Jump to content

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

இது அமெரிக்காவின் நன்கொடை.

கீழே பிஸ்கெட் வரும் பாகின் படம் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிவப்பு கலரில் இருக்குமா? பூந்திக்கும், தேன் குழலுக்கும் இடைப்பட்ட பதத்தில்? சாப்பிட்டால் அரிசி மா டேஸ்ட் அடிக்கும்?

இல்லை இது கடலை மாவில் செய்து  மிக்சருடன் சேர்ப்பார்கள் பூந்தி  மாதிரித்தான்  மா மஞ்சள் என்றால் இது சிவப்பு மஞ்சள்,லைட் பச்சை,லைட் றோஸ் இப்படி தனித்தனியாக ஒவ்வொரு கலரிலும் ஒரு நீண்ட பொலித்தின் பையில் போட்டு மெச்சி ஒன்றில் வடிவாக அடுக்கி இருக்கும் ரெண்டு ருபாய் குடுத்தாள் ஒரு கடலை போடா செய்வார்களே சுருள்.  சுருளில் எல்லா கலர் பூந்தியிலும் கொஞ்சம் போட்டு தருவார்கள்..சாப்பிடும் பொது மிக்ஸ்சார் எப்படி கடிபடுமோ
அப்படியே இருக்கும் ஆனால் இனிப்பு ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

விசுக்கோத்து என்டத்தான் ஞாபகம் வருகுது பள்ளிக் கூடத்தில் திரிபோசா மா என்று தருவார்கள்.தேங்காய்ப் பூவும் சீனியும் போட்டு குளைத்து பிடித்து சாப்பிடலாம்.தோசையும் சுடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சுவைப்பிரியன் said:

விசுக்கோத்து என்டத்தான் ஞாபகம் வருகுது பள்ளிக் கூடத்தில் திரிபோசா மா என்று தருவார்கள்.தேங்காய்ப் பூவும் சீனியும் போட்டு குளைத்து பிடித்து சாப்பிடலாம்.தோசையும் சுடலாம்.

எங்கள் காலத்தில் பிஸ்கட்தான். 88-90 சமைத்த உணவு தந்தார்கள். பின்னர் உணவு முத்திரை. பிறகு அதுவும் இல்லை.

ஆனால் திரிபோஷா நல்ல சத்தான மா என்று சொல்லி சங்ககடையில் வாங்கி தேங்காய்பூ சீனி போட்டு குழைத்து தருவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது அமெரிக்காவின் நன்கொடை.

இப்படி மொட்டையாக சொல்லப்படாது.
அமெரிக்க மக்களின் நன்கொடை என வரவேண்டும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

70+ Best Friend Captions for Instagram - IG Captions

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

இப்படி மொட்டையாக சொல்லப்படாது.
அமெரிக்க மக்களின் நன்கொடை என வரவேண்டும்.😎

😎 இது அமெரிக்க மக்களின் நன்கொடை😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 14:23, நிழலி said:

எனக்கு பிடிச்ச குளுக்கரசா, தும்பு முட்டாய், நைஸ் என்று எல்லாவற்றையும் ஏனையவர்கள் சொல்லி விட்டீர்கள் - ஒன்றைத் தவிர என்று நினைக்கின்றேன். 

அது ஸ்ரார் ரொபி. 

குருணாகலில் இருக்கும் போது வீட்டின் காணியின் முடிவில் இருக்கும் ஒரு சிங்கள மொழி பேசும் பர்கர் இன பெண்மணியின் கடை இருந்தது. மாலு பாண் இல் இருந்து எல்லா வகையான சிற்றுண்டிகள். மற்றும் டொபிகள் விற்பார். அவர் கடையில் அனேகமாக ஒவ்வொரு நாளும் வாங்கி சாப்பிட்டு வள்ர்ந்த உடம்பு இது.

காணொளி சிங்களத்தில் உள்ளது. அதன் இறுதியில் ஸ்ரார் டொபியை காட்டுவார்கள்.

 

 

 

GLUCORASA (70G X 24 PKTS) | Lassana.com Online ShopJUJUBEES (100g) - Goldline Breadz

இலங்கையில் விற்கும்... "குளுக்கரசா" மிகவும் சுவையானது.
அதனை கடித்து தின்றாலும், உமிந்து மெல்லமாக சுவைத்துத் தின்றாலும்...
ஒவ்வொரு "எஃபெக்ட்"  கொடுக்கும். வாசனையும் அந்த மாதிரி இருக்கும். 😋

இங்கும் அதே மாதிரி... இனிப்புகள் விற்றாலும், 
இலங்கையில்  விற்கும், சுவைக்கு... கிட்ட வராது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெமன் பவ் பிஸ்கட். இப்போ பழைய சுவை இல்லை.

