Jump to content

தமிழீழ தாயகத்தை அமெரிக்கா ஏற்கிறதா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குணா, இந்தப் பிரேரணை ஊதிப் பெருப்பிக்கப் படுகிறது என்றே நான் கருதுகிறேன்.

 மேலும் இது அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறதே தவிர நிறைவேற்றப் படவில்லை. (2019 இல் அறிமுகம் செய்யப்பட்ட இது போன்ற பத்தாம் ஆண்டு நினைவுப் பிரேரணை இன்னும் நிறைவேற்றப் படவோ, வாக்கெடுப்புக்கு விடப் படவோ இல்லையென்பது முக்கியமானது).

அமெரிக்க அரசாங்கம் ஒன்றிலொன்று சார்ந்திராத 3 பிரிவுகள் கொண்டது:

1. சட்டவாக்கப் பிரிவு (அமெரிக்க காங்கிரஸ்)

2. நிறைவேற்றுப் பிரிவு (வெள்ளை மாளிகையும், அமைச்சுக்களும்)

3. நீதித்துறை (உயர்நீதிமன்றும் அதன் கீழுள்ள நீதிமன்றங்களும்).

இவற்றுள் நீங்கள் சொன்னது போல நடைமுறைக்குப் பயனுள்ள முடிவுகளை நிறைவேற்றுப் பிரிவின் கீழ் வரும் வெளிநாட்டமைச்சு (State Department) போன்றவை தான் தமிழர் விடயத்தில் எடுக்க முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நன்றி குணா, இந்தப் பிரேரணை ஊதிப் பெருப்பிக்கப் படுகிறது என்றே நான் கருதுகிறேன்.

 மேலும் இது அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறதே தவிர நிறைவேற்றப் படவில்லை. (2019 இல் அறிமுகம் செய்யப்பட்ட இது போன்ற பத்தாம் ஆண்டு நினைவுப் பிரேரணை இன்னும் நிறைவேற்றப் படவோ, வாக்கெடுப்புக்கு விடப் படவோ இல்லையென்பது முக்கியமானது).

அமெரிக்க அரசாங்கம் ஒன்றிலொன்று சார்ந்திராத 3 பிரிவுகள் கொண்டது:

1. சட்டவாக்கப் பிரிவு (அமெரிக்க காங்கிரஸ்)

2. நிறைவேற்றுப் பிரிவு (வெள்ளை மாளிகையும், அமைச்சுக்களும்)

3. நீதித்துறை (உயர்நீதிமன்றும் அதன் கீழுள்ள நீதிமன்றங்களும்).

இவற்றுள் நீங்கள் சொன்னது போல நடைமுறைக்குப் பயனுள்ள முடிவுகளை நிறைவேற்றுப் பிரிவின் கீழ் வரும் வெளிநாட்டமைச்சு (State Department) போன்றவை தான் தமிழர் விடயத்தில் எடுக்க முடியும்.

 

 

On 4/6/2021 at 19:54, Kuna kaviyalahan said:

 

நேற்று இதை பார்த்து விட்டு இதில் @Kadancha வையும் tag பண்ண வேண்டும் என நினைத்தேன் சீமான் சோலியில் மறந்து விட்டேன்.

இதை நம்மை பேச வைத்து, அதனால் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து - அதன் மூலம் தன் காரியத்தை சாதிக்க அமெரிக்கா முயல்கிறதா?

அப்படி என்றால் நாம் மீண்டும் இலவு காத்த கிளிதான்.

போன வீடியோவில் குணா, இந்தியாவின் லிமிட்டை இலங்கை தொட்டு விட்டதாக கூறி இருந்தார்.

அதன்படி பார்த்தால் கடந்த தீர்மானங்கள் போலல்லாது இந்த தீர்மானம் வேறு திசையில் செல்ல கூடும் என்றும் கருதலாம்.

அண்மையில், இந்த செய்தி வந்தபின், நேரம் கிடைத்த போது அமெரிக்காவில் காங்கிரசில் ஒரு பிரேரணை சட்டம் ஆகும் படிமுறை பற்றி மேலோட்டமாக வாசித்தேன்.

நான் வாசித்த மட்டில் இது இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும் போல இருக்கிறது.

அப்படி பார்த்தால் - இப்போதைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சாதனமாகவே இதை பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் எவர் எதைக் கூறினாலும் செய்தாலும் எங்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் எங்கள் எதிர்காலம் என்னவென்று !!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

யார் எவர் எதைக் கூறினாலும் செய்தாலும் எங்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் எங்கள் எதிர்காலம் என்னவென்று !!!!!!

