Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

பெரிதாய் பாய வேண்டாம் உங்கடை கருத்துக்கள் இதே யாழில் உள்ளன நாளைக்கு தேடி இணைத்து கொள்கிறேன் ஒருமணியாகி விட்டது கோப்பி கடை பக்கம் போகணும் அறுவார்  நாளை  சனிக்கிழமை 8 மணிக்கு தான் திறப்பார்கள் நமக்கு ஐந்துக்கு முழிப்பு வந்திடும் வம்புக்கு இருமணி நேரம் கண்ணை முடிக்கிடப்பது நரக  வேதனை . இனிய இரவு அனைவருக்கும் .

இனிய இரவாகட்டும். 5-8 நான் எழுதியவற்றை தேடி எடுங்கோ🤣.

 

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

பெரிதாய் பாய வேண்டாம் உங்கடை கருத்துக்கள் இதே யாழில் உள்ளன நாளைக்கு தேடி இணைத்து கொள்கிறேன் ஒருமணியாகி விட்டது கோப்பி கடை பக்கம் போகணும் அறுவார்  நாளை  சனிக்கிழமை 8 மணிக்கு தான் திறப்பார்கள் நமக்கு ஐந்துக்கு முழிப்பு வந்திடும் வம்புக்கு இருமணி நேரம் கண்ணை முடிக்கிடப்பது நரக  வேதனை . இனிய இரவு அனைவருக்கும் .

இனிய இரவுகள் பெருமாள், கோசான், குமாரசாமி அண்ணை. 🙏🏽

இந்தத் திரி... இண்டைக்கு முழுக்க காய்ஞ்சு கிடக்குது என்று கவலையில் இருக்க, 😢

கடைசி நேரத்தில்.... சூடு பறக்க வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 😂

நானும்... எனது நித்திரையை தொடரப் போகின்றேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

சிங்கங்கள விடுங்கோ. கொள்கையில்லாத ஆட்கள்.

நாங்கள் அப்படியா? திமுக இந்த இனத்தின் வரலாற்று எதிரி. 

சமரசம் இன்றி களமாடுவோம்.

ஈழப்படுகொலையில் கருணாநிதி கூட்டு குற்றவாளி.

ஒரு போதும் இனி திமுக ஆட்சி கட்டிலில் ஏற, நாம் தமிழர் விடமாட்டோம். 

மண்டியிடா மானம்….

 

சீமான் முன்னாள் முதல்வர் எடப்பாடியை சந்தித்த போது தங்கள் உள்மனம் என்ன கூறியது மிஸ்டர் கோசான்? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சீமான் முன்னாள் முதல்வர் எடப்பாடியை சந்தித்த போது தங்கள் உள்மனம் என்ன கூறியது மிஸ்டர் கோசான்? 😜

அதற்கு முன்பே அதிமுகவிற்கு வாக்கே கேட்டுவிட்டாரே ஆதலால் அதிகம் ஷாக் ஆகவில்லை.

சீமான் ஒரு போதும் அதிமுகவை இனத்தின் எதிரி, இவர்களை அழித்து விட்டுத்தான் மறுவேலை, எழவே விடமாட்டோம் என்று பேசவில்லை. ஆகவே அவர் எடப்பாடியை சந்தித்ததை ஒரு அரசியல் நிகழ்வாக கருத முடியும்.

ஆனால் சசிகலாவை அக்யுஸ்ட் நம்பர் 2. ஊழல்காரி என்று சொல்லி விட்டு, அவரிடம் போய் பயமாக கைகட்டி, எடப்பாடியிடம் தூது போகவா எண்டு கேட்டபோது - சீமான் இப்படித்தான் என்ற என் கணிப்பு இன்னும் பிழைக்கவில்லை என்று கருதி கொண்டேன்.

ஆனால் சீமான் அதிமுகவை விமர்சிப்பதற்கும் திமுகவை விமர்சிப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.

திமுக இனத்தின் எதிரி, பாஜக மனித குல எதிரி என்றார். அதிமுகவை இப்படி சொன்னதில்லை. 

கருணாநிதியியும், ஸ்டாலின் உட்பட்ட திமுகவும் முள்ளிவாய்காலில் கூட்டு குற்றவாளிகள் என்றார். 

மேலே அவர் சொன்னது உண்மை என்றால் எந்த நிலையிலும், ஸ்டாலின் ஆட்சியில் தேனாறே ஓடினாலும் அவர் ஸ்டாலினை அவர் ஆட்சியை புகழக்கூடாது. அதுவும் கருணாநிதி படத்தின் கீழ் நின்று போஸ் கொடுப்பதெல்லாம் அடுத்த லெவல்.

சீமான் என்ன வேணும் எண்டாலும் செய்யாட்டும். எல்லாருக்கும் வயிறு இருக்கு, எல்லாருக்கும் பசிக்கும்.

ஆனால் ஒவ்வொரு முறை சீமான் இப்படி செய்யும் போதும் தமிழ் நாட்டில் சிறுக சிறுக காயடிக்க படுகிறது தமிழ் தேசிய அரசியல். 

சித்தப்பா எடப்பாடி ஆளும் போது அந்த ஆட்சி நல்லாருக்கு என்றார். பங்காளி ஸ்டாலின் ஒரு மாதம் கூட ஆகவில்லை ஓடிப்போய் ஆட்சி நல்லா இருக்கெண்டு சொல்றார்.

அப்ப மாறி, மாறி திராவிட கட்சி நல்ல ஆட்சி கொடுத்தா, என்னத்துக்கு நீங்கள் தனியா தமிழ் தேசிய அரசியல் செய்யவேணும்.

இதன் மூலம் தமிழ் நாட்டு மக்கள் மனதில் பதிய வைக்கப்படுவது எது?

1. இரெண்டு திராவிட கட்சி ஆட்சியும் நல்லம்

2. தமிழ் தேசியம் பேசுவோரும் - சந்தர்பவாத அரசியல்வாதிகளே

3. என்ன தமிழ் தேசியம் பேசினாலும் கடைசியில் திராவிட கட்சியிடம்தான் சரணடைய வேண்டும்.

இதைதான் நான் ஆரம்பம் முதலே எழுதுகிறேன். சீமான் தமிழ் தேசிய அரசியலை தமிழ் நாட்டில் உக்கிரமாக எழும்பவிடாது தடுத்து, காயடிக்க அமர்த்தபட்ட ஆள்.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

சித்தப்பா எடப்பாடி ஆளும் போது அந்த ஆட்சி நல்லாருக்கு என்றார். பங்காளி ஸ்டாலின் ஒரு மாதம் கூட ஆகவில்லை ஓடிப்போய் ஆட்சி நல்லா இருக்கெண்டு சொல்றார்.