டிப்பி டிப் - இதுவும் 80 களின் கடைசியில் சந்தைக்கு வந்தது. இப்போ அந்த சுவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

GLUCORASA (70G X 24 PKTS) | Lassana.com Online ShopJUJUBEES (100g) - Goldline Breadz

இலங்கையில் விற்கும்... "குளுக்கரசா" மிகவும் சுவையானது.
அதனை கடித்து தின்றாலும், உமிந்து மெல்லமாக சுவைத்துத் தின்றாலும்...
ஒவ்வொரு "எஃபெக்ட்"  கொடுக்கும். வாசனையும் அந்த மாதிரி இருக்கும். 😋

இங்கும் அதே மாதிரி... இனிப்புகள் விற்றாலும், 
இலங்கையில்  விற்கும், சுவைக்கு... கிட்ட வராது. :)

படங்களும் போட்டு ஆசையை ஏற்படுத்தியுள்ளீர்கள் கொரோனா பிரச்சனை முடிந்து இலங்கை போகும் போது கட்டாயம் சாப்பிட வேண்டும் 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒன்று வர இல்லைப் போல் இருக்கிறது அல்லது பெயர் மாறி வந்துட்டோ தெரியாது..மோல்ரீஸ் என்று ஒரு பிறவுன் மற்றும் மஞ்சள் கலந்த பேப்பரில் வாற சொக்கிளேட் தான்..அதை தேட இந்த குகிள் வேறை ஏதோ படம் எல்லாம் தருகிறதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சான் அல்வா  தான் நாங்கள் விரும்பி வாங்குவது.

அத்துடன்  தள்ளுவண்டியில் பகோடா, மிக்ஸர், மரவள்ளிப் பொரியல் விற்பவர்கள் ஒருவகையான   மாவில் செய்த இனிப்பான சிறு மணித் துளிகள் போன்ற ஒரு வகை மிக்ஸரை விற்பார்கள். பல விதமான கலரில் இருக்கும். சுவையாகவும் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வாத்தியார் said:

 

அத்துடன்  தள்ளுவண்டியில் பகோடா, மிக்ஸர், மரவள்ளிப் பொரியல் விற்பவர்கள் ஒருவகையான   மாவில் செய்த இனிப்பான சிறு மணித் துளிகள் போன்ற ஒரு வகை மிக்ஸரை விற்பார்கள். பல விதமான கலரில் இருக்கும். சுவையாகவும் இருக்கும்

 

9 hours ago, அன்புத்தம்பி said:

இல்லை இது கடலை மாவில் செய்து  மிக்சருடன் சேர்ப்பார்கள் பூந்தி  மாதிரித்தான்  மா மஞ்சள் என்றால் இது சிவப்பு மஞ்சள்,லைட் பச்சை,லைட் றோஸ் இப்படி தனித்தனியாக ஒவ்வொரு கலரிலும் ஒரு நீண்ட பொலித்தின் பையில் போட்டு மெச்சி ஒன்றில் வடிவாக அடுக்கி இருக்கும் ரெண்டு ருபாய் குடுத்தாள் ஒரு கடலை போடா செய்வார்களே சுருள்.  சுருளில் எல்லா கலர் பூந்தியிலும் கொஞ்சம் போட்டு தருவார்கள்..சாப்பிடும் பொது மிக்ஸ்சார் எப்படி கடிபடுமோ
அப்படியே இருக்கும் ஆனால் இனிப்பு ....

அன்புத்தம்பி,

நீங்கள் சொன்ன பண்டத்தை வாத்தியார் அண்ணாவும் சொல்றார். எனக்கு நியாபகம் வருதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

படங்களும் போட்டு ஆசையை ஏற்படுத்தியுள்ளீர்கள் கொரோனா பிரச்சனை முடிந்து இலங்கை போகும் போது கட்டாயம் சாப்பிட வேண்டும் 😋

இந்த குளுக்கோரச்சை எங்கட அப்பர் 'நாக்கு' என்டு சொல்லுவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்த குளுக்கோரச்சை எங்கட அப்பர் 'நாக்கு' என்டு சொல்லுவர். 

அவர் வைத்த செல்லமான பெயர் போலும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளும் சாடையான இனிப்பு இனிக்கும். ஆதலால் எனக்கு பிடித்த இனிப்பு பானம். கருப்பணியும் இனிக்கும் தான். ஆனால் கள்ளு உற்சாக பானம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இந்த குளுக்கோரச்சை எங்கட அப்பர் 'நாக்கு' என்டு சொல்லுவர். 

