Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

5 minutes ago, ஏராளன் said:

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்களின் இருப்பும் அவர்களின் வளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தானே உண்மை.

உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும்,  அதை எதிர் கொண்டு வினை திறனான மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர் உரிமைகளை நிலைநாட்ட தமிழர் தரப்பினரிடம் போதிய ஆற்றல் இருந்தும் அதை பயன் படுத்தாது உண்ர்சசி அரசியல் இலாப அறுவடைக்காக  தமிழ் ஈழம் என்ற போலி பிம்பம் தமிழ் இளைஞர் மத்தியில்  திணிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு  இழப்பதை காப்பாற்ற முயற்சிக்காமல்  இருந்ததையும் இழக்க வைக்கப்பட்டது என்பது தான் அந்தக் கருத்தின் விளக்கம். 

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும்,  அதை எதிர் கொண்டு வினை திறனான மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர் உரிமைகளை நிலைநாட்ட தமிழர் தரப்பினரிடம் போதிய ஆற்றல் இருந்தும் அதை பயன் படுத்தாது உண்ர்சசி அரசியல் இலாப அறுவடைக்காக  தமிழ் ஈழம் என்ற போலி பிம்பம் தமிழ் இளைஞர் மத்தியில்  திணிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு  இழப்பதை காப்பாற்ற முயற்சிக்காமல்  இருந்ததையும் இழக்க வைக்கப்பட்டது என்பது தான் அந்தக் கருத்தின் விளக்கம். 

தனிநாட்டுக் கோரிக்கையும் ஆயுதப்போராட்டமும் இல்லையென்றால் தமிழர்கள் இங்கை வாழ்ந்தவையோ என்று நீங்களே கேட்டிருப்பியள்?! (இனி வரலாறு அப்படித்தான் போகும்)

சந்தர்ப்ப சூழ்நிலையை சரியா பாவித்த தந்தை செல்வாவிற்கு எப்பிடி விபூதி அடிச்சதெண்டு வரலாறு சொல்லுதண்ணை.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவேணும் என்றதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் செய்ததெல்லாமே தவறு என்பதை மறுக்கிறேன்.

பட்டறிவில் இருந்து பாடங்களை கற்று சமூகமாக முன்னேறுவோம்.

Link to comment
Share on other sites

http://static1.tamilmirror.lk/images/uploads/article_1468814917-Unt.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 

திருப்புமுனை

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றின் 1976 மே 14 ஆம் திகதி முக்கியமான நாள். யாழ். வட்டுக்கோட்டை, பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) பெயர் மாற்றம் பெற்றதோடு, தனிநாட்டுக்கான 'வட்டுக்கோட்டைத் தீர்மானமும்' இங்குதான் நிறைவேற்றப்பட்டது. இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதன் வழியில் அமைந்த தமிழர் அரசியலையும் திரும்பிப் பார்க்கையிலே தமிழர்களின் அரசியலில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது பெரும் திருப்பு முனையாக அமைந்தது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. சில விமர்சகர்கள் இது திருப்புமுனையல்ல‚ மாறாக தமிழ் அரசியல் தலைமைகளின் இயலாமையின் வெளிப்பாடு என்பார்கள். இதனை விரிவாக ஆராய முன்பதாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முக்கிய பகுதிகளை பார்ப்பது அவசியமாகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலமைந்த குறித்த மாநாட்டில் செல்வநாயகத்தால் முன்மொழியப்பட்டு, மு.சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இப்படி அமைந்தன:

'இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளும்; வரை பல

நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும், 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

மேலும், தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகி உள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:

(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித் தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்கு உட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றதாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.

(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச் சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.

(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கான செயற்றிட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு, சுதந்திரத்துக்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது'.

வட்டுக்கோட்டைத் தீர்மானமானது இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசை முன்வைத்ததோடு அதனை அடையப்பெறுவதற்கு தமிழ் இளைஞர்களை 'புனிதப் போருக்கு' அழைக்கும் அறைகூவலாகவும் அமைந்தது. இந்த அறைகூவலை 'ஈழத்துக் காந்தி' என்று அழைக்கப்பட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் விடுத்திருந்தார். இதன் பின்புலத்தில் ஏறத்தாழ 20 வருடங்களாகத் தோல்வி கண்ட பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் சமரசமுயற்சிகளும் இருக்கின்றன.

