Jump to content

பாலியல் புகார்களும் பாரத தேசமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் புகார்களும் பாரத தேசமும்
+++++++++++++++++++++++++++++

spacer.png

 

இன்று சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பாடசாலையில் கற்பித்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர்மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் இதனை பிராமணர்களுக்கு எதிரான, பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒன்றாக மாற்றுவதில் பலர் முனைப்பாக இருக்கிறார்கள்.

இதேபோல 2018ம் ஆண்டு இந்தியாவில் கவிஞர் வைரமுத்து உட்பட பல பிரமுகர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது கேரளா மாநிலத்தின் ONV Cultural Academy யினால் விருதுக்கு வைரமுத்து தெரிவான நிலையில்அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பேசப்படுகிறது.
  

இவ்வாறு பெண்கள் தம்மீது நடாத்தப்பட்ட பாலியல் தாக்குதலைத் துணிந்து பகிரங்கப்படுத்த உறுதுணையாக இருந்தது 2006 இல் அமெரிக்க கறுப்பினத்தவரான Tarana Burke என்பவர் ஆரம்பித்த Me Too movementதான். இந்த கட்டமைப்பின் #metoo hashtag 2017 இல் வைரல் ஆனதைத் தொடர்ந்து உலக அளவில் பெண்கள் தமக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிரங்கப்படுத்தத் தொடங்கினர். 

உண்மையில் ஒரு பாலியல் குற்றவாளிதான் இந்த கட்டமைப்புப் பிரபலமாகவும் ஏனைய பல நாடுகளிலும் இதுபோன்ற அமைப்புகள் தோன்றுவதற்கும் காரணியாக இருந்துள்ளார். Harvey Weinstein (வயது 69) என்ற ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர்தான் அவர். 2017 இல் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் நியூயோர்க்கில் வெளியாகும் முக்கியமான இரண்டு பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் இவர்மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட அடிப்படையாக அமைந்தன. இந்த விசாரணைகள் ஆரம்பித்த பின்னர், 80 க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். அவற்றுள் இரண்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 2020ல் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார். 

அடுத்தவர், பிரபலமான நகைச்சுவை நடிகரான Bill Cosby (வயது 83). 2005ல் இவர் மீது புகார் வந்தாலும் போதுமான நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை என வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு 2014ல் ஒரு நிகழ்ச்சியில் இன்னொரு நகைச்சுவை நடிகரான Hannibal Buress, Bill Cosby யின் பாலியல் நடத்தைகள் தொடர்பாக விபரித்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 பெண்கள் வெளிவந்து 1965ல் இருந்து 2008 வரை தங்களுக்கு நேர்ந்தவற்றை பகிர்ந்து கொண்டனர். இந்த வழக்குகள் நடைபெறும் காலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பல விருதுகள் மீளப் பெறப்பட்டடோடு அவர் இப்போது 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். 

கனடாவிலும் என்ற ஒன்டாரியோ conservative கட்சியின் மாகாண முதல்வர் தேர்தலில் போட்டியிட இருந்த Patrick Brown என்ற பிரபல அரசியல்வாதி குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும் 2018 இல் போட்டியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது. அதேபோல CBC வானொலியில் பிரபல தொகுப்பாளராக இருந்த Jian Ghomeshi யும் இதே போன்ற குற்றச்சாட்டினால் தனது வேலையை இழக்க நேரிட்டது.

இவ்வாறு  2017 இல் அமெரிக்காவில் சூடுபிடித்த இந்த Me Too இயக்கம்  சினிமாத் துறைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், நிறுவன உயர் அதிகாரிகள், ஊடகத்துறை பிரபலங்கள் கல்லூரி பேராசிரியர்கள், ஒலிம்பிக் பயிற்சியாளர்கள் என 201 பெருந்தலைகளை வீழ்த்தியது. பலர் சிறை சென்றார்கள். எல்லாரும் பதவி இழந்தார்கள். அந்தப் பதவிகளில் 62% ஆனவை மீள நிரப்பப்பட்டுள்ள நிலையில் 44% வீதமான பதவிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் Me Too இயக்கம் சூடுபிடித்தபோது இந்தியாவிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல பெண்களும் சமூக ஊடகங்களினூடாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினர். இதில் 34 பிரபலமான பெண்கள் உட்பட பல பெண்கள் தம்மை வெவ்வேறு காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தொடர்பான பொதுவெளியில் பேச முன்வந்தனர்.

