Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்


Recommended Posts

5 minutes ago, ஏராளன் said:

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்களின் இருப்பும் அவர்களின் வளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தானே உண்மை.

உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும்,  அதை எதிர் கொண்டு வினை திறனான மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர் உரிமைகளை நிலைநாட்ட தமிழர் தரப்பினரிடம் போதிய ஆற்றல் இருந்தும் அதை பயன் படுத்தாது உண்ர்சசி அரசியல் இலாப அறுவடைக்காக  தமிழ் ஈழம் என்ற போலி பிம்பம் தமிழ் இளைஞர் மத்தியில்  திணிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு  இழப்பதை காப்பாற்ற முயற்சிக்காமல்  இருந்ததையும் இழக்க வைக்கப்பட்டது என்பது தான் அந்தக் கருத்தின் விளக்கம். 

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும்,  அதை எதிர் கொண்டு வினை திறனான மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர் உரிமைகளை நிலைநாட்ட தமிழர் தரப்பினரிடம் போதிய ஆற்றல் இருந்தும் அதை பயன் படுத்தாது உண்ர்சசி அரசியல் இலாப அறுவடைக்காக  தமிழ் ஈழம் என்ற போலி பிம்பம் தமிழ் இளைஞர் மத்தியில்  திணிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு  இழப்பதை காப்பாற்ற முயற்சிக்காமல்  இருந்ததையும் இழக்க வைக்கப்பட்டது என்பது தான் அந்தக் கருத்தின் விளக்கம். 

தனிநாட்டுக் கோரிக்கையும் ஆயுதப்போராட்டமும் இல்லையென்றால் தமிழர்கள் இங்கை வாழ்ந்தவையோ என்று நீங்களே கேட்டிருப்பியள்?! (இனி வரலாறு அப்படித்தான் போகும்)

சந்தர்ப்ப சூழ்நிலையை சரியா பாவித்த தந்தை செல்வாவிற்கு எப்பிடி விபூதி அடிச்சதெண்டு வரலாறு சொல்லுதண்ணை.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவேணும் என்றதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் செய்ததெல்லாமே தவறு என்பதை மறுக்கிறேன்.

பட்டறிவில் இருந்து பாடங்களை கற்று சமூகமாக முன்னேறுவோம்.

Link to comment
Share on other sites

http://static1.tamilmirror.lk/images/uploads/article_1468814917-Unt.jpgஎன்.கே.அஷோக்பரன் LLB (Hons)

 

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 

திருப்புமுனை

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றின் 1976 மே 14 ஆம் திகதி முக்கியமான நாள். யாழ். வட்டுக்கோட்டை, பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) பெயர் மாற்றம் பெற்றதோடு, தனிநாட்டுக்கான 'வட்டுக்கோட்டைத் தீர்மானமும்' இங்குதான் நிறைவேற்றப்பட்டது. இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதன் வழியில் அமைந்த தமிழர் அரசியலையும் திரும்பிப் பார்க்கையிலே தமிழர்களின் அரசியலில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது பெரும் திருப்பு முனையாக அமைந்தது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. சில விமர்சகர்கள் இது திருப்புமுனையல்ல‚ மாறாக தமிழ் அரசியல் தலைமைகளின் இயலாமையின் வெளிப்பாடு என்பார்கள். இதனை விரிவாக ஆராய முன்பதாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முக்கிய பகுதிகளை பார்ப்பது அவசியமாகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையிலமைந்த குறித்த மாநாட்டில் செல்வநாயகத்தால் முன்மொழியப்பட்டு, மு.சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இப்படி அமைந்தன:

'இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளும்; வரை பல

நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும், 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

மேலும், தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகி உள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:

(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித் தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்கு உட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றதாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.

(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச் சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.

(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கான செயற்றிட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு, சுதந்திரத்துக்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது'.

வட்டுக்கோட்டைத் தீர்மானமானது இந்த நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசை முன்வைத்ததோடு அதனை அடையப்பெறுவதற்கு தமிழ் இளைஞர்களை 'புனிதப் போருக்கு' அழைக்கும் அறைகூவலாகவும் அமைந்தது. இந்த அறைகூவலை 'ஈழத்துக் காந்தி' என்று அழைக்கப்பட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் விடுத்திருந்தார். இதன் பின்புலத்தில் ஏறத்தாழ 20 வருடங்களாகத் தோல்வி கண்ட பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் சமரசமுயற்சிகளும் இருக்கின்றன.

