Jump to content

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...


Recommended Posts

40 minutes ago, குமாரசாமி said:

Grüne Partei  ஒரு லீட்டர் பெற்றோலை இரண்டரை ஈரோவுக்கு கொண்டுவரப்போறானாம்....சந்தோசம் தானே 😁

போகவும் வரவும் பெற்றோல் விலையை பாத்துப் பாத்து கொரோனா வாங்கிற திட்டு உங்களுக்கு கேட்கிறேல்ல போல.😊

43 minutes ago, குமாரசாமி said:

Wir Schaffen Das Merkel GIF - Wir Schaffen Das Merkel We Can Do This -  Discover & Share GIFs

ஏன்....மனுசி இருக்கும் மட்டும் உங்களுக்கு என்ன குறை வைச்சது? நாட்டை கட்டுக்குலையாமல் வைச்சிருந்தது தானே 🤣

 

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

37 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஒரு நோஞ்சான் குஞ்சை இறக்கி விட்டுருக்கிறியள்....பாப்பம் என்ன கூத்து நடக்குது எண்டு....😂

Olaf Scholz Spd GIF - Olaf Scholz Scholz Spd - Discover & Share GIFs

 

🌘😊

Link to comment
Share on other sites

  • Replies 213
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

மெயாகலின் நல்லாட்சியை இனி ஒருபோதும் யாராலும் தர முடியாது. 👍

பாவம் மனிசி....:(
கண்டவன் போனவன் வந்தான் வரத்தான் எல்லாரிட்டையும் திட்டு வாங்கி வாங்கி மனிதாபிமானம் என்ன எண்டதை உலகத்துக்கு சொல்லிட்டு   வருத்தத்தோடை  போயிட்டுது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் ஓணாண்டிக்கு போனவெள்ளிக்கிழமை லைற்றா உடம்பு அசதியா இருந்திச்சு.. வலி நிவாரணி எடுத்தன்.. இரவு லைற்றான காய்ச்சல் அடுத்தநாள் சனி புதுவருசம்.. அண்டு பூரா மெல்லிய காய்ச்சலும் உடல் அசெளகரிய பீலிங்கும் லேசான தொண்டை நோவும்.. வலி நிவாரணி சீரான இடைவெளியில் எடுத்துக்கொண்டேன்.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை.. பல்வேறு தானியங்களை   சிவப்பரிசியுடன் மிக்ஸ் பண்ணி வச்சிருக்கன்.. அதைதான் சோறாக்கி சாப்பிடுரனான்) போட்டு ஒரு புடிபுடிச்சன்..உறைப்பில மூக்காலும் வாயாலும் ஒழுகிச்சு.. அதோட போன மெல்லிய காய்ச்சல்தான்.. ஆனா இண்டைக்கு வரை உடம்பு அசதி அப்பப்போ இருக்கு.. சில நேரங்கள்ல சுவாசிக்கேக்க விக்ஸ் ரொபி சாப்பிட்டபின் தொண்டைக்க ஒரு பிரஸ் ஆன கூச்ச பீலிங் இருங்கும்.. அது எப்பாவாச்சும் இருக்கு.. இப்படி இருக்கும் நிலையில் திங்கள் மாலை பிள்ளைக்கு செமகாய்ச்சல்(38.5 வரை போனது). மனைவிக்கு லேசான தடிமனும் உடம்பு அசதியும்.. பிள்ளை கொரோனா தடுப்பூசி எடுக்கவில்லை.. நானும் மனைவியும் 2வது தடுப்பூசி போன ஏழாம் மாசம் எடுத்திருந்தம்.. மனைவியும் பிள்ளையும் சீரான இடைவெளியில் வலிநிவாரணி எடுக்கின்றனர்.. மகனுக்கு நேற்று இரவில் இருந்து காய்ச்சல் விட்டிருக்கு..

இது இப்படி இருக்க எனக்கு சந்தேகம் வந்ததால்நேற்று இரண்டு அண்டிஜென் ரெஸ்ற் எடுத்து பாத்தேன் இரண்டும் கொரோனா பொஸிற்றிவ் என்டு வந்திருக்கு.. இன்று மாலை pcr பரிசோதனை செய்ய உள்ளேன்…

எனக்கோ மனைவிக்கோ சுவை இழப்பும் ஏற்படவில்லை வாசனை உணர்திறனும் போகவில்லை.. எனக்கு ஒண்டரை நாள் காய்ச்சல்தான்.. அதுவும் லேசான காய்ச்சல்.. மனைவிக்கு அதுவும் இல்லை.. வெறும் மிக இலேசான தடிமன் மட்டும்தான்.. காரணம் தடுப்பூசி என்று நினைக்கிறேன்.. 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

நமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக பாஸ்மதி அரிசி சோறும்( நான் சோறு தனிய சாப்பிடுவதில்லை..

