Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

வலி இருந்தால்தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று பொருள்......ஆகவே வலியை ரசியுங்கள்.....வலி இருக்கும்போது இந்தப் பொன்மொழியை நினைவில் கொள்ளவும் .......!

இது அனுபவம் : பல்வலிக்கு கொடுப்புக்குள் ஊசி போட்ட போது பரமண்டலத்தில் பிதா தெரிந்தார்.......!  😢

Link to comment
Share on other sites

22 hours ago, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

எனக்கு கொரோனா வந்தமையால் இரண்டாவது டோஸ் தான் போட்டேன். இன்று 2கிழமை. எனக்கு 5 நாட்கள் வரை கைவலியும் 2காச்சலும் இருந்தது. கைவலிக்கு ஐஸ் bag தான் நிவாரணி. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

11 hours ago, ராசவன்னியன் said:

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Ibuprofen 600 மில்லி எடுக்குமாறு மருத்துவர் சொன்னார். வலி நிவாரணி எடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கொரானா என்றால் என்ன..??!

 

https://www.bbc.co.uk/news/uk-58380099

What is long Covid? Advice in five South Asian languages.

https://www.bbc.co.uk/news/uk-58380099

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

பைசர் ரெண்டாவது டோஸ் நேற்று மாலை போட்டதிலிருந்து காலை முதல் கையில் வலி மற்றும் காய்ச்சல் வாட்டுகிறது.  நெத்தி கண்களுக்கு மேல் ஒரே சூடு அழுத்துகிறது.

முதல் டோஸ் போட்டபோது கையில் வலி மட்டும் இரண்டு நாட்கள் இருந்தது.

நாளை வார முதல் நாள், அலுவலகம் செல்ல வேண்டும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 11:55, ராசவன்னியன் said:

சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

யாழ். களத்திலேயே... அதிக  கொரோன தடுப்பூசி போட்டவராக, ராஜவன்னியன் உள்ளார்.
அதாவது இரண்டு  சினோபாம், இரண்டு பைசர் போட்டு, நான்கு ஊசிகளை ஏற்றியுள்ளார்.

எனது மகளுடன் படிக்கும் ஒரு சீன மாணவியும், சினோபாம் ஊசி போட்டதை,
பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாததால், பல சிரமங்களை எதிர் நோக்கியதால்..
பின்பு இரண்டு... மொடெர்னா ஊசி போட்டு கொண்டவர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

Ibuprofen 600 மில்லி எடுக்குமாறு மருத்துவர் சொன்னார். வலி நிவாரணி எடுங்கள். 

நன்றி.

நேற்றிரவே பாரசிடமால் குளிசையை விழுங்கிவிட்டு தூங்கினேன்.

காலையில் கை வலியும் காய்ச்சலும் நின்றுவிட்டது. இன்று அலுவலகம் சென்று பாலைவனத்திற்குள்ளும் சென்றுவிட்டு இப்பொழுதான் வீடு வந்தேன்.

18 hours ago, குமாரசாமி said:

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

இந்த தடுப்பூசி பக்க விளைவுகள், ஆளுக்கு ஆள் உடம்பின் எதிர்வினைக்கேற்ப மாறுபடுகிறது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்திலேயே... அதிக  கொரோன தடுப்பூசி போட்டவராக, ராஜவன்னியன் உள்ளார்.
அதாவது இரண்டு  சினோபாம், இரண்டு பைசர் போட்டு, நான்கு ஊசிகளை ஏற்றியுள்ளார்.

எனது மகளுடன் படிக்கும் ஒரு சீன மாணவியும், சினோபாம் ஊசி போட்டதை,
பல இடங்களில் ஏற்றுக் கொள்ளாததால், பல சிரமங்களை எதிர் நோக்கியதால்..
பின்பு இரண்டு... மொடெர்னா ஊசி போட்டு கொண்டவர்.  

உண்மைதான் சிறீ.

ஜூரிட்சில் உணவகத்திற்குள் வெள்ளைகளாக அனைவரும் இருக்கையில், நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் தடுப்பூசி சான்றிதழைக் கேட்டு, நாங்கள் சினோபாம்+1 டோஸ் பைசர் சான்றிதழை காண்பித்ததை ஏற்க மறுத்தது நெருடலாக இருந்தது.