தமிழர் உரிமைகள் காவுகொள்ளப்பட்ட ஒரே இரவில் அந்த அநீதிக்கு தீர்வு தனியரசுதான் என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வரவில்லை. மாறாக 20 வருடகாலமாக இலங்கையின் இரு பெரும் கட்சிகள் மாறி மாறி அரசாங்கக் கட்டிலில் வந்தபோது அவற்றுடன் பல்வேறு வகையான சமரச முயற்சிகளை மேற்கொண்டு, அவை தோற்கடிக்கப்பட்ட பின்னரே, அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு முயற்சிகள் மீது நம்பிக்கையிழந்த பின்னரே, 'தனியரசு'என்பதே தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வந்தன. இதிலே ஒரு முக்கிய தற்செயல் நிகழ்வும் நடந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றப்படுவதற்கும் ஒன்பது நாட்களுக்கு முன்பாக 'தமிழ் புதிய புலிகள்' என்ற ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் இயக்கம் தன்னை 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றிக் கொண்டது. இது தற்செயலா, இல்லை இரண்டும் ஒரே திட்டத்தின்படி நிகழ்ந்தனவா என்பது பற்றிய ஆதாரங்கள் எதுவுமில்லை. எது எவ்வாறாயினும் 1976 மே 14 ஆம் திகதி செல்வநாயகம் விடுத்த அறைகூவல் காட்டிய பாதையில், அது காட்டிய இலட்சியத்திற்காக அடுத்த 33 வருடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள்.

வரலாற்றின் முக்கியத்துவம்

'வரலாறு, எத்தனை வலிமிக்கதாக இருப்பினும், அதனை எம்மால் மாற்றிவிட முடியாது. ஆனால் அதனை தைரியத்துடன் எதிர்கொண்டால், அதனை மீண்டும் அனுபவிக்கத் தேவையில்லை' என்று மாயா அஞ்சலூ ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். வரலாறு என்பது பொற்காலங்களையும் இருள்சூழ் காலங்களையும் கொண்டது. பல சரிகளும் பல தவறுகளும் நிறைந்தது. நாம் பூரிப்படையத்தக்க பெருமைகளையும் வெட்கப்படத்தக்க சிறுமைகளையும் வேதனையளிக்கும் கொடுமைகளையும் கொண்டது. எது எவ்வாறு அமையினும் அன்று நடந்தவற்றை இன்று நாம் மாற்றிவிட முடியாது. ஆனால் அந்த வரலாற்றை தைரியத்துடன் எதிர்கொள்வதன் மூலம், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மீண்டுமொருமுறை அதுபோன்றதொரு நிலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள முடியும். வரலாற்றை அறிவதன் பயன் அதுவாகத்தான் இருக்க முடியும்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' சரி, பிழை என்று இருநிலைகளில் ஒன்றில் நின்று ஆராய்வது பொருத்தமற்றது என்று கருதுகிறேன். மேலும் எந்தவொரு விடயத்தையும் அது நடந்ததன் பின்நின்று தீர்மானிப்பதன் (judging in hindsight) பொருத்தப்பாடு பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. உதாரணமாக 1976 இன் பிற்பகுதியில் இலண்டன் பி.பி.சிற்கு பேட்டியளித்த சா.ஜே.வே.செல்வநாயகம் 'நாங்கள் ஒரு தமிழ் 'ஜின்னா'வை உருவாக்கத் தவறிவிட்டோம்' என்றார். இந்தக் கூற்றின் அர்த்தம், எப்படி இந்திய சுதந்திரத்தின் முன்பதாக முஹமட் அலி ஜின்னாஹ் முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டை பெற்றுக்கொண்டாரோ, அதுபோல தமிழர்களுக்காக தமிழ்த் தலைமைகள் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டன என்பதே. ஆனால் இதே செல்வநாயகமும் 'தனிச்சிங்களச் சட்டம்' பிறந்த 1956 முதல் 1976 வரை இரண்டு தசாப்தங்களாக தனிநாடு கேட்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கையினுள் அதிகாரப் பகிர்வையே கோரினார். ஆகவேதான் இரண்டு தசாப்தங்களாகச் செய்ய விளையாத ஒன்று தனக்கு முற்பட்டோர் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை தூரம் பொருத்தமானது என்ற கேள்வி இவ்விடத்தில் நிச்சயம் எழுகிறது. இதுதான் எந்தவிடயம் பற்றியும் அது நடந்தேறியதன் பின்நின்று தீர்மானிப்பதில் உள்ள சிக்கல்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய விமர்சனம்

