Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

40 minutes ago, குமாரசாமி said:

Grüne Partei  ஒரு லீட்டர் பெற்றோலை இரண்டரை ஈரோவுக்கு கொண்டுவரப்போறானாம்....சந்தோசம் தானே 😁

போகவும் வரவும் பெற்றோல் விலையை பாத்துப் பாத்து கொரோனா வாங்கிற திட்டு உங்களுக்கு கேட்கிறேல்ல போல.😊

43 minutes ago, குமாரசாமி said:

Wir Schaffen Das Merkel GIF - Wir Schaffen Das Merkel We Can Do This -  Discover & Share GIFs

ஏன்....மனுசி இருக்கும் மட்டும் உங்களுக்கு என்ன குறை வைச்சது? நாட்டை கட்டுக்குலையாமல் வைச்சிருந்தது தானே 🤣

 

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

37 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஒரு நோஞ்சான் குஞ்சை இறக்கி விட்டுருக்கிறியள்....பாப்பம் என்ன கூத்து நடக்குது எண்டு....😂

Olaf Scholz Spd GIF - Olaf Scholz Scholz Spd - Discover & Share GIFs

 

🌘😊

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

பாவம் மனிசி....:(
கண்டவன் போனவன் வந்தான் வரத்தான் எல்லாரிட்டையும் திட்டு வாங்கி வாங்கி மனிதாபிமானம் என்ன எண்டதை உலகத்துக்கு சொல்லிட்டு   வருத்தத்தோடை  போயிட்டுது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் ஓணாண்டிக்கு போனவெள்ளிக்கிழமை லைற்றா உடம்பு அசதியா இருந்திச்சு.. வலி நிவாரணி எடுத்தன்.. இரவு லைற்றான காய்ச்சல் அடுத்தநாள் சனி புதுவருசம்.. அண்டு பூரா மெல்லிய காய்ச்சலும் உடல் அசெளகரிய பீலிங்கும் லேசான தொண்டை நோவும்.. வலி நிவாரணி சீரான இடைவெளியில் எடுத்துக்கொண்டேன்.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை.. பல்வேறு தானியங்களை   சிவப்பரிசியுடன் மிக்ஸ் பண்ணி வச்சிருக்கன்.. அதைதான் சோறாக்கி சாப்பிடுரனான்) போட்டு ஒரு புடிபுடிச்சன்..உறைப்பில மூக்காலும் வாயாலும் ஒழுகிச்சு.. அதோட போன மெல்லிய காய்ச்சல்தான்.. ஆனா இண்டைக்கு வரை உடம்பு அசதி அப்பப்போ இருக்கு.. சில நேரங்கள்ல சுவாசிக்கேக்க விக்ஸ் ரொபி சாப்பிட்டபின் தொண்டைக்க ஒரு பிரஸ் ஆன கூச்ச பீலிங் இருங்கும்.. அது எப்பாவாச்சும் இருக்கு.. இப்படி இருக்கும் நிலையில் திங்கள் மாலை பிள்ளைக்கு செமகாய்ச்சல்(38.5 வரை போனது). மனைவிக்கு லேசான தடிமனும் உடம்பு அசதியும்.. பிள்ளை கொரோனா தடுப்பூசி எடுக்கவில்லை.. நானும் மனைவியும் 2வது தடுப்பூசி போன ஏழாம் மாசம் எடுத்திருந்தம்.. மனைவியும் பிள்ளையும் சீரான இடைவெளியில் வலிநிவாரணி எடுக்கின்றனர்.. மகனுக்கு நேற்று இரவில் இருந்து காய்ச்சல் விட்டிருக்கு..

இது இப்படி இருக்க எனக்கு சந்தேகம் வந்ததால்நேற்று இரண்டு அண்டிஜென் ரெஸ்ற் எடுத்து பாத்தேன் இரண்டும் கொரோனா பொஸிற்றிவ் என்டு வந்திருக்கு.. இன்று மாலை pcr பரிசோதனை செய்ய உள்ளேன்…

எனக்கோ மனைவிக்கோ சுவை இழப்பும் ஏற்படவில்லை வாசனை உணர்திறனும் போகவில்லை.. எனக்கு ஒண்டரை நாள் காய்ச்சல்தான்.. அதுவும் லேசான காய்ச்சல்.. மனைவிக்கு அதுவும் இல்லை.. வெறும் மிக இலேசான தடிமன் மட்டும்தான்.. காரணம் தடுப்பூசி என்று நினைக்கிறேன்.. 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

நமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை..

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஓணாண்டி .......!   