அப்ப மாறி, மாறி திராவிட கட்சி நல்ல ஆட்சி கொடுத்தா, என்னத்துக்கு நீங்கள் தனியா தமிழ் தேசிய அரசியல் செய்யவேணும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

 

தற்போதைய நிலையில்.. அரசுக் கட்டில் இருப்பவர்களின் செயற்பாடு நாட்டு மக்களுக்கு திருப்தியாக உள்ளது குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்.

இதுக்கு இந்த மேதாவி... தி மு கவின் அரசியலே திருப்தியாக இருக்கு என்று மாங்கு மாங்கென்று கத்துவதுதான் வேடிக்கை விநோதம்.

சீமான் நடந்துவது தனியாளுக்கான கட்சி அல்ல. மக்களுக்கான கட்சி. தமிழ் மக்களுக்கான கட்சி. அந்த வகையில் மக்களை ஆள்பவர்களை சந்தித்து மக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி.. மக்களின் நலன் குறித்துப் பேச வேண்டியது மக்கள் தலைவனின் கடமை. 

அந்த வகையில்.. சீமான் ஜெயலலிதாவை சந்திருக்கிறார்.. கருணாநிதியை சந்தித்திருக்கிறார்.. சசிகலாவை சந்தித்திருக்கிறார்.. ஸ்ராலினையும் சந்திருக்கிறார். மக்களுக்காக கள நிலவரத்தை உணர்ந்து செயற்படுபவனே தலைவன். அதனை சீமான் சரியாகவே செய்கிறார்.

இதே ஸ்ராலின் ஆட்சி மக்கள் நலனை துச்சமென மிதிக்கும் நிலை ஏற்பட்டால்.. அதனை எதிர்த்துப் போராடவும் செய்வார் சீமான். 

ஆனால் ஒருபோதும்.. சீமானுக்கு நாம் தமிழ் கட்சிக் கொள்கைகளுக்கு தி மு க ஸ்ராலின் தி மு க ஈடாகாது.

ஈழத்தமிழர் விவகாரத்தில் 2009 மே இனப்படுகொலையில் தி மு க கூட்டுப்பங்காளி என்பதும்.. மாறாது. அது தி மு க செய்த வரலாற்று பெருந்துரோகம்.  வேணுன்னா.. அதற்கு பிராச்சித்தம் தேடும் வழிகளை தி மு க ஸ்ராலினுக்கு உணரச் செய்வது நல்லம். 

எம்மை அழிந்தவனுக்கே எம் மக்களை வாக்களிக்கச் சொன்ன கூட்டத்தோடு ஒப்பிடுகையில்.. சீமான் ஸ்ராலினை தன் சொந்த மக்களின் நலன் கருதி சந்தித்தது.. எவ்வளவோ பரவாயில்லை. சீமான் மக்களுக்கான அரசியல் தலைவன் ஆகிறார். 

வாழ்த்துக்கள் சீமான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதைதான் நான் ஆரம்பம் முதலே எழுதுகிறேன். சீமான் தமிழ் தேசிய அரசியலை தமிழ் நாட்டில் உக்கிரமாக எழும்பவிடாது தடுத்து, காயடிக்க அமர்த்தபட்ட ஆள்.

சீமானுக்கு முதல் தமிழ் தேசியம் என்றால் என்ன என்றே தெரியாமல் தான் தமிழக மக்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த உண்மையை முதலில் நீங்கள் உள்வாங்கனும். அப்படியில்லைன்னா.. அந்தக் காலத்தில் மா பொ சி போன்றவர்கள் உருவாக்கிய தமிழ் தேசியம் இன்று தமிழகத்தை ஆளும் சக்தியாக இருந்திருக்கனும்.

ஆனால் சீமானின் அரசியல் வரவுக்குப் பின் தான் திராவிடப் போலிகளே தமிழ் தேசியத்தை உணரினம் என்றால்.. சீமான் சரியாகத்தான் செயற்படுகிறார் என்று பொருள்.

அரசிலில் மக்களின் நலன் சார்ந்து எல்லாத்தையும் எதிர்க்கனுன்னு இல்லை. சனநாயக அரசியலில் உள்ள சீமான் மக்கள் சிந்தனைக்கு அப்பால் போய் நின்று கொண்டு ஸ்ராலினை சதா திட்டிக்கிட்டிருக்கனுன்னு எதிர்பார்ப்பது.. தங்களின் அரசியல் அறியாமையா அல்லது சீமானை சதா கடிந்துகொண்டே இருக்கனுன்ன ஒரு மனநிலையா..??!

மற்றும் படி.. சீமானுக்கு நாம் தமிழர் கட்சிக்கு.. அதன் கொள்கைக்களுக்கு.. தி மு க ஸ்ராலின் ஈடாக முடியாது. 2009 ஈழத்து தமிழினப் படுகொலையில்.. தி மு க கருணாநிதி பெருந்துரோகம்.. வரலாற்றில் மறக்கப்படவும் முடியாது. சீமானின் இருப்பு.. தமிழர் தேசங்களில் தமிழ் தேசிய இன இருப்புக்கு மிக முக்கியம். தி மு க போலிகளை சிறுகச் சிறுகத்தான் தமிழ் தேசியப் பரப்பில் தமிழர் நிலத்தில் இருந்தும் அகற்ற முடியும். ஒரேயடியாக ஒரே இரவில்.. இதனை சனநாயகப் பண்புகளை மதித்துக் கொண்டு செய்ய முடியாது. 

தமிழை காட்டுமிராண்டிப் பாசை என்ற ஈ வே ராவினை தந்தையாக வரிந்து கொண்ட தி மு க தலைவன் கருணாநிதி தான்.. தமிழை செம்மொழி என்றும் மொழிந்தார்.  இப்படி ஆயிரம் முரணகைகளோடு தான் தமிழர் நிலத்தில்.. தமது திராவிடத் திணிப்பை மாற்று மொழி வழி வந்தோர் திணித்து வருகின்றனர். இவர்களை வெல்வது என்பது ஓரிரு இரவுகளில்.. ஆண்டுகளில் நடக்கும் சாத்தியமில்லை. 50 ஆண்டு கால விசச் செடியை.. 10 ஆண்டில்.. பிடுங்கி எறிய முடியாத படி அது தமிழகத்தில் ஆழ வேரூன்றி உள்ளது. ஆனால்.. அதனைப் பிடுங்கி எறியாமல்.. தமிழர்களுக்கு உண்மையான மலர்ச்சியும் இல்லை விடுதலையும் இல்லை தேசமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

சீமானுக்கு முதல் தமிழ் தேசியம் என்றால் என்ன என்றே தெரியாமல் தான் தமிழக மக்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த உண்மையை முதலில் நீங்கள் உள்வாங்கனும். அப்படியில்லைன்னா.. அந்தக் காலத்தில் மா பொ சி போன்றவர்கள் உருவாக்கிய தமிழ் தேசியம் இன்று தமிழகத்தை ஆளும் சக்தியாக இருந்திருக்கனும்.