அப்படிப்பட்டவர்கள், சுவிஸ் விசாவிற்கு 'பைசர்' மட்டுமே அனுமதி என தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கும்போது சொல்லியிருந்தால் எங்களுக்கு இந்த மனக் கஸ்டம் வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நான் இரண்டு ஊசியும் போட்டுட்டன். எனக்கு என்ரை டாக்குத்தர் பரசிட்டமோல் போடச்சொல்லி சொன்னவர். என்ரை டாக்குத்தரிட்டை கொரோனா ஊசி போட்ட ஆக்களுக்கு வலி வேதனையள் இல்லை.

அண்ணை அப்ப அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!🙃

Link to comment
Share on other sites

On 29/10/2021 at 11:55, ராசவன்னியன் said:

இன்று மாலை பைசர் இரண்டாவது டோஸ் போட போகிறேன். முதல் டோஸ் போட்டவுடன் இரண்டு நாட்கள் கையை தூக்க முடியவில்லை. அவ்வளவு வலி இருந்தது.

வலியை குறைக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

இதில் விநோதம் என்னவென்றால், சென்ற வாரம் சுவிட்சர்லாந்து சென்றபொழுது, அங்கே சில உணவகங்களில் நான் சினோபாம் இரண்டு டோஸ் மற்றும் பைசர் முதல் டோஸ் போட்டிருக்கிறேன் என்பதற்கான சான்றிதழைக் காட்டியும் அனுமதியை மறுத்தார்கள். 🥴

அதனால் முதல்வேலையாக இன்று பைசர் இரண்டாவது டோஸ் போட மருத்துவமனைக்கு செல்கிறேன்.

பாவம் நீங்கள் வன்னியரே! உங்களுக்கு ஐரோப்பியரின் வைத்தியம்பற்றி அதிகம் தெரியாது என்று நினைக்கிறேன், ஆசிய மற்றும் ஆபிரிக்கர்களில் தங்கள் வைத்தியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதில் அவர்கள் விண்ணர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

உண்மைதான் சிறீ.

ஜூரிட்சில் உணவகத்திற்குள் வெள்ளைகளாக அனைவரும் இருக்கையில், நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் தடுப்பூசி சான்றிதழைக் கேட்டு, நாங்கள் சினோபாம்+1 டோஸ் பைசர் சான்றிதழை காண்பித்ததை ஏற்க மறுத்தது நெருடலாக இருந்தது.

அப்படிப்பட்டவர்கள், சுவிஸ் விசாவிற்கு 'பைசர்' மட்டுமே அனுமதி என தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கும்போது சொல்லியிருந்தால் எங்களுக்கு இந்த மனக் கஸ்டம் வந்திருக்காது.

நீங்கள் யாழ் களத்தின் கருத்தாடல் தலைப்புக்கள் சிலவற்றை தவறவிட்டுவீட்டிருக்கிறீர்கள். இங்கு இலங்கையில் சினோபாம் போடப்படுகிறது என்ற செய்தியில் பல தகவல்கள் பகரப்பட்டன. அதில்.. ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய நாடுகள்.. சினோபாமை ஏற்காதது பற்றியும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ஆனால்.. உங்கள் ஆதங்கப்படி.. சுவிஸ் விசாப்பிரிவு.. குறிப்பிட்ட வகை வக்சீன்கள் தான் அங்கீகரிக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தால்.. உங்களின் இந்த அவல நிலை தோன்றி இருக்காது. 

பைசர் போட்ட பின் இரண்டு மூன்று நாட்கள் காய்ச்சல்.. உடல்நோ.. தலைவலி.. மந்தநிலை.. வயிற்றுப்போக்கு இருக்கலாம். தொடர்ச்சியாக அன்றி விட்டுவிட்டு இந்த அறிகுறிகள் இருக்கும். தொடர் காய்ச்சல் இருந்தால்.. பரசிற்றமோல்.. எடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!

