Jump to content

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்தங்களையும் ஏற்று அவசரமாக பாராளுமன்றத்தினூடாக சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது.

port-city5-300x200.jpg

இந்த சட்டம்  விசேட  பொருளாதார வலயத்தை நிருவகிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்குவரி மற்றும் தீர்வைச் சலுகைகளை வழங்குவதற்கும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. சுற்றிவழைத்துக்கூறும்போது இங்கு சீனர்களையே அர்த்தப்படுத்துகிறது. இந்த “வெளிநாட்டவர்களின்” அக்கறைகறைகள் ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படுவது குறித்து கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஜனாதிபதியின் ஆலோசகரான  காமினி மாரப்பனவை துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமித்ததன் மூலம் அந்த எதிர்ப்பு சமாளிக்கப்பட்டது. திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உட்பட வேறு ஆறு இலங்கையர்களும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பர்.

hariharan-1-300x225.jpg

 ஒரு சுயாதீனமான அமைப்பு என்று கூறப்படுகின்ற  பொருளாதார ஆணைக்குழு  பாராளுமன்றம் உட்பட நாட்டின் ஒழுங்கமைப்பு  அதிகார நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் இப்போது இயங்கும். கொழும்பு துறைமுகநகரத்தில் உள்ள கம்பனிகள் இலங்கையின் சட்டங்கள், நீதித்துறையின் கீழ் செயற்படவேண்டியிருக்கும்.அத்துடன் இலங்கையின் ஏனைய பாகங்களில் நடைமுறையில் இருக்கும் நிதியியல் மற்றும் சுங்க ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படவும் வேண்டும். இவையெல்லாம் ஆணைக்குழு சட்டமுலத்தின் மூலமுதல் யோசனைகளின் மேலிருந்த பளபளப்பை இல்லாமல் செய்துவிட்டது. கொழும்பு துறைமுக த்தில் நிர்மாணிக்கப்படுவது டுபாய் அல்லது சிங்கப்பூரின் வழிகளில் ஒரு சர்வதேச நிதித்துறைமை போன்றதாக இருக்கும்  என்ற கொழும்பு துறைமுகரத்திட்டத்தின் தற்பெருமையை இல்லாமல் செய்துவிடுகிறது.இந்த சட்டத்தின் முலமாக திணிக்கப்படுகின்ற மட்டுப்பாடுகளுடன்  முதலீட்டைக் கவருவதும் விசேட பொருளாதார வலயத்தின் கோரிக்கைகளுடனும்  இணங்கிப்போவதும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கவலைக்குரியதாகவே இருக்கும்.

  துறைமுக நகரத்திட்டம் 1400 கோடி அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகக்கொண்ட இத்திட்டத்தை சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபன கொழும்பு துறைமுகநகர பிறைவேற் லிமிட் என்ற கம்பனியினால்(CHECColombo PortCity Pvt Ltd CCPC) நிர்மாணிக்கப்படுகிறது. 269 ஹெக்டேயர் நிலத்தை கடலில் இருந்து மீட்கும் பணிகள் 2019 ஜனவரியில் பூர்த்தியடைந்தன. பொது உட்கட்டமைப்பு  அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அது இந்த வருட இறுதியில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. அடுத்த 20 வருடங்களில் வர்த்தகம்,  ,நிதியியல்விருந்தோம்பல் துறை, வீட்டு வசதிதுறை, உட்பட மனைவணிக அபிவிருத்தி(Real Estate Development) ஆகியவை நிறைவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கபபடுகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 160,000 தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதற்கு பிறகு திட்டங்கள் முதிர்ச்சி கட்டத்தை அடையும்போது   எல்லாமாக 210,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்குமென்று அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

    port-city-300x200.jpg

    துறைமுக நகரதிட்டத்தில்  அடுத்த ஐந்து வருட காலத்தில் 1500 கோடி  டொலர்கள் முதலிடுகளள் வரும் என்று பாராளுமன்ற விவாதத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறினார். திட்டத்தின் நிர்மாணக் கட்டத்தின்போது 200,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியபாரிய ஆற்றல் குறித்தும் அவர் சிலாகித்தார். இந்த அறிவிப்புக்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் காரணமாக திட்டத்தின் சுயாதிபத்தியம் தொடர்பாக பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திய வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும் கூட மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றன.

     கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைக்கு வருவது சீனாவுக்கு ஒரு வெற்றியாக கருதப்படலாம். ஏனென்றால் அது கொழும்பின் மத்தியில் இன்னொரு கேந்திர முக்கியத்துவ காலடியை பதிக்கிறது. ஜனாதிபதி சி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் உலகளாவிய புகழைக் கட்டியெழுப்பும் பரந்த பின்னணியில் , அரசுக்குச் சொந்தமான சீன கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வெற்றியைக் காட்சிப்படுத்த தயாாகியிருக்கிறது. பிரதமர் ராஜபக்சவினால் மே 17 சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரம் என்று கூறப்படுகின்ற ஆவணத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ரெலிகிராவ்” இணைய பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் நிமால் ரட்ணவீர என்ற ஆய்வாளர் ” கொழும்பு கோட்டை மற்றும் அதனோடிணைந்த  கொம்பனித் தெரு பகுதிகளில் விமானப்படையினாலும் இராணுவத்தினாலும்  பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களையும்  அரசுக்குச் சொந்தமான  பெருமதிப்புமிக்க பலநூறு ஏக்கர் நிலங்களையும் அடுத்த இரு வருடங்களில் விற்பனை செய்யத் திட்டமிடுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

ராஜபக்சாக்களை கடுமையாக விமர்சனம் செய்கின்றதாக அறியப்பட்ட டெய்லி ரெலிகிராவ்  சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு விற்பனை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள   இந்த சொத்துக்களில்  விபரங்களை அறிந்திருப்பதாக கூறுகிறதது.பெய்ஜிங்கிற்கு சாந்தான கம்பெனிக்கும் அதனோடிணைந்த முதலீீட்டாளர்களுக்கும் இந்த சொத்துக்களை கைமாற்றுவதற்கான பாதையை இலகுவாக்குவதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்ட உள்ளூர் இடைத்தரகு கம்பனியூடாகவே சீன கூட்டுத்தாபனத்துக்கு இவை விற்பனை செய்ப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