ஆனால் சீமானின் அரசியல் வரவுக்குப் பின் தான் திராவிடப் போலிகளே தமிழ் தேசியத்தை உணரினம் என்றால்.. சீமான் சரியாகத்தான் செயற்படுகிறார் என்று பொருள்.

அரசிலில் மக்களின் நலன் சார்ந்து எல்லாத்தையும் எதிர்க்கனுன்னு இல்லை. சனநாயக அரசியலில் உள்ள சீமான் மக்கள் சிந்தனைக்கு அப்பால் போய் நின்று கொண்டு ஸ்ராலினை சதா திட்டிக்கிட்டிருக்கனுன்னு எதிர்பார்ப்பது.. தங்களின் அரசியல் அறியாமையா அல்லது சீமானை சதா கடிந்துகொண்டே இருக்கனுன்ன ஒரு மனநிலையா..??!

மற்றும் படி.. சீமானுக்கு நாம் தமிழர் கட்சிக்கு.. அதன் கொள்கைக்களுக்கு.. தி மு க ஸ்ராலின் ஈடாக முடியாது. 2009 ஈழத்து தமிழினப் படுகொலையில்.. தி மு க கருணாநிதி பெருந்துரோகம்.. வரலாற்றில் மறக்கப்படவும் முடியாது. சீமானின் இருப்பு.. தமிழர் தேசங்களில் தமிழ் தேசிய இன இருப்புக்கு மிக முக்கியம். தி மு க போலிகளை சிறுகச் சிறுகத்தான் தமிழ் தேசியப் பரப்பில் தமிழர் நிலத்தில் இருந்தும் அகற்ற முடியும். ஒரேயடியாக ஒரே இரவில்.. இதனை சனநாயகப் பண்புகளை மதித்துக் கொண்டு செய்ய முடியாது. 

தமிழை காட்டுமிராண்டிப் பாசை என்ற ஈ வே ராவினை தந்தையாக வரிந்து கொண்ட தி மு க தலைவன் கருணாநிதி தான்.. தமிழை செம்மொழி என்றும் மொழிந்தார்.  இப்படி ஆயிரம் முரணகைகளோடு தான் தமிழர் நிலத்தில்.. தமது திராவிடத் திணிப்பை மாற்று மொழி வழி வந்தோர் திணித்து வருகின்றனர். இவர்களை வெல்வது என்பது ஓரிரு இரவுகளில்.. ஆண்டுகளில் நடக்கும் சாத்தியமில்லை. 50 ஆண்டு கால விசச் செடியை.. 10 ஆண்டில்.. பிடுங்கி எறிய முடியாத படி அது தமிழகத்தில் ஆழ வேரூன்றி உள்ளது. ஆனால்.. அதனைப் பிடுங்கி எறியாமல்.. தமிழர்களுக்கு உண்மையான மலர்ச்சியும் இல்லை விடுதலையும் இல்லை தேசமும் இல்லை. 

மீண்டும் ஒரு அரசியல் திரியில் உங்களை காண்பதில் மகிழ்சி,

இவ்வளவு மோசமாக தமிழகத்தில் ஒரு விச செடி வேரூன்றி உள்ள போது - அதை சமரசம் இன்றி போராடி வேரறுக்க வேண்டாமா?

கொரோனா நிதியை கட்டாயம் ஸ்டாலினிடம், கருணாநிதி படத்தின் கீழ் வைத்துதான் கொடுக்க வேண்டுமா?

ஆட்சி எப்படி என்றால்? இப்போதுதான் வந்துள்ளார்கள், செயல்பாட்டை பார்த்துத்தான் சொல்ல முடியும் என்பதுதானே ஒரு காத்திரமான எதிர்கட்சி சொல்லும் பதில்.

எல்லா அமைச்சர்களும் நன்றாக வேலை செய்கிறார்கள், நான் போன் போட்டு பேசுகிறேன் என்ற நற்சான்றிதழ் ஏன்?

மேற்கு நாடுகளில் கூட எதிர் கட்சியை இப்படி யாரும் புகழ்வதில்லை. என் பார்வையில் இது கண்ணியம் இல்லை - கூழை கும்பிடு.

கொள்கையளவில் - கருணாநிதியின் துரோகத்தை, அண்ணாவுக்கு பின்னான இரு திராவிட கட்சிகளின் ஊழலை - திராவிட அரசியல் மீது சுமத்துவதோ, அல்லது, 600 வருடங்களாக அந்த மண்ணில் வாழ்ந்துவரும் மக்களை (யாருக்கும் எத்தனை சதவீதம் என்ற தெளிவில்லை) வந்தேறிகள் என்று சொல்வதிலோ எனக்கு உடன்பாடில்லை. இந்த அரசியல் தமிழ் தேசியத்தை குறுக்குமே தவிர பெருக்காது.

ஆனால் மொழிவாரி மாநில பிரிப்புக்கு பின் தமிழ் தேசியம் திராவிடத்தை பிரதியீடு செய்யவேண்டும் என்பதே என் அவாவும்.

நீங்கள் சொல்வது போல் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு நிலையை 1% அளவில் இருந்து 8% வரை உயர்த்தியவர் சீமான். இது மறுக்கவியலாத உண்மை.

ஆனால் இதன் விலை என்ன?

இன்று தமிழ் நாட்டில் மூர்கமாக புலிகளை, இலங்கை தமிழரை எதிர்போரை  2009 இல் இருந்த 6% இல் இருந்து இப்போ 35-40% வரை கூட்டி உள்ளார் என்பது என் கணிப்பு. 2009 வரை என் தனி அனுபவத்திலும், பொது ஊடக, சமூக பரப்பிலும், புலிகளை active ஆக எதிர்க்கும் தமிழ் நாட்டவர்கள் மிக குறைவு. பிராமண, காங்கிரஸ், ஆர் எஸ் எஸ் காரர்களை விட மிகுதியானோர் ஒன்றில் பரிவாக இருந்தார்கள் அல்லது கவனத்தில் எடுக்காமல் இருந்தார்கள். 