🤣இந்த உப்பு தண்ணீரை யேர்மனியில் குத்திவிட்டதிற்கே சாந்தி அக்காவிற்கு 5 நாள் கைவலியும் 2 நாள் காச்சலும் வந்து இருக்கிறதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அண்ணை அப்ப அது ஊசியா உப்புத் தண்ணியா என்று சந்தேகமா இருக்கு!🙃

கொரோனாவை பத்தின உண்மை விசயங்கள் ஜேர்மன்காரனுக்கு நல்லாய் தெரியும் எண்டு நினைக்கிறன்.ஜேர்மன்லை கன பெரிய பிரபலங்கள் இன்னும் தடுப்பூசி போடேல்லை எண்டது பரம ரகசியம் கண்டியளோ...... இந்த வருத்தத்திலை எதோ ஒரு சூட்சுமம் இருக்கு.அது ஒரு காலமும் வெளியிலை வராது.ஆனால் கொரோனா எண்டொரு வருத்தம் இருக்கு 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

கொரோனாவை பத்தின உண்மை விசயங்கள் ஜேர்மன்காரனுக்கு நல்லாய் தெரியும் எண்டு நினைக்கிறன்.ஜேர்மன்லை கன பெரிய பிரபலங்கள் இன்னும் தடுப்பூசி போடேல்லை எண்டது பரம ரகசியம் கண்டியளோ...... இந்த வருத்தத்திலை எதோ ஒரு சூட்சுமம் இருக்கு.அது ஒரு காலமும் வெளியிலை வராது.ஆனால் கொரோனா எண்டொரு வருத்தம் இருக்கு 😷

என்னண்ணை எஸ்.ஜே.சூர்யா போல இருக்கு ஆனால் இல்லை என்று சொல்கிறீர்கள்.🤔

உங்கட நாட்டில தானே ஒரு தாதி உப்புத் தண்ணிய ஏற்றி விட்டவ?

Link to comment
Share on other sites

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

🤣இந்த உப்பு தண்ணீரை யேர்மனியில் குத்திவிட்டதிற்கே சாந்தி அக்காவிற்கு 5 நாள் கைவலியும் 2 நாள் காச்சலும் வந்து இருக்கிறதே

 

உப்புத்தண்ணீர் தானோ ?😊

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் வெள்ளியன்று வேலையிடத்தில் நின்றபோது உடல்நிலை கொஞ்சம் அசதியாக இருந்தது. எமது பிரிவுக்கான மேலாளரிடம் போய் வீட்டிற்கு போவதாகச் சொன்னேன். முதலில் போய் ஒரு விரைவுச்சோதனையை செய்துபார்க்குமாறு அவர் சொன்னார். செய்தால் எதிர்மறையென்று காட்டியது. ஏற்கனவே பலருக்குக் கொறோனா வந்துவிட்டதாக அப்போதுதான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேறுபிரிவுகளில் வேலைசெய்பவர்கள். தொற்றாளரில் ஒருவர் எமது பிரிவுக்கும் தேவைகளின் பொருட்டு வருவதுண்டு. நானும் 10:00மணியோடு வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். திங்கள் எப்போதுவருமென்று பார்த்திருந்து போய் பரிசோதித்தால் நேர்மறையென்றதும் வேறொருநிலையத்திற்குப் போய் பீசீஆர் எடுக்குமாறு கூறினார்கள். அங்கு இரண்டிற்குமான பரிசோதனை அங்கும் தொற்றென்றே காட்டியதோடு, பீசீஆர் முடிவுகளுக்கு 48மணிநேரத்தின் அழைத்தோ அல்லது இணையத்திலோ அறியாலாமென விவரங்களைத் தந்தார்கள். தாம் சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிப்பதாகவும், அவர்கள் தொடர்புகொள்வார்களென்றும் கூறினார்கள். ஆனால் 10நாட்களின் பின்னரே சிலதரவுகளைப் பெற்றார்கள். 11ஆம் நாள் மீண்டும் இரண்டு சோதனைகளையும் செய்து பார்த்தால் நேர்மறை. மீண்டும் 14நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறியுள்ளார்கள். தொடர்கிறது.... எனக்கு இரண்டாவது ஊசிபோட்டு 4மாதங்களின் பின்னர் தொற்று ஏற்பட்டுள்ளது. 
1.    வெள்ளி சோதனை எதிர்மறை 
2.    திங்கள் சோதனை நேர்மறை
3.    9ஆம் நாள் வீட்டில் பார்த்தபோது எதிர்மறை
4.    11ஆம் நாள் சோதனையில்(2) நேர்மறை
5.    11ஆம் வீட்டில் பார்த்தபோது எதிர்மறைளூ அப்படியென்றால் இந்த விரைவுப் பரசோதனைக் கருவிகள் தரமற்றைவையயா? அல்லது எல்லாமே வர்த்தகமா?என்ற வினாவும் எழுகிறது. 