Link to comment
Share on other sites

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

கடந்த வாரம் என் நண்பனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரனா (ஒமிக்ரோன் ஆகத்தான் இருக்க வேண்டும்)  வந்து போயுள்ளது. உங்களுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளும் அவர்களுக்கும் இருந்தது. நண்பனது மகளுக்கு ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். இரண்டாவது அடுத்த மாசம் போட உள்ளனர். அவர் மகளுக்கும் வந்து ஒரு நாளில் காச்சல் போய் விட்டது.

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக 

 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

11 minutes ago, நிழலி said:


 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

ஜயோ சகோதரங்களே நான் கடைக்கு போனது ஞாயித்துக்கிழமை.. ரெஸ்ட் பண்ணினது நேத்து மாலை அதுவும் வீட்டில் எல்லோரும் நோய்வாய்ப்பட்டபின்புதான்.. அதுவரைக்கும் நான் இது சீசனல் ஃபுழு எண்டுதான் நினைச்சு கொண்டிருந்தன்.. ஏனெனில் நான் எந்த நிமிடமும் வீட்டை தவிர வெளியே மாஸ்க் கழட்டுவதில்லை அதைவிட பப்ளிக் ரான்ஸ்போட் பயன்படுத்துவதில்லை அத்தோடு எனது வேலையும் ஆட்களுடன் பழகுவதில்லை.. அதனால் நான் எதிர்பார்க்கவில்லை.. அதைவிட எனக்கு வந்தது மிகமிக மைல்ட்டான சும்மா குளிருக்கு வாறமாதிரி அறிகுறிகள்... கடைக்கு போன்போதும் மாஸ்க் உடந்தான் போனேன்.. இப்பிடி எண்டு தெரிஞ்சிருந்தால் நான் வெளியே போயிருக்கமாட்டன்.. ஆனாலும் நான் பரிசோதிக்காமல் வெளியே போனது மிகமிகத்தவறுதான்..

எப்படி என்ன சொன்னாலும் நடந்த தவறினால் யாருக்காவது ஏதும் இழப்பு ஏற்பட்டு இருந்தால் ஈடு செய்யமுடியாது.. ஆகையால் எனது அனுபவத்தையும் சம்பவத்தையும் இதில் எழுதியதன் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது என்னவெனில் தயவு செய்து என்ன மாதிரி காய்ச்சலோ தடிமனோ இருமலோ எதுவாக இருந்தாலும் நம்ம வீடுகளில் சொல்வதுபோல் அது சூடு போல இருக்கு இல்லாட்டி வெதர் மாறுவதால வந்திருக்கலாம் எண்டு சொல்லிட்டு இருக்காமல் ஒரு சிறு அமவுண்டுதான் அண்டிஜென் டெஸ்ட் கிட்.. தயவு செய்து தடிமனோ மூக்கடைப்போ தொண்டை நோவோ எதுவோ உடல் சூடு எண்டு நினைக்காமல் வாங்கி வந்து வச்சு சுயபரிசோதனை செய்து பாருங்கள்.. அதன் மூலம் நான் விட்ட தவறை நீங்கள் விடமாட்டீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார்…. விரைவில் நலம் பெற வேண்டும்.🙏

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கடந்த 29ம் திகதி 2 டோஸ் ஃபைசட் எடுத்து சரியாக 9 மதங்களுக்கு பின் காலை எழுந்தவுடன் வித்தியாசமான ஒரு வலி உடல் முழுவதும் இருந்தது. வழமைபோல் எனக்கு வராது என்னும் மமதையில் பெனடோல் போட்டுவிட்டு இருந்தேன். மாலை 6 மணிபோல் கடும் உடல்வலி, கடுல் காச்சல் 39.5 க்கு மேல், உடல் கட கட வேன ஆட ஆரம்பித்து விட்டது. பற்கள் தந்தியடித்தது, கை நடுங்கியது. மெடிக‌ல் இன்சூரன்ஸ் இருப்பதால் உடனடியாக ஓடினேன் பக்கத்தில் உள்ள சிறந்த்  பிரவேட் கிளினுக்குக்கு. 

உடனடியாக எடுத்தார்கள் அன்டிஜென்ட் டெஸ்ட். பொசிடிவ். பீசீஆர் செய்ய அரசங்க கிளினிக்குக்கு செல்ல அறிவுருத்தினார்கள் இரவு 11 மணியளவில் இருமல்+கடும் காச்சல்+உடல்வலி + மூக்கடைப்பு+ உடல் ந‌டுக்கம் ஆகியவற்றுடன் முன‌ங்கிக்கொண்டு  சென்றேன். என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. பின்பு பீசீஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 

விடிய‌ 2 மணியளாவில் வந்து படுத்ததுதான். 4 நாட்கள் அம்பானைக்கு இருமலும் காச்சலுல், உடல்வலி, சளி மூச்சு விட முடியவில்லை. புதுவருட கொண்டாட்டல் எல்லாம் போய் விட்டது. இன்றுடன் ஒருவாரம் ஆகின்றது. இபொழுது சுகமாகிவிடேன். 