சரியாத்தான் சொல்லி இருக்கிறார். நானும் இதை கடித்து உண்ணும் போது நாக்கை கடிப்பதை போல இருப்பதாக யோசிப்பதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அவர் வைத்த செல்லமான பெயர் போலும் 😀

அதோட மெதுவான தன்மை நாக்கு போன்ற உணர்வையே தரும். 

 

1 minute ago, goshan_che said:

சரியாத்தான் சொல்லி இருக்கிறார். நானும் இதை கடித்து தின்னும் போது நாக்கை கடிப்பதை போல இருப்பதாக யோசிப்பதுண்டு.

 

ஓம் அண்ணை உண்மைதான் ... அந்த உணர்வு நாக்கு போலத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

எங்கள் காலத்தில் பிஸ்கட்தான். 88-90 சமைத்த உணவு தந்தார்கள். பின்னர் உணவு முத்திரை. பிறகு அதுவும் இல்லை.

ஆனால் திரிபோஷா நல்ல சத்தான மா என்று சொல்லி சங்ககடையில் வாங்கி தேங்காய்பூ சீனி போட்டு குழைத்து தருவதுண்டு.

88/87 களில் பிரேமதாசாவின் காலத்தில் பணிசும், வெனிலா சுவை பாலும் தந்தார்கள்.  
படு பணிஸ் வா அந்த மாதிரி இருக்கும்.
 

22 hours ago, suvy said:

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

இது எந்த  நெல்லி? இரண்டு வகை உண்டல்லவா? 

1. காட்டு நெல்லி பாடசலைக்கு அருகில் விற்பார்கள் மிளகாய் உப்புடன் சாப்பிட்டல் அந்த மாதிரி
2. கச‌ப்பு தன்மையுள்ளது, சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும்.    
 

பாடசாலை மெலிபனுக்கு முன்னால் என்பதால் மெலிபன் ஐஸ்தான் குடிப்பது அந்த மாதிரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

88/87 களில் பிரேமதாசாவின் காலத்தில் பணிசும், வெனிலா சுவை பாலும் தந்தார்கள்.  
படு பணிஸ் வா அந்த மாதிரி இருக்கும்.
 

இது எந்த  நெல்லி? இரண்டு வகை உண்டல்லவா? 

1. காட்டு நெல்லி பாடசலைக்கு அருகில் விற்பார்கள் மிளகாய் உப்புடன் சாப்பிட்டல் அந்த மாதிரி
2. கச‌ப்பு தன்மையுள்ளது, சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும்.    
 

பாடசாலை மெலிபனுக்கு முன்னால் என்பதால் மெலிபன் ஐஸ்தான் குடிப்பது அந்த மாதிரி 

யாழ்பாணத்தில் பாலும் கொண்டை கடலை,  கெளப்பி, கடலை வடை என்று தந்தார்கள். வாரம் ஒருநாள் மாலுபாண். பள்ளிக்கு பள்ளி மாறுபாடும் உண்டு.

கொழும்பில் பாலும் பண்ணும் என்றே கேள்விபட்டேன்.

உப்பில் ஊற வைப்பது, கசப்பான நெல்லி. பெரிய உருண்டையாக இருக்கும். தண்ணி குடித்தால் இனிக்கும்.

மற்றையதை ஊரில் அரை நெல்லி என அழைப்பார்கள்.

நெல்லி கிரஸ் - அரை நெல்லியின் சுவையில் இருக்கும் ஆனால் சீனிதான் அதிகம். Flavoring மட்டும் நெல்லி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

88/87 களில் பிரேமதாசாவின் காலத்தில் பணிசும், வெனிலா சுவை பாலும் தந்தார்கள்.  
படு பணிஸ் வா அந்த மாதிரி இருக்கும்.
 

இது எந்த  நெல்லி? இரண்டு வகை உண்டல்லவா? 

1. காட்டு நெல்லி பாடசலைக்கு அருகில் விற்பார்கள் மிளகாய் உப்புடன் சாப்பிட்டல் அந்த மாதிரி
2. கச‌ப்பு தன்மையுள்ளது, சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும்.    
 

பாடசாலை மெலிபனுக்கு முன்னால் என்பதால் மெலிபன் ஐஸ்தான் குடிப்பது அந்த மாதிரி 

நீங்கள் முதலாவதாக கூறியது அருநெல்லி என்று சொல்லுவோம்.மொழி மொழியாக இருக்கும்.....!