கொஞ்சம் வெளியாலயும் சொல்லுங்களன் கேட்க 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் வெளியாலயும் சொல்லுங்களன் கேட்க 🙂

4_12_2021-4_20_54-PM.png

 இவரைத் தெரிகிறதா.. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

4_12_2021-4_20_54-PM.png

 இவரைத் தெரிகிறதா.. 😜

கொஞ்சம் மங்கலா தெரியுது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

கொஞ்சம் மங்கலா தெரியுது🤣

ஒரே பனி மூட்டமா இருக்கு. 😂

Link to comment
Share on other sites

On 5/6/2021 at 22:32, goshan_che said:

 

நேற்று இதை பார்த்து விட்டு இதில் @Kadancha வையும் tag பண்ண வேண்டும் என நினைத்தேன் சீமான் சோலியில் மறந்து விட்டேன்.

இதை நம்மை பேச வைத்து, அதனால் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து - அதன் மூலம் தன் காரியத்தை சாதிக்க அமெரிக்கா முயல்கிறதா?

அப்படி என்றால் நாம் மீண்டும் இலவு காத்த கிளிதான்.

போன வீடியோவில் குணா, இந்தியாவின் லிமிட்டை இலங்கை தொட்டு விட்டதாக கூறி இருந்தார்.

அதன்படி பார்த்தால் கடந்த தீர்மானங்கள் போலல்லாது இந்த தீர்மானம் வேறு திசையில் செல்ல கூடும் என்றும் கருதலாம்.

அண்மையில், இந்த செய்தி வந்தபின், நேரம் கிடைத்த போது அமெரிக்காவில் காங்கிரசில் ஒரு பிரேரணை சட்டம் ஆகும் படிமுறை பற்றி மேலோட்டமாக வாசித்தேன்.

நான் வாசித்த மட்டில் இது இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும் போல இருக்கிறது.

அப்படி பார்த்தால் - இப்போதைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சாதனமாகவே இதை பார்க்க முடியும்.

சட்டமாக்குவாதற்காக கொண்டுவரப்படும் தீர்மான முறைமை வேறு இது வேறு. இது வெறும் அறிக்கை பெறுமானம் மட்டுமே உடையது. இன்னொரு காணொளியில் விளக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kuna kaviyalahan said:

சட்டமாக்குவாதற்காக கொண்டுவரப்படும் தீர்மான முறைமை வேறு இது வேறு. இது வெறும் அறிக்கை பெறுமானம் மட்டுமே உடையது. இன்னொரு காணொளியில் விளக்கிறேன் 

நன்றி குணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/top_story/EU-Parliament-adopts-resolution-on-Sri-Lanka/155-213843
திண்ணையில் இதை நிழலி பகிர்ந்திருந்தார்.

@Kadanchaமுன்பு ஒரு திரியில் அமேரிக்காவில் சளிப்பிடித்தால் யூகே, ஈயுவில் தும்மல் வரும் என்றேன். வந்து விட்டது போல் படுகிறது.

ஆனால் குணா சொல்வது போல் எல்லாம் சட்ட வலுவற்ற பூர்வாங்க நடவடிக்கை போலத்தான் படுகிறது.

இவற்றை காட்டி இலங்கையை வழிக்கு கொண்டு வர முயற்சிக்க கூடும். அதற்கு மேல் போவார்கள் போல் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

18 minutes ago, goshan_che said:

ஆனால் குணா சொல்வது போல் எல்லாம் சட்ட வலுவற்ற பூர்வாங்க நடவடிக்கை போலத்தான் படுகிறது.

இவற்றை காட்டி இலங்கையை வழிக்கு கொண்டு வர முயற்சிக்க கூடும். அதற்கு மேல் போவார்கள் போல் தெரியவில்லை.

 கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டு அடுத்தவன் தீர்மானம் போடுவான் என்று காலம் முழுவதும் காத்திருக்க வேண்டியது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

http://www.dailymirror.lk/top_story/EU-Parliament-adopts-resolution-on-Sri-Lanka/155-213843
திண்ணையில் இதை நிழலி பகிர்ந்திருந்தார்.

@Kadanchaமுன்பு ஒரு திரியில் அமேரிக்காவில் சளிப்பிடித்தால் யூகே, ஈயுவில் தும்மல் வரும் என்றேன். வந்து விட்டது போல் படுகிறது.

