Jump to content

கண்ணீரால் கவிதை எழுதி கலங்கி நின்றவன்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் சொல்லெடுத்து

சிலேடைகள் தான் புகுத்தி

திரைதனில் தவிழ்ந்தவன்

தரணியில்

தமிழ் கவிஞன் என்பதனால்

ஈழத்தில் தமிழன் நிலை கண்டு

கண்ணீரால் கவிதை எழுதி

கலங்கி நின்றது போதும்

உறவுகளுக்காய் அவன் வருந்தியது

மெய்யென்றாகாதோ..?!

 

களத்தில் அவன்

கட்டுமரத்திலும் ஏறலாம்

அண்ணா கழகத்திலும் குந்தலாம்...

கவிஞன் அவனுக்கும்

வாழ்வும் வயிறும் இருக்குத்தானே..?!

நிச்சயம் அது

துரோகமில்லை

கவிஞன்.. மொழியாய்.. மொழிக்காய்.. 

வாழ்பவன்.

ஆட்சிக்கட்டில் அவனுக்கு

சாமரம் வீச கவர் கன்னியருமில்லை

கறுப்பின் கவர்ச்சில் மொய்க்க சிம் மையீக்களும் இல்லை

அருட்டிவிட்டால்

அழும் அந்த மீரூ பொம்மைகளும் இல்லை..!

பொற்கிளி காலந்தொட்டு

கொரோனா காலம் வரை

பாவம் செந்தமிழ் கவிஞன் பாடு

கம்பன் வம்பனாகியதோடிசையுதே

எல்லாப் பொல்லாப்பும்

அவன் விலாசம் தேடி 

இலவசமாய் வருகுதே..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.