தமிழர் உரிமைகள் காவுகொள்ளப்பட்ட ஒரே இரவில் அந்த அநீதிக்கு தீர்வு தனியரசுதான் என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வரவில்லை. மாறாக 20 வருடகாலமாக இலங்கையின் இரு பெரும் கட்சிகள் மாறி மாறி அரசாங்கக் கட்டிலில் வந்தபோது அவற்றுடன் பல்வேறு வகையான சமரச முயற்சிகளை மேற்கொண்டு, அவை தோற்கடிக்கப்பட்ட பின்னரே, அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு முயற்சிகள் மீது நம்பிக்கையிழந்த பின்னரே, 'தனியரசு'என்பதே தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற முடிவுக்கு தமிழ்த்தலைமைகள் வந்தன. இதிலே ஒரு முக்கிய தற்செயல் நிகழ்வும் நடந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றப்படுவதற்கும் ஒன்பது நாட்களுக்கு முன்பாக 'தமிழ் புதிய புலிகள்' என்ற ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் இயக்கம் தன்னை 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர் மாற்றிக் கொண்டது. இது தற்செயலா, இல்லை இரண்டும் ஒரே திட்டத்தின்படி நிகழ்ந்தனவா என்பது பற்றிய ஆதாரங்கள் எதுவுமில்லை. எது எவ்வாறாயினும் 1976 மே 14 ஆம் திகதி செல்வநாயகம் விடுத்த அறைகூவல் காட்டிய பாதையில், அது காட்டிய இலட்சியத்திற்காக அடுத்த 33 வருடங்களுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள்.

வரலாற்றின் முக்கியத்துவம்

'வரலாறு, எத்தனை வலிமிக்கதாக இருப்பினும், அதனை எம்மால் மாற்றிவிட முடியாது. ஆனால் அதனை தைரியத்துடன் எதிர்கொண்டால், அதனை மீண்டும் அனுபவிக்கத் தேவையில்லை' என்று மாயா அஞ்சலூ ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். வரலாறு என்பது பொற்காலங்களையும் இருள்சூழ் காலங்களையும் கொண்டது. பல சரிகளும் பல தவறுகளும் நிறைந்தது. நாம் பூரிப்படையத்தக்க பெருமைகளையும் வெட்கப்படத்தக்க சிறுமைகளையும் வேதனையளிக்கும் கொடுமைகளையும் கொண்டது. எது எவ்வாறு அமையினும் அன்று நடந்தவற்றை இன்று நாம் மாற்றிவிட முடியாது. ஆனால் அந்த வரலாற்றை தைரியத்துடன் எதிர்கொள்வதன் மூலம், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மீண்டுமொருமுறை அதுபோன்றதொரு நிலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள முடியும். வரலாற்றை அறிவதன் பயன் அதுவாகத்தான் இருக்க முடியும்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' சரி, பிழை என்று இருநிலைகளில் ஒன்றில் நின்று ஆராய்வது பொருத்தமற்றது என்று கருதுகிறேன். மேலும் எந்தவொரு விடயத்தையும் அது நடந்ததன் பின்நின்று தீர்மானிப்பதன் (judging in hindsight) பொருத்தப்பாடு பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. உதாரணமாக 1976 இன் பிற்பகுதியில் இலண்டன் பி.பி.சிற்கு பேட்டியளித்த சா.ஜே.வே.செல்வநாயகம் 'நாங்கள் ஒரு தமிழ் 'ஜின்னா'வை உருவாக்கத் தவறிவிட்டோம்' என்றார். இந்தக் கூற்றின் அர்த்தம், எப்படி இந்திய சுதந்திரத்தின் முன்பதாக முஹமட் அலி ஜின்னாஹ் முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டை பெற்றுக்கொண்டாரோ, அதுபோல தமிழர்களுக்காக தமிழ்த் தலைமைகள் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டன என்பதே. ஆனால் இதே செல்வநாயகமும் 'தனிச்சிங்களச் சட்டம்' பிறந்த 1956 முதல் 1976 வரை இரண்டு தசாப்தங்களாக தனிநாடு கேட்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கையினுள் அதிகாரப் பகிர்வையே கோரினார். ஆகவேதான் இரண்டு தசாப்தங்களாகச் செய்ய விளையாத ஒன்று தனக்கு முற்பட்டோர் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை தூரம் பொருத்தமானது என்ற கேள்வி இவ்விடத்தில் நிச்சயம் எழுகிறது. இதுதான் எந்தவிடயம் பற்றியும் அது நடந்தேறியதன் பின்நின்று தீர்மானிப்பதில் உள்ள சிக்கல்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய விமர்சனம்

