Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

spacer.png

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எழுவர் விடுதலையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று (ஜூன் 4) சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தனர். சீமான் ரூ. 5 லட்சம் வழங்கினார். பின்னர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி முதல்வரிடம் சீமான் கோரிக்கை விடுத்தார்.

 

இதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சீமான் பேசுகையில், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்ததாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், அதன் போக்கை வைத்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார். மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வது தொடர்பாகப் பேசியிருக்கிறோம். 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறேன் என்று முதல்வர் சொன்னதாகச் சீமான் கூறினார்.

மேலும் அவர், “தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக மருத்துவத் துறையில் மா.சுப்பிரமணியன் சிறப்பாகச் செயல்படுகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவதே பெரிய போராட்டமாக இருக்கிறது. 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்துவது தொடர்பாக யோசித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார். மாணவர்கள் உயிருக்கு பாதிப்பு என்றால் யார் பொறுப்பேற்பது. தேர்வை வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் பொறுப்பேற்பார்களா. தேர்வைச் சிறிதுகாலம் தள்ளிவைக்கலாம்” என்றார்.

ஃபேமிலி மேன் 2 தொடர் வெளியானது தொடர்பாக பேசிய சீமான், “காலூன்ற முடியாத இடங்களில் பயங்கரவாதம் என முத்திரை குத்த பாஜக அரசு முயல்கிறது. எங்களது போராட்டம் பயங்கரவாதம், தீவிரவாதம் இல்லை. அது இன விடுதலைக்கான போராட்டம். சிங்கள அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்காத இந்த நாடு, 800க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்ற சிங்கள அரசை கண்டிக்காத நாடு, எங்களைப் பயங்கரவாதிகள் என கூறி வேலை செய்கிறது. குற்றம், குறை சொல்பவர்களைக் கண்டு கொள்ளாமல் போய் விட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

முதல்வருடனான சந்திப்பு குறித்துப் பேசிய சீமான், “அரசியலில் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் என்னுடைய அப்பாவின் இறப்புக்கு முதல்வர் அறிக்கை விட்டார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசினார். அப்போது நான் நெகிழ்ந்துவிட்டேன். அதனால்தான் சந்தித்துப் பேசலாம் என்று முடிவெடுத்தேன்” என்றும் கூறினார்.
 

 

https://minnambalam.com/politics/2021/06/04/22/seeman-meets-mk-stalin-for-corona-fund

 

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான், பாரதிராஜா அவர்கள் முதல்வர் ஸ்ராலினை சந்தித்தமை வரவேற்கது. 

Link to comment
Share on other sites

Quote

அரசியலில் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் என்னுடைய அப்பாவின் இறப்புக்கு முதல்வர் அறிக்கை விட்டார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் தொலைபேசியில் அழைத்து என்னிடம் பேசினார். அப்போது நான் நெகிழ்ந்துவிட்டேன். அதனால்தான் சந்தித்துப் பேசலாம் என்று முடிவெடுத்தேன்

 

நல்ல விடயம்.  ஜிங்கோயிசம் செய்யாமல்,  ஒரு வளரும் அரசியல் கட்சியாய் நடைமுறை  அரசியல் செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை: தமிழக முதல்வருடன் சீமான், பாரதிராஜா சந்திப்பு

 
vikatan_2021-06_3197b161-4710-4cb6-9b7f-
 22 Views

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்   சீமான், திரைப்படத் தயாரிப்பாளர் பாரதிராஜா  உள்ளிட்டோர் சந்தித்து எழுவர் விடுதலை  குறித்து  வலியுறுத்தியதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து சீமான்  செய்தியாளர்களுக்கு  கருத்து தெரிவிக்கையில்,

”முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினோம். ஏழு பேர் விடுதலை குறித்துப் பேசினோம். அப்போது  எழுவர் விடுதலை  விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளதாக  முதல்வர் தெரிவித்தார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. அதில் வரும் போக்கை வைத்து நகர்வோம் என்று  முதல்வர் சொன்னார். விடாமல் தொடர்ச்சியாகப் போராடுவோம் என்று என்னிடம் சொன்னார்” என்றார்.

 மேலும்  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த சீமான்,

கூட்டணியில் உள்ள காங்கிரஸே எதிர்க்கிறதே?