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாக உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் ஓணாண்டி .......!   

Link to comment
Share on other sites

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பிள்ளையைத்தான் ஒருநாள் காய்ச்சல் வாட்டிவிட்டது.. காரணம் தடுப்பூசி ஏற்றாமை ஆக இருக்கவேண்டும்.. இரவில் இருந்து இப்பொழுது வரை காய்ச்சல் இல்லை என்பதால் இனி வராது என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக யாருக்கும் ஏற்கனவே அனுபவம் இருந்தால் அறியத்தரவும் விட்ட காய்ச்சல் மறுபடியும் வர சந்தர்ப்பம் இருக்கா எண்டு.. அவருக்கு தடிமனோ இருமலோ இல்லை..

எனக்கு கோரோன அறிகுறிகள் ஏற்பட்டு இன்றுடன் ஜந்தாவது நாள் முடிகிறது..

நான் வாற பத்தாம் திகதி பூஸ்டர் தடுப்பூசி ஏற்ற இருந்த நிலையில் இயற்கை பூஸ்ரர் தடுப்பூசி ஏற்றி இருப்பதால் இனி ஒரு மூண்டு நாலு மாசத்துக்கு ஊசி பற்றிய கவலை இல்லை..

 

கடந்த வாரம் என் நண்பனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரனா (ஒமிக்ரோன் ஆகத்தான் இருக்க வேண்டும்)  வந்து போயுள்ளது. உங்களுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளும் அவர்களுக்கும் இருந்தது. நண்பனது மகளுக்கு ஒரே ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். இரண்டாவது அடுத்த மாசம் போட உள்ளனர். அவர் மகளுக்கும் வந்து ஒரு நாளில் காச்சல் போய் விட்டது.

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

.. ஞாயித்துக்கிழமையும் இதே பீலிங் இருந்தது.. ஏதாவது நல்ல உறைப்பா சாப்பிடவேணும்போல இருந்திச்சு காய்ச்சல் வாய்க்கு.. கடைக்கு போய் இறைச்சி வாங்கி வந்து நல்லதூள் போட்டு பிரட்டல் கறியும் காய்ச்சி காய்ச்சல் வாய் சுவைக்காக 

 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி சுகமாக இருங்கள்.
மற்றது
எல்லோருமே செய்யும் மிகப் பெரிய தவறு தொற்று என்று தெரிந்தும் சாமானுகள் சாப்பாடுகள் வாங்க அதுக்கு இதுக்கு என்று வெளியே போய் மற்றவர்களுக்கும் பரப்புகிறோம்.

இதையே அடுத்தவர் செய்யும் போது மனதுக்குள் திட்டுகிறோம்.

11 minutes ago, நிழலி said:


 

ஒரு மாதிரி கடையில் உள்ளவர்களுக்கும், கடைக்கு சென்றவர்களுக்கும் பரப்பியாச்சு. நல்ல சமூக பொறுப்புணர்வு.

ஜயோ சகோதரங்களே நான் கடைக்கு போனது ஞாயித்துக்கிழமை.. ரெஸ்ட் பண்ணினது நேத்து மாலை அதுவும் வீட்டில் எல்லோரும் நோய்வாய்ப்பட்டபின்புதான்.. அதுவரைக்கும் நான் இது சீசனல் ஃபுழு எண்டுதான் நினைச்சு கொண்டிருந்தன்.. ஏனெனில் நான் எந்த நிமிடமும் வீட்டை தவிர வெளியே மாஸ்க் கழட்டுவதில்லை அதைவிட பப்ளிக் ரான்ஸ்போட் பயன்படுத்துவதில்லை அத்தோடு எனது வேலையும் ஆட்களுடன் பழகுவதில்லை.. அதனால் நான் எதிர்பார்க்கவில்லை.. அதைவிட எனக்கு வந்தது மிகமிக மைல்ட்டான சும்மா குளிருக்கு வாறமாதிரி அறிகுறிகள்... கடைக்கு போன்போதும் மாஸ்க் உடந்தான் போனேன்.. இப்பிடி எண்டு தெரிஞ்சிருந்தால் நான் வெளியே போயிருக்கமாட்டன்.. ஆனாலும் நான் பரிசோதிக்காமல் வெளியே போனது மிகமிகத்தவறுதான்..

