிந்தும்
அறியாமல் போலுள்ளது தான்
அவலம்.
 
வேண்டாம் சேர்
உங்களுக்கு விற்பனையாகாத
பண்டமாகவே நானிருந்து கொள்கிறேன்.
உங்களின்
நுகர்வோர் சேவையாளர்களில்
உணர்வுளால் வேஷம்
போடத் தெரியாத
கழிவுப் பண்டமாக
என்னைக் கருதிக்
கொள்ளுங்கள்.
 
ஒரு நாள்
வருத்தப் படுவீர்கள்
எனது பாடத்தில் A பெற்றவர்கள்
இவர்கள் தான்
என்ற உங்கள்
விளம்பரப் பதாகையில்
எனது இருப்பிடம்
இல்லையே என வருத்தப்படுவீர்கள்.
 
மன்னித்துக் கொள்ளுங்கள் சேர்.
உங்களுக்கு இடித்துரைப்பதற்காக
நான் எழுதவில்லை.
படித்தவர்கள் பண்புள்ளவர்களாய்
இருக்க வேண்டும் என்பதைப்
படித்தாவது உணரட்டுமே.
 
இப்படிக்கு
ஏழை மாணவி.
ஏழையின் மாணவி
 
Copied from FB
 
குறிப்பு: படித்தது பிடித்தது. அதனால் பகிர்கிறேன். இப்படியும் சில ஆசிரியர்கள் உண்டு.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Shanthan_S said:
சேர் ,
உங்கள் zoom அழைப்பு கிடைத்தது
ஆனால் passcode தான் கிடைக்கவில்லை.
பணம் கட்டினால் தான்
அது கிடைக்குமாமே,
 
பகலுணவுக்கு வழியில்லை
பாதை வியாபாரம் செய்யும்
அப்பா
பாதுகாவலனுக்கும்
பயந்து பயந்து
மறைந்து மறைந்து
செய்யும் வியாபாரம்
ஒரு வேளை உணவுக்கே
போதாதாம் சேர்.
 
ஆயிரம் ரூபா தேட
பாதையில் பல
பாயிரம் ஓத வேண்டுமாம்.
ஒரு நாளில் அதை
உங்களுக்கு வைப்பிலிட
ஒரு கிழமை எமது
அடுப்புக்கு ஓய்வு
கொடுக்க வேண்டுமே சேர்.
 
நான்கு சகோதரர்கள் நாம்
டேட்டா போடுவதற்கே எமது
அப்பாவின் பல
பாட்டாக்கள் தேய
வேண்டுமே சேர்.
 
சம்பாளுடன் தான் நாம்
சாப்பிடுகிறோம் என்பதை
சம்பளம் வீட்டுக்கு வரும்
உங்களால் புரிந்து கொள்ள
முடியாமல் தானிருக்கும் சேர்.
 
அறிவு தர்மம் செய்ய
ஆண்டவன் அளித்த
வாய்ப்பை எமக்காக கொஞ்சம்
வழங்குங்கள் சேர்.
 
நீங்கள் உழைப்பதற்காக
ஏழைகள் எங்களை உறிஞ்சி
குடிப்பது
ஞாயமில்லை சேர்.
 
எம்மிடம் இதுவரை
எத்தனை ரூபாய்களை
எண்ணி எடுத்து இருக்கிறீர்கள்.
மூச்சுக் காற்றையும்
பேச்சுக் கூற்றையும்
நீங்கள் வியாபாரம் செய்வது
வியப்பாயுள்ளது சேர்.
 
ஆசிரியர் சேவை
என்று தான் நாமறிகிறோம்.
ஆசாரம் இல்லாத
உங்களால்
அர்ப்பணிப்புடன் உள்ளோரும்
படும் அவதியும்
அவலமும் நீங்களறிந்தும்
அறியாமல் போலுள்ளது தான்
அவலம்.
 
வேண்டாம் சேர்
உங்களுக்கு விற்பனையாகாத
பண்டமாகவே நானிருந்து கொள்கிறேன்.
உங்களின்
நுகர்வோர் சேவையாளர்களில்
உணர்வுளால் வேஷம்
போடத் தெரியாத
கழிவுப் பண்டமாக
என்னைக் கருதிக்
கொள்ளுங்கள்.
 