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி கொடுத்த புகாரும் சமூகவலைதளத்தில்  வெளிப்படையாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் அதிகம் பேசப்பட்டன. அவரைத் தொடர்ந்து வேறு பல பெண்களும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பல பெண்கள் சின்மயிக்கு ஆதரவாக நின்றபோதும் சில பிரபலமான பெண்களே சின்மயியை விமர்சித்தனர்.

அமெரிக்காவில் நடந்தற்கு மாறாக இந்தியாவில் ஒரு ஆண் மீது பாலியல் தொந்தரவுக் குற்றம் சுமத்தியமைக்காக, வழக்குத் தொடுத்தவரான சின்மயி தனது துறையில் இயங்க முடியாதபடி செய்யப்பட்டார். அவர் பிறந்த சாதியை அடிப்படையாகக் கொண்டு, திராவிடத் தமிழரை அவமானப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட  பார்ப்பனர்களின் சதி,  இதன் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது போன்ற விதத்தில் பலராலும் எதிர்பிரச்சாம் செய்யப்பட்டு பிராமணர் அல்லாத தமிழ் சமூகமும் தூண்டிவிடப்பட்டது..

வைரமுத்து மீது 2019 மார்ச் மாதம் சின்மயி வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து அதே வருடம் டிசெம்பர் மாதம், “எனக்காகக் குரல் கொடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக் கவலை?” என்று அவர் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது. 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, சில வருடங்களுக்கு முன்னர் பிராமணரல்லாத வைரமுத்து மீது பிராமணப் பெண்ணொருவர்  குற்றச்சாட்டை முன்வைத்தபோது வைரமுத்துவுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, சின்மயியை அவரின் சாதியையும், அவர் சார்ந்த துறையையும் முன்னிலைப்படுத்தி அவர் மீது சேறு பூசும் வேலையைத்தான் அதிகம் பேர் செய்தார்கள்.

இன்று பத்ம சேஷாத்திரி பள்ளி விடயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பிராமணர் என்பதை அடிப்படையாகக் கொண்டு மறுபக்கம் நின்றுகொண்டு  பள்ளி மீது ஒட்டு மொத்தமாக பழி சுமத்துவதுவதுடன் சாதியையும் இழுக்கும் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அங்கு பலர் செய்துகொண்டு இருக்கிறார்கள். 

இவ்வாறான பாலியல் அத்துமீறல்களும் அசிங்கங்களும் பல பள்ளிக்கூடங்களிலும் தொடர்ந்து நடக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் நடக்கின்றன. இது வெளியே தெரிய வந்தது அவ்வளவுதான். களை எடுக்க வேண்டியது எல்லோரையும்தான். ஆனால் இப்படியான சம்பவங்களுக்குள் சாதி, மதம் சேர்ப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், தற்போது குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபாலன் உடனைடியாகவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். ஆனால் வைரமுத்துவோ எந்தவிதமான பிரச்சனையும் அற்ற வகையில் இயங்குவதுடன், வருடா வருடம் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். 

வருடா வருடம் ஏதாவது விருது வாங்கிவிடும் வைரமுத்துவிற்கு இம்முறையும் ONV Cultural Academy யால் சிறந்த கவிஞர் விருது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவித்தல் வந்ததுமே தற்போதைய தமிழக முதல்வர் கையால் வைரமுத்து வாழ்த்தும் பெற்றார். ஆனாலும் மலையாளக் கலைஞர்கள் பலரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ONV Cultural Academy வைரமுத்துவுக்கு விருது கொடுப்பதை மீள்பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
இங்கு வைரமுத்து குற்றமற்றவரா? விருதுக்குத் தகுதியானவரா? என்பதை விவாதிப்பதல்ல எனது நோக்கம். இந்தியா போன்ற நாட்டில் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதில் உள்ள அடிப்படைத் தடைகளை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். 

