Jump to content

பாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

16 ஜனவரி 2019

புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்து விடுவது இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது.

பதின்ம பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும்.

ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்த தேசிய ஆராய்ச்சி, மக்களில் பலர் 16 வயதை தாண்டிவிட்டாலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம் எனத் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ஒவ்வொரு தசாப்த காலகட்டத்திலும் பாலியல் நடத்தை எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கமாக சொல்வது இந்த அறிக்கைதான்.

பி எம் ஜே பாலியல் மற்றும் இனப்பெருக்க நல இதழில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் குழுவினர் மற்றும் ட்ராபிக்கல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரில் உள்ள 3000 பேரிடம் ஒரு ஆய்வு நடத்தினர்.

ஆய்வு முடிவு என்ன சொல்கிறது?

இளம் பெண்களில் 40 சதவீதத்தினரும், இளம் ஆண்களில் 26 சதவீதத்தினரும் தங்களது முதல் பாலியல் அனுபவம் சரியான நேரத்தில் நடக்கவில்லை என நினைக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

சற்று ஆழமாக அவர்களிடம் பேசிய போது, பலர் கன்னித்தன்மையை இழக்க இன்னும் சற்று காலம் காத்திருக்க விரும்பியதாகவும், சிலர் இன்னும் விரைவிலேயே கன்னித்தன்மையை இழக்க விரும்பியதாகவும் தெரியவந்ததாக ஆய்வு கூறுகிறது.

பெரும்பாலானவர்கள் 18 வயதில் பாலியல் உறவு அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். பாதி பேர் 17 வயதில் முதல் முறையாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்கள். மூன்றில் ஒருவர் பதினாறு வயதுக்கும் முன்னதாகவே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தில் உள்ளவர்கள் மாடல்களே

பட மூலாதாரம்,UNIVERSALIMAGESGROUP

''இருவருக்கும் சம்மதமா?''

பாலியல் உறவில் ஈடுபட தனது இணையுடன் சம்மதம் பெற்று ஈடுபட்டார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது. அதாவது முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னதாக, தனது இணையிடம் பாலியல் உறவில் ஈடுபட இருவரும் குடி போதையில் இல்லாத நிலையில் பரஸ்பரம் சம்மதம் பெற்றுக்கொண்டார்களா அல்லது போதையின் உச்சத்தில் பாலியல் உறவுக்கு இணங்கினார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது.

பெண்களில் பாதி பேர் இந்த ஆய்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். பத்தில் நான்கு ஆண்களுக்கும் இதில் தோல்வி கிடைத்துள்ளது.

ஐந்தில் ஒரு பெண் மற்றும் பத்தில் ஒரு இளைஞர் முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் விருப்பம் வரவில்லை என்கின்றனர், சிலர் பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் நிறுவனர் பேராசிரியர் கேய் வெல்லிங்ஸ், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வயதை மட்டும் வைத்து ஒருவர் பாலியல் உறவில் ஆர்வமாக ஈடுபட தயாராவார் எனச் சொல்ல முடியாது என்கிறார்.

'ஒவ்வொரு இளைஞர், இளம் பெண்ணும் வித்தியாசமானவர்கள். சிலர் 15 வயதிலேயே பாலியல் உறவுக்கு தயாராகலாம். சிலர் 18 வயதிலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம்'' என்கிறார்.

சக ஆராய்ச்சியாளரான மருத்துவர் மெல்லிசா பால்மர் கூறுகையில், ''இளைஞர்களை விட இளம் பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுமாறு தங்களது இணையிடம் இருந்து அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர் என்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது'' என்றார்.

''ஆராய்ச்சி முடிவுகளில் சில சாதகமான முடிவுகளும் கிடைத்துள்ளன. இளம் வயதினரில் பத்தில் ஒருவர் முதல் பாலியல் உறவில் கருத்தடை செய்வதற்கான நம்பகமான வழிகளை கையாள்வதாக தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாகவும், இணையின் சம்மதம் பெற்று எப்படி முதல் பாலியல் உறவில் நல்லபடியாக ஈடுபடுவது என்பதை இளம் வயதினர் அறிய பள்ளிகளில் பாலியல் கல்வி குறித்து முறையாக கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்கிறார் மெல்லிசா.