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது மேற்குறிப்பிட்டது போல இரண்டு தசாப்தகால ஏமாற்றங்களின் பின்னர் தமிழர்களுக்கு வேறுவழியின்றிப் பிரிவினையைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று நியாயம் சொல்லும் ஒரு தரப்பினர் உள்ள அதேவேளையில், வட்டுக்கோட்டைத் தீர்மானமென்பது தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள தமிழரசுக் கட்சியினரால் தமிழ் மக்களின் உணர்வைத் தூண்டுவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட தீர்க்கதரிசனமற்ற பிரச்சாரமேயன்றி வேறில்லை என விமர்சிக்கும் ஒரு தரப்பும் உண்டு. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' எடுக்கப்பட்ட காலத்தில் சா.ஜே.வே. செல்வநாயகத்தின் உடல்நிலை சிறப்பாக இருக்கவில்லை. அவரது செவிப்புலனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கட்சியின் அடுத்த தலைமைக்கான போட்டியும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கட்சியின் 'தளபதியாக' அறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இளைஞர்களிடையே தனக்கான ஆதரவினைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். 1970 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய அ.தியாகராஜாவிடம் 725 வாக்குகளால் தோல்வி கண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு எப்பாடுபட்டேனும் அடுத்த தேர்தலில் வெற்றியீட்டிவிட வேண்டிய தேவையிருந்தது. மேலும் 1965 - 1970 வரை டட்லி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததன் பின்னர் தமிழரசுக் கட்சியின் பிரபல்யம் வீழ்ச்சி கண்டிருந்தது. ஆகவே இவை எல்லாவற்றையும் சரிசெய்யத்தக்க அரசியல் தந்திரோபாயமாகவும் இளைஞர்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டவல்ல வியூகமாகவுமே 'தனிநாட்டுக் கோரிக்கை' பயன்படுத்தப்பட்டது என இமயவரம்பன் தனது 'தந்தையும் மைந்தரும்' என்ற நூலில் கடும் விமர்சனமொன்றை முன்வைக்கிறார்.

தனியரசுக் கோரிக்கையை ஏற்காத தொண்டமான்

தமிழ் ஐக்கிய முன்னணியின் முக்கிய மூன்று தலைவர்களில் ஒருவரான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாற்றப்பட்டு, தனியரசுப் பிரகடனத்தை முன்வைத்ததும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். அவரைப் பொறுத்தவரையில் தமிழீழம் என்பது தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்ற நிலைப்பாடே காணப்பட்டது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் 1977 தேர்தலில் ஆதரவளித்திருந்தாலும், மலையகத்தில் தன்னுடைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சேவல் சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொண்டார். 'வடக்கு கிழக்கில் உதயசூரியன் மலரும் வேளையில், மலையகத்தில் சேவல் கூவும்' என்பதே அன்றைய மகுடவாசகமாக இருந்தது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக அமைந்த இந்த வடக்கு கிழக்கு மற்றும் மலையகக் கூட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தோடு நடைமுறை ரீதியில் முடிவுக்கு வந்தது எனலாம்.

1977இல் தொடர்ந்த இருதரப்பு ஆதரவுநிலை அரசியலும் காலப்போக்கில் இல்லாது போய்விட்டது. விடுதலைப் போராட்டம் பற்றிய தொண்டமானின் பார்வை வேறாக இருந்தது என்பதை அவரது கூற்றுக்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 'தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு பேச்சுவார்த்தைக் கலை தெரியாது. அவர்கள் சட்டத்தரணிகள்; அவர்களுக்கு தமது வழக்கை சிறப்பாக எடுத்துரைக்கத் தெரியுமேயன்றி, எதிர்த்தரப்பிலிருந்து தமக்கான சலுகைகளை இலாவகமாகப் பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கலை அவர்களுக்குத் தெரியாது' என்று சௌமியமூர்த்தி தொண்டமான் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களாணையைப் பெறும் முயற்சி

இந்நிலையில், இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள, 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தத் தீர்மானத்தை தமது விஞ்ஞாபனமாக மக்கள் முன் சமர்ப்பித்து தனியரசுக்கான மக்களாணையைப் பெற தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தீர்மானித்தது.

