Jump to content

சூம் (Zoom) கிளாஸ்


Recommended Posts

சேர் ,
உங்கள் zoom அழைப்பு கிடைத்தது
ஆனால் passcode தான் கிடைக்கவில்லை.
பணம் கட்டினால் தான்
அது கிடைக்குமாமே,
 
பகலுணவுக்கு வழியில்லை
பாதை வியாபாரம் செய்யும்
அப்பா
பாதுகாவலனுக்கும்
பயந்து பயந்து
மறைந்து மறைந்து
செய்யும் வியாபாரம்
ஒரு வேளை உணவுக்கே
போதாதாம் சேர்.
 
ஆயிரம் ரூபா தேட
பாதையில் பல
பாயிரம் ஓத வேண்டுமாம்.
ஒரு நாளில் அதை
உங்களுக்கு வைப்பிலிட
ஒரு கிழமை எமது
அடுப்புக்கு ஓய்வு
கொடுக்க வேண்டுமே சேர்.
 
நான்கு சகோதரர்கள் நாம்
டேட்டா போடுவதற்கே எமது
அப்பாவின் பல
பாட்டாக்கள் தேய
வேண்டுமே சேர்.
 
சம்பாளுடன் தான் நாம்
சாப்பிடுகிறோம் என்பதை
சம்பளம் வீட்டுக்கு வரும்
உங்களால் புரிந்து கொள்ள
முடியாமல் தானிருக்கும் சேர்.
 
அறிவு தர்மம் செய்ய
ஆண்டவன் அளித்த
வாய்ப்பை எமக்காக கொஞ்சம்
வழங்குங்கள் சேர்.
 
நீங்கள் உழைப்பதற்காக
ஏழைகள் எங்களை உறிஞ்சி
குடிப்பது
ஞாயமில்லை சேர்.
 
எம்மிடம் இதுவரை
எத்தனை ரூபாய்களை
எண்ணி எடுத்து இருக்கிறீர்கள்.
மூச்சுக் காற்றையும்
பேச்சுக் கூற்றையும்
நீங்கள் வியாபாரம் செய்வது
வியப்பாயுள்ளது சேர்.
 
ஆசிரியர் சேவை
என்று தான் நாமறிகிறோம்.
ஆசாரம் இல்லாத
உங்களால்
அர்ப்பணிப்புடன் உள்ளோரும்
படும் அவதியும்
அவலமும் நீங்களறிந்தும்
அறியாமல் போலுள்ளது தான்
அவலம்.
 
வேண்டாம் சேர்
உங்களுக்கு விற்பனையாகாத
பண்டமாகவே நானிருந்து கொள்கிறேன்.
உங்களின்
நுகர்வோர் சேவையாளர்களில்
உணர்வுளால் வேஷம்
போடத் தெரியாத
கழிவுப் பண்டமாக
என்னைக் கருதிக்
கொள்ளுங்கள்.
 
ஒரு நாள்
வருத்தப் படுவீர்கள்
எனது பாடத்தில் A பெற்றவர்கள்
இவர்கள் தான்
என்ற உங்கள்
விளம்பரப் பதாகையில்
எனது இருப்பிடம்
இல்லையே என வருத்தப்படுவீர்கள்.
 
மன்னித்துக் கொள்ளுங்கள் சேர்.
உங்களுக்கு இடித்துரைப்பதற்காக
நான் எழுதவில்லை.
படித்தவர்கள் பண்புள்ளவர்களாய்
இருக்க வேண்டும் என்பதைப்
படித்தாவது உணரட்டுமே.
 