ஒரு நாள்
வருத்தப் படுவீர்கள்
எனது பாடத்தில் A பெற்றவர்கள்
இவர்கள் தான்
என்ற உங்கள்
விளம்பரப் பதாகையில்
எனது இருப்பிடம்
இல்லையே என வருத்தப்படுவீர்கள்.
 
மன்னித்துக் கொள்ளுங்கள் சேர்.
உங்களுக்கு இடித்துரைப்பதற்காக
நான் எழுதவில்லை.
படித்தவர்கள் பண்புள்ளவர்களாய்
இருக்க வேண்டும் என்பதைப்
படித்தாவது உணரட்டுமே.
 
இப்படிக்கு
ஏழை மாணவி.
ஏழையின் மாணவி
 
Copied from FB
 
குறிப்பு: படித்தது பிடித்தது. அதனால் பகிர்கிறேன். இப்படியும் சில ஆசிரியர்கள் உண்டு.
 

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍👍

Link to comment
Share on other sites

சில ஆசிரியர்கள் மிகவும் மோசம்.

உதாரணமாக, எனது அக்காவின் மக்கள் 7ம் ஆண்டு படிக்கிறாள். ஜூம் கிளாஸ்சுக்கு ஒரு பாடத்துக்கு மாதம் 500 ரூபா வாங்குகிறார்கள். எனவே முக்கியமான கணிதம் விஞ்ஞானம் இங்கிலீஸ் போன்ற பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு காசுகட்டி படிக்கிறவள். ஆனால் அவளது பாடசாலை தமிழ் மற்றும் சைவசமய ஆசிரியர்களும் தங்களது ஜூம் வகுப்பில் அவளையும் இணையச்சொல்லி ஒரே ஆக்கினை. எனது அக்கா சொன்ன, தமிழ் மற்றும் சைவசமயம் போன்றவற்றை நாங்களே வீட்டில் சொல்லிகுடுபோம் என்று (எனது அக்கா ஒரு BA தமிழ் பட்டதாரி) . ஆனாலும் அவர்கள் தொடர்ந்தும் அக்காவுக்கு போன் பண்ணி ஒரே ஆக்கினை. ஆனாலும்  அக்கா முடியாதெண்டு சொல்லிப்போட்டா. பாடசாலை தொடங்கத்தான் பிரச்சினை இருக்கு.

7ம் ஆண்டு பிள்ளைக்கு 8 பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு போறதெண்டால் மாதம் 4000 ரூபா முடியும். இது பெரும்பாலான பெற்றோரால் முடியாத காரியம்.

இவர்களை என்ன செய்வது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் செய்ய முடியாது .......இது வியாபார உலகம்.....நாணயத்தின் ஒலி மட்டும்தான் அங்கு கேட்கும்....நாணயமும் நா நயமும் வாசலில் தங்கிவிடும்.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் சூம் லெசன் தொடங்க முன் வடிவா யோசிக்கிறது நல்லம் 👇🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

 

ப்ரோ,

வாத்தி சோதனையில பெயில் ஆக்கிக் போடும்.

சூம் க்கு முன்னமே, இந்த கோதாரி பிடிச்ச, எண்ட டியூஷன் வகுப்புக்கு வா எண்டு வகுப்பில் வதைக்கும் வாத்திகளை பார்த்திருக்கிறோம்.

சோதனையில் புள்ளிகளை அள்ளிப்போட்டு, தன்னிடம் டியூஷன் வகுப்புக்கு வந்த படியாளை நல்லா படிக்கிறார்கள் என்று மார்க்கெட்டிங் செய்கிற வாத்திகளும் இருக்கினம்.

இந்த அரிகண்டதாலை தான், இலங்கை அரசு டியூஷன் வகுப்புக்கு தடை போடுது. தனது பாடசாலை வகுப்பு மாணவர்களுக்கு (அதாவது வேறு பாடசாலை அல்லது, வேறு வகுப்பு மாணவர்கள் மட்டுமே) டியூஷன் கொடுக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர ஆலோசனை நடப்பதாக கேள்விப்பட்டேன். 

***

இங்கை சூமில 500. ஒருவாத்தி, கொழும்பில் சனியும், யாழ்ப்பாணத்தில் ஞாயிறுமாக 4000 வாங்கியதாமே.

இப்ப அந்தாள், சூமில பின்னிப் பெடெல் எடுப்பார்.