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது மேற்குறிப்பிட்டது போல இரண்டு தசாப்தகால ஏமாற்றங்களின் பின்னர் தமிழர்களுக்கு வேறுவழியின்றிப் பிரிவினையைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று நியாயம் சொல்லும் ஒரு தரப்பினர் உள்ள அதேவேளையில், வட்டுக்கோட்டைத் தீர்மானமென்பது தமது அரசியல் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள தமிழரசுக் கட்சியினரால் தமிழ் மக்களின் உணர்வைத் தூண்டுவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட தீர்க்கதரிசனமற்ற பிரச்சாரமேயன்றி வேறில்லை என விமர்சிக்கும் ஒரு தரப்பும் உண்டு. 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' எடுக்கப்பட்ட காலத்தில் சா.ஜே.வே. செல்வநாயகத்தின் உடல்நிலை சிறப்பாக இருக்கவில்லை. அவரது செவிப்புலனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கட்சியின் அடுத்த தலைமைக்கான போட்டியும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கட்சியின் 'தளபதியாக' அறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இளைஞர்களிடையே தனக்கான ஆதரவினைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். 1970 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய அ.தியாகராஜாவிடம் 725 வாக்குகளால் தோல்வி கண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு எப்பாடுபட்டேனும் அடுத்த தேர்தலில் வெற்றியீட்டிவிட வேண்டிய தேவையிருந்தது. மேலும் 1965 - 1970 வரை டட்லி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததன் பின்னர் தமிழரசுக் கட்சியின் பிரபல்யம் வீழ்ச்சி கண்டிருந்தது. ஆகவே இவை எல்லாவற்றையும் சரிசெய்யத்தக்க அரசியல் தந்திரோபாயமாகவும் இளைஞர்களை ஒன்றுபடுத்தி அணிதிரட்டவல்ல வியூகமாகவுமே 'தனிநாட்டுக் கோரிக்கை' பயன்படுத்தப்பட்டது என இமயவரம்பன் தனது 'தந்தையும் மைந்தரும்' என்ற நூலில் கடும் விமர்சனமொன்றை முன்வைக்கிறார்.

தனியரசுக் கோரிக்கையை ஏற்காத தொண்டமான்

தமிழ் ஐக்கிய முன்னணியின் முக்கிய மூன்று தலைவர்களில் ஒருவரான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாற்றப்பட்டு, தனியரசுப் பிரகடனத்தை முன்வைத்ததும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார். அவரைப் பொறுத்தவரையில் தமிழீழம் என்பது தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்ற நிலைப்பாடே காணப்பட்டது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் 1977 தேர்தலில் ஆதரவளித்திருந்தாலும், மலையகத்தில் தன்னுடைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சேவல் சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொண்டார். 'வடக்கு கிழக்கில் உதயசூரியன் மலரும் வேளையில், மலையகத்தில் சேவல் கூவும்' என்பதே அன்றைய மகுடவாசகமாக இருந்தது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக அமைந்த இந்த வடக்கு கிழக்கு மற்றும் மலையகக் கூட்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தோடு நடைமுறை ரீதியில் முடிவுக்கு வந்தது எனலாம்.

1977இல் தொடர்ந்த இருதரப்பு ஆதரவுநிலை அரசியலும் காலப்போக்கில் இல்லாது போய்விட்டது. விடுதலைப் போராட்டம் பற்றிய தொண்டமானின் பார்வை வேறாக இருந்தது என்பதை அவரது கூற்றுக்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். 'தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கு பேச்சுவார்த்தைக் கலை தெரியாது. அவர்கள் சட்டத்தரணிகள்; அவர்களுக்கு தமது வழக்கை சிறப்பாக எடுத்துரைக்கத் தெரியுமேயன்றி, எதிர்த்தரப்பிலிருந்து தமக்கான சலுகைகளை இலாவகமாகப் பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கலை அவர்களுக்குத் தெரியாது' என்று சௌமியமூர்த்தி தொண்டமான் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களாணையைப் பெறும் முயற்சி