எப்படி என்ன சொன்னாலும் நடந்த தவறினால் யாருக்காவது ஏதும் இழப்பு ஏற்பட்டு இருந்தால் ஈடு செய்யமுடியாது.. ஆகையால் எனது அனுபவத்தையும் சம்பவத்தையும் இதில் எழுதியதன் மூலம் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது என்னவெனில் தயவு செய்து என்ன மாதிரி காய்ச்சலோ தடிமனோ இருமலோ எதுவாக இருந்தாலும் நம்ம வீடுகளில் சொல்வதுபோல் அது சூடு போல இருக்கு இல்லாட்டி வெதர் மாறுவதால வந்திருக்கலாம் எண்டு சொல்லிட்டு இருக்காமல் ஒரு சிறு அமவுண்டுதான் அண்டிஜென் டெஸ்ட் கிட்.. தயவு செய்து தடிமனோ மூக்கடைப்போ தொண்டை நோவோ எதுவோ உடல் சூடு எண்டு நினைக்காமல் வாங்கி வந்து வச்சு சுயபரிசோதனை செய்து பாருங்கள்.. அதன் மூலம் நான் விட்ட தவறை நீங்கள் விடமாட்டீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார்…. விரைவில் நலம் பெற வேண்டும்.🙏

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டி குடும்பத்தார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கடந்த 29ம் திகதி 2 டோஸ் ஃபைசட் எடுத்து சரியாக 9 மதங்களுக்கு பின் காலை எழுந்தவுடன் வித்தியாசமான ஒரு வலி உடல் முழுவதும் இருந்தது. வழமைபோல் எனக்கு வராது என்னும் மமதையில் பெனடோல் போட்டுவிட்டு இருந்தேன். மாலை 6 மணிபோல் கடும் உடல்வலி, கடுல் காச்சல் 39.5 க்கு மேல், உடல் கட கட வேன ஆட ஆரம்பித்து விட்டது. பற்கள் தந்தியடித்தது, கை நடுங்கியது. மெடிக‌ல் இன்சூரன்ஸ் இருப்பதால் உடனடியாக ஓடினேன் பக்கத்தில் உள்ள சிறந்த்  பிரவேட் கிளினுக்குக்கு. 

உடனடியாக எடுத்தார்கள் அன்டிஜென்ட் டெஸ்ட். பொசிடிவ். பீசீஆர் செய்ய அரசங்க கிளினிக்குக்கு செல்ல அறிவுருத்தினார்கள் இரவு 11 மணியளவில் இருமல்+கடும் காச்சல்+உடல்வலி + மூக்கடைப்பு+ உடல் ந‌டுக்கம் ஆகியவற்றுடன் முன‌ங்கிக்கொண்டு  சென்றேன். என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. பின்பு பீசீஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 

விடிய‌ 2 மணியளாவில் வந்து படுத்ததுதான். 4 நாட்கள் அம்பானைக்கு இருமலும் காச்சலுல், உடல்வலி, சளி மூச்சு விட முடியவில்லை. புதுவருட கொண்டாட்டல் எல்லாம் போய் விட்டது. இன்றுடன் ஒருவாரம் ஆகின்றது. இபொழுது சுகமாகிவிடேன். 

எனக்கு பீசீஆர் டெஸ்ட் POSITIVE அல்ல, ஆனால் REACTIVE எனெ வந்திருந்தது. அதாவது முன்பு வைரஸ் உடலில் தாக்கியுள்ளது அது எனக்கு தெரியாமல் அப்படியே இருந்துள்ளது. பின்பு நான் சமீபத்தில்  யாருடனோ ஒரு நோயாளியுடன் தொடர்புபடுள்ளேன் அது அது உடனடியாக இப்பொழுது REACTIVE ஆகிடுள்ளது.  

நேற்று இரண்டாவது முறையும் பீசீஆர் செய்தேன் இன்னும் முடிவு வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் குடும்பமும், கொழும்பானும் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள். அத்துடன் தாகமாக , அனத்தலுடன் சூடாக இருந்த எனக்கு இளஞ்சூடனா தண்ணீர் வாயுல் வைத்து பருக்கினாள் அந்த நேரம் அது மிகவும் இதமாக இருந்தது. 