https://www.tamilmirror.lk/177293/வட-ட-க-க-ட-ட-த-த-ர-ம-னம-

 

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

தனிநாட்டுக் கோரிக்கையும் ஆயுதப்போராட்டமும் இல்லையென்றால் தமிழர்கள் இங்கை வாழ்ந்தவையோ என்று நீங்களே கேட்டிருப்பியள்?! (இனி வரலாறு அப்படித்தான் போகும்)

சந்தர்ப்ப சூழ்நிலையை சரியா பாவித்த தந்தை செல்வாவிற்கு எப்பிடி விபூதி அடிச்சதெண்டு வரலாறு சொல்லுதண்ணை.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவேணும் என்றதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் செய்ததெல்லாமே தவறு என்பதை மறுக்கிறேன்.

பட்டறிவில் இருந்து பாடங்களை கற்று சமூகமாக முன்னேறுவோம்.

எனது முதல் கருத்து 16-17 வயதிலேயே தனிநாட்டு கோரிக்கை சாத்தியமற்றது என்ற அவரது அபாரமான அரசியல் தெளிவுப் பார்தது 16,17 வயதில் அப்படியான தெளிவு என்னிடம் இல்லை என்றதால்  அவருக்கு  பதிலளித்ததில் தொடங்கியது.

அதனால் தனிநாடு என்ற ஒரே இலக்குக்கான பிடிவாதமான போராட்டம் எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று எனது  கருத்தைக் கூறினேன் இல்லை அப்படியல்ல தனிநாட்டு கோரிக்கையும் ஆயுதப் போராட்டமுமே எமக்கு நன்மையளித்தது என்பது உங்கள் நிலைப்பாடு.  ஆகவே உங்கள் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து அதனை ஏற்று உடனடியாக மீண்டும் தனிநாட்டுக்காக  ஆயுதமேந்தி போராடுமாறு தாயகத்தில் வாழும் இளையோருக்கு  (ஒஸ்ரியா - மசடோனியா மாட்ச் பார்த்தவாறே)   உசுப்பேற்றி விட்டு ஒரு பியரை அல்லது ஸ்கொச் விஸ்கியை  அடித்துவிட்டு படுத்து தூங்கலாம் என்றிருக்கிறேன்.😂 உங்கள் கருத்துக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

8 minutes ago, tulpen said:

எனது முதல் கருத்து 16-17 வயதிலேயே தனிநாட்டு கோரிக்கை சாத்தியமற்றது என்ற அவரது அபாரமான அரசியல் தெளிவுப் பார்தது 16,17 வயதில் அப்படியான தெளிவு என்னிடம் இல்லை என்றதால்  அவருக்கு  பதிலளித்ததில் தொடங்கியது.

அதனால் தனிநாடு என்ற ஒரே இலக்குக்கான பிடிவாதமான போராட்டம் எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று எனது  கருத்தைக் கூறினேன் இல்லை அப்படியல்ல தனிநாட்டு கோரிக்கையும் ஆயுதப் போராட்டமுமே எமக்கு நன்மையளித்தது என்பது உங்கள் நிலைப்பாடு.  ஆகவே உங்கள் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து அதனை ஏற்று உடனடியாக மீண்டும் தனிநாட்டுக்காக  ஆயுதமேந்தி போராடுமாறு தாயகத்தில் வாழும் இளையோருக்கு  (ஒஸ்ரியா - மசடோனியா மாட்ச் பார்த்தவாறே)   உசுப்பேற்றி விட்டு ஒரு பியரை அல்லது ஸ்கொச் விஸ்கியை  அடித்துவிட்டு படுத்து தூங்கலாம் என்றிருக்கிறேன்.😂 உங்கள் கருத்துக்கு நன்றி. 

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மியாவ் said:

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சிக்கு உட்பட்டு சத்தியபிரமாணம் எடுத்த கடும்போக்கு அரசியல்வாதியே சமஸ்டிக்கு மேல் கேட்கவில்லை. 