படத்தில் உள்ளவர்கள் மாடல்களே

பட மூலாதாரம்,ULLSTEIN BILD

சரி பாலியல் உறவில் ஈடுபட சரியான கால கட்டம் எது?

உங்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட வேண்டுமென தோன்றினால் முதல் உங்களிடம் சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

  • இது சரியான சமயம் என உணர்கிறீர்களா?
  • உண்மையில் நான் எனது இணையை நேசிக்கிறேனா?
  • இணையும் உங்களை அதே அளவுக்கு நேசிக்கிறாரா?
  • கரு உருவாகாமல் தடுப்பதற்காகவும், எச் ஐ வி போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் ஆணுறை பயன்படுத்துவது குறித்து எனது இணையுடன் நான் பேசினேனா? அப்படி பேசிய நிகழ்வு சரியாக இருந்ததா?
  • கர்ப்பத்தை தடுக்க என்ன கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது என்பது குறித்து பேசினோமா? அதனை கைவசம் வைத்திருக்கிறோமா?
  • பாலியல் உறவில் ஈடுபட முதலில் ஒப்புக்கொண்டு பின்னர் ஒருவேளை ஏதோவொரு புள்ளியில் மனம் மாறினால், பாலியல் உறவுக்கு 'நோ'சொல்ல என்னால் முடியுமா? அப்படியொரு நிலையை இருவராலும் சகஜமாக எதிர்கொள்ள முடியுமா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் 'ஆம்' என விடை கூட முடிந்தால். நீங்கள் பாலியல் உறவில் ஈடுபட சரியான சமயம் வந்திருக்கலாம். ஆனால் கீழ்கண்ட ஏதாவதொரு கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' எனில் சரியான நேரமாக அது இல்லாமலிக்கலாம்.

  • நான் யாரிடமிருந்தாவது பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்திக்கிறேனா? குறிப்பாக எனது இணையிடம் இருந்து அல்லது நண்பர்களிடமிருந்து.
  • பாலியல் உறவில் ஈடுப்பட்ட பின்னர் நான் ஏதாவது வருத்தம் கொள்வேனா?
  • எனது நண்பர்களை ஈர்க்கவோ அல்லது அவர்களை தக்கவைக்க பாலியல் உறவில் ஈடுபடுவது குறித்து சிந்திக்கிறேனா?
  • எனது இணையை என்னுடன் தக்க வைக்கவே பாலியல் உறவு குறித்து யோசிக்கிறேனா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் 13,14 வயதிலையே........அதுவும் தாய் தேப்பன்ரை சம்மதத்தோடை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சரியான விளக்கமும்

பாதுகாப்பு  பற்றிய  அறிவும் இருந்தால்

தேவையை பூர்த்தி  செய்ய எந்த  வயதிலும் இதை  தொடங்கலாம்  என்பது  தான்

அனுபவத்தில்  ஐரோப்பியர்கள் கண்ட பாடம்?

அதனால்தான் பதின்ம வயது  வந்ததும் அதனை அவர்களே அனுமதிக்கிறார்கள்?

நான் பார்த்த  சில  எமது  இளம்தலைமுறையரின் தகாத செயற்பாடுகள்

அல்லது துஸ்பிரயோகங்கள் 

அல்லது ஏமாற்றப்படுதலுக்கு

எம்மவரின் இந்த பட்டினி போடுதலே காரணம்

ஆனால்  என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

அடுத்த தலைமுறை சிலவேளைகளில்????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உண்மையில் சரியான விளக்கமும்

பாதுகாப்பு  பற்றிய  அறிவும் இருந்தால்

தேவையை பூர்த்தி  செய்ய எந்த  வயதிலும் இதை  தொடங்கலாம்  என்பது  தான்

அனுபவத்தில்  ஐரோப்பியர்கள் கண்ட பாடம்?

அதனால்தான் பதின்ம வயது  வந்ததும் அதனை அவர்களே அனுமதிக்கிறார்கள்?

நான் பார்த்த  சில  எமது  இளம்தலைமுறையரின் தகாத செயற்பாடுகள்

அல்லது துஸ்பிரயோகங்கள் 

அல்லது ஏமாற்றப்படுதலுக்கு

எம்மவரின் இந்த பட்டினி போடுதலே காரணம்

ஆனால்  என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை

அடுத்த தலைமுறை சிலவேளைகளில்????

