Jump to content

பாலியல் புகார்களும் பாரத தேசமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் புகார்களும் பாரத தேசமும்
+++++++++++++++++++++++++++++

spacer.png

 

இன்று சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் பாடசாலையில் கற்பித்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர்மீது பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு செய்யப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். விசாரணைகள் ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் இதனை பிராமணர்களுக்கு எதிரான, பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான ஒன்றாக மாற்றுவதில் பலர் முனைப்பாக இருக்கிறார்கள்.

இதேபோல 2018ம் ஆண்டு இந்தியாவில் கவிஞர் வைரமுத்து உட்பட பல பிரமுகர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது கேரளா மாநிலத்தின் ONV Cultural Academy யினால் விருதுக்கு வைரமுத்து தெரிவான நிலையில்அவர் மீதான குற்றச்சாட்டு மீண்டும் பேசப்படுகிறது.
  

இவ்வாறு பெண்கள் தம்மீது நடாத்தப்பட்ட பாலியல் தாக்குதலைத் துணிந்து பகிரங்கப்படுத்த உறுதுணையாக இருந்தது 2006 இல் அமெரிக்க கறுப்பினத்தவரான Tarana Burke என்பவர் ஆரம்பித்த Me Too movementதான். இந்த கட்டமைப்பின் #metoo hashtag 2017 இல் வைரல் ஆனதைத் தொடர்ந்து உலக அளவில் பெண்கள் தமக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிரங்கப்படுத்தத் தொடங்கினர். 

உண்மையில் ஒரு பாலியல் குற்றவாளிதான் இந்த கட்டமைப்புப் பிரபலமாகவும் ஏனைய பல நாடுகளிலும் இதுபோன்ற அமைப்புகள் தோன்றுவதற்கும் காரணியாக இருந்துள்ளார். Harvey Weinstein (வயது 69) என்ற ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர்தான் அவர். 2017 இல் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் நியூயோர்க்கில் வெளியாகும் முக்கியமான இரண்டு பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் இவர்மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட அடிப்படையாக அமைந்தன. இந்த விசாரணைகள் ஆரம்பித்த பின்னர், 80 க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராகப் புகார் கொடுத்தனர். அவற்றுள் இரண்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 2020ல் 23 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார். 

அடுத்தவர், பிரபலமான நகைச்சுவை நடிகரான Bill Cosby (வயது 83). 2005ல் இவர் மீது புகார் வந்தாலும் போதுமான நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை என வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு 2014ல் ஒரு நிகழ்ச்சியில் இன்னொரு நகைச்சுவை நடிகரான Hannibal Buress, Bill Cosby யின் பாலியல் நடத்தைகள் தொடர்பாக விபரித்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 பெண்கள் வெளிவந்து 1965ல் இருந்து 2008 வரை தங்களுக்கு நேர்ந்தவற்றை பகிர்ந்து கொண்டனர். இந்த வழக்குகள் நடைபெறும் காலத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பல விருதுகள் மீளப் பெறப்பட்டடோடு அவர் இப்போது 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். 

கனடாவிலும் என்ற ஒன்டாரியோ conservative கட்சியின் மாகாண முதல்வர் தேர்தலில் போட்டியிட இருந்த Patrick Brown என்ற பிரபல அரசியல்வாதி குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும் 2018 இல் போட்டியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது. அதேபோல CBC வானொலியில் பிரபல தொகுப்பாளராக இருந்த Jian Ghomeshi யும் இதே போன்ற குற்றச்சாட்டினால் தனது வேலையை இழக்க நேரிட்டது.

இவ்வாறு  2017 இல் அமெரிக்காவில் சூடுபிடித்த இந்த Me Too இயக்கம்  சினிமாத் துறைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், நிறுவன உயர் அதிகாரிகள், ஊடகத்துறை பிரபலங்கள் கல்லூரி பேராசிரியர்கள், ஒலிம்பிக் பயிற்சியாளர்கள் என 201 பெருந்தலைகளை வீழ்த்தியது. பலர் சிறை சென்றார்கள். எல்லாரும் பதவி இழந்தார்கள். அந்தப் பதவிகளில் 62% ஆனவை மீள நிரப்பப்பட்டுள்ள நிலையில் 44% வீதமான பதவிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் Me Too இயக்கம் சூடுபிடித்தபோது இந்தியாவிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டது. பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல பெண்களும் சமூக ஊடகங்களினூடாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கினர். இதில் 34 பிரபலமான பெண்கள் உட்பட பல பெண்கள் தம்மை வெவ்வேறு காலங்களில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தொடர்பான பொதுவெளியில் பேச முன்வந்தனர்.