     திருப்திகரமாக செயற்படாத பல சொத்துக்களை ஒப்பேறக்கூடிய — இலாபகரமான–சந்தைப்படுத்தக்கூடிய சொத்துக்களாக மாற்றும் பணி அரசுக்குச் சொந்தமான சிலென்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.முதலீட்டு துறைசார் நிறுவனங்களை அவ்வாறு மாற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு

நகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரத்தை கோரியிருக்கிறது ; கொழும்பு கோட்டை மரபுரிமைச் சதுக்கம், அசையாச்சொத்து அபிவிருத்தி மற்றும் அரசுக்குச் சொந்தமான வருந்தோம்பல் துறை ஆகியவற்றை சிலன்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸின் கீழ் கொண்டுவரப்படவிருப்பவையாகும் என்றும் டெயிலி டெலிகிராப் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

  முன்னைய சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த அரசாங்கம் கொழும்பு நகரத்தை ஒரு வரர்த்தக மற்றும் நிதியியல் தலைநகராக மாற்றும் முயற்சியில் இந்த அரசாங்க சொத்துக்கள் பலவற்றை பட்டியலிட்டிருந்ததாக தெரியவந்தது.அக்கறையுடைய  முதலீட்டாளர்களிடையேயான போட்டி ஏலச் செயன்முறையின் கீழ்இந்த திசைதிருப்புதல் ஒழுங்கமைக்கப்படவிருந்ததாக டெயிலி ரெலிகிராவ் கூறியது.

     ஆனால், சீனர்கள் செயற்படுகினற வேகத்தை அடிப்படையாகக் கொணடு நோக்குகையில் போட்டி ஏலச்செயன்முறைகளுக்கு அனுமதி வழங்கப்படக்ககூடும்.ஏனென்றால் அவ்வாறு அண்மையில் நடைபெற்றது.கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு நூறுகோடி செலவில் ஏலச்செயனமுறையின்றி 17 கிலோ மீடடர்கள் களனி– அத்துறுகிரிய உயர அதிவேக நெடுஞ்சாலையை 100 கோடி டொலர்கள் ஒப்பந்தததுக்கு சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு  வழங்க அமைச்சரவை தீர்மானித்து.சீனக்கம்பனி முக்கியமான அதிவேக நெடுஞ்சாலையொன்றை 17 வருடங்களுக்கு பிறகு நிர்மாணித்து அதன் உரிமையைக்கொண்டிருக்கும்.கைமாற்றும் உரிமையும் அதனிடமே இருக்கும்.இது ஜனாதிபதி சி ஜின்பிங்கின் மண்டலமும் பாதை என்ற தொப்பியில் இன்னொரு செண்டாக அமையும்.

 

கொழும்பு துறைமுக நகரில் சீன முதலீட்டாளர்கள்  தங்களுக்கு விருப்பமான சொத்துக்களை தெரிவுசெய்வதற்கான சாத்தியம் இருக்கும் என்கிற அதேவேளை அந்த நகரில் மேற்கத்தைய மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் அக்கறை காட்டுவார்களா?உள்நாட்டு அல்லது சீனாவைச்சேர்ந்த  முதலீட்டாளர்களை தவிர எந்தவொரு சர்வதேச முதலீட்டாளரும் கொழும்பு துறைமுக நகரில் தெரிவைச் செய்வதற்கு முன்னதாக இரண்டு கவலைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

  முதலாவதாக, பொருளாதார வலயத்துக்குள்ளும் வெளியிலும் நல்லாட்சியுடன் கூடிய பாதுகாப்பையும்  ஊழலற்ற சுதந்திரமான சூழலையும் வழங்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல். 2009 மேயில் ஈழம் போரின் முடிவுக்கு பிறகு சர்வதேச அக்கறைகளை முற்றுமுழுதாக  அலட்சியம் செய்யும்  மரபை ராஜபக்சாக்களின் கீழான இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது.நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்ற இனத்துவ அமைதி மற்றும் மனித உரிமைகைளை மீள நிலைநிறுத்துகின்ற பிரச்சினைகளும் இதில் அடங்கும்.ஒரு சில வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை அதன் புகழைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை.சட்டம்,   ஒழுங்கு நிலைவரம் மிகவும் கடுமையான அரசியல் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறது.ஊழல் தலைவிரித்தாடுகிறது.கொவிட்  — 19 பெருந்தொற்று நோயின் விளைவாக நாடு முகங்கொடுக்ககின்ற   பாரதூரமான  நிலைவரத்தை நிருவாகம்  கையாளுகின்ற முறையும் மோசமானதாகவே இருக்கிறது.

  ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இந்த பிரச்சினைகள் எல்லாம் கொழும்பு துறைமுக நகரை முதலீட்டுக்கு அனுகூலமான வலயம் என்று சிபாரிசு செய்வதற்கு முன்னதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களை ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்திக்கவைக்கலாம்.

   ராஜபக்சாக்கள் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பாதுகாப்பு சபையில் இருந்து மாத்திரமல்ல, பொருளாதார பொருளாதார நெருக்கடியில் இருந்தும் கூட மீட்டெடுப்பதற்கு சீனாவின் மீது தங்கியிருக்கும் போக்கு அதிகரித்துவருகின்றது.அதனால் நாட்டுக்கு பாதகமான முறையில் சீனாவுக்கு அனுகூலமான தீர்மானங்களை எடுப்பதன் மூலமாக அவர்கள் விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ெகாள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு முனனைய அரசாங்கம் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்திருந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை ராஜபக்சாக்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் விசேடமாக குறிப்பிட்ட  காரணம் நாட்டின் சுயாதிபத்தியமாகும்.ஆனால் சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் பகிரங்கமாகவும்  தீவிரமாகவும் உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற துறைமுக நகரத் திட்டம் என்று வரும்போது அத்தகைய சுயாதிபத்தியத்தை குறிப்பாக காணமுடியவில்லை.அதே காரணங்களைக் காட்டி ராஜபக்சாக்கள்  அமெரிக்காவின்  மிலனியம் சலெஞச் கோர்ப்போரேசன் 480 மில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு மறுத்தார்கள்.அத்தனைக்கும் அந்த திட்டங்களை கைச்சாத்திடும் யோசனையை முன்மொழிந்தது மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்ட முன்னைய நிருவாகமேயாகும். அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவுடன் விவகாரங்களைக் கையாளும்போது இலங்கையின் இத்தகைய நடத்தையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவுடனான அவற்றின் உறவுகளை மறுசீரமைத்துவரும்  நிலையில், அவற்றின் எதிர்விளைவின் வெப்பத்துக்கு இலங்கை முகங்கொடுக்கவேண்டிவரலாம்.

   இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை  அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரெஸ் பேர்ள் சரக்குக் கப்பல் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இரு வாரங்களாக எரிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதேவேளை இலங்கை, இந்திய  மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினர்தீயணைத்துக்கொண்டிருந்த காட்சிகள் இன்றைய நிலைவரத்தை எமக்கு நினைவுபடுத்துகின்றன.அந்தக்கப்பல் 25 தொன்கள்  நைத்திரிக் அமிலம் என்ற நச்சு இரசாயனத்தை ஏற்றிக்கொண்டுசென்றதை காலம் கடந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

   2021 ஆம் வருடம் சீனாவில் எருது வருடமாகும்.ஜனாதிபதி சி ஜினபிங்(1953) போன்று சீனாவில் பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் நல்லது என்று கருதப்படுகிறது  ;  மாவோ சேதுங்கும் பாம்பு வருடத்தில் பிறந்தவரே.இதுவரையில் இலங்கையில் நிலைவரங்கள் சீன ஜனாதிபதிக்கு அனுகாலமானதாகவே இருந்துவருகிறது.இலங்கையில் அவர் ஒரு வேட்டைக்கூட தீர்க்காமல் போரில் வெற்றியடைந்துகொண்டிருக்கிறார்.

https://thinakkural.lk/article/123451

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணிலேற விட்டு விட்டு இனி இப்படியான கட்டுரைகள் நிறைய வரும் படித்து கொண்டே இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் இந்திய இராணுவ பலம் பற்றி இந்தியாவைவிட அதிகம் தெரிந்து வைத்து இருப்பது பீஜிங் தான் அதனால்தான் முள்ளுக்கம்பியை கொட்டனில் சுத்தி போட்டு பிடிபட்ட இந்திய இராணுவத்தை தாக்கியவர்களாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அணிலேற விட்டு விட்டு இனி இப்படியான கட்டுரைகள் நிறைய வரும் படித்து கொண்டே இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் இந்திய இராணுவ பலம் பற்றி இந்தியாவைவிட அதிகம் தெரிந்து வைத்து இருப்பது பீஜிங் தான் அதனால்தான் முள்ளுக்கம்பியை கொட்டனில் சுத்தி போட்டு பிடிபட்ட இந்திய இராணுவத்தை தாக்கியவர்களாக்கும்.

இந்தியாவை சுத்தி உள்ள, பங்களாதேஷ், பூட்டான், பாக்கிஸ்தான், எல்லாம் சீனாவின் உதவியுடன் முன்னேறி உள்ளன. அண்மையில் பங்களாதேஸ் பொருளாதார வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இலங்கைக்கு 500M டொலர் கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இஸ்லாமிய நாடுகள் என்று மேலை நாடுகள் ஒதுக்க, சீனா கை கொடுத்து மேலே தூக்கி விடுகிறது.

பேசாமல், சீனாவுடன் பேசி, ஒரு தீர்வை வாங்கி தாருங்கள், நாமும் உங்களை ஆதரிக்கிறோம் என்பது தான் காலத்தின் தேவை போல உள்ளது.

இந்தியர்கள், எப்போதுமே தங்கள் நலன்களை தான் பார்ப்பார்கள். அதிலும் ஒரு முறைமையோ, சிறப்போ இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அணிலேற விட்டு விட்டு இனி இப்படியான கட்டுரைகள் நிறைய வரும் படித்து கொண்டே இருக்க வேண்டியதுதான் . ஏனென்றால் இந்திய இராணுவ பலம் பற்றி இந்தியாவைவிட அதிகம் தெரிந்து வைத்து இருப்பது பீஜிங் தான் அதனால்தான் முள்ளுக்கம்பியை கொட்டனில் சுத்தி போட்டு பிடிபட்ட இந்திய இராணுவத்தை தாக்கியவர்களாக்கும்.

செருப்பால் அடித்தே  கொன்றார்கள் என்றுதான் கேள்வி. ஆனால் நீங்களோ நாகரீகமாக கட்டையால் அடித்தார்கள் என்று கூறுகிறீர்கள்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

செருப்பால் அடித்தே  கொன்றார்கள் என்றுதான் கேள்வி. ஆனால் நீங்களோ நாகரீகமாக கட்டையால் அடித்தார்கள் என்று கூறுகிறீர்கள்.. 😂

சைனீஸ் ஐ பொறுத்தவரை முள்ளுக்கம்பி கட்டையால்   அடித்தே கொல்வது  பாரிய அவமானம் என்று நினைத்தார்களோ தெரியலை  வாழ் வெட்டு முன் நெஞ்சு பகுதியில் விழுவது கௌவுரவம் அரச  வம்ச பிள்ளைகள் இறந்து பிறந்தால் வாளால் வெட்டியே புதைப்பது உண்டு அதே போல் துப்பாக்கியுடன் போனவர்களை நிராயுதபாணிகளாக கைதியாக்கி இவ்வாறு கொல்வது  "உங்களுக்கெல்லாம் துப்பாக்கி குண்டு சிலவழிப்பது வேஸ்டுடா " என்பது போல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  இணையதள பேட்டியின்போது , புலிகள் ரொம்ப அநியாயம் பண்ணினாங்க என்று அடுக்கிகொண்டே போகிறார்.

பேட்டி காண்பவர் கேட்கிறார் அப்போ இந்திய அமைதிபடை யாழ் மருத்துவமனை உட்பட்ட பல படுகொலைகள் செய்ததாக ஈழதமிழர்கள் கூறுகிறார்களே ?

