Jump to content

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மை விசுக்கோத்து..👌

b70e49_2b2a0e89471b4ec0944dee650043a68e~

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

எனக்கு பிடிச்ச குளுக்கரசா, தும்பு முட்டாய், நைஸ் என்று எல்லாவற்றையும் ஏனையவர்கள் சொல்லி விட்டீர்கள் - ஒன்றைத் தவிர என்று நினைக்கின்றேன். 

அது ஸ்ரார் ரொபி. 

குருணாகலில் இருக்கும் போது வீட்டின் காணியின் முடிவில் இருக்கும் ஒரு சிங்கள மொழி பேசும் பர்கர் இன பெண்மணியின் கடை இருந்தது. மாலு பாண் இல் இருந்து எல்லா வகையான சிற்றுண்டிகள். மற்றும் டொபிகள் விற்பார். அவர் கடையில் அனேகமாக ஒவ்வொரு நாளும் வாங்கி சாப்பிட்டு வள்ர்ந்த உடம்பு இது.

காணொளி சிங்களத்தில் உள்ளது. அதன் இறுதியில் ஸ்ரார் டொபியை காட்டுவார்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

இதே போன்று முந்திரிப் பருப்பு போட்ட கண்டோஸ் சொக்கலேட் இனையும் மறக்க ஏலாது. இங்கு வந்த பின் லின்ட் போன்ற சொக்கலேட் கள் வாங்கி சாப்பிட்டாலும் இந்த சொக்கலேட் இன் சுவையை விட அவை சுவை குறைந்தவையாகவே தெரியும். ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போது மறக்காமல் வாங்கிச் சாப்பிடுவது இது.

1559102092CashewM.png

Link to comment
Share on other sites

80 களின் முடிவிலும் 90 களின் ஆரம்பத்திலும் நான் க.பொ.த சாதாரண பரீட்சை செய்த காலத்திலும் ஊரில் திடீர் என்று பிரபலமான ஜூஸ் பக்கற்றுகளையும் மறக்க முடியாது. நல்ல வெயில் காலத்தில் பாண்டியந்தாழ்வு பேக்கரியிலும் நவரட்ணம் கடையிலும் அன்னாசி ஜூஸ் இனை சின்ன பைக்கற்றுக்குள் ஊற்றி Freeze  பண்ணி விற்பார்கள். அதை வாங்கி சைக்கிளை மிதிச்சுக் கொண்டு வரும் போது ஒரு கையில் இது எப்பவும் இருக்கும்.

இங்கு இதை Popsicle bag என்ற பெயரில் விற்கின்றார்கள். வாங்கி குளிர்சாதனப் பெட்டியின் Freezer இல் வைத்து பிள்ளைகள் குடிப்பர். இங்கு அனேகமானவை செயற்கை சுவையூட்டிகள் (Artificial flavor) போட்டு வருவதால் கூடியவரைக்கும் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பது இல்லை.

printed-popsicle-bag-500x500.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Down Memory Lane: Bulto, Hoonu Beti And Other Sweets From Bygone Days

எள்ளுருண்டை, கச்சான் அல்வா, மற்றும் இந்த சின்ன பிஸ்கட் மேலே பூப்போல் இனிப்பு இருக்கும் இவையெல்லாம் மறக்க முடியுமா........!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு பினாட்டும் பனங்காய் பணியாரமும் தான் மறக்க ஏலாத சிலோன் இனிப்பு...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளுக்குப் பின் பெரிய பெட்டியில் பேக்கறி தயாரிப்புகளை கொன்டு திரிந்து வற்ப்பார்கள்.அதில் சீனி பனிஸ் எனக்கு ரொம்ப பிடித்ததில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் திருவிழாக்காலங்களில்,,திருவெம்பாவை போன்ற  திருவிழாக்களில் நீண்ட கண்ணாடியால் ஆனா மேசை போன்று ஒன்றினுள் பலவித மான கலர்களில் மிக்ச்சர் போன்று இருக்கும் ஆனால் இனிப்பாக இருக்கும் ,,பல நிறங்களில் சிறு சிறு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்,,அத்துடன் தொதலும் இருக்கும் ,இரண்டு ரூபா கொடுத்தா எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தருவார்
ஆனால் மிக்ச்சர் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அது ஸ்ரார் ரொபி. 

 

சிவப்பு உறையில் சுற்றி வருவது  பால் சுவையிலும் வெள்ளை உறையில் சுற்றி வருவது  தோடம்பழ சுவையிலும் இருக்கும். ஆகா  நினைத்தாலே நாவூறுகிறது!