அதை விடுங்கள்.

மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடியாதா?

அதையும் பேசியிருக்கிறோம். அதை விட்டுவிட மாட்டோம், தொடர்ச்சியாகக் கண்காணித்துச் செய்வோம் என  முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஆகவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம், அதன் பின்னர் முடிவெடுப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது?

சரியாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் வேகமாக இயங்குகிறார்கள், மருத்துவத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பாக இயங்குகிறார்கள். அழைத்துப் பாராட்டுகிறோம். கொரோனா தொற்றில் அதைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது.

ஏழு பேர் விடுதலையில் முதல்வர் உறுதியளித்தாரா?

ஏழு பேர் விடுதலையில் நான் மிக உறுதியாக இருக்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

 நன்றி – இந்து தமிழ் திசை

 

https://www.ilakku.org/?p=51469

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

` ஆட்சி சரியா இருக்கு' - முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சீமான், பாரதிராஜா பேட்டி!

சீமான்

 

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் - சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிதிக்கு, சீமான் நிதியளித்தார்.

ஸ்டாலின் சீமான் சந்திப்பு
 
ஸ்டாலின் சீமான் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``எனது தந்தையின் மரணத்தின் போது ஆறுதல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதுவே எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவர் நினைத்திருந்தால் அதோடு விட்டிருக்கலாம். ஆனால், அவர் என்னை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியது என்னை நெகிழவைத்துவிட்டது. இந்த சந்திப்பஇ நான் பெருமைக்குரியதாக பார்க்கிறேன்....

 

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். அவர் அதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பிளஸ் 2 தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்கள். மாணவர்களின் உயிர் தான் முக்கியம். ஒரு வருடம் தேர்வு எழுதாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. எனது கருத்தையும் தெரிவித்திருக்கிறேன்." என்றார்.

புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, `` ஆட்சி சரியா இருக்கு. நல்லா வேகமா இயங்குறாங்க. மருத்துவத்துறையில அண்ணன் மா.சு சிறப்பா இயங்குறாரு " என்றார். தி ஃபேமிலி மேன் -2 தொடர் குறித்து கேட்க்கப்பட்ட கேள்விக்கு, ``ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தமிழ் தீவரவாத அமைப்புகள் என்பது போல தொடர்புபடுத்தி கொண்டுவருகிறார்கள். பா.ஜ.க அரசால் எங்கு கால் பதிக்க முடியவில்லையோ, அங்கெல்லாம் பயங்கரவாத இயக்கம் என்ற பிம்பத்தை கட்டமைக்க நினைக்கிறது. நாங்கள் ( விடுதலைப் புலிகள்) இன விடுதலைக்காக போராடத் தொடங்கினோம். சிங்கள அரச பயங்கரவாதத்தை கண்டிக்காத இந்த அரசு (பா.ஜ.க) எங்களை பயங்கரவாதிகள் என்று கூறும் இதுபோன்ற தொடர்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறது." என்றார்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-director-barathiraja-meets-cm-stalin-says-government-is-acting-good

 

Link to comment
Share on other sites

எதிர் கட்சி என்றால் எதிரிக் கட்சி போன்று எல்லாவற்றையும் எதிர்த்து அரசியல் செய்யாமல், நல்ல விடயங்களை செய்யும் போது வரவேற்கின்ற பண்பு நல்ல அரசியலுக்கு தேவையானது. சீமான் அரசியலில் பக்குவப்பட்டுக் கொண்டு வருகின்றார் போலத் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எப்படி உள்ளது?

சரியாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் வேகமாக இயங்குகிறார்கள், மருத்துவத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பாக இயங்குகிறார்கள். அழைத்துப் பாராட்டுகிறோம். கொரோனா தொற்றில் அதைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது.

இது நல்ல அறிகுறியாக இருக்கின்றதே......
அடுத்த தேர்தலில் சீமான் ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பாரோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இது நல்ல அறிகுறியாக இருக்கின்றதே......
அடுத்த தேர்தலில் சீமான் ஸ்டாலினுடன் கூட்டணி அமைப்பாரோ ? 