ஆனால் இன்று அப்படி அல்ல. மிக மோசமாக திமுகவை, அதன் ஆதரவு வட்டத்தை சீண்டி - அத்தனை பேரையும் எமக்கு 100% எதிராக திருப்பி விட்டுள்ளார் சீமான். 

சமூக வலைதளத்தில், தமிழனை தமிழன் அகதி என்றும், தெலுங்கு வந்தேறி என்றும், இன்னும் எழுத முடியாதா வார்த்தைகளாலும் அர்சிக்கிறார்கள்.

எமக்கு மிகவும் வேண்டபடும் ஒரு மண்ணில், புதிதாக பல எதிரிகளை உருவாக்கி தந்துள்ளார்.

எமது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் கணிசமான அளவு மக்களுக்கும், எமக்கும் இடையே மிக பெரிய பிளவு ஒன்று ஏற்படுத்தபட்டு விட்டது.

இது சீமானின் நேரடி பங்களிப்பால் நடந்தது.

இதை நான் ஒரு சதியாகவே காண்கிறேன்.

இத்தனை பிரிவினையையும் நம்மிடையே ஏற்படுத்தி விட்டு, அவர் போய் ஸ்டாலினிடம் ஐக்கியமாகி விட்டார்.

மேலே நீங்கள் எழுதியதில் எனக்கு பல கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் உங்கள் பதிலில் ஒரு கொள்கை தெளிவும், உண்மையும் இருக்கிறது. 

துரதிஸ்டவசமாக சீமானிடம் உண்மை இல்லை, அதனால் இந்த கொள்கை தெளிவும் இல்லை.

பிகு: நேரம் கிடைக்கும் போது, இன்னும் வாசித்திருக்காவிட்டால், ந. முத்துகுமார் என்ற நாம்தமிழர் ஆரம்ப உறுப்பினர், அவரின் மர்ம கொலை பற்றி ஆராய்ந்து பாருங்கள்.

நான் அறிந்தவரையில், முத்துகுமார் ஆயுதவழி பற்றுள்ள தமிழ் தேசியர். வன்னியில் சில வருடம் இருந்தவர் என்கிறார்கள். சீமானை வழி நடத்த தமிழ்நாடு அனுப்பபடுகிறார். அவரின் வழிகாட்டலில் நாம் தமிழரை சீமான் உருவாக்குகிறார். விசயம் கைமீறுவதை கண்ட இந்திய புலனாய்வு, இருவரையும் தமது வழிக்கு வர மிரட்டுகிறது. இருவரும் எதிர்கிறார்கள். முத்துகுமாரை கொலை செய்து, சீமானுக்கு பயத்தை காட்டி, சீமானை தம் கட்டுப்பாட்டில் எடுக்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் இருக்காது என்பது தெரிந்ததே. இதை கோசான் சொல்லும் கதை என இலகுவாக கடந்து போகலாம்.

ஆனால் சீமானின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த தியரிக்கு சான்று பகர்வதாயே அமைகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம்  உள்ள மாநில முதல்வரிடம் சென்று தமது கோரிக்கைகளை வைக்க முடியாது போல் உள்ளது.

ஏற்கனவே சுந்தரவள்ளி  ஒரு கேடுகெட்ட அரசியல்வாதி. இப்படியிருக்க ஆதார வீடியோ வேறை.....சப்பா முடியல 😁

Link to comment
Share on other sites

45 minutes ago, குமாரசாமி said:

அதிகாரம்  உள்ள மாநில முதல்வரிடம் சென்று தமது கோரிக்கைகளை வைக்க முடியாது போல் உள்ளது.

ஏற்கனவே சுந்தரவள்ளி  ஒரு கேடுகெட்ட அரசியல்வாதி. இப்படியிருக்க ஆதார வீடியோ வேறை.....சப்பா முடியல 😁

சுந்தரவள்ளி கேடுகெட்ட அரசியல்வாதி? உதெப்ப நடந்தது? 🤭😀

பாத்தியளே எல்லாரும் மறைச்சுப்போட்டினம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாநிலத்தின் முதல்வரை  சந்திப்பதும்

அவருக்கு அவசரகால நிதி தருவதும்

அவசர  கால  நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் திருப்திகரமாக  இருந்தால் வரவேற்பதும்

சரியாகவே  படுகிறது

அந்த  நிதிப்பங்களிப்பில் முதல்வர் தனது தந்தையின் படத்தை  வைத்து  நாடகம் நடாத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்ற போதும்.

ஆனால் இனி சீமான் 

ஸ்ராலினை 

திமுகவை சாடும்போது இங்கே  எழுதுபவர்கள் எதை  எழுதப்போகிறார்கள் என்று  தான் தலையை  உடைக்கவேண்டியுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

ஆனால் இனி சீமான் 

ஸ்ராலினை 

திமுகவை சாடும்போது இங்கே  எழுதுபவர்கள் எதை  எழுதப்போகிறார்கள் என்று  தான் தலையை  உடைக்கவேண்டியுள்ளது

நம்ம தோஸ்த்து முகப்புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கின்றார்.

தமிழர்கள் உணர்ச்சிகளின் அடிமை. 

ஸ்டாலின் சீமானின் தந்தை உயிர் நீத்தபோது துக்கம் விசாரித்தார். அது சீமானை நெகிழ வைத்தது. 
அதன் அடிப்படையிலான உணர்வு  தான் சீமானை  ஸ்டாலினை சந்தித்து பேச வைத்தது. 

 பண்பு. மாண்பு என்கிற வகையில் இச்செயலை என்னால் விமர்சிக்க முடியாது. கொள்கை கோட்பாடு என்கிற வகையில் அல்லது கட்சி என்கிற வகையில் ஒரு இறுக்கமான மனநிலையை சகமனிதர்கள் மீது செலுத்துவதை நான் விரும்பவில்லை.

இருப்பினும் சீமானின் ஸ்டாலின் உடனான சந்திப்பு என்பது ஸ்டாலின் மீதும் திமுக மீதும் சீமானும் நாம் தமிழர் அமைப்பும்  வைத்த குற்றச் சாட்டுகளை தாண்டி ஒரு வெள்ளையடிப்பாக மாறி நிற்கிறதோ  என்கிற ஐயத்தின் உண்மைத் தன்மையை எதிர்காலம் நிச்சயமாக காண்பிக்கும். 