இரண்டாவது கசப்புத் தன்மையுள்ள நெல்லியைத்தான் நான் சொன்னது....சப்பிப்போட்டு தண்ணி குடித்தால் இனிக்கும்......!   👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில், வீதி ஓரத்தில், மஞ்சள் போட்ட மரவள்ளி பொரித்து, உப்பும், மிளகாய்த்தூளும் போட்டு தருவார்கள்.

அவித்த வெருளு அச்சாறு, அம்பிரலம்காய் + மாங்காய் + அன்னாசி அச்சாறு சொல்லி வேலை இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

கொழும்பில், வீதி ஓரத்தில், மஞ்சள் போட்ட மரவள்ளி பொரித்து, உப்பும், மிளகாய்த்தூளும் போட்டு தருவார்கள்.

அவித்த வெருளு அச்சாறு, அம்பிரலம்காய் + மாங்காய் + அன்னாசி அச்சாறு சொல்லி வேலை இல்லை. 

சிங்கள பகுதி தின்பண்டங்களுக்கு என்று ஒரு தனித்திரியே திறக்கலாம்.

உப்பு மிளாகாய்தூள் போட்ட அன்னாசி. இஸ்ஸு (இறால்) வடே, மாசி வடே.

அப்புறம் ஹம்பாந்தோட்ட பக்கம் கித்துள் பாணியும் தயிரும். 

நினைத்தாலே இனிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் பாலும் கொண்டை கடலை,  கெளப்பி, கடலை வடை என்று தந்தார்கள். வாரம் ஒருநாள் மாலுபாண். பள்ளிக்கு பள்ளி மாறுபாடும் உண்டு.

கொழும்பில் பாலும் பண்ணும் என்றே கேள்விபட்டேன்.

உப்பில் ஊற வைப்பது, கசப்பான நெல்லி. பெரிய உருண்டையாக இருக்கும். தண்ணி குடித்தால் இனிக்கும்.

மற்றையதை ஊரில் அரை நெல்லி என அழைப்பார்கள்.

நெல்லி கிரஸ் - அரை நெல்லியின் சுவையில் இருக்கும் ஆனால் சீனிதான் அதிகம். Flavoring மட்டும் நெல்லி.

 

 

முழு நெல்லி

 

இந்த நெல்லிக்காய்தான் நீங்கள் சொன்ன மாதிரி ,சாப்பிட்டு விட்டு தண்ணி குடுத்தா இனிக்கும் ,இதை முழு நெல்லி என்பார்கள்,,மாற்றத்தை அரை நெல்லி என்பது போன்ற ஞாபகம்

 

20200492.jpg

 

 

 

அரை நெல்லி

Arai-nelli.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

Fruit & Flowering - 10 Sherbet Tree - Dialium schlechteri Seeds -  Indigenous Edible Fruit was sold for R19.50 on 4 Feb at 07:33 by Seeds and  All in Port Elizabeth (ID:216937699) 

Luchazes Check List · iNaturalist

Dialiums (Genus Dialium) · iNaturalist.ca

பட்டுப் புளி என்று... குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே விற்கப்படும்,
இனிப்பும், புளிப்பும்... சேர்ந்த சுவையுடைய  இந்தப்  பழத்தை சாப்பிட்டு உள்ளீர்களா.

இது காய்க்கும் மரத்தை... ஊரில் உள்ளவரை நான் காணவில்லை.
சிங்களப் பகுதியில், உள்ள மரம் என்று நினைக்கின்றேன்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த‌ போட்டிக்கு காண‌ க‌ட‌சி நாள் எப்ப‌ முடியுது க‌ந்த‌ப்பு அண்ணா....................... இன்னும் ச‌ரியா 40 நாள் இருக்கு..............வாக்கு என்னும் ஒரு நாளுக்கு முத‌லா......................................
    • மாலைதீவிற்கு நாலு குண்டுப் பார்சல் ரெ,..டிய்,..... 😁
    • கிளஸ்ரர் குண்டுகளை கொடுக்கும் போது பகிரங்கப்படுத்தியவர்கள் இதனை மட்டும் ஏன் இரகசியம் பேண வேண்டும்?   F16  எப்போ யுக்ரேனுக்கு  வருகின்றது?
    • நத்தனியாகுவுக்கு  மேற்படி போராட்டம் பிடிக்கவில்லை என்பதில் இருந்து தெரிகிறது அமெரிக்க அரசுக்கான பாரிய அழுத்தம் தன்னை  வெகுவாக பாதிக்கும் என.
    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.