அதுக்கு என்னமோ வடிவேலு நகைச்சுவை பார்த்து சிரித்தவர்மாதிரி ஹி ..ஹி என்றுசிரிச்சுக்கொண்டே சொல்கிறார்,

புலிகள் தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்தவங்க கொல்லப்பட்டால் அவங்க சகபாடிகள் சும்மா இருப்பாங்களா அவங்க கையிலையும் ஆயுதம் இருக்கு என்பதுபோல்.

புலிகள் தாக்குதலில் ராணுவம் கொல்லப்பட்டால் ராணுவம் கோபத்தை காண்பிக்க வேண்டியது புலிகள் மேலையா பொதுமக்கள் மேலையா?

பொது மக்களை படுகொலை செய்ய உங்களுக்கு எதுக்கு ராணுவ பயிற்சி ஆயுதம், டாங்கிகள், துணைக்கண்டத்தில் பலம் வாய்ந்த ராணுவம் என்றொரு பட்டம்?

ஹரிகரன்,

ஸ்ரீலங்கா என்பது சிங்களவர்களின் நாடு, அவன் தன்னோட நாட்டுக்குள் 

சீனாவை கூட்டி வந்து குடியமர்த்தலாம்..

பாகிஸ்தான்காரர்களுக்கு பாய் விரித்து பந்தி பரி மாறலாம் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவன் என்ன டெல்லியில் சீனாக்காரனை கூட்டி வந்தா குடும்பம் நடத்துறான்?

உலகின் அனைத்து நாடுகளுக்கும் அதன் எல்லையில் உள்ள நாடுகளில் ஆககுறைந்தது ஏதாவது ஒரு நாடு நட்பாயிருக்கும்,  இந்தியாவுக்கு அவர்களை சுற்றியிருப்பவர்கள் எவருமே நட்பாயில்லையே அது ஏன்?

உலகின் மிகபெரிய ஜனநாயகநாடு, அகிம்சையை போதித்த தேசம் என்று அடித்து விட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தனை விரட்டி விரட்டி எல்லோரும் அவனுடன் நண்பனாக பார்ப்பார்கள். ஆனால் மாறாக சுற்றியிருக்கும் எவருக்குமே உங்களை பிடிக்கவில்லையென்றால் தப்பு நிச்சயமாக மற்றவர்கள்மேல் இருக்க வாய்ப்பில்லை.

ஈழதமிழரில் பெரும்பாலானோர் மனநிலையை  பொறுத்தவரை புலிகளையும் அவர்கள்  கட்டுப்பாட்டையும் இழந்த எமது பகுதிகளை இனி உலகின் எந்த சக்தி  வந்து ஆக்கிரமித்தாலும் கவலையில்லை, 

ஏனென்றால் சிங்களவன்  ஹிந்தியர்களைவிட நிச்சயமாக அவர்கள் பெரும் கொடியவர்களாக இருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அண்மையில் பங்களாதேஸ் பொருளாதார வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இலங்கைக்கு 500M டொலர் கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இதன் அர்த்தம் என்ன? சீனாவின் கடன் உதவியை சரியாக பாவித்தால் வளர்ச்சி அடையலாம்.  

கடனில் சிக்கும் அல்லது சீனாவால் சிக்க வைக்கப்படுகி நாடுகள் என்பது, கடன் வாங்கும் நாடுகள் எந்த நோக்கத்தை எண்ணி சீனாவிலன்  கடன் வசதியை எடுத்தன என்பதில் தங்கி உள்ளது.

சீன சொல்வதும் அதுவே, கடன் தரலாம், வெகு குறைந்த நிபந்தனைகளோடு,  நோக்கத்தை கடன் எடுக்கும் நாடுகளே தீர்மானிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

இதன் அர்த்தம் என்ன? சீனாவின் கடன் உதவியை சரியாக பாவித்தால் வளர்ச்சி அடையலாம்.  

கடனில் சிக்கும் அல்லது சீனாவால் சிக்க வைக்கப்படுகி நாடுகள் என்பது, கடன் வாங்கும் நாடுகள் எந்த நோக்கத்தை எண்ணி சீனாவிலன்  கடன் வசதியை எடுத்தன என்பதில் தங்கி உள்ளது.

சீன சொல்வதும் அதுவே, கடன் தரலாம், வெகு குறைந்த நிபந்தனைகளோடு,  நோக்கத்தை கடன் எடுக்கும் நாடுகளே தீர்மானிக்க வேண்டும்.

நாட்டின் பெயரில் கடனை வாங்கி அதனை தனிமனித பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் போட்டால் நாடு எப்படி முன்னேறும்?

ரணில் கோஸ்டி வாங்கிக்கொள்ளை அடித்தார்கள். அதில் மகிந்தருக்கு பங்கு போக, அவரும் விசாரணை பேச்சே இல்லாமல் இருக்கிறார்.

இப்போது சீனா கொடுத்த பணமெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில்.... 

நான் உங்களுக்கு ஒரு 1 மில்லியன் அனுப்பினால், money லாண்டரிங். அதனையே, நாட்டின் மத்திய வங்கியே 100 மில்லியன் ஆக வெளியே அனுப்பினால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சைனீஸ் ஐ பொறுத்தவரை முள்ளுக்கம்பி கட்டையால்   அடித்தே கொல்வது  பாரிய அவமானம் என்று நினைத்தார்களோ தெரியலை  வாழ் வெட்டு முன் நெஞ்சு பகுதியில் விழுவது கௌவுரவம் அரச  வம்ச பிள்ளைகள் இறந்து பிறந்தால் வாளால் வெட்டியே புதைப்பது உண்டு அதே போல் துப்பாக்கியுடன் போனவர்களை நிராயுதபாணிகளாக கைதியாக்கி இவ்வாறு கொல்வது  "உங்களுக்கெல்லாம் துப்பாக்கி குண்டு சிலவழிப்பது வேஸ்டுடா " என்பது போல்.