அத்துடன் மில்க் டொபீ, புளுட்டோ போல tissue பேப்பரில் சுற்றி வரும் எள்ளுப்பா toffee, இப்படி பல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

கோவில் திருவிழாக்காலங்களில்,,திருவெம்பாவை போன்ற  திருவிழாக்களில் நீண்ட கண்ணாடியால் ஆனா மேசை போன்று ஒன்றினுள் பலவித மான கலர்களில் மிக்ச்சர் போன்று இருக்கும் ஆனால் இனிப்பாக இருக்கும் ,,பல நிறங்களில் சிறு சிறு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்,,அத்துடன் தொதலும் இருக்கும் ,இரண்டு ரூபா கொடுத்தா எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தருவார்
ஆனால் மிக்ச்சர் இல்லை

அது பூந்தி

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

சைக்கிளுக்குப் பின் பெரிய பெட்டியில் பேக்கறி தயாரிப்புகளை கொன்டு திரிந்து வற்ப்பார்கள்.அதில் சீனி பனிஸ் எனக்கு ரொம்ப பிடித்ததில் ஒன்று.

இங்கும் மாதத்தில் ஒரு தரமாவது சீனி பணிஸ் அல்லது சங்கிலி பணிஸ் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஸ்கார்புரோவில் குவாலிட்டி பேக்கரி என்று ஒரு பிரபலமான தமிழ் ஆட்களின் பேக்கரி இருக்கு. அங்கு ஊரில் சாப்பிட்ட எல்லவிதமான பணிஸ்களும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

புளூட்டோ ரொபியை .... நான் வாங்கி சாப்பிட்ட காலங்களில், பத்து சதம்.
அதன் லேபிளில்... "குணசேன" என்று சிங்களப்  பெயர்,  இருந்த நினைவு. 

நீங்கள் கூறுவது அளவில் மிகவும் சிறியது. 50 சதத்துக்கு வாங்குவது அளவில் பெரிது.

புளூட்டோ தவிர..

கச்சான் அல்வா, கோக்கனட் ரொபி, மாஸ்மலோ, ஜுஜூபி, கறுவா, பினாட்டு, பெப்பமின்ட், சுவிங்கம், மோல்டீஸ் இப்படி பல... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dodol - Wikiwand

புளூட்டோ ரொபி

 

Milady Toffees Confectionery candy Daintee Sweets Super Choco mint Soft  Centers | eBay

மைலேடி ரொபி. 

Daintee Limited - Leading Confectionery Company in Sri Lanka, Top Ranked  Food Company in Sri Lanka, Number one Sweets & Toffee Company in Sri Lanka 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

எல்லாரும் எனக்குத் தெரிஞ்ச எல்லா இனிப்புக்களையும் எழுதிப் போட்டினம்!

கடைசியா ஒண்டை மட்டும் எனக்காக விட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது!

அது தான் பாம்பு இனிப்பு!

யாருக்காவது நினைவிருக்குதோ? 

ஒரு உலக்கையில ஒட்டியிருக்கும்! அதை இழுத்து...இழுத்துத் ( விலைக்கேற்ப) தருவார்கள்!
அனேகமாகத் திருவிழாக்காலங்களில், எமது ஊருக்கு இதுவும் வரும்!

இல்லை அதையும் ஏற்கனவே சுவியண்ணா இணைச்சு போட்டார், பாவம் புங்கையண்ணா நீங்கள்😛 .  

Can you explain your childhood memory of Javvu Mittai/Bombay Mittai? - Quora

எனக்கு சுவியண்ணா இந்த இனிப்பை இணத்தபோது சிரிப்பு வந்ததுக்கு காரணம்  விபரம் அறியா அந்தநாட்களில் இந்த இனிப்பின் பள பளப்பையும் நிறத்தையும் பார்த்து ஆசைப்படாத சிறுவர்களே இருக்க முடியாது, இதை விற்கும் பெரியவர் கையில் ஒட்டாமலிருக்க எச்சியை தொட்டு நீவி நீவி இழுத்து பிச்சு தருவார், இப்போ இப்படி யாரும் செய்தால் சுகாதாரதுறைக்கு அறிவிப்போம், அல்லது ஓரமா போய் நிண்டு வாந்தி எடுப்போம்.

வருமான ஏற்ற தாழ்வைகொண்ட எமது இன மாணவர்கள் மத்தியில் என்போன்ற ஏழை மாணவர்களுக்கு அடிக்கடி வாங்கி சுவைக்ககூடியதாகவிருந்தது உடையார் இணைச்ச பல்லி முட்டாஸ்தான், சுவைத்து கொண்டு போகும்போது முடிவில் சீரகம் இருக்கும்.