ராசுக்குட்டியையும் கூகுள் ஆண்டவரையும் வாசித்து சிரித்துவிட்டுப் படுத்தா அன்றிரவு எனக்கு தீடீரென இடுப்புவலி மூச்செடுக்கவே முடியவில்லை. அவசரசிகிச்சைக்குக்  கொண்டுசென்றார்கள். அடுத்தநாள் காலை 7மணிக்கு ஓபே என்றார்கள். என்னவென்று பார்த்தால் சிறுநீரகக்கல். யூனில் அதைப்பற்றி எழுத நினைத்து எழுதமுடியவில்லை. 


இதையெழுதியதன் நோக்கம் இது ஒருவேளைபலருக்கும் பயன்படலாம் இதுபோன்ற அனுபவங்களை யாராவது களஉறவுகள் சந்தித்தீர்களா? அல்லது கேள்விப்பட்டீர்களா? என்றும் அறியவிரும்புகின்றேன். 

முன்றாவது தரமும் நேர்மறையாயின் என்று அடுத்த11ஆம் நாள் சோதிக்கப் போகவே பயமாக இருக்கிறது.   
மேலேயுள்ள பரிசோதனை தொடர்பாக மருத்துவத்துறை சார்ந்தோரும் உங்கள் ஆலோசனைகளையும் எழுதுவீர்களென எதிர்பார்க்கின்றேன். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் வெள்ளியன்று வேலையிடத்தில் நின்றபோது உடல்நிலை கொஞ்சம் அசதியாக இருந்தது. எமது பிரிவுக்கான மேலாளரிடம் போய் வீட்டிற்கு போவதாகச் சொன்னேன். முதலில் போய் ஒரு விரைவுச்சோதனையை செய்துபார்க்குமாறு அவர் சொன்னார். செய்தால் எதிர்மறையென்று காட்டியது. ஏற்கனவே பலருக்குக் கொறோனா வந்துவிட்டதாக அப்போதுதான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேறுபிரிவுகளில் வேலைசெய்பவர்கள். தொற்றாளரில் ஒருவர் எமது பிரிவுக்கும் தேவைகளின் பொருட்டு வருவதுண்டு. நானும் 10:00மணியோடு வேலைமுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். திங்கள் எப்போதுவருமென்று பார்த்திருந்து போய் பரிசோதித்தால் நேர்மறையென்றதும் வேறொருநிலையத்திற்குப் போய் பீசீஆர் எடுக்குமாறு கூறினார்கள். அங்கு இரண்டிற்குமான பரிசோதனை அங்கும் தொற்றென்றே காட்டியதோடு, பீசீஆர் முடிவுகளுக்கு 48மணிநேரத்தின் அழைத்தோ அல்லது இணையத்திலோ அறியாலாமென விவரங்களைத் தந்தார்கள். தாம் சுகாதாரத் திணைக்களத்துக்கு அறிவிப்பதாகவும், அவர்கள் தொடர்புகொள்வார்களென்றும் கூறினார்கள். ஆனால் 10நாட்களின் பின்னரே சிலதரவுகளைப் பெற்றார்கள். 11ஆம் நாள் மீண்டும் இரண்டு சோதனைகளையும் செய்து பார்த்தால் நேர்மறை. மீண்டும் 14நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கூறியுள்ளார்கள். தொடர்கிறது.... எனக்கு இரண்டாவது ஊசிபோட்டு 4மாதங்களின் பின்னர் தொற்று ஏற்பட்டுள்ளது. 
1.    வெள்ளி சோதனை எதிர்மறை 
2.    திங்கள் சோதனை நேர்மறை
3.    9ஆம் நாள் வீட்டில் பார்த்தபோது எதிர்மறை
4.    11ஆம் நாள் சோதனையில்(2) நேர்மறை
5.    11ஆம் வீட்டில் பார்த்தபோது எதிர்மறைளூ அப்படியென்றால் இந்த விரைவுப் பரசோதனைக் கருவிகள் தரமற்றைவையயா? அல்லது எல்லாமே வர்த்தகமா?என்ற வினாவும் எழுகிறது. 