எனது கசினின், தகப்பன் வழி கசின் கொழும்பில் கெமிஸ்ட்ரி open யூனியில் முடித்தார். கொழும்பில் வேலை. இப்பதான் கலியாணம் முடித்தார். யாழ்ப்பாணம் போய், இரண்டு தனியார்  பாடசாலைகள் அவரை படிப்பிக்க வைத்துக்கொண்டு, இரண்டு சம்பளம் வாங்குகிறார். சனம் டியூஷனுக்கு திரத்தி, இப்ப 2000 ரூபாயில் நிக்குது. ஏறுமாம். 

அவோவும் சூமில பாய்வார் என்று நினைக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

36 minutes ago, goshan_che said:

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

 

அக்கா அவரோட ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஸ்கூல் மூடியிருந்த காலப்பகுதியில்  ஜூம் ல கிளாஸ் எடுக்கிறவ.  ஸ்கூல் சிலபஸ்ஐ கவர் பண்ண. மற்றும்படி தொடர்ச்சியாக்க ஜூம் கிளாஸ் எடுக்க அவவுக்கு நேரம் இல்லை. 3 பிள்ளைகள் மற்றும் அத்தான் முழுநேர விவசாயி என்பதால் வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை என்பவற்றுடன் டைம் போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ப்ரோ,

வாத்தி சோதனையில பெயில் ஆக்கிக் போடும்.

சூம் க்கு முன்னமே, இந்த கோதாரி பிடிச்ச, எண்ட டியூஷன் வகுப்புக்கு வா எண்டு வகுப்பில் வதைக்கும் வாத்திகளை பார்த்திருக்கிறோம்.

சோதனையில் புள்ளிகளை அள்ளிப்போட்டு, தன்னிடம் டியூஷன் வகுப்புக்கு வந்த படியாளை நல்லா படிக்கிறார்கள் என்று மார்க்கெட்டிங் செய்கிற வாத்திகளும் இருக்கினம்.

இந்த அரிகண்டதாலை தான், இலங்கை அரசு டியூஷன் வகுப்புக்கு தடை போடுது. தனது பாடசாலை வகுப்பு மாணவர்களுக்கு (அதாவது வேறு பாடசாலை அல்லது, வேறு வகுப்பு மாணவர்கள் மட்டுமே) டியூஷன் கொடுக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர ஆலோசனை நடப்பதாக கேள்விப்பட்டேன். 

இப்படியான வாத்தியை நானே கடந்துதான் வந்தேன்.

பெற்றார்-ஆசிரியோர் சங்கம், கோட்ட, வட்ட, வலய, மாகாண கல்விபணிப்பாளர்  வரை கம்பளைண்ட் எகிறும் என்ற “பயத்தை கண்ணில் காட்டினால்” வாத்தி அடங்கிடுவார்/அடங்கினார்.

(நாங்கள் அப்பவே அப்படி🤣).

மிஞ்சி மிஞ்சி போனால் டேர்ம் டெஸ்ட் வரைக்கும்தான் இவர்களது செல்வாக்கு. ஓஎல் பரிட்சையில் எதுவும் செய்ய முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்படியான வாத்தியை நானே கடந்துதான் வந்தேன்.

பெற்றார்-ஆசிரியோர் சங்கம், கோட்ட, வட்ட, வலய, மாகாண கல்விபணிப்பாளர்  வரை கம்பளைண்ட் எகிறும் என்ற “பயத்தை கண்ணில் காட்டினால்” வாத்தி அடங்கிடுவார்/அடங்கினார்.

(நாங்கள் அப்பவே அப்படி🤣).

மிஞ்சி மிஞ்சி போனால் டேர்ம் டெஸ்ட் வரைக்கும்தான் இவர்களது செல்வாக்கு. ஓஎல் பரிட்சையில் எதுவும் செய்ய முடியாது.

 

இங்கே, பணம் இல்லை என்று தானே முறைப்பாடு - கவிதை.

சனம் காசு வைத்துக்கொண்டு வாத்திமாரை திரத்திக் கொண்டெல்லே திரியுது.

2019ல் யாழ்ப்பாணம் போனபோது ஒரு வீட்டின் முன்னால் பெரும் கூட்டம். தாய், தகப்பன் மார் மோட்டார் சைக்கிள் வைத்துக்கொண்டு வெளியாலை நிக்கினம். கொஞ்சம் தள்ளி கார்களும், ஆட்டோக்களும்....