இங்கே விடுபட்டு இருந்த ஒன்று மில்க் ரொபி என்று நினைக்கிறேன் ,பள்ளிநாட்களில் இதுவும் பிரபலம்.

download.jpg

அதைவிட பாடசாலை வாயிலில் திருவிழாக்களில்  சைக்கிளில் பூட்டிய பெட்டியிலும் /வானிலும் வைத்து ஐஸ்பழம், ஐஸ் சினோ, ஐஸ் ஷொக்  விற்பார்கள் .

வெயிலுக்கு ஒரு ஐஸ்பழம் அதுவும் அன்னாசி கலந்த ஒன்று குடிச்சால் கண்களிலிருந்து உச்சந்தலைவரை குளிர்ந்துகொண்டு போவது அப்படியே தெரியும். ஐஸ்சினோ ஐஸ் ஷொக் கொஞ்சம் விலைகூடியதா இருந்தாலும் சுவை சொல்லி வேலையே இல்லை. ஆனா ஒண்டு ஐஸ்பழத்தை தவிர மற்ற இரண்டும்  கொஞ்சம் தட்டுப்பட்டாலே மொத்தமா கழண்டு கீழே விழுந்துடும்.

கால ஓட்டத்தில் வெளிநாடு என்று வந்து ஆயிரம் வகையான  சுவையான தரமான விலையுயர்ந்த ஐஸ் வகைகளை சுவைத்தாலும் அந்த பள்ளிகூட வாசலில் வாங்கி சுவைத்த ஐஸ்பழத்தின் சுவையை  நினைவை எந்த காலமும் இவைகளால் நெருங்ககூட முடியாது.

எனக்கென்னவோ இலங்கையில் உள்ள ஐஸ்பழம் ஐஸ்கிறீம் வகைகள், கேக், கண்டோஸ், நெக்ரோ/Portello  போன்றவைதான் இங்குள்ளவற்றவையைவிட சுவை வாய்ந்தவை என்றொரு தோற்றப்பாடு எப்போதும் இருக்கும், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு  பள்ளிக்கூட  வாசலில் கடலைக் காரி விற்கும்  நாவல்பழம் ,இலந்தைப்பழம்  அருமையாக பாலைப் பழம்.என்பனவற்றியும் சேர்க்கலாமா?  நாவல் பழம் சாப்பிட்டு  வாயெல்லாம் நாவலாகி  ..ஏச்சு வாங்கியது .. சாப்பிடட பின் நன்றாக நாக்கை கழுவி தப்பித்தவர்களும் உண்டு.  வகுப்பு நேரத்தில்  கள்ள மாங்காய், புளி யங்காய்  புழுக் கொடியல், (விளாம்பழம் அந்த பள்ளிக்கே மணக்கும் ) போன்றவை சாப்பிடட நாட்களும் எனோ ஞாபகத்தில் வந்து போனது .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எனக்கென்னவோ இலங்கையில் உள்ள ஐஸ்பழம் ஐஸ்கிறீம் வகைகள், கேக், கண்டோஸ், நெக்ரோ/Portello  போன்றவைதான் இங்குள்ளவற்றவையைவிட சுவை வாய்ந்தவை என்றொரு தோற்றப்பாடு எப்போதும் இருக்கும், 

எனக்கு தெரிந்தவர் ஒருவர் றோஸ் நிற சோடா ஒன்று தான் எப்போதும் கடையில் வாங்குவார். அவர் கோலா வாங்கி நான் கண்டதில்லை. ஒரு நாள் கேட்டேன் உங்களுக்கு இது அவ்வளவு விருப்பமா அவர் சொன்னார் நாங்கள் இலங்கையில் நெக்டோ என்று ஒரு சோடா விரும்பி குடிப்போம் இது கொஞ்சம் நெக்டோ மாதிரி சுவை ஆனால் அது இன்னும் சுவையானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுவா இனிப்பு எண்டொரு சாமான் யாழ்ப்பாணத்தில முந்தி இருந்தது. சின்ன சின்ன வட்டமா கம்பளிப் பூச்சி சைசில கடும் சிவப்பு நிறத்தில இருக்கும். ஒரு உறைப்புத் தன்மை இருக்கும். 1988 வாக்கில் அம்மா இருக்கும் போது எனக்கும் தங்கச்சிக்கும் வாங்கித் தருவா. அதுக்குப் பிறகு நான் அதை காணக் கிடைக்கேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கறுவா இனிப்பு எண்டொரு சாமான் யாழ்ப்பாணத்தில முந்தி இருந்தது. சின்ன சின்ன வட்டமா கம்பளிப் பூச்சி சைசில கடும் சிவப்பு நிறத்தில இருக்கும். ஒரு உறைப்புத் தன்மை இருக்கும். 1988 வாக்கில் அம்மா இருக்கும் போது எனக்கும் தங்கச்சிக்கும் வாங்கித் தருவா. அதுக்குப் பிறகு நான் அதை காணக் கிடைக்கேல்லை.