இந்தியாவில் சட்ட ஆட்சி இருப்பது உண்மையெனில் இன்று ராஜகோபாலன் விசாரிக்கப்படுவது போலவே இதுவரை குற்றம் சாட்டப்பட்ட அனைத்துப் பிரபலங்களும் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டியவர்களும் சாட்சிகளும் மிரட்டப்படாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசின் மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை வரும். 

அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சட்ட நுணுக்கங்களுக்கு முகங்கொடுத்து வழக்கினைக் கையாண்டால் நியாயம் கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம். ஆனால் இந்தியாவில் ஒரு சம்பவத்திற்குப் பூசப்படும் சாதி, கட்சி, பின்பற்றும் சமயம், மொழி எனப் பல சாயங்களைத் தாண்டியும், ஆணாதிக்கச் சமூகம், ஆணாதிக்கத்தை ஆராதிக்கும் பெண்கள் கூட்டம், அரசியல், பண செல்வாக்குகள் என்பவற்றையும் தாண்டித்தான் ஒரு பெண் நியாயத்திற்காகப் போராடும் சூழல்தான் இன்றும் இருக்கிறது.

நன்றி: Rajesh Kumar - இவரது பக்கத்திலிருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன.

 

 

https://www.facebook.com/101881847986243/posts/337493987758360/?d=n

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வைரமுத்து மீது 2019 மார்ச் மாதம் சின்மயி வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து அதே வருடம் டிசெம்பர் மாதம்

சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடுக்கவே இல்லையே. தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக  வைரமுத்து சொல்லியும்  வலைத்தளங்களில் அவர் மீது அவதூறு பரப்புவதை மட்டுமே சின்மயி செய்து கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் வைரமுத்து மீது ஏன் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கதறுகிறார்..😂

சின்மயியையும் பாடசாலைப் பிள்ளைகளையும் ஒரே தராசில் நிறுக்கும் கட்டுரையாசிரியரின் அறிவை என்ன சொல்ல... 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடுக்கவே இல்லையே. தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக  வைரமுத்து சொல்லியும்  வலைத்தளங்களில் அவர் மீது அவதூறு பரப்புவதை மட்டுமே சின்மயி செய்து கொண்டிருக்கிறார்.

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

சுமா, பிரச்சனை என்னவென்றால்...சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்..!
வைரமுத்துவுக்கு தீர்ப்பு எப்படி வருமென்று ஏற்கனவே தெரியும்...!

Link to comment
Share on other sites

 

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

வயதால் நம் வாழ்வு முறியுமா
வாய் முத்தம் வயது அறியுமா
நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா


என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது


ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?

 

காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!


அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?


அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா


என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா
என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா.

இது அண்மையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள். PSBB பாடசாலை ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு எழுதிய Pedo கவிதை மாதிரி இருக்குது.

 

 

14 minutes ago, புங்கையூரன் said:

சுமா, பிரச்சனை என்னவென்றால்...சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்..!
வைரமுத்துவுக்கு தீர்ப்பு எப்படி வருமென்று ஏற்கனவே தெரியும்...!

நீங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு விருப்பமான நிற கண்ணாடி அணிந்து பாக்கின்றீர்கள். இந்திய நீதி துறையில்  இருப்பவர்கள் எல்லோரும்  'அவாள்' கள் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவாள்களை விட தமிழகத்தில் திராவிடம் வலுவாக இருக்கின்றது. அந்தத் திராவிடம் வயிரமுத்துவை தன் செட்டைகளுக்குள் வைத்துப் பாதுகாத்துக்கொள்ளும். மெட்டுக்கு பல திரைப்படப் பாடல்களை எழுதி அவை மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது வயிரமுத்துவுக்கு தன்னிலை காக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, zuma said:

 

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

வயதால் நம் வாழ்வு முறியுமா
வாய் முத்தம் வயது அறியுமா
நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா


என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது


ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?