இப்படிக்கு
ஏழை மாணவி.
ஏழையின் மாணவி
 
Copied from FB
 
குறிப்பு: படித்தது பிடித்தது. அதனால் பகிர்கிறேன். இப்படியும் சில ஆசிரியர்கள் உண்டு.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Shanthan_S said:
சேர் ,
உங்கள் zoom அழைப்பு கிடைத்தது
ஆனால் passcode தான் கிடைக்கவில்லை.
பணம் கட்டினால் தான்
அது கிடைக்குமாமே,
 
பகலுணவுக்கு வழியில்லை
பாதை வியாபாரம் செய்யும்
அப்பா
பாதுகாவலனுக்கும்
பயந்து பயந்து
மறைந்து மறைந்து
செய்யும் வியாபாரம்
ஒரு வேளை உணவுக்கே
போதாதாம் சேர்.
 
ஆயிரம் ரூபா தேட
பாதையில் பல
பாயிரம் ஓத வேண்டுமாம்.
ஒரு நாளில் அதை
உங்களுக்கு வைப்பிலிட
ஒரு கிழமை எமது
அடுப்புக்கு ஓய்வு
கொடுக்க வேண்டுமே சேர்.
 
நான்கு சகோதரர்கள் நாம்
டேட்டா போடுவதற்கே எமது
அப்பாவின் பல
பாட்டாக்கள் தேய
வேண்டுமே சேர்.
 
சம்பாளுடன் தான் நாம்
சாப்பிடுகிறோம் என்பதை
சம்பளம் வீட்டுக்கு வரும்
உங்களால் புரிந்து கொள்ள
முடியாமல் தானிருக்கும் சேர்.
 
அறிவு தர்மம் செய்ய
ஆண்டவன் அளித்த
வாய்ப்பை எமக்காக கொஞ்சம்
வழங்குங்கள் சேர்.
 
நீங்கள் உழைப்பதற்காக
ஏழைகள் எங்களை உறிஞ்சி
குடிப்பது
ஞாயமில்லை சேர்.
 
எம்மிடம் இதுவரை
எத்தனை ரூபாய்களை
எண்ணி எடுத்து இருக்கிறீர்கள்.
மூச்சுக் காற்றையும்
பேச்சுக் கூற்றையும்
நீங்கள் வியாபாரம் செய்வது
வியப்பாயுள்ளது சேர்.
 
ஆசிரியர் சேவை
என்று தான் நாமறிகிறோம்.
ஆசாரம் இல்லாத
உங்களால்
அர்ப்பணிப்புடன் உள்ளோரும்
படும் அவதியும்
அவலமும் நீங்களறிந்தும்
அறியாமல் போலுள்ளது தான்
அவலம்.
 
வேண்டாம் சேர்
உங்களுக்கு விற்பனையாகாத
பண்டமாகவே நானிருந்து கொள்கிறேன்.
உங்களின்
நுகர்வோர் சேவையாளர்களில்
உணர்வுளால் வேஷம்
போடத் தெரியாத
கழிவுப் பண்டமாக
என்னைக் கருதிக்
கொள்ளுங்கள்.
 
ஒரு நாள்
வருத்தப் படுவீர்கள்
எனது பாடத்தில் A பெற்றவர்கள்
இவர்கள் தான்
என்ற உங்கள்
விளம்பரப் பதாகையில்
எனது இருப்பிடம்
இல்லையே என வருத்தப்படுவீர்கள்.
 
மன்னித்துக் கொள்ளுங்கள் சேர்.
உங்களுக்கு இடித்துரைப்பதற்காக
நான் எழுதவில்லை.
படித்தவர்கள் பண்புள்ளவர்களாய்
இருக்க வேண்டும் என்பதைப்
படித்தாவது உணரட்டுமே.
 
இப்படிக்கு
ஏழை மாணவி.
ஏழையின் மாணவி
 
Copied from FB
 
குறிப்பு: படித்தது பிடித்தது. அதனால் பகிர்கிறேன். இப்படியும் சில ஆசிரியர்கள் உண்டு.
 

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍👍

Link to comment
Share on other sites

சில ஆசிரியர்கள் மிகவும் மோசம்.