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி கொடுத்த புகாரும் சமூகவலைதளத்தில்  வெளிப்படையாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் அதிகம் பேசப்பட்டன. அவரைத் தொடர்ந்து வேறு பல பெண்களும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பல பெண்கள் சின்மயிக்கு ஆதரவாக நின்றபோதும் சில பிரபலமான பெண்களே சின்மயியை விமர்சித்தனர்.

அமெரிக்காவில் நடந்தற்கு மாறாக இந்தியாவில் ஒரு ஆண் மீது பாலியல் தொந்தரவுக் குற்றம் சுமத்தியமைக்காக, வழக்குத் தொடுத்தவரான சின்மயி தனது துறையில் இயங்க முடியாதபடி செய்யப்பட்டார். அவர் பிறந்த சாதியை அடிப்படையாகக் கொண்டு, திராவிடத் தமிழரை அவமானப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்ட  பார்ப்பனர்களின் சதி,  இதன் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது போன்ற விதத்தில் பலராலும் எதிர்பிரச்சாம் செய்யப்பட்டு பிராமணர் அல்லாத தமிழ் சமூகமும் தூண்டிவிடப்பட்டது..

வைரமுத்து மீது 2019 மார்ச் மாதம் சின்மயி வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து அதே வருடம் டிசெம்பர் மாதம், “எனக்காகக் குரல் கொடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக் கவலை?” என்று அவர் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது. 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, சில வருடங்களுக்கு முன்னர் பிராமணரல்லாத வைரமுத்து மீது பிராமணப் பெண்ணொருவர்  குற்றச்சாட்டை முன்வைத்தபோது வைரமுத்துவுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, சின்மயியை அவரின் சாதியையும், அவர் சார்ந்த துறையையும் முன்னிலைப்படுத்தி அவர் மீது சேறு பூசும் வேலையைத்தான் அதிகம் பேர் செய்தார்கள்.

இன்று பத்ம சேஷாத்திரி பள்ளி விடயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பிராமணர் என்பதை அடிப்படையாகக் கொண்டு மறுபக்கம் நின்றுகொண்டு  பள்ளி மீது ஒட்டு மொத்தமாக பழி சுமத்துவதுவதுடன் சாதியையும் இழுக்கும் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அங்கு பலர் செய்துகொண்டு இருக்கிறார்கள். 

இவ்வாறான பாலியல் அத்துமீறல்களும் அசிங்கங்களும் பல பள்ளிக்கூடங்களிலும் தொடர்ந்து நடக்கின்றன. பல்கலைக் கழகங்களிலும் நடக்கின்றன. இது வெளியே தெரிய வந்தது அவ்வளவுதான். களை எடுக்க வேண்டியது எல்லோரையும்தான். ஆனால் இப்படியான சம்பவங்களுக்குள் சாதி, மதம் சேர்ப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில், தற்போது குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபாலன் உடனைடியாகவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். ஆனால் வைரமுத்துவோ எந்தவிதமான பிரச்சனையும் அற்ற வகையில் இயங்குவதுடன், வருடா வருடம் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். 

வருடா வருடம் ஏதாவது விருது வாங்கிவிடும் வைரமுத்துவிற்கு இம்முறையும் ONV Cultural Academy யால் சிறந்த கவிஞர் விருது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவித்தல் வந்ததுமே தற்போதைய தமிழக முதல்வர் கையால் வைரமுத்து வாழ்த்தும் பெற்றார். ஆனாலும் மலையாளக் கலைஞர்கள் பலரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ONV Cultural Academy வைரமுத்துவுக்கு விருது கொடுப்பதை மீள்பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
இங்கு வைரமுத்து குற்றமற்றவரா? விருதுக்குத் தகுதியானவரா? என்பதை விவாதிப்பதல்ல எனது நோக்கம். இந்தியா போன்ற நாட்டில் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படும் சந்தர்ப்பத்தில் அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைப்பதில் உள்ள அடிப்படைத் தடைகளை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம். 