இந்தியாவின் இந்துத்தாவின் காலதிகால தமிழர் வெறுப்பு மனோநிலையை தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகளை எதிர்த்து போராட வேண்டுமெனில் தமிழகத்தின் முற்போக்குச் சக்திகளுடனும், திராவிடக் கட்சிகளுடனும் சீமான் கைகோர்க்கத்தான் வேண்டும். 

அந்தக் கைகோர்ப்பு என்பது நாம் தமிழர் கட்சி தமது அடையாளத்தை இழப்பதாக அமையக் கூடாது. 

சிறந்த மேடைப் பேச்சாளராக இருப்பவர்கள் எல்லாம் புரட்சியாளர்கள் அல்ல,   . சீமானும் நாம் தமிழர் அமைப்பும் புரட்சிவாத கூறுகளை கொண்டிருக்கிறார்களே ஒழிய ஒரு முழுநிலை புரட்சிக்குரிய வீச்செல்லையை அடைந்தவர்களாக இல்லை.

அதே நேரம் புரட்சியாளன் எங்கெங்கெல்லாம் சமரசம் செய்யக் கூடாது என்பதையும் அறிந்தே வைத்திருக்க வேண்டும்.

மிக உன்னதமான பல நோக்கங்களோடு நாம் தமிழர் அமைப்பை நோக்கி திரட்சியுறுகிற இளைஞர்களின் எண்ணங்களுக்கு, கனவுகளுக்கு, நம்பிக்கைக்கு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக சீமான் இருக்க வேண்டும்.”

 

ஒரு பதில் இப்படி வந்திருக்கு:

”சீமான் சிறந்த பேச்சாளர் என்பது வெளிப்படை ஆனால் புரட்சியாளன் என்பதில் உடன்பாடில்லை. சீமானின் அரசியல் என்பது தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் தன்னிலை சார்பு கொண்டதாக நான் உணர்கின்றேன். விமர்சனம் என்பது மிகப் பெரிய முதலீடாக உள்ளது. தீர்வுகள் என்ன அடைவு நிலை என்ன என்பதெல்லாம் குறைகளாக உள்ளன. 
சீமானின் அரசியல் திராவிட கட்சிகளுக்கோ, தமிழகத்திற்கோ, உலக தமிழர்களுக்கோ ஓர் வழிகாட்டியாக அமையாது என்பது என் கருத்து.
அரசியலில் பேசு பொருளாக மட்டுமே சீமானால் வலம் வர முடியும். மாற்றத்திற்கான அரசியலில் அவரை ஏற்பது என்பது பல முறை கேள்விக்குட்படுத்த வேண்டிய வினாவாகும்.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

நம்ம தோஸ்த்து முகப்புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கின்றார்.

தமிழர்கள் உணர்ச்சிகளின் அடிமை. 

ஸ்டாலின் சீமானின் தந்தை உயிர் நீத்தபோது துக்கம் விசாரித்தார். அது சீமானை நெகிழ வைத்தது. 
அதன் அடிப்படையிலான உணர்வு  தான் சீமானை  ஸ்டாலினை சந்தித்து பேச வைத்தது. 

 பண்பு. மாண்பு என்கிற வகையில் இச்செயலை என்னால் விமர்சிக்க முடியாது. கொள்கை கோட்பாடு என்கிற வகையில் அல்லது கட்சி என்கிற வகையில் ஒரு இறுக்கமான மனநிலையை சகமனிதர்கள் மீது செலுத்துவதை நான் விரும்பவில்லை.

இருப்பினும் சீமானின் ஸ்டாலின் உடனான சந்திப்பு என்பது ஸ்டாலின் மீதும் திமுக மீதும் சீமானும் நாம் தமிழர் அமைப்பும்  வைத்த குற்றச் சாட்டுகளை தாண்டி ஒரு வெள்ளையடிப்பாக மாறி நிற்கிறதோ  என்கிற ஐயத்தின் உண்மைத் தன்மையை எதிர்காலம் நிச்சயமாக காண்பிக்கும். 

இந்தியாவின் இந்துத்தாவின் காலதிகால தமிழர் வெறுப்பு மனோநிலையை தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகளை எதிர்த்து போராட வேண்டுமெனில் தமிழகத்தின் முற்போக்குச் சக்திகளுடனும், திராவிடக் கட்சிகளுடனும் சீமான் கைகோர்க்கத்தான் வேண்டும். 

அந்தக் கைகோர்ப்பு என்பது நாம் தமிழர் கட்சி தமது அடையாளத்தை இழப்பதாக அமையக் கூடாது. 

சிறந்த மேடைப் பேச்சாளராக இருப்பவர்கள் எல்லாம் புரட்சியாளர்கள் அல்ல,   . சீமானும் நாம் தமிழர் அமைப்பும் புரட்சிவாத கூறுகளை கொண்டிருக்கிறார்களே ஒழிய ஒரு முழுநிலை புரட்சிக்குரிய வீச்செல்லையை அடைந்தவர்களாக இல்லை.

அதே நேரம் புரட்சியாளன் எங்கெங்கெல்லாம் சமரசம் செய்யக் கூடாது என்பதையும் அறிந்தே வைத்திருக்க வேண்டும்.

மிக உன்னதமான பல நோக்கங்களோடு நாம் தமிழர் அமைப்பை நோக்கி திரட்சியுறுகிற இளைஞர்களின் எண்ணங்களுக்கு, கனவுகளுக்கு, நம்பிக்கைக்கு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக சீமான் இருக்க வேண்டும்.”

 

ஒரு பதில் இப்படி வந்திருக்கு:

”சீமான் சிறந்த பேச்சாளர் என்பது வெளிப்படை ஆனால் புரட்சியாளன் என்பதில் உடன்பாடில்லை. சீமானின் அரசியல் என்பது தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் தன்னிலை சார்பு கொண்டதாக நான் உணர்கின்றேன். விமர்சனம் என்பது மிகப் பெரிய முதலீடாக உள்ளது. தீர்வுகள் என்ன அடைவு நிலை என்ன என்பதெல்லாம் குறைகளாக உள்ளன. 
சீமானின் அரசியல் திராவிட கட்சிகளுக்கோ, தமிழகத்திற்கோ, உலக தமிழர்களுக்கோ ஓர் வழிகாட்டியாக அமையாது என்பது என் கருத்து.
அரசியலில் பேசு பொருளாக மட்டுமே சீமானால் வலம் வர முடியும். மாற்றத்திற்கான அரசியலில் அவரை ஏற்பது என்பது பல முறை கேள்விக்குட்படுத்த வேண்டிய வினாவாகும்.”