 

பெருமாள், சீனப் படையினரும் இந்தியப் படையினரும் தடிகளால் அடிபட்டதற்குக் காரணம் எல்லைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து போர் நடவடிக்கையை ஆரம்பிப்பதில்லை இரு இராணுவங்களின் அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்திருப்பதால்! இது பிரதான செய்தி ஊடகங்களில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, கிருபன் said:

 

இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன்

சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும்  தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்தங்களையும் ஏற்று அவசரமாக பாராளுமன்றத்தினூடாக சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொண்டது.

port-city5-300x200.jpg

இந்த சட்டம்  விசேட  பொருளாதார வலயத்தை நிருவகிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்குவரி மற்றும் தீர்வைச் சலுகைகளை வழங்குவதற்கும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. சுற்றிவழைத்துக்கூறும்போது இங்கு சீனர்களையே அர்த்தப்படுத்துகிறது. இந்த “வெளிநாட்டவர்களின்” அக்கறைகறைகள் ஆணைக்குழுவில் உள்ளடக்கப்படுவது குறித்து கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஜனாதிபதியின் ஆலோசகரான  காமினி மாரப்பனவை துறைமுக நகர ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி நியமித்ததன் மூலம் அந்த எதிர்ப்பு சமாளிக்கப்பட்டது. திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உட்பட வேறு ஆறு இலங்கையர்களும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பர்.

hariharan-1-300x225.jpg

 ஒரு சுயாதீனமான அமைப்பு என்று கூறப்படுகின்ற  பொருளாதார ஆணைக்குழு  பாராளுமன்றம் உட்பட நாட்டின் ஒழுங்கமைப்பு  அதிகார நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் இப்போது இயங்கும். கொழும்பு துறைமுகநகரத்தில் உள்ள கம்பனிகள் இலங்கையின் சட்டங்கள், நீதித்துறையின் கீழ் செயற்படவேண்டியிருக்கும்.அத்துடன் இலங்கையின் ஏனைய பாகங்களில் நடைமுறையில் இருக்கும் நிதியியல் மற்றும் சுங்க ஒழுங்குவிதிகளுக்கு இணங்கிச் செயற்படவும் வேண்டும். இவையெல்லாம் ஆணைக்குழு சட்டமுலத்தின் மூலமுதல் யோசனைகளின் மேலிருந்த பளபளப்பை இல்லாமல் செய்துவிட்டது. கொழும்பு துறைமுக த்தில் நிர்மாணிக்கப்படுவது டுபாய் அல்லது சிங்கப்பூரின் வழிகளில் ஒரு சர்வதேச நிதித்துறைமை போன்றதாக இருக்கும்  என்ற கொழும்பு துறைமுகரத்திட்டத்தின் தற்பெருமையை இல்லாமல் செய்துவிடுகிறது.இந்த சட்டத்தின் முலமாக திணிக்கப்படுகின்ற மட்டுப்பாடுகளுடன்  முதலீட்டைக் கவருவதும் விசேட பொருளாதார வலயத்தின் கோரிக்கைகளுடனும்  இணங்கிப்போவதும் ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை கவலைக்குரியதாகவே இருக்கும்.

  துறைமுக நகரத்திட்டம் 1400 கோடி அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகக்கொண்ட இத்திட்டத்தை சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபன கொழும்பு துறைமுகநகர பிறைவேற் லிமிட் என்ற கம்பனியினால்(CHECColombo PortCity Pvt Ltd CCPC) நிர்மாணிக்கப்படுகிறது. 269 ஹெக்டேயர் நிலத்தை கடலில் இருந்து மீட்கும் பணிகள் 2019 ஜனவரியில் பூர்த்தியடைந்தன. பொது உட்கட்டமைப்பு  அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அது இந்த வருட இறுதியில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. அடுத்த 20 வருடங்களில் வர்த்தகம்,  ,நிதியியல்விருந்தோம்பல் துறை, வீட்டு வசதிதுறை, உட்பட மனைவணிக அபிவிருத்தி(Real Estate Development) ஆகியவை நிறைவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கபபடுகிறது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 160,000 தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதற்கு பிறகு திட்டங்கள் முதிர்ச்சி கட்டத்தை அடையும்போது   எல்லாமாக 210,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாக இருக்குமென்று அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

    port-city-300x200.jpg

    துறைமுக நகரதிட்டத்தில்  அடுத்த ஐந்து வருட காலத்தில் 1500 கோடி  டொலர்கள் முதலிடுகளள் வரும் என்று பாராளுமன்ற விவாதத்தின்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறினார். திட்டத்தின் நிர்மாணக் கட்டத்தின்போது 200,000 தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடியபாரிய ஆற்றல் குறித்தும் அவர் சிலாகித்தார். இந்த அறிவிப்புக்கள் எல்லா இடங்களிலும் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் காரணமாக திட்டத்தின் சுயாதிபத்தியம் தொடர்பாக பலர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திய வெளிப்படுத்தியிருக்கின்ற போதிலும் கூட மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை கிளப்பியிருக்கின்றன.

     கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைக்கு வருவது சீனாவுக்கு ஒரு வெற்றியாக கருதப்படலாம். ஏனென்றால் அது கொழும்பின் மத்தியில் இன்னொரு கேந்திர முக்கியத்துவ காலடியை பதிக்கிறது. ஜனாதிபதி சி ஜின்பிங்கின் கீழ் சீனாவின் உலகளாவிய புகழைக் கட்டியெழுப்பும் பரந்த பின்னணியில் , அரசுக்குச் சொந்தமான சீன கனரக பொறியியல் கூட்டுத்தாபனம் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் வெற்றியைக் காட்சிப்படுத்த தயாாகியிருக்கிறது. பிரதமர் ராஜபக்சவினால் மே 17 சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அமைச்சரவைப் பத்திரம் என்று கூறப்படுகின்ற ஆவணத்தை மேற்கோள்காட்டி கொழும்பு ரெலிகிராவ்” இணைய பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் நிமால் ரட்ணவீர என்ற ஆய்வாளர் ” கொழும்பு கோட்டை மற்றும் அதனோடிணைந்த  கொம்பனித் தெரு பகுதிகளில் விமானப்படையினாலும் இராணுவத்தினாலும்  பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களையும்  அரசுக்குச் சொந்தமான  பெருமதிப்புமிக்க பலநூறு ஏக்கர் நிலங்களையும் அடுத்த இரு வருடங்களில் விற்பனை செய்யத் திட்டமிடுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