 

காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!


அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?


அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா


என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா
என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா.

இது அண்மையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள். PSBB பாடசாலை ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு எழுதிய Pedo கவிதை மாதிரி இருக்குது.

 

 

நீங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு விருப்பமான நிற கண்ணாடி அணிந்து பாக்கின்றீர்கள். இந்திய நீதி துறையில்  இருப்பவர்கள் எல்லோரும்  'அவாள்' கள் அல்ல. 

ஓ...அப்படியா?

நான் கண்ணாடி அணிவதில்லை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

அதனை தான் சின்மயி எதிர்பார்க்கிறார். அவரிடம் சான்றுகள் இல்லை, ஆனால் வழக்கு என்று வந்தால், சும்மாவே கேள்விகள் கேட்டு நாறடிக்கலாம்.

ஆனால், வைரமுத்து, அதிமுக காலத்தில், பிஜேபி செல்வாக்கு காரணமாக தவிர்த்தார்.

இப்போது அவருக்கு சார்பான திமுக ஆட்சிக்கு வந்ததால், சின்மயி தனது நிலையினை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்  என்றே சொல்லலாம்.  

கருணாநிதியின் அரசியல் அலம்பறை செய்யும் பெண்களை மடக்கும் ஒரு தந்திரம்: விபச்சார நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார் அல்லது ஹோட்டலில் கைதானார் என்று சிக்க வைப்பது. ஆனால் முதலிலே எச்சரிக்கை செய்வார், இல்லாவிடில் கோவிந்தா.

சசிகலா கணவர் நடராஜனை வழிக்கு கொண்டு வர, அவருடன் வேலை செய்த ஒரு இளம் பெண்ணை, உள்ளே தூக்கி போட்டார் ஜெயலலிதா. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனை, கஞ்சா வைத்திருந்தார் என்று உள்ளே தள்ளினார்.

திமுக அரசு, வைரமுத்துவுக்காக அதிரடி காட்ட இன்னும் இரண்டொரு மாதமாகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா,

நம்ம கவிப்பேரரசுக்கு,

1. பிஜேபி கவர் எடுக்கிறது

2. அதிமுக கவர் எடுக்கிறது

3. திமுக கவர் எடுக்கிறது

இத்தனை ஆதரவும் Indian establishment இடம் பெறும் ஒருவர், இவர்கள் அனைவரும் வெறுத்த, புலிகளுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் எம் இனத்துக்கும் எப்படி நண்பராக இருக்க முடியும் என்ற அடிப்படை கேள்வியை கூட கேட்காமல்

அவரின் 2009 கள்ள மெளனத்தை மறந்து அல்லது மறைத்தபடி,

இந்த பாழாய்போன ஈழத்தமிழ் இனமும் அல்லவா அவருக்காக வரிந்து கட்டுகிறது.

நடிகரின் கட் அவுட்டுக்கு பாலூத்தும் தென்னிந்திய ரசிகர்கள் திரை கவர்ச்சிக்கு மயங்கினார்கள்.

எம்மவர்கள் ? எழுத்து கவர்சிக்கு மயங்குகிறார்கள்🤦‍♂️.

இதில் வழமையாக இரு பகுதியாக பிரியும் பலர் அணி மாறி வேறு கருத்திடுகிறார்கள்.

1. ஆணில் குற்றமா, பெண்ணில் குற்றமா என்பது இங்கே பொருட்டல்ல

2. வைரமுத்து தமிழனா, சின்மயி பிராணமணாளா என்பதும் இங்கே பொருட்டல்ல

3. யார் அதிகம் உண்மை பேசுகிறார் என்பதும் இங்கே பொருட்டல்ல.

குறைந்த பட்சம் கருணாநிதியின் 2009 துரோகத்தை காலம் தாழ்ந்தாவது பகிரங்கமாக ஏற்று கொள்ளாதவரை

அவரின் பிரச்ச்னையை இந்த இனம் கவனத்தில் எடுக்கும் தகுதியற்றவர் வைரமுத்து.