ராசுக்குட்டியையும் கூகுள் ஆண்டவரையும் வாசித்து சிரித்துவிட்டுப் படுத்தா அன்றிரவு எனக்கு தீடீரென இடுப்புவலி மூச்செடுக்கவே முடியவில்லை. அவசரசிகிச்சைக்குக்  கொண்டுசென்றார்கள். அடுத்தநாள் காலை 7மணிக்கு ஓபே என்றார்கள். என்னவென்று பார்த்தால் சிறுநீரகக்கல். யூனில் அதைப்பற்றி எழுத நினைத்து எழுதமுடியவில்லை. 


இதையெழுதியதன் நோக்கம் இது ஒருவேளைபலருக்கும் பயன்படலாம் இதுபோன்ற அனுபவங்களை யாராவது களஉறவுகள் சந்தித்தீர்களா? அல்லது கேள்விப்பட்டீர்களா? என்றும் அறியவிரும்புகின்றேன். 

முன்றாவது தரமும் நேர்மறையாயின் என்று அடுத்த11ஆம் நாள் சோதிக்கப் போகவே பயமாக இருக்கிறது.   
மேலேயுள்ள பரிசோதனை தொடர்பாக மருத்துவத்துறை சார்ந்தோரும் உங்கள் ஆலோசனைகளையும் எழுதுவீர்களென எதிர்பார்க்கின்றேன். 

நன்றி

நொச்சி, நலமாக மீண்டது மகிழ்ச்சி. 

எனக்கு புரிந்த வரையில்: நீங்கள் வீட்டில் எடுத்துக் கொண்டது rapid antigen test அல்லது lateral flow test எனப்படும் துரித பரிசோதனை. வெளியே சென்று செய்து கொண்டது பி.சி.ஆர் (PCR) பரிசோதனைகள். சரியா?

அடிப்படையில் LFT test இன் நோயைக் கண்டறியும் உணர்திறன் (sensitivity) பி.சி.ஆர் இனை விடக் குறைவு. இது பயன்படும் ரெஸ்ற் கிற் வகையைப் பொறுத்து 38% முதல் 100% வரை இருக்கலாம். இதன் அர்த்தம் என்னவெனில், ஒரு தரமற்ற கிற்றை 100 கொரனா தொற்றுள்ளோரில் பாவித்தால், அவர்களுள் 38 பேரை மட்டுமே  தொற்றுள்ளோராக அந்த கிற் அடையாளம் காட்டும்.

இதனால் தான், அனேக நாடுகளில் LFT test செய்து கொண்டோர்- நோய்க்குறிகள் இருந்தால்- பி.சி.ஆர் மூலம் தொற்றை/தொற்றின்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

மேலதிக தகவல்: https://pubmed.ncbi.nlm.nih.gov/34407759/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கி பதில் எழுதியமைக்கு நன்றி.

நான் முதலில்(வெள்ளி)செய்தது Rapid Antigen Test Negativ. திங்கள் Rapid Antigen Test. Positiv என்று காட்டியதால் PCR எடுத்து Positiv. 9ஆம் நாள் வீட்டில் Rapid Antigen Test Negativ.11ஆம் இரண்டிலும் Positiv. ஒரு சிலரது தகவலின்படி 14நாட்களிலேயே அவர்களுக்கு சுகமாகியுள்ளது. இப்படி வருவதில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அல்லது இப்படித் தொடர்ச்சியாகப் Positiv வாக வரும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை அறிய முடியாதுள்ளது. நான் PCR எடுத்து ஒரு மணிநேரத்தில் வீட்டில் பரிசோதிக்க அது Negativ என்று காட்டியது. அப்படியாயின் இந்த Test Kit பிழையானதா?