 

இங்க இதெல்லாம் 60 களிலேயே மாறிவிட்ட விசயம்தானே? ஊரில் கூட இதுக்கெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்த கடைசி தலைமுறை என்னை போல் 80ஸ், 90ஸ் கிட்ஸ் என்றே நினைக்கிறேன்🤣.

அப்பவும் வாழ்க்கையை வாழத் தெரிந்த சில கில்லிகள் இருந்தார்கள்தான் 🤣.

நாங்கள்தான், தமிழ், பேச்சு, கவிதை, அரசியல், உரிமை, படிப்பு, பலபஸ் பிடிச்சு, சிலபஸ் முடிச்சு, கம்பஸ் போற புலாதில இந்த நல்ல விசயங்களை தவறவிட்டுட்டம்🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இங்க இதெல்லாம் 60 களிலேயே மாறிவிட்ட விசயம்தானே? ஊரில் கூட இதுக்கெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்த கடைசி தலைமுறை என்னை போல் 80ஸ், 90ஸ் கிட்ஸ் என்றே நினைக்கிறேன்🤣.

அப்பவும் வாழ்க்கையை வாழத் தெரிந்த சில கில்லிகள் இருந்தார்கள்தான் 🤣.

நாங்கள்தான், தமிழ், பேச்சு, கவிதை, அரசியல், உரிமை, படிப்பு, பலபஸ் பிடிச்சு, சிலபஸ் முடிச்சு, கம்பஸ் போற புலாதில இந்த நல்ல விசயங்களை தவறவிட்டுட்டம்🤣

இங்கே எல்லாம் (அல்லது  எங்களது) மாறி  விட்டது என்பதும்தவறு  சகோ

எனது  மக்களையே  பார்க்கின்றேன்

எனக்கே சந்தேகம் வரும் ஏதும் குறை  இருக்குமோ  என்று???

பை த பை

அப்பவும் வாழ்க்கையை வாழத் தெரிந்த சில கில்லிகளில்  🤣.

நானும் ஒருவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இங்கே எல்லாம் (அல்லது  எங்களது) மாறி  விட்டது என்பதும்தவறு  சகோ

எனது  மக்களையே  பார்க்கின்றேன்

எனக்கே சந்தேகம் வரும் ஏதும் குறை  இருக்குமோ  என்று???

பை த பை

அப்பவும் வாழ்க்கையை வாழத் தெரிந்த சில கில்லிகளில்  🤣.

நானும் ஒருவன்

உண்மைதான் அண்ணா,

எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது. இங்கே நானும் அப்படி பலரை கண்டுள்ளேன். ஆனால் விதி விலக்குகளாக.

நீங்கள் ஒரு சகலதுறை ஆட்டக்காரர்தான் போலும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உண்மைதான் அண்ணா,

எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது. இங்கே நானும் அப்படி பலரை கண்டுள்ளேன். ஆனால் விதி விலக்குகளாக.

நீங்கள் ஒரு சகலதுறை ஆட்டக்காரர்தான் போலும்🤣

வாழ்வில்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா🤣
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா🤣
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

வாழ்வில்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா🤣
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா🤣

👍🏿 எல்லாம் குடுப்பினை அண்ணை🤣.

நாங்கள் லண்டன் வரும் வரைக்கும் பார்வை ஒன்றே போதுமே🤣.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

 

அப்பவும் வாழ்க்கையை வாழத் தெரிந்த சில கில்லிகள் இருந்தார்கள்தான் 🤣.

நாங்கள்தான், தமிழ், பேச்சு, கவிதை, அரசியல், உரிமை, படிப்பு, பலபஸ் பிடிச்சு, சிலபஸ் முடிச்சு, கம்பஸ் போற புலாதில இந்த நல்ல விசயங்களை தவறவிட்டுட்டம்🤣

 

 

இவற்றையும் தவற விடாமல் வாழ்க்கையை நாலா பக்கமும் துலாவி வாழத் தெரிந்த கில்லிகளும் உள்ளனர் என்று கூறிக் கொண்டு இருக்கையில் சென்று அமர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

இவற்றையும் தவற விடாமல் வாழ்க்கையை நாலா பக்கமும் துலாவி வாழத் தெரிந்த கில்லிகளும் உள்ளனர் என்று கூறிக் கொண்டு இருக்கையில் சென்று அமர்கின்றேன்.