ஆனால் குணா சொல்வது போல் எல்லாம் சட்ட வலுவற்ற பூர்வாங்க நடவடிக்கை போலத்தான் படுகிறது.

இவற்றை காட்டி இலங்கையை வழிக்கு கொண்டு வர முயற்சிக்க கூடும். அதற்கு மேல் போவார்கள் போல் தெரியவில்லை.

குணா விளக்க முதல் நான் முந்திரிக் கொட்டை மாதிரி முந்த விரும்பவில்லை!😎

ஆனால் ஒரு விடயத்தை மட்டும் இங்கே வாழும் ஒருவர் என்ற வகையில் சொல்ல விரும்புகிறேன்: பிரேரணை என்பது சட்ட வலுவற்றது. ஆனால், ஒரு பிரேரணை கூட பிரதிநிதிகள் சபையூடாக வாக்கெடுப்பிற்கு விடப் படும் வாய்ப்புகள் மிகவும் அரிது - இதனால் தான் அந்த 2019 பிரேரணையே அறிமுக நிலையைத் தாண்டவில்லை!

காரணம் என்ன? இந்த மக்கள் பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) இருக்கும் 435 பேருக்கும், இலங்கையில் இருக்கும் பா.உ க்களுக்கும் செயற்பாட்டளவில் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பிரதிநிதிகளை அவர்களின் உதவியாளர்கள் இல்லாமல் தனியே மடக்கி இலங்கையை உலக வரை படத்தில் காட்டும் படி கேட்டால் அரை வாசிப் பேருக்கு மேல் தெரியாமல் தடுமாறுவர் -அவ்வளவு தான் பெரும்பாலான பிரதிநிதிகளின் பொது அறிவு, சராசரி அமெரிக்கனை விடக் குறைவு.

இந்த நிலையினால் உள்ளூர் பிரச்சினைகளையே தீர்க்க முடியாமல் பெரும்பாலானோர் கட்சி அரசியல் மட்டும் செய்து சம்பளம் கிம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டு அடுத்தவன் தீர்மானம் போடுவான் என்று காலம் முழுவதும் காத்திருக்க வேண்டியது தான். 

இங்கே இவரது புலம்பல்களை எவரும் கவனிப்பதில்லையா அல்லது ***** என்று விலகி போகிறார்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

இங்கே இவரது புலம்பல்களை எவரும் கவனிப்பதில்லையா அல்லது **** என்று விலகி போகிறார்களா???

 வணக்கம் விசுகர்!  அந்த புலம்பல்களை பலர் நீண்ட காலமாக கவனிக்காமல் விட்டு விட்டனர் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்பதை மிக மன வருத்தத்தோடு அறியத்தருகின்றேன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை விட தலைவர் 2008 மாவீரர் தின நிகழ்வுரையில் சொல்லிட்டார்.. உலக பூகோள - இராணுவ அரசில் வியூகங்கள்.. வளர்ந்து வரும்.. ஆசிய பொருண்மியம் நோக்கியே  இருக்கும் என்று.

சீமான் சொல்வது போல... எதுவும் சாத்தியத்தில் இருந்து உருவாவதில்லை.. தேவையில் இருந்தே உருவாகிறது.

சொறீலங்கா சிங்கள இனவாத ஆட்சியாளர்கள் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் வரை தமிழர்களுக்கு  சில சாதகமான களங்கள் உலகப் பூகோள அரசியல் தளத்தில் இருக்கவே சாத்தியமுள்ளது.

முன்னர் புலிகளை சாட்டி தமிழர்களை விலக்கி வைச்சவர்களுக்கும்.. இப்போ புலிகளே இல்லை என்ற சூழலில்... தமிழர்கள் நியாயங்களை நிராகரிக்க முடியாவிட்டாலும்... தமக்கான தேவைக்கு பயன்படுத்தவே முனைவார்கள். உலகில் எல்லா புதிய தேசங்களின் பிறப்புகளின் பின்னாடியும்.. இப்படி ஒரு கதை இருக்கவே செய்கிறது.