இந்தியாவில் சட்ட ஆட்சி இருப்பது உண்மையெனில் இன்று ராஜகோபாலன் விசாரிக்கப்படுவது போலவே இதுவரை குற்றம் சாட்டப்பட்ட அனைத்துப் பிரபலங்களும் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டியவர்களும் சாட்சிகளும் மிரட்டப்படாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அரசின் மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை வரும். 

அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சட்ட நுணுக்கங்களுக்கு முகங்கொடுத்து வழக்கினைக் கையாண்டால் நியாயம் கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகம். ஆனால் இந்தியாவில் ஒரு சம்பவத்திற்குப் பூசப்படும் சாதி, கட்சி, பின்பற்றும் சமயம், மொழி எனப் பல சாயங்களைத் தாண்டியும், ஆணாதிக்கச் சமூகம், ஆணாதிக்கத்தை ஆராதிக்கும் பெண்கள் கூட்டம், அரசியல், பண செல்வாக்குகள் என்பவற்றையும் தாண்டித்தான் ஒரு பெண் நியாயத்திற்காகப் போராடும் சூழல்தான் இன்றும் இருக்கிறது.

நன்றி: Rajesh Kumar - இவரது பக்கத்திலிருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன.

 

 

https://www.facebook.com/101881847986243/posts/337493987758360/?d=n

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வைரமுத்து மீது 2019 மார்ச் மாதம் சின்மயி வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து அதே வருடம் டிசெம்பர் மாதம்

சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடுக்கவே இல்லையே. தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக  வைரமுத்து சொல்லியும்  வலைத்தளங்களில் அவர் மீது அவதூறு பரப்புவதை மட்டுமே சின்மயி செய்து கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் வைரமுத்து மீது ஏன் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கதறுகிறார்..😂

சின்மயியையும் பாடசாலைப் பிள்ளைகளையும் ஒரே தராசில் நிறுக்கும் கட்டுரையாசிரியரின் அறிவை என்ன சொல்ல... 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சின்மயி வைரமுத்து மீது வழக்கு தொடுக்கவே இல்லையே. தன் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக  வைரமுத்து சொல்லியும்  வலைத்தளங்களில் அவர் மீது அவதூறு பரப்புவதை மட்டுமே சின்மயி செய்து கொண்டிருக்கிறார்.

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

சுமா, பிரச்சனை என்னவென்றால்...சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்..!
வைரமுத்துவுக்கு தீர்ப்பு எப்படி வருமென்று ஏற்கனவே தெரியும்...!

Link to comment
Share on other sites

 

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

வயதால் நம் வாழ்வு முறியுமா
வாய் முத்தம் வயது அறியுமா
நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா


என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது


ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?

 

காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!


அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?


அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா


என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா
என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா.

இது அண்மையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள். PSBB பாடசாலை ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு எழுதிய Pedo கவிதை மாதிரி இருக்குது.

 

 

14 minutes ago, புங்கையூரன் said:

சுமா, பிரச்சனை என்னவென்றால்...சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்..!
வைரமுத்துவுக்கு தீர்ப்பு எப்படி வருமென்று ஏற்கனவே தெரியும்...!

நீங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு விருப்பமான நிற கண்ணாடி அணிந்து பாக்கின்றீர்கள். இந்திய நீதி துறையில்  இருப்பவர்கள் எல்லோரும்  'அவாள்' கள் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவாள்களை விட தமிழகத்தில் திராவிடம் வலுவாக இருக்கின்றது. அந்தத் திராவிடம் வயிரமுத்துவை தன் செட்டைகளுக்குள் வைத்துப் பாதுகாத்துக்கொள்ளும். மெட்டுக்கு பல திரைப்படப் பாடல்களை எழுதி அவை மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது வயிரமுத்துவுக்கு தன்னிலை காக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, zuma said:

 

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

வயதால் நம் வாழ்வு முறியுமா
வாய் முத்தம் வயது அறியுமா
நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா

இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா


என்வாழ்வில் தந்தை இல்லையே
தந்தைபோல் கணவன் வேண்டுமே

என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது


ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?

 

காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!


அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?


அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா


என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா
என் காதலா காதல் வயது பார்க்குமா
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா.

இது அண்மையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள். PSBB பாடசாலை ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு எழுதிய Pedo கவிதை மாதிரி இருக்குது.

 

 

நீங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு விருப்பமான நிற கண்ணாடி அணிந்து பாக்கின்றீர்கள். இந்திய நீதி துறையில்  இருப்பவர்கள் எல்லோரும்  'அவாள்' கள் அல்ல. 

ஓ...அப்படியா?

நான் கண்ணாடி அணிவதில்லை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

 

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

 

அதனை தான் சின்மயி எதிர்பார்க்கிறார். அவரிடம் சான்றுகள் இல்லை, ஆனால் வழக்கு என்று வந்தால், சும்மாவே கேள்விகள் கேட்டு நாறடிக்கலாம்.

ஆனால், வைரமுத்து, அதிமுக காலத்தில், பிஜேபி செல்வாக்கு காரணமாக தவிர்த்தார்.

இப்போது அவருக்கு சார்பான திமுக ஆட்சிக்கு வந்ததால், சின்மயி தனது நிலையினை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்  என்றே சொல்லலாம்.  

கருணாநிதியின் அரசியல் அலம்பறை செய்யும் பெண்களை மடக்கும் ஒரு தந்திரம்: விபச்சார நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார் அல்லது ஹோட்டலில் கைதானார் என்று சிக்க வைப்பது. ஆனால் முதலிலே எச்சரிக்கை செய்வார், இல்லாவிடில் கோவிந்தா.

சசிகலா கணவர் நடராஜனை வழிக்கு கொண்டு வர, அவருடன் வேலை செய்த ஒரு இளம் பெண்ணை, உள்ளே தூக்கி போட்டார் ஜெயலலிதா. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனை, கஞ்சா வைத்திருந்தார் என்று உள்ளே தள்ளினார்.

திமுக அரசு, வைரமுத்துவுக்காக அதிரடி காட்ட இன்னும் இரண்டொரு மாதமாகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா,

நம்ம கவிப்பேரரசுக்கு,

1. பிஜேபி கவர் எடுக்கிறது

2. அதிமுக கவர் எடுக்கிறது

3. திமுக கவர் எடுக்கிறது

இத்தனை ஆதரவும் Indian establishment இடம் பெறும் ஒருவர், இவர்கள் அனைவரும் வெறுத்த, புலிகளுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் எம் இனத்துக்கும் எப்படி நண்பராக இருக்க முடியும் என்ற அடிப்படை கேள்வியை கூட கேட்காமல்

அவரின் 2009 கள்ள மெளனத்தை மறந்து அல்லது மறைத்தபடி,

இந்த பாழாய்போன ஈழத்தமிழ் இனமும் அல்லவா அவருக்காக வரிந்து கட்டுகிறது.

நடிகரின் கட் அவுட்டுக்கு பாலூத்தும் தென்னிந்திய ரசிகர்கள் திரை கவர்ச்சிக்கு மயங்கினார்கள்.

எம்மவர்கள் ? எழுத்து கவர்சிக்கு மயங்குகிறார்கள்🤦‍♂️.

இதில் வழமையாக இரு பகுதியாக பிரியும் பலர் அணி மாறி வேறு கருத்திடுகிறார்கள்.

1. ஆணில் குற்றமா, பெண்ணில் குற்றமா என்பது இங்கே பொருட்டல்ல

2. வைரமுத்து தமிழனா, சின்மயி பிராணமணாளா என்பதும் இங்கே பொருட்டல்ல

3. யார் அதிகம் உண்மை பேசுகிறார் என்பதும் இங்கே பொருட்டல்ல.

குறைந்த பட்சம் கருணாநிதியின் 2009 துரோகத்தை காலம் தாழ்ந்தாவது பகிரங்கமாக ஏற்று கொள்ளாதவரை

அவரின் பிரச்ச்னையை இந்த இனம் கவனத்தில் எடுக்கும் தகுதியற்றவர் வைரமுத்து.

ஈழத்தமிழர்களால் வீதியில் கிடக்கும் அசிங்கம் போல கடந்து செல்ல படவேண்டியவர் வைரமுத்து.