ஈழத்தமிழர்களால் வீதியில் கிடக்கும் அசிங்கம் போல கடந்து செல்ல படவேண்டியவர் வைரமுத்து.

 

யாழ் களத்தின் அதி தீவிர தமிழ் தேசிய படையணிக்கு:

கொஞ்சம் அடக்கித்தான் வாசியுங்கள் வீரர்களே.

மிக விரைவில் தன் உற்ற நண்பர் ஸ்டாலினிடம் டோட்டல் சரண்டர் ஆவர் முத்து சார்.

இப்போ சீமான் சொல்லி விட்டார் சாட்டை துரை சொல்லி விட்டார் என்று வைரமுத்துவுக்கு ஆதரவாக கம்பு சுத்தியதை எண்ணி அப்போ வருத்தபட வேண்டி வரலாம்.

அப்புறம் கோஷான் போன்ற கண்ட கண்ட பயலுகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை I told you so என்று சொல்லும்பசியாகலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

 

கருணாநிதியின் அரசியல் அலம்பறை செய்யும் பெண்களை மடக்கும் ஒரு தந்திரம்: விபச்சார நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார் அல்லது ஹோட்டலில் கைதானார் என்று சிக்க வைப்பது. ஆனால் முதலிலே எச்சரிக்கை செய்வார், இல்லாவிடில் கோவிந்தா.

சசிகலா கணவர் நடராஜனை வழிக்கு கொண்டு வர, அவருடன் வேலை செய்த ஒரு இளம் பெண்ணை, உள்ளே தூக்கி போட்டார் ஜெயலலிதா. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனை, கஞ்சா வைத்திருந்தார் என்று உள்ளே தள்ளினார்.

 

நாதம்,

நீங்கள் மேலே சொல்லியதை வைத்து எனக்கு ஒரு ஐயம். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது.

நீங்கள் சொல்வதை பார்த்தால் - தமிழ் நாட்டு அரசில் அல்லது இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருப்பவர்கள் - யாராவது ஒருவர் தமக்கு விரோதமாக தனிப்பட்டு செயல்பட்டாலோ அல்லது தமக்கு விரோதமான கொள்கைகளை முன்னெடுத்தாலோ அவர்கள் மீது பொய் வழக்கு சோடித்து உள்ளே தள்ளி விடுவார்கள் போலுள்ளது.

அப்படித்தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நாதம்,

நீங்கள் மேலே சொல்லியதை வைத்து எனக்கு ஒரு ஐயம். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது.

நீங்கள் சொல்வதை பார்த்தால் - தமிழ் நாட்டு அரசில் அல்லது இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருப்பவர்கள் - யாராவது ஒருவர் தமக்கு விரோதமாக தனிப்பட்டு செயல்பட்டாலோ அல்லது தமக்கு விரோதமான கொள்கைகளை முன்னெடுத்தாலோ அவர்கள் மீது பொய் வழக்கு சோடித்து உள்ளே தள்ளி விடுவார்கள் போலுள்ளது.

அப்படித்தானா?

ஆம் 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஆம் 😰

இந்த கேள்விக்கு எனது பதிலும் ஆம் என்பதுதான்.

ஆனால்,

விடுதலை புலிகளை ஆதரிக்கும், தலைவரின் படத்தை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்லும், ராஜீவை நாம்தான் கொன்றோம் என பொது மேடையில் கூறிய சீமானின் மீது ஏன் எந்த சோடிக்க பட்ட வழக்கும் பாயவில்லை?

என்னை பொறுத்தவரை இதற்கு 2 காரணங்கள் தான் இருக்க முடியும்.

1. இந்திய மத்திய அரசு, பிஜேபி, மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் எல்லாம் விடுதலை புலிகளின் கொள்கையை, தலைமையை ஏற்று கொண்டு விட்டன. அதை தமிழ் நாட்டில் பரப்புவதற்கு அவர்களுக்கு முழு சம்மதம்.

2. இந்திய மத்திய அரசு, பிஜேபி, மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் சீமானுடன் ஒரு டீலுக்கு போயுள்ளன. எனவே அவர் மீது எந்த வழக்கும் பாயாது/பாயவில்லை.