எனக்கு பீசீஆர் டெஸ்ட் POSITIVE அல்ல, ஆனால் REACTIVE எனெ வந்திருந்தது. அதாவது முன்பு வைரஸ் உடலில் தாக்கியுள்ளது அது எனக்கு தெரியாமல் அப்படியே இருந்துள்ளது. பின்பு நான் சமீபத்தில்  யாருடனோ ஒரு நோயாளியுடன் தொடர்புபடுள்ளேன் அது அது உடனடியாக இப்பொழுது REACTIVE ஆகிடுள்ளது.  

நேற்று இரண்டாவது முறையும் பீசீஆர் செய்தேன் இன்னும் முடிவு வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் குடும்பமும், கொழும்பானும் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. 

கொழும்பானும்… விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏
வயித்தெரிச்சலை… கிளப்புறாங்கள். 😂
எங்களுக்கும் செவிலியர் வந்து வாய்ச்சிருக்கிறானுகள். இரவிலை…நிம்மதியாய் நித்திரை கொள்ள ஏலாமல் கிடக்குது. 🤣
அவிச்ச முட்டை தந்திட்டு… அலுவல் பார்க்க நிக்கிறாங்கள். 😁 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி @colomban நீங்களும் குடும்பத்தினரும் கொவிட்டில் இருந்து மீண்டது பெரும் ஆறுதல்.

சிறிய அறிகுறி காட்டினாலும் LFT எடுங்கள். 

பிகு

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

 

பிகு 2

ஓணாண்டியார் தமிழக செய்திகள் பகுதியில் இணைந்த செய்தியள் கொஞ்சம்  டவுட்டை வர வழைத்தது, பாவம் காய்சல் குணத்தில இணைத்திருக்கிறார்.  கொவிட்டின் அறிகுறியில் brain fog ம் ஒன்றுதானே 🤣 (பகிடி). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலம்பான் நீங்களும் கவனமாக இருங்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள்.

வருத்தமெல்லாம் பறந்திருக்குமே?

கவனமாக இருங்கள்.

ஒருமுறை வந்தால் உடம்பை மிகவும் பெலவீனமாக்கிவிடும் என்கிறார்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

அவர் போத்தல் வாங்கப் போன இடத்தில்த் தான் இறைச்சி வாங்கினவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலை இனிமேல் சாப்பாட்டுக்கடையளுக்கு சாப்பிட போற ஆக்கள் எத்தினை கொரோனா தடுப்பூசி போட்டாலும்......சாப்பிட போகேக்கை புதுசாய் கொரோனா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு போகோணுமெண்டு சட்டம் வரப்போகுதாம்....

அப்ப என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குடும்ப உறுப்பினர்களும் கோவிட்டின் பிடியில் இருந்து பூரண விடுதலை ஆகி இருக்கிறோம்.. அன்பையும் ஆதரவையும் பரிமாறிய அனைத்து உறவுகளுக்கும் எம் குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.. அத்துடன் அண்ணன் கொழும்பானும் கொவிட் பிடியிலிருந்து விலகி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 18:40, goshan_che said:

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

இவங்கள் சொதப்பப் போகிறாங்கள் என்று ஒமிக்கிரான் வரும்போதே தெரிந்துவிட்டதால் பூஸ்டர் போட அனுமதி கிடைத்த மறுநாளே பூஸ்டரும் போட்டு இரண்டு பக்கெட் LFT ரெஸ்ற் கிற்றும் ஓடர்  பண்ணி எடுத்திருந்தேன்.! டிசம்பரில் பார்ட்டிகளுக்குப் போக முன்னரும் பின்னரும் ரெஸ்ற் பண்ண உதவியாக இருந்தது. 

தடிமன், காய்ச்சல் குணங்குறி இருந்தால் உடனே ரெஸ்ற் பண்ணுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

தடுப்பூசி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கத்தான் உதவுமே தவிர, தொற்றைப் பெரிதாகத் தடுக்காது. ரெஸ்ரோரன்ற் போகமுதல் ரெஸ்ற் எடுத்தால், தொற்று இருப்பதாகக் காட்டினால் போகாமல் வீட்டில் இருக்கலாம். இதனால் பரப்புவதைக் குறைக்கலாம். 

