Jump to content

ஆமையின் இறப்புக்கு தீ பிடித்த கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் காரணமா ? ஆராயுமாறு உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆமையின் இறப்புக்கு தீ பிடித்த கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் காரணமா ? ஆராயுமாறு உத்தரவு

எம்.எப்.எம்.பஸீர்

தெற்கின் உனவட்டுன கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்த  இறந்த ஆமையின் மரணதுக்கு,  தீ பரவிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த இரசாயனங்கள் தான் காரணமா என்பதை உறுதி செய்ய, குறித்த ஆமையின் சடலத்தை, தெஹிவளை - அத்திட்டியவில் அமைந்துள்ள  வன ஜீவிகள் வைத்திய அலுவலகத்துக்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன இதற்கான உத்தரவை  ஹிக்கடுவ வனஜீவிகள் அலுவலகத்துக்கு பிறப்பித்துள்ளார்.

உனவட்டுன கடற்கரைக்கு, குறித்த ஆமையின் சடலம், நேற்று முன் தினம் கரை ஒதுங்கியிருந்தது.  இது தொடர்பில் ஹிக்கடுவ வன ஜீவி அதிகாரிகள் நேற்று காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரணவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பல் தீ பிடித்ததால், கடலில் கலந்த இரசாயனங்களின் தாக்கம் காரணமாக அந்த ஆமை உயிரிழந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் நீதிமன்றைக் கேட்டனர்.

TURTLE.JPG

 இந்த கோரிக்கையை ஆராய்ந்தே நீதிவான், ஆமையின் இறந்த உடலை அத்திட்டியவில் உள்ள வன ஜீவிகள் மருத்துவ அலுவலகத்துக்கு அனுப்பி அறிக்கை பெற உத்தரவிட்டார்.
 

https://www.virakesari.lk/article/106865

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல்  தீ விபத்து – பாதிக்கப்பட்ட பகுதி மீள 20 வருடங்கள் ஆகும்

 
4.jpg
 24 Views

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீள 20 வருடங்கள் ஆகலாம் என்று கடற்பிராந்தியப் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர எச்சரித்துள்ளார்.

மேலும் குறித்த கப்பலின் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, அதனை ஆழ்கடலுக்கு கொண்டு சென்றாலும் அதனாலேற்பட்ட பாதிப்புக்களிலிருந்து கடற்பிராந்தியம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆகலாம் என்றார்

அத்தோடு இந்த கப்பலால் சூழலியல் பாதிப்புக்கள் ஒரு பக்கம் இருக்க, அது ஏற்படுத்திய தீ பரவலும் அதனைத் தொடர்ந்து சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பல்வேறு சமூகப்பிரச்சனைகளைத் தோற்றுவித்துள்ளது என்றும் ஏற்கனவே பாதிப்பக்களை சந்தித்து வரும் மீனவ சமூகம் மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=51472

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.