என்ன என்று விசாரித்த போது, டியூஷன் முடியப்போகுது, பிக் அப் பண்ண நிக்கினமாம். 

ஆகவே, 80 - 90 % அந்த போக்கிலை இருக்கும் போது... இந்த மிகுதி மக்கள் என்ன செய்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Shanthan_S said:

அக்கா அவரோட ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஸ்கூல் மூடியிருந்த காலப்பகுதியில்  ஜூம் ல கிளாஸ் எடுக்கிறவ.  ஸ்கூல் சிலபஸ்ஐ கவர் பண்ண. மற்றும்படி தொடர்ச்சியாக்க ஜூம் கிளாஸ் எடுக்க அவவுக்கு நேரம் இல்லை. 3 பிள்ளைகள் மற்றும் அத்தான் முழுநேர விவசாயி என்பதால் வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை என்பவற்றுடன் டைம் போய்விடும்.

கஸ்டம்தான். 

Just now, Nathamuni said:

இங்கே, பணம் இல்லை என்று தானே முறைப்பாடு - கவிதை.

சனம் காசு வைத்துக்கொண்டு வாத்திமாரை திரத்திக் கொண்டெல்லே திரியுது.

2019ல் யாழ்ப்பாணம் போனபோது ஒரு வீட்டின் முன்னால் பெரும் கூட்டம். தாய், தகப்பன் மார் மோட்டார் சைக்கிள் வைத்துக்கொண்டு வெளியாலை நிக்கினம். கொஞ்சம் தள்ளி கார்களும், ஆட்டோக்களும்....

என்ன என்று விசாரித்த போது, டியூஷன் முடியப்போகுது, பிக் அப் பண்ண நிக்கினமாம். 

ஆகவே, 80 - 90 % அந்த போக்கிலை இருக்கும் போது... இந்த மிகுதி மக்கள் என்ன செய்வது? 

தல டியூசன் போறது தப்பில்லை. வீட்டுக்கு வெளில கூட்டம் இல்லை - செல்வவடிவேல், நாகநாதன், விக்டர், மணியம், என்று ஒரு கிளாசில் நூற்று கணக்கில் மாணவர்கள் படிக்கும் நிலை 80களிலேயே வந்து விட்டது.

கொழும்பில் வெள்ளவத்தை மொட் இல் பிரேம்நாத் ஒரு நாளைக்கு 600-800 பேருக்கு டியூசன் எடுத்தார். அதில் ஒருவர் ரிசாத் பதியுதீன் என்று ரஞ்சித் எழுதினார்.

நுகேகொட பக்கம் தியேட்டர் மாரி மைக் வைத்து நடக்கும் சிங்கள டியூசன்.

ஆனால் சைவெநெறிக்கு டியூசன் போய் நான் இன்னும் கேள்விபடேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் வாங்காமல் படிப்பித்த பல நல்ல ஆசிரியர்களுண்டு ஊரில், என்னையும் படிப்பித்தார்கள், நானும் இலவசமாக படிப்பித்தேன், நல்லவர்கள் பலர் ஊரில் உண்டு தேடி படியுங்கள், பகண்டுக்கு இப்படி பணம் கறக்கும் ஆசிரியர்களை விட்டுவிட்டு. A/L எடுத்துவிட்டு ஊரில் இருக்கும் மாணவர்களிடம் கேட்டு படியுங்கள், ஆசையுடன் படிப்பிப்பார்கள் சும்மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஆனால் சைவெநெறிக்கு டியூசன் போய் நான் இன்னும் கேள்விபடேல்ல.

யாரால், யாருக்கு, எங்கே சொல்லப்பட்டது:

மந்திரியாரே, தண்டோரா போட்டு, மதுரை மக்களை, வைகை ஆற்றின் கரையோரம் உடனடியாக கூடும் படி அறிவித்து விடுங்கள். கூடாது விடில், கடும் தண்டனை என்றும் தெரிவியுங்கள்.

விடை தெரியாவிடில்..... டியூஷன் என்னிடம் புக் பண்ணுங்கோ... சோதனை பாஸ் பண்ணாமல் எண்ட முகத்தில எப்படி முழிக்கப்போறீங்கோ? 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.