உதாரணமாக, எனது அக்காவின் மக்கள் 7ம் ஆண்டு படிக்கிறாள். ஜூம் கிளாஸ்சுக்கு ஒரு பாடத்துக்கு மாதம் 500 ரூபா வாங்குகிறார்கள். எனவே முக்கியமான கணிதம் விஞ்ஞானம் இங்கிலீஸ் போன்ற பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு காசுகட்டி படிக்கிறவள். ஆனால் அவளது பாடசாலை தமிழ் மற்றும் சைவசமய ஆசிரியர்களும் தங்களது ஜூம் வகுப்பில் அவளையும் இணையச்சொல்லி ஒரே ஆக்கினை. எனது அக்கா சொன்ன, தமிழ் மற்றும் சைவசமயம் போன்றவற்றை நாங்களே வீட்டில் சொல்லிகுடுபோம் என்று (எனது அக்கா ஒரு BA தமிழ் பட்டதாரி) . ஆனாலும் அவர்கள் தொடர்ந்தும் அக்காவுக்கு போன் பண்ணி ஒரே ஆக்கினை. ஆனாலும்  அக்கா முடியாதெண்டு சொல்லிப்போட்டா. பாடசாலை தொடங்கத்தான் பிரச்சினை இருக்கு.

7ம் ஆண்டு பிள்ளைக்கு 8 பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு போறதெண்டால் மாதம் 4000 ரூபா முடியும். இது பெரும்பாலான பெற்றோரால் முடியாத காரியம்.

இவர்களை என்ன செய்வது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் செய்ய முடியாது .......இது வியாபார உலகம்.....நாணயத்தின் ஒலி மட்டும்தான் அங்கு கேட்கும்....நாணயமும் நா நயமும் வாசலில் தங்கிவிடும்.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் சூம் லெசன் தொடங்க முன் வடிவா யோசிக்கிறது நல்லம் 👇🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

 

ப்ரோ,

வாத்தி சோதனையில பெயில் ஆக்கிக் போடும்.

சூம் க்கு முன்னமே, இந்த கோதாரி பிடிச்ச, எண்ட டியூஷன் வகுப்புக்கு வா எண்டு வகுப்பில் வதைக்கும் வாத்திகளை பார்த்திருக்கிறோம்.

சோதனையில் புள்ளிகளை அள்ளிப்போட்டு, தன்னிடம் டியூஷன் வகுப்புக்கு வந்த படியாளை நல்லா படிக்கிறார்கள் என்று மார்க்கெட்டிங் செய்கிற வாத்திகளும் இருக்கினம்.

இந்த அரிகண்டதாலை தான், இலங்கை அரசு டியூஷன் வகுப்புக்கு தடை போடுது. தனது பாடசாலை வகுப்பு மாணவர்களுக்கு (அதாவது வேறு பாடசாலை அல்லது, வேறு வகுப்பு மாணவர்கள் மட்டுமே) டியூஷன் கொடுக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர ஆலோசனை நடப்பதாக கேள்விப்பட்டேன். 

***

இங்கை சூமில 500. ஒருவாத்தி, கொழும்பில் சனியும், யாழ்ப்பாணத்தில் ஞாயிறுமாக 4000 வாங்கியதாமே.

இப்ப அந்தாள், சூமில பின்னிப் பெடெல் எடுப்பார்.

எனது கசினின், தகப்பன் வழி கசின் கொழும்பில் கெமிஸ்ட்ரி open யூனியில் முடித்தார். கொழும்பில் வேலை. இப்பதான் கலியாணம் முடித்தார். யாழ்ப்பாணம் போய், இரண்டு தனியார்  பாடசாலைகள் அவரை படிப்பிக்க வைத்துக்கொண்டு, இரண்டு சம்பளம் வாங்குகிறார். சனம் டியூஷனுக்கு திரத்தி, இப்ப 2000 ரூபாயில் நிக்குது. ஏறுமாம். 

அவோவும் சூமில பாய்வார் என்று நினைக்கிறேன்.
 