இதில்... தமிழர்கள் செய்ய வேண்டியது... சொறீலங்கா சிங்கள இனவாத ஆட்சியாளர்கள்.. இன்னும் இன்னும் சீனச்சார்ப்பு நிலைப்பாட்டை நோக்கி நகர்வதை வெளிப்படுத்திக் காட்டுவதில் தான் இருக்கிறது. அதேபோல்.... தமிழர்கள் வெறுமனவே ஹிந்திய சார்ப்பு நிலை எடுப்பது எப்படி சிங்களம் சீனச் சார்ப்பு நிலைப்பாடு எடுத்து சிக்கலை சந்திக்கிறதோ.. அதையே தமிழர்களுக்கு ஏற்படுத்தும். மீண்டும் தமிழர்களை பேரழிவுக்குள் ஹிந்தியம் தள்ளும்.

தமிழர்கள் செய்ய வேண்டியது மேற்குலக நலன் சார்ந்து.. ஹிந்தியாவை மேற்குலகின் தேவைப்பாட்டுக்குள் நிறுத்தி மேற்குலகின் நலன் சார்ந்து ஹிந்திய நலனை நேர்கோட்டில் கொண்டு வரத்தக்க நகர்வு தான். சீன இந்து - பசுபிக் பிராந்திய ஆக்கிரமிப்பு அல்லது விரிவாக்கம்.. என்பது.. நிச்சயம் மேற்குலகிற்கு நிம்மதியான ஒன்றல்ல. அது ஹிந்தியாவுக்கும் நிம்மதியான ஒன்றல்ல. எனவே சிங்களம் இன்று எடுத்துள்ள கடும் சீனச் சார்ப்பு போக்கை தமிழர்கள் தமக்கு ஆதாயமாகப் பாவிக்கத் தவறின்.. மீண்டும் வாய்ப்புக்கள் இழக்கப்படுமே தவிர வெற்றிக்கு வழியில்லை.

மேற்குலகின் தேவைப்பாட்டுக்குள் தமிழர்களின் பூகோள அரசியல் வெற்றி சாத்தியப்படுமா என்று சிந்திக்க வேண்டிய நேரமிது.

வெறும் யுரியுப் பார்வைகளை கூட்ட காணொளியிடுபவர்களின் நிலையில் நின்று இதனை நோக்க முடியாது. சமகாலத் தேவைப்பாடுகளில் இருந்து எமக்கான சாத்தியத்தை உருவாக்கிக் கொள்ளனும்.

புலிகள் போர் இராஜதந்திரம் சார்ந்து சில தவறுகளை விட்டிருந்தாலும்.. புலிகளின் மேற்குலக சார்பு நகர்வானது.. தமிழர்களின் நீண்ட கால தேவைகளுக்கு ஒரு நல்ல படிக்கல் என்றே சொல்லலாம். 

கடந்த சில தசாப்தங்களில் பிறந்த புதிய தேசங்கள் மேற்குலக தேவைகளை ஒட்டிப் பிறந்தவையே அன்றி சீனச் சார்ப்பு.. எடுத்து எவையும் பிறந்ததாகத் தெரியவில்லை.. வியட்நாம் போருக்குப் பின்னர் சீன சோசலிசம்.. புதிய தேசங்களை உருவாக்க உதவியதை விட.. அந்தப் போராட்டங்களை நசுக்க விளைந்த அதிகார சக்திகளுக்கு உதவி அவர்களை கடன்வலையில் மாட்டி.. அவர்களை தனது கைக்குள் போட்டது தான் அதிகம். அதனால்.. அந்த அதிகார மையங்கள் மேற்குலகால் சரித்து வீழ்ந்தப்பட்டதே நடந்து.

அது சேர்பியா தொடங்கி.. லிபியா வரை நடந்தது ஒன்று தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

 வணக்கம் விசுகர்!  அந்த புலம்பல்களை பலர் நீண்ட காலமாக கவனிக்காமல் விட்டு விட்டனர் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்பதை மிக மன வருத்தத்தோடு அறியத்தருகின்றேன்.😁

 

 

எப்ப பார்த்தாலும்

எங்கப்பன் கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டான்

காலத்தை கடத்தி விட்டான் என்று புலம்பியபடி...

அடுத்த  கட்டம்

அடுத்த வேலைத்திட்டம்

எதையுமே கதைக்க முடியாது

கூடாது

வந்திடுவார் *********....

எங்கப்பன் கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டான்

காலத்தை கடத்தி விட்டான் என்று புலம்பியபடி.

கொலை வெறியில  இருக்கிறன்  சொல்லிப்போட்டன்😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

இங்கே இவரது புலம்பல்களை எவரும் கவனிப்பதில்லையா அல்லது ******** என்று விலகி போகிறார்களா???