தனிநாடு கோரிக்கை எல்லாம் 2009 க்கு பின்னர் சினிமாக்காரர்கள் கையில் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மியாவ் said:

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

இனி இது பற்றி புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல 

 அமெரிக்கா ஐரோப்பியா எவர் பேசினாலும் இப்படி தான் கேட்பார்கள்.  ஏனெனில் சிங்களம் நல்லது தமிழர்களுக்கு தான் தேவை அற்ற போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மியாவ் said:

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

நான் நினைக்கிறேன் அவர் சொல்ல விரும்புவது

ஏமாறாதீர்கள் 

ஏமாற்றாதீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

எனது முதல் கருத்து 16-17 வயதிலேயே தனிநாட்டு கோரிக்கை சாத்தியமற்றது என்ற அவரது அபாரமான அரசியல் தெளிவுப் பார்தது 16,17 வயதில் அப்படியான தெளிவு என்னிடம் இல்லை என்றதால்  அவருக்கு  பதிலளித்ததில் தொடங்கியது.

அதனால் தனிநாடு என்ற ஒரே இலக்குக்கான பிடிவாதமான போராட்டம் எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று எனது  கருத்தைக் கூறினேன் இல்லை அப்படியல்ல தனிநாட்டு கோரிக்கையும் ஆயுதப் போராட்டமுமே எமக்கு நன்மையளித்தது என்பது உங்கள் நிலைப்பாடு.  ஆகவே உங்கள் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து அதனை ஏற்று உடனடியாக மீண்டும் தனிநாட்டுக்காக  ஆயுதமேந்தி போராடுமாறு தாயகத்தில் வாழும் இளையோருக்கு  (ஒஸ்ரியா - மசடோனியா மாட்ச் பார்த்தவாறே)   உசுப்பேற்றி விட்டு ஒரு பியரை அல்லது ஸ்கொச் விஸ்கியை  அடித்துவிட்டு படுத்து தூங்கலாம் என்றிருக்கிறேன்.😂 உங்கள் கருத்துக்கு நன்றி. 

இங்க அமைதிப் போராட்டங்களில் பங்குபற்றவே ஆட்களை காணோம்.
சனம் ரொம்ப தெளிவா இருக்கு. தங்கடை வேலி எல்லை பிரச்சனைக்கு மட்டும் சண்டைக்கு வரும், வேற ஒரு பிரச்சனைக்கும் வரமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

இங்க அமைதிப் போராட்டங்களில் பங்குபற்றவே ஆட்களை காணோம்.
சனம் ரொம்ப தெளிவா இருக்கு. தங்கடை வேலி எல்லை பிரச்சனைக்கு மட்டும் சண்டைக்கு வரும், வேற ஒரு பிரச்சனைக்கும் வரமாட்டார்கள்.

நாங்கள் புலம்பெயர் ஆக்கள் மட்டும் என்ன லேசுபட்ட ஆக்களே?

நீங்கள் இத்தனை இழப்புகளுக்கு பின்தான் போராட பின்னடிக்கிறியள்.

நம்மில் கனபேர் கடைசியா கேட்ட வெடிச்சத்தம் 1983 பொங்கலுக்கு போட்ட சீன வெடி🤣

நாங்கள் அப்பவே அப்படி.

ஆனால் ஒன்று. நாங்கள் தனிநாட்டு கொள்கையில் உறுதியாய் உள்ளம்.

நாங்கள் போராட வர மாட்டம், எங்கள் பிள்ளைகளும் போராட வரமாட்டார்கள் என்பதில் தனிநாட்டு கொள்கையை விட உறுதியாய் உள்ளம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நாங்கள் போராட வர மாட்டம், எங்கள் பிள்ளைகளும் போராட வரமாட்டார்கள் என்பதில் தனிநாட்டு கொள்கையை விட உறுதியாய் உள்ளம். 

 

போராடமட்டும் இல்லை இலங்கைதமுழராககூட நம்ம பிள்ளைகள் இருக்காதுகள்.. அவர்கள் அவுஸ்திரேலியா கனடா பிரிட்டிஸ் பிரஜைகள்… நம்மளோட சரி ஈழதமிழன் எண்ட அடையாளம்.. சிங்களவன்போல இனாழிப்பாளர்கள்தான் நாமும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

போராடமட்டும் இல்லை இலங்கைதமுழராககூட நம்ம பிள்ளைகள் இருக்காதுகள்.. அவர்கள் அவுஸ்திரேலியா கனடா பிரிட்டிஸ் பிரஜைகள்… நம்மளோட சரி ஈழதமிழன் எண்ட அடையாளம்.. சிங்களவன்போல இனாழிப்பாளர்கள்தான் நாமும்..