ராஜபக்சாக்களை கடுமையாக விமர்சனம் செய்கின்றதாக அறியப்பட்ட டெய்லி ரெலிகிராவ்  சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு விற்பனை செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள   இந்த சொத்துக்களில்  விபரங்களை அறிந்திருப்பதாக கூறுகிறதது.பெய்ஜிங்கிற்கு சாந்தான கம்பெனிக்கும் அதனோடிணைந்த முதலீீட்டாளர்களுக்கும் இந்த சொத்துக்களை கைமாற்றுவதற்கான பாதையை இலகுவாக்குவதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்ட உள்ளூர் இடைத்தரகு கம்பனியூடாகவே சீன கூட்டுத்தாபனத்துக்கு இவை விற்பனை செய்ப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

     திருப்திகரமாக செயற்படாத பல சொத்துக்களை ஒப்பேறக்கூடிய — இலாபகரமான–சந்தைப்படுத்தக்கூடிய சொத்துக்களாக மாற்றும் பணி அரசுக்குச் சொந்தமான சிலென்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.முதலீட்டு துறைசார் நிறுவனங்களை அவ்வாறு மாற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு

நகர அபிவிருத்தி அதிகார சபை அங்கீகாரத்தை கோரியிருக்கிறது ; கொழும்பு கோட்டை மரபுரிமைச் சதுக்கம், அசையாச்சொத்து அபிவிருத்தி மற்றும் அரசுக்குச் சொந்தமான வருந்தோம்பல் துறை ஆகியவற்றை சிலன்டைவா இன்வெஸ்ட்மென்ட்ஸின் கீழ் கொண்டுவரப்படவிருப்பவையாகும் என்றும் டெயிலி டெலிகிராப் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

  முன்னைய சிறிசேன — விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த அரசாங்கம் கொழும்பு நகரத்தை ஒரு வரர்த்தக மற்றும் நிதியியல் தலைநகராக மாற்றும் முயற்சியில் இந்த அரசாங்க சொத்துக்கள் பலவற்றை பட்டியலிட்டிருந்ததாக தெரியவந்தது.அக்கறையுடைய  முதலீட்டாளர்களிடையேயான போட்டி ஏலச் செயன்முறையின் கீழ்இந்த திசைதிருப்புதல் ஒழுங்கமைக்கப்படவிருந்ததாக டெயிலி ரெலிகிராவ் கூறியது.

     ஆனால், சீனர்கள் செயற்படுகினற வேகத்தை அடிப்படையாகக் கொணடு நோக்குகையில் போட்டி ஏலச்செயன்முறைகளுக்கு அனுமதி வழங்கப்படக்ககூடும்.ஏனென்றால் அவ்வாறு அண்மையில் நடைபெற்றது.கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு நூறுகோடி செலவில் ஏலச்செயனமுறையின்றி 17 கிலோ மீடடர்கள் களனி– அத்துறுகிரிய உயர அதிவேக நெடுஞ்சாலையை 100 கோடி டொலர்கள் ஒப்பந்தததுக்கு சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு  வழங்க அமைச்சரவை தீர்மானித்து.சீனக்கம்பனி முக்கியமான அதிவேக நெடுஞ்சாலையொன்றை 17 வருடங்களுக்கு பிறகு நிர்மாணித்து அதன் உரிமையைக்கொண்டிருக்கும்.கைமாற்றும் உரிமையும் அதனிடமே இருக்கும்.இது ஜனாதிபதி சி ஜின்பிங்கின் மண்டலமும் பாதை என்ற தொப்பியில் இன்னொரு செண்டாக அமையும்.

 

கொழும்பு துறைமுக நகரில் சீன முதலீட்டாளர்கள்  தங்களுக்கு விருப்பமான சொத்துக்களை தெரிவுசெய்வதற்கான சாத்தியம் இருக்கும் என்கிற அதேவேளை அந்த நகரில் மேற்கத்தைய மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் அக்கறை காட்டுவார்களா?உள்நாட்டு அல்லது சீனாவைச்சேர்ந்த  முதலீட்டாளர்களை தவிர எந்தவொரு சர்வதேச முதலீட்டாளரும் கொழும்பு துறைமுக நகரில் தெரிவைச் செய்வதற்கு முன்னதாக இரண்டு கவலைகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும்.

  முதலாவதாக, பொருளாதார வலயத்துக்குள்ளும் வெளியிலும் நல்லாட்சியுடன் கூடிய பாதுகாப்பையும்  ஊழலற்ற சுதந்திரமான சூழலையும் வழங்குவதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய ஆற்றல். 2009 மேயில் ஈழம் போரின் முடிவுக்கு பிறகு சர்வதேச அக்கறைகளை முற்றுமுழுதாக  அலட்சியம் செய்யும்  மரபை ராஜபக்சாக்களின் கீழான இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது.நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்ற இனத்துவ அமைதி மற்றும் மனித உரிமைகைளை மீள நிலைநிறுத்துகின்ற பிரச்சினைகளும் இதில் அடங்கும்.ஒரு சில வழக்குகளில் இலங்கையின் நீதித்துறை அதன் புகழைக் காப்பாற்றிக்கொள்ளவில்லை.சட்டம்,   ஒழுங்கு நிலைவரம் மிகவும் கடுமையான அரசியல் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறது.ஊழல் தலைவிரித்தாடுகிறது.கொவிட்  — 19 பெருந்தொற்று நோயின் விளைவாக நாடு முகங்கொடுக்ககின்ற   பாரதூரமான  நிலைவரத்தை நிருவாகம்  கையாளுகின்ற முறையும் மோசமானதாகவே இருக்கிறது.

  ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இந்த பிரச்சினைகள் எல்லாம் கொழும்பு துறைமுக நகரை முதலீட்டுக்கு அனுகூலமான வலயம் என்று சிபாரிசு செய்வதற்கு முன்னதாக சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்களை ஒன்றுக்கு இரு தடவைகள் சிந்திக்கவைக்கலாம்.