 

இது மனித மூளையின் வேலை

அப்படியென்றால் இப்படி   என்பதும்

இப்படியென்றால் அப்படி  என்பதும்....

மிக உன்னதமான பல நோக்கங்களோடு நாம் தமிழர் அமைப்பை நோக்கி திரட்சியுறுகிற இளைஞர்களின் எண்ணங்களுக்கு, கனவுகளுக்கு, நம்பிக்கைக்கு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக சீமான் இருக்க வேண்டும்.”

இந்த  விதமான 100வீத  தூய்மைவாதிகளின் எதிர்பார்ப்புக்களே சீமான்  மீது சுமைகளை வைக்கின்றன

ஆனால் என்ன  இந்த  தூயவாதிகளே சீமானை தூற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

 

இது மனித மூளையின் வேலை

அப்படியென்றால் இப்படி   என்பதும்

இப்படியென்றால் அப்படி  என்பதும்....

மிக உன்னதமான பல நோக்கங்களோடு நாம் தமிழர் அமைப்பை நோக்கி திரட்சியுறுகிற இளைஞர்களின் எண்ணங்களுக்கு, கனவுகளுக்கு, நம்பிக்கைக்கு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக சீமான் இருக்க வேண்டும்.”

இந்த  விதமான 100வீத  தூய்மைவாதிகளின் எதிர்பார்ப்புக்களே சீமான்  மீது சுமைகளை வைக்கின்றன

ஆனால் என்ன  இந்த  தூயவாதிகளே சீமானை தூற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள்

உண்மை! குருவி தலையில் பனங்காயை வைத்தது போல இருக்கும், சீமானிடம் வழிகாட்டலை எதிர்பார்ப்பது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

சுந்தரவள்ளி கேடுகெட்ட அரசியல்வாதி? உதெப்ப நடந்தது? 🤭😀

பாத்தியளே எல்லாரும் மறைச்சுப்போட்டினம்🤣

மிக மோசமாக, டிவி நிகழ்வு ஒன்றில், ஒரு பிஜேபி துறவி மீது அவர் நடாத்திய தூசனை அர்ச்சனை, சுந்தரவள்ளியை ஒரு பெண்ணாக கருத முடியாத அளவுக்கு, இருந்ததே.

அது எப்ப நடந்தது என்று கேட்க மாட்டீர்கள்  என்று நினைக்கிறேன்.

சீமான் மீதான உங்கள் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, இந்த பெண்மணி விடீயோக்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றும் அதனை இங்கே இணைகிறீர்கள் என்பதும், சங்கடத்தினை உண்டாக்குகிறது.

சுந்தரவள்ளி உங்கள் கவனத்தினை பெற வேண்டிய, ஒரு பெண் என்று நான் நினைக்கவில்லை, அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் முன் உள்ள பெரும் சவால், எழுவர் விடுதலை.... அதனை பெற ஒத்துழைப்பு கொடுப்பது.

இன்றய நிலையில், ஒவொருவராக பரோலில் அனுப்பி, அதனை நீடித்துக் கொண்டு இருப்பது..... மக்கள் மறந்த ஒரு நாளில், அதனை நிரந்தரமாக்குவதே சிறந்த செயல்.

அதனை சாத்தியமாக்குவதே ஒரு தலைமைத்துவம் காட்டக்கூடிய சிறப்பான செயல்பாடு.

1 % to 7%.... 

நதி பாட்டுக்கு போய் கிட்டே இருக்கும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

உண்மை! குருவி தலையில் பனங்காயை வைத்தது போல இருக்கும், சீமானிடம் வழிகாட்டலை எதிர்பார்ப்பது!

முழுமையாக ஒத்துக்கொள்கின்றேன்

உங்கள்  எதிர்பார்ப்புத்தான் தவறு  என்று பலமுறை  இங்கு  எழுதிவிட்டேன்

எனக்கு  தமிழகத்தில் என்ன  வேண்டுமோ எது நடந்தே வருகிறது

அதை இனி  எவருமே

ஏன் சீமானால்  கூட மாற்றமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

சீமான் சிறந்த பேச்சாளர் என்பது வெளிப்படை ஆனால் புரட்சியாளன் என்பதில் உடன்பாடில்லை. சீமானின் அரசியல் என்பது தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் தன்னிலை சார்பு கொண்டதாக நான் உணர்கின்றேன். விமர்சனம் என்பது மிகப் பெரிய முதலீடாக உள்ளது. தீர்வுகள் என்ன அடைவு நிலை என்ன என்பதெல்லாம் குறைகளாக உள்ளன. 
சீமானின் அரசியல் திராவிட கட்சிகளுக்கோ, தமிழகத்திற்கோ, உலக தமிழர்களுக்கோ ஓர் வழிகாட்டியாக அமையாது என்பது என் கருத்து.
அரசியலில் பேசு பொருளாக மட்டுமே சீமானால் வலம் வர முடியும். மாற்றத்திற்கான அரசியலில் அவரை ஏற்பது என்பது பல முறை கேள்விக்குட்படுத்த வேண்டிய வினாவாகும்.”

இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன் ..உண்மையான...அருமையான...கருத்து  மேலும்  நாம் தமிழர் கட்சி என்பது  நாம் தமிழர் கட்சி இல்லை. மாறாக. அது நான். (சீமான்) தமிழர் கட்சியாகும்.....அவர். விருப்பியது எல்லாம்  செய்ய முடியும்  சரி. பிழை. பார்க்க முடியாது...கேட்டு  கேள்வியுமிருக்கப்படாது.  சோனியா காந்தி.

மோடி.....மகிந்த....கோத்தபாய....போன்றேரும்.  ...இவரது. தகப்பனாரின். மறைவுக்கு 

இரங்கல் தெரிவித்தால்.  அறுதல் கூறினால். அவர்களையும்....அவர்களின் செயல்பாடுகளையும்.  புகழ்த்து. இருப்பார்.  தமிழருக்கு  தலைமை வகிக்க இவருக்கு எந்தத்தகுதியுமில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

இந்தக் கருத்துடன் நான் உடன்படுகிறேன் ..உண்மையான...அருமையான...கருத்து  மேலும்  நாம் தமிழர் கட்சி என்பது  நாம் தமிழர் கட்சி இல்லை. மாறாக. அது நான். (சீமான்) தமிழர் கட்சியாகும்.....அவர். விருப்பியது எல்லாம்  செய்ய முடியும்  சரி. பிழை. பார்க்க முடியாது...கேட்டு  கேள்வியுமிருக்கப்படாது.  சோனியா காந்தி.