இப்ப யூதர் என்பது மதமும், மொழியும், பண்பாடும் என்பதை இலகுவாக மறந்து விட்டு, நாங்கள் யூதர் மாதிரி என்று வருவாங்க பாருங்களேன்.

பேரினவாதிகளை போல் நாமும் இனவழிப்பாளர்களே என்பது மிக கசப்பானது ஆனால் உண்மை.

பேரப்பிள்ளைகள் ஈறாக எல்லாரையும் கூட்டி கொண்டு ஒருவர் நாடு திரும்பினாலே அங்கே தமிழர் சனத்தொகையை 20 பேரால் கூட்டலாம்.

ஆனால் இதை நிச்சயம் நான் செய்யபோவதில்லை. 

இப்படி பட்ட சுயநலமியான நான் - தனிநாட்டு கோரிக்கையை கைவிடமாட்டேன் என்று சொல்வதை விட இன்னும் ஒரு பெரிய இரெட்டை நிலை இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

On 8/6/2021 at 16:59, வாத்தியார் said:

 இந்தியக் குடிமகனாக சீமான் கழகத் தலைவரைச் சந்தித்தார் என்றால் இத்தனை கோடி  மக்கள் கழகத் தலைவரைச் சந்திக்கக் காத்திருக்கும் நிலையில் எப்படி சீமானிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது ?

இன்னொரு கேள்வி ....... இந்த இந்தியக் குடிமகன் எதற்காக அல்லது எப்படி ஈழத் தமிழர்களின் விடிவிற்காக போராட முடியும்?

இன்றைய நிலையில் சீமான் தானும் குழம்பி தன்னுடன் சேர்ந்திருக்கும் தம்பிகளையும் குழப்புகின்றார்.
சீமான் தமிழ் நாட்டில் வளர்ந்துவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அவர் மூக்கிற்குள் விரலை வைத்தாலே அசிங்கம் என வர்ணிக்க ஆயிரம் ஊடகங்கள் காத்திருக்கும் நிலையில் பக்குவம் இல்லாத செயல்களை நிறுத்த வேண்டும்
அல்லது இதுதான் சீமானின் சுயம் என்றால் ,
(நான் நம்புவதும் அப்படித்தான்) விரைவில்  மக்களால் தூக்கி எறியப்படுவார்

எடப்பாடி, ஜெயா எல்லோருமேதான் பார்வை அனுமதி கொடுத்தார்கள்.

அரசியல்வாதிகள் தமக்கு சாதகம் என்றால் அனுமதி தருவார்கள். ஆனால், அதை பயன்படுத்திக்கொண்டு ஏழுபேர் விடுதலையை முன்னுக்கு கொண்டுவருவது நல்லதுதானே?

அரசியல் என்பது “யார் எதை எப்போது எவ்வாறு பெறுகிறார்கள்” என்பதே. அதற்கேற்ப நடவடிக்கை மற்றும் எதிர் நடவடிக்கை செய்வதுதான் அரசியலின் இயங்குதளம்.

சீமானின் கையசைவுகள் பிரபலம் ஆகும் காரணம் என்பது, எதிராளிகளின் கடுமையான ஊடக பலம் மட்டுமே. உதாரணத்துக்கு கமல் நல்ல அசத்தலாக இருப்பார். ஆனால் சிந்தனையும் தனிப்பட்ட செயல்களும் அசிங்கமாக இருக்கும். ஸ்டாலின் அந்தக் காலத்தில் பெண்களை கடத்தியவராக இருந்தாலும், ஊடக பலத்தினால் இன்று “சிறந்த முதல்வர்”. இறக்கும்வரையில் ஜெயாவும் அவ்வாறே.

சீமானுக்கு எதிராக கட்டமைக்கப்படும் விம்பங்கள் உடைந்துபோக காலம் செல்லலாம். பொறுத்திருந்து காண்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, இசைக்கலைஞன் said:

அரசியல் என்பது “யார் எதை எப்போது எவ்வாறு பெறுகிறார்கள்” என்பதே. அதற்கேற்ப நடவடிக்கை மற்றும் எதிர் நடவடிக்கை செய்வதுதான் அரசியலின் இயங்குதளம்.