Link to comment
Share on other sites

36 minutes ago, goshan_che said:

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

 

அக்கா அவரோட ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஸ்கூல் மூடியிருந்த காலப்பகுதியில்  ஜூம் ல கிளாஸ் எடுக்கிறவ.  ஸ்கூல் சிலபஸ்ஐ கவர் பண்ண. மற்றும்படி தொடர்ச்சியாக்க ஜூம் கிளாஸ் எடுக்க அவவுக்கு நேரம் இல்லை. 3 பிள்ளைகள் மற்றும் அத்தான் முழுநேர விவசாயி என்பதால் வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை என்பவற்றுடன் டைம் போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ப்ரோ,

வாத்தி சோதனையில பெயில் ஆக்கிக் போடும்.

சூம் க்கு முன்னமே, இந்த கோதாரி பிடிச்ச, எண்ட டியூஷன் வகுப்புக்கு வா எண்டு வகுப்பில் வதைக்கும் வாத்திகளை பார்த்திருக்கிறோம்.

சோதனையில் புள்ளிகளை அள்ளிப்போட்டு, தன்னிடம் டியூஷன் வகுப்புக்கு வந்த படியாளை நல்லா படிக்கிறார்கள் என்று மார்க்கெட்டிங் செய்கிற வாத்திகளும் இருக்கினம்.

இந்த அரிகண்டதாலை தான், இலங்கை அரசு டியூஷன் வகுப்புக்கு தடை போடுது. தனது பாடசாலை வகுப்பு மாணவர்களுக்கு (அதாவது வேறு பாடசாலை அல்லது, வேறு வகுப்பு மாணவர்கள் மட்டுமே) டியூஷன் கொடுக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர ஆலோசனை நடப்பதாக கேள்விப்பட்டேன். 

இப்படியான வாத்தியை நானே கடந்துதான் வந்தேன்.

பெற்றார்-ஆசிரியோர் சங்கம், கோட்ட, வட்ட, வலய, மாகாண கல்விபணிப்பாளர்  வரை கம்பளைண்ட் எகிறும் என்ற “பயத்தை கண்ணில் காட்டினால்” வாத்தி அடங்கிடுவார்/அடங்கினார்.

(நாங்கள் அப்பவே அப்படி🤣).

மிஞ்சி மிஞ்சி போனால் டேர்ம் டெஸ்ட் வரைக்கும்தான் இவர்களது செல்வாக்கு. ஓஎல் பரிட்சையில் எதுவும் செய்ய முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்படியான வாத்தியை நானே கடந்துதான் வந்தேன்.

பெற்றார்-ஆசிரியோர் சங்கம், கோட்ட, வட்ட, வலய, மாகாண கல்விபணிப்பாளர்  வரை கம்பளைண்ட் எகிறும் என்ற “பயத்தை கண்ணில் காட்டினால்” வாத்தி அடங்கிடுவார்/அடங்கினார்.

(நாங்கள் அப்பவே அப்படி🤣).

மிஞ்சி மிஞ்சி போனால் டேர்ம் டெஸ்ட் வரைக்கும்தான் இவர்களது செல்வாக்கு. ஓஎல் பரிட்சையில் எதுவும் செய்ய முடியாது.

 

இங்கே, பணம் இல்லை என்று தானே முறைப்பாடு - கவிதை.

சனம் காசு வைத்துக்கொண்டு வாத்திமாரை திரத்திக் கொண்டெல்லே திரியுது.

2019ல் யாழ்ப்பாணம் போனபோது ஒரு வீட்டின் முன்னால் பெரும் கூட்டம். தாய், தகப்பன் மார் மோட்டார் சைக்கிள் வைத்துக்கொண்டு வெளியாலை நிக்கினம். கொஞ்சம் தள்ளி கார்களும், ஆட்டோக்களும்....

என்ன என்று விசாரித்த போது, டியூஷன் முடியப்போகுது, பிக் அப் பண்ண நிக்கினமாம். 