ஆரம்பமே டெல்லியை பள்ளி விடயத்தில் பகைத்து கொண்டாயிற்று அதைவிட திமுகவின் இந்து சமுத்திர  தீவுகளில் உள்ள பினாமி முதலீடுகள் கிண்டியெடுத்து கொள்கிறார்கள் ஊழல் செய்வதிலும் அதி  புத்திசாலித்தனம் என்பார்கள் பலநாள் கள்ளன் ஒருநாள்  என்ற பழமொழி தமிழில் இருப்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதானே  அடக்கி வாசிக்கினமாம் .எது எப்படியாயினும் அது அவர்களின் பிரச்சனை நாங்கள் மண்டையை உடைக்க தேவையில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:
ஸ்டாலின் சீமான் சந்திப்பு
 

 

எது நடந்ததோ அது எதிர்வு கூறியபடியே நடந்தது.

எது நடக்கிறதோ அது எதிர்வு கூறியபடியே நடக்கிறது.

எது நடக்குமோ அதுவும்

எதிர்வு கூறியபடியே நடக்கும்.

- கீதையில் கண்ணன் அல்ல - போதையில் உடான்ஸ் சாமியார் அருளியது- 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

போதையில் உடான்ஸ் சாமியார் அருளியது- 

இன்னும் ஐந்து வருடம் இருக்கு சாமி ஆட்சி புரிய இடைவழியில் எதுவும் நடக்கலாம் விதி வலியது அருளியது பெருமாள் சித்தன் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

ஆரம்பமே டெல்லியை பள்ளி விடயத்தில் பகைத்து கொண்டாயிற்று அதைவிட திமுகவின் இந்து சமுத்திர  தீவுகளில் உள்ள பினாமி முதலீடுகள் கிண்டியெடுத்து கொள்கிறார்கள் ஊழல் செய்வதிலும் அதி  புத்திசாலித்தனம் என்பார்கள் பலநாள் கள்ளன் ஒருநாள்  என்ற பழமொழி தமிழில் இருப்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதானே  அடக்கி வாசிக்கினமாம் .எது எப்படியாயினும் அது அவர்களின் பிரச்சனை நாங்கள் மண்டையை உடைக்க தேவையில்லை .

சுப்பிரமணிய சாமி.... பத்மா சேஷாத்திரி பள்ளி விடயத்தில், “சவுண்டு”  கொடுத்த பின்...

தி.மு.க. அமைதியாகி விட்டது போல் தெரிகின்றது.

பத்து வருசத்துக்கு பிறகு... ஆட்சிக்கு வந்தவர்களுக்கு பயம் இருக்கத்தானே செய்யும்.

பிராமணர்களுக்கும்... 4,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்து... வேறை “ரூட்டிலை”  போகிறார்கள் போலுள்ளது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி பற்றிய எனது அவதானங்கள்.

1. சீமானுக்கு அந்த ரோஸ் கலர் சேர்ட் நல்லா செட் ஆகுது.

2. தலைமயிரும் வெட்டி இருக்கிறார். எடுப்பாக இருக்கிறது.

3. உடல் மெலிந்து நல்ல டிரிம்மாக இருக்கிறார்.

4. பாரதிராஜாவும் மெலிந்து டிரிம்மாக இருக்கிறார்.

5. ஏன் சீமான் வாக்கிங் போறவன் நாயை கூட்டிட்டு போறமாரி பாரதிராஜாவ எல்லா இடமும் கூட்டிப்போறார்னு தெரியவில்லை.

6. எல்லாரும் மாஸ்க் போட்டிருக்கிறாகள்👍🏿.

அரசியல்? ஓ மறந்தே போய்விட்டேன்….

அத்தனை அரசியலும் மேலே தொங்கி கொண்டிருக்கும் கருநாநிதியின் நக்கல் சிரிப்பில் இருக்கிறது. எழுத எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

பிராமணர்களுக்கும்... 4,000 ரூபாய் உதவித் தொகை

இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣

அதை வெளியே காட்டிக் கொண்டால்....