எழுவர் விடுதலைக்கான குரல் என்பது இப்போது வாக்குச் சேகரிக்கும் பிச்ச்சாரமாக மாறிவிட்ட நிலையில்  எந்தக் கட்சியும் மற்றவர்களுக்கான
கை ஓங்கும் நிலையை உருவாக்க விரும்பமாட்டார்கள்.

எழுவர் விடுதலையை அரசியலாக்காமல் பொது அமைப்புக்களினூடாக முன்னெடுப்பதே சிறந்தது. ஆனால் தமிழ் நாட்டில் அரசியல் பக்கச் சார்பற்ற பொது அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

சீமான் போன்றவர்கள் எழுவர் பற்றிப் பேசாமல் இருந்தாலே அவர்களின் விடுதலை சாத்தியமாகச்   சந்தர்ப்பம் இருக்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

சீமான் போன்றவர்கள் எழுவர் பற்றிப் பேசாமல் இருந்தாலே அவர்களின் விடுதலை சாத்தியமாகச்   சந்தர்ப்பம் இருக்கின்றது 

👌

எழுவர் விடுதலையில் நாம் தமிழரின் நடவடிக்கைகள் அரச தரப்பு சட்ட வாதங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில்தான் அமைகிறன.

அண்மையில் சாட்டை போய் நேரடியாக மிரட்டியதை - புலிகளுக்கு தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வன்முறை மயப்பட்ட ஆதரவுதளம் உண்டு. இவர்களை விடுவித்தல் இந்த தளம் மேலும் விரிவடையும். இது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது என்ற ரீதியில் மத்திய அரசு வக்கீல்கள் அணுக கூடும்.

ஸ்டாலினே கூட - நான் முயற்சிக்க ஆரம்பித்தேன் ஆனால் இவர்கள் எல்லாவறையும் குழப்பி அடித்து விட்டார்கள் என இதை கிடப்பில் போட - இந்த நடவடிக்கைகள் உதவும்.

உண்மையில் எழுவர் விடுதலையை விரும்புவோர் நாம் தமிழர் செய்யும் வேலைகளை செய்யமாட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, வாத்தியார் said:

எழுவர் விடுதலைக்கான குரல் என்பது இப்போது வாக்குச் சேகரிக்கும் பிச்ச்சாரமாக மாறிவிட்ட நிலையில்  எந்தக் கட்சியும் மற்றவர்களுக்கான
கை ஓங்கும் நிலையை உருவாக்க விரும்பமாட்டார்கள்.

எழுவர் விடுதலையை அரசியலாக்காமல் பொது அமைப்புக்களினூடாக முன்னெடுப்பதே சிறந்தது. ஆனால் தமிழ் நாட்டில் அரசியல் பக்கச் சார்பற்ற பொது அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

சீமான் போன்றவர்கள் எழுவர் பற்றிப் பேசாமல் இருந்தாலே அவர்களின் விடுதலை சாத்தியமாகச்   சந்தர்ப்பம் இருக்கின்றது 

எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இசைக்கலைஞன் said:

எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல்.

நன்றி தம்பி இசை

இது இங்கு எழுதும் எல்லோருக்கும் தெரியும்

அத்துடன்  சீமான்  தொடர்ந்து ஏறுமுகத்தில் வளர்வார்  என்பதும் தெரியும்;

அதனால் விழும் கல்லெறிகள் தான் இவை...

Link to comment
Share on other sites

13 minutes ago, விசுகு said:

நன்றி தம்பி இசை

இது இங்கு எழுதும் எல்லோருக்கும் தெரியும்

அத்துடன்  சீமான்  தொடர்ந்து ஏறுமுகத்தில் வளர்வார்  என்பதும் தெரியும்;

அதனால் விழும் கல்லெறிகள் தான் இவை...

நன்றி விசுகு அண்ணா. நலமறிய ஆவல். 😃

நல்ல அரசியலுக்கான களம் ஐந்து வருடங்கள் பிற்போடப் பட்டுள்ளன என கருதுகிறேன்.

இந்தக் காணொளியில் 14:00 நிமிடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் தமிழ்நாட்டின் நிலை. முத்துக்குமார் இறந்தபோது விடுமுறை கிடைத்துவிட்டது என எண்ணும் நிலையில்தான் தமிழக இளைஞர்களில் பலர் இருந்துள்ளார்கள் (கார்த்திக் உட்பட). இன்றும் பலர் அவ்வாறே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல்.