 

யாழ் களத்தின் அதி தீவிர தமிழ் தேசிய படையணிக்கு:

கொஞ்சம் அடக்கித்தான் வாசியுங்கள் வீரர்களே.

மிக விரைவில் தன் உற்ற நண்பர் ஸ்டாலினிடம் டோட்டல் சரண்டர் ஆவர் முத்து சார்.

இப்போ சீமான் சொல்லி விட்டார் சாட்டை துரை சொல்லி விட்டார் என்று வைரமுத்துவுக்கு ஆதரவாக கம்பு சுத்தியதை எண்ணி அப்போ வருத்தபட வேண்டி வரலாம்.

அப்புறம் கோஷான் போன்ற கண்ட கண்ட பயலுகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை I told you so என்று சொல்லும்பசியாகலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

 

கருணாநிதியின் அரசியல் அலம்பறை செய்யும் பெண்களை மடக்கும் ஒரு தந்திரம்: விபச்சார நோக்கத்துடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார் அல்லது ஹோட்டலில் கைதானார் என்று சிக்க வைப்பது. ஆனால் முதலிலே எச்சரிக்கை செய்வார், இல்லாவிடில் கோவிந்தா.

சசிகலா கணவர் நடராஜனை வழிக்கு கொண்டு வர, அவருடன் வேலை செய்த ஒரு இளம் பெண்ணை, உள்ளே தூக்கி போட்டார் ஜெயலலிதா. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனை, கஞ்சா வைத்திருந்தார் என்று உள்ளே தள்ளினார்.

 

நாதம்,

நீங்கள் மேலே சொல்லியதை வைத்து எனக்கு ஒரு ஐயம். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது.

நீங்கள் சொல்வதை பார்த்தால் - தமிழ் நாட்டு அரசில் அல்லது இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருப்பவர்கள் - யாராவது ஒருவர் தமக்கு விரோதமாக தனிப்பட்டு செயல்பட்டாலோ அல்லது தமக்கு விரோதமான கொள்கைகளை முன்னெடுத்தாலோ அவர்கள் மீது பொய் வழக்கு சோடித்து உள்ளே தள்ளி விடுவார்கள் போலுள்ளது.

அப்படித்தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நாதம்,

நீங்கள் மேலே சொல்லியதை வைத்து எனக்கு ஒரு ஐயம். ஆம் இல்லை என்று பதில் சொன்னால் போதுமானது.

நீங்கள் சொல்வதை பார்த்தால் - தமிழ் நாட்டு அரசில் அல்லது இந்திய மத்திய அரசில் ஆட்சியில் இருப்பவர்கள் - யாராவது ஒருவர் தமக்கு விரோதமாக தனிப்பட்டு செயல்பட்டாலோ அல்லது தமக்கு விரோதமான கொள்கைகளை முன்னெடுத்தாலோ அவர்கள் மீது பொய் வழக்கு சோடித்து உள்ளே தள்ளி விடுவார்கள் போலுள்ளது.

அப்படித்தானா?

ஆம் 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஆம் 😰

இந்த கேள்விக்கு எனது பதிலும் ஆம் என்பதுதான்.

ஆனால்,

விடுதலை புலிகளை ஆதரிக்கும், தலைவரின் படத்தை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்லும், ராஜீவை நாம்தான் கொன்றோம் என பொது மேடையில் கூறிய சீமானின் மீது ஏன் எந்த சோடிக்க பட்ட வழக்கும் பாயவில்லை?

என்னை பொறுத்தவரை இதற்கு 2 காரணங்கள் தான் இருக்க முடியும்.

1. இந்திய மத்திய அரசு, பிஜேபி, மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் எல்லாம் விடுதலை புலிகளின் கொள்கையை, தலைமையை ஏற்று கொண்டு விட்டன. அதை தமிழ் நாட்டில் பரப்புவதற்கு அவர்களுக்கு முழு சம்மதம்.

2. இந்திய மத்திய அரசு, பிஜேபி, மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் சீமானுடன் ஒரு டீலுக்கு போயுள்ளன. எனவே அவர் மீது எந்த வழக்கும் பாயாது/பாயவில்லை.

இதில் எது காரணம்?

அல்லது சீமான் இப்படி பொய் வழக்கில் கைதாகாமல் இருக்க வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க கூடுமா?