தெரியும், தெரியும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

உண்மையில் சரியான விளக்கமும்

பாதுகாப்பு  பற்றிய  அறிவும் இருந்தால்

தேவையை பூர்த்தி  செய்ய எந்த  வயதிலும் இதை  தொடங்கலாம்  என்பது  தான்

அனுபவத்தில்  ஐரோப்பியர்கள் கண்ட பாடம்?

சரியான விளக்கம் இல்லை...
பாதுகாப்பு முறை தெரியும் ஆனால்....
மனம் இடங்கொடுக்காது 😘
அமாவாசை இருட்டிலையும்  ஆந்தைக்கண்...😁
காவோலை வேலியென்ன
கம்பி வேலியென்ன
கருக்குமட்டை வேலியென்ன
ஓவசியர்ரை தார்பீப்பா வேலியென்ன
பீங்கான் பதிச்ச பனை உயர மதிலென்ன
கறுவல் கடியன் என்ன
அப்பன் காவல் என்ன
ஆத்தா  காவல் என்ன

எல்லாத்தையும் கரைச்சு குடிச்சுட்டு
ஏப்பம் விடும் கடைசி சமுதாயம்
நாம் மட்டுமே..🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சரியான விளக்கம் இல்லை...
பாதுகாப்பு முறை தெரியும் ஆனால்....
மனம் இடங்கொடுக்காது 😘
அமாவாசை இருட்டிலையும்  ஆந்தைக்கண்...😁
காவோலை வேலியென்ன
கம்பி வேலியென்ன
கருக்குமட்டை வேலியென்ன
ஓவசியர்ரை தார்பீப்பா வேலியென்ன
பீங்கான் பதிச்ச பனை உயர மதிலென்ன
கறுவல் கடியன் என்ன
அப்பன் காவல் என்ன
ஆத்தா  காவல் என்ன

எல்லாத்தையும் கரைச்சு குடிச்சுட்டு
ஏப்பம் விடும் கடைசி சமுதாயம்
நாம் மட்டுமே..🥰

நான் கோடு மட்டும் தான் போடுவேன்

நீங்கள் றோட்டுப்போட தம்பி நிழலி தார் ஊற்றி விடுவார்😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஆடி அடங்கும் வயதில் முதியவர்கள் உரையாடல் செய்வதற்கு நல்லதொரு ஆய்வு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

எல்லாம் ஆடி அடங்கும் வயதில் முதியவர்கள் உரையாடல் செய்வதற்கு நல்லதொரு ஆய்வு. 

பழைய நினைவுகளை மீட்பதற்கோர் நல்லதொரு திரி😂👍

ஒரு கணமேனும் மனதில் ஓடிய அந்த பசுமையான நாட்களை எத்தனை முறை நினைத்தலும் மனதில் ஒர் இளைமை எழுச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

பழைய நினைவுகளை மீட்பதற்கோர் நல்லதொரு திரி😂👍

ஒரு கணமேனும் மனதில் ஓடிய அந்த பசுமையான நாட்களை எத்தனை முறை நினைத்தலும் மனதில் ஒர் இளைமை எழுச்சி

🤣 அழகிய மொழியையா தமிழ்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

🤣 அழகிய மொழியையா தமிழ்🤣

அதுதான் இன்னும் அழியாமலிருக்கு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் திருவிழாவில் கடலைக்கொட்டை வாங்கி குடுத்ததை சொல்லவா?
அதுக்கு நன்றிக்கடன்  நிவர்த்தியை சொல்லவா?
கிணற்றில் தண்ணி அள்ளி குடுத்ததை சொல்லவா?
அதுக்கு வந்த நன்றிக்கடனை சொல்லவா?
😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

கோயில் திருவிழாவில் கடலைக்கொட்டை வாங்கி குடுத்ததை சொல்லவா?
அதுக்கு நன்றிக்கடன்  நிவர்த்தியை சொல்லவா?
கிணற்றில் தண்ணி அள்ளி குடுத்ததை சொல்லவா?
அதுக்கு வந்த நன்றிக்கடனை சொல்லவா?
😂