இந்நிலையில், இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள, 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தத் தீர்மானத்தை தமது விஞ்ஞாபனமாக மக்கள் முன் சமர்ப்பித்து தனியரசுக்கான மக்களாணையைப் பெற தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி தீர்மானித்தது.

https://www.tamilmirror.lk/177293/வட-ட-க-க-ட-ட-த-த-ர-ம-னம-

 

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

தனிநாட்டுக் கோரிக்கையும் ஆயுதப்போராட்டமும் இல்லையென்றால் தமிழர்கள் இங்கை வாழ்ந்தவையோ என்று நீங்களே கேட்டிருப்பியள்?! (இனி வரலாறு அப்படித்தான் போகும்)

சந்தர்ப்ப சூழ்நிலையை சரியா பாவித்த தந்தை செல்வாவிற்கு எப்பிடி விபூதி அடிச்சதெண்டு வரலாறு சொல்லுதண்ணை.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவேணும் என்றதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் செய்ததெல்லாமே தவறு என்பதை மறுக்கிறேன்.

பட்டறிவில் இருந்து பாடங்களை கற்று சமூகமாக முன்னேறுவோம்.

எனது முதல் கருத்து 16-17 வயதிலேயே தனிநாட்டு கோரிக்கை சாத்தியமற்றது என்ற அவரது அபாரமான அரசியல் தெளிவுப் பார்தது 16,17 வயதில் அப்படியான தெளிவு என்னிடம் இல்லை என்றதால்  அவருக்கு  பதிலளித்ததில் தொடங்கியது.

அதனால் தனிநாடு என்ற ஒரே இலக்குக்கான பிடிவாதமான போராட்டம் எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று எனது  கருத்தைக் கூறினேன் இல்லை அப்படியல்ல தனிநாட்டு கோரிக்கையும் ஆயுதப் போராட்டமுமே எமக்கு நன்மையளித்தது என்பது உங்கள் நிலைப்பாடு.  ஆகவே உங்கள் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து அதனை ஏற்று உடனடியாக மீண்டும் தனிநாட்டுக்காக  ஆயுதமேந்தி போராடுமாறு தாயகத்தில் வாழும் இளையோருக்கு  (ஒஸ்ரியா - மசடோனியா மாட்ச் பார்த்தவாறே)   உசுப்பேற்றி விட்டு ஒரு பியரை அல்லது ஸ்கொச் விஸ்கியை  அடித்துவிட்டு படுத்து தூங்கலாம் என்றிருக்கிறேன்.😂 உங்கள் கருத்துக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

8 minutes ago, tulpen said:

எனது முதல் கருத்து 16-17 வயதிலேயே தனிநாட்டு கோரிக்கை சாத்தியமற்றது என்ற அவரது அபாரமான அரசியல் தெளிவுப் பார்தது 16,17 வயதில் அப்படியான தெளிவு என்னிடம் இல்லை என்றதால்  அவருக்கு  பதிலளித்ததில் தொடங்கியது.

அதனால் தனிநாடு என்ற ஒரே இலக்குக்கான பிடிவாதமான போராட்டம் எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று எனது  கருத்தைக் கூறினேன் இல்லை அப்படியல்ல தனிநாட்டு கோரிக்கையும் ஆயுதப் போராட்டமுமே எமக்கு நன்மையளித்தது என்பது உங்கள் நிலைப்பாடு.  ஆகவே உங்கள் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து அதனை ஏற்று உடனடியாக மீண்டும் தனிநாட்டுக்காக  ஆயுதமேந்தி போராடுமாறு தாயகத்தில் வாழும் இளையோருக்கு  (ஒஸ்ரியா - மசடோனியா மாட்ச் பார்த்தவாறே)   உசுப்பேற்றி விட்டு ஒரு பியரை அல்லது ஸ்கொச் விஸ்கியை  அடித்துவிட்டு படுத்து தூங்கலாம் என்றிருக்கிறேன்.😂 உங்கள் கருத்துக்கு நன்றி. 

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மியாவ் said:

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

பாராளுமன்றத்தில் ஒற்றையாட்சிக்கு உட்பட்டு சத்தியபிரமாணம் எடுத்த கடும்போக்கு அரசியல்வாதியே சமஸ்டிக்கு மேல் கேட்கவில்லை. 