மோடி.....மகிந்த....கோத்தபாய....போன்றேரும்.  ...இவரது. தகப்பனாரின். மறைவுக்கு 

இரங்கல் தெரிவித்தால்.  அறுதல் கூறினால். அவர்களையும்....அவர்களின் செயல்பாடுகளையும்.  புகழ்த்து. இருப்பார்.  தமிழருக்கு  தலைமை வகிக்க இவருக்கு எந்தத்தகுதியுமில்லை..

தவறு சகோ

உங்க  பாட்டுக்கு எழுந்தமானத்தில் பெயர்களை  சிபாரிசு செய்து

அதற்கு பதிலும் வைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1949ல் ஆரம்பிக்க பட்டது திமுக. அவர்கள் மீதும் வசவு பாடப்பட்டது. பிராமணர்கள் அன்றி யாரு தான் தமிழத்தினை காக்க முடியும் என்று சொல்லி நக்கல் அடித்தார்கள்.

1957 சட்ட சபை தேர்தலில் அண்ணாதுரை உள்பட்ட அனைவருமே தோல்வியை தழுவினார்கள்.

1962ல் அண்ணாதுரை தோல்வி, கருணாநிதி, SSR (ராஜேந்திரன்) வெற்றி.

1967ல் ஆட்சி அமைத்தனர். 

இது வரலாறு சொல்லும் கதை. முதல் வெற்றிக்கு 13 வருடங்கள். ஆட்சிக்கு 18 வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

நதி போல ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே, மக்கள் நம்புவார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kandiah57 said:

மோடி.....மகிந்த....கோத்தபாய....போன்றேரும்.  ...இவரது. தகப்பனாரின். மறைவுக்கு 

இரங்கல் தெரிவித்தால்.  அறுதல் கூறினால். அவர்களையு

👆🏼 இதைத்தான் நானும் நினைத்தேன்.

சீமானின் அப்பாதான் அப்பா, முள்ளிவாய்க்காலில் இறந்த அப்பாக்கள் எல்லாம் சும்மாவா?

தலைவரிடம் மகிந்த மடுவுக்கு வர அனுமதிகேட்டார். பாதுகாப்பு படை இல்லாமல் வந்தால் நாமே பாதுகாப்புடன் அனுப்பி வைப்போம் ஆனால் உங்கள் படையுடன் வரமுடியாது என்று போனது பதில்.

இதுதான் கண்ணியம்.

ஏனென்றால் அங்கே வலியுறுத்தப்பட்ட கொள்கை - இது வேறு நடைமுறை நாடு. இங்கே உங்கள் படைகள் வரமுடியாது.

இதுதான் புரட்சியாளர் அணுமுறை.

சீமான் ஸ்டாலினை வீட்டில் போய், துக்கம் விசாரித்தமைக்கு மட்டும் நன்றி சொல்லி இருக்கலாம்.

பணத்தை வங்கியில் இட்டிருக்கலாம்.

ஆட்சியை புகழாமல் விட்டு இருக்கலாம்.

குறைந்த பட்சம், படத்தை கருணாநிதிக்கு கீழ் நின்றாவது எடுக்காமல் விட்டிருக்கலாம்.

இதற்கு ஸ்டாலின் மறுத்தால் சந்திப்பை ரத்து செய்திருக்கலாம்.

ஏனென்றால் சீமானின் அடிப்படை கொள்கையே தெலுங்கு வந்தேறிகள் தி மு க மூலம் எம்மை சுரண்டுகிறார்கள். 

ஆகவே ஸ்டாலின் நல்லாட்ட்சி கொடுக்கிறார் என்ற பேச்சே சீமானின் வாயில் இருந்து வரக்கூடாது.

ஆனால் இந்த கொள்கை மண்ணாங்கட்டி பற்றி எல்லாம் சீமானுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவருக்கு தன் முனைப்பு முக்கியம்.

அடுத்த 5 ஆண்டுகாலம் தப்பி பிழைக்க வேண்டும். வம்பு வழக்குகளில் இருந்து தப்ப தி மு க கருணை வேண்டும்.

தன் இருப்புக்கு தமிழ் தேசியத்தை கையில் எடுத்த சீமான். தன் இருப்புக்கு அதை காவு கொடுக்கவும் தயங்கார்.

முத்துகுமாரினை ரோ கொலை செய்தபின், தன்னை காக்க ரோவின் காலில் விழுந்தார், கட்சியை ரோவின் வழிகாட்டலில் செலுத்தினார்.

தேர்தல் முடிவில் தன்னை காக்க ஸ்டாலிடம் சரணடைகிறார்.  

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

 

இந்தத் திரி... இண்டைக்கு முழுக்க காய்ஞ்சு கிடக்குது என்று கவலையில் இருக்க, 😢

கடைசி நேரத்தில்.... சூடு பறக்க வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. 😂

 

ஹிஹி... என்னைப் போல கவலைப்படுவதற்கு இன்னுமொரு சீவன் இந்த யாழி இருக்கு என்றதை அறிய அழுவாச்சி அழுவாச்சியா வருகுது

(ஆண்டவா இந்த பதிலை மீரா பார்க்க கூடாது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நம்ம தோஸ்த்து முகப்புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கின்றார்.

தமிழர்கள் உணர்ச்சிகளின் அடிமை. 

ஸ்டாலின் சீமானின் தந்தை உயிர் நீத்தபோது துக்கம் விசாரித்தார். அது சீமானை நெகிழ வைத்தது. 
அதன் அடிப்படையிலான உணர்வு  தான் சீமானை  ஸ்டாலினை சந்தித்து பேச வைத்தது. 

 பண்பு. மாண்பு என்கிற வகையில் இச்செயலை என்னால் விமர்சிக்க முடியாது. கொள்கை கோட்பாடு என்கிற வகையில் அல்லது கட்சி என்கிற வகையில் ஒரு இறுக்கமான மனநிலையை சகமனிதர்கள் மீது செலுத்துவதை நான் விரும்பவில்லை.

இருப்பினும் சீமானின் ஸ்டாலின் உடனான சந்திப்பு என்பது ஸ்டாலின் மீதும் திமுக மீதும் சீமானும் நாம் தமிழர் அமைப்பும்  வைத்த குற்றச் சாட்டுகளை தாண்டி ஒரு வெள்ளையடிப்பாக மாறி நிற்கிறதோ  என்கிற ஐயத்தின் உண்மைத் தன்மையை எதிர்காலம் நிச்சயமாக காண்பிக்கும். 