   ராஜபக்சாக்கள் தங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பாதுகாப்பு சபையில் இருந்து மாத்திரமல்ல, பொருளாதார பொருளாதார நெருக்கடியில் இருந்தும் கூட மீட்டெடுப்பதற்கு சீனாவின் மீது தங்கியிருக்கும் போக்கு அதிகரித்துவருகின்றது.அதனால் நாட்டுக்கு பாதகமான முறையில் சீனாவுக்கு அனுகூலமான தீர்மானங்களை எடுப்பதன் மூலமாக அவர்கள் விலையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ெகாள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு முனனைய அரசாங்கம் இந்தியாவுடனும் ஜப்பானுடனும் செய்திருந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை ராஜபக்சாக்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் விசேடமாக குறிப்பிட்ட  காரணம் நாட்டின் சுயாதிபத்தியமாகும்.ஆனால் சீன துறைமுக பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் பகிரங்கமாகவும்  தீவிரமாகவும் உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற துறைமுக நகரத் திட்டம் என்று வரும்போது அத்தகைய சுயாதிபத்தியத்தை குறிப்பாக காணமுடியவில்லை.அதே காரணங்களைக் காட்டி ராஜபக்சாக்கள்  அமெரிக்காவின்  மிலனியம் சலெஞச் கோர்ப்போரேசன் 480 மில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களை கைச்சாத்திடுவதற்கு மறுத்தார்கள்.அத்தனைக்கும் அந்த திட்டங்களை கைச்சாத்திடும் யோசனையை முன்மொழிந்தது மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகக் கொண்ட முன்னைய நிருவாகமேயாகும். அமெரிக்காவும் இந்தியாவும் இந்தியாவுடன் விவகாரங்களைக் கையாளும்போது இலங்கையின் இத்தகைய நடத்தையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவுடனான அவற்றின் உறவுகளை மறுசீரமைத்துவரும்  நிலையில், அவற்றின் எதிர்விளைவின் வெப்பத்துக்கு இலங்கை முகங்கொடுக்கவேண்டிவரலாம்.

   இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை  அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்.வி. எக்ஸ்பிரெஸ் பேர்ள் சரக்குக் கப்பல் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இரு வாரங்களாக எரிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த அதேவேளை இலங்கை, இந்திய  மற்றும் சர்வதேச தீயணைப்பு படையினர்தீயணைத்துக்கொண்டிருந்த காட்சிகள் இன்றைய நிலைவரத்தை எமக்கு நினைவுபடுத்துகின்றன.அந்தக்கப்பல் 25 தொன்கள்  நைத்திரிக் அமிலம் என்ற நச்சு இரசாயனத்தை ஏற்றிக்கொண்டுசென்றதை காலம் கடந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

   2021 ஆம் வருடம் சீனாவில் எருது வருடமாகும்.ஜனாதிபதி சி ஜினபிங்(1953) போன்று சீனாவில் பாம்பு வருடத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் நல்லது என்று கருதப்படுகிறது  ;  மாவோ சேதுங்கும் பாம்பு வருடத்தில் பிறந்தவரே.இதுவரையில் இலங்கையில் நிலைவரங்கள் சீன ஜனாதிபதிக்கு அனுகாலமானதாகவே இருந்துவருகிறது.இலங்கையில் அவர் ஒரு வேட்டைக்கூட தீர்க்காமல் போரில் வெற்றியடைந்துகொண்டிருக்கிறார்.

https://thinakkural.lk/article/123451

 

 

இந்தக் கரிகனின்ட கட்டுரைகளை எதுக்கு எங்கட வலை ஊடகங்கள் வெளியிடுது?... 
இவங்களோட நின்டா பரவாயில்லை, இஞ்ச ரொரன்டோவில் இருக்கிற எங்கட செய்தித்தாள்களும் இவன்ர கட்டுரைகளை வெளியிடுது.... ஏன் இவனை தூக்கிப் பிடிக்கிறாங்கல் என்டே தெரியில. 

இவன் எங்கட மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளுக்கு தலைமை தாங்கி வந்தவன். வந்தவங்கள் எங்கட பெண்களை வன்புணர்ச்சி செய்தவங்கள். எங்கட மக்களை கொன்றொழிச்சவங்கள்... வீடு வளவுகளை அழிச்சவங்கள்.. 

அப்பிடிப்பட்டவன்ட புழுகுகளையெல்லாம் ஏன் வெளியிடுராங்களோ... சீ 🤢🤢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பெருமாள், சீனப் படையினரும் இந்தியப் படையினரும் தடிகளால் அடிபட்டதற்குக் காரணம் எல்லைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து போர் நடவடிக்கையை ஆரம்பிப்பதில்லை இரு இராணுவங்களின் அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்திருப்பதால்! இது பிரதான செய்தி ஊடகங்களில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

அப்ப  எவ்வளவு இந்திய ராணுவத்தையும் முள்ளுக்கம்பி கட்டையால் அடித்து கொல்லாம் தானே கொஞ்சம் லாஜிக் இருக்கனும் என்னுடன் மோதுபவர்களுக்கு அது உங்களுக்கு துப்பரவாய் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று குணா கவியழகன் @Kuna kaviyalahan வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏன் சிலவிடயங்களை நம்மை பேச வைக்க விழைகிறார்கள். அதை நாம் ஏன் பேசக்கூடாது என்று அழகாக சொல்லி இருந்தார்.

இந்த இணையங்களுக்கு, சுஜ ஆக்கம் எழுதும் அரைவேக்காடுகளுக்கு இனம் எப்படி போனாலும் கவலை இல்லை. 

அவர்களுக்கு கிளிக் வரணும் அல்லது அவர்களின் பொஸ்மார் சொன்னபடி செய்தி போட்டு கூலி வாங்கோணும்

2 hours ago, நன்னிச் சோழன் said:

 

இந்தக் கரிகனின்ட கட்டுரைகளை எதுக்கு எங்கட வலை ஊடகங்கள் வெளியிடுது?... 
இவங்களோட நின்டா பரவாயில்லை, இஞ்ச ரொரன்டோவில் இருக்கிற எங்கட செய்தித்தாள்களும் இவன்ர கட்டுரைகளை வெளியிடுது.... ஏன் இவனை தூக்கிப் பிடிக்கிறாங்கல் என்டே தெரியில. 

இவன் எங்கட மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளுக்கு தலைமை தாங்கி வந்தவன். வந்தவங்கள் எங்கட பெண்களை வன்புணர்ச்சி செய்தவங்கள். எங்கட மக்களை கொன்றொழிச்சவங்கள்... வீடு வளவுகளை அழிச்சவங்கள்.. 