தீம்காவிற்கு.... எப்பிடி, முட்டுக் கொடுக்கிறது என்று, தீக்கோழி மாதிரி... தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣

நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிர் எண்டால் நம்பமாட்டியளே? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிர் எண்டால் நம்பமாட்டியளே? :grin:

பொய்யான நாடகங்களை  நம்பி தங்கள் பின் பகுதியில் சுடுகோலால்  குறி இளுத்து கொண்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இந்த விடயம் இங்குள்ள சிங்கங்களுக்கு தெரிந்தும் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு கொட்டாவி விடுகினம் ஆக்கும் .🤣

சிங்கங்கள விடுங்கோ. கொள்கையில்லாத ஆட்கள்.

நாங்கள் அப்படியா? திமுக இந்த இனத்தின் வரலாற்று எதிரி. 

சமரசம் இன்றி களமாடுவோம்.

ஈழப்படுகொலையில் கருணாநிதி கூட்டு குற்றவாளி.

ஒரு போதும் இனி திமுக ஆட்சி கட்டிலில் ஏற, நாம் தமிழர் விடமாட்டோம். 

மண்டியிடா மானம்….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதை வெளியே காட்டிக் கொண்டால்....

தீம்காவிற்கு.... எப்பிடி, முட்டுக் கொடுக்கிறது என்று, தீக்கோழி மாதிரி... தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். 😁😂🤣

ஒரு பார்ப்பனம் சொல்கின்றது தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதியாம். அந்த பெண்ணுக்கு இங்கே ஒரு சிலர் ஆலவட்டம் பிடிக்கின்றார்கள். ஏனெனில் அவர் பெண்ணாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

சிங்கங்கள விடுங்கோ. கொள்கையில்லாத ஆட்கள்.

நாங்கள் அப்படியா? திமுக இந்த இனத்தின் வரலாற்று எதிரி. 

சமரசம் இன்றி களமாடுவோம்.

ஈழப்படுகொலையில் கருணாநிதி கூட்டு குற்றவாளி.

ஒரு போதும் இனி திமுக ஆட்சி கட்டிலில் ஏற, நாம் தமிழர் விடமாட்டோம். 

மண்டியிடா மானம்….

அரசியலில் அதெல்லாம்  சகஜமுங்கோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

பிராமணர்களுக்கும்... 4,000 ரூபாய் உதவித் தொகை கொடுத்து... வேறை “ரூட்டிலை”  போகிறார்கள் போலுள்ளது

இதை பற்றி ஸ்டாலினிடம் சீமான் மிக கடுமையாக, கிட்டதட்ட மிரட்டும் தொனியில் பேசி இருக்க கூடும். 

பயந்துபோய் ஸ்டாலின் இந்த திட்டத்தை இத்தோட நிறுத்தி விடுவார்.

இவை எனது ஊகங்கள்.

2 minutes ago, குமாரசாமி said:

ஒரு பார்ப்பனம் சொல்கின்றது தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதியாம். அந்த பெண்ணுக்கு இங்கே ஒரு சிலர் ஆலவட்டம் பிடிக்கின்றார்கள். ஏனெனில் அவர் பெண்ணாம். 😁

மதுவந்தி பொம்பிளையா…இதென்ன புது புரளி🤣

5 minutes ago, பெருமாள் said:

அரசியலில் அதெல்லாம்  சகஜமுங்கோ 🤣

#பப்ளிக் #பப்ளிக் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இதை பற்றி ஸ்டாலினிடம் சீமான் மிக கடுமையாக, கிட்டதட்ட மிரட்டும் தொனியில் பேசி இருக்க கூடும். 

பயந்துபோய் ஸ்டாலின் இந்த திட்டத்தை இத்தோட நிறுத்தி விடுவார்.

இவை எனது ஊகங்கள்.

பாஸ் திமுக என்பது மாபெரும் கட்சி அவர்களின் நிதி மூலம்கள் உலகின் பல பகுதிகளிலும்  வேறு பெயர்களில் உள்ளன இலங்கையில் உள்ள கடன்களை ஒரே மூச்சில் அடைக்க கூடிய வல்லமை உள்ளவர்கள் . ஸ்டானிலுக்கு  நிர்வாக திறமை தற்போது இல்லையாகினும் ஆட்சி அதிகாரம் கொண்டுவந்துவிடும் இல்லையேல் பிஜேபி பருந்து கொத்தி விடும் இதுதான் யதார்த்தம் உங்கள் நக்கல் நளினம் திமுக ஆட்சியை முழுமையாக முடிக்கும் போது  வைத்து கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஒரு பார்ப்பனம் சொல்கின்றது தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதியாம். அந்த பெண்ணுக்கு இங்கே ஒரு சிலர் ஆலவட்டம் பிடிக்கின்றார்கள். ஏனெனில் அவர் பெண்ணாம். 😁

 

11 minutes ago, goshan_che said:

மதுவந்தி பொம்பிளையா…இதென்ன புது புரளி🤣

மதுவந்தியின் கணவர், மதுவந்தியிடம் இருந்து... விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறாராம்.