தனிநாடு கோரிக்கை எல்லாம் 2009 க்கு பின்னர் சினிமாக்காரர்கள் கையில் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மியாவ் said:

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

இனி இது பற்றி புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல 

 அமெரிக்கா ஐரோப்பியா எவர் பேசினாலும் இப்படி தான் கேட்பார்கள்.  ஏனெனில் சிங்களம் நல்லது தமிழர்களுக்கு தான் தேவை அற்ற போராட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மியாவ் said:

தனி நாடு கோரி ஆயுத போராட்டம் வேண்டாம் என்கிறீர்களா,

அல்லது தனி நாடு கோரிக்கையை முன் வைத்து எந்த முன்னெடுப்பும் வேண்டாம் என்கிறீர்களா...

நான் நினைக்கிறேன் அவர் சொல்ல விரும்புவது

ஏமாறாதீர்கள் 

ஏமாற்றாதீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

எனது முதல் கருத்து 16-17 வயதிலேயே தனிநாட்டு கோரிக்கை சாத்தியமற்றது என்ற அவரது அபாரமான அரசியல் தெளிவுப் பார்தது 16,17 வயதில் அப்படியான தெளிவு என்னிடம் இல்லை என்றதால்  அவருக்கு  பதிலளித்ததில் தொடங்கியது.

அதனால் தனிநாடு என்ற ஒரே இலக்குக்கான பிடிவாதமான போராட்டம் எமக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று எனது  கருத்தைக் கூறினேன் இல்லை அப்படியல்ல தனிநாட்டு கோரிக்கையும் ஆயுதப் போராட்டமுமே எமக்கு நன்மையளித்தது என்பது உங்கள் நிலைப்பாடு.  ஆகவே உங்கள் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து அதனை ஏற்று உடனடியாக மீண்டும் தனிநாட்டுக்காக  ஆயுதமேந்தி போராடுமாறு தாயகத்தில் வாழும் இளையோருக்கு  (ஒஸ்ரியா - மசடோனியா மாட்ச் பார்த்தவாறே)   உசுப்பேற்றி விட்டு ஒரு பியரை அல்லது ஸ்கொச் விஸ்கியை  அடித்துவிட்டு படுத்து தூங்கலாம் என்றிருக்கிறேன்.😂 உங்கள் கருத்துக்கு நன்றி. 

இங்க அமைதிப் போராட்டங்களில் பங்குபற்றவே ஆட்களை காணோம்.
சனம் ரொம்ப தெளிவா இருக்கு. தங்கடை வேலி எல்லை பிரச்சனைக்கு மட்டும் சண்டைக்கு வரும், வேற ஒரு பிரச்சனைக்கும் வரமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

இங்க அமைதிப் போராட்டங்களில் பங்குபற்றவே ஆட்களை காணோம்.
சனம் ரொம்ப தெளிவா இருக்கு. தங்கடை வேலி எல்லை பிரச்சனைக்கு மட்டும் சண்டைக்கு வரும், வேற ஒரு பிரச்சனைக்கும் வரமாட்டார்கள்.

நாங்கள் புலம்பெயர் ஆக்கள் மட்டும் என்ன லேசுபட்ட ஆக்களே?

நீங்கள் இத்தனை இழப்புகளுக்கு பின்தான் போராட பின்னடிக்கிறியள்.

நம்மில் கனபேர் கடைசியா கேட்ட வெடிச்சத்தம் 1983 பொங்கலுக்கு போட்ட சீன வெடி🤣

நாங்கள் அப்பவே அப்படி.

ஆனால் ஒன்று. நாங்கள் தனிநாட்டு கொள்கையில் உறுதியாய் உள்ளம்.

நாங்கள் போராட வர மாட்டம், எங்கள் பிள்ளைகளும் போராட வரமாட்டார்கள் என்பதில் தனிநாட்டு கொள்கையை விட உறுதியாய் உள்ளம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நாங்கள் போராட வர மாட்டம், எங்கள் பிள்ளைகளும் போராட வரமாட்டார்கள் என்பதில் தனிநாட்டு கொள்கையை விட உறுதியாய் உள்ளம். 

 

போராடமட்டும் இல்லை இலங்கைதமுழராககூட நம்ம பிள்ளைகள் இருக்காதுகள்.. அவர்கள் அவுஸ்திரேலியா கனடா பிரிட்டிஸ் பிரஜைகள்… நம்மளோட சரி ஈழதமிழன் எண்ட அடையாளம்.. சிங்களவன்போல இனாழிப்பாளர்கள்தான் நாமும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

போராடமட்டும் இல்லை இலங்கைதமுழராககூட நம்ம பிள்ளைகள் இருக்காதுகள்.. அவர்கள் அவுஸ்திரேலியா கனடா பிரிட்டிஸ் பிரஜைகள்… நம்மளோட சரி ஈழதமிழன் எண்ட அடையாளம்.. சிங்களவன்போல இனாழிப்பாளர்கள்தான் நாமும்..