இதில் மாற்று கருத்து இல்லை. 

ஆனால் அவர்களை வெளியே விடக்கூடாது என்பதற்கு சீமானின், துரையின் நடவடிக்கைகள் மேலும் வலுச்சேர்க்கும்.

37 minutes ago, இசைக்கலைஞன் said:

நல்ல அரசியலுக்கான களம் ஐந்து வருடங்கள் பிற்போடப் பட்டுள்ளன என கருதுகிறேன்.

இதை வாசித்ததும் நமது நாம் தமிழர் திரி 1 இன் தொடக்க கால கருத்து மோதல்கள் மனதில் வந்து போனது.

எத்தனை ஐந்தாண்டுகள் கடந்தாலும் உங்கள் கருத்தில் உறுதியாக நிற்பது மகிழ்சி🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இங்க அமைதிப் போராட்டங்களில் பங்குபற்றவே ஆட்களை காணோம்.
சனம் ரொம்ப தெளிவா இருக்கு. தங்கடை வேலி எல்லை பிரச்சனைக்கு மட்டும் சண்டைக்கு வரும், வேற ஒரு பிரச்சனைக்கும் வரமாட்டார்கள்.

நீங்கள் தான் பாதிப்படைந்தவர்கள். நீங்கள் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஒருபோதும் போராட வர மாட்டார்கள். கோஷான் சே, பாலபத்ர ஓணாண்டி தெரிவித்தவை 100 வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் க‌ள‌த்தில் அண்ண‌ன் சீமான் என்று த‌லைப்பு வைத்தால் தான் திரி நீண்டு கொண்டு போகும்


இதுக்கை நீங்க‌ள் என்ன‌ தான் எழுதி கிண்ட‌ல் கேலி செய்தாலும் அது இந்த‌ திரியோடையே போய் விடும் த‌மிழ‌க‌ தேர்த‌லில் எதிர் ஒலிக்காது 

அண்ண‌ன் சீமான்  வ‌ழி எவ் வ‌ழியோ அவ் வ‌ழி ந‌ல் வ‌ழி 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

யாழ் க‌ள‌த்தில் அண்ண‌ன் சீமான் என்று த‌லைப்பு வைத்தால் தான் திரி நீண்டு கொண்டு போகும்


இதுக்கை நீங்க‌ள் என்ன‌ தான் எழுதி கிண்ட‌ல் கேலி செய்தாலும் அது இந்த‌ திரியோடையே போய் விடும் த‌மிழ‌க‌ தேர்த‌லில் எதிர் ஒலிக்காது 

அண்ண‌ன் சீமான்  வ‌ழி எவ் வ‌ழியோ அவ் வ‌ழி ந‌ல் வ‌ழி 🙏

வணக்கம் பையன்,

கண்டு கனகாலம். இணைந்திருங்கள்.

யாழ்களத்தில் சீமானை பற்றி எழுதும் எதுவும் தமிழக தேர்தலில் எதிரொலிக்காது என்பது 100% உண்மை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதும் அதையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

வணக்கம் பையன்,

கண்டு கனகாலம். இணைந்திருங்கள்.

யாழ்களத்தில் சீமானை பற்றி எழுதும் எதுவும் தமிழக தேர்தலில் எதிரொலிக்காது என்பது 100% உண்மை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதும் அதையே.

இங்கே சீமானின் கொள்கைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டது தேர்தல் பிரச்சாரம் ஏதும் நடக்கவில்லை.... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இங்கே சீமானின் கொள்கைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டது தேர்தல் பிரச்சாரம் ஏதும் நடக்கவில்லை.... 😂

😁 ஹி ஹி தாத்தா 

47 minutes ago, goshan_che said:

வணக்கம் பையன்,

கண்டு கனகாலம். இணைந்திருங்கள்.

யாழ்களத்தில் சீமானை பற்றி எழுதும் எதுவும் தமிழக தேர்தலில் எதிரொலிக்காது என்பது 100% உண்மை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதும் அதையே.

யாழில் இணைந்து இருக்கிற‌தில் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை ,

இப்ப‌டியான‌ திரிக‌ளை விட்டு த‌ள்ளி இருக்க‌வே விரும்புகிறேன் , கார‌ண‌ம் வீனா போற‌து என‌து நேர‌மும் உங்க‌ளின் நேர‌மும் Bro 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.