அதனால்... மதுவந்தி பெண் என்பது உறுதியாகின்றது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

பாஸ் திமுக என்பது மாபெரும் கட்சி அவர்களின் நிதி மூலம்கள் உலகின் பல பகுதிகளிலும்  வேறு பெயர்களில் உள்ளன இலங்கையில் உள்ள கடன்களை ஒரே மூச்சில் அடைக்க கூடிய வல்லமை உள்ளவர்கள் . ஸ்டானிலுக்கு  நிர்வாக திறமை தற்போது இல்லையாகினும் ஆட்சி அதிகாரம் கொண்டுவந்துவிடும் இல்லையேல் பிஜேபி பருந்து கொத்தி விடும் இதுதான் யதார்த்தம் உங்கள் நக்கல் நளினம் திமுக ஆட்சியை முழுமையாக முடிக்கும் போது  வைத்து கொள்ளுங்கள் .

நானும் அப்படித்தான் நினைத்தேன். தி மு கவில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எப்போதும் இருந்ததில்லை.

ஆனால் இன்றைக்கு சீமானின் பேட்டி பார்த்தீர்களா? கீழே இணைப்பு.

ஆட்சி மிக சிறப்பாக நடக்கிறது என்கிறார்.

அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

நாம்தான் இதுநாளும் தி மு க வை தப்பாக எடை போட்டு விட்டோமோ?

என்ன தான் அரசியல் நாகரிகம் என்றாலும் இந்த இனத்தின் பரம வைரிகளை சீமான் புகழமாட்டார்தானே?

முள்ளிவாய்க்கால் கொலையில் கருணாநிதிக்கு பங்கு என்றால், அவரின் படத்துக்கு கீழ் அவரின் மகனுடன் சீமான் ஒரு போதும் போஸ் கொடுக்க மாட்டார்தானே? (சீமான் ஒன்றும் திருமா இல்லையே).

ஆகவே திமுகவை நாம் தாம் பிழையாக எடை போட்டு விட்டோம் போலிருக்கு. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைத்தேன். தி மு கவில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எப்போதும் இருந்ததில்லை.

ஆனால் இன்றைக்கு சீமானின் பேட்டி பார்த்தீர்களா? கீழே இணைப்பு.

ஆட்சி மிக சிறப்பாக நடக்கிறது என்கிறார்.

அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

நாம்தான் இதுநாளும் தி மு க வை தப்பாக எடை போட்டு விட்டோமோ?

என்ன தான் அரசியல் நாகரிகம் என்றாலும் இந்த இனத்தின் பரம வைரிகளை சீமான் புகழமாட்டார்தானே?

முள்ளிவாய்க்கால் கொலையில் கருணாநிதிக்கு பங்கு என்றால், அவரின் படத்துக்கு கீழ் அவரின் மகனுடன் சீமான் ஒரு போதும் போஸ் கொடுக்க மாட்டார்தானே? (சீமான் ஒன்றும் திருமா இல்லையே).

ஆகவே திமுகவை நாம் தாம் பிழையாக எடை போட்டு விட்டோம் போலிருக்கு. 

 

 

பெரிதாய் பாய வேண்டாம் உங்கடை கருத்துக்கள் இதே யாழில் உள்ளன நாளைக்கு தேடி இணைத்து கொள்கிறேன் ஒருமணியாகி விட்டது கோப்பி கடை பக்கம் போகணும் அறுவார்  நாளை  சனிக்கிழமை 8 மணிக்கு தான் திறப்பார்கள் நமக்கு ஐந்துக்கு முழிப்பு வந்திடும் வம்புக்கு இருமணி நேரம் கண்ணை முடிக்கிடப்பது நரக  வேதனை . இனிய இரவு அனைவருக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.