Jump to content

தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன


Recommended Posts

தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன

 

image_3fc4336c10-750x375.jpg

 

தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி  மோதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.


UPDATE – மூழ்கும் நிலையில் தீக்கிரையான கப்பல்..!

எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் நேற்று முதல் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் முன்னெடுப்பு

எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து இந்தியக் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதனையடுத்து, தீயால் எரிந்துப் போன இந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

UPDATE – தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன – Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்  நிறுத்தப்பட்டது என்பதை சொல்லமாட்டினமாக்கும் 🤣

மக்களை ஏமாத்த ஒரு கூட்டம் போட்டு தீர்மானம் போட்டவை நேற்றுதான் ஆனால் முன்பே 50 வீதத்துக்கு  மேல் கப்பல் அமிழ்ந்து விட்டது என்று செய்தி வந்துவிட்டதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை துறைமுக கடற்கரை பகுதியில் மூழ்கும் நிலையில் தீ பிடித்த ரசாயன கப்பல் ; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
 
இலங்கை துறைமுக கடற்கரை பகுதியில் மூழ்கும் நிலையில்  தீ பிடித்த ரசாயன கப்பல் ; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
 

இலங்கை அருகே சரக்கு கப்பலில் பல நாட்களாக எரிந்து வந்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்தினால் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


இந்தியாவின் ஹசேரா துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற யம்பு எக்ஸ்பிரஸ் கப்பலில் கடந்த மாதம் தீ பரவியது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில், 9.5 கடல் மைல் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கப்பலில் பற்றிய தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. கப்பலில் எத்தனால், 25 டன் நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இருந்ததால் கப்பலில் பற்றிய தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. 

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் முத்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வந்தது. மேலும் கப்பலும் மூழ்கும் நிலைக்கு சென்றது. இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கடந்த நாட்களில் கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் மற்றும் கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

கொழும்பு துறைமுகத்திலிருந்து அதன் தற்போதைய நிலையில் மூழ்கினால் அது கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் நிபுணர்கள் கப்பலை வெகுதூரம் வெளியே  கடலுக்கு இழுக்க முயன்றுய் வருவதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்கரையில் இருந்து  சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் மீன்பிடிக்க தடை அதிகாரிகள் மீண்டும் விதித்து உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் சரக்கு கப்பலில் பல நாட்களாக எரிந்து வந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கப்பலில் மாலுமி உட்பட மூவரையும், இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து, கப்பல் தீ விபத்தினால் அதிலிருந்து வெளியேறிய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் அஜந்தா பெரேரா பிபிசியிடம் கூறும் போது இந்த கப்பல் மூழ்கினால் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தும்

 நைட்ரிக் அமிலம் மற்றும் கப்பலில் உள்ள எண்ணெய் ஆகியவை மூழ்கினால் அது கடலின் முழு அடிப்பகுதியையும் அழித்துவிடும்" என்று அவர் கூறினார்.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு கப்பலை அங்கிருந்து வெளியேற கத்தார் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும்  அனுமதி மறுத்துவிட்டது. மற்ற இரு நாடுகளால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இலங்கை கப்பலை அதன் கடலுக்குள் நுழைய அனுமதித்து உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/World/2021/06/02163820/Fears-of-environmental-disaster-as-oilladen-ship-sinks.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கும் நிலை: கரையோர மீன்பிடி கப்பல்களை அகற்றுமாறு திணைக்களம் அறிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

 


பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையிலான கடற்கரைக்கு அண்மித்த கரையோர மீன் பிடி தொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவ கப்பல்களையும் கடற்றொழில் நடவடிக்கையில் இருந்து அகற்றுமாறு கடற்றொழில் திணைக்களம் மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

195025063_226256339005555_28248417466159

இது தொடர்பாக கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிவிடும் நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு உறுதிப்படுத்தி இருக்கின்றது. இவ்வாறு கப்பல் கடலில் மூழ்கும்போது, கப்பலில் இருக்கும் எரிபொருள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் கொள்களன்களின் இரும்பு பாகங்கள் கடலில் மிதந்து மீனவர்களின் கப்பல்களில் மோதும் அபாயம் இருக்கின்றது.

அதன் பிரகாரம் பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையில் கரையோர கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் கப்பல்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு ஏனைய பிரதேசங்களில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்துமாறும் பணிப்பாளர் நாயகம், அனைத்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கும் அறிவித்திருக்கின்றார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கும் நிலை: கரையோர மீன்பிடி கப்பல்களை அகற்றுமாறு திணைக்களம் அறிவிப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

இந்தியக் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

புலிகளை அழித்தொழித்த இலங்கை ராணுவம், கொரோனாவை விரட்டிய ராணுவம், கப்பலில் பிடித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்திய ராணுவம் தேவைப்பட்டிருக்கென்றால் கொரோனாவைவிட அவ்வளவு பயங்கரமான தீயாய் இருக்குமோ?

10 hours ago, உடையார் said:

எக்ஸ்-பிரஸ் முத்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வந்தது.

எக்ஸ்-பிரஸ் முத்து  தானாகவே எரிந்து முடிந்துள்ளது. கரிக்கடையை மூழ்காமல் இரு நாட்டு படையும் சேர்ந்து தடுக்கினமாம். பேச்சு மட்டும் வீரம். எரிந்து முடிந்ததற்கு சேர்ந்து கிரிகை செய்யினமாமெல்லோ!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

புலிகளை அழித்தொழித்த இலங்கை ராணுவம், கொரோனாவை விரட்டிய ராணுவம், கப்பலில் பிடித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்திய ராணுவம் தேவைப்பட்டிருக்கென்றால் கொரோனாவைவிட அவ்வளவு பயங்கரமான தீயாய் இருக்குமோ?

எக்ஸ்-பிரஸ் முத்து  தானாகவே எரிந்து முடிந்துள்ளது. கரிக்கடையை மூழ்காமல் இரு நாட்டு படையும் சேர்ந்து தடுக்கினமாம். பேச்சு மட்டும் வீரம். எரிந்து முடிந்ததற்கு சேர்ந்து கிரிகை செய்யினமாமெல்லோ!  

கடலில் நிறைய பிளாஸ்ரிக் பொரு ட்கள் மிதப்பதாக, இன்றைய காலைச் செய்தியில் கூறினார்கள்..!

என்னத்தைக் கொண்டு வந்து தொலைச்சாங்களோ தெரியாது!🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

இந்த கப்பல் மூழ்கினால் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தும்

கப்பலில் வந்ததெல்லாம் கடலோடு சேர்ந்திட்டுது. இனி, ஏதோ கப்பல் மூழ்குவதாற்தான் சுற்றுச் சூழல் பாதிப்படைவதுபோல் கதை. யாரை ஏமாற்றுகிறார்கள்? 

Link to comment
Share on other sites

தென்பகுதி மீனவர்கள் மின்பிடிக்க வடபகுதிநோக்கிப் படையெடுப்பு. விரைவில் செய்திவரும்.🧐 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.