இப்ப யூதர் என்பது மதமும், மொழியும், பண்பாடும் என்பதை இலகுவாக மறந்து விட்டு, நாங்கள் யூதர் மாதிரி என்று வருவாங்க பாருங்களேன்.

பேரினவாதிகளை போல் நாமும் இனவழிப்பாளர்களே என்பது மிக கசப்பானது ஆனால் உண்மை.

பேரப்பிள்ளைகள் ஈறாக எல்லாரையும் கூட்டி கொண்டு ஒருவர் நாடு திரும்பினாலே அங்கே தமிழர் சனத்தொகையை 20 பேரால் கூட்டலாம்.

ஆனால் இதை நிச்சயம் நான் செய்யபோவதில்லை. 

இப்படி பட்ட சுயநலமியான நான் - தனிநாட்டு கோரிக்கையை கைவிடமாட்டேன் என்று சொல்வதை விட இன்னும் ஒரு பெரிய இரெட்டை நிலை இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

On 8/6/2021 at 16:59, வாத்தியார் said:

 இந்தியக் குடிமகனாக சீமான் கழகத் தலைவரைச் சந்தித்தார் என்றால் இத்தனை கோடி  மக்கள் கழகத் தலைவரைச் சந்திக்கக் காத்திருக்கும் நிலையில் எப்படி சீமானிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது ?

இன்னொரு கேள்வி ....... இந்த இந்தியக் குடிமகன் எதற்காக அல்லது எப்படி ஈழத் தமிழர்களின் விடிவிற்காக போராட முடியும்?

இன்றைய நிலையில் சீமான் தானும் குழம்பி தன்னுடன் சேர்ந்திருக்கும் தம்பிகளையும் குழப்புகின்றார்.
சீமான் தமிழ் நாட்டில் வளர்ந்துவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அவர் மூக்கிற்குள் விரலை வைத்தாலே அசிங்கம் என வர்ணிக்க ஆயிரம் ஊடகங்கள் காத்திருக்கும் நிலையில் பக்குவம் இல்லாத செயல்களை நிறுத்த வேண்டும்
அல்லது இதுதான் சீமானின் சுயம் என்றால் ,
(நான் நம்புவதும் அப்படித்தான்) விரைவில்  மக்களால் தூக்கி எறியப்படுவார்

எடப்பாடி, ஜெயா எல்லோருமேதான் பார்வை அனுமதி கொடுத்தார்கள்.

அரசியல்வாதிகள் தமக்கு சாதகம் என்றால் அனுமதி தருவார்கள். ஆனால், அதை பயன்படுத்திக்கொண்டு ஏழுபேர் விடுதலையை முன்னுக்கு கொண்டுவருவது நல்லதுதானே?

அரசியல் என்பது “யார் எதை எப்போது எவ்வாறு பெறுகிறார்கள்” என்பதே. அதற்கேற்ப நடவடிக்கை மற்றும் எதிர் நடவடிக்கை செய்வதுதான் அரசியலின் இயங்குதளம்.

சீமானின் கையசைவுகள் பிரபலம் ஆகும் காரணம் என்பது, எதிராளிகளின் கடுமையான ஊடக பலம் மட்டுமே. உதாரணத்துக்கு கமல் நல்ல அசத்தலாக இருப்பார். ஆனால் சிந்தனையும் தனிப்பட்ட செயல்களும் அசிங்கமாக இருக்கும். ஸ்டாலின் அந்தக் காலத்தில் பெண்களை கடத்தியவராக இருந்தாலும், ஊடக பலத்தினால் இன்று “சிறந்த முதல்வர்”. இறக்கும்வரையில் ஜெயாவும் அவ்வாறே.

சீமானுக்கு எதிராக கட்டமைக்கப்படும் விம்பங்கள் உடைந்துபோக காலம் செல்லலாம். பொறுத்திருந்து காண்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, இசைக்கலைஞன் said:

அரசியல் என்பது “யார் எதை எப்போது எவ்வாறு பெறுகிறார்கள்” என்பதே. அதற்கேற்ப நடவடிக்கை மற்றும் எதிர் நடவடிக்கை செய்வதுதான் அரசியலின் இயங்குதளம்.

