Jump to content

The Family Man - Season 2 விமர்சனம்: எப்படியிருக்கிறது சர்ச்சைகளுக்கு இடையே வெளியான அமெஸான் தொடர்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
 ஜூன் 2021
ஃபேமிலிமேன்

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா, ஷரீஃப் ஹாஸ்மி, தேவதர்ஷிணி, மைம் கோபி, அழகம் பெருமாள், அத்னான்சாமி, சீமா பிஸ்வாஸ்; இசை: சச்சின் - ஜிஹார்; ஒளிப்பதிவு: கேமரோன் எரிக் ப்ரைசன்; இயக்கம்: ராஜ் & டிகே. வெளியீடு: அமெஸான் ஓடிடி.

The Family Man முதலாவது சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்தத் தொடரின் இரண்டாவது சீஸன் இப்போது வெளியாகியிருக்கிறது. இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கதையின் ஒரு பகுதி என்பதால் வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சைக்குள்ளான தொடர் இது.

முதலாவது சீஸனின் கதை இதுதான்: தேசியப் புலனாய்வு முகமையின் TASC என்ற பிரிவில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவில் முக்கியமான புள்ளி. ஆனால், வீட்டில் மனைவி (ப்ரியாமணி), குழந்தைகளுக்கு ஸ்ரீ காந்த் மீது பெரிய மதிப்பு ஏதும் இல்லை. இந்த நிலையில் ஒரு தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் மூன்று அப்பாவிகளைச் சுட்டுக்கொன்றுவிடுகிறான். பிறகு, காஷ்மீருக்கு அனுப்பப்படுகிறான். அங்கிருந்தபடி, ஒரு பெரிய தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கிறான். ஆனாலும் அச்சுறுத்தல் தொடரும் என்ற வகையில் முதல் சீஸன் முடிவுக்கு வந்தது.

இந்த இரண்டாவது சீஸனின் கதை மும்பை, லண்டன், வட இலங்கை, சென்னை என நான்கு இடங்களில் நடக்கிறது என்றாலும் சென்னையில்தான் பெரும் பகுதி கதை நகர்கிறது. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், அவர்களைக் கொல்ல நினைக்கிறது ஐஎஸ்ஐ. இதற்காக தமிழ் போராளிக் குழு ஒன்றுடன் இணைந்து கொள்கிறது. இந்தக் கொலை முயற்சியிலிருந்து கதாநாயகனும் அவனது குழுவினரும் எப்படி பிரதமரைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இந்த சீஸனின் மையச் சரடு.

முதல் சீஸனிலேயே விஜயகாந்த், அர்ஜுன் நடித்த தேசபக்தி படங்களின் பாணியில் தீவிரவாதிகள் VS பாதுகாப்புப் படை என்ற பாணியில்தான் கதை அமைந்திருந்தது. ஆனால், திரைக்கதையின் பலத்தால் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த உற்சாகத்தில், இந்த முறை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக ஐஎஸ்ஐ மற்றும் தமிழ் போராளிக் குழுக்களை இணைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த இணைப்பில் எந்த பொருத்தமும் இல்லை என்பதால், பல காட்சிகள் அபத்தமாக நீள்கின்றன. ஐஎஸ்ஐ எதற்காக இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களுடன் இணைகின்றன அல்லது தமிழ் போராளிக் குழுக்கள் ஏன் ஐஎஸ்ஐ உதவியைப் பெறுகின்றன என்பதற்கான காரணங்கள் எதுவுமே தொடரில் சரியாக இல்லை. தவிர, தமிழ் போராளிக் குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்படுவது போன்ற காட்சிகள் அனைத்துமே 1980களின் சூழலை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு காட்சியில், தமிழ் போராளிக் குழுக்களின் கடத்தல் தளமாக காட்டப்படும் வேதாரண்யம் போன்ற ஒரு இடத்தில் ஊரே சுற்றி வளைத்து, ஒரு காவல் நிலையத்தை தாக்கி, அங்கிருக்கும் தற்கொலைப் படை போராளியான ராஜியை (சமந்தா) மீட்டுச் செல்கிறது. அடுத்த காட்சியில், மொபைல் போனில் அந்தப் போராளியின் படத்தை வைத்து விசாரித்துக்கொண்டு திரிகிறார்கள் என்ஐஏ அதிகாரிகள்.

பிரதமரைக் கொல்வதற்காக போராளிக் குழுக்கள் செயல்படுத்தும் திட்டம் அதற்கு மேல் அபத்தமாக இருக்கிறது. பிரதமரைக் கொல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, மும்பையில் கதாநாயகனின் மகளைக் கடத்தி, மிரட்டும் கதை ஒன்று தனியாகச் செல்கிறது.

மொத்தமாக ஒன்பது எபிசோடுகளைக் கொண்ட இந்த ஒட்டுமொத்தத் தொடரிலும் சற்றேனும் ரசிக்கும்படி இருப்பது, கதாநாயகன், அவனது மனைவி, குழந்தைகளுக்குள் நடக்கும் பிரச்சனைகள்தான். மற்றபடி, போராளிகளின் பின்னணி காட்சிகள், அதன் பின்னால் இருக்கும் அரசியல், அவர்களது கொலை முயற்சிகள் போன்ற எல்லாமே அபத்தமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

முதல் சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் மனோஜ் பாஜ்பாய் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, துவக்க காட்சிகளில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்போது, ஒரு இளவயது நிர்வாகியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல, குடும்பத்தினருடனான காட்சிகளிலும் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்.

கதாநாயகியாக வரும் ப்ரியாமணி, குழந்தைகள் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த சீஸனில் உமையாள் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் தேவதர்ஷிணி நடித்திருக்கிறார்கள். ஆனால், அவரது பாத்திரம் தொடரோடு பொருந்தவேயில்லை. பாதியில் காணாமலும் போய்விடுகிறார்.

தற்கொலைப் படை போராளி ராஜியாக நடித்திருக்கிறார் சமந்தா. சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் பல காட்சிகளில் பிதாமகன் விக்ரமைப் போல நடித்திருக்கிறார்.

இதற்கு அடுத்த சீஸனும் வரவிருக்கிறது. இந்த மூன்றாவது சீஸனில் ஆபத்து சீனாவிலிருந்து வரும் போலிருக்கிறது. இந்த இரண்டாவது சீஸன் அனுபவத்தை வைத்துப் பார்த்தால், மூன்றாவது சீஸனில் தாக்குதல் எப்படியிருக்குமோ என்ற பயம் வருகிறது. The Family Man முதல் சீஸன் ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. ம்ஹும்!

The Family Man - Season 2 விமர்சனம்: எப்படியிருக்கிறது சர்ச்சைகளுக்கு இடையே வெளியான அமெஸான் தொடர்? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.