ஒவ்வொரு யாழ் உறுப்பினரும் தமிழர் நிலை பற்றிய தங்கள் அக்கறையை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். நாம் எடுக்காத நடவடிக்கைகள் பற்றி ருல்பென் நினைவூட்டுவது அவருடைய வழி - இதை ***** என்று சொல்வது சரியாகப் படவில்லை!

குழுவாதம் குறித்த முன்னெச்சரிக்கை காரணமாக நான் ருல்பெனுக்கு பச்சை போடவில்லை - ஆனால் அவரது கருத்து உங்களுடையதைப் போலவே கவனத்திற்குரியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நீக்கப்பட்டது

நான் மேற்கோள் காட்டியதை மொட்டையாக நீக்கப்பட்டதாம்.

Quote

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டது

ஜஸ்ரின் எழுதியதை நீக்கிவிட்டு மேற்கோள் காட்டியதை நீக்கப்பட்டதாம். 

நிழலியில் சமத்துவ உலகம். 🤣

நிழலியின் சமத்துவ உலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

குணா விளக்க முதல் நான் முந்திரிக் கொட்டை மாதிரி முந்த விரும்பவில்லை!😎

ஆனால் ஒரு விடயத்தை மட்டும் இங்கே வாழும் ஒருவர் என்ற வகையில் சொல்ல விரும்புகிறேன்: பிரேரணை என்பது சட்ட வலுவற்றது. ஆனால், ஒரு பிரேரணை கூட பிரதிநிதிகள் சபையூடாக வாக்கெடுப்பிற்கு விடப் படும் வாய்ப்புகள் மிகவும் அரிது - இதனால் தான் அந்த 2019 பிரேரணையே அறிமுக நிலையைத் தாண்டவில்லை!

காரணம் என்ன? இந்த மக்கள் பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) இருக்கும் 435 பேருக்கும், இலங்கையில் இருக்கும் பா.உ க்களுக்கும் செயற்பாட்டளவில் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பிரதிநிதிகளை அவர்களின் உதவியாளர்கள் இல்லாமல் தனியே மடக்கி இலங்கையை உலக வரை படத்தில் காட்டும் படி கேட்டால் அரை வாசிப் பேருக்கு மேல் தெரியாமல் தடுமாறுவர் -அவ்வளவு தான் பெரும்பாலான பிரதிநிதிகளின் பொது அறிவு, சராசரி அமெரிக்கனை விடக் குறைவு.

இந்த நிலையினால் உள்ளூர் பிரச்சினைகளையே தீர்க்க முடியாமல் பெரும்பாலானோர் கட்சி அரசியல் மட்டும் செய்து சம்பளம் கிம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!

குணா சொல்லமுதலே சொல்வதற்கு என்னையும் மன்னிக்கவும். 

எனது புரிதல் யூகே பாராளுமன்றை பற்றியே ஆனால் அடிப்படைகளில் பெரிய மாற்றம் இராது என நினைக்கிறேன்.

சட்டமூலத்துக்கும், பிரேரணைக்கும் வேறுபாடு உள்ளது. 

சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேறினால் -அது சட்டம் - அதை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

பிரேரணைகள் - கடப்பாடு உடையனவாயும் (binding effect), கடப்பாடு அற்றனவாயும் அமையலாம் (non binding). 

முதலாவதை அரசு புறம்தள்ளலாம். இரெண்டாவதை அரசு புறம்தள்ள முடியாது.

இப்படித்தான் அமெரிக்க காங்கிரசிலுமா?

ஆம் எனில் இது binding resolution ஆ? Non binding resolution ஆ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

 கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டு அடுத்தவன் தீர்மானம் போடுவான் என்று காலம் முழுவதும் காத்திருக்க வேண்டியது தான். 

குழு மோதலாக மாறக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக கடந்த காலத்தை பற்றி இங்கே எழுதாமல் போகிறேன்.

ஆனால் இனி என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க கூடிய நிலையில் நாம் இல்லாவிடிலும் ஒரு மாற்றம் நிகழும் போது அதை எமக்கு சார்பாக பயன்படுத்தவாவது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

கடற்கரையில் surfing செய்யும் போது - அலையடிப்பை நாம் கட்டுப்படுத்த முடியாது ஆனால் அலைவரும் போது surfboard ஐ சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான கோணத்தில் வைத்தால் we can ride the wave. 

