Jump to content

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மை விசுக்கோத்து..👌

b70e49_2b2a0e89471b4ec0944dee650043a68e~

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

எனக்கு பிடிச்ச குளுக்கரசா, தும்பு முட்டாய், நைஸ் என்று எல்லாவற்றையும் ஏனையவர்கள் சொல்லி விட்டீர்கள் - ஒன்றைத் தவிர என்று நினைக்கின்றேன். 

அது ஸ்ரார் ரொபி. 

குருணாகலில் இருக்கும் போது வீட்டின் காணியின் முடிவில் இருக்கும் ஒரு சிங்கள மொழி பேசும் பர்கர் இன பெண்மணியின் கடை இருந்தது. மாலு பாண் இல் இருந்து எல்லா வகையான சிற்றுண்டிகள். மற்றும் டொபிகள் விற்பார். அவர் கடையில் அனேகமாக ஒவ்வொரு நாளும் வாங்கி சாப்பிட்டு வள்ர்ந்த உடம்பு இது.

காணொளி சிங்களத்தில் உள்ளது. அதன் இறுதியில் ஸ்ரார் டொபியை காட்டுவார்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

இதே போன்று முந்திரிப் பருப்பு போட்ட கண்டோஸ் சொக்கலேட் இனையும் மறக்க ஏலாது. இங்கு வந்த பின் லின்ட் போன்ற சொக்கலேட் கள் வாங்கி சாப்பிட்டாலும் இந்த சொக்கலேட் இன் சுவையை விட அவை சுவை குறைந்தவையாகவே தெரியும். ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போது மறக்காமல் வாங்கிச் சாப்பிடுவது இது.

1559102092CashewM.png

Link to comment
Share on other sites

80 களின் முடிவிலும் 90 களின் ஆரம்பத்திலும் நான் க.பொ.த சாதாரண பரீட்சை செய்த காலத்திலும் ஊரில் திடீர் என்று பிரபலமான ஜூஸ் பக்கற்றுகளையும் மறக்க முடியாது. நல்ல வெயில் காலத்தில் பாண்டியந்தாழ்வு பேக்கரியிலும் நவரட்ணம் கடையிலும் அன்னாசி ஜூஸ் இனை சின்ன பைக்கற்றுக்குள் ஊற்றி Freeze  பண்ணி விற்பார்கள். அதை வாங்கி சைக்கிளை மிதிச்சுக் கொண்டு வரும் போது ஒரு கையில் இது எப்பவும் இருக்கும்.

இங்கு இதை Popsicle bag என்ற பெயரில் விற்கின்றார்கள். வாங்கி குளிர்சாதனப் பெட்டியின் Freezer இல் வைத்து பிள்ளைகள் குடிப்பர். இங்கு அனேகமானவை செயற்கை சுவையூட்டிகள் (Artificial flavor) போட்டு வருவதால் கூடியவரைக்கும் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பது இல்லை.

printed-popsicle-bag-500x500.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Down Memory Lane: Bulto, Hoonu Beti And Other Sweets From Bygone Days

எள்ளுருண்டை, கச்சான் அல்வா, மற்றும் இந்த சின்ன பிஸ்கட் மேலே பூப்போல் இனிப்பு இருக்கும் இவையெல்லாம் மறக்க முடியுமா........!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு பினாட்டும் பனங்காய் பணியாரமும் தான் மறக்க ஏலாத சிலோன் இனிப்பு...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளுக்குப் பின் பெரிய பெட்டியில் பேக்கறி தயாரிப்புகளை கொன்டு திரிந்து வற்ப்பார்கள்.அதில் சீனி பனிஸ் எனக்கு ரொம்ப பிடித்ததில் ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் திருவிழாக்காலங்களில்,,திருவெம்பாவை போன்ற  திருவிழாக்களில் நீண்ட கண்ணாடியால் ஆனா மேசை போன்று ஒன்றினுள் பலவித மான கலர்களில் மிக்ச்சர் போன்று இருக்கும் ஆனால் இனிப்பாக இருக்கும் ,,பல நிறங்களில் சிறு சிறு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்,,அத்துடன் தொதலும் இருக்கும் ,இரண்டு ரூபா கொடுத்தா எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தருவார்
ஆனால் மிக்ச்சர் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அது ஸ்ரார் ரொபி. 

 

சிவப்பு உறையில் சுற்றி வருவது  பால் சுவையிலும் வெள்ளை உறையில் சுற்றி வருவது  தோடம்பழ சுவையிலும் இருக்கும். ஆகா  நினைத்தாலே நாவூறுகிறது!