ஆகவே, 80 - 90 % அந்த போக்கிலை இருக்கும் போது... இந்த மிகுதி மக்கள் என்ன செய்வது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Shanthan_S said:

அக்கா அவரோட ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஸ்கூல் மூடியிருந்த காலப்பகுதியில்  ஜூம் ல கிளாஸ் எடுக்கிறவ.  ஸ்கூல் சிலபஸ்ஐ கவர் பண்ண. மற்றும்படி தொடர்ச்சியாக்க ஜூம் கிளாஸ் எடுக்க அவவுக்கு நேரம் இல்லை. 3 பிள்ளைகள் மற்றும் அத்தான் முழுநேர விவசாயி என்பதால் வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை என்பவற்றுடன் டைம் போய்விடும்.

கஸ்டம்தான். 

Just now, Nathamuni said:

இங்கே, பணம் இல்லை என்று தானே முறைப்பாடு - கவிதை.

சனம் காசு வைத்துக்கொண்டு வாத்திமாரை திரத்திக் கொண்டெல்லே திரியுது.

2019ல் யாழ்ப்பாணம் போனபோது ஒரு வீட்டின் முன்னால் பெரும் கூட்டம். தாய், தகப்பன் மார் மோட்டார் சைக்கிள் வைத்துக்கொண்டு வெளியாலை நிக்கினம். கொஞ்சம் தள்ளி கார்களும், ஆட்டோக்களும்....

என்ன என்று விசாரித்த போது, டியூஷன் முடியப்போகுது, பிக் அப் பண்ண நிக்கினமாம். 

ஆகவே, 80 - 90 % அந்த போக்கிலை இருக்கும் போது... இந்த மிகுதி மக்கள் என்ன செய்வது? 

தல டியூசன் போறது தப்பில்லை. வீட்டுக்கு வெளில கூட்டம் இல்லை - செல்வவடிவேல், நாகநாதன், விக்டர், மணியம், என்று ஒரு கிளாசில் நூற்று கணக்கில் மாணவர்கள் படிக்கும் நிலை 80களிலேயே வந்து விட்டது.

கொழும்பில் வெள்ளவத்தை மொட் இல் பிரேம்நாத் ஒரு நாளைக்கு 600-800 பேருக்கு டியூசன் எடுத்தார். அதில் ஒருவர் ரிசாத் பதியுதீன் என்று ரஞ்சித் எழுதினார்.

நுகேகொட பக்கம் தியேட்டர் மாரி மைக் வைத்து நடக்கும் சிங்கள டியூசன்.

ஆனால் சைவெநெறிக்கு டியூசன் போய் நான் இன்னும் கேள்விபடேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் வாங்காமல் படிப்பித்த பல நல்ல ஆசிரியர்களுண்டு ஊரில், என்னையும் படிப்பித்தார்கள், நானும் இலவசமாக படிப்பித்தேன், நல்லவர்கள் பலர் ஊரில் உண்டு தேடி படியுங்கள், பகண்டுக்கு இப்படி பணம் கறக்கும் ஆசிரியர்களை விட்டுவிட்டு. A/L எடுத்துவிட்டு ஊரில் இருக்கும் மாணவர்களிடம் கேட்டு படியுங்கள், ஆசையுடன் படிப்பிப்பார்கள் சும்மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஆனால் சைவெநெறிக்கு டியூசன் போய் நான் இன்னும் கேள்விபடேல்ல.

யாரால், யாருக்கு, எங்கே சொல்லப்பட்டது:

மந்திரியாரே, தண்டோரா போட்டு, மதுரை மக்களை, வைகை ஆற்றின் கரையோரம் உடனடியாக கூடும் படி அறிவித்து விடுங்கள். கூடாது விடில், கடும் தண்டனை என்றும் தெரிவியுங்கள்.

விடை தெரியாவிடில்..... டியூஷன் என்னிடம் புக் பண்ணுங்கோ... சோதனை பாஸ் பண்ணாமல் எண்ட முகத்தில எப்படி முழிக்கப்போறீங்கோ? 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா?
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.