நட்புக்காக நான் பட்டினியில் காஞ்சு போய்கிடந்தாலும் யாரும் வாராங்களோ எண்டு நடுசாமம் ரெண்டுமணிக்கு கேணிக்குள்ள காவல் இருந்ததை சொல்லவா? 🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 நடுசாமம் ரெண்டுமணிக்கு கேணிக்குள்ள காவல் இருந்ததை சொல்லவா? 🥲

நடுச்சாமம் இரண்டு மணிக்கு 
மாமர சருகு சரசரக்க 
கன்னியவள் வருகின்றாள் என 
கண் விழித்த போது 
மாமனார் கள்ளடித்து விட்டு 
தடம் புரண்டு போனதை
என்னவென்பேன்
என்னவென்பேன்
என்னவென்பேன் :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நான் கோடு மட்டும் தான் போடுவேன்

நீங்கள் றோட்டுப்போட தம்பி நிழலி தார் ஊற்றி விடுவார்😋

ஏறி மிதிக்க நான் வாறன். நமக்கெல்லாம் முப்பது தாண்டித்தான் இந்த அக்கிரமம் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய இளையவர்கள் அதிகமான இளம் பெண்கள் 
இதில் எந்த நாட்டமும் இல்லாமல் ஆகிக்கொண்டு வருகிறார்கள் 
28 30 ஆனாலும் யாரையும் காதலிக்கும் எண்ணமும் இல்லை 
மணம் முடிக்கும் எண்ணமும் இல்லாமல் இருக்கிறார்கள் 

எதோ ஒரு உடல் ரீதியான மாற்றமோ மன ரீதியான மாற்றமோ 
நடந்துகொண்டு இருக்கிறது 

இன்னொரு சாரார் 10-13லேயே இண்டெர்நெட் ஸ்மார்ட் போன் 
போன்றவற்றில் வரும் ஆபாசங்களால் சீர்குலைந்து காமசூத்திரத்தையே
திருத்தி எழுதும் அளவுக்கு கெட்டுப்போய் இருக்கிறார்கள்  

இப்போதைய இளம் தலைமுறை மிகவும் பாவபட்ட ஒரு தலைமுறை 
ஊழல் அரசியல்வாதிகள் ... உண்மையற்ற ஊடகங்கள் ... பொய் பரப்புரை செய்யும் 
சமூகவலைத்தளங்கள் என்று சிக்கி திணறி கொண்டு இருக்கிறார்கள் 
கொப்யூட்டர் மனிதனை ஆளும் காலத்துக்குள் சிக்குப்பட்டவர்கள் இவர்களே 

Link to comment
Share on other sites

8 hours ago, விசுகு said:

நான் கோடு மட்டும் தான் போடுவேன்

நீங்கள் றோட்டுப்போட தம்பி நிழலி தார் ஊற்றி விடுவார்😋

அப்போ நாங்கள் அதில் வண்டி ஓட்டினால் என்ன தவறு.....? சில வேளைகளில்  ஓட்டுவது சரியில்லை என்று வண்டியோட்டும் உரிமமே பறிக்கப்படுகிறதே...!! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னித்தன்மை யாருக்குள்ளது? ஆணுக்கா பெண்ணுக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அப்போ நாங்கள் அதில் வண்டி ஓட்டினால் என்ன தவறு.....? சில வேளைகளில்  ஓட்டுவது சரியில்லை என்று வண்டியோட்டும் உரிமமே பறிக்கப்படுகிறதே...!! 🤔

ஒரு தவறுமே இல்லை, சொந்த வண்டி ஓட்டும்வரை......!  😂

16 minutes ago, colomban said:

கன்னித்தன்மை யாருக்குள்ளது? ஆணுக்கா பெண்ணுக்கா?

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும், ஆணும் பெண்ணும்  அணைக்காதவரை இருவருக்குமே உள்ளது.....!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

1- ஏறி மிதிக்க நான் வாறன்.

2 - நமக்கெல்லாம் முப்பது தாண்டித்தான் இந்த அக்கிரமம் நடந்தது. 

 

1- ஏனப்பா

இவ்வளவும் செய்திட்டமாம்

இதை  பண்ண மாட்டமா???😜

 

2- சூறாவளி அடித்து கொஞ்ச  காலத்துக்கு சருகுகள் தென்படாது😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.