இங்கிலாந்தில் தினமும் 180, 000 பேருக்கு மேல் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆனால் ஹொஸ்பிற்றலில் அட்மிற் ஆவதில் அதிகம் பேர் தடுப்பூசி எடுக்காதவர்களே. அதிகம் கறுப்பினத்தவர், அராபியர், ஆசியர் வசிக்கும் இலண்டனில் தடுப்பூசி எடுக்காதவர்கள் அதிகம். அதனால் இலண்டனில் தொற்றும் அதிகம். ஹொஸ்பிற்றல் அட்மிஷனும் அதிகம்.  அப்படி இருந்தும் போக்குவரத்து, உணவகம், ஷொப்பிங் எல்லாம் பிஸி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மாத அடைவு காலத்தின் பின்.. ஒருவாறு முதல் வெளிநாட்டுப் பயணம் முடிச்சு திரும்பியாச்சு.

விமானத்தில் ஏற வக்சீன் சான்றிதழ் (பல விமான சேவைகள்.. பி சி ஆர் அல்லது அன்ரிஜென் சோதனை சான்றிதழும் கூடக் கேட்கினம்... அதோடு Locator Form நிரப்பிய பின் உறுதிப்படுத்தி வரும்.. QR code உடன் கூடிய சான்றிதழும் அவசியம். சோதனைகளில்.. வீட்டில் செய்வதை காட்ட முடியாது. தேசிய சுகாதார சேவையில் இலவச வசதியையும் பாவிக்க முடியாது. தனியாரிடம் தான் செய்யனும்.).. இறங்கின பின் அன்ரிஜென் சோதனை... அதனை முடிச்சு தான் வெளியில விடுவினம்.

பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய.. Fit to Fly என்று சொல்லி மீண்டும் சோதனை. அது ஒரு அன்ரிஜென். அதற்குப் பிறகு இங்கிலாந்தை அடைந்ததும்.. பி சி ஆர்.

இதற்கிடையில் Locator Form போற நாட்டிலும் நிரப்பனும்.. வாற நாட்டிலும் நிரப்பனும். வக்சீன் சான்றிதழ் இல்லாவிட்டால்.. இதனை நிரப்ப முடியாது. பறக்கவும் முடியாது. 

என்ன நவீன QR code வாசிக்கும் வசதியோடு அலைபேசியும்.. றோமிங்கும் இல்லையோ.. கதை கொஞ்சம் கஸ்டம் தான். 

ஆனால்.. விமானத்துக்குள் அரைவாசி.. மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குதுங்க. பெண்கள் மூஞ்சிக்குப் போட்ட மேக்கப் கலைஞ்சிடும்.. என்று மாஸ்கை கழுத்தில் மாட்டுகிறார்கள். விமானப் பறப்பு முழுக்க மாஸ்க் அணிவது விதிப்பாக இருந்தும்.

கொவிட் கால விமானப் பயணமும்.. பயணத்தின் முன் பின்னான அனுபவங்களும் புதிது. வக்சீன் சான்றிதழ் மிகவும் பயன் கொடுத்தது.

விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இன்றில் இருந்து உள்வரவுக்கான பி சி ஆர் சோதனை.. அன்ரிஜென் சோதனை அளவுக்கு குறைக்கப்படுகிறது. எனி கொரோனாவை கட்டுப்படுத்திறது என்பது நடக்காத காரியம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கங்களை தளர்த்தி.. வக்சீனையும் குத்தி.. கொரோனாவை ஒரு கட்டுக்குள் வைச்சுக் கொள்வது தான் தீர்வாக முடியும். கொரோனா இப்போதைக்கு உலகை விட்டு நீங்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

24 மாத விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

ஐரோப்பிய பட்ஜெட் விமான சேவை நிறுவனங்கள்.. ஒற்றை இலக்க விலையில் ரிக்கெட் விற்கும் போதும்.. இலங்கைக்கு இது பெரிய தொகை.

மேலும்.. இலங்கைக்குள்.. போய் வாற பலர் வந்த பின் கொரோனா வோட தான் இருக்கினம். அங்க சனம் கெடிபிடிக்குப் பயந்து உள்ளுக்க மறைச்சு வைக்கிறதால.. சமூக மட்டத்தில் பரவல் அதிகம். எங்கட ஆக்களைத் தெரியும் தானே வளர்த்த..  பெட்டை நாய் நாலு குட்டி போட்டாலே அடுத்த வீட்டுக்குத் தெரியாமல்.. பெட்டிக்க வைச்சு தொலைவில கொண்டு போய் விடுற ஆக்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.