அத்துடன் மில்க் டொபீ, புளுட்டோ போல tissue பேப்பரில் சுற்றி வரும் எள்ளுப்பா toffee, இப்படி பல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

கோவில் திருவிழாக்காலங்களில்,,திருவெம்பாவை போன்ற  திருவிழாக்களில் நீண்ட கண்ணாடியால் ஆனா மேசை போன்று ஒன்றினுள் பலவித மான கலர்களில் மிக்ச்சர் போன்று இருக்கும் ஆனால் இனிப்பாக இருக்கும் ,,பல நிறங்களில் சிறு சிறு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்,,அத்துடன் தொதலும் இருக்கும் ,இரண்டு ரூபா கொடுத்தா எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தருவார்
ஆனால் மிக்ச்சர் இல்லை

அது பூந்தி

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

சைக்கிளுக்குப் பின் பெரிய பெட்டியில் பேக்கறி தயாரிப்புகளை கொன்டு திரிந்து வற்ப்பார்கள்.அதில் சீனி பனிஸ் எனக்கு ரொம்ப பிடித்ததில் ஒன்று.

இங்கும் மாதத்தில் ஒரு தரமாவது சீனி பணிஸ் அல்லது சங்கிலி பணிஸ் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஸ்கார்புரோவில் குவாலிட்டி பேக்கரி என்று ஒரு பிரபலமான தமிழ் ஆட்களின் பேக்கரி இருக்கு. அங்கு ஊரில் சாப்பிட்ட எல்லவிதமான பணிஸ்களும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

புளூட்டோ ரொபியை .... நான் வாங்கி சாப்பிட்ட காலங்களில், பத்து சதம்.
அதன் லேபிளில்... "குணசேன" என்று சிங்களப்  பெயர்,  இருந்த நினைவு. 

நீங்கள் கூறுவது அளவில் மிகவும் சிறியது. 50 சதத்துக்கு வாங்குவது அளவில் பெரிது.

புளூட்டோ தவிர..

கச்சான் அல்வா, கோக்கனட் ரொபி, மாஸ்மலோ, ஜுஜூபி, கறுவா, பினாட்டு, பெப்பமின்ட், சுவிங்கம், மோல்டீஸ் இப்படி பல... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dodol - Wikiwand

புளூட்டோ ரொபி

 

Milady Toffees Confectionery candy Daintee Sweets Super Choco mint Soft  Centers | eBay

மைலேடி ரொபி. 

Daintee Limited - Leading Confectionery Company in Sri Lanka, Top Ranked  Food Company in Sri Lanka, Number one Sweets & Toffee Company in Sri Lanka 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

எல்லாரும் எனக்குத் தெரிஞ்ச எல்லா இனிப்புக்களையும் எழுதிப் போட்டினம்!

கடைசியா ஒண்டை மட்டும் எனக்காக விட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது!

அது தான் பாம்பு இனிப்பு!

யாருக்காவது நினைவிருக்குதோ? 

ஒரு உலக்கையில ஒட்டியிருக்கும்! அதை இழுத்து...இழுத்துத் ( விலைக்கேற்ப) தருவார்கள்!
அனேகமாகத் திருவிழாக்காலங்களில், எமது ஊருக்கு இதுவும் வரும்!

இல்லை அதையும் ஏற்கனவே சுவியண்ணா இணைச்சு போட்டார், பாவம் புங்கையண்ணா நீங்கள்😛 .  

Can you explain your childhood memory of Javvu Mittai/Bombay Mittai? - Quora

எனக்கு சுவியண்ணா இந்த இனிப்பை இணத்தபோது சிரிப்பு வந்ததுக்கு காரணம்  விபரம் அறியா அந்தநாட்களில் இந்த இனிப்பின் பள பளப்பையும் நிறத்தையும் பார்த்து ஆசைப்படாத சிறுவர்களே இருக்க முடியாது, இதை விற்கும் பெரியவர் கையில் ஒட்டாமலிருக்க எச்சியை தொட்டு நீவி நீவி இழுத்து பிச்சு தருவார், இப்போ இப்படி யாரும் செய்தால் சுகாதாரதுறைக்கு அறிவிப்போம், அல்லது ஓரமா போய் நிண்டு வாந்தி எடுப்போம்.

வருமான ஏற்ற தாழ்வைகொண்ட எமது இன மாணவர்கள் மத்தியில் என்போன்ற ஏழை மாணவர்களுக்கு அடிக்கடி வாங்கி சுவைக்ககூடியதாகவிருந்தது உடையார் இணைச்ச பல்லி முட்டாஸ்தான், சுவைத்து கொண்டு போகும்போது முடிவில் சீரகம் இருக்கும்.