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கி பதில் எழுதியமைக்கு நன்றி.

நான் முதலில்(வெள்ளி)செய்தது Rapid Antigen Test Negativ. திங்கள் Rapid Antigen Test. Positiv என்று காட்டியதால் PCR எடுத்து Positiv. 9ஆம் நாள் வீட்டில் Rapid Antigen Test Negativ.11ஆம் இரண்டிலும் Positiv. ஒரு சிலரது தகவலின்படி 14நாட்களிலேயே அவர்களுக்கு சுகமாகியுள்ளது. இப்படி வருவதில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அல்லது இப்படித் தொடர்ச்சியாகப் Positiv வாக வரும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை அறிய முடியாதுள்ளது. நான் PCR எடுத்து ஒரு மணிநேரத்தில் வீட்டில் பரிசோதிக்க அது Negativ என்று காட்டியது. அப்படியாயின் இந்த Test Kit பிழையானதா?

நன்றி

 

நொச்சி, மேலதிக தகவல்கள் நிலையை விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கின்றன.

கோவிட் நோயின் குறிகள் மறைந்த பின்னரும் சில நாட்களுக்கு கொரனா வைரஸ் சோதனை பொசிரிவாக வருவது சாதாரணமானது. இதன் காரணம், பல்கிப் பெருகாத, அழிக்கப் பட்ட வைரசின் பாகங்களைத் தான் இந்த இரு பரிசோதனைகளும் கண்டறிகின்றன. அனேகமாக பி.சி.ஆர், நோய் போன பின்னும் சில வாரங்கள் பொசிரிவாகக் காட்டும்  (வைரசின் ஆர்.என்.ஏ தொண்டையில் இருப்பதால்). அன்டிஜென் பரிசோதனை பொசிரிவாக காட்டும் வாய்ப்புகள் மிகவும் குறைவு (ஏனெனில் வைரசின் புரதம்  வைரஸ் பெருகும் போது தான் அதிகமாக இருக்கும்). 

நான் கருதுவது: மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பயன்படுத்தும் அன்டிஜென் கிற்றை மாற்றுங்கள். அல்லது அன்டிஜென் சோதனையை முற்றாகக் கைவிட்டு பி.சி.ஆர் மட்டும் பாவிக்க முடியுமா என்றும் கேளுங்கள். ஆனால், பி.சி.ஆர் சில வாரங்களுக்கு பொசிரிவாக வந்தாலும் நோய்க்குறிகள் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டியதில்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நொச்சி, மேலதிக தகவல்கள் நிலையை விளங்கிக் கொள்ள உதவியாக இருக்கின்றன.

கோவிட் நோயின் குறிகள் மறைந்த பின்னரும் சில நாட்களுக்கு கொரனா வைரஸ் சோதனை பொசிரிவாக வருவது சாதாரணமானது. இதன் காரணம், பல்கிப் பெருகாத, அழிக்கப் பட்ட வைரசின் பாகங்களைத் தான் இந்த இரு பரிசோதனைகளும் கண்டறிகின்றன. அனேகமாக பி.சி.ஆர், நோய் போன பின்னும் சில வாரங்கள் பொசிரிவாகக் காட்டும்  (வைரசின் ஆர்.என்.ஏ தொண்டையில் இருப்பதால்). அன்டிஜென் பரிசோதனை பொசிரிவாக காட்டும் வாய்ப்புகள் மிகவும் குறைவு (ஏனெனில் வைரசின் புரதம்  வைரஸ் பெருகும் போது தான் அதிகமாக இருக்கும்). 