இதில் எது காரணம்?

அல்லது சீமான் இப்படி பொய் வழக்கில் கைதாகாமல் இருக்க வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க கூடுமா?

பிகு: திரியை திசை திருப்புவதாக தெரிந்தால் மன்னிகவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

பிகு: திரியை திசை திருப்புவதாக தெரிந்தால் மன்னிகவும்.

எனக்கு இப்போதெல்லாம் இது புரிவதில்லை, இந்த விவாதத்தில் ஆர்வம் இல்லை.. அதை விடுங்கோ. இதை பாருங்கோ.

எனது நண்பர், லண்டனில் இருந்து கொழும்பு போய், கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கினார்.

இலங்கை கடவுசீட்டு வைத்திருந்தார். அதிகாரி ஏதோ கிரந்த கேள்வி கேட்க, இவருக்கு ஏறி விட்டது. என்னவோ சொல்லிப்போட்டார். லண்டன் பழக்கம். அவர் அப்படியே அந்த கதிரையில் இரு என்று சொல்லி விட்டு போய் விட்டார். கடவுசீட்டு அவரிடம்...

பல மணிநேரத்தில் பின்னர் ஒரு அதிகாரி வந்தார். உன்னை கொண்டுபோக புலனாய்வு அதிகாரிகளை வர சொல்லி உள்ளோம். நீ புலி என்று சந்தேகம் என்கிறார். 

விசயம் புரிந்து தலைக்கு ஏறியவுடன், தடாலடியாக சரண்டர் ஆனார். அய்யா நான் பிரித்தானிய கடவு சீட்டும் வைத்திருக்கிறேன், நான் இரண்டு நாட்டு குடியுரிமையும் வைத்திருப்பதால், அவர் கேட்டது எனக்கு கொஞ்சம் கடுப்பாகி விட்டது. அய்யா எங்கே, அவரிடம் மன்னிப்பு கேட்க்கிறேன் என்று சொல்லி, காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு, ஓடி வந்து விட்டார், $200 டொலரையும் கொடுத்துதான்.... அதுவே இந்தியா.

பிரித்தானிய கடவு சீட்டும், காசும் இல்லாவிடில், இன்று தூள் கடத்தினார் என்று ஒரு பத்து வருசம் கம்பி எண்ணி இருப்பாய் என்று சொல்ல, சிலிர்த்துக் கொள்வார்.

ஒரே ஒரு விசயம்.... இந்திய விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளிடம் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனக்கு இப்போதெல்லாம் இது புரிவதில்லை. அதை விடுங்கோ. 

ஓ… உங்களுக்கும் புரியவில்லையா….சரி அப்ப இதை விடுவம்.

ஆனால் அவர் இந்திய புலானாய்வு முகவரா இல்லையா என உங்களுக்கு தெளிவில்லாத நிலையில் (எனக்கும் இதே குழப்பம்தான்) -அவரின் அரசியலை ஆதரித்து எழுதும் போது கவனம் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

 

நீங்கள் மேலே சொன்னதில் எனக்கு துளியும் முரண்பாடில்லை. நானே அனுபவப்பட்ட விடயம்தான் இந்த இந்திய விமானநிலைய அதிகாரிகளின் அட்டூழியம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

பாதிக்கபட்ட சின்மயி குற்றம் செய்தவர் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்

சின்மயிக்கு தன்மீது குற்றம் செய்தவர் மீது வழக்கு போட்டு தண்டிக்க விரும்பவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

பாதிக்கபட்ட சின்மயி குற்றம் செய்தவர் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை 😂

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சின்மயிக்கு தன்மீது குற்றம் செய்தவர் மீது வழக்கு போட்டு தண்டிக்க விரும்பவில்லை 😂

 

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே


இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனக் கிடங்குகள் தீப்பற்றித் தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிகப் பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலிப்பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே
களையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா எனைப் பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா

தேவதை புன்னகை செய்தால்
சிறு தேப்பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினிலே வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய்
ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் வருமா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.