Jump to content

தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன


Recommended Posts

தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன

 

image_3fc4336c10-750x375.jpg

 

தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி  மோதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.


UPDATE – மூழ்கும் நிலையில் தீக்கிரையான கப்பல்..!

எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் நேற்று முதல் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் முன்னெடுப்பு

எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து இந்தியக் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதனையடுத்து, தீயால் எரிந்துப் போன இந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

UPDATE – தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன – Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்  நிறுத்தப்பட்டது என்பதை சொல்லமாட்டினமாக்கும் 🤣

மக்களை ஏமாத்த ஒரு கூட்டம் போட்டு தீர்மானம் போட்டவை நேற்றுதான் ஆனால் முன்பே 50 வீதத்துக்கு  மேல் கப்பல் அமிழ்ந்து விட்டது என்று செய்தி வந்துவிட்டதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை துறைமுக கடற்கரை பகுதியில் மூழ்கும் நிலையில் தீ பிடித்த ரசாயன கப்பல் ; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
 
இலங்கை துறைமுக கடற்கரை பகுதியில் மூழ்கும் நிலையில்  தீ பிடித்த ரசாயன கப்பல் ; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
 

இலங்கை அருகே சரக்கு கப்பலில் பல நாட்களாக எரிந்து வந்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்தினால் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


இந்தியாவின் ஹசேரா துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற யம்பு எக்ஸ்பிரஸ் கப்பலில் கடந்த மாதம் தீ பரவியது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில், 9.5 கடல் மைல் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கப்பலில் பற்றிய தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. கப்பலில் எத்தனால், 25 டன் நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இருந்ததால் கப்பலில் பற்றிய தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. 

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் முத்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வந்தது. மேலும் கப்பலும் மூழ்கும் நிலைக்கு சென்றது. இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கடந்த நாட்களில் கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் மற்றும் கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

கொழும்பு துறைமுகத்திலிருந்து அதன் தற்போதைய நிலையில் மூழ்கினால் அது கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் நிபுணர்கள் கப்பலை வெகுதூரம் வெளியே  கடலுக்கு இழுக்க முயன்றுய் வருவதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்கரையில் இருந்து  சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் மீன்பிடிக்க தடை அதிகாரிகள் மீண்டும் விதித்து உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் சரக்கு கப்பலில் பல நாட்களாக எரிந்து வந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கப்பலில் மாலுமி உட்பட மூவரையும், இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து, கப்பல் தீ விபத்தினால் அதிலிருந்து வெளியேறிய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் அஜந்தா பெரேரா பிபிசியிடம் கூறும் போது இந்த கப்பல் மூழ்கினால் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தும்

 நைட்ரிக் அமிலம் மற்றும் கப்பலில் உள்ள எண்ணெய் ஆகியவை மூழ்கினால் அது கடலின் முழு அடிப்பகுதியையும் அழித்துவிடும்" என்று அவர் கூறினார்.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு கப்பலை அங்கிருந்து வெளியேற கத்தார் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும்  அனுமதி மறுத்துவிட்டது. மற்ற இரு நாடுகளால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இலங்கை கப்பலை அதன் கடலுக்குள் நுழைய அனுமதித்து உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/World/2021/06/02163820/Fears-of-environmental-disaster-as-oilladen-ship-sinks.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கும் நிலை: கரையோர மீன்பிடி கப்பல்களை அகற்றுமாறு திணைக்களம் அறிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

 


பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையிலான கடற்கரைக்கு அண்மித்த கரையோர மீன் பிடி தொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவ கப்பல்களையும் கடற்றொழில் நடவடிக்கையில் இருந்து அகற்றுமாறு கடற்றொழில் திணைக்களம் மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

195025063_226256339005555_28248417466159

இது தொடர்பாக கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிவிடும் நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு உறுதிப்படுத்தி இருக்கின்றது. இவ்வாறு கப்பல் கடலில் மூழ்கும்போது, கப்பலில் இருக்கும் எரிபொருள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் கொள்களன்களின் இரும்பு பாகங்கள் கடலில் மிதந்து மீனவர்களின் கப்பல்களில் மோதும் அபாயம் இருக்கின்றது.

அதன் பிரகாரம் பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையில் கரையோர கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் கப்பல்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு ஏனைய பிரதேசங்களில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்துமாறும் பணிப்பாளர் நாயகம், அனைத்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கும் அறிவித்திருக்கின்றார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கும் நிலை: கரையோர மீன்பிடி கப்பல்களை அகற்றுமாறு திணைக்களம் அறிவிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இந்தியக் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

புலிகளை அழித்தொழித்த இலங்கை ராணுவம், கொரோனாவை விரட்டிய ராணுவம், கப்பலில் பிடித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்திய ராணுவம் தேவைப்பட்டிருக்கென்றால் கொரோனாவைவிட அவ்வளவு பயங்கரமான தீயாய் இருக்குமோ?

10 hours ago, உடையார் said:

எக்ஸ்-பிரஸ் முத்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வந்தது.

எக்ஸ்-பிரஸ் முத்து  தானாகவே எரிந்து முடிந்துள்ளது. கரிக்கடையை மூழ்காமல் இரு நாட்டு படையும் சேர்ந்து தடுக்கினமாம். பேச்சு மட்டும் வீரம். எரிந்து முடிந்ததற்கு சேர்ந்து கிரிகை செய்யினமாமெல்லோ!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

புலிகளை அழித்தொழித்த இலங்கை ராணுவம், கொரோனாவை விரட்டிய ராணுவம், கப்பலில் பிடித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்திய ராணுவம் தேவைப்பட்டிருக்கென்றால் கொரோனாவைவிட அவ்வளவு பயங்கரமான தீயாய் இருக்குமோ?

எக்ஸ்-பிரஸ் முத்து  தானாகவே எரிந்து முடிந்துள்ளது. கரிக்கடையை மூழ்காமல் இரு நாட்டு படையும் சேர்ந்து தடுக்கினமாம். பேச்சு மட்டும் வீரம். எரிந்து முடிந்ததற்கு சேர்ந்து கிரிகை செய்யினமாமெல்லோ!  

கடலில் நிறைய பிளாஸ்ரிக் பொரு ட்கள் மிதப்பதாக, இன்றைய காலைச் செய்தியில் கூறினார்கள்..!

என்னத்தைக் கொண்டு வந்து தொலைச்சாங்களோ தெரியாது!🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

இந்த கப்பல் மூழ்கினால் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தும்

கப்பலில் வந்ததெல்லாம் கடலோடு சேர்ந்திட்டுது. இனி, ஏதோ கப்பல் மூழ்குவதாற்தான் சுற்றுச் சூழல் பாதிப்படைவதுபோல் கதை. யாரை ஏமாற்றுகிறார்கள்? 

Link to comment
Share on other sites

தென்பகுதி மீனவர்கள் மின்பிடிக்க வடபகுதிநோக்கிப் படையெடுப்பு. விரைவில் செய்திவரும்.🧐 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.