இங்கே விடுபட்டு இருந்த ஒன்று மில்க் ரொபி என்று நினைக்கிறேன் ,பள்ளிநாட்களில் இதுவும் பிரபலம்.

download.jpg

அதைவிட பாடசாலை வாயிலில் திருவிழாக்களில்  சைக்கிளில் பூட்டிய பெட்டியிலும் /வானிலும் வைத்து ஐஸ்பழம், ஐஸ் சினோ, ஐஸ் ஷொக்  விற்பார்கள் .

வெயிலுக்கு ஒரு ஐஸ்பழம் அதுவும் அன்னாசி கலந்த ஒன்று குடிச்சால் கண்களிலிருந்து உச்சந்தலைவரை குளிர்ந்துகொண்டு போவது அப்படியே தெரியும். ஐஸ்சினோ ஐஸ் ஷொக் கொஞ்சம் விலைகூடியதா இருந்தாலும் சுவை சொல்லி வேலையே இல்லை. ஆனா ஒண்டு ஐஸ்பழத்தை தவிர மற்ற இரண்டும்  கொஞ்சம் தட்டுப்பட்டாலே மொத்தமா கழண்டு கீழே விழுந்துடும்.

கால ஓட்டத்தில் வெளிநாடு என்று வந்து ஆயிரம் வகையான  சுவையான தரமான விலையுயர்ந்த ஐஸ் வகைகளை சுவைத்தாலும் அந்த பள்ளிகூட வாசலில் வாங்கி சுவைத்த ஐஸ்பழத்தின் சுவையை  நினைவை எந்த காலமும் இவைகளால் நெருங்ககூட முடியாது.

எனக்கென்னவோ இலங்கையில் உள்ள ஐஸ்பழம் ஐஸ்கிறீம் வகைகள், கேக், கண்டோஸ், நெக்ரோ/Portello  போன்றவைதான் இங்குள்ளவற்றவையைவிட சுவை வாய்ந்தவை என்றொரு தோற்றப்பாடு எப்போதும் இருக்கும், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு  பள்ளிக்கூட  வாசலில் கடலைக் காரி விற்கும்  நாவல்பழம் ,இலந்தைப்பழம்  அருமையாக பாலைப் பழம்.என்பனவற்றியும் சேர்க்கலாமா?  நாவல் பழம் சாப்பிட்டு  வாயெல்லாம் நாவலாகி  ..ஏச்சு வாங்கியது .. சாப்பிடட பின் நன்றாக நாக்கை கழுவி தப்பித்தவர்களும் உண்டு.  வகுப்பு நேரத்தில்  கள்ள மாங்காய், புளி யங்காய்  புழுக் கொடியல், (விளாம்பழம் அந்த பள்ளிக்கே மணக்கும் ) போன்றவை சாப்பிடட நாட்களும் எனோ ஞாபகத்தில் வந்து போனது .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எனக்கென்னவோ இலங்கையில் உள்ள ஐஸ்பழம் ஐஸ்கிறீம் வகைகள், கேக், கண்டோஸ், நெக்ரோ/Portello  போன்றவைதான் இங்குள்ளவற்றவையைவிட சுவை வாய்ந்தவை என்றொரு தோற்றப்பாடு எப்போதும் இருக்கும், 

எனக்கு தெரிந்தவர் ஒருவர் றோஸ் நிற சோடா ஒன்று தான் எப்போதும் கடையில் வாங்குவார். அவர் கோலா வாங்கி நான் கண்டதில்லை. ஒரு நாள் கேட்டேன் உங்களுக்கு இது அவ்வளவு விருப்பமா அவர் சொன்னார் நாங்கள் இலங்கையில் நெக்டோ என்று ஒரு சோடா விரும்பி குடிப்போம் இது கொஞ்சம் நெக்டோ மாதிரி சுவை ஆனால் அது இன்னும் சுவையானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுவா இனிப்பு எண்டொரு சாமான் யாழ்ப்பாணத்தில முந்தி இருந்தது. சின்ன சின்ன வட்டமா கம்பளிப் பூச்சி சைசில கடும் சிவப்பு நிறத்தில இருக்கும். ஒரு உறைப்புத் தன்மை இருக்கும். 1988 வாக்கில் அம்மா இருக்கும் போது எனக்கும் தங்கச்சிக்கும் வாங்கித் தருவா. அதுக்குப் பிறகு நான் அதை காணக் கிடைக்கேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கறுவா இனிப்பு எண்டொரு சாமான் யாழ்ப்பாணத்தில முந்தி இருந்தது. சின்ன சின்ன வட்டமா கம்பளிப் பூச்சி சைசில கடும் சிவப்பு நிறத்தில இருக்கும். ஒரு உறைப்புத் தன்மை இருக்கும். 1988 வாக்கில் அம்மா இருக்கும் போது எனக்கும் தங்கச்சிக்கும் வாங்கித் தருவா. அதுக்குப் பிறகு நான் அதை காணக் கிடைக்கேல்லை.