எழுவர் விடுதலைக்கான குரல் என்பது இப்போது வாக்குச் சேகரிக்கும் பிச்ச்சாரமாக மாறிவிட்ட நிலையில்  எந்தக் கட்சியும் மற்றவர்களுக்கான
கை ஓங்கும் நிலையை உருவாக்க விரும்பமாட்டார்கள்.

எழுவர் விடுதலையை அரசியலாக்காமல் பொது அமைப்புக்களினூடாக முன்னெடுப்பதே சிறந்தது. ஆனால் தமிழ் நாட்டில் அரசியல் பக்கச் சார்பற்ற பொது அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

சீமான் போன்றவர்கள் எழுவர் பற்றிப் பேசாமல் இருந்தாலே அவர்களின் விடுதலை சாத்தியமாகச்   சந்தர்ப்பம் இருக்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

சீமான் போன்றவர்கள் எழுவர் பற்றிப் பேசாமல் இருந்தாலே அவர்களின் விடுதலை சாத்தியமாகச்   சந்தர்ப்பம் இருக்கின்றது 

👌

எழுவர் விடுதலையில் நாம் தமிழரின் நடவடிக்கைகள் அரச தரப்பு சட்ட வாதங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில்தான் அமைகிறன.

அண்மையில் சாட்டை போய் நேரடியாக மிரட்டியதை - புலிகளுக்கு தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வன்முறை மயப்பட்ட ஆதரவுதளம் உண்டு. இவர்களை விடுவித்தல் இந்த தளம் மேலும் விரிவடையும். இது இந்திய இறையாண்மைக்கு விரோதமானது என்ற ரீதியில் மத்திய அரசு வக்கீல்கள் அணுக கூடும்.

ஸ்டாலினே கூட - நான் முயற்சிக்க ஆரம்பித்தேன் ஆனால் இவர்கள் எல்லாவறையும் குழப்பி அடித்து விட்டார்கள் என இதை கிடப்பில் போட - இந்த நடவடிக்கைகள் உதவும்.

உண்மையில் எழுவர் விடுதலையை விரும்புவோர் நாம் தமிழர் செய்யும் வேலைகளை செய்யமாட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, வாத்தியார் said:

எழுவர் விடுதலைக்கான குரல் என்பது இப்போது வாக்குச் சேகரிக்கும் பிச்ச்சாரமாக மாறிவிட்ட நிலையில்  எந்தக் கட்சியும் மற்றவர்களுக்கான
கை ஓங்கும் நிலையை உருவாக்க விரும்பமாட்டார்கள்.

எழுவர் விடுதலையை அரசியலாக்காமல் பொது அமைப்புக்களினூடாக முன்னெடுப்பதே சிறந்தது. ஆனால் தமிழ் நாட்டில் அரசியல் பக்கச் சார்பற்ற பொது அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

சீமான் போன்றவர்கள் எழுவர் பற்றிப் பேசாமல் இருந்தாலே அவர்களின் விடுதலை சாத்தியமாகச்   சந்தர்ப்பம் இருக்கின்றது 

எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இசைக்கலைஞன் said:

எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல்.

நன்றி தம்பி இசை

இது இங்கு எழுதும் எல்லோருக்கும் தெரியும்

அத்துடன்  சீமான்  தொடர்ந்து ஏறுமுகத்தில் வளர்வார்  என்பதும் தெரியும்;

அதனால் விழும் கல்லெறிகள் தான் இவை...

Link to comment
Share on other sites

13 minutes ago, விசுகு said:

நன்றி தம்பி இசை

இது இங்கு எழுதும் எல்லோருக்கும் தெரியும்

அத்துடன்  சீமான்  தொடர்ந்து ஏறுமுகத்தில் வளர்வார்  என்பதும் தெரியும்;

அதனால் விழும் கல்லெறிகள் தான் இவை...

நன்றி விசுகு அண்ணா. நலமறிய ஆவல். 😃

நல்ல அரசியலுக்கான களம் ஐந்து வருடங்கள் பிற்போடப் பட்டுள்ளன என கருதுகிறேன்.

இந்தக் காணொளியில் 14:00 நிமிடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் தமிழ்நாட்டின் நிலை. முத்துக்குமார் இறந்தபோது விடுமுறை கிடைத்துவிட்டது என எண்ணும் நிலையில்தான் தமிழக இளைஞர்களில் பலர் இருந்துள்ளார்கள் (கார்த்திக் உட்பட). இன்றும் பலர் அவ்வாறே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.

ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல்.

இதில் மாற்று கருத்து இல்லை. 

ஆனால் அவர்களை வெளியே விடக்கூடாது என்பதற்கு சீமானின், துரையின் நடவடிக்கைகள் மேலும் வலுச்சேர்க்கும்.

37 minutes ago, இசைக்கலைஞன் said:

நல்ல அரசியலுக்கான களம் ஐந்து வருடங்கள் பிற்போடப் பட்டுள்ளன என கருதுகிறேன்.

இதை வாசித்ததும் நமது நாம் தமிழர் திரி 1 இன் தொடக்க கால கருத்து மோதல்கள் மனதில் வந்து போனது.

எத்தனை ஐந்தாண்டுகள் கடந்தாலும் உங்கள் கருத்தில் உறுதியாக நிற்பது மகிழ்சி🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இங்க அமைதிப் போராட்டங்களில் பங்குபற்றவே ஆட்களை காணோம்.
சனம் ரொம்ப தெளிவா இருக்கு. தங்கடை வேலி எல்லை பிரச்சனைக்கு மட்டும் சண்டைக்கு வரும், வேற ஒரு பிரச்சனைக்கும் வரமாட்டார்கள்.

நீங்கள் தான் பாதிப்படைந்தவர்கள். நீங்கள் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஒருபோதும் போராட வர மாட்டார்கள். கோஷான் சே, பாலபத்ர ஓணாண்டி தெரிவித்தவை 100 வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் க‌ள‌த்தில் அண்ண‌ன் சீமான் என்று த‌லைப்பு வைத்தால் தான் திரி நீண்டு கொண்டு போகும்


இதுக்கை நீங்க‌ள் என்ன‌ தான் எழுதி கிண்ட‌ல் கேலி செய்தாலும் அது இந்த‌ திரியோடையே போய் விடும் த‌மிழ‌க‌ தேர்த‌லில் எதிர் ஒலிக்காது 

அண்ண‌ன் சீமான்  வ‌ழி எவ் வ‌ழியோ அவ் வ‌ழி ந‌ல் வ‌ழி 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

யாழ் க‌ள‌த்தில் அண்ண‌ன் சீமான் என்று த‌லைப்பு வைத்தால் தான் திரி நீண்டு கொண்டு போகும்


இதுக்கை நீங்க‌ள் என்ன‌ தான் எழுதி கிண்ட‌ல் கேலி செய்தாலும் அது இந்த‌ திரியோடையே போய் விடும் த‌மிழ‌க‌ தேர்த‌லில் எதிர் ஒலிக்காது 

அண்ண‌ன் சீமான்  வ‌ழி எவ் வ‌ழியோ அவ் வ‌ழி ந‌ல் வ‌ழி 🙏

வணக்கம் பையன்,

கண்டு கனகாலம். இணைந்திருங்கள்.

யாழ்களத்தில் சீமானை பற்றி எழுதும் எதுவும் தமிழக தேர்தலில் எதிரொலிக்காது என்பது 100% உண்மை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதும் அதையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

வணக்கம் பையன்,

கண்டு கனகாலம். இணைந்திருங்கள்.

யாழ்களத்தில் சீமானை பற்றி எழுதும் எதுவும் தமிழக தேர்தலில் எதிரொலிக்காது என்பது 100% உண்மை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதும் அதையே.

இங்கே சீமானின் கொள்கைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டது தேர்தல் பிரச்சாரம் ஏதும் நடக்கவில்லை.... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இங்கே சீமானின் கொள்கைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டது தேர்தல் பிரச்சாரம் ஏதும் நடக்கவில்லை.... 😂

😁 ஹி ஹி தாத்தா 

47 minutes ago, goshan_che said:

வணக்கம் பையன்,

கண்டு கனகாலம். இணைந்திருங்கள்.

யாழ்களத்தில் சீமானை பற்றி எழுதும் எதுவும் தமிழக தேர்தலில் எதிரொலிக்காது என்பது 100% உண்மை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதும் அதையே.

யாழில் இணைந்து இருக்கிற‌தில் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை ,

இப்ப‌டியான‌ திரிக‌ளை விட்டு த‌ள்ளி இருக்க‌வே விரும்புகிறேன் , கார‌ண‌ம் வீனா போற‌து என‌து நேர‌மும் உங்க‌ளின் நேர‌மும் Bro 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.