Jump to content

உலக செய்திகள்இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது
 
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது
 

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது.
பதிவு: ஜூன் 02,  2021 09:52 AM
ஜெனீவா,

கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.


ஆனால் இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

இது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் நேற்று முன்தினம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “இன்று கொரோனா வைரஸ்- உருமாறிய கவலைக்குரிய கொரோனா வைரஸ்களை எளிதாக குறிப்பிட வசதியாக புதிய லேபிள்களை (பெயர்கள்) உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. அவை தற்போதைய அறிவியல் பெயர்களுக்கு மாற்று கிடையாது. பொது விவாதத்துக்கு உதவும் வகையில்தான் இந்த பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என கூறி உள்ளார்.

* இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரசுக்கு பெயர் ஆல்பா.

* தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரசுக்கு பீட்டா என்று பெயர்.

* பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரசுக்கு கமா என்றும், ‘பி.2 ’வைரசுக்கு ஜீட்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

* அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரசஸ்களுக்கு பெயர் எப்சிலான் மற்றும் அயோட்டா ஆகும்.

இவ்வாறு உலக சுகாதார நிறுவனம், பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/World/2021/06/02095207/The-deformed-corona-found-in-India-has-been-renamed.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகள் – WHO கவலை

 
samayam-tamil-1.jpg
 23 Views

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளில் ஒன்றுதான் மிகவும் கவலை தரும் பிரச்னையாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,83,07,832 உள்ளது. அது நேரம்   உயிரிழப்புகள் 3,35,102 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை மூன்று புதிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் B.1.617 என்ற வகை வைரஸ்தான் நாட்டில் இரண்டாம் அலை தீவிரம் அடைய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த ஒரு திரிபுதான் மூன்றாக பிரிந்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவை அதிவேகமாக பரவும் தன்மை கொண்டவை. மேலும் தடுப்பூசி மருந்துகளில் இருந்து நோயாளியை பாதுகாக்கும் சாத்தியமும் குறைவாக உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த திரிபு பரவும்போது அது மிகப்பெரிய அளவில் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் பரவல் தடுப்புப் பிரிவின் வாராந்திர செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வகை திரிபு மீதான மேலதிக ஆய்வுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=51317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப தொடக்கம் உலக சுகாதார திணைக்களம் தன்ரை வேலையை மாத்தி கொண்டது  இந்த பெயர் வைக்கும் விளையாட்டு செய்ய வேண்டிய  வேலையை செய்யாமல் நித்திரை கொண்டு விட்டு இப்ப நித்திரையால் எழும்பி பெயர் சூட்டு விழா நடாத்துகினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

எப்ப தொடக்கம் உலக சுகாதார திணைக்களம் தன்ரை வேலையை மாத்தி கொண்டது  இந்த பெயர் வைக்கும் விளையாட்டு செய்ய வேண்டிய  வேலையை செய்யாமல் நித்திரை கொண்டு விட்டு இப்ப நித்திரையால் எழும்பி பெயர் சூட்டு விழா நடாத்துகினம் .

மனித குலத்துக்கு எதிரானவர்கள் என்பவர்களில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரான இவரது பெயர் இரண்டாவதாக இருக்க வேண்டும்!🤭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.