இந்தியாவின் இந்துத்தாவின் காலதிகால தமிழர் வெறுப்பு மனோநிலையை தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகளை எதிர்த்து போராட வேண்டுமெனில் தமிழகத்தின் முற்போக்குச் சக்திகளுடனும், திராவிடக் கட்சிகளுடனும் சீமான் கைகோர்க்கத்தான் வேண்டும். 

அந்தக் கைகோர்ப்பு என்பது நாம் தமிழர் கட்சி தமது அடையாளத்தை இழப்பதாக அமையக் கூடாது. 

சிறந்த மேடைப் பேச்சாளராக இருப்பவர்கள் எல்லாம் புரட்சியாளர்கள் அல்ல,   . சீமானும் நாம் தமிழர் அமைப்பும் புரட்சிவாத கூறுகளை கொண்டிருக்கிறார்களே ஒழிய ஒரு முழுநிலை புரட்சிக்குரிய வீச்செல்லையை அடைந்தவர்களாக இல்லை.

அதே நேரம் புரட்சியாளன் எங்கெங்கெல்லாம் சமரசம் செய்யக் கூடாது என்பதையும் அறிந்தே வைத்திருக்க வேண்டும்.

மிக உன்னதமான பல நோக்கங்களோடு நாம் தமிழர் அமைப்பை நோக்கி திரட்சியுறுகிற இளைஞர்களின் எண்ணங்களுக்கு, கனவுகளுக்கு, நம்பிக்கைக்கு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக சீமான் இருக்க வேண்டும்.”

 

ஒரு பதில் இப்படி வந்திருக்கு:

”சீமான் சிறந்த பேச்சாளர் என்பது வெளிப்படை ஆனால் புரட்சியாளன் என்பதில் உடன்பாடில்லை. சீமானின் அரசியல் என்பது தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் தன்னிலை சார்பு கொண்டதாக நான் உணர்கின்றேன். விமர்சனம் என்பது மிகப் பெரிய முதலீடாக உள்ளது. தீர்வுகள் என்ன அடைவு நிலை என்ன என்பதெல்லாம் குறைகளாக உள்ளன. 
சீமானின் அரசியல் திராவிட கட்சிகளுக்கோ, தமிழகத்திற்கோ, உலக தமிழர்களுக்கோ ஓர் வழிகாட்டியாக அமையாது என்பது என் கருத்து.
அரசியலில் பேசு பொருளாக மட்டுமே சீமானால் வலம் வர முடியும். மாற்றத்திற்கான அரசியலில் அவரை ஏற்பது என்பது பல முறை கேள்விக்குட்படுத்த வேண்டிய வினாவாகும்.”

உங்கள் தோஸ்த்தும், தோஸ்துக்கு பதில் எழுதிய தோஸ்த்தும். இன்னும் இங்கே எழுதும் பலரும் சீமானின் மீதான ரோவின் அழுத்தம் என்ற காரணியை புறம்தள்ளி விட்டு இதை அணுகுகிறார்கள்.

சீமான், நாம் தமிழர் கட்சியின் இப்போதைய அரசியலை, இந்தியாவில் யாருக்கும் இல்லாத புலிகளை ஏற்றி பாடும் சுதந்திரம் அவர்களுக்கு இருப்பதை, வழக்குகள் பாயாததை, ரோவின் ஆட்டுவிக்கும் மறை கரத்தை கண்டு கொள்ளாத யாரும், சீமானை பார்ப்பது குருடன் யானை பார்த்த கதைதான்.

ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சீமான் செய்ததில் 5% கூட பேசாத அத்தனை, தேர்வு செய்யபட்ட கஸ்மீர் மக்கள் பிரதிநிதிகளையும் வீட்டுக்காவலில் வைத்த அரசு சீமானை மட்டும் சுதந்திரமாக உலவ விடக்காரணம் என்ன?

சீமான் முழுக்க, முழுக்க ரோவின் நிகழ்சி நிரலில் இயங்கும் ஆள்.

அவருக்கு பெரியாரும், மோடியும், எடப்பாடியும், ஸ்டாலினும் ஒன்றுதான்.

ஒரு ஐந்து நாளுக்கு முதல் நுணாவுக்கு சொன்னேன் 2021-26 சீமானின் இன்ப அதிர்சிகள் பல உள்ளன காத்திருங்கள் என்று.

இது முதலாவது. 

பிகு: இதில் மிக அருவருக்கதக்க அரசியல் எழுவர் விடுதலைக்காக ஸ்டாலினை பார்த்தேன் என்றது.

ஜெயாவுக்கு பிராசாரம் செய்த போது எழுவர் விடுதலை பற்றி அவரை சந்தித்து கேட்காத சீமான் (கேட்டிருந்தால் சீமானை தூக்கி உள்ளே போட்டிருப்பார், இது சீமானுக்கும் தெரியும்) இத்தனை காலம் சித்தப்பு விடுதலை நாடகம் ஆடியபோது வீதியில் இறங்கி நாட்டை ஸ்தம்பிக்க வைக்காத சீமான், இப்போ ஸ்டாலின் அறிவை ப்ரோலில் விட்டாராம், இவர் போய் இன்னும் அழுத்தி சொன்னாராம். 

காதில பூ வைக்கலாம், பூந்தோட்டம் வைக்கப்பாக்கிறார் சீமான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

ஹிஹி... என்னைப் போல கவலைப்படுவதற்கு இன்னுமொரு சீவன் இந்த யாழி இருக்கு என்றதை அறிய அழுவாச்சி அழுவாச்சியா வருகுது

(ஆண்டவா இந்த பதிலை மீரா பார்க்க கூடாது)

பத்தி, பத்தியா அலப்பறை பண்ணினாலும்..... நாங்கள் மினக்கட  ஒர்த் இல்லை என்று...கடந்து போனாலும்.... வாசிக்க எண்டு... ஒரு சீவன்....😰

நன்றி... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

ஹிஹி... என்னைப் போல கவலைப்படுவதற்கு இன்னுமொரு சீவன் இந்த யாழி இருக்கு என்றதை அறிய அழுவாச்சி அழுவாச்சியா வருகுது

(ஆண்டவா இந்த பதிலை மீரா பார்க்க கூடாது)

அழுவாச்சி வரட்டும் ஓடிப்போய் முகப்பில மே மாதம் ஒட்டின போஸ்ட் அளிச்சு கொஞ்சம் துப்புரவாக வைச்சு இருக்க பாருங்கள..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.