கறுவா இனிப்பு எனக்கும் நினைவு இருக்கு. ஆனால் சுவை மறந்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

இத்தோடு  பள்ளிக்கூட  வாசலில் கடலைக் காரி விற்கும்  நாவல்பழம் ,இலந்தைப்பழம்  அருமையாக பாலைப் பழம்.என்பனவற்றியும் சேர்க்கலாமா?  நாவல் பழம் சாப்பிட்டு  வாயெல்லாம் நாவலாகி  ..ஏச்சு வாங்கியது .. சாப்பிடட பின் நன்றாக நாக்கை கழுவி தப்பித்தவர்களும் உண்டு.  வகுப்பு நேரத்தில்  கள்ள மாங்காய், புளி யங்காய்  புழுக் கொடியல், (விளாம்பழம் அந்த பள்ளிக்கே மணக்கும் ) போன்றவை சாப்பிடட நாட்களும் எனோ ஞாபகத்தில் வந்து போனது .
 

இனிப்பு இல்லாவிட்டால் என்ன தின்பண்டம்தானே சேர்க்கலாம். 

எனக்கு பிடித்தது உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லி. இப்பவும் இந்தியன் கடையில் வாங்கி வந்து சாடியில் ஊறவைத்து சாப்பிடுவேன். 

இந்தியன் ஆமி வந்தபின் நிஜாம் பாக்கு, ஏ ஆர் ஆர் பாக்கு எனும் இனிப்பு பாக்குகளும் வந்தன. வீட்டில் வாங்கி தர மாட்டார்கள். ஆனாலும் அண்ணமாரிடம் கெஞ்சினால் ரெண்டு மூண்டு துகள்கள் தருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாதவூரான் said:

அது பூந்தி

பூந்தி லட்டு செய்ய பாவிப்பார்கள் ,ஆனால் இது மிக்ஸ்சார் மாதிரி கொஞ்சம் கடினமாக கடிபடும்
பல வர்ணங்களில் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இனிப்பு இல்லாவிட்டால் என்ன தின்பண்டம்தானே சேர்க்கலாம். 

எனக்கு பிடித்தது உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லி. இப்பவும் இந்தியன் கடையில் வாங்கி வந்து சாடியில் ஊறவைத்து சாப்பிடுவேன். 

இந்தியன் ஆமி வந்தபின் நிஜாம் பாக்கு, ஏ ஆர் ஆர் பாக்கு எனும் இனிப்பு பாக்குகளும் வந்தன. வீட்டில் வாங்கி தர மாட்டார்கள். ஆனாலும் அண்ணமாரிடம் கெஞ்சினால் ரெண்டு மூண்டு துகள்கள் தருவார்கள்.

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அன்புத்தம்பி said:

பூந்தி லட்டு செய்ய பாவிப்பார்கள் ,ஆனால் இது மிக்ஸ்சார் மாதிரி கொஞ்சம் கடினமாக கடிபடும்
பல வர்ணங்களில் இருக்கும்

சிவப்பு கலரில் இருக்குமா? பூந்திக்கும், தேன் குழலுக்கும் இடைப்பட்ட பதத்தில்? சாப்பிட்டால் அரிசி மா டேஸ்ட் அடிக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

தோலகட்டி நெல்லி இரசம். இதை சொன்னதும் ஒரு பகிடி நியாபகம் வருகுது.

எனக்கு சின்னனில் ஒரு தொலைகாட்டி வாங்கி விடவேண்டும் என்று ஒரே அவா. ஆனால் விலை அதிகம், ஆகவே திருவிழா, பேர்த்டே என்று வீட்டில் தள்ளி போட்டுகொண்டே வந்தார்கள். 

ஒருநாள் கடையடிக்கு போனால் கரும்பலகையில் சோக்கால் எழுதி வைத்திருந்தனர்

“தொலகட்டி 2 ரூபா, இன்றுமட்டுமே”.

வீட்டை ஓடிப்போய் கெஞ்சினால், நம்பாமல் தாங்களே வந்து விசாரித்தார்கள் -கடைக்காரர் எழுத்துப் பிழை விட்டிருந்தாராம்- 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.