Jump to content

இளையராஜா: காதலைத் தோற்றுவிப்பதும் இவரின் இசைதான், காதல் தோல்விக்கும் இவரின் இசைதான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அதியமான் ப

2000-க்குப் பின் பிறந்தவர்களுக்கு இளையராஜாவின் இசை பரிச்சயமாக சற்று காலம் பிடித்திருக்கும். ஏனென்றால் அந்த வயதுக்காரர்களின் வாக்கிடாக்கிகளிலும், டேப் ரெக்கார்டர்களிலும் பெரும்பாலும் ரஹ்மானும், யுவனுமே குடியிருந்தனர்.

எனக்கு இளையராஜாவின் இசை முதன்முதலில் அறிமுகமானது ‘ஜனனி... ஜனனி’ பாடலின் மூலமாகத்தான். தினமும் பள்ளிவிட்டு வரும் சமயம் மாலை நேரங்களில் என் அம்மா அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அதை பாடியவர் யார் என்றெல்லாம் தெரியாமலேயே நிறைய நேரங்களில் மனதிற்குள்ளேயே அதை நான் முணுமுணுத்திருக்கிறேன்.

இளையராஜா
 
இளையராஜா  

முதன்முதலில் ஒரு நவீன கடவுள் வாழ்த்துப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் வளர்ந்தேன், என்னுடனே ராஜாவின் இசையும் என்னோடு தொடர்ந்து பயணிக்கத் துவங்கியது.

திரைப்பட இசையை தாண்டி அவர் இசையமைத்த ‘திருவாசகம்’ மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக, ‘பூவார் சென்னி மன்னன்’ எல்லாம் வேறலெவல் ரகம். எப்படி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய ‘ஹரிவராசனம்’ பாடல் தினந்தினம் கோயில்களில் ஒலிபரப்பப்படுகிறதோ அதேபோல அவருடைய ‘திருவாசகமும்’ ஒலிபரப்பப்படுகிறது.

 

பலர் ரிப்பீட் மோடில் பார்த்த படங்களின் லிஸ்டில் முதலில் என்றுமே இருப்பது ‘அபூர்வ சகோதரர்கள்’. அதில் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப இசையை அமைத்திருப்பார் இளையராஜா. அதில் வரும் கமலின் ராஜா கதாபாத்திரத்திற்கு, ‘ராஜா கைய வெச்சா’ பாடலுக்குத் துள்ளலான இசையும், ‘வாழவைக்கும் காதலுக்கு ஜே’வில் வாலிபம் ததும்பும் காதலும் எனக் கலந்து கொடுத்திருப்பார். மறுபுறம் அப்புவின் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் ‘புது மாப்பிளைக்கு’ பாடலில் எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கடத்தினரோ அதே அளவிற்கு ‘உன்ன நெனச்சேன்’ பாடலில் சோகத்தையும் கடத்தியிருப்பார். படம் நெடுக அப்புவைத் தொடரும் வயலின் இசை ஒரு மாயவலைதான். அது எப்பேர்பட்ட மனிதர்களையும் மயக்கிவிடும். அதே வயலின் மேஜிக்கை ‘தளபதி’ படத்திலும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலைக் கொண்டு செய்திருப்பார்.

இளையராஜா இசையமைக்கும் படங்களில் அமைந்திருக்கும் இசை வெறும் அப்படத்திற்கான இசையாக மட்டுமில்லாமல் அதில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கான இசையாக அமைந்து வருவதாலேயே அவை என்றும் இளமையாகவே உள்ளது. சில படங்களின், சில காட்சிகளில் அவர் அமைதியாக விட்டுவிடும் மௌனம் கூட அந்த இசைக்கு வலு சேர்ப்பவையாக இருக்கும்.

இளையராஜா
 
இளையராஜா

அதேபோல், ஒரே ட்யூனை வெவ்வேறு விதமாக அந்தந்த கதாபாத்திரங்களுக்கு கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைப்பார். குறிப்பாக, ‘மௌனராகம்’ பி.ஜி.எம். கதையோடு பின்னிப்பிணைந்ததாலேயே அந்த இசையை கேட்கும்போது அக்காட்சியும் மனதினுள் வந்து செல்கிறது.

அதே வித்தையை ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்திலும் கச்சிதமாக நடத்திக் காட்டியிருப்பார். அதில், வருண் - நித்யா இருவருக்குமான காதல் பயணம், பால்யம் தொடங்கி வாலிபம் வரை பயணிக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் அக்காதலின் முதிர்ச்சியை, அந்தக் காதலின் ஆனந்தத்தை, அது ஏற்படுத்தும் வலியை மீட்டர் குறையாமல் வெவ்வேறு விதமாக கடத்தியிருப்பார்.