கறுவா இனிப்பு எனக்கும் நினைவு இருக்கு. ஆனால் சுவை மறந்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

இத்தோடு  பள்ளிக்கூட  வாசலில் கடலைக் காரி விற்கும்  நாவல்பழம் ,இலந்தைப்பழம்  அருமையாக பாலைப் பழம்.என்பனவற்றியும் சேர்க்கலாமா?  நாவல் பழம் சாப்பிட்டு  வாயெல்லாம் நாவலாகி  ..ஏச்சு வாங்கியது .. சாப்பிடட பின் நன்றாக நாக்கை கழுவி தப்பித்தவர்களும் உண்டு.  வகுப்பு நேரத்தில்  கள்ள மாங்காய், புளி யங்காய்  புழுக் கொடியல், (விளாம்பழம் அந்த பள்ளிக்கே மணக்கும் ) போன்றவை சாப்பிடட நாட்களும் எனோ ஞாபகத்தில் வந்து போனது .
 

இனிப்பு இல்லாவிட்டால் என்ன தின்பண்டம்தானே சேர்க்கலாம். 

எனக்கு பிடித்தது உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லி. இப்பவும் இந்தியன் கடையில் வாங்கி வந்து சாடியில் ஊறவைத்து சாப்பிடுவேன். 

இந்தியன் ஆமி வந்தபின் நிஜாம் பாக்கு, ஏ ஆர் ஆர் பாக்கு எனும் இனிப்பு பாக்குகளும் வந்தன. வீட்டில் வாங்கி தர மாட்டார்கள். ஆனாலும் அண்ணமாரிடம் கெஞ்சினால் ரெண்டு மூண்டு துகள்கள் தருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாதவூரான் said:

அது பூந்தி

பூந்தி லட்டு செய்ய பாவிப்பார்கள் ,ஆனால் இது மிக்ஸ்சார் மாதிரி கொஞ்சம் கடினமாக கடிபடும்
பல வர்ணங்களில் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இனிப்பு இல்லாவிட்டால் என்ன தின்பண்டம்தானே சேர்க்கலாம். 

எனக்கு பிடித்தது உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லி. இப்பவும் இந்தியன் கடையில் வாங்கி வந்து சாடியில் ஊறவைத்து சாப்பிடுவேன். 

இந்தியன் ஆமி வந்தபின் நிஜாம் பாக்கு, ஏ ஆர் ஆர் பாக்கு எனும் இனிப்பு பாக்குகளும் வந்தன. வீட்டில் வாங்கி தர மாட்டார்கள். ஆனாலும் அண்ணமாரிடம் கெஞ்சினால் ரெண்டு மூண்டு துகள்கள் தருவார்கள்.

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அன்புத்தம்பி said:

பூந்தி லட்டு செய்ய பாவிப்பார்கள் ,ஆனால் இது மிக்ஸ்சார் மாதிரி கொஞ்சம் கடினமாக கடிபடும்
பல வர்ணங்களில் இருக்கும்

சிவப்பு கலரில் இருக்குமா? பூந்திக்கும், தேன் குழலுக்கும் இடைப்பட்ட பதத்தில்? சாப்பிட்டால் அரிசி மா டேஸ்ட் அடிக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

தோலகட்டி நெல்லி இரசம். இதை சொன்னதும் ஒரு பகிடி நியாபகம் வருகுது.

எனக்கு சின்னனில் ஒரு தொலைகாட்டி வாங்கி விடவேண்டும் என்று ஒரே அவா. ஆனால் விலை அதிகம், ஆகவே திருவிழா, பேர்த்டே என்று வீட்டில் தள்ளி போட்டுகொண்டே வந்தார்கள். 

ஒருநாள் கடையடிக்கு போனால் கரும்பலகையில் சோக்கால் எழுதி வைத்திருந்தனர்

“தொலகட்டி 2 ரூபா, இன்றுமட்டுமே”.

வீட்டை ஓடிப்போய் கெஞ்சினால், நம்பாமல் தாங்களே வந்து விசாரித்தார்கள் -கடைக்காரர் எழுத்துப் பிழை விட்டிருந்தாராம்- 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.