கொழும்பானும்… விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏
வயித்தெரிச்சலை… கிளப்புறாங்கள். 😂
எங்களுக்கும் செவிலியர் வந்து வாய்ச்சிருக்கிறானுகள். இரவிலை…நிம்மதியாய் நித்திரை கொள்ள ஏலாமல் கிடக்குது. 🤣
அவிச்ச முட்டை தந்திட்டு… அலுவல் பார்க்க நிக்கிறாங்கள். 😁 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி @colomban நீங்களும் குடும்பத்தினரும் கொவிட்டில் இருந்து மீண்டது பெரும் ஆறுதல்.

சிறிய அறிகுறி காட்டினாலும் LFT எடுங்கள். 

பிகு

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

 

பிகு 2

ஓணாண்டியார் தமிழக செய்திகள் பகுதியில் இணைந்த செய்தியள் கொஞ்சம்  டவுட்டை வர வழைத்தது, பாவம் காய்சல் குணத்தில இணைத்திருக்கிறார்.  கொவிட்டின் அறிகுறியில் brain fog ம் ஒன்றுதானே 🤣 (பகிடி). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலம்பான் நீங்களும் கவனமாக இருங்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

என்னை பார்த்து பரிதாபபட்டு அங்கிருந்த மலையாள ஓமணக்குட்டி செவிலி என்னை கைபிடித்து மார்பில் தாங்கி சென்று உக்காரவைத்து ஹெல்த் அட்டைய எடுத்து சரிபார்த்து  உள்ளே எடுத்து கொண்டாள்.

வருத்தமெல்லாம் பறந்திருக்குமே?

கவனமாக இருங்கள்.

ஒருமுறை வந்தால் உடம்பை மிகவும் பெலவீனமாக்கிவிடும் என்கிறார்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

இறைச்சிக்  கடைக்குப் போய்… என்ன இறைச்சி, வாங்கினீங்கள்? ஓணாண்டி.

அவர் போத்தல் வாங்கப் போன இடத்தில்த் தான் இறைச்சி வாங்கினவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலை இனிமேல் சாப்பாட்டுக்கடையளுக்கு சாப்பிட போற ஆக்கள் எத்தினை கொரோனா தடுப்பூசி போட்டாலும்......சாப்பிட போகேக்கை புதுசாய் கொரோனா ரெஸ்ட் எடுத்துக்கொண்டு போகோணுமெண்டு சட்டம் வரப்போகுதாம்....

அப்ப என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குடும்ப உறுப்பினர்களும் கோவிட்டின் பிடியில் இருந்து பூரண விடுதலை ஆகி இருக்கிறோம்.. அன்பையும் ஆதரவையும் பரிமாறிய அனைத்து உறவுகளுக்கும் எம் குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.. அத்துடன் அண்ணன் கொழும்பானும் கொவிட் பிடியிலிருந்து விலகி நலமுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 18:40, goshan_che said:

ஆனால் இந்த பைத்தியகார யூகே அரசு LFT டெலிவரியை சொதப்புகிறது.

இவங்கள் சொதப்பப் போகிறாங்கள் என்று ஒமிக்கிரான் வரும்போதே தெரிந்துவிட்டதால் பூஸ்டர் போட அனுமதி கிடைத்த மறுநாளே பூஸ்டரும் போட்டு இரண்டு பக்கெட் LFT ரெஸ்ற் கிற்றும் ஓடர்  பண்ணி எடுத்திருந்தேன்.! டிசம்பரில் பார்ட்டிகளுக்குப் போக முன்னரும் பின்னரும் ரெஸ்ற் பண்ண உதவியாக இருந்தது. 

தடிமன், காய்ச்சல் குணங்குறி இருந்தால் உடனே ரெஸ்ற் பண்ணுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ன கோதாரிக்கு திரத்தி திரத்தி எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு திரியுறியள்?

தடுப்பூசி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கத்தான் உதவுமே தவிர, தொற்றைப் பெரிதாகத் தடுக்காது. ரெஸ்ரோரன்ற் போகமுதல் ரெஸ்ற் எடுத்தால், தொற்று இருப்பதாகக் காட்டினால் போகாமல் வீட்டில் இருக்கலாம். இதனால் பரப்புவதைக் குறைக்கலாம். 