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

ஆனால் இனி என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க கூடிய நிலையில் நாம் இல்லாவிடிலும் ஒரு மாற்றம் நிகழும் போது அதை எமக்கு சார்பாக பயன்படுத்தவாவது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஒரு மாற்றம் நிகழும் போது அதை எமக்கு சார்பாக பயன்படுத்தும் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன். அதுவே சரியான நடைமுறையாக இருக்கும் 

ஆனால் அதை பயன்படுத்தும் நிலைக்கு எம்மை தயாராக்க எம்மில்  பல மாற்றங்களை நடைமுறை சாத்திய தன்மைகளை  ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா? 

அவ்வாறான மாற்றங்களை உள்வாங்குவோர் தமிழ்  சூழலில் அரசியல்ஊ செய்வோரால் ஊக்குவிக்கப்படுகின்றனரா? 

அவ்வாறான மாற்றங்களை உள்வாங்கும் மனநிலையில் எமது அரசியல் முன்னெடுக்கப்படுகிறதா? இங்கு யாழில் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் 90 வீதமானவை பழைய தோற்றுப்போன அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தொடர்சசிதானே!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

ஒரு மாற்றம் நிகழும் போது அதை எமக்கு சார்பாக பயன்படுத்தும் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன். அதுவே சரியான நடைமுறையாக இருக்கும் 

ஆனால் அதை பயன்படுத்தும் நிலைக்கு எம்மை தயாராக்க எம்மில்  பல மாற்றங்களை நடைமுறை சாத்திய தன்மைகளை  ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா? 

அவ்வாறான மாற்றங்களை உள்வாங்குவோர் தமிழ்  சூழலில் அரசியல்ஊ செய்வோரால் ஊக்குவிக்கப்படுகின்றனரா? 

அவ்வாறான மாற்றங்களை உள்வாங்கும் மனநிலையில் எமது அரசியல் முன்னெடுக்கப்படுகிறதா? இங்கு யாழில் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் 90 வீதமானவை பழைய தோற்றுப்போன அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தொடர்சசிதானே!  

ஆம்,

இல்லை,

இல்லை,

நான் எனது மனதுக்கு பட்டதை சொல்கிறேன். உங்களுக்கும் எனக்கும் மட்டும் அல்ல - அந்த 90% மானவர்களுக்கும் பிழைகள் எவை, அவை விட்ட இடங்கள் என்ன என்பது தெரியும்.

நாம் சிலதை நினைவூட்டுவதாக நினைத்து சொல்லலாம். ஆனால் அதுவே அவர்களுக்கு குத்தி காட்டுவதாயும் அமையலாம்.

இன்னுமொன்று - நாம் யாரும் புலிகள் எடுத்தது போல பெரிய முடிவுகளை எடுக்கபோவதில்லை. சம் சும் உட்பட நாம் எல்லோரும். 

எமது களம், யதார்த்தம், சவால்கள் எல்லாமே வேறு.

ஆகவே அவர்களிடத்தில் இருந்து ஓரளவுக்கு மேல் இப்போதைய சூழலை கையாள்தல் பற்றி பாடம் படிக்கவும் முடியாது.

ஆகவே முன்னோக்கி பார்ப்பது வினைத்திறனாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

தமிழர்கள் செய்ய வேண்டியது மேற்குலக நலன் சார்ந்து.. ஹிந்தியாவை மேற்குலகின் தேவைப்பாட்டுக்குள் நிறுத்தி மேற்குலகின் நலன் சார்ந்து ஹிந்திய நலனை நேர்கோட்டில் கொண்டு வரத்தக்க நகர்வு தான்.

அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றி ஏதாவது செய்யும் என்று நம்புகிறார்கள் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றி ஏதாவது செய்யும் என்று நம்புகிறார்கள் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்.

அமெரிக்கா எங்கும் தன்னிச்சையாகச் செய்யாது. அதற்கு சாதகமான சூழல் உருவாகும் வாய்ப்பிருந்தால் செய்யும். அது குறித்து தான் சிந்திக்கனும். மேலும்.. அமெரிக்காவை.. மட்டுமோ.. ஹிந்தியாவை மட்டுமோ கருத வேண்டும் என்றில்லை. ஒட்டுமொத்த மேற்குலகின் நலனில்..இலங்கைத் தீவில்.. எமது நிலத்தின் இனத்தின்.. இருப்பும் தாக்கமும் குறித்து சிந்திக்கனும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.