அப்பிடிப்பட்டவன்ட புழுகுகளையெல்லாம் ஏன் வெளியிடுராங்களோ... சீ 🤢🤢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

நேற்று குணா கவியழகன் @Kuna kaviyalahan வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏன் சிலவிடயங்களை நம்மை பேச வைக்க விழைகிறார்கள். அதை நாம் ஏன் பேசக்கூடாது என்று அழகாக சொல்லி இருந்தார்.

இந்த இணையங்களுக்கு, சுஜ ஆக்கம் எழுதும் அரைவேக்காடுகளுக்கு இனம் எப்படி போனாலும் கவலை இல்லை. 

அவர்களுக்கு கிளிக் வரணும் அல்லது அவர்களின் பொஸ்மார் சொன்னபடி செய்தி போட்டு கூலி வாங்கோணும்

 

நான் இனைக்கிறன் உவங்கள் காசு வாங்கிப் போட்டாங்களோ என்டு... இனைக்கிறதில்லை உண்மையிலேயே வாங்கீட்டாங்கள் எனலாம்... (டொரன்டோவில் தொடர்பேயில்லாத இந்தியனின் கட்டுரை எங்கட செய்தித்தாளில் வருகுதென்டால் என்னமோ செய்ய எத்தனிக்கிறாங்கள் என்டு நினைக்கிறன்)

சொந்த இனத்தை அழிச்சவங்களின்ட (வயதான தாயைக் கூட காமம் தலைக்கேறி வேட்டையாடியவங்கள் இந்தியப் படைகள்) ஒப்புக்குப் போர்த்திய கதையள எல்லாம் ஏன் துக்கிப் போடுராங்கள்?... இதுக்குப் பேசாமல் தென்னிலங்கை சிங்களச் செய்தியை தூக்கிப் போடலாம்.. அது எவ்வளவோ மேலானது.

சை.... இழிவிலும் மானக்கெட்ட இழிவு🤮🤢

 

சீனாக்காரனை நேரடியா எதிர்க்க வக்கில்லை. அவன் உறுமினால் பம்முற கூட்டம் எங்கட மண்டையக் கழுவ வருகினம்🤣... கவனமாக இருக்க வேணும் உவங்களோட புழங்கேக்கில்லை🧐.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தக் கரிகனின்ட கட்டுரைகளை எதுக்கு எங்கட வலை ஊடகங்கள் வெளியிடுது?... 
இவங்களோட நின்டா பரவாயில்லை, இஞ்ச ரொரன்டோவில் இருக்கிற எங்கட செய்தித்தாள்களும் இவன்ர கட்டுரைகளை வெளியிடுது.... ஏன் இவனை தூக்கிப் பிடிக்கிறாங்கல் என்டே தெரியில. 

 

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து ஆய்வுகள் செய்பவர்களின் பார்வைகளும் தெரியத்தானே வேண்டும். மற்றும்படி ஹரிகரனின் பார்வைகளில் பெரிய ஈடுபாடு இல்லை.

மேலும் எமது போராட்டத்தைப் பற்றி நூல்கள், சுயசரிதைகள் எழுதிய இந்திய இராணுவ அதிகாரிகள், ராஜதந்திரிகள் ( டிக்‌ஷிற் உட்பட) ஒருவரினதும் புத்தகங்களை நான் “காசு கொடுத்து” வாங்குவதில்லை எனும் பொலிஸி வைத்திருக்கின்றேன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

பெருமாள், சீனப் படையினரும் இந்தியப் படையினரும் தடிகளால் அடிபட்டதற்குக் காரணம் எல்லைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து போர் நடவடிக்கையை ஆரம்பிப்பதில்லை இரு இராணுவங்களின் அதிகாரிகளும் ஒப்பந்தம் செய்திருப்பதால்! இது பிரதான செய்தி ஊடகங்களில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 

 

பலருக்குத் தெரியாத(புரியாத) விடயம்; 

(பெருமாளின்) நையாண்டி.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, கிருபன் said:

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து ஆய்வுகள் செய்பவர்களின் பார்வைகளும் தெரியத்தானே வேண்டும். மற்றும்படி ஹரிகரனின் பார்வைகளில் பெரிய ஈடுபாடு இல்லை.

மேலும் எமது போராட்டத்தைப் பற்றி நூல்கள், சுயசரிதைகள் எழுதிய இந்திய இராணுவ அதிகாரிகள், ராஜதந்திரிகள் ( டிக்‌ஷிற் உட்பட) ஒருவரினதும் புத்தகங்களை நான் “காசு கொடுத்து” வாங்குவதில்லை எனும் பொலிஸி வைத்திருக்கின்றேன்😎

 

இவங்கள் வல்லரசு என்ட கனவிலதான் வாழுவாங்கள்... ஒருநாளும் ஆக மாட்டாங்கள்; ஆகவும் கூடாது.... ஆண்டவரே, நீங்கள்தான் ஆசி வழங்க வேண்டும்...😁

உங்கட நல்ல கொள்கைதான்... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2021 at 10:23, கிருபன் said:

இறுதியாக, ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சீனா தாராளமாக நெருக்குதலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அக்கறைகள்  தொடர்பில் இந்தியாவுக்கு அளித்த உத்தரவாதங்களை  அவரால் எவ்வாறு உறுதியாக காப்பாற்றமுடியும்.

சிங்களத்துக்கு தர வேண்டிய அவசியம் ஏன் இப்போதைய நிலையில் உள்ளது?
 
ஹிந்தியை கொள்கை வகுப்பாளர்களின்  தரம் அறிந்து சிங்களம் தனது இறைமைக்குள் பிச்சையிட்டு விட்டு, மீண்டும்  பிச்சையை பறித்து எடுத்தது.

இது தான் இறைமை என்பதை இந்த 'முன்னாள் இராணுவ புலனாய்வு' மேதைக்கு புரியவிலாய்.

தமிழர்கள், புலிகள் போல் உணர்ச்சிவசப்பட முட்டாள்கள் அல்ல சிங்களம் என்பதை பட்டும் அறியதா 'முன்னாள் இராணுவ புலனாய்வு' பாமரன்.

உண்மையான பாமரன் கூட, இப்படி கையாண்டு இருக்க வாய்ப்பில்லை.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.