நான் கருதுவது: மருத்துவரின் ஆலோசனையோடு நீங்கள் பயன்படுத்தும் அன்டிஜென் கிற்றை மாற்றுங்கள். அல்லது அன்டிஜென் சோதனையை முற்றாகக் கைவிட்டு பி.சி.ஆர் மட்டும் பாவிக்க முடியுமா என்றும் கேளுங்கள். ஆனால், பி.சி.ஆர் சில வாரங்களுக்கு பொசிரிவாக வந்தாலும் நோய்க்குறிகள் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டியதில்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

யஸ்ரின் அவர்களுக்கு நேரமொதுக்கித் தகவலகளை எழுதியமைக்கு நன்றி. அடுத்த பரிசோதனை எப்படி வருகிறது பார்போம். இங்கு(யேர்மனியில்) எனது அனுபவத்தில் கொறொனா நேர்மறையாக இருந்தால் 11ஆம் நாள்பரிசோதிக்கும்போது எதிர்மறையாக இருந்தால் மட்டுமே 14ஆம் நாளின்பின் வெளியே நடமாடமுடியும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மூன்றாவது ஊசி  போட்டுக்கொண்டேன். முதல் இரண்டும் பைசர் பயோன்ரெக்.இன்று  மொடேர்னா.
கொஞ்சம் காய்சல் தன்மையோடு உடல் குளிர்கின்றது. பரசிட்டமோல் போட்டும் சொல்லு கேக்குதில்லை.

அடுத்த ஊசி ஏதும் இருக்கோ எண்டு டாக்குதரிட்டை கேட்டன். சில நேரம் ஆறு மாதத்தாலை எண்டார்......

குத்துங்க எஜமான் குத்துங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

இன்று மூன்றாவது ஊசி  போட்டுக்கொண்டேன். முதல் இரண்டும் பைசர் பயோன்ரெக்.இன்று  மொடேர்னா.
கொஞ்சம் காய்சல் தன்மையோடு உடல் குளிர்கின்றது. பரசிட்டமோல் போட்டும் சொல்லு கேக்குதில்லை.

அடுத்த ஊசி ஏதும் இருக்கோ எண்டு டாக்குதரிட்டை கேட்டன். சில நேரம் ஆறு மாதத்தாலை எண்டார்......

குத்துங்க எஜமான் குத்துங்க......

மூண்டாவது ஊசிக்கு காச்சல் வராட்டித்தான் யோசிக்கனும்.. காய்ச்சல் வர்ர படியால் உடம்பில் முதல் ரெண்டு ஊசியால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கு உங்களுக்கு.. அப்பா அம்மாவும் மூண்டாவது ஊசிபோட்டவை.. அம்மா டயபிற்றிக் பேசண்ட்.. அவருக்கு பெரிதாக காய்ச்சல் வரவில்லை.. சாதாரண உடம்பு அசதியுடன் போய்விட்டது.. நோய் எதிர்ப்பு சக்தி சலரோகம் காரணமாக ரெண்டு ஊசிபோட்டும் கம்மியாகத்தான் இருக்கு எண்டு நினைக்கிறன்.. ஆனால் அப்பாவுக்கு எந்த நீண்டகால நோய்களும் இல்லை.. அவருக்கு மூண்டுநாள் காய்ச்சல் போட்டு உலைச்சு விட்டுது மூண்டாவது ஊசிக்கு.. சோ உங்களுக்கு கொரோனாவுக்கு எதிரா நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது மகிழ்ச்சியான விடமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.. சொல்ல மறந்து போனன்.

அக்டோபர் கடைசில 3ம் ஊசி போட்டனான். நவம்பர் 19 மகனுக்கு கொரொனா. 21 மனைவிக்கும்( அவ ரெண்டு டோஸ்).

நான்தான் முழு பராமரிப்பும். ஒவ்வொரு நாளும் lateral test. இரெண்டு கிழமையில் 3 PCR.  அவர்களுடன் முழுவதும் நாட்களை செலவிட்டும் ,தொத்தவில்லை.

ஆனால் உடல் நோ, சுவை இழப்பு வந்து போனது.

3ம் டோஸ் இல்லாட்டில் மனைவி போல கஸ்டப்பட்டிருப்பேன் என்றே நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.