பிகு: திரியை திசை திருப்புவதாக தெரிந்தால் மன்னிகவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

பிகு: திரியை திசை திருப்புவதாக தெரிந்தால் மன்னிகவும்.

எனக்கு இப்போதெல்லாம் இது புரிவதில்லை, இந்த விவாதத்தில் ஆர்வம் இல்லை.. அதை விடுங்கோ. இதை பாருங்கோ.

எனது நண்பர், லண்டனில் இருந்து கொழும்பு போய், கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்கினார்.

இலங்கை கடவுசீட்டு வைத்திருந்தார். அதிகாரி ஏதோ கிரந்த கேள்வி கேட்க, இவருக்கு ஏறி விட்டது. என்னவோ சொல்லிப்போட்டார். லண்டன் பழக்கம். அவர் அப்படியே அந்த கதிரையில் இரு என்று சொல்லி விட்டு போய் விட்டார். கடவுசீட்டு அவரிடம்...

பல மணிநேரத்தில் பின்னர் ஒரு அதிகாரி வந்தார். உன்னை கொண்டுபோக புலனாய்வு அதிகாரிகளை வர சொல்லி உள்ளோம். நீ புலி என்று சந்தேகம் என்கிறார். 

விசயம் புரிந்து தலைக்கு ஏறியவுடன், தடாலடியாக சரண்டர் ஆனார். அய்யா நான் பிரித்தானிய கடவு சீட்டும் வைத்திருக்கிறேன், நான் இரண்டு நாட்டு குடியுரிமையும் வைத்திருப்பதால், அவர் கேட்டது எனக்கு கொஞ்சம் கடுப்பாகி விட்டது. அய்யா எங்கே, அவரிடம் மன்னிப்பு கேட்க்கிறேன் என்று சொல்லி, காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு, ஓடி வந்து விட்டார், $200 டொலரையும் கொடுத்துதான்.... அதுவே இந்தியா.

பிரித்தானிய கடவு சீட்டும், காசும் இல்லாவிடில், இன்று தூள் கடத்தினார் என்று ஒரு பத்து வருசம் கம்பி எண்ணி இருப்பாய் என்று சொல்ல, சிலிர்த்துக் கொள்வார்.

ஒரே ஒரு விசயம்.... இந்திய விமான நிலையங்களில் குடிவரவு அதிகாரிகளிடம் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனக்கு இப்போதெல்லாம் இது புரிவதில்லை. அதை விடுங்கோ. 

ஓ… உங்களுக்கும் புரியவில்லையா….சரி அப்ப இதை விடுவம்.

ஆனால் அவர் இந்திய புலானாய்வு முகவரா இல்லையா என உங்களுக்கு தெளிவில்லாத நிலையில் (எனக்கும் இதே குழப்பம்தான்) -அவரின் அரசியலை ஆதரித்து எழுதும் போது கவனம் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

 

நீங்கள் மேலே சொன்னதில் எனக்கு துளியும் முரண்பாடில்லை. நானே அனுபவப்பட்ட விடயம்தான் இந்த இந்திய விமானநிலைய அதிகாரிகளின் அட்டூழியம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

வைரமுத்து அவர்கள்  சின்மயி மீது மானநஷ்ட வழக்கு (DEFAMATION) போட்டு தனது களங்கத்தை போக்கலாமே?

பாதிக்கபட்ட சின்மயி குற்றம் செய்தவர் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

சட்டத்தை அமுல் படுத்துபவர்களும் ''அவாள்"".
சின்மயியும் ஒரு அவாள்

சின்மயிக்கு தன்மீது குற்றம் செய்தவர் மீது வழக்கு போட்டு தண்டிக்க விரும்பவில்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

பாதிக்கபட்ட சின்மயி குற்றம் செய்தவர் மீது வழக்கு தொடுக்க விரும்பவில்லை 😂

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சின்மயிக்கு தன்மீது குற்றம் செய்தவர் மீது வழக்கு போட்டு தண்டிக்க விரும்பவில்லை 😂

 

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே


இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனக் கிடங்குகள் தீப்பற்றித் தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிகப் பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலிப்பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே
களையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா எனைப் பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா

தேவதை புன்னகை செய்தால்
சிறு தேப்பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினிலே வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய்
ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் வருமா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.