இங்கிலாந்தில் தினமும் 180, 000 பேருக்கு மேல் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆனால் ஹொஸ்பிற்றலில் அட்மிற் ஆவதில் அதிகம் பேர் தடுப்பூசி எடுக்காதவர்களே. அதிகம் கறுப்பினத்தவர், அராபியர், ஆசியர் வசிக்கும் இலண்டனில் தடுப்பூசி எடுக்காதவர்கள் அதிகம். அதனால் இலண்டனில் தொற்றும் அதிகம். ஹொஸ்பிற்றல் அட்மிஷனும் அதிகம்.  அப்படி இருந்தும் போக்குவரத்து, உணவகம், ஷொப்பிங் எல்லாம் பிஸி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மாத அடைவு காலத்தின் பின்.. ஒருவாறு முதல் வெளிநாட்டுப் பயணம் முடிச்சு திரும்பியாச்சு.

விமானத்தில் ஏற வக்சீன் சான்றிதழ் (பல விமான சேவைகள்.. பி சி ஆர் அல்லது அன்ரிஜென் சோதனை சான்றிதழும் கூடக் கேட்கினம்... அதோடு Locator Form நிரப்பிய பின் உறுதிப்படுத்தி வரும்.. QR code உடன் கூடிய சான்றிதழும் அவசியம். சோதனைகளில்.. வீட்டில் செய்வதை காட்ட முடியாது. தேசிய சுகாதார சேவையில் இலவச வசதியையும் பாவிக்க முடியாது. தனியாரிடம் தான் செய்யனும்.).. இறங்கின பின் அன்ரிஜென் சோதனை... அதனை முடிச்சு தான் வெளியில விடுவினம்.

பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய.. Fit to Fly என்று சொல்லி மீண்டும் சோதனை. அது ஒரு அன்ரிஜென். அதற்குப் பிறகு இங்கிலாந்தை அடைந்ததும்.. பி சி ஆர்.

இதற்கிடையில் Locator Form போற நாட்டிலும் நிரப்பனும்.. வாற நாட்டிலும் நிரப்பனும். வக்சீன் சான்றிதழ் இல்லாவிட்டால்.. இதனை நிரப்ப முடியாது. பறக்கவும் முடியாது. 

என்ன நவீன QR code வாசிக்கும் வசதியோடு அலைபேசியும்.. றோமிங்கும் இல்லையோ.. கதை கொஞ்சம் கஸ்டம் தான். 

ஆனால்.. விமானத்துக்குள் அரைவாசி.. மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குதுங்க. பெண்கள் மூஞ்சிக்குப் போட்ட மேக்கப் கலைஞ்சிடும்.. என்று மாஸ்கை கழுத்தில் மாட்டுகிறார்கள். விமானப் பறப்பு முழுக்க மாஸ்க் அணிவது விதிப்பாக இருந்தும்.

கொவிட் கால விமானப் பயணமும்.. பயணத்தின் முன் பின்னான அனுபவங்களும் புதிது. வக்சீன் சான்றிதழ் மிகவும் பயன் கொடுத்தது.

விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இன்றில் இருந்து உள்வரவுக்கான பி சி ஆர் சோதனை.. அன்ரிஜென் சோதனை அளவுக்கு குறைக்கப்படுகிறது. எனி கொரோனாவை கட்டுப்படுத்திறது என்பது நடக்காத காரியம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கங்களை தளர்த்தி.. வக்சீனையும் குத்தி.. கொரோனாவை ஒரு கட்டுக்குள் வைச்சுக் கொள்வது தான் தீர்வாக முடியும். கொரோனா இப்போதைக்கு உலகை விட்டு நீங்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

24 மாத விமான ரிக்கெட் மலிவு. ஆனால்.. கொவிட் சோதனை செலவு.. பயண செலவை எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டும். 

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு விமான ரிக்கற்….400 ஐரோ    அளவில் போகிறதென்று சொன்னார்கள்.

ஐரோப்பிய பட்ஜெட் விமான சேவை நிறுவனங்கள்.. ஒற்றை இலக்க விலையில் ரிக்கெட் விற்கும் போதும்.. இலங்கைக்கு இது பெரிய தொகை.

மேலும்.. இலங்கைக்குள்.. போய் வாற பலர் வந்த பின் கொரோனா வோட தான் இருக்கினம். அங்க சனம் கெடிபிடிக்குப் பயந்து உள்ளுக்க மறைச்சு வைக்கிறதால.. சமூக மட்டத்தில் பரவல் அதிகம். எங்கட ஆக்களைத் தெரியும் தானே வளர்த்த..  பெட்டை நாய் நாலு குட்டி போட்டாலே அடுத்த வீட்டுக்குத் தெரியாமல்.. பெட்டிக்க வைச்சு தொலைவில கொண்டு போய் விடுற ஆக்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.