Jump to content

கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க, தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

கடலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க, தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் உரிமையாளர்கள் இணக்கம்

கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்கள் நாட்டின் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் கப்பலில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பெற தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என வணிகக் கப்பல் செயலகத்தின் இயக்குநர் ஜெனரல் அஜித் செனவிரத்ன தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் தீயை அணைக்க இடைவிடாமல் போராடினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொத்த இழப்பீடு பெற சட்டமா அதிபர் மூலம் கோரிக்கைகள் வைக்கப்படும் என்றும் இதற்கிடையில், கப்பல் உரிமையாளர்கள் கடற்கரை அனுமதிப் பணிகளுக்கு ஆதரவாக கூடுதலாக ஒரு இடைக்கால அறிக்கையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்தமையால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு குறித்த கப்பல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்மியுல் யோஸ் கொவிட்ஸ் (Shmuel Yoskovitz) மன்னிப்பு கோரியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியுள்ள அவர், இந்த சம்பவம் குறித்து தான் பெரிதும் வருத்தமடைந்திருப்பதாகவும் இதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1220251

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகை என்ன, அது வழங்கப்படும் திகதி,  ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நிதி  எப்படி  பயன்படுத்தப்படும் என்பன போன்ற விபரங்களை நாடறிய இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும். அதுமட்டுமல்ல தீவிபத்தில் சிக்கிய கப்பள் உள்ளே வர இந்தியா உட்பட பல நாடுகள் அனுமதி மறுத்திருந்தும் இலங்கை கடலுக்குள் வர  அனுமதிவழங்கிய பொறுப்பற்ற துறைமுக அதிகாரி அல்லது அரசியல்வாதி யார் என்பதையும்  கண்டறிய உடனடியாக விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

4 minutes ago, vanangaamudi said:

வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகை என்ன, அது வழங்கப்படும் திகதி,  ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நிதி  எப்படி  பயன்படுத்தப்படும் என்பன போன்ற விபரங்களை நாடறிய இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும். அதுமட்டுமல்ல தீவிபத்தில் சிக்கிய கப்பள் உள்ளே வர இந்தியா உட்பட பல நாடுகள் அனுமதி மறுத்திருந்தும் இலங்கை கடலுக்குள் வர  அனுமதிவழங்கிய பொறுப்பற்ற துறைமுக அதிகாரி அல்லது அரசியல்வாதி யார் என்பதையும்  கண்டறிய உடனடியாக விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

சேதங்களை மதிப்பிட முன்னரே உரிமையாளர் விழுந்தடித்து நட்ட ஈடு தர தானாகவே முன்வருகிறார் என்றால் இந்த விசயத்தை விசாரணையின்றி அமுக்க முயல்கிறார்கள். விசயம் பெரிதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

ITOPF, OSR, MV X-Press Pearl போன்ற கடல் மாசுபடுதலுக்கு எதிராகச் செயற்படும் அமைப்பிலுள்ள சர்வதேச அதிகாரிகள் இலங்கைக்குச் சென்றுள்ளனர்.

https://fr.news.yahoo.com/sri-lanka-experts-internationaux-face-072212810.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.