 

1986 - 2012 இரண்டு படங்களுக்குமிடையில் எத்தனை ஆண்டுகள். ஆனால், இரண்டிலும் அதே மேஜிக்கை அந்தந்த காலத்திற்கேற்றவாறு சற்றும் குறைவில்லாமல் செய்திருந்தார். இன்றும் அப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது அக்கதாபாத்திரங்களின் உணர்வுகளை குறைவில்லாமல் கடத்துவதற்கு அவரின் இசையே பெருந்துணையாக இருக்கிறது. அதையே இத்தலைமுறை இசையமைப்பாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

வளர்ந்து வரும் சமகாலத்து இசைக்கலைஞர்கள் பலர் ராஜாவின் பாடலுக்கு மறுஉருவம் கொடுக்கிறார்கள். அவை காலத்தோடு பொருந்திப்போவதோடு மேலும் அதன் மீது காதல் கொள்ள வைக்கிறது. ‘உங்களுடைய ட்யூன்களே எனது ட்யூனுக்கான இன்ஸ்பிரேஷன்’, என்று யுவன் கூறுகிறார். ‘நாங்கள் எப்போதும் ராஜா சாரின் ட்யூனைதான் காப்பி அடிப்போம். ஆனால் அது தெரியாது!’, என்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இளையராஜா
 
இளையராஜா #VikatanOriginals

‘நாயகன்’ படத்தின் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலை எனக்கு என் தந்தை பாடினார். நாளை, நான் என் குழந்தைக்குப் பாடுவேன். ஒரு கலைஞன் ஒரு படத்திற்கான இசைப்பணியை மட்டும் செய்யாமல் அதில் பல தலைமுறைகளுக்குமான இசையை, பாடத்தைப் புகுத்தியது எப்படி என்று பல முறை பிரமித்திருக்கிறேன். இசையின் உயிர்நாடியை அன்போடு வருடி அதன் வடிவத்தை இவ்வுலகிற்குப் பரிசளித்தார் இந்த இசைராஜா!

இவ்வாறு அவர் உருவாக்கிய ஒவ்வொரு மாஸ்டர் பீஸும் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நிரப்பியுள்ளன. என் மனம் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் எனக்கு புத்துணர்வு ஊட்டியுள்ளன. என் பின்னிரவுகளை இனிமையாக்கியுள்ளன. என்னை காதலிக்க வைத்தது அவரின் இசைதான்!

 

இவற்றை ரசித்த என் மனதிற்கு அவரையும், அவரின் இசையையும் நேரில் அனுபவிக்கும் வாய்ப்பும் ஒருமுறை கிடைத்தது. நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு முறை அவருடைய இசைக்கச்சேரி எங்கள் ஊரில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த அறிவிப்பு வந்த நாள் முதலே, ஊரே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது. நானும் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன். இறுதியில் அந்த நாளும் வந்தது.

பிரமாண்டமான அரங்கம், ஹங்கேரி இசைக்குழுவினர் இளையராஜாவின் இசைக்குறிப்புகளுடன் தயார் நிலையில் இருந்தனர். 15,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள். வானிலிருந்த மேகங்களும் அவரின் இசையைக் கேட்க கூடி வந்திருந்தன. ஆனால், அவை நிகழ்ச்சி முடியும்வரை கூட்டத்தைக் கலைக்கவில்லை. மாலையைக் கடந்துதான் நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவித்தார்கள். நிகழ்ச்சியும் துவங்கியது. ராஜா மேடையில் அவதரித்தார்! அவரை முதல்முறையாக நேரில் பார்த்ததும் மெய்சிலிர்த்துவிட்டேன்.

இளையராஜா
 
இளையராஜா

‘ஜனனி... ஜனனி’ பாடலைதான் முதலில் பாடினார். அப்பாடல் என்னை மீண்டும் என் பள்ளிக்கால மாலை நேரங்களுக்குள் அழைத்துச் சென்றது. ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ துவங்கி ‘தென்றல் வந்து தீண்டும் போது’ வரை எனது விஷ்லிஸ்ட்டில் இருந்த அத்தனையும் அவர் தலைமையில் அதே எனர்ஜியோடு அரங்கேறியது. சிலர் கண் கலங்கினர், கூடி வந்த மேகங்களும் சத்தமின்றி கண்கலங்கின. எல்லோருக்கும் அவர்களின் வாழ்வின் அங்கமாகவே ராஜாவின் இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதை அதில் உணர முடிந்தது. நள்ளிரவைத் தாண்டியும் நீண்ட அந்நிகழ்ச்சி இன்றும் என் நினைவுகளில் நீண்டுகொண்டேதான் இருக்கிறது.

ராஜா, அவரின்றி இங்கு காதல் மலர்வதில்லை, அந்தக் காதலின் பிரிவிலும் அவருடைய வயலினே இசைக்கிறது. அவரின் பாடல்களின்றி இங்கு திருவிழாக்கள் இல்லை. அவரின் இசையின்றி இங்கு புது வருடமும் பிறப்பதில்லை என்பதே நிதர்சனம்.

பல தலைமுறைகளுக்கான இசையை படைக்கும் இளையராஜா ஒரு இன்ஃபினிட்டிக்கான இசைக்கலைஞன்!

இளையராஜா: காதலைத் தோற்றுவிப்பதும் இவரின் இசைதான், காதல் தோல்விக்கும் இவரின் இசைதான்! | Ilaiyaraaja